பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முடிவை எடுப்பதற்காக தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி … Read more

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து! தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து! தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்த உத்தவ் தாக்கரே!

சீரம் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் எந்தவித பாதிப்பும் இல்லை என அந்த மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றொரு மருந்து நிறுவனமான அஸ்திரா ஜெனேகா என்ற நிறுவனத்துடன் சேர்ந்து புனேவில் இருக்கின்ற இந்திய நிறுவனமான சீரம் நிறுவனமானது கோவிஷீல்டு தடுப்பூசியை தயார் செய்து கொடுத்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு … Read more

சசிகலாவின் நிலை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்? தினகரன் தீவிர முயற்சி!

சசிகலாவின் நிலை வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்? தினகரன் தீவிர முயற்சி!

கர்நாடக மாநிலம் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலையில், இப்பொழுது நல்ல முன்னேற்றம் இருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்திருக்கிறது .நேற்றைய தினம் அந்த மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சசிகலாவின் நாடித் துடிப்பானது ஒரு நிமிடத்திற்கு 72 முறை இருக்கின்றது இது அனைவருக்கும் இருக்கும் நார்மல் துடிப்பு தான் என்று சொல்கிறது. அதோடு அவர் சுவாசிக்கும் வேகமானது ஒரு நிமிடத்திற்கு 20 ஆக இருக்கின்றது, சசிகலாவின் உடலில் ஆக்சிஜன் அளவு 97 சதவீதமாக … Read more

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! ரகானேவிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு!

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வைத்து ஆஸ்திரேலிய அணியை அதனுடைய சொந்த மண்ணிலேயே விழுத்திய ரகானேவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி டி20 ,மற்றும் டெஸ்ட் தொடரை தன்வசப்படுத்தி அசத்தல் வெற்றியை பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்சமயம் இந்திய அணி ஆனது இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் மோத தன்னை தயார் செய்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் அந்த நாட்டின் சொந்த மண்ணில் நான்கு போட்டிகள் … Read more

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட அதே நிலையில் இன்று சசிகலா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆக இருக்கும் அவருக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு உண்டானது. இந்த நிலையில், அவருக்கு சிறையில் இருந்த நேரத்தில் திடீரென்று காய்ச்சலும், மூச்சுத் திணறலும், உண்டாகி இருக்கிறது அதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெங்களூரு பவரிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சசிகலா பின்னர் தினகரனின் முயற்சியால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், பெங்களூரு விக்டோரியா … Read more

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உண்மையான காரணம் யார் தெரியுமா? அதிர்ச்சியில் ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நான் முதல்வர் நாற்காலியில் அமர்கிறேனோ, இல்லையோ, ஆனால் ஸ்டாலினை அமர விடமாட்டேன் அதேபோல என்னுடைய ஆதரவாளர்களும் அவரை முதல்வர் நாற்காலியில் அமர விடாமல் செய்வார்கள் என்று மதுரையில் நடைபெற்ற அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் அழகிரி. நடிகர் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பித்தால் அவருடைய கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தவுடன் அவருடைய ரசிகர் மன்ற … Read more

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

பாஜகவின் கைக்கூலி அதிமுக! கனிமொழி விலாசல்!

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது மழை வெள்ளத்தின் போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை, நிவாரணத்தொகை, போன்றவற்றை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய ,மாநில, அரசுகள் ஆலோசனை செய்ய வேண்டும் மழைநீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்படாமல் இருக்கும் காரணத்தால், மாநிலத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்கும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி … Read more

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்! மக்களிடையே இருக்கும் பீதியை போக்க நடவடிக்கை!

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஆனது மிகமிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊசியை போட்டுக்கொண்ட தெலுங்கானாவை சேர்ந்த மருத்துவ பணியாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏன் அரசியல்வாதிகள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பு அம்சம் மிகுந்தது ஆகவே நான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்ற … Read more

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ஸ்டாலின் தன் கட்சியினருக்கு சூசகமாக தெரிவித்த தகவல்!

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆனது சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த சமயத்தில் மாவட்ட செயலாளர்கள் இடையே பேசிய ஸ்டாலின் நம் கட்சியின் கூட்டணி தற்போது இருப்பதை போலவே எதிர்வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆகவே நானும் இதையே விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் … Read more

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

தினகரனின் முயற்சி வெற்றி அடைந்தது! விக்டோரியா மருத்துவமனையில் சசிகலா!

உடல் சுகம் இல்லாத காரணத்தால், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா நேற்றைய தினம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்றைய தினம் தனியார் மருத்துவமனை ஆன விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. சசிகலாவின் உடல்நிலையில் பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதன் காரணமாக அவர் இன்றோ, அல்லது நாளையோ, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம் என்று பெங்களூரு போரிங் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் சசிகலாவை வேறு ஒரு … Read more