சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு..! நகராட்சி ஆணையர் அறிவிப்பு!

இனி சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்று புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் அறிவித்தார். மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில், புதுக்கோட்டை நகராட்சி சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையே சேவை” என்ற நோக்கில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் விழாவில் பேசிய … Read more

திருவாரூரில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது..! ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

திருவாரூரில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது..! ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பெண் ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் இயங்கும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அதிமுகவை சேர்ந்த உலகநாதன் என்பவர், சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்ரா … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு: அக். 02 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,595 பேருக்கு கொரோனா பாதிப்பு: அக். 02 கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,595 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,08,885 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 67 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,653 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,603 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

நிர்வாக காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து வைகோ அறிவிப்பு !!

நிர்வாக காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து வைகோ அறிவிப்பு !!

நிர்வாக காரணமாக மதிமுகவில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை இரண்டாக பிரித்து வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுக நிர்வாக பணிக்காக ,சில மாவட்டங்களை இரண்டாகவும் மற்றும் ஒரு சில மாவட்டங்களை மூன்றாகவும் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் பொறுப்பாளர் வளையாபதி, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மா .வை. மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மேலும் புதியதாக … Read more

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் அக். 5 முதல் இவர்களுக்கு மட்டும் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னையில் வரும் 5ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அங்கிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பயணியாளர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்காக முதலில் குறைந்த அளவில் மட்டுமே புறநகர் … Read more

இந்தியா வந்தடைந்தது அதிநவீன ஏர் இந்தியா ஒன் விமானம் !!

இந்தியா வந்தடைந்தது அதிநவீன ஏர் இந்தியா ஒன் விமானம் !!

அமெரிக்க அதிபர் பயணிக்கும் போனஸ் ஒன் விமானத்திற்கு இணையான விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவர் ,பிரதமர் மற்றும் விவிஐபிகள் பயணிக்க அதி நவீன அம்சங்களை கொண்ட ஏர் இந்தியா ஒன்று என்ற விமானம் வழங்கப்பட்டுள்ளது.ஏர் போர்ஸ் ஒன் என்ற விமானமானது, உலகிலேயே மிகவும் பாதுகாப்பாகவும், ஊடுருவ முடியாததாகவும் இருந்து வந்தது. அமெரிக்கா அதிபர் பயணிக்கும் அந்த விமானம் போலவே, தற்பொழுது உருவாக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட விமானம் இந்தியாவிற்கு வழங்க போயிங் நிறுவனத்துடன் … Read more

காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

காவல் அதிகாரி எடுத்த விபரீத முடிவு !! எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என இறுதி கடிதம் !!

தூத்துக்குடி மாவட்டம்,பிள்ளையார் பெரியவன்வன்தட்டு பகுதியை சேர்ந்த செல்வமுருகன் என்பவர், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார. இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல செல்வமுருகன் என்பவர் பணி முடித்துவிட்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளர்.அருகிலிருந்த கடைவீதிக்கு செல்வதாக கூறி வீட்டிற்கு வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை .இதனால் பதட்டமடைந்த குடும்பத்தினர் அருகில் தேடியுள்ளனர். திடீரென அருகில் உள்ள காட்டுப் பகுதியில் விஷமருந்தி வாயில் … Read more

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

நீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!

இந்தியாவில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ,பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கருப்புப் பணம் மற்றும் அதிக அளவில் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பதற்காக, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது இந்த உயர் மதிப்பு நோட்டுக்களான ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1,000 நோட்டுகளை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, அவற்றை அருகிலிருந்த வங்கிகளில் கொடுத்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் 500 மற்றும் 2000 நோட்டுகளை பெற்று பயன்படுத்தும் படி மத்திய அரசு கூறியது. புதியதாக … Read more

மருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!

மருத்துவமனையில் இருந்து வந்த நல்ல செய்தி..!! தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாஆகியோரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவரது மனைவியும், தேமுக … Read more

தடைகளை மீறி நடத்தப்பட்ட  கிராமசபை கூட்டம் !!

தடைகளை மீறி நடத்தப்பட்ட  கிராமசபை கூட்டம் !!

தமிழகத்தில் உள்ள கிராமங்களில், வேளாண் குறித்து ஆலோசனை நடத்த ,கிராம சபை கூட்டம் நடைபெறும். ஆனால், இறுதி நேரத்தில் தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. கிராமசபை கூட்டங்களை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் பல இடங்களில் கிராம சபை கூட்டமானது நடத்தப்பட்டது. ஆம்பூரில் அடுத்த பெரியாங்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் ஆம்பூரை அடுத்த அரங்கள்தூர்கம் கிராமத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக … Read more