பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!

பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபர்கள்!!

திருச்சூர் குன்னம்குளத்தில் பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய நபர்கள்: தலை மற்றும் கழுத்தில் காயம். கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளம் மேற்கு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் கவுதம் சுதி (29) இவர் நேற்றிரவு மேற்கு மாங்காடு கோவில் அருகே பைக்கில் சென்ற போது திடீரென வழி மறித்த கும்பல் அவரின் தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனர். இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கவுதம் சுதியை மீட்டு குன்னம்குளம் அரசு … Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more

யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

யாதும் ஊரே யாவரு கேளீர் என்ற உணர்வோடு இந்தியர்கள் அனைவரும் வாழ்கின்றனர்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!!

யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உணர்வைக் கொண்டு இந்தியர்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு. மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இன்று தொடங்கியது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை … Read more

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தும் அதிமுக!!

புதுக்கோட்டையில் தாரை தப்பட்டை முழங்க அதிமுகவினர் வீடு வீடாக சென்று அவர்களின் ஒப்புதல் பெற்று உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து அதிமுகவில் அவர்களை இணைத்து வரும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழகத்தில் அதிமுக மட்டுமல்லாது திமுகவும் தற்போது தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. திமுக கடந்த பல தினங்களாக உறுப்பினர் சேர்க்கையை பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை … Read more

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை. தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களை போல முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்படும் என பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால் தற்போதய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என … Read more

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள். கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா. கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார். பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார். அவருடன் அவருடைய சித்தி மகள் … Read more

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். 17.04.2023 முதல் 19.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.04.2023 மற்றும் 21.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 17.04.2023 மற்றும் 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது-அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை!!

நெய்வேலி என் எல் சி சுரங்கம் அமைக்க கையகப்படுத்தும் நிலங்களை அரசு விட்டுக்கொடுக்க கூடாது என அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழித்தேவன், வேளாண்நிலங்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என பேசினார். என் எல் சி விவகாரத்தில் போராடும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விவசாயிகளை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த … Read more

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம்!

வேளாங்கண்ணி அருகே விற்பனையாகும் சாராயம். குடிமகன்களால் காமேஸ்வரம் கிராமத்தில் கல்யாணம் கலவரமாக மாறும் அவலம். பள்ளி மாணவ மாணவிகள் பாதிப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ளது காமேஸ்வரம் மீனவ கிராமம் உள்ளது.அங்குள்ள கிராமத்ததின் சவுக்கு மற்றும் முந்திரி காடுகளில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாண்டி சாராயம் மற்றும் மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மகளிர் சுய உதவி குழுவினர் பலமுறை கீழையூர் போலீசாரிடம் புகார் … Read more