திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025
Home Blog

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

0

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

 

உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நொளம்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ரோஷனின் அறையை சோதனை செய்தபோது, அவர் எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், “என் காதுகளில் யாரோ அழைப்பது போன்ற ஒலி தொடர்ந்து கேட்கிறது” என்று குறிப்பிட்டிருந்ததுடன், குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரும் வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

 

ரோஷனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ரோஷன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள “காதுக்குள் ஒலி கேட்பது” என்ற நிலையை விளக்கி மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செவிப்புல மாயை (Auditory Illusion) என்பது உண்மையில் இல்லாத ஒலியை மூளை தவறாக உணர்வதாகும். ஒலியின் அதிர்வுகள் அல்லது அதன் மாற்றங்களை மூளை சரியாக செயலாக்க முடியாதபோது, இதுபோன்ற அனுபவம் ஏற்படலாம்.

 

சில நேரங்களில் ஹாலுசினேஷன் (Hallucination) எனப்படும் கடுமையான மனநலக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வெளி உலகத்தில் எந்த ஒலியும் இல்லாவிட்டாலும், மூளை தானாகவே அந்த ஒலியை உருவாக்கும் நிலை இதுவாகும்.

 

ரோஷன் அனுபவித்த இந்த பிரச்சினை, சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மனநலக் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய அறிகுறிகள் தோன்றும் போது அவற்றை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்

விஜய்யும் வேண்டாம்.. ஆட்சியில் பங்கும் வேண்டாம்!! ஓப்பனாக பேசிய காங்கிரசின் டாப் தலை!!

0

TVK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. 2026 தேர்தல் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளுக்கு முக்கியமான தேர்தல் என்றே கூறலாம். திமுகவிற்கு எதிரான வலுவான கட்சியாக தமிழகத்தில் உருமாற வேண்டுமென பாஜகவும், பீகார் தேர்தல் தோல்வியை போல தமிழகத்திலும் தோல்வியடைய கூடாது என காங்கிரஸும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

பீகார் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்க கூடாது என்பதில் திடமாக இருக்கும் காங்கிரஸ், திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு பெறுவதற்கு விஜய்யை பயன்படுத்தி வந்தது. ஆனால் திமுகவோ இது குறித்து எந்த கருத்தைம் கூறாமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ், விஜய்யுடன் கூட்டணியில் சேர்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க காங்கிரசின் முக்கிய தலையான பிரவீன் சக்ரவர்த்தியை விஜய்யிடம் பேச அனுப்பியது. இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று அவர் கூறியிருந்தார்.

இவ்வாறு காங்கிரஸ்-தவெக கூட்டணி குறித்து பல்வேறு விவாதங்கள் கிளம்பிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். தவெகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது, ராகுல் காந்தியை பிரதராக்குவது தான் எங்களது ஒரே நோக்கம். அதற்கு திமுக கூட்டணி தான் சரியாக இருக்கும்.

என்னை பொறுத்தவரை, இருப்பதை விட்டுவிட்டு பார்ப்பதற்கு ஆசைப்படுவது தவறு என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெருமளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்த வதந்திக்கு இவர் முற்றுப்புள்ளி வைத்ததுடன், திமுகவை தவிர்த்து விஜய்யுடன் கூட்டணி வைப்பது தவறான முடிவு என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

அண்ணாமலைக்கு 50 இபிஎஸ்க்கு 50.. அமித்ஷா போட்ட மெகா பிளான்!! ஷாக்கான அதிமுக!!

0

ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கண்ணோட்டத்தை திருப்பியுள்ளது. இந்த முறை தமிழக அரசியலில், புதிய புதிய திருப்பங்கள் நிகழும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஏற்றார் போல சில சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அதன் தோல்விக்கு காரணமாகும் என்று பலரும் கூறி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வருகின்றனர்.

முதலில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், இவருக்கு பின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார். இவர்களை தொடர்ந்து தற்போதைய மாநில தலைவர் நயினாரும் டெல்லி சென்று நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவ்வாறு தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவரின் பேச்சுவார்த்தை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

பாஜக ஆட்சி பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அதில் அண்ணாமலை இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை வகிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை முதல்வர் பதவியை நோக்கி தான் முன் வைக்கிறார்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஆட்சியில் பங்கு என்ற மரபே இல்லையென்று கூறி வரும் இபிஎஸ் இதனை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

SIR படிவம் கொடுக்கலையா போச்சு அவ்வளவுதான் !

0

 

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின் போது, சுமார் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள் உள்ளவர்கள் அடங்குவர்.

சென்னையில் மட்டும் 10 லட்சம் பெயர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

 

2️⃣ காரணம் – விளைவு விளக்கம் (Cause & Effect)

வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் நடத்தப்பட்ட SIR பணிகள் காரணமாக,

✔ இறந்தவர்கள்

✔ இடம் மாறி சென்றவர்கள்

✔ இரட்டை பதிவுகள்

ஆகியோர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.

இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் 70 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம்.

 

3️⃣ எச்சரிக்கை நோக்கில் விளக்கம் (Alert Style)

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

வரும் 19-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்,

சென்னையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பெயர் இல்லை என்றால், டிசம்பர் 16 – ஜனவரி 15 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

 

4️⃣ புள்ளிவிவர மையமான விளக்கம் (Data-based)

மொத்த வாக்காளர்கள்: 6.41 கோடி

 

நீக்கப்பட வாய்ப்பு:

 

இறந்தவர்கள் – 25 லட்சம்

 

இடம் மாறியவர்கள் – 40 லட்சம்

 

இரட்டை பதிவு – 5 லட்சம்

 

மொத்தம்: 70 லட்சம்

 

சென்னை மட்டும்: 10 லட்சம்

தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் அடிப்படையில், சுமார் 70 லட்சம் பெயர்கள் நீக்கப்படலாம்.

வரைவு பட்டியல் 19-ம் தேதி வெளியாகும் நிலையில், திருத்தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்

செங்கோட்டையனை அழைத்த டிடிவி தினகரன்.. விஜய்யின் முடிவை எதிர்நோக்கும் KAS!!

0

TVK AMMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் மெருகேற்றும் வகையில், பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக விஜய் கட்சி துவங்கியது தான் பெருமளவில் பேசப்படுகிறது. இந்நிலையில் விஜய் கட்சியுடன் எந்தவொரு கட்சியின் கூட்டணியும் உறுதியாகவில்லை. பல்வேறு கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்து அதற்கு பலத்தை கூட்டியுள்ளார்.

இவர் இணைந்த கையுடன் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரும் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்போது வரை நடக்காத காரணத்தினால் இவர்கள் தவெகவில் இணைவதற்கு விஜய் சம்மதிக்கவில்லை என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் டிடிவி தினகரன், விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வந்தார். இவ்வாறான நிலையில் தான், செய்தியாளர்களிடம் பேசிய தினகரனிடம் கூட்டணி குறித்து கேட்ட போது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த கருத்து செங்கோட்டையனுக்கு மறைமுகமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தாலும் அவரது சட்டை பையில் எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது. மேலும், அவரது அலுவலகத்தில் கூட எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப்படத்துடன் விஜய்யின் படமும் இருப்பதால், அம்மாவின் தொண்டர்கள் என்று தினகரன் செங்கோட்டையனை தான் குறிப்பிட்டுள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். இதற்கு விஜய்யின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையனின் அண்ணன் மகன் கேட்ட பதவி.. தலையசைக்கும் இபிஎஸ்!!

0

ADMK TVK: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் அரங்கும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளது. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் கூட்டணி கணக்குகளை வகுப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியும் உதயமாகியுள்ளது. விஜய் கட்சிக்கு தொடக்கத்திலிருந்தே அதிகளவில் ஆதரவு இருந்து வருகிறது.

இதனை பயன்படுத்திய விஜய், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனையும் தன் வசம் ஈர்த்து விட்டார். செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ வாக இருந்த காரணத்தினால், இவர் மீண்டும் தவெக சார்பாக அதே தொகுதியில் நின்று, இபிஎஸ்யை தோற்கடிப்பார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் செங்கோட்டையன் கட்சி மாறியதால், அவர் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம், அதிமுகவில் இணைந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்தால், கோபி தொகுதியில் என் சித்தப்பா செங்கோட்டையனை எதிர்த்து நின்று வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார். இபிஎஸ் செங்கோட்டையனை தீவிரமாக எதிர்ப்பதால் இவரின் இந்த கோரிக்கைக்கு அவர் ஒப்புக்கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இபிஎஸ் அதிமுகவின் கோபி தொகுதி வேட்பாளர் பொறுப்பை யாருக்கு கொடுத்தாலும், செங்கோட்டையன் அங்கு வலுவான அடித்தளத்தை அமைத்து இருப்பதால் அங்கு அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள் என்று அரசியல் ஆர்வர்கள் கூறுகின்றனர். 

திமுக கூட்டணியில் வெடித்த பூகம்பம்.. மார்க்சிஸ்ட் கட்சியால் தலையில் கை வைத்த ஸ்டாலின்!!

0

DMK: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளும், தேர்தல் ஆணையமும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதற்காக அதிமுகவை போலல்லாமல், திமுக கூட்டணியை வலுவாக வைக்க முயற்சி செய்து வரும் திமுக தலைமைக்கு, அதன் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் அதிக கோரிக்கைகள், ஆட்சி பங்கு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து வரும் நிலையில், இதற்கு பிறகு, விசிகவும் அதே கோரிக்கையை கேட்க ஆரம்பித்து விட்டன. இந்த இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் மிகவும் முக்கியமான கட்சிகள் என்பதால், இவர்களின் நிபந்தனைக்கு பதிலளிக்க முடியாமல் ஸ்டாலின் குழப்பத்தில் இருந்தார். இது குறித்து திமுக தலைமை எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், தற்போது கூட்டணியில் புதிய பூகம்பம் ஒன்று வெடித்துள்ளது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில பொதுச்செயலாளர் சண்முகம், திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம், கேட்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம், கொடுக்கும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து அதிக தொகுதிகளை வலியுறுத்தி வருவதால், திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு 2 கோடி அபராதம்!

0

இனி எந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதங்கள் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின் உரிமம் இல்லாமல் நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு இரண்டு கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:

 

அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது

குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்

 

அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்

 

இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது

அனுமதி இல்லாமல் போலி அல்லது விதிமுறை மீறி இயங்கும் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தவே இந்த சட்டம். மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனங்களைத் தடுக்க இது கொண்டு வரப்படுகிறது.

 

 

 

 

புது டெல்லி:

மத்திய அரசு அல்லது மாநில அரசின் அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் எந்த பல்கலைக்கழகம் (University) அல்லது உயர்கல்வி நிறுவனம் ஆனாலும், இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்.

 

புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:

 

அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது

குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்

 

அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்

 

இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது

 

ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPs) பகிரப்பட்ட இந்த புதிய மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு சில முக்கிய கட்டாய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

 

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

 

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின்

 

நிதி விவரங்கள் (Financial details)

 

ஆடிட் அறிக்கைகள் (Audits)

 

கட்டமைப்பு வசதிகள் (Infrastructure)

 

பேராசிரியர் / ஆசிரியர் விவரங்கள் (Faculty information)

 

பாடநெறிகள் (Courses)

 

மாணவர் முடிவுகள் / விளைவுகள் (Outcomes)

 

அங்கீகாரம் & அக்கிரெடிடேஷன் நிலை (Accreditation status)

 

ஆகிய அனைத்தையும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய அரசு போர்டல் ஒன்றிலும்,

தங்களது சொந்த இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

 

வெளியிடப்படும் இந்த தகவல்களே,

 

கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க

 

அரசு கண்காணிப்பு (Regulatory oversight) செய்ய

 

அடிப்படையாக பயன்படுத்தப்படும்.

 

மேலும், MGNREGA (மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்)-க்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவையும் அரசு திங்கட்கிழமை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக TOI தெரிவித்துள்ளது.

 

 

 

 

புது டெல்லி:

மத்திய அரசு அல்லது மாநில அரசின் அனுமதி இல்லாமல் தொடங்கப்படும் எந்த பல்கலைக்கழகம் (University) அல்லது உயர்கல்வி நிறுவனம் ஆனாலும், இனிமேல் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும்.

 

புதிய “விக்சித் பாரத் அதிஷ்டான் மசோதா (Viksit Bharat Adhishthan Bill)” படி:

 

அரசு அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் மீது

குறைந்தது ₹2 கோடி அபராதம் விதிக்கப்படும்

 

அதோடு, அந்த நிறுவனம் உடனடியாக மூடப்படும்

 

இந்த மசோதா லோக் சபாவில் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது

 

 

 

ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (MPs) பகிரப்பட்ட இந்த புதிய மசோதாவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு சில முக்கிய கட்டாய விதிமுறைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

 

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்:

 

அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின்

 

நிதி விவரங்கள் (Financial details)

 

ஆடிட் அறிக்கைகள் (Audits)

 

கட்டமைப்பு வசதிகள் (Infrastructure)

 

பேராசிரியர் / ஆசிரியர் விவரங்கள் (Faculty information)

 

பாடநெறிகள் (Courses)

 

மாணவர் முடிவுகள் / விளைவுகள் (Outcomes)

 

அங்கீகாரம் & அக்கிரெடிடேஷன் நிலை (Accreditation status)

 

ஆகிய அனைத்தையும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய அரசு போர்டல் ஒன்றிலும்,

தங்களது சொந்த இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

 

வெளியிடப்படும் இந்த தகவல்களே,

 

கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்க

 

அரசு கண்காணிப்பு (Regulatory oversight) செய்ய

 

அடிப்படையாக பயன்படுத்தப்படும்.

 

மேலும், MGNREGA (மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி சட்டம்)-க்கு மாற்றாக ஒரு புதிய மசோதாவையும் அரசு திங்கட்கிழமை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக TOI தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

இந்த புதிய மசோதா, கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறை கவுன்சிலுக்கு (Regulatory Council) அதிக அதிகாரம் வழங்குகிறது.

 

🔹 முக்கிய அம்சங்கள்:

தவறான தகவல் வழங்கல்,நிதி முறைகேடு, நிர்வாகக் குறைபாடுகள் போன்றவை கண்டறியப்பட்டால்,

60 நாட்களுக்குள் திருத்த நடவடிக்கை எடுக்க ஒழுங்குமுறை கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

 

மாணவர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்கள் (stakeholders) புகார் அளிக்க,

வலுவான குறை தீர்க்கும் அமைப்பு (Grievance Redressal Mechanism) உருவாக்கப்படும்.

இதனால் புகார்கள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் கையாளப்படும்.

 

🔹 அபராதம் (Penalty) விதிக்கும் முறை –

1️⃣ முதல் முறையாக விதிமீறல் நடந்தால் எழுத்துப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்படும்

 

விளக்கம் கேட்டு, குறைபாட்டை சரி செய்ய அறிவுறுத்தப்படும்

 

2️⃣ குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்யவில்லை என்றால் குறைந்தது ₹10 லட்சம் அபராதம்

 

3️⃣ மீண்டும் விதிமீறல் நடந்தால் குறைந்தது ₹30 லட்சம் அபராதம்

 

தொடர்புடைய அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்க பரிந்துரை

 

கல்வி / நிர்வாக சுயாதீனத்தை (Autonomy) குறைத்தல் அல்லது மறுஆய்வு

 

அரசு மானியங்களை நிறுத்துதல்

 

4️⃣ தொடர்ச்சியான அல்லது கடுமையான விதிமீறல் இருந்தால்குறைந்தது ₹75 லட்சம் அபராதம்அந்த நிறுவனத்தின் டிகிரி வழங்கும் உரிமை இடைநிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

ஓபிஎஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்.. ஆடிபோன அரசியல் கட்சிகள்!! இபிஎஸ்க்கு வைத்த செக்!!

0

ADMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதே நேரம் மக்களை சந்திக்கும் பணிகளும், கூட்டணி கணக்குகளும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் அது மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்த இபிஎஸ், பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். வெற்றியை இலக்காகக் கொண்டுள்ள அதிமுகவிற்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு இன்னல்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் அமைந்த நிகழ்வு தான், செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியதும், அவர் தவெகவில் இணைந்ததும் ஆகும். இந்த சேர்க்கை பெருமளவில் பேசப்பட்ட சமயத்தில், இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட, ஓபிஎஸ் 1 வாரத்திற்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு முன்பு அதிமுக உரிமை மீட்பு குழு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில், டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, இபிஎஸ்யை எச்சரித்திருந்தார்.

அதுவும் டிசம்பர் 15 என்று அவர் கூறிய நிலையில், டிசம்பர் 15 ஆன இன்று, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரை, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது நாள் வரை இல்லாத மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பெயர் மாற்றம், புதிய கட்சி துவங்குவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 

அரசியல் எதிரியை மாற்றிய விஜய்.. அடுத்த டார்கெட் நீங்க தான்!! குஷியில் செங்கோட்டையன்!!

0

ADMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களமும், கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்கள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக செயல்படுத்தபட்டு வருகிறது. அதே நேரத்தில், 2021 தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும், ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமென திமுகவும் பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் தான், நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி, மேலும் பரபரப்பை கூட்டினார்.

அது மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பல்வேறு விசியங்களை பகிர்ந்தார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, திமுகவை அரசியல் எதிரி என்று கூறியிருந்ததார். இதனால், இவர் தன்நிலை மாறாமல் இருப்பார் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையனின் தவெக இணைவு அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்து, அதிமுக அதிருப்தியாளர்களை ஒன்றிணைப்பேன் என்று கூறி சபதம் எடுத்தார். அதற்கான வேலைபாடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து திமுகவை தவிர்த்து அதிமுகவை, தவெகவின் எதிரியாக்க செங்கோட்டையன் முயல்வதாக தெரிகிறது.

இவரின் செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்தும் நோக்கிலே அமைந்துள்ளன.  தவெகவிற்கு எந்த கட்சி போட்டி என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தவெகவிற்கு போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து விஜய் தனது அரசியல் எதிரியை மாற்றி விட்டார் என்றும், இத்தனை நாளாக அதிமுகவை மறைமுக அரசியல் எதிரியாக வைத்திருந்தார் என்பதும் நிரூபணமாகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த பின்னர் அதிமுகவும் அரசியல் எதிரி தான் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.