முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு !

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு !

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் முத்திரை தாள் கட்டணம் உயர்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி . மூர்த்தி தாக்கல் செய்தார். முத்திரைத் தாள் கட்டணம் உயர்வுக்கான சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலிஎதிர்ப்பு தெரிவித்தார். 1889 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் ஆவணங்களுக்கான கட்டணம் விதிக்கப்படுகிறது.2001 ஆம் … Read more

முகத்தில் மூவர்ணக் கொடியை பூசிய பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!!

முகத்தில் மூவர்ணக் கொடியை பூசிய பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!!

முகத்தில் மூவர்ணக் கொடியை வரைந்த சென்ற பெண்ணுக்கு பொற்கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ இன்று வைரலாக பரவியது. அந்தப் பெண்ணிடம் ஊழியர் உங்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறும் பொழுது இது தேசியக்கொடி என்று அந்த பெண் பதில் சொல்ல ஊழியர் உடனே இது பஞ்சாப் இந்தியா இல்லை என்று பதிலளித்திருக்கிறார் . இந்த வீடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் பொதுச் செயலாளர் குர்சரண் சிங் … Read more

கிருஷ்ணகிரி ஆணவ படுகொலை – பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!!

கிருஷ்ணகிரி ஆணவ படுகொலை - பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை!!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவ படுகொலை சம்பவத்தில், படுங்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் முடிந்தது. கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட நரம்புகளை மருத்துவர்களை இணைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இளம்பெண்ணிற்கு சுயநினைவு திரும்பி பேசுவதாக சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர், வேறுசமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணான அனுசுயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக … Read more

வாடகை மற்றும் குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை!!

வாடகை மற்றும் குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை!!

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கான வாடகை, குத்தகை கட்டணங்களை சீர் செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சட்டப்பேரவையில் கோயில் நிலங்களில் பல்லாண்டு காலமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கொரோனா காலத்தில் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் குத்தகை தொகையை தள்ளுபடி செய்ய கோரி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நாகை மாலி மற்றும் சின்னதுரை ஆகியோர் கவன … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு!

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு!

ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் சுகுமார்,செயலாளர் முருகன், இணைச் செயலாளர் குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பேரணியின் போது லத்தி போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்டுள்ள நிலையில், கையில் தடிகளுடன் பயிற்சி மேற்கொண்டதாலும், பொது … Read more

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்ற இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கை!! தமிழக அரசு ஏற்று ஒப்புதல்!

கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜனின் முன் விடுதலை கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. இலங்கை அகதி ராஜன் அவரது சொந்த நாடான இலங்கைக்கு செல்லும் வகையில் பயண ஆவணங்கள் குறித்த விவரங்களை 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம். கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்ற … Read more

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

பைக் வாடகை, டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரேபிடோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றச்சாட்டு. ராபிடோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்களில் பைக் டாக்ஸி என சொல்லப்படும் இருசக்கர வாகனங்களை பயணிகள் வாடகைக்கு … Read more

மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது!! மாநகராட்சி நிர்வாகமே அகற்ற ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் கழிவுகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது!! மாநகராட்சி நிர்வாகமே அகற்ற ஆர்ப்பாட்டம்!

மருத்துவக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே குறைந்த விலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது பாராமெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்ஃபேர் அசோசியேஷன் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். கோவை பொள்ளாச்சி திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு மற்றும் நடுத்தர அளவிலான மருத்துவ ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகங்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ரத்தப் பரிசோதனை சர்க்கரை பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இந்த … Read more

இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

ஒரே நாளில் 5 துறைகள் மானியக் கோரிக்கை விவாதிப்பது 3 ஆண்டுகளில் நடக்காதது. சிறு பான்மை நலத்துறை, மெட்ரோ என முக்கிய துறைகள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதிக்கப்பட்டது. ஒரே நாளில் எப்படி குறைகளையும், நிறைகளையும் விவாதிப்பது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் நேரம் கொடுக்கப்படுவதில்லை. எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உரையினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.சட்டமன்றத்தில் ஜனநாயாக படுகொலை நடக்கிறது. 51 ஆண்டுகால அதிமுகவில் 31 ஆண்டு கால ஆட்சியில் எந்த சிறுபான்மையினருக்கும் தீங்கு … Read more

அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது! திமுக அமைச்சர் அதிரடி

அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது! திமுக அமைச்சர் அதிரடி

அண்ணாமலை எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது! திமுக அமைச்சர் அதிரடி அண்ணாமலை கூறுவது போன்று தமிழகத்தில் வரும் காலங்களில் ரணகளம் ஆவதற்கு வாய்ப்பே கிடையாது. வேறு மாநிலத்தில் வேண்டுமானால் ரணகளம் ஆகலாம் தமிழகத்தில் அது நடக்காது. சிறைகளில் உள்ள பெண் கைதிகள் தங்களுடைய குடும்பத்தினரிடம் பேசுவதற்கு வீடியோ காலிங் வசதி நேற்று முதல் புழல் சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழக முழுவதும் உள்ள சிறைகளில் விரைவில் அமல்படுத்தப்படும். சிறுவர் சீர்திருத்த பள்ளி மட்டும் சிறுவர் கூர்நோக்க பள்ளிகளில் … Read more