6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!

கோவை மாவட்டம் ஆலாந்துறையில் 6 நாட்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ – ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோவை மாவட்டம் ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட, ரங்கசாமி கோயில் சராகம் வன மலையில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. மதுக்கரை வனச்சரகம் ஆலாந்துறை நாதே கவுண்டன் புதூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காட்டு … Read more

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!

பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் புகார்!

கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர் பேருந்து நிலையம் … Read more

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்!! இந்தியர் ஒருவர் பலி!!

சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதல்.இந்தியர் ஒருவர் பலி. வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த் 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே அங்கு மோதல் வெடித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெற்று வருகிறது. சூடான் தலைநகர் மற்றும் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை கைப்பற்றி இருப்பதாக துணை இராணுவம் அறிவித்துள்ளது. அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வெளியில் செல்ல வேண்டாம் … Read more

பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி கைது!

ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நெருங்கிய உறவினரான பாராளுமன்ற உறுப்பினர் அவினாசி ரெட்டியின் தந்தை பாஸ்கர் ரெட்டி நேற்று கைது செய்துள்ளனர். ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய் எஸ் விவேகானந்தர் ரெட்டி கடந்த பொது தேர்தலுக்கு முன் கடப்பா மாவட்டத்தில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான புலிவெந்தலாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் ஆதாயத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆள் வைத்து தங்கள் … Read more

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்-பாஜக அமர் பிரசாத் ரெட்டி!!

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம்-பாஜக அமர் பிரசாத் ரெட்டி!!

ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எங்கள் தலைவர் புது இலக்கணம். அடுத்தவர் காலில் விழுந்து, பதவி பெற்று, கொடுத்தவரையே காலை வாரும் கலையை கற்றவர்களுக்கு இந்த புது அரசியல் இலக்கணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பாவம் , பாஜக அமர் பிரசாத் ரெட்டி டிவிட்டரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசமின்றி பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள்!

சென்னை, பெரம்பூர் பகுதியில் நடைப்பெற்று வரும் happy street நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பாலின வேறுபாடின்றி கூட்டமாக vibe செய்த பொதுமக்கள். சென்னை மாநகரத்தின் சமீபத்திய டிரெண்டாக ‘Happy street’ நிகழ்ச்சிகள் உருவாகி உள்ளன. சென்னையின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடும் வகையிலும் இந்த happy street நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. … Read more

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சர்க்கஸ் கொட்டகைக்கு சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் சர்க்கஸ் நடத்த … Read more

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு!

புதுக்கோட்டையில் நகர் பகுதியான நிஜாம் காலனியில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் சிரஞ்சீகள் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் போதை ஊசிக்காக பயன்படுத்தினதா அல்லது மருத்துவ கழிவுகளா என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் வேளையில் புதுக்கோட்டை நிஜாம் காலனி பகுதியில் சாலை ஓரத்தில் 1000க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிரஞ்சுகள் ஆகியவை கொட்டப்பட்டுள்ளன. அங்குள்ள … Read more

ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!

ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!

ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து. அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் எரிந்து பலி. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சமீபத்தில் உள்ள குஷாய்குடா சாய் நகர் காலனியில் மர அறுப்பு ஆலை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அந்த மர அறுப்பு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் ஆகையால் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் வேகமாக பரவிய தீ அருகில் இருக்கும் … Read more

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்!

மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை விடுமுறை நாளில் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள். பெரிய மீன்களின் விலை அதிகரித்தும் சிறிய மீன்களின் விலை குறைந்த நிலையிலும் விற்பனை. தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க வளர்ச்சி காரணத்திற்காக ஏப்ரல் 15முதல் ஜீன் 14 வரை தடைகாலமானது கடைபிடிக்கப்படும் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் ஏதும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது. இந்நிலையில் நேற்று இந்த தடைகாலமானது தொடங்கிய நிலையில் இன்று ஏற்கனவே கடலுக்கு … Read more