சனிக்கிழமை, டிசம்பர் 6, 2025
Home Blog

நடிகரையும் தவெக வலையில் வீழ்த்திய செங்கோட்டையன்.. விஜய் ஹேப்பி அண்ணாச்சி!!

0

TVK: இன்னும் 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் விழாவும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முக்கிய அமைச்சர்களும் சரி, தொண்டர்களும் சரி திமுகவில் இணைந்து அதற்கு வலு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா, போன்ற முக்கிய தலைவர்களும் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவை பின்னுக்கு தள்ளும் வகையில் தவெகவும் அரசியல் அனுபவமுள்ள முக்கிய முகங்களை சேர்ப்பதற்கான பணியை செய்து வருகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையுடன், இன்னும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் சேர உள்ளனர். அவர்களை பற்றி அறிவிக்க முடியாது என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார். இவ்வாறான சூழலில் கன்னியாகுமரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் இன்று தவெகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து,  தூத்துக்குடியின் மா.செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவ்வாறு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைந்து வர, அவர்களை இணைப்பது மட்டும் என்னுடைய நோக்கம் அல்ல, நடிகர்களையும் தவெகவில் இணைப்பேன் என்ற தோரணையில் செங்கோட்டையன் ஒருவரை கட்சியில் சேர்த்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகர் ஜீவா ரவி, இன்று செங்கோட்டையனை சந்தித்த நிலையில், அவர் தவெகவில் இணைந்துள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இவரின் இந்த இணைவு தவெகவில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மோதி கொள்ளும் தவெகவின் இரண்டு முக்கிய புள்ளிகள்.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

0

TVK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் இந்த தேர்தலில் விஜய்யின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யை தங்கள் கட்சியில் சேர்க்க பலரும் முயற்சித்து வரும் சமயத்தில் தவெக தலைமையில் தான் கூட்டணி. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுக, திமுக போலில்லாமல் விஜய் கட்சி மிகவும் நல்லிணக்கத்துடன் இருக்கிறது என நினைத்த பொழுது தான் அதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது கரூர் பிரச்சாரம்.

இந்த சம்பவத்திற்கு பின் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை நிலைநிறுத்த முயலாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அத்துடன், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி தப்பிக்க பார்த்தனர். அப்போதிலிருந்தே தவெகவிலும் உட்கட்சி பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மேலும் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் ஆர்ஜூனாக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் தகவல் வெளிவந்தது. இப்படி இருக்கும் சூழலில் தற்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் மோதல் போக்கு வெடித்துள்ளது.

செங்கோட்டையன் வருகையால் புஸ்ஸி ஆனந்த பின்னுக்கு தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்த கையுடன் அவருக்கு பரப்புரை செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தவெகவில் ராஜ் மோகன், கழக கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில், அவருக்கு இணையாக புதிதாக வந்தவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளது என்று பலர் கூறுகின்றனர். மேலும் புதிதாக வந்தவர்களை விஜய் முன்னிலைப்படுத்துவதால் அவர் மீது அதிருப்தி நிலவுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளன. 

விஜய்-பிரவீன் சக்கரவர்த்தி மீட்டிங்கின் நோக்கம் இதுதானா.. வெளியான டாப் சீக்ரெட்!!

0

TVK CONGRESS: விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவரது கட்சிக்கு பெருகும் ஆதரவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தவெகவின் பிரச்சாரத்திற்கு கூடும் மக்கள் கூட்டம் அதன் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி எழுந்த போது, அவர் கட்சி தொடங்குவதற்கு முன்பே காங்கிரசுடன் நெருக்கமாக இருந்ததால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் திமுகவிடம்  அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே தவெக பெயரை பயன்படுத்தி வந்ததது. தமிழக காங்கிரசை சேர்ந்தவர்களும் திமுக- காங்கிரஸ் உறுதியாக உள்ளது என கூறி வந்தனர். இந்நிலையில் தான் காங்கிரஸின் முக்கிய புள்ளியான பிரவீன் சக்கரவர்த்தி நேற்று விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு கூட்டணிக்குரிய அச்சாரமாக இருக்கும் என்று யூகிக்கப்பட்டது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது, திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதான் எங்களுக்குத் தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை எங்களிடம் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதியும் தரவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையின் அனுமதி இல்லாமல் பிரவீன் விஜய்யை சந்தித்தது அவர் தவெகவில் சேர்வதற்கான சாத்தியகூறுகளாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தவெகவின் பரபரப்புரைக்கு கூடும் கூட்டத்தையும், விஜய்யையும் பிரவீன் பாராட்டி கருத்து பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தேர்தலுக்கு அப்புறம் திமுகவும் பாஜகவும் ஒண்ணு சேருவாங்க.. பற்ற வைத்த அதிமுக அமைச்சர்!!

0

ADMK DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக கட்சிகளை விட தேசிய கட்சிகளே அதிகளவில் முனைப்பை காட்டி வருகின்றன என்றே கூறலாம். பீகாரில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று சாதனை படைத்த பாஜக, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது நாடறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்தது பேசு பொருளானது.

இந்த கூட்டணி எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் இருந்தாலும், அது அமித்ஷாவை நம்பியே செயல்படுகிறது என்ற கருத்து மேலோங்கி வருகிறது. இது அதிமுக அல்ல, அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம், இதன் தலைமையிடம் டெல்லியில் உள்ள அமித்ஷாவின் வீடு என்று பலரும் கூறுகின்றனர். இவ்வாறு திமுகவும், அதிமுகவும் பாஜகவை மையப்படுத்தி சண்டையிட்டு வரும் நிலையில் அதிமுக, பாஜகவிடம் அடிமையாக இல்லை. திமுக  தான் அடிமையாக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் திமுகவிற்கும், பாஜகவிற்கும் எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் எப்போதும் இருக்கிறது, 2026 தேர்தலுக்கு பின் திமுக, பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் என்றும் பேசியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்க, இவர் திமுகவும், பாஜகவும் விரோதிகள் அல்ல, நண்பர்கள் என்பது போல ஒரு கருத்தை கூறியுள்ளதால் இதன் மீது பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அதிமுக தரப்பிலும்  இவருக்கும் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவிடம் மல்லுக்கட்டும் தினகரன்.. அதிமுகவை பாஜக இயக்குவது குறித்து ஓபன் டாக்!!

0

BJP AMMK: அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தார். இதன் பின்னர் பாஜக கூட்டணியில் தொடர்ந்து வந்த இவர், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த உடன், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவர் கூட்டணியிலிருந்து விலகிய உடன் இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா போன்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இவர் தனித்து விடப்பட்டது போல் தெரிகிறது.

இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற கருத்துக்கு ஓபிஎஸ்யும் துணை நின்றதால் இவர்கள் இருவரும் ஒன்றாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓபிஎஸ்யை அழைக்க, அவரும் டெல்லி சென்று அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஓபிஎஸ் டிடிவி தினகரனை விட்டு விலகி பாஜக உடன் சேரப்போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தினகரனும் அமித்ஷாவை சந்திப்பார் என்ற சந்தேகம் எழுந்த போது, இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. என்னை அழைக்கவும் மாட்டார்கள் நானும் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, அதை பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாஜகவின் பிடியில் அதிமுக இல்லையென்றால் அதனை இவர் நேரடியாக கூறி இருக்கலாம். அதனை தவிர்த்து தெரியாது என்று இவர் கூறிய பதில் அதிமுகவை பாஜக தான் இயக்குகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நான் அமித்ஷாவை சந்திக்க மாட்டேன் என்று கூறியது பாஜகவிற்கும், இவருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளது.

அடுத்த டார்கெட்டை பிக்ஸ் பண்ண செங்கோட்டையன்.. தலையசைத்த அதிமுக தூத்துக்குடி மா.செ.!!

0

TVK ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும், கோபிச்செட்டி பாளையத்தை கோட்டையாகவும் கொண்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முதலில் அவரது பதவிகள் பறிக்கபட்டது. பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் களமே உற்றுநோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் இவர் தவெகவில் இணைந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

அதிமுகவிலிருந்து இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இப்போது கூற முடியாது என்று பகீர் கிளப்பினார். அதற்கான வேளையில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் முதலில், அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்து கிருஷ்ணணை தவெகவில் இணைத்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடி பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தூத்துக்குடியின் மாவட்ட செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன், இபிஎஸ்யின் வருகைக்கு பிறகு, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு டம்மி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதனால் இவர் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பது அம்பலமானது.

செங்கோட்டையன் முதலில் குறிவைப்பது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்பதால், அவரின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது செல்லப்பாண்டியன் என்பது தெளிவாகியுள்ளது. செங்கோட்டையன் செல்லப்பாண்டியனிடம் தவெகவில் இணையும் படி கூறியதாகவும், அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நீங்கள் தவெகவில் சேர்ந்த உடன் தூத்துக்குடி மா.செ. பொறுப்பும், எம்எல்ஏ பதவியும் வழங்குவது என்னுடைய பொறுப்பு என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் கூடிய விரைவில் செல்லபாண்டியன் தவெக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டு.. செங்கோட்டையனுக்கு மகுடம் சூட்டு!! விஜய் போட்ட உத்தரவு!!

0

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்க்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முன்னணி கட்சிகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என் கணிக்கப்படுகிறது. அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின், பின்தங்கிய நிலையிலிருந்த தவெக, தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டோம் என்பதை தெளிவுப்படுத்தியது.

இதனை தொடர்ந்து SIRயை எதிர்த்து போராட்டம், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு போன்றவற்றை நடத்திய தவெகவுக்கு, ஜாக்பாட் அடித்ததை போல அமைந்த நிகழ்வு தான் செங்கோட்டையனின் சேர்க்கை. தவெகவில் சேர்ந்தவுடன் இவருக்கு, தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையன் வருகையால் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஓரங்கட்டபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜயுடன் நேரடி தொடர்பில் இருப்பவரும், தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விஜய்யை விட அதிகளவில் ஊடக வெளிச்சத்தில் இருந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் இவர் தலைமறைவானதிலிருந்தே விஜய்க்கு இவர் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது என தவெக நிர்வாகிகள் கூறினர். இப்படி இருந்த சமயத்தில் செங்கோட்டையனின் வரவு புஸ்ஸி ஆனந்தின் மதிப்பை குறித்து விட்டது என்பது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையனின் வருகையால் புஸ்ஸி ஆனந்த இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தவெகவில் இருப்பதால், விஜய்  புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டி விட்டார் என்று பலரும் கூறுகின்றனர். விஜய்யின் இந்த மாற்றத்தால் ஆனந்த் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தவெகவுக்கும் எனக்கும் தான் போட்டி.. விஜய் தொகுதியில் போட்டியிடும் வலுவான வேட்பாளர்!!

0

TVK NTK: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தவெக ஒன்றரை வயதை மட்டுமே எட்டியுள்ள நிலையில் அதற்கான ஆதரவும், ஆரவாரமும் பெருமளவில் உள்ளது. இந்நிலையில் தவெகவில் பலரும் இணைந்து வர, அவர்களுக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கலாம் என்பதில் விஜய் மும்முரமாக உள்ளார். அதிமுக, திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜாவை தவிர்த்து மற்ற யாரையும் மக்களுக்கு தெரியாது.

இதனால் திராவிட கட்சிகளில் இருக்கும் தலைவர்களை மக்கள் நியாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் உயர்த்த வேண்டும் என விஜய் முயற்சித்து வருகிறார். இவ்வாறான நிலையில் தான் 234 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் வலுவான வேட்பாளர்களை தேடும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. “வி” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்ற செய்தி பரவியது.

ந்நிலையில் விஜய்யை எதிர்த்து அதிமுக, திமுக, நாதக போன்ற முன்னணி கட்சிகளிலிருந்து யார் போட்டி போட போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், நாதகவின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் விஜய் எந்த தொகுதியில் நிற்கிறாரோ அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார். இவரின் இந்த நிலைப்பாடு அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே விஜய் போட்டியிடும் தொகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தவெகவை எதிர்த்து போட்டியிட போவது உறுதியாகியுள்ளது.

நாஞ்சில் சம்பத் விஜய்யிடம் கேட்ட முக்கிய பொறுப்பு.. ராஜ் மோகனுக்கு புல்ஸ்டாப்!!

0

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவருக்கு பெருகி வரும் ஆதரவை கண்கூடாக பார்க்க முடிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அந்த கட்சியில் இளைஞர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தான் மக்களை சந்திக்கும் பணியை தொடங்கிய விஜய் 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்தார். ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெக வெளியில் தலை காட்டமலிருந்தது. இதனை தொடர்ந்து தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றதை உணர்த்தியது.

விஜய்க்கு அரசியலில் ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற காரணத்தை வைத்தே அவரை பின்னுக்கு தள்ளப்பார்த்தனர். இந்நிலையில் தான்  50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அதன் வலிமையை கூட்டினார். இவரை தொடர்ந்து திமுகவில் தலைமை கழக பேச்சாளாராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். இவர் ஆரம்பத்திலிருந்தே விஐய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால், இவர் தவெகவில் இணைவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு விசியங்களை பகிர்ந்த இவர், தவெகவின்  பிரச்சார செயலாளர் பதவியை விஜயிடம் கேட்டதாக கூறியுள்ளார். இந்த பொறுப்பில் ஏற்கனவே ராஜ் மோகன் இருக்கும் நிலையில் இவரும் இந்த பதவியை கேட்டிருப்பது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கும், புஸ்ஸி ஆனந்த்க்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் எழுந்த நிலையில், தற்போது இந்த சவாலையும் விஜய் எவ்வாறு எதிர் கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!

0

ADMK TVK: இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதிப் பங்கீட்டிலும் மும்முரம் காட்டி வருகின்றன. மேலும் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் கட்சி மாறி வருவது வழக்கமாகிவிட்டது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் திமுகவில் சேர்ந்து அந்த கட்சிக்கு வலிமையை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய திருப்பமாக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே சுமார் 50 ஆண்டு காலமாக அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும், இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம் என செங்கோட்டையன் கூறியதன் விளைவாக அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து சில காலம் அமைதியாக இருந்த செங்கோட்டையன் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து இன்னும் சிலர் தவெகவில் இணைய இருக்கிறார்கள்.

அந்த பணியை நான் செய்து முடிப்பேன் என்று கூறினார். அவர் கூறியதை போலவே, இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் சில அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த இவர் தற்போது தவெகவில் இணைந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.