இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலை கடைகள் முன்பாக, அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக திமுக சார்பாக முறையிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசாக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுகவின் தலைவர்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகை டோக்கன்களில் … Read more

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

போக்குவரத்து துறையிலே, சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திடவேண்டும் என முதல்வருக்கு டி.டி .வி.தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய வலைபதிவில் போக்குவரத்து துறையில் சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணிஓய்வு அடைந்தவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு … Read more

புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

புதிய நாடாளுமன்ற வழக்கு! உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடை கிடையாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியை முன்னெடுத்து. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும்வரை கட்டுமான பணிகளையும், … Read more

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? திமுக எம்எல்ஏ செய்த காரியத்தால் ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள்!

ஸ்டாலின் அவர்களின் தலையிலே பூவை தூவிய தொண்டனை திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பொது இடத்தில் கெட்ட வார்த்தையில் வசை பாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில், தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று திமுக சார்பாக நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்ற அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலின் இடத்திலே சில அதிரடியான கேள்விகளைத் தொடுத்தார். அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி … Read more

முதல்வருடன் போட்டி போட்ட வாகனங்கள்! ஏற்பட்ட விபரீத முடிவு!

முதல்வருடன் போட்டி போட்ட வாகனங்கள்! ஏற்பட்ட விபரீத முடிவு!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, அவர் வாகனத்திற்குப் பின்னால் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு அணிவகுத்து வந்த வாகனங்கள், அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரில் முன்னாள் சபாநாயகர் பி ஹச் பாண்டியன் மணிமண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது. அதை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் … Read more

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

பிறந்த நாளன்று இந்திய அளவில் கனிமொழிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், ஊழல் ராணி என்னும் ஹேஷ்டேக்கை திமுகவின் எதிர்ப்பு அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலே, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்த பல்வேறு போராட்டங்களை நடத்திய தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்று இருக்கின்றார். மத்திய … Read more

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்தார் முதல்வர்!

தைப்பூச நாளன்று பொது விடுமுறை என்று அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். தமிழ் கடவுளாகிய முருகனை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா மிக முக்கியமானது. இந்த விழா தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இலங்கை. சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் மற்றும் இந்தோனேசியா, போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளன்று பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பதே முருக பக்தர்களின் நீண்டகால கோரிக்கைகள் … Read more

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதல்வரை மிரட்டிய எதிர்க்கட்சித் தலைவர்! டிஜிபியிடம் புகார் அளித்த அதிமுக!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, போன்றோரை அச்சுறுத்தும் விதத்தில் பேசியிருப்பதாக ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக புகார் கொடுத்திருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் சென்ற இரண்டாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் கிராம சபையில் திமுகவின் தலைவர் ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அந்த கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி கேள்விகளை கேட்கவும், அதற்கு மேடம் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் நீங்கள் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் வெளியே செல்லுங்கள் என்று … Read more

டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

டெல்லியிலே தமிழர்களுக்கு பெருமை சேர்த்த அரவிந்த் கெஜ்ரிவால்! அசந்துபோன தமிழக முதல்வர் என்ன செய்தார் தெரியுமா?

தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமையையும், இந்தியா முழுவதும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்து இருக்கின்ற மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு, தமிழக அரசின் சார்பாக என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தமிழக முதலமைச்சரின் இந்த வலைதள பதிவிற்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது … Read more

டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், … Read more