சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog

கட்டாயம் இவர்களுடன் கூட்டணி இல்லை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!!

0

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் எந்த ஒரு கட்சியும் விடாமல் அனைவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். அந்த வகையில் அதிமுக கட்சி குறித்து பேசும்போது, இந்த கட்சியை உருவாக்கியது எம்ஜிஆர் ஆனால் அதன் நிலைமை தற்பொழுது எப்படி உள்ளது என்று நாம் பார்க்கிறோம். அந்தத் தொண்டர்களால் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை எனக் கூறியதோடு, உலக மகா ஊழல் கட்சி என்றும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

இந்த மாநாட்டிற்கு முன்பு வரை அதிமுக பாஜக நிலைப்பாட்டை கண்டு, வரும் நாட்களில் விஜய்யுடன் எடப்பாடி கூட்டணி வைப்பார் என்று பேசி வந்தனர். ஆனால் இந்த மாநாட்டின் மூலம் அதன் முடிவு தெரிந்து விட்டது. கட்டாயம் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி இருக்காவே இருக்காது. மாறாக தேமுதிக பாமக போன்ற கூட்டணிகள் இடம் பெறலாம். ஏனென்றால் விஜயகாந்தை அண்ணா என்றும் மாற்று கட்சி என பாமகவை குறித்தும் எதுவும் வாய் திறக்கவில்லை.

மேற்கொண்டு விஜய் பேசியதற்கு எதிராக எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். அதில், கட்சி தொடங்கியதும் ஆட்சி அமைக்க முடியாது, அவர் அறியாமையில் பேசுகிறார் அதேபோல யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்கலெல்லாம் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி தொடங்கிக் கொள்கிறார்கள். அதேபோல மக்களுக்கு எந்த ஒரு இயக்கமும் உடனடியாக நன்மை செய்து விட முடியாது என்றும்  சினிமாவில் பேசுவது போல டயலாக் வசனம் பேசுகிறார்கள். நாங்கலெல்லாம் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

அரசியலைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்து மட்டுமே நல்ல இடத்தை பெற முடியும் என்று கூறினார். மேற்கொண்டு அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் விஜய்யுடன் இனிவரும் நாட்களில் கூட்டணி இருக்குமா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர், அதிமுகவை விமர்சனம் செய்யும் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் மூலம் அதிமுக விஜய் கூட்டணி ஒருபோதும் ஒத்துப்போகாது என்பது தெரிகிறது.

இனி இங்கு உனக்கு வேலை இல்லை.. அண்ணாமலையை தமிழகத்திலிருந்து விரட்டும் பாஜக!!

0

TVK BJP: அதிமுக பாஜக கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்ததால் மீண்டும் இணையும் போது அவர் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோல அவரை நீக்குவதற்கு முன்பாக அவரை கட்சியை விட்டு விலகிக் கொண்டார். அவ்வப்போது கட்சி வேலைகளில் ஈடுபடுவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று மட்டுமே உள்ளார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் நல்ல பதவி காத்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.

இதற்கு காரணம், அதிமுகவை கூட்டணியில் இருந்து கை கழுவி விட்ட பிறகு மூன்று சதவீத வாக்கு வங்கியை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியது இவர்தான். இதனால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுபவர் என்று அமித்ஷாவால் பாராட்டு பெற்றவர். அப்படி இருக்கையில் கட்டாயம் மாநில தலைமையில் இடமில்லை என்றாலும் மத்திய தலைமையில் இடம் இருக்கும் என யூகித்தனர். ஆனால் இதெல்லாம் வதந்தி என்று வரும் நாட்களில் தான் தெரிந்தது.

தற்போது அனைத்து பேட்டிகளையும் தவிர்த்து வருகிறார். ஆனால் அதிமுகவிற்கு எதிராக கட்சிக்குள் வேலை பார்க்கிறார். எடப்பாடி யாரெல்லாம் ஒதுக்கினாரோ அவர்களையெல்லாம் கட்சிக்குள் இணைக்க இவர்தான் பாலம் போல் செயல்பட்டு வருகிறார். இது மேலும் கட்சிக்குள் நெருக்கடியை தருவதால் மேற்குவங்கத்தில் நடைபெற போகும் தேர்தலுக்கு இவரை பொறுப்பாளராக நியமிக்க உள்ளனர்.

இதனால் அவரின் முழு வேலைகளும் மேற்குவங்கத்தின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு தான் இருக்கும், தமிழகம் பக்கம் வர இனி எந்த வேலையும் இல்லை எனக் கூறுகின்றனர்.

அரசியல் அதிரடி: “உனக்கெல்லாம் மார்க்கெட்டே இல்லை” கமலை சீண்டிய விஜய்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக தனது கொள்கை தலைவர்களுடன் அண்ணா மற்றும் எம்ஜிஆர் புகைப்படம் இடம்பெற்று இருந்ததால் இவரின் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. அதற்கேற்றார் போல் அரசியல் எதிரி கொள்கை எதிரி என திமுக மற்றும் பாஜக இருவரையும் நேரடியாகவே தாக்கி பேசினார்.

அதிலும் திமுக கூட்டணியில் இருப்பவர்களையும் பாஜக கூட்டணியில் இருப்பவர்களையும் மறைமுகமாக சாடி பேசியது தான் மாநாட்டின் ஹைலைட்டாக இருந்தது. அதில் குறிப்பாக கமலஹாசனை குறிப்பிட்டது அனைவராலும் அறிந்து கொள்ள முடிந்தது. நான் ஒன்றும் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்குள் வரவில்லை மார்க்கெட் இருக்கும்போது வந்துள்ளேன் என்று சுட்டிக்காட்டி கூறினார். இவர் கூறுவதை பார்க்கும் போது கமலஹாசனும் உதயநிதியும் நான் மார்க்கெட்டை இழந்து நின்றனர்.

அந்த தருணத்தில் இவர்கள் அரசியலுக்குள் நுழைந்ததை தான் இவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இவர் மறைமுகமாக கமலஹாசன் மற்றும் உதயநிதியை தனது மாநாட்டில் சீண்டியது அப்பட்டமாக தெரிகிறது. இது ரீதியாக கமலஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் எங்கேயாவது என் பெயரை குறிப்பிட்டாரா எனக்கு தம்பி போன்றவர் என்று கூறி விலகி விட்டார்.

மதுரையில் உச்சக்கட்ட பரபரப்பு.. செல்லா காசக மாறும் திமுக பவர்!! விஜய் வைத்த செக்!!

0

தமிழகத்தில் பல ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகளே மாறி மாறி ஆள்வதால் புதிதாக மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. அதிலும் திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது அவர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதனை உடைக்கும் விதமாக பல்வேறு செயல்முறைகள் இருந்து வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, லாக்கப் மரணம் என அனைத்தும் அதிகரித்துவிட்டது. குறிப்பாக மின்சார கட்டணம் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது பார்த்து பொறுக்க முடியாமல் தான் பொதுமக்கள் மாற்று கட்சியினர் வரவேண்டும் என்று எண்ணி உள்ளனர். அந்த வகையில் சமயம் பார்த்து விஜய் நுழைந்துள்ளார்.

இது பெரும்பாலானோரின் வாக்கானது அவர் பக்கம் சாய்ந்துள்ளது. அதேபோல ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இவரது அரசியல் கொள்கை இருந்தது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு எனக் கூறியுள்ளதால் திமுக அதிமுகவின் இணை கட்சிகள் அனைவரும் மாறுதலுக்கு வேண்டி தயாராகிவிட்டனர்.

இந்த வேலையில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக முடித்த விஜய் தற்பொழுது தனது இரண்டாவது மாநாட்டை திமுகவின் கோட்டையில் நடத்த உள்ளார். இது முழுக்க முழுக்க திமுகவின் ஆதரவை சிதைக்க வேண்டும் என்ற திட்டத்தால் தான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த வகையில் திமுக இத்தனை ஆண்டு காலம் சம்பாதித்து வைத்த அனைத்து பவரையும் விஜய் ஒரே நாளில் எடுத்துக் கொள்ளப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகின்றனர்.

இந்த இரண்டாவது மாநில மாநாடானது விஜய்க்கு வெற்றிகரமாக முடிந்து விட்டால் வாக்கு வங்கியில் பெருத்த மாற்றம் வரும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. இதில் திமுக தனது பவரை தக்கவைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மாநாட்டுக்கு இனி இந்த வழியில் போக முடியாது.. தடாலடியில் இறங்கும் போலீஸ்?? விஜய்க்கு விடும் சவால்!!

0

TVK: தமிழக அரசியல் களமானது இன்று பரபரப்பான சூழலில் தான் உள்ளது. அதிமுக திமுக என்ற கோட்டையில் தற்போது புதியதாக விஜய் காலடி எடுத்து வைத்ததிலிருந்து வாக்கு வங்கியை சிதற வைக்க கூடாது என்பதில் தெள்ளம் தெளிவாக உள்ளனர். ஆனால் அதனை உடைக்கும் வகையில் தான் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளது. அந்த வகையில் முதல் மாநாட்டிலேயே தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெரிவித்துவிட்டார்.

அதுமட்டுமின்றி இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை என்பது திமுகவின் கோட்டை என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி அந்த இடத்திலேயே தனது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். அதாவது தனது மாநாட்டின் வரவேற்பு கட்டவுட்டில் திமுகவின் கொள்கை தலைவரான அண்ணாவையும் அதிமுகவின் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தையும் பொறித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் திமுக விஜய்யின் மாநாட்டில் ஏதேனும் இடர்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இறுதி கட்டம் எட்டும் வரை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் அவர்களின் தொண்டர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேல் குவிவார்கள் என்ற கணக்கீடு வெளிவந்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் மதுரைக்கு செல்லும் சாலைப் போக்குவரத்தை மாற்றம் செய்யலாம் எனக் கூறுகின்றனர்.

இவையனைத்தும் இன்று காலை 10 மணிக்கு மேல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது. போக்குவரத்து மாற்றத்தை கொண்டு வந்து மாநாட்டிற்கு கலந்து கொள்ளும் நிர்வாகிகளை சுத்த விடுவதும் மேலும் திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். முதல் மாநாட்டிலேயே அலாவதியான கூட்டத்தை கண்டு மாற்றுக் கட்சி அனைவரும் வியந்தனர்.

இதுவே அவருக்கு பக்க பலமாகவும் அமைந்தது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது திமுக போக்குவரத்துக்கு மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தை தீட்டி உள்ளது.

மாநாட்டுக்கு முன் அதிரடி.. கடைசி நேரத்தில் வரப்போகும் உத்தரவு!! சதி திட்டத்தால் உடையும் கூட்டம்!!

0

TVK: விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் தற்போது வரை முடிவில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறை மாநாட்டில் தொண்டர்களுக்கு எந்த வசதியெல்லாம் செய்து கொடுக்க முடியவில்லையோ அவை அனைத்தையும் தற்போது குறையில்லாமல் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் விஜய்க்கு மாநாடு நடத்த அனுமதி அளிக்காத வரை பல இடர்பாடுகளை திமுக மறைமுகமாக கொடுத்து வந்தது.

மேலும் வேறு எந்த வகையில் எல்லாம் தொந்தரவு செய்ய முடியும் என்பதை வியூகித்து மறைமுக செயல்முறையிலும் இறங்கியுள்ளது. அந்த வகையில் மாநாட்டிற்கு அக்ரிமெண்ட் போடப்பட்டிருந்த நாற்காலிகள் கடைசி நேரத்தில் வரவில்லை. உடனடியாக கேரளாவிலிருந்து நாற்காலிகள் வரவழைக்கப்பட்டது. இது ரீதியான செய்திகள் நேற்றிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று திடீர் உத்தரவு நீதிமன்ற வாயிலாக வரலாம் என கூறுகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் கூட்டத்தை குறைக்கும் வகையில் நேர வரையறை இருக்கும் எனவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்கான திடீர் உத்தரவு வரும் என்றும் கூறுகின்றனர். அதாவது பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்க அவரை ஊருக்குள் கூட விடவில்லை. மேற்கொண்டு பேசும் நேரத்தையும் மிகவும் குறைத்து தான் கொடுத்திருந்தனர். அந்த அளவிற்கு திமுகவின் அழுத்தம் இருந்தது.

தற்போது அதேபோல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டு மக்களின் நலன் எனக்கூறி நேர கட்டுப்பாட்டை இறுதி நேரத்தில் கொண்டு வரலாம் எனக் கூறுகின்றனர். இவையனைத்தும் திமுகவின் மறைமுக சதி திட்டம் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

அதிமுக திமுக வாக்குகளை பிளக்க விஜய்யின் பக்கா ஸ்கெட்ச்!! உச்சக்கட்த்தை நெருங்கும் மாநாடு!!

0

TVK: தமிழக அரசியல் களத்தில் விஜய் நுழைந்ததிலிருந்து வாக்கு வங்கி பிரியும் என்பதை உணர்ந்து மாற்றுக் கட்சியினர் பல திட்டங்களை தீட்டி உள்ளனர். தற்போது விஜய்யின் மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. இவரின் கொள்கை அடிப்படையில் அம்பேத்கர், ஈவேரா, அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை தாண்டி இந்த மாநாட்டில் வேறு இரு தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதாவது அதிமுகவின் எம்ஜி- ஆரும் திமுகவின் அண்ணாவும் இருக்கின்றனர். கடந்த முதல் மாநாட்டில் தனது கொள்கை தலைவர்களை தெரிவிக்கும் வகையில் மிகவும் பெரிய கட் அவுட்கலை வைத்திருந்தார். தற்போது அவர்களின் புகைப்படங்களை சிறுதாக்கி திமுக அதிமுகவின் கொள்கை தலைவர்களை விஜய் பெரிதாக நிறுவியுள்ளார். இது ரீதியாக பரபரப்பான பேச்சுத்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் உலாவுகிறது.

கடந்த மாநாட்டில் தனது அரசியல் எதிரி திமுக-வும் கொள்கை எதிரி பாஜக என கூறியது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தனது அரசியல் எதிரியின் கொள்கை தலைவரையே தற்போது தனது மநாட்டில்  நிறுவியுள்ளார். இதன் மூலம் அதிமுக திமுக என இரு வாக்குகளையும் தன் வசப்படுத்த நினைக்கிறார் என்பது இதிலிருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது.

திமுக மீது மக்கள் மிகவும் அதிருப்தியாக உள்ள நிலையில் அதனையும், அதிமுக பாஜக கூட்டணி விரும்பாதவர்களையும் ஒரே நிலையில் கூட்டமைக்கும் வகையில் பக்கா பிளான் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியான அனைத்தும் நாளை நடைப்பெறப்போகும் மாநாட்டின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

காவல் நிலையங்களில் தொடரும் மரணங்கள் – திமுக வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டுமா??

0

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் போலீஸ் காவலில் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய வழக்கு – சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் காவலில் இறந்த 27 வயது இளைஞர் அஜித்குமார் – உள்ளூர் மற்றும் தேசிய அளவில் கடுமையான விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் தனிமைப்படுத்தப்பட்டதல்ல; இது தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கஸ்டடி மரணங்களின் ஒரு குழப்பமான வடிவத்தின் ஒரு பகுதியாகும்.

எவ்வாறாயினும், நிர்வாகத்தின் பதில் குறிப்பிடத்தக்க வகையில் தாழ்த்தப்பட்டது. இதுபோன்ற மரணங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தாலும், கணிசமான நடவடிக்கையோ அல்லது சீர்திருத்தமோ பின்பற்றப்படவில்லை, மேலும் இந்த செயலற்ற தன்மை அரசியல் அலட்சியமாகவே கருதப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையை குறிப்பாக அப்பட்டமாக ஆக்குவது கடந்த கால சொல்லாட்சிக்கும் தற்போதைய யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு ஆகும். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அதிமுக ஆட்சியில் நடந்த காவலர் மரணங்களைக் கண்டித்து திமுக குரல் கொடுத்தது. 2020 ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம், காவல்துறை தாக்குதலுக்குப் பிறகு இறந்தது, பரவலான எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் தூண்டியது.

திமுக தலைவர்கள் இந்த மரணங்களை மனித உரிமை மீறல்கள் என்று குறிப்பிட்டு, அப்போதைய முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும், 2021 இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, காவலில் வைக்கப்பட்ட மரணங்களின் மோசமான பதிவுக்கு திமுக தலைமை வகித்தது, அஜித்குமார் வழக்கு மட்டுமே சமீபத்தியது. ஒரு காலத்தில் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களின் மௌனம் இப்போது பாசாங்குத்தனம் மற்றும் செயலற்ற தன்மை போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.

தமிழகம் முழுவதும் காவலில் வைக்கப்பட்ட மரணங்களின் பட்டியல் ஒரு இருண்ட படத்தை வரைகிறது. முருகானந்தம் (அரியலூர்), கோகுல் (செங்கல்பட்டு), விக்னேஷ், அப்புராஜ், ஆகாஷ் (சென்னை), பாஸ்கர் (கடலூர்), சங்கர் (கரூர்), பிரபாகரன், சின்னதுரை, விக்னேஷ்வரன் (நாமக்கல்), அஜித்குமார் (புதுக்கோட்டை), பாலகுமார் (ராமநாதபுரம்), டாக்டர். தடிவீரன் (திருச்சி), சாந்தகுமார் (திருநெல்வேலி), தங்கசாமி (திருவள்ளூர்), கார்த்தி (தென்காசி), அற்புதராஜா, ராஜா (மதுரை), விக்னேஷ்வரன், ஜெயக்குமார், தங்கப்பாண்டி (விழுப்புரம்), செந்தில் (விருதுநகர், தர்மபுரி). ஒவ்வொரு வழக்கும் விசாரணை நடைமுறைகள், காவல் சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி இல்லாமை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது, தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்குப் பதிலாக முறையான சிக்கலை பரிந்துரைக்கிறது.

2021 தேர்தல் அறிக்கையில், திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிடத்தக்க போலீஸ் சீர்திருத்தங்களை உறுதி செய்தது: போலீஸ் பொறுப்புணர்வை உறுதி செய்தல், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், விசாரணையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு நிறுவுதல் மற்றும் சுயாதீன புகார் குழுக்களை அமைத்தல். ஆயினும், அதன் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. காவல் நிலையங்களுக்குள் கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதிலோ அல்லது பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதிலோ குறைந்தபட்ச முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வாக்குறுதிகள் மற்றும் நிறைவேற்றுதலுக்கு இடையே உள்ள இடைவெளியானது, குறிப்பாக ஒரு காலத்தில் கட்சியின் சீர்திருத்தவாத நிலைப்பாட்டை நம்பியவர்கள் மத்தியில், பொதுமக்களின் ஏமாற்றத்தை ஆழமாக்கியுள்ளது. பொதுக் கூச்சல் மற்றும் அரிக்கும் அறக்கட்டளை மனித உரிமைக் குழுக்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது காவலில் வைக்கப்பட்ட இறப்புகளின் அதிகரிப்பு காலாவதியான விசாரணை முறைகள், சரிபார்க்கப்படாத காவல்துறை ஆக்கிரமிப்பு மற்றும் தாமதமான மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்று வாதிடுகின்றனர். கட்டமைப்புச் சீர்திருத்தம், பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மற்றும் உடனடித் தலையீடுகள் இல்லாவிட்டால், இத்தகைய மரணங்கள் தொடரும் என்றும், அவற்றுடன், அரசு நிறுவனங்களின் மீது நம்பிக்கையின்மை பெருகும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். கேள்வி எஞ்சியுள்ளது: தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு இன்னும் எத்தனை உயிர்கள் இழக்கப்படும்? அழுத்தம் அதிகரிக்கும் போது, அரசாங்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் நீதிக்கான அதன் அர்ப்பணிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதிக்கப்படுகிறது.

ஆட்டத்தை தொடங்கிய ராமதாஸ்.. அன்புமணிக்கு கொடுத்த பலத்த அடி!! சிக்கித்தவிக்கும் வாரிசு!!

0

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையில் உட்கட்சி மோதலானது தீவிரமடைந்த நிலையில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது அவர் கட்சி நிறுவனருக்கு எதிராக என்னென்ன செயல்களில் ஈடுபட்டார் என்பதை கூறி விவரித்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அந்தத் தீர்மான வழியில் பாமக கட்சி ரீதியாக அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், வரும் 31ஆம் தேதிக்குள் அன்புமணி கட்டாயம் தான் செய்த செயல்முறைகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முறையாக விளக்கம் அளிக்கா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தீவிர படுத்தப்படுமாம். அந்த வகையில் அன்புமணி பதிலளிக்க மாட்டார் என கட்சி வட்டாரங்கள் பேசுகின்றனர்.

அன்புமணி பதிலளிக்காவிட்டால் கட்டாயம் அவரை கட்சியை விட்டு நீக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பொதுக்குழு கூட்டத்திலேயே அன்புமணியை கட்சியை விட்டு நீக்கும்படி கோஷங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அன்புமணி கட்சியை விட்டு நீக்கினால் கட்டாயம் விரிசல் உண்டாகும். அதிமுக வை போல பிளவுபட்ட அரசியலை தான் பார்க்க முடியும்.

தவெக விஜய்யின் மாநாட்டுக்கு வரும் தடை!! வெளியான ஷாக் நியூஸ்!!

0

TVK: தமிழகத்தில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரை மாவட்டத்தில் 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடுமா? அப்படி பேயும் பட்சத்தில் மாநாடு நடக்குமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது.

இது ரீதியாக தனியார் வானில ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், மதுரையை பொருத்தவரை வரும் 21 ஆம் தேதி பகல் நேரத்தில் அதீத வெப்பநிலையும் அதாவது 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மாலை நேரம் வெப்பம் குளிர்ந்து கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிலும் மதுரை மாவட்டம் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இயல்பான நாட்களில் வரும் வெப்பநிலையை காட்டிலும் அன்று அதிகமாகவே இருக்கும். அதேபோல வெயிலும் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மழை இரவு நேரம் முழுவதும் நீடிக்கும் என கூறியுள்ளதால் மாநாட்டு தேதியில் மாற்றம் ஏற்படுமா என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இரண்டாவது மாநாட்டில் தேதியானது தற்போது இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் பண்டிகை தினங்கள் மாநாடு எனக்கூறி அனுமதி அளிக்காததால் 21 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தனர். தற்போது மழை பாதிப்பானது அதிகமாக இருக்கும் எனக் கூறுவதால் தொண்டர்கள் ரசிகர்கள் நலனை எண்ணி தேதியை மாற்றலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த முதல் மாநாட்டிலேயே சரியான திட்டமிடல் இல்லாததால் தொண்டர்கள் பலரும் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.

தற்பொழுதும் அது போல் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் முனைப்புடன் வேலைகளை பார்த்து வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்யும் எனக் கூறினால் மாநாடு நடத்த முடியாமல் போகும் இதனால் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.