இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 76472 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்றால் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை மொத்தமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,87,500 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,021 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் நாடு முழுவதும் 65,050 … Read more

தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? கடுப்பான ரசிகர்கள்! 

தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடி இந்த நடிகையா? கடுப்பான ரசிகர்கள்! 

இளைய தளபதியின் 65 ஆவது  படமானது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு விஜய்  உடன் கதாநாயகியாக பத்து வருடங்களுக்குப் பிறகு நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் மற்றும் சூர்யா இருவரும் சுறா படத்தின் மூலம் ஏற்கனவே ஜோடி சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த படம் படு தோல்வியை கண்டது. இருந்தபோதிலும் அந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் ஜோடியாக விஜய்யின் 65 வது படத்தில் இணைகின்றனர். இளைய தளபதியின் மாஸ்டர் படத்திற்காக … Read more

அரிய புகைப்படங்களை வெளியிட்ட எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயின்!! ரசித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டம்!!

அரிய புகைப்படங்களை வெளியிட்ட எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயின்!! ரசித்துப் பார்க்கும் ரசிகர் கூட்டம்!!

தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயினாக இன்று வரை தனது இளமை மாறாமல் அப்ப பார்த்ததுபோல் இப்ப வரையும் காட்சியளிக்கும் ஒரே கதாநாயகி நடிகை நதியா. இவர் நடித்த பூவே பூச்சூடவா, பாடு நிலாவே, ராஜாதி ராஜா,பூக்களை பறிக்காதீர்கள், மங்கை ஒரு கங்கை, உனக்காகவே வாழ்கிறேன்   போன்ற படங்களில் இவருடைய அசத்தலான நடிப்பினால் பெரிதும் பிரபலமானார். சில வருடங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டார் நதியா,அதன்பின் ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி … Read more

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!! மகிழ்ச்சியில் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் விளைவாக கோவில் அர்ச்சகர்கள், தேவஸ்தான ஊழியர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அர்ச்சகர் ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்தார் … Read more

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? “ஆப்பு” வைத்த காவல்துறை

பாஜக கட்சியில் சேர்ந்த உடனேயே ஜெயிலுக்கு செல்லும் அண்ணாமலை? "ஆப்பு" வைத்த காவல்துறை

அண்மையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை உள்ளிட்ட ஐந்து பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.   கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்சார்பு விவசாயம் செய்பவர் என கூறுபவருமான அண்ணாமலை அண்மையில்தான் பாஜகவில் இணைந்துள்ளார்.   இதனையடுத்து அவர் கோவையில் உள்ள சித்தாபுதூர் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். கோவை வந்த அவருக்கு மேளதாளத்துடன், பட்டாசுகள் வெடித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.   பொது முடக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது ஏராளமான பாஜக … Read more

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்

கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த கேரள இளம்பெண்

கடந்த நான்கு ஆண்டுகளாக தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் லீஜா ஜோஸ் (28) பிப்ரவரி மாதம் விடுமுறைக்காக கேரளா திரும்பியிருந்த அவர், கொரோனா பரவல் காரணமாக உரிய நேரத்தில் தென் கொரியா திரும்ப முடியாமல் போனது.தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி தென் கொரியா திரும்பியுள்ளார். இதனையடுத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார். கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் முடிந்து மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். … Read more

12 வருட மும்பை வழக்கில் மூன்று பயங்கரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

12 வருட மும்பை வழக்கில் மூன்று பயங்கரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

2008 மும்பை தாக்குதலில் அமெரிக்கர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உட்பட 160 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களுக்கு மூளையாக இருந்ததாக இந்தியாவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டிய ஜமாத்-உத்-தாவா (ஜுஐடி)  மூன்று பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாலிக் ஜாபர் இக்பால் மற்றும் அப்துல் சலாம் ஆகியோருக்கு தலா 16 ஆண்டு தண்டனைகள் நான்கு குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவது நபர் ஹபீஸ் அப்துல் ரஹ்துமான் மக்கி ஒரு குற்றச்சாட்டில் ஒன்றைரை ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. … Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 வது இடத்தில் ரஷ்யா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 4 வது இடத்தில் ரஷ்யா

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் … Read more

கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

கொரோனா சிகிச்சை முறையில் மக்களுக்கு அதிருப்தி!!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களின் பார்வைக்கு எடுத்துச் செல்வதே இல்லை என்றும் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்துவது இல்லை என்ற புகார்கள் உள்ளது. சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்கிறது எனக் கூறி, கோவிட்-19 கேர் … Read more

மேலும் ஒரு தடுப்பூசி இந்தியாவால் உருவாக்கப்படுமா?

மேலும் ஒரு தடுப்பூசி இந்தியாவால் உருவாக்கப்படுமா?

கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு தடுப்பூசி மட்டும்தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது. எனவே பல நாடுகள் தடுப்பூசியை உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள பி.சி.எம். என்று அழைக்கப்படுகிற பேய்லர் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசி, மறுசீரமைப்பு புரத அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. “பேய்லர் மருத்துவ கல்லூரியில் நாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியின் … Read more