குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை !! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !!

குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆங்காங்கே குழந்தை திருமணம் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.குழந்தை திருமண தடை சட்டத்தின் படி பெண்களுக்கு 18 வயது நிறைந்த நிறைவடைந்து இருக்க வேண்டும் மற்றும் ஆண்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டுமென்று சட்டம் உள்ள … Read more

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் ,சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருக்கின்றன.இது போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு கல்வி தகுதியாக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பத்தாம் வகுப்பும், சமையல் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

அந்தமான் அருகியுள்ள வங்ககடலில் |நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியு,ள்ள தெற்குக ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு … Read more

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் பட்டப்படிப்பு குறித்து வெளியிட்ட புதிய அறிக்கை !!

தொல்லியல் துறை படிப்பிற்கு தமிழ் புறக்கணிக்கப்பட்டதனை கண்டித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பண்டிட் தின்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்திற்கு தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளில் எம். ஏ முடித்தவராக இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், செம்மொழியான தமிழ் இடம்பெறவில்லை. இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பின்னர் மத்திய … Read more

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை !!

இன்று இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் , நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று காலை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 104.54 புள்ளிகள் உயர்ந்து, 40,346 புள்ளியாக தொடங்கியது. இது சராசரியாக வர்த்தகத்தில் 0.41 சதவீதம் உயர்வாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 39.35 புள்ளிகள் உயர்ந்து 11,887 புள்ளியாக இன்றைய வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தக சதவீதத்தில் 0.45 உயர்வாகும். மேலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை … Read more

அக். 09 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 09 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36,761,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 27,673,862 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,020,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 67,945 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,066,956 … Read more

அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அக். 15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகிறது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் வரும் 15ம் தேதி முதல் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி … Read more

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!! கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரித்துள்ளாா். சென்னை அண்ணாநகர் மண்டலம் என்.எஸ்.கே நகரில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி கண்டறியும் இரண்டாம் கட்ட முகாமை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் ஆகியோா் நேற்று தொடங்கி வைத்தனா். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 964 பேர் உயிரிழப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் ஒரே நாளில் 964 பேர் உயிரிழப்பு! அக். 09 கொரோனா பாதிப்பு நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 70,496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,06,152 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 964 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 1,06,490 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,365 … Read more

குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி… முழு விவரம் உள்ளே!

குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி... முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு … Read more