எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

எட்டு வழிசாலையானது சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அல்ல : தமிழக முதல்வர் விளக்கம்

சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டமானது சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே அல்ல என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாகவும் செல்கிறது என்று முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இன்று வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை-க்கு சென்றார். அப்பொழுது செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி கேட்ட கேள்விக்கு முதல்வர் பதிலளித்தார். சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தை சேலம் மாவட்டத்திற்கு மட்டும் அமைக்கப்படவில்லை என்றும் மற்ற மாவட்டங்கள் வழியாக தான் செல்கிறது … Read more

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு :?

லடாக் பகுதியில் சீன அத்துமீறல் : இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதத்துடன் சீனா ராணுவம் குவிப்பு 😕 இந்திய-சீன பகுதியில் பயங்கர ஆயுதத்துடன் சீன ராணுவத்தினர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை ஏரிக்கரை அருகே இந்திய எல்லையை நோக்கி சீன ராணுவப்படையினர் 50 பேர் வந்ததாக, இந்திய ராணுவம் தெரிவித்தது .அத்துமீறிய சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடுத்ததாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்திய படையினரே அத்தி மீறியதாக … Read more

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

பிறந்த 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் :!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையில் வீசி செல்லும் சம்பவம் ஆங்காங்கே நடைபெறுகிறது. அவ்வாறு சாலையில் வீசப்படும் குழந்தைகளை சமூக ஆர்வலர்கள் மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் குழந்தைகள் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. இது குறித்து பல்வேறு விசாரணையில் காவல்துறையினரிடம் புகார்கள் அதிக அளவில் இன்னும் நிலுவையில் உள்ளது . இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் பிறந்த … Read more

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!

விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் மோசடி : தமிழக வேளாண் துறை செயலர் கூறும் தகவல் !!

இந்திய விவசாயிகளுக்கு 4 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டுவரும் பிரதமரின் கிசான் திட்டத்தில் அதிக அளவில் மோசடி நடந்திருப்பதாக தமிழக வேளாண் துறை செயலர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தில் சுமார் 110 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது .இந்த விவகாரம் தொடர்பாக 37 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாகவும் , மற்றும் 80 அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி … Read more

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு லேப்-டாப்களை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த வீடியோ பதிவுகள் அடங்கிய டிஜிட்டல் கருவியையும் காணவில்லை. அங்கு கைரேகை உள்ளிட்ட எந்த ஒரு தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் … Read more

இந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் இதுவரை 77.77% பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 89,706 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43,70,128 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,115 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 73,890 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு கொரோனா தடுப்பு விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ‌கொரோனா‌ பாதிப்பால் இதுவரை 4.74 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் படங்கள் 24 மணி நேரத்தில் மட்டும் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 7,154 ஆக உள்ளது. இன்றைய தேதியில் 1,157 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் … Read more

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இந்த நாட்டிற்கு வந்ததா?

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘ஹெச்.எம்.எம்.டான்ஸ்க்’, துபாய் துறைமுகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள லண்டன் கேட்வே முனையத்தில் இருந்து இந்த துறைமுகத்திற்கு தற்போது வருகை புரிந்துள்ளது. தென்கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த கப்பல் 1,312 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டதாகும். அதாவது 4 கால்பந்து மைதானங்களின் அளவுடைய கப்பல் இதுவாகும். இந்த ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்து கடந்த ஜூன் … Read more

பிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

பிரபல தமிழ் பட வில்லன் திடீர் மரணம்!

2003 ஆம் ஆண்டு வெளியான தல அஜித்தின் “ஆஞ்சநேயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனான அறிமுகமானவர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி. அதன்பின் ஆறு, தர்மபுரி போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார். நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான உத்தம புத்திரன் படத்தின் மூலம் இவர் விவேக் உடன் சேர்ந்து காமெடி செய்தது இன்று வரை பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் பலமானது

ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன். என்று  விராட் கோலி கூறியுள்ளார். ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை … Read more