100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை!

100 மான்களை கொன்ற வேட்டைக்காரருக்கு திரைப்படம் பார்க்கும் தண்டனை! அமெரிக்காவில் உள்ள வேட்டைக்காரர் 100க்கும் மேற்பட்ட மான்களை சட்டவிதிமுறைகளை மீறி வேட்டையாடியதற்காக அவர் மாதம் ஒரு முறை ‘பாம்பி’ என்ற திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் அளித்துள்ளது. ‘பாம்பி’ என்பது காட்டில் வளரும் இளம் மானின் கதையை மையமாக கொண்ட ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தைச் சேர்ந்த டேவிட் பெர்ரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகிய … Read more

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி!

அசாமில் சக்கை போடு போடும் அட்லியின் தெறி! அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி திரைப்படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்ற திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தெறி படத்தை தழுவி ஒரு படம் தயாரிக்கப்பட்டு அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது அசாம் மாநிலத்தில் சமீபத்தில் ’ரத்னாகர்’ என்ற அசாமிய மொழி திரைப்படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் கதை அச்சு அசலாக தெறி … Read more

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம்

இந்தூர் டெஸ்ட் போட்டி: மிகக்குறைந்த ரன்களுக்குள் சுருண்ட வங்கதேசம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 150 ரன்களுக்கு ஆட்டத்தை இழந்துள்ளது இந்தியா – வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலை இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேசத்தின் முன்னணி பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்குள் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் மிகவும் … Read more

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி

முதல் டெஸ்ட்: டாஸ் வென்று பேட்டிங் செய்து வரும் வங்கதேச அணி இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று முதல் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இந்தூரில் இன்று நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர் பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் … Read more

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு

சபரிமலை மறுசீராய்வு மனுவின் அதிரடி தீர்ப்பு சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியானது. இந்த தீர்ப்பின்படி சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய தடை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய காலம் காலமாக தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டடு. இந்த வழக்கை விசாரணை … Read more

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவர் பலி! அதிர்ச்சி தகவல் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதும், அதில் சிலர் பலியாகி வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அரசு மருத்துவர் பிருந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை விசாலாட்சிபுரத்தை சேர்ந்த பிருந்தா என்பவர் சிவகங்கை மாவட்டம் அரசலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையுலகை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள் வந்த வேகத்தில் மீண்டும் அரசியலைவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். அல்லது மக்களின் ஆதரவு இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்று தெரிவித்தார். … Read more

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி

சிலைகள் மீட்பு குறித்து தமிழக அரசின் விளக்கம்: பொன் மாணிக்கவேல் அதிர்ச்சி ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேல் காரணம் அல்ல, பிரதமர் மோடியே காரணம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளதற்கு பொன் மாணிக்கவேல் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது சிலை கடத்தல் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் பதவியேற்றதில் இருந்து வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழக கோவில்களின் சிலைகள் மீட்கப்பட்டதற்கு பொன் மாணிக்கவேலுக்கு … Read more