ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025
Home Blog

கூட்டணிக்கு வந்தா அழைப்பு தானா வரும்.. விஜய்யை குறி வைத்த பாஜக தலைவர்!!

0

TVK BJP: எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை தமிழக அரசியல் களம் புதிய வேகமேடுதுள்ளது. இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் சில நிபந்தனைகளை கேட்டு வலியுறுத்தி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலை உள்ளது. விஜய் தலைமையிலான தவெக தனது கூட்டணியை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்றும், பாஜக அதிமுக உடன் கூட்டணி இல்லையென்றும் திட்டவட்டமாக கூறி விட்டார்.

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து தவெகவின் குரலாக ஒலித்த எங்கள் கூட்டணியை வேண்டாமென்று விஜய் உதறி தள்ளி விட்டதால், பாஜகவும், அதிமுகவும் விஜய்யை நேரடியாக விமர்சித்து வருவது மட்டுமல்லாமல், அவரை பலி வாங்கும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், SIR தொடர்பான கூட்டங்கள், சட்டசபை தேர்தல் கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் போன்றவற்றிற்கு தவெகவை நிராகரிப்பதை அறிந்த விஜய், அந்த கூட்டங்களுக்கு எங்களையும் அழைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தற்சமயம் பேசு பொருளான நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தலை சந்தித்து அங்கீகாரம் பெற்றால் தான் அழைப்பு கொடுப்பார்கள், இப்போது தான் நீங்கள் கட்சியை தொடங்கி இருக்கிறீர்கள். கட்சியின் செயல்பாடுகளை பொறுத்து தான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து தவெக, பாஜக கூட்டணிக்கு வந்து விட்டால் எல்லா கூட்டங்களுக்கும் தானாக அழைப்பு வழங்கப்படும் இல்லையென்றால் இது தொடரும் என்பதை எச்சரித்தை போல உள்ளது என பலரும் கூறுகின்றனர். 

புதுச்சேரியில் கவனம் செலுத்தும் விஜய்.. தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ!!

0

ADMK TVK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியதிலிருந்தே அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. விஜய் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதால் மிகவும் கவனமாக உள்ளார். மேலும் திமுக, பாஜக என நாலா பக்கமும் விஜய் அட்டாக் செய்யப்பட்டு வருவதால் விஜய்யின் முதல் தேர்தலே மிகவும் கடினமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

விஜய் இன்னும் தனது கூட்டணியை அறிவிக்காத நிலையில், வேறு சில விசியங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் முக்கியமாக அண்மையில் புதுச்சேரி பக்கம் விஜய்யின் கவனம் திரும்பி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் பாஜக எம்எல்ஏ சாமிநாதன் மற்றும் காரைக்கால் பகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ அசனா ஆகிய இருவரும் தவெக இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட கட்சிகளில் மாறி மாறி பலரும் இணைந்து வந்த நிலையில் தவெகவில் மட்டும் இது நிகழாமல் இருந்தது. தற்போது தவெகவிலும் அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் ஒரு முறை மதிமுகவிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தவெக இணைவதற்கான சத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு தவெகவுக்கு மேலும் பலத்தை அதிகரித்துள்ளது என தவெக தொண்டர்கள் கருதுகின்றனர். 

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை.. பளிச்சென்று கூறிய காங்கிரஸ் தலைவர்!!

0

CONGRESS DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. அதில் முக்கியமாக விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு போன்றவை குறிப்பிடத்தக்கது.

மற்ற கட்சியின் கூட்டணியை விட தவெக உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியை நிராகரித்த விஜய் நால்வர் அணியுடன் கூட்டணி அமைப்பார் அல்லது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் விஜய்க்கு மிக நெருக்கம் என்பதால் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று பல்வேறு வியூகங்கள் எழுந்தன.

மேலும் திமுக கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கை கேட்டு வலியுறுத்தி வந்தது, விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என கருதப்பட்ட நேரத்தில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர்.

இது குறித்து பேசிய அவர், தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி என்பது வெறும் ஊகங்களாக இருக்கலாம், எங்களைப் பொறுத்தவரை, திமுக-வுடனான இண்டியா கூட்டணி பலமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில் தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு.. கூட்டணி குறித்து டிடிவி தினகரன் ஓபன் டாக்!!

0

TVK AMMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், அதற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை கண்ட கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகின்றன. ஆனால் விஜய் தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று தீர்மானம் நிறைவேற்றி விட்டார். இதனால் அதிமுக-பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்த கட்ட ஆலோசனையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த நால்வர் அணியை சேர்ந்தவர்கள் நாங்கள் இடம் பெரும் கூட்டணி தான் வெற்றி பெறும், தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, என்று கூறி வருகின்றனர்.

நால்வர் அணியில் இருக்கும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் அரசியலில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். இதனால் இவர்கள் இணையும் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இன்று சென்னை அடையாரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாங்கள் இடம் பெரும் கூட்டணி வெற்றி பெரும் என்று மீண்டும் வலியுறுத்தி கூறி இருக்கிறார். மேலும் செங்கோட்டையன், சசிகலா, ஓபிஎஸ்யிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.

இவர்கள் நால்வரும் திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால் அதனுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. அதனால் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத, விஜய் தலைமையில் கூட்டணி அமைக்காத இபிஎஸ்க்கு எதிராக விஜய் உடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் தான் டிடிவி தினகரன் திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டி என்று கூறியிருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தினகரன் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த சம்மதம் தெரிவித்து விட்டார் என அமமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்க்கு புல் ஸ்டாப்!! ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான்!!

0

DMK TVK CONGRESS: மாநில அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். மிகப்பெரிய திராவிட கட்சியான திமுகவை தவெகவின் அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அனைவரது மத்தியிலும் சிரிப்பை வர வழைத்தது. விஜய் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அவரது கட்சி அபார வளர்ச்சி அடைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லாம்.

தேர்தல் என்றாலே அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று இருந்த நிலை மாறி, தற்போது, அதிமுக, திமுக, தவெக, நாதக என அரசியல் களம் மாறி விட்டது. இந்நிலையில் தவெகவின் கூட்டணி முடிவு ஜனவரியில் தான் அறிவிக்கப்படும் என்று விஜய் தீர்க்கமாக உள்ளார். இதுவரை விஜய் பாஜக உடனும் கூட்டணி இல்லை, தற்சமயம் வரை அதிமுக உடனும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இதனால் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது திமுகவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் பீகார் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸுக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கையும் ஒதுக்கினால் காங்கிரசை தவெக பக்கம் போக விடாமல் தடுக்க முடியும் என்று திமுக தலைமை யோசித்திருக்கிறது. இப்படி நடந்தால் தவெக தனித்து நின்று தேர்தலில் தோற்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று திமுக நினைக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காத விஜய் காங்கிரசை மட்டுமே நம்பி இருந்த சமயத்தில் திமுகவின் இந்த முடிவு விஜய்யின் அரசியல் பயணத்தை அடியோடு ஒழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் இருந்த உங்க தோல்வி உறுதி.. திமுகவிற்கு சாதகமாக பேசிய அதிமுக அமைச்சர்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேர்தல் களம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிமுகவிற்கும் இது முக்கியமான தேர்தல் என்பதால் மற்ற கட்சிகளை விட அசுர வேகத்தை எடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியாக மக்களை சந்திக்கும் பணியும், தேசிய கட்சியான பாஜக உடனும் கூட்டணி அமைத்து விட்டது. இந்நிலையில் அதிமுகவில் இபிஎஸ்யின் தலைமையின் மேல் நம்பிக்கை இல்லாதவர்களும், பாஜக கூட்டணியை விரும்பாத முக்கிய நிர்வாகிகளும் திமுக பக்கம் சென்றுள்ளனர்.

இதனால் அதிமுக பலவீனமடைந்து காணப்படுவதால், அதனை பழைய நிலைக்கு கொண்டு வர இபிஎஸ் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார். ஆனால் அதனை கெடுக்கும் வகையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில வேலைகளை செய்து வருகின்றனர். திமுக அரசு பெண்களுக்கு இலவசமாக வழங்கும் சலுகைகளுடன் பெண்களை ஒப்பிட்டு பேசிய அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிராக அதிமுகவில் கழக குரல் எழுந்த நிலையில், தற்போது புதிதாக, திமுகவிற்கு சாதகமாக அதிமுக அமைச்சர், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஒரு கருத்தினை கூறியுள்ளார்.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் யாரும் எதிர்பார்த்திராத அளவு தோல்வியை தழுவியதை விமர்சித்து பேசிய ராஜேந்திர பாலாஜி, நாட்டை பற்றி கவலை படாத காங்கிரசை திமுக தான் தூக்கி புடிச்சிக்கிட்டு இருக்கு. தொப்புன்னு போட்ருக்காங்க அந்த கட்சியால எந்திரிக்கவே முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தால் திமுகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது, அதனால் காங்கிரஸ் கூட்டணியை கலைச்சிடுங்க என்று கூறியுள்ளது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இதனால் இவரின் இந்த கூற்றுக்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பலரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பீகாரில் ஜெயிச்சிட்டோம்.. இபிஎஸ்யிடம் டீலிங்கை கேட்டு வலியுறுத்தும் பாஜக!!

0

ADMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுக மக்களை சந்திக்கும் பணிகளை முதலாவதாக தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. மேலும் ஒரு வருடத்திற்கு முன்பே தேசிய கட்சியான பாஜக உடன் அதிமுக கூட்டணி அமைத்து விட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பாஜக பீகார் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பீகார் முடிவுகள் வெளியான கையோடு பாஜக தமிழக தேர்தலில் தீவிரமாக அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில், பாஜக, அதிமுகவுடன் ஒரு டீலிங் செய்திருக்கிறது. அது என்னவென்றால், பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என்பது தான். இதற்கு இபிஎஸ்யும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். தற்போது பாஜக வெற்றி பெற்று விட்டதால், இபிஎஸ்யிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வருகிறதாம்.

கொங்கு மண்டலத்தை சேர்ந்த பலரும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு சிதற கூடும் என்ற வருத்தம் இபிஎஸ்க்கு இருக்கிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாஜகவிற்கு கொங்கு மண்டலத்தை ஒதுக்கினால், அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் சரியக்கூடும். இதனால் இபிஎஸ் பாஜகவிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழிக்கிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் தற்சமயம் இபிஎஸ் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டால், பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் எதிரொலி.. கூட்டணியில் வலுபெறும் விசிக!! தூக்கி வீசப்பட்ட காங்கிரஸ்!!

0

CONGRESS VCK DMK: அடுத்த ஆறாவது மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், அரசியல் அரங்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சி கட்டிலில் தொடர்ந்து அமர வேண்டுமென திமுகவும், இந்த முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமென அதிமுகவும் தொடர்ந்து கலப்பணியாற்றி வருகின்றனர். இந்த சூழலில் பீகாரில் நடந்த முடிந்த தேர்தலில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதன் எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றி பெரும் தோல்வியடைந்துள்ளது.

இதன் காரணமாக திமுக கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் அதன் மதிப்பை இழந்து விட்டது என்று கருத்து வலுபெறுகிறது. இதனால் திமுக கூட்டணியிலிருக்கும் விசிக முன்னிலை பெற்று வருகிறதாம். திமுக கூட்டணியில் மக்கள் செல்வாக்கு கொண்ட முதல் கட்சி விசிக தான் அப்படி இருக்கையில், அக்கட்சிக்கு மட்டும் குறைந்த தொகுதிகள் ஒதுக்குவதை விசிகவை சேர்ந்த பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்த திமுக தலைமை பீகார் தேர்தல் முடிவுகள் வரை பொறுத்திருந்து, தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளது.

அது என்னவென்றால், வழக்கத்திற்கு மாறாக காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கி விட்டு, விசிகவிற்கு அதிக தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். அதற்கு காரணம் பீகாரில் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு, தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்பதால் இதற்கு  அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தமிழகத்திலும் மண்ணை கவ்வி விடுவார்கள் என்று திமுக நினைக்கிறது. தற்போது திமுக எடுத்திருக்கும் இந்த முடிவு, விசிகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று விசிக தொண்டர்கள் கூறுகின்றனர்.

திமுகவில் மரியாதை இல்லை.. இவங்க கிட்ட பேச வேண்டியது தான்!! ராகுல் எடுத்த திடீர் முடிவு!!

0

TVK CONGRESS DMK: பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் பீகாரை விட தமிழக அரசியல் கணக்குகளில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். அங்கு நடந்த தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் பீகாரில் தோற்றதால், திமுக கூட்டணியில் அது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பீகார் தேர்தலை வைத்தே நகரும் என்று கூறப்பட்ட நிலையில், திமுக தலைமை இவ்வாறான முடிவை எடுத்திருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகளில் அதிக முக்கியத்துவம் பெறுவது காங்கிரஸ் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் பீகாரின் தேர்தல் முடிவுகள் அதன் அரசியல் நிலையை தலைகீழாக மாற்றியுள்ளது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் ஆட்சி பங்கை கேட்டு ஸ்டாலினை வலியுறுத்தி  வந்த சமயத்தில், பீகார் தேர்தல் முடிவுகள் வரை பொறுத்திருந்தார் ஸ்டாலின். இதில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்ததால், தமிழகத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் அவர்களுக்கு ஒற்றை இலக்க தொகுதிகளை ஒதுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சி திமுகவில் தங்களுக்கு போதிய மரியாதை இல்லையென்பதை உணர்ந்து, தவெக உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். ராகுலின் இந்த திடீர் முடிவு வரவிருக்கும் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

அதிமுக அமைச்சருக்கு எதிராக கிளம்பிய மகளிரணி.. அச்சத்தில் இபிஎஸ்!!

0

ADMK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகளனைத்தும், மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்றும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்றும் புது புது வியூகங்களை கையில் எடுத்துள்ளது. திமுகவை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிக முக்கியம் என்பதால் மற்ற கட்சிகளை விட வேகமாக செயல்படுகிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணி உருவானது விவாதங்களுக்கு வழிவகுத்த நிலையில், அதிமுக அமைச்சர் சிவி. சண்முகம் திமுக அரசு வழங்கிய இலவச திட்டங்களை பெண்களோடு ஒப்பிட்டு பேசியது பேசு பொருளானது. இதன் காரணமாக அவர் பலரின் கண்டங்களுக்கு ஆளானார். இதனை தொடர்ந்து, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று கூறி விழுப்புரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மகளிரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து ஒருவர் கூட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் சிவி சண்முகம் பெண்களை இழிவாக பேசியது தான் என்று பலரும் கூறி வருகின்றனர். எனவே சிவி சண்முகத்திற்கு எதிராக அதிமுக மகளிரணி களமிறங்கி விட்டது என்று அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். அதிமுகவில் ஏற்கனவே இருக்கும் பிளவுகளை சமாளிப்பதற்க்கே நேரமில்லாத இபிஎஸ்க்கு இது பேரிடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.