சசிகலாவிற்கு என்ன ஆனது? மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட்!

சசிகலாவிற்கு என்ன ஆனது? மருத்துவமனை கொடுத்த ரிப்போர்ட்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து வரும் நிலையில் ,அவர் இன்னும் ஏழு தினங்களில் தண்டனை காலம் முடிந்து விடுதலையாக இருக்கிறார் .இந்த நிலையில், சென்ற 19 ஆம் தேதி அன்று அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு அதன் காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருக்கக்கூடிய போரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்பொழுது வரை அவர் அந்த மருத்துவமனையில்தான் இருந்து வருவதாக தகவல்கள் … Read more

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவி ஏற்றார் ஜோபிடன்!

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜூபிடர் ஜனவரி மாதம் 20ம் தேதியான நேற்று இரவு இந்திய நேரப்படி 10.20 மணி அளவில் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவியேற்று வைத்தார். அதன்படி கிறிஸ்தவர்களின் புனித நூல் பைபில் மீது தன்னுடைய கையை வைத்துக்கொண்டு உறுதிமொழியை வாசித்து அமெரிக்க அதிபராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ஜோபிடன் அதிபரான பிறகு அமெரிக்க அதிபராக நிகழ்த்திய முதல் உரையில், ஒரு கலகக்காரர்கள் மக்களுடைய விருப்பத்தை … Read more

சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களுக்கு எதிராக நசரத்பேட்டை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. பிரபல சின்னத்திரை நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா சமீபத்தில் சென்னை நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த … Read more

சசிகலாவுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்! பரபரப்பானது பரப்பன அக்ரஹார சிறை வளாகம்!

சசிகலாவுக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறல்! பரபரப்பானது பரப்பன அக்ரஹார சிறை வளாகம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரில் இருக்கின்ற பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய தண்டனை காலமானது வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருக்கின்ற நிலையில், அவர் இந்த மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆக இருக்கிறார் .இந்த சூழலில் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு சிறைக்கு போய் இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இன்று பிற்பகலில் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதன் … Read more

ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

ஸ்டாலினின் நக்கல் பேச்சு! பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

ஜனவரி மாதம் 27ஆம் தேதிக்கு பின்னர் தன்னுடைய ஆட்சி தொடரும் இந்த சசிகலா ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி இருக்காது என்று தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவித்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அங்கே தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோசாலைக்கு போய் பசுக்களுக்கு உணவை கொடுத்திருக்கிறார். அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் இறங்கினார். அப்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது நான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் இல்லை என்று … Read more

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

கூவத்தூர் பாணியை கையிலெடுத்த எடப்பாடி! அமைச்சர்களுக்கு போடப்பட்ட அதிரடி உத்தரவு!

எதிர்வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகும் நிலையில் 22ஆம் தேதி அனைத்து அமைச்சர்களையும் தன் சேம்பருக்கு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து அழைப்பு வந்து இருப்பதாக சொல்கிறார்கள். வெகுகாலமாக ஜெயலலிதாவின் கூடவே நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தாலும்கூட அந்த பதவிக்கான அதிகாரம் சசிகலாவிடம் தான் இருந்ததாக சொல்கிறார்கள். கட்சி ஆட்சி என இரண்டிலுமே சசிகலாவின் அதிகாரம் மேலோங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக … Read more

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

முரண்டு பிடிக்கும் ஸ்டாலின்! உடையும் திமுக கூட்டணி!

திமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்த கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல் தனிச் சின்னத்தில் போட்டியிட விடாமல் ஸ்டாலின் முட்டுக்கட்டை போட்டு கொண்டிருப்பதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். மறுபடியும் இதன் காரணமாக மக்கள் நல கூட்டணி உருவாகும் என்ற பேச்சுக்களும் எழுந்த வண்ணம் இருக்கிறது. அதோடு காங்கிரஸ் கட்சி திமுக கழற்றிவிட நினைப்பதால் அந்தக் கட்சியும் மக்கள் நல கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டணி கட்சிகளை எப்போதும் … Read more

வலைத்தள பக்கத்தில் வலை விரித்த கார் ஓட்டுநர்! சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை!

வலைத்தள பக்கத்தில் வலை விரித்த கார் ஓட்டுநர்! சீரழிந்த சிறுமியின் வாழ்க்கை!

கர்நாடக மாநிலம் மைசூரில் 17 வயது சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய கார் ஓட்டுநர் ஒருவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறையினர். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக காவல் துறை சார்பாக அநேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்த குற்ற சம்பவங்கள் குறைந்ததாக தெரியவில்லை. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தை ஒட்டி இருக்கின்ற ஓசூரில் 17 வயது சிறுமி ஒருவரை காதல் வலை வீசி சீரழித்து இருக்கிறார் ஒரு … Read more

சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!

சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!

அதிமுகவில் சசிகலாவிற்கு இனி எப்பொழுதும் இடம் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் முதல்வர் ஒரு நிலையான முடிவை டெல்லி பயணத்தின்போது எடுத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சென்ற 2017 ஆம் வருடம் சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் என்று அறிவித்துவிட்டு சிறைக்குச் சென்றார் அதன் பிறகு உருவான அரசியல் மாற்றங்களால், அதிமுக அமைச்சர்கள் பல பேர் சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தடவை கூட … Read more

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டமிடுகிறதா திமுக?

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டமிடுகிறதா திமுக?

திமுக தன்னுடைய மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை செய்வதற்காக நாளைய தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேனி மாவட்டத்திற்கு சென்று இரவில் அங்கேயே தங்கி நேற்றைய தினம் அவருடைய கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். ஆனாலும் தேனி மாவட்ட பயணத்தை அவர் திடீரென்று ரத்து செய்திருக்கிறார். ஆகவே இன்றைய தினம் சென்னையில் நடக்கும் திமுகவின் நிகழ்வுகளில் பங்கேற்று முடித்துவிட்டு நாளைய தினம் அந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் … Read more