புதன்கிழமை, டிசம்பர் 3, 2025
Home Blog

திமுகவிடம் கறார் காட்டும் காங்கிரஸ் குழு.. முக்கிய பொறுப்பை கேட்டு நிபந்தனை!! கதறும் ஸ்டாலின்!!

0

DMK CONGRESS: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக அடுத்த முறையும் ஆட்சியில் அமர வேண்டும் என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் 2021 தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அங்கு திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து அதனை தன் வசப்படுத்தும் முயற்சியையும் கையிலெடுத்துள்ளது.

மேலும், கூட்டணி கட்சிகளிடமும் தொகுதி பங்கீடு குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளோ புதிய புதிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவது ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக உள்ளது. அந்த வகையில் முதன் முதலில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என்ற வாதத்தை முன் வைத்தது. பீகார் தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் தமிழக தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

தொகுதி பங்கீடு குறித்து ஸ்டாலினிடம் பேச காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இவர்கள் இன்று ஸ்டாலினை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியை ஏன் வழங்க கூடாது என்ற குரல் ஓங்கி வரும் நிலையில் தற்போது காங்கிரசின் கோரிக்கை திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய பதவியை கேட்ட ஓபிஎஸ்.. அமித்ஷாவிடம் போட்ட கண்டிஷன் இது தானா!!

0

ADMK BJP: இன்னும் 6 மாதத்தில் நடைபெற போகும் தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தேர்தல் களம் தயாராகி வருகிறது. இந்த சமயத்தில் அதிமுகவில் தலைமை போட்டியும், பதவி வெறியும் தலைவிரித்தாடுகிறது. அதன் உச்சம் தான் முக்கிய அமைச்சர்களின் நீக்கம் என்றே சொல்லலாம். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு, ஓபிஎஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்த ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றும், மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்றும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

ஆனால் அது தற்போது வரை நடைபெறாத காரணத்தினால், டிசம்பர் 15 க்குள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றால், வேறு மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இந்நிலையில் ஓபிஎஸ் இன்று டெல்லி சென்றிருப்பது, அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவர் டெல்லி சென்று அமித்ஷாவிடம் சுமார் 20 நிமிடம் பேசியதாக செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பு எது பற்றி இருக்கும் என்ற விவாதம் எழுந்த நிலையில், தற்போது அது குறித்து ஒரு தகவல் கசிந்துள்ளது.

ஓபிஎஸ் அமித்ஷாவிடம், அதிமுகவில் நான் மீண்டும் இணைய நீங்கள் உதவ வேண்டும் என்றும், அதில் எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளாராம். என்ன ஆனாலும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று பிடிவாதமாக இருக்கும் இபிஎஸ் இதனை எப்படி ஏற்றுக் கொள்வார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும், அதிமுகவின் உள் விவகாரங்களில் பாஜக மீண்டும் மீண்டும் தலையிடுவது அதிமுக பாஜகவின் கைப்பாவையாக உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது.

முதல் டாஸ்கை முடித்த செந்தில் பாலாஜி.. கோவையை குறி வைத்த திமுக!! திண்டாடும் இபிஎஸ்!!

0

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் போட்டி போட தயாராகி விட்டன. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக நடத்தி வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்ப்பதற்கான வேலைகளும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றே கூறலாம். மற்ற கட்சிகளில் கூட தொண்டர்கள் தான் கட்சி மாறி வருகின்றனர்.

ஆனால் திமுகவில் மட்டும் அதிமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சிங்காநல்லூர் தொகுதியில் 2006, 2011 யில் எம்எல்எ-வாக இருந்த சின்னசாமி இன்று திமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகுராஜா, போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக சின்னசாமியும் திமுகவில் இணைந்திருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவையில் தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் திமுக, இந்த முறை அங்கு வெற்றி பெற வேண்டும் என அந்த பகுதியை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்து விட்டது. இந்நிலையில் கோவையை மெல்ல மெல்ல திமுக வசம் கொண்டு வரும் செந்தில் பாலாஜி முதலில் அதிமுக அமைச்சர்களை திமுகவில் சேர்க்கும் பணியை கையில் எடுத்த நிலையில் அது தற்போது வெற்றி அடைந்துள்ளது. அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது பேசுபொருளாக நிலையில் தற்போது சின்னசாமியின் இணைவு அரசியல் அரங்கை ஆட்டம் காண வைத்துள்ளது.

தவெக தலைவரை மறைமுகமாக தாக்கிய துணை முதல்வர்.. சூடு பிடிக்கும் அரசியல் அரங்கு!!

0

DMK TVK: சுமார் 70 வருடங்களாக தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்து வரும் திமுக 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. திமுகவின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்து வந்தது அதிமுக. அதனை முறியடிக்க தற்போது தவெக களமிறங்கியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி, தவெக பிரதான அரசியல் எதிரி திமுக தான் என்று கூறியிருந்தார். மேலும் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்றும், சிம் சார் என்றும் நேரடியாக விமர்சித்திருந்தார்.

ஆனால் திமுகவை சேர்ந்தவர்களோ விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. அப்படியே விமர்சித்தாலும், மறைமுகமாக விமர்சிப்பதையே வழக்கமாக வைத்திருந்தனர். புதிய கட்சியான தவெகவை, மிகப்பெரிய திராவிட கட்சி விமர்சிக்க தொடங்கி விட்டால் விஜய் வளர்ந்து விடுவாரோ என்ற பயத்தினால் திமுக தவெகவை விமர்சிக்காமல் இருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறினார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே திமுகவும் நடந்து கொள்கிறது. தவெக அரசியலில் குதித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இப்போதும் கூட திமுக தவெகவை விமர்சிக்க யோசிப்பது வேடிக்கையாக உள்ளது.

திராவிட கழக தலைவர் வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்திற்கு நேரில் சென்று துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய உதயநிதி, திமுகவில் கவுன்சிலர் பதவி கூட வேண்டாம், கொள்கை, சமுதாய தொண்டு தான் முக்கியம் என்று இத்தனை ஆண்டுகள் பணியாற்றுகின்றனர். ஆனால் ஒரு சிலர், நேற்று கட்சி துவங்கி விட்டு, இன்று முதல்வர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள், என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

தவெகவிற்கு பச்சை கொடி காட்டிய காங்கிரஸின் முக்கிய புள்ளி.. விஜய்க்கு புகழாரம்!!

0

TVK CONGRESS: தமிழகத்தில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தலுக்காக சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கட்சி துவங்கிய விஜய் 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். அப்போதிலிருந்தே விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. விஜய் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸுடன் மிகவும் இணக்கமாக இருந்து வருகிறார். இதனால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தவெகவிற்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அது ஓட்டாக மாறுமா என்பது சந்தேகம் தான்.

இதன் காரணமாக காங்கிரஸ் விஜய் உடன் கூட்டணி அமைக்க யோசித்தது. அது மட்டுமல்லாமல், தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருந்து வரும் சமயத்தில், அதனை விட்டு விலகுவது தவறான முடிவு இல்லை என்றும் காங்கிரஸ் தலைமை நினைத்தது. ஆனால் திமுகவிடம் அதிக தொகுதிகளை பெற விஜய்யை பயன்படுத்தி கொண்டது. இவ்வாறு தவெக-காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் இருந்த நிலையில், காங்கிரசின் முக்கிய தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்க்கு புகழாரம் சூட்டியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

தவெக பிரச்சாரத்திற்கு கூடும் கூட்டத்தை பற்றி பேசிய கருத்து தெரிவித்த பிரவீன் சக்ரவர்த்தி, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் கூட்டத்தை கூட்ட, பணம், நேரம் மற்றும் உழைப்பை செலவிட்டு வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் இதற்கு நேர் எதிராக உள்ளது. கூட்டத்தை சமாளிப்பதே அவருக்கு சவாலாக இருக்கும். இது பலருக்கும் வியப்பளிக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விஜய்க்கு நேரடியாக ஆதரவு தெரிவிப்பது போல உள்ளது எனவும், காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெக உடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

எங்களின் கோரிக்கைகளை திமுக தலைமை நிறைவேற்றவில்லை.. காங்கிரஸ் தலைவர் போட்ட வெடி!!

0

DMK CONGRESS: 2026 யில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டும் என ஆளுங்கட்சியாக உள்ள திமுக முயற்சித்து வருகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மற்றும் கூட்டணி சலசலப்புகளை பயன்படுத்த நினைத்த திமுகவிற்கு அதன் கூட்டணி கட்சிகளும் அதையே செய்து வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதும், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதையும் கண் கூடாக பார்க்க முடிகிறது.

இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் சூசகமாக கூறி வந்தனர். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்த காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவுக்கு பின் அமைதியாகிவிட்டது. இன்று காங்கிரஸ் அமைத்த 5 பேர் கொண்ட குழு ஸ்டாலினை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த சந்திப்பில் மீண்டும் ஆட்சி பங்கு கோரிக்கையை முன் வைக்க போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு  சில மாதங்களாவே காங்கிரஸ்-திமுக இடையே சச்சரவு தொடர்ந்து வரும் நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஷ்குமார், திமுக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

அந்த ஆதங்கத்தின் அடிப்படையில் தான் ஆட்சியில் பங்கு கோரிக்கை எழுகிறது  என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருவதால், தேர்தலில் வெற்றி பெற்றாலும், கொள்கை ரீதியாக தனித்தன்மையுடன் செயல்பட்டு அமைப்பை வலிமைப்படுத்தி முடியவில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய மதிப்பு இல்லை என்பதையும், திமுக உடன் இருப்பதால் வலிமை பெற முடியவில்லை என்பதையும் நிரூபித்திருக்கிறது.

டெல்லியை நாடிய பாமக நிறுவனர்.. செம்ம ஷாக்கில் அன்புமணி!! எண்டு கார்டு போடும் பாஜக!!

0

PMK BJP: 2026 யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வரும் சமயத்தில் பாமகவில் மட்டும் தந்தை-மகன் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு பாமகவில் முக்கிய பொறுப்பை வழங்கியதிலிருந்து ஆரம்பித்த சண்டை இன்னமும் ஓயவில்லை. இதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இரண்டாக பிளவுபட்ட கட்சியான பாமக யாருடையது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

இந்நிலையில் உட்கட்சி விவகாரம் காரணமாக மகன் என்று கூட பாராமல், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையம் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனால் பாமக கூட்டணி இன்னும் உறுதி செய்யபடாமலே உள்ளது.

இந்நிலையில் கட்சியின் தலைவர் அன்புமணி என்று தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராமதாஸ் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக, டெல்லி உயர்நீதி மன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடுத்துள்ளார். பாமக பிரச்சனையில் பாஜக மேலிடம் உதவி வரும் நிலையில் ராமதாஸ் மீண்டும் டெல்லியை நாடி இருப்பது அன்புமணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாமகவில் உள்ள குழப்பத்தை தீர்த்து அவர்களை தங்கள் கூட்டணியில் சேர்ப்பதே பாஜகவின் பிளான் என்று பலரும் கூறுகின்றனர். 

அண்ணாமலை அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.. சூசகமாக கூறிய நயினார் நாகேந்திரன்!!

0

BJP: பீகார் சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனத்தை திருப்பியுள்ளது. பாஜகவின் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் எதிர்ப்பதால் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய திராவிடக் கட்சியாக அறியப்படும், அதிமுகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது.

தமிழக தேர்தலில் அதிமுக, திமுகவை விட அதிக கவனம் செலுத்தி வருவது பாஜக என்று கூறும் அளவிற்கு அதன் செயல்பாடுகள் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டு நயினார் நாகேந்திரன் அமர்த்தப்பட்டார். இபிஎஸ்யின் நிபந்தனையால் பதவியை இழந்த அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று பேசப்பட்டது.

ஆனால் அதற்குரிய வேலைப்பாடுகள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் அதிருப்தியடைந்த அண்ணாமலை புதிய கட்சி துவங்க போகிறார் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இந்த செய்தி குறித்து அண்ணாமலை மறுப்பு தெரிவிக்காத காரணத்தினால், இது உண்மை என்றே பலரும் கூறினர். இந்நிலையில் இது குறித்து தற்போதைய மாநில தலைவர் நயினாரிடன் கேட்ட போது, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க மாட்டார் என்று உறுதியளித்துள்ளார். இவரின் இந்த பதில், அண்ணாமலை மீண்டும் மாநில தலைவர் பதவியில் அமர்த்தபடலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல், நயினார் இதற்கு முன் ஒரு முறை அரசியலில் எதுவும் நடக்கலாம், என் பதவி முடிவடையும் காலம் வந்து விட்டது என்று கூறியது இந்த வாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. மேலும் அண்ணாமலை தமிழகத்தில் நுழைந்த உடன் தான் பாஜகவின் வாக்கு சதவிகிதம் தமிழ்நாட்டில் அதிகரித்தது. அந்த காலகட்டத்தில் தான் பாஜக ஊடக வெளிச்சத்தில் தொடர்ந்திருந்தது. இதன் காரணமாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை மீண்டும் பதவியில் அமரத்தப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

டெல்லிக்கு பறந்த முன்னாள் முதல்வர்.. குழப்பத்தில் இபிஎஸ்!! வாக்கை மீறிய பாஜக!!

0

ADMK BJP: அதிமுகவின் மூத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த கட்சி தனது தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமருவது என்ற பிரச்சனை மேலோங்கி இருந்த நிலையில், பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இவர் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்ததே அங்கு பிரிவினைகளும், உட்கட்சி மோதலும் ஏற்பட தொடங்கிவிட்டது. அந்த வகையில் முதலில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், பின்னர் ஒபிஸ்யையும் நீக்கினார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன், அண்மையில் செங்கோட்டையன் என பலரும் இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கூறி அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஓபிஎஸ் ஆரம்பித்தார். இந்த குழுவில் இபிஎஸ் தலைமையை விரும்பாதவர்களும், அதிமுக பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என நினைத்த முக்கிய அமைச்சர்களும் இடம் பெற்றிருந்தனர். இத்தனை வருடங்கள் ஆன பின்பும் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை இபிஎஸ் மேற்கொள்ளாததால், டிசம்பர் 15 க்குள் இந்த பணியை மேற்கொள்ளவில்லை என்றால் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மிகவும் மோசமானதாக இருக்கும் என ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமியை எச்சரித்திருந்தார். இந்நிலையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் இந்த திடீர் பயணம் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றியதா, தனிக்கட்சி துவங்க போவது குறித்த ஆலோசனையா, இல்லை விஜய் கட்சியில் சேர்வது தொடர்பான பேச்சு வார்த்தையா என்பது இன்னும் தெரியவில்லை. இது பற்றிய விவாதங்கள் மேலோங்கி வரும் வேளையில், பலரும் இந்த பயணம், அதிமுக ஒருங்கிணைப்பு பற்றியது தான் என்று கூறி வருகின்றனர். செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய போது , அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது என இபிஎஸ் அமித்ஷாவிடம் வாக்குறுதி பெற்றதாக அதிமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இப்படி இருக்கும் சமயத்தில், ஓபிஎஸ் டெல்லி சென்று ஒருங்கிணைப்பு குறித்து பேச போகிறார் என்ற செய்தி இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக பிரச்சனையை டீல் செய்யும் டெல்லி மேலிடம்.. முடிவுக்கு வரும் தந்தை-மகன் மோதல்!!

0

PMK BJP: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும்  மக்களை சந்திக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை மகன் பிரச்சனை நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டே செல்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு இளைரணி தலைவர் பதவியை வழங்கியதில் அன்புமணிக்கு உடன்பாடு இல்லை.

இதனை பொது மேடையிலே பகிரங்கமாக வெளிப்படுத்தி இருந்தார். இதனை பிறகு அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியை விட்டு நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால் கட்சி இரண்டாக பிளவுபட்டிருந்தது. இதனை தொடர்ந்து அன்புமணியின் தலைவர் பதவி ராமதாஸால் பறிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக கூறிய ராமதாஸுக்கு தற்போது டெல்லி மேலிடம் உதவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பாமகவில் அப்பா-மகன் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்து பிறகு அவர்களை பாஜக கூட்டணியில் சேர்ப்பதே மத்திய அமைச்சர்களின் எண்ணம் ஆகும். பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்த கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது பாமக பிரச்சனையில் தனது முழு கவனத்தை திருப்பியுள்ளது.