“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!

0
144
#image_title

“வாழைத்தண்டு + எலுமிச்சை சாறு” இப்படி பயன்படுத்தினால் கிட்னியில் உள்ள ஸ்டோன்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்!

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீரக எரிச்சல், வலி முழுவதும் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை அவசியம் செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கப் அளவு சுத்தம் செய்த வாழைத்தண்டை எடுத்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி அல்லது தங்களது விருப்பத்திற்கேற்ப எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

இவ்வாறு செய்யப்பட்ட ஜூஸை குடித்து வந்தால் கிட்னியில் (சிறுநீரகம்) உருவாகி உள்ள கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு
2)ஏலக்காய்

செய்முறை:-

சுத்தம் செய்யப்பட்ட வாழைத்தண்டு ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும். பிறகு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து இரண்டு ஏலக்காயை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக்கி வாழைத்தண்டு ஜூஸில் போட்டு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைந்து விடும்.