ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2025
Home Blog

விஜய்யின் கடைசி குரல்.. உலகம் முழுதும் டிரெண்டாகும் தளபதி கச்சேரி!!

0

Jananaayagan: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே புயல் கிளப்பியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடல், விஜய்யின் குரலில் வெளிவந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதி,அனிருத் இசை மற்றும் சேகர் மாஸ்டர் கொரியோகிராஃபி – என மூன்றும் சேர்ந்து மாஸ்டர் பீஸாக உள்ளது.

எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்குப் பிறகு இவர்களின் இரண்டாவது கூட்டணி இது. பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் இந்த படத்தின் மூலம் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி  அரசியலில் களமிறங்க உள்ளார் என்பதால், ஜனநாயகன் படம் குறித்து ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2026 பொங்கல் ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படம், ஏற்கனவே ரூ.260 கோடியை கடந்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸால் சாதனை படைத்துள்ளது.

தற்போது ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. விஜயின் குரலும் நடனமும் ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டத்தை தற்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டனர். இந்த பாட்டில் சமூக நெறி கருத்து குறித்து விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பித்த ஆட்கடத்தல் வார்.. அதிமுக-வின் முக்கிய தலையை லாக் செய்த திமுக!!

0

ADMK DMK: முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் அணியின் முக்கியஸ்தரான வைத்தியலிங்கத்தை தங்கள்பக்கம் இழுக்க திமுக, இபிஎஸ், ஓபிஎஸ்-சசிகலா தரப்புகள் மும்முனை முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட அதிகாரப்போர் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து இபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக தொடர்ச்சியாக தேர்தல் தோல்களின் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் கட்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஓபிஎஸ், பாஜக, சசிகலா உள்ளிட்டோர் அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்தால்தான் வெற்றி சாத்தியம் என வலியுறுத்தினாலும், இபிஎஸ் அதற்குத் திடுக்கிடும் பதிலாக, ஒருங்கிணைப்பு குறித்து பேசினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், திமுகவில் மனோஜ் பாண்டியன் இணைந்தது தென் மாவட்டங்களில் திமுகவுக்கு வலுவாக அமைந்துள்ளது. இப்போது திமுகவின் அடுத்த குறிக்கோள் ஓபிஎஸ் அணியின் வைத்தியலிங்கம் தானாம். இவரை திமுகவில் இணைக்க வேண்டுமென பெரும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சமீபத்தில் வைத்தியலிங்கம் ஓபிஎஸ் சார்ந்த எந்தக் கட்சி நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனிக்க பார்க்க வைக்கிறது.

மேலும் திமுகவில் உள்நுழைய சில விதிமுறைகள் இருப்பதாகவும், அது ரீதியான பேச்சு வார்த்தை முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக முந்துவதற்கு முன் சசிகலா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக வாக்குகள்.. இபிஎஸ் செயலால் கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

0

ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பழைய நிலைக்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த ஒற்றுமை இபிஎஸ் பதவியேற்ற பிறகு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்களே கூறியுள்ளனர். முன்னாள் தலைவர்களின் காலத்தில், கட்சியினுள் சச்சரவு எழுந்தாலும் அதனை வெளியில் செல்ல விடாமல் கட்சிகுள்ளேயே தீர்த்து வந்தனர். ஆனால் தற்போது வரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தான் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரின் பிரிவு அமைந்தது.

இதனை தொடர்ந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் தான் அதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்த மூத்த அமைச்சர் செங்கோட்டையனியன் பதவியை பறித்தது மட்டுமல்லாமல், அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இபிஎஸ்யின் இந்த செயலால் அவருக்கு தலைமை வெறி தலைக்கேறி விட்டது என்று பலரும் கூறி வந்தனர். இதனை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் விதமாக செங்கோட்டையனியனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரின் பதவிகளும் கட்சியின் அடிமட்ட தொண்டன் போன்ற அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது.

சத்தியபாமா அதிமுக மகளிர் பிரிவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். மேலும் திருப்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவை இரண்டும் கொங்கு மண்டலங்களாக அறியப்படும் நிலையில் இவரின் கட்சி நீக்கம் அதிமுகவிற்கு எதிர் காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிமுகவிற்கு தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் இபிஎஸ் மீது அதிமுக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் அதிமுக கொங்கு மண்டலத்தின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இவர்களின் தொடர் நீக்கம்  2026 தேர்தலில் அப்பகுதியில் அதிமுக தோல்வியை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

கூட்டணியை செயலில் அறிவித்த பிரேமலதா.. இதுவும் போச்சா!! புலம்பும் திராவிட கட்சி!!

0

ADMK DMK DMDK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டணி வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உருவாகியுள்ள கட்சியான தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுகவும், திமுகவும், பயத்தில் இருந்தது. ஆனால் திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அதிமுகவிற்கு ஒரு வகையில் சாதமாக அமைந்தது.

இதன் காரணமாக விஜய்யை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வந்தார் இபிஎஸ். இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒன்றை கூட்டினார். அதில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் இபிஎஸ் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தார். விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்பதை உணர்ந்த அவர் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் முழுமையாக ஈடுபட தொடங்கினார்.

பாமக கிட்டத்தட்ட அதிமுக கூட்டணி பக்கம் செல்ல துவங்கிய நிலையில், தேமுதிக பக்கம் இபிஎஸ்யின் கவனம் திரும்பியது. பிரேமலதா இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்த நிலையில், தற்போது திமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியது போல பிரேமலதாவின் செயல்பாடுகள் உள்ளது. ஏனென்றால், SIR யை எதிர்த்து அனைத்து கட்சி கூட்டம், திமுக தலைமையில் நடந்தது. அதில் திமுகவை எதிர்க்கும் கட்சிகளான அதிமுகவும், தவெகவும் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் விஜய் பாஜக அமல்படுத்திய SIR குறித்து  தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்த வண்ணமே இருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இணையவில்லை என்றால், தேமுதிக இந்த கூட்டத்தை புறக்கணித்து இருக்கலாம். ஆனால் இதில் கலந்து கொண்டு திமுக கூட்டணியில் இணைவதை பிரேமலதா மறைமுகமாக வெளிப்படுத்தி இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

செங்கோட்டையனுக்கு கூடுதல் பலத்தை சேர்த்த இபிஎஸ்யின் செயல்.. குஷியில் நால்வர் அணி!!

0

ADMK: எப்போதும் இல்லாத அளவிற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தான். அதிலும், கட்சியின் முக்கிய முகமான செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சில தினங்களுக்கு முன்பு அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு மக்கள் இபிஎஸ்யின் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுகவிலுள்ள மூத்த அமைச்சர்கள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். அது யாராக இருக்குமென்று அனைவரும் வினவி வந்த நிலையில், அவர்களை கண்டறிந்த இபிஎஸ், இன்று அவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியுள்ளார். இதில் முக்கியமாக செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான சத்தியபாமா உடன் சேர்த்து 12 பேர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் சமயத்தில் இது அதிமுகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கையுடன் நால்வர் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி நால்வர் அணிக்கு மேலும் பலத்தை கூட்டி உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். இந்த அணியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றாக விரைவில் அறிவிக்கப்படும் என்று சசிகலா. ஓபிஎஸ், டிடிவி தினகரன், போன்றோர் கூறி வந்த நிலையில் அது எந்த மாதிரியான செயலாக இருக்குமென அனைவரும் ஆவலோடு எதிர்ப்பார்த்து கொண்டிருகின்றனர். 

அடுத்தடுத்து சிக்க போகும் திமுக அமைச்சர்கள்.. புலம்பும் ஸ்டாலின்!!

0

DMK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாமல், கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிலும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என காங்கிரஸ் கட்சியும், விசிகவும் வலியுறுத்தி வருகிறது. இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடி ஸ்டாலின் தலையில் விழுந்துள்ளது.

திமுகவின் முக்கிய அமைச்சர்களாக அறியப்படும் கே.என். நேரு, செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இப்போது புதிதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, சக்கரபாணி, மூர்த்தி, ஏ.வ வேலு போன்ற முக்கிய அமைச்சர்கள் மீது ED ரைடு நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே செந்தில் பாலாஜி, கே.என். நேரு போன்ற அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தொடர்பாக திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது கிடைக்கபெற்ற தகவல், திமுக தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல், கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக விஜய் மக்களின் கரிசனத்தை பெற்றார். இதனை சரி செய்ய திமுக பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்கள் மீதான இந்த செய்தி 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறைந்த தொகுதி குறித்து திமுக கூட்டணி கட்சி ஆவேசம்.. அப்செட்டில் ஸ்டாலின்!!

0

DMK VCK: கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி விசிக. திமுக கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் விலகிய போதும் கூட விசிக பிரியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இதற்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து வருவதாக அக்கட்சி நினைக்கிறது. இது அவ்வபோது விசிகவின் கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருவதோடு, திமுகவுடன் சச்சரவு உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே அதன் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், விசிகவும் திமுகவிற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல், இதற்கு முன் கொடுத்த தொகுதிகள் போதாது, இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் வேண்டுமென கூறி வருகிறது. அந்த வகையில், விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, திமுக கூட்டணியில் திமுகவிற்கு அடுத்து அதிக செல்வாக்கு கொண்ட ஒரே கட்சி விசிக.

ஆனால் காங்கிரஸுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லையென்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கையில் விசிகவிற்கு குறைந்த தொகுதிகளையும், காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளையும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம். இதனை எப்படி எங்கள் கட்சியிலுள்ள தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இதற்கு முன் ஒரு முறை விசிக அதிக தொகுதிகளுக்காகவும், ஆட்சியில் பங்கையும் பெறுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இவ்வாறு தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் ஸ்டாலின் மிகவும் குழப்பத்தில் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் கூறி வருகின்றன. மேலும், விசிகவின் நிபந்தனைக்கு திமுக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் திருமாவளவனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இதனை பயன்படுத்த நினைக்கும் அதிமுக-பாஜக கூட்டணி திருமாவளவனை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நெல்லையில் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்.. இதுக்கு மேல நான் பேச மாட்டேன் பேனா தான்!! 

0

DMK: சட்டமன்ற தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் முயற்சி செய்து வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், 2021 முதல் தற்போது வரை திமுக அரசு செயல்படுத்திய திட்டத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நிகழ்சிகளையும் திமுக செய்து வருகிறது. மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தும் விதமாக மாவட்ட வாரியாக திமுக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருகின்றனர்.

இவர்கள் அந்தந்த பகுதியில் திமுக அரசை வலுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை பகுதியில் அதிக கவனம் செலுத்தும் ஸ்டாலின் அங்குள்ள தலைவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் இந்த பகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனை முறியடிக்கும் விதமாக திமுக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் நெல்லையில் திமுகவை சேர்ந்த லட்சுமணன் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததற்கான காரணத்தை ஆராயும் முயற்சியில் அப்பகுதி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த தேர்தலில் நெல்லையில் திமுக வெற்றி பெறவில்லை என்றால் அப்பகுதியில் இருக்கும் திமுக தலைவர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஸ்டாலின் மிக தெளிவாக கூறியுள்ளார். இதன் காரணமாக நெல்லையில் திமுக அரசின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையின் முன் தனித்து நிற்க வேண்டுமென அமைச்சர்கள் போராடி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் நெல்லை திமுகவிற்கு கை கொடுக்குமா, இல்லை கை நழுவுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாஜகவின் குரலாக ஒலிக்கும் அன்புமணி.. நயினார் தமிழிசையின் கருத்தை முன்வைத்து பேச்சு!!

0

PMK BJP VCK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், திராவிட கட்சிகள் அனைத்திலும் கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் வரையறுக்கப்பட்டு வருகிறது. அதிலும் திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளனைத்தும் ஆட்சியில் பங்கு, பாதியளவு தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணி பாமகவின் பிரச்சாரத்தில், திமுக கூட்டணியில் விசிக ஏன் தொடர்கிறது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

சமூக நீதி குறித்து திமுக மேடையில் மட்டும் தான் பேசி வருகிறது. இந்த நான்கரை ஆண்டு காலத்தில் திமுக பட்டியலின மக்களுக்கு என்ன செய்து விட்டது. அவர்களுக்கு பட்டியலின மக்களின் ஓட்டு மட்டும் வேண்டும். மற்ற படி இவர்களின் வளர்ச்சியை பற்றி திமுகவிற்கு கவலை இல்லை. இப்படி இருக்கும் போது, திருமாவளவன் ஏன் அந்த கூட்டணியில் தொடர்கிறார் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு முன் தமிழக பாஜக தலைவர் நயினார், சமூக நீதியை பின்பற்றாத கட்சியில் திருமா ஏன் தொடர்கிறார் என்று கேட்டிருந்தார்.

இவரை தொடர்ந்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும், திமுக உண்மையிலேயே சமூக நீதியை பின்பற்றும் கட்சியாக இருந்தால் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென்று கூறி பரபரப்பை கிளப்பி விட்டார். இவர்களின் விசிக பற்றிய இந்த தொடர் பேச்சு விசிகவை எப்படியாவது அதிமுக-பாஜக கூட்டணிக்கு கொண்டு வந்து விடமென்று துடிப்புடன் இருப்பதை காட்டுகிறது. மேலும் அன்புமணி பாஜகவின் குரலாக ஒலித்து வருவதை அனைவரும் விமர்சித்து வருகின்றார். 

வாய்ப்பு கிடைத்தால் எந்த கட்சிக்கும் செல்வேன்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் பர பர பேட்டி!!

0

ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் விறுவிறுப்பாக தான் இருக்கும். அதுவும் இந்த முறை பல்வேறு  திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, தவெக, நாதக போன்ற கட்சிகளனைத்தும் தேர்தல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியையும் திராவிட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த முயற்சியில் முன்னிலை பெறுவது திமுக என்றே சொல்லலாம். திமுகவில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையால் முழித்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு அதனை ஈடு செய்யும் வகையில் பல்வேறு முக்கிய தலைகள் திமுகவில் இணைந்து வருவது சாதகமாகி உள்ளது. ஏனென்றால் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக ஊடகங்கள் கூறி வருகின்றன.

இந்நிலையில் புதிதாக அதிமுகவிலிருந்து மேலும் ஒருவர் இணைய இருப்பது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு நேற்று முதல்வரை நேரில் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வாய்ப்பு கிடைத்தால் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட தயங்க மாட்டேன் என்றும், அதிமுக பாஜகவின் கிளையாக செயல்படுவதாகவும் குற்றம்  சாட்டினார். இவரின் இந்த கருத்து இவர் திமுகவில் இணைந்து விட்டதற்கு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.