ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

ஹாங்காங்கில் 2 மில்லியன் பேர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல துறைகளும் முடக்கத்தில் இருந்தன. தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இதன் காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இனி சொந்த ஊரிலே திருமணத்தைப் பதிவு செய்யலாம்!!

இனி சொந்த ஊரிலே திருமணத்தைப் பதிவு செய்யலாம்!!

மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம் என சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு என்பது அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதி தங்கள் திருமணத்தை 90 முதல் 150 நாட்களுக்குள் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின்னர் எப்போதுமே தங்கள் திருமணத்தை பதிவு செய்திட முடியாது. திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசு தரும் … Read more

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

முகக்கவசம் அணியவில்லை என்றால் மரண தண்டனையா?

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. எனவே உலக நாடுகள் அனைத்தும் பல கட்டுபாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாதவருக்கு கொடூரமான தண்டனை வழங்கப்படுகிறது. அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்த எட்டு பேருக்கு சவக்குழி தோண்டும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் முகக்கவசம் அணியாமல் பலரும் பொது இடங்களில் அவ்வப்போது வலம்வருகின்றனர். மக்கள் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்க, இந்தோனேசிய அரசாங்கம் பல வித்தியாசமான வழிகளைக் … Read more

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க சட்ட மசோதா தாக்கல் !!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்க சட்ட மசோதா தாக்கல் !!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை ,இன்று நடக்கும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவை கடைசி நாளான இன்று சட்டபேரவை கூட்டம் இன்று காலையில் தொடங்கியது.இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சட்டப்பேரவையில் தாக்கல் தாக்கல் … Read more

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

புதிதாக வேறொரு நகரில் இருந்து பரவும் கொரோனா

ருய்லீ என்ற  நகரை சீனா முடக்கியுள்ளது இந்த ருய்லீ நகர் சீன மியன்மார் எல்லைக்கு அருகில் உள்ளது. சிறிய அளவிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்கு பதிவாகியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகர மக்களை வீட்டில் தங்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நகருக்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ அனுமதியில்லை. அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மியன்மாரில் இருந்து ருய்லீ நகருக்கு நோய் பரவியதாய்ச் சீன அதிகாரிகள் கூறுகின்றனர். சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் … Read more

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை உயர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த பரிந்துரை செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு … Read more

இந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை

இந்திய சீன எல்லை பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் நடவடிக்கை

இந்திய ராணுவம் மீது சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 முதல் 200 சுற்றுகள் துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் இரு நாடுகள் இடையே எல்லை பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்திதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது .இந்த சூழலில் ,இந்த மாதத்தின் தொடக்கத்தில் சீன … Read more

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் சேலம் பிளட் டோனர்ஸ் என்ற ரத்ததான தன்னார்வலர் குழுவை தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவருக்கு சேலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு விபத்தில் உயிருக்கு போராடி அவர்களுக்கும் ரத்த தானம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தேவையில்லாத இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தால் ஒரு சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றார். சமீபத்தில் “அண்ணா உயிருக்கு போராடிட்டு இருக்காரு ஒரு யூனிட் இரத்தம் தேவை படுது” என்று அழைப்பு … Read more

மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்!மம்தாவின் முடிவு!

மத்திய அரசின் அனைத்து கட்சி கூட்டம்!மம்தாவின் முடிவு!

இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். இதற்காக வருகின்ற 19ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.இது குறித்து … Read more

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் இறந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் பாசமான இருந்து வந்த வளர்ப்புத்தந்தை நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட தொடங்கியுள்ளார். 15 வயது சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க வளர்ப்புத்தந்தை திட்டமிட்டு ,அருகில் வசிக்கும் 35 வயது குடிகார இளைஞனுக்கு 50,000 ரூபாய் பணத்திற்காக சிறுமி விற்றுள்ளார். … Read more