வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2025
Home Blog

அதிமுக எம்எல்ஏ செய்த சர்ச்சை செயல்.. சேலத்தில் அரங்கேறிய கொடூரம்!! ஷாக்கில் இபிஎஸ்!!

0

ADMK: அதிமுகவில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு பிரச்சனைகள் வெடித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வரும் இபிஎஸ், பாஜக மற்றும் தமாக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் இவ்விரண்டு கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் இபிஎஸ்க்கு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் முக்கிய அமைச்சரான சிவி சண்முகம் திமுக அரசு இலவசமாக வழங்கும் திட்டங்களுடன் பெண்களை ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டங்கள் எழுந்தது. மேலும், ஆத்தூர் அருகே உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகி, துப்புரவு பணி செய்யும் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக அவரை போலீசார் கைது செய்தனர். இதன் அடிப்படையில், அவர் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இவ்வாறு அதிமுகவின் முக்கிய அமைச்சர்களால் பெண்களுக்கு தொடர்ந்து வன்முறை நடந்து வரும் சமயத்தில், தற்போது புதிதாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில், திமுகவின் முன்னாள் எம்பியும், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ-வுமான அர்ஜுனன், பேச்சுவார்த்தையின் போது ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவை சேர்ந்தவர்களால் இது போன்ற நிகழ்வு நடைபெறுவது அதிமுகவிற்கு தேர்தலில் பேரிழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு அதிமுகவின் மேல் பயம் ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் பதவியை உதறிய விஜய்.. விரக்தியில் செங்கோட்டையன்!! குஷியான இபிஎஸ்!!

0

TVK: புதிதாக கட்சி தொடங்கிய விஜய் முதன் முதலில் 2026 யில் தேர்தலை சந்திக்க உள்ளார். தவெகவின் அரசியல் எதிரி திமுக என்று எல்லா இடத்திலும் தவெக தலைவரும், தொண்டர்களும் கூறி வருகின்றனர். கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் தவெகவுக்கான வரவேற்பு பெருமளவில் உள்ளது. இதனால் மாநில கட்சிகள் தொடங்கி, தேசிய கட்சிகள் வரை விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயன்றன. ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் நான் தான் என்ற முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் அதிமுக என்னசெய்வதென்று தெரியாமல் திணறியது. விஜய்யின் இந்த பிடிவாதம் காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் தான் என பலரும் கூறி வந்தனர்.

விஜய் கட்சி துவங்குவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர்களுடன் நல்ல நட்புறவில் இருந்து வந்தார். இதனால் இவர்கள் கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பது உறுதியானது. இதனால் விஜய் மிகவும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. காங்கிரஸை நம்பி அதிமுக கூட்டணியை ஒதுக்கிய விஜய், தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய் திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால், இந்த தேர்தலில் வெற்றி பெறுவது மிகவும் அவசியம். இல்லையென்றால் அவரின் அரசியல் வாழ்க்கையை திமுக அழித்து விடும். இப்படி இருக்கும் சமயத்தில் முதல் தேர்தலில் தனித்து நின்றால் வெல்ல முடியாது என்பதை அறிந்த விஜய், தனது முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வந்து அதிமுக உடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் இபிஎஸ் ஜெயிக்க கூடாது என்று தவெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. 

பாமகவை தட்டி தூக்கிய அதிமுக.. ராமதாஸை கண்டுகொள்ளாத இபிஎஸ்!! குஷியில் அன்புமணி!!

0

ADMK PMK: அடுத்த 5, 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் அதற்கான பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறது. மேலும் அதிமுக, திமுக கட்சிகள் மக்களை சந்திக்கும் வேலையில் மும்முரமாக உள்ளன. மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கு, தலைவர் அன்புமணிக்கு தலைமை போட்டி ஆரம்பித்தது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், அன்புமணி ராமதாஸால் பதவி நீக்கம் செய்யபட்டார்.

இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலைமை போட்டி அதிகரித்து வரும் வேளையில், வேட்புமனுவில் கையெழுத்திடுவது யார் என்பதில் பிரச்சனை ஏற்படும். அதனால் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இவ்வாறு பாமகவில் தொடர் பிரச்சனை எழுந்து வருவதால், அக்கட்சி யாருடையது என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மேலும் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற விவாதமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அன்புமணி அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாமகவின் செய்தி தொடர்பாளர் பாலு தற்போது அன்புமணி பக்கம் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் போராட்டம் நடத்துவதற்காக, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த போராட்டத்திற்கான முதல் அழைப்பு அதிமுகவிற்கு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். ஏற்கனவே பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா அன்புமணியை சந்தித்து பேசியது கூட்டணி குறித்த பேச்சுவார்தையாக தான் இருக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில், பாலுவின் செயல்பாடும் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவர் என்று அங்கீகரித்ததால் இபிஎஸ், ராமதாஸை கண்டு கொள்ளவில்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாம்பழத்தை பறித்த தேர்தல் ஆணையம்.. கடும் சிக்கலில் பாமக!! உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

0

PMK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளன. ஆனால் பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த சண்டை உச்சம் பெற்ற நிலையில், மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு, அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது.

கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க, இதனை ராமதாஸ் கடுமையாக எதிர்த்தார். மேலும் அன்புமணி போலி ஆவணங்களை காட்டி ஏமாற்றி இருக்கிறார் என்று ராமதாஸ் தரப்பு தொடர்ந்து கூறி வந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை இன்று நீதிமன்றம் விசாரித்த போது, ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் மாறி மாறி அவர்களது வாதத்தை முன் வைத்தனர்.

அப்போது தேர்தல் ஆணையம் சார்பில், பாமகவில் தற்போது தலைமை பிரச்சனை உள்ளது. இதனால் மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது. ஏனென்றால் தேர்தல் சமயத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற குழப்பம் வரும் என்று கூறிய தேர்தல் ஆணையம், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் சின்னம் முடக்கப்பட்டது பாமகவிற்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் வெடிக்க போகும் பூகம்பம்.. பாஜக தலைவர் கொளுத்தி போட்ட வெடி!!

0

ADMK BJP: தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை, தேசிய கட்சியான பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தமிழக தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இணைந்த இரு கட்சிகளிடையேயும், இப்போதும் கூட சில சச்சரவுகள் நிலவி வருகின்றன. அதில் முக்கியமானது ஆட்சி அதிகாரத்தில் பங்கு.

கூட்டணி அமைத்திலிருந்தே இந்த கோரிக்கையை பாஜக முன் வைத்து வருவதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி பெரும் வரை தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற மரபே கிடையாது என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வந்தனர். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்களோ அதிமுக வெற்றி பெற்றால் அங்கு பாஜகவும் ஆட்சி அமைக்கும் என்று மறைமுகமாக கூறி வந்தனர். இது தொடர்பான விவாதம் இபிஎஸ்க்கும், பாஜக தலைமைக்கும் எழுந்த வந்தது.

இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான, வானதி சீனிவாசனிடம் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சியா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து 2026 தேர்தலுக்கு பின் பேசலாம் என்று பதிலளித்துள்ளார். அதிமுக, கூட்டணி ஆட்சியை அறவே மறுத்து வரும் சமயத்தில், பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து கேள்விக்கு கூட்டணி ஆட்சி தான் என்பது போன்ற தொணியில் பதிலளிப்பது இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

தேசிய திராவிட கட்சிகள் வேண்டாம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!! ஆட்டம் காணும் தேர்தல் களம்!!

0

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் அறிவித்துள்ளார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டார். இதனால் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது முடிவானது. ஆனால் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.

கொள்கை எதிரி என்று கூறிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது தது அரசியல் எதிர் காலத்திற்கு பாதகமாக அமையும் என்று விஜய் யோசித்தார். மேலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தவெகவின் கொள்கைக்கும், முதல்வர் வேட்பாளர் என்ற முடிவுக்கும் காங்கிரஸ் கட்சி தான் சரியாக இருக்கும் என விஜய் நினைத்தார். எனவே காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கப்படும் என்று வியூகம் எழுந்தது.

ஆனால் காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு நேற்று திமுக தலைமையை நேரில் சந்தித்து, திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தியது.தவெக உடன் இதுவரை எந்த கூட்டணியும் உறுதியாகாத நிலையில், காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் இருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி வர விஜய் மனம் மறுக்கும் சூழலில், காங்கிரஸும் கைவிரித்ததால், தவெக இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அமித்ஷாவை மிரட்டிய எக்ஸ் சிஎம்.. இது மட்டும் நடக்கலைன்னா திமுக கட்சி தான்!!

0

ADMK DMK BJP: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். சில தினங்களுக்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இது நடக்கவில்லை என்றால், இபிஎஸ்க்கு எதிராக புதிய கட்சி துவங்கப்படும் என்பது போன்ற தொனியில் பேசியிருந்தார்.

இது குறித்து இபிஎஸ் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று திடீரென ஓபிஎஸ் டெல்லி பயணம் மேற்கொண்டார். இது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓபிஎஸ் கூறினாலும், அமித்ஷாவிடம் அவர் சில கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் முன் வைத்ததாக கூறப்படுகிறது. பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க பாஜக உதவ வேண்டும் என்றும், அதிமுகவில் சேர்ந்த உடன் அதில், எனக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இவை இரண்டும் நடைபெறவில்லை என்றால் திமுகவில் சேர்ந்து விடுவேன் என்று ஓபிஎஸ் கறார் காட்டியதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ்யின் இந்த செயலால் அமித்ஷா ஆழ்ந்த யோசனையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவின் முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தது பாஜகவிற்கு பேரிடியாக இருக்கும் நிலையில், ஓபிஎஸ்யின் நிலைப்பாடு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவுக்கு டாடா காட்டிய காங்கிரஸ்.. மனம் மாறும் விஜய்!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

0

TVK ADMK: 2026 தேர்தலை கருத்தில் கொண்டு மாநில கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகாரில் படுதோல்வி அடைந்ததன் விளைவாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி இடத்தை பிடிக்க வேண்டும் என முயற்சித்து வருகிறது. இதனால், திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு நேற்று ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே செல்வப்பெருந்தகை கூறினார். மேலும் திமுக தொகுதி பங்கீடு குறித்து பேச ஒரு குழு அமைத்த உடன், காங்கிரஸ் குழு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் விஜய்யுடன் மிகவும் நெருக்கம் என்பதால் காங்கிரஸ்-தவெக கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் இருக்கும் தைரியத்தில் பாஜக, அதிமுக கூட்டணியை விஜய் உதறி தள்ளினார். கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போது காங்கிரஸ் திமுக பக்கம் சென்றதால் விஜய்க்கு இருக்கும் ஒரே வழி அதிமுக தான். ஆனால் முதல்வர் நாற்காலியை விட்டுத்தர இபிஎஸ் மறுப்பதால், விஜய் அவரது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வருவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானதால் தவெக அதிமுக வசம் தான் வந்தாக வேண்டும் என்ற கொண்டாட்டத்தில் இபிஎஸ் உள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதிமுக வேண்டாம்.. தொண்டர்கள் மட்டும் போதும்!! செங்கோட்டையனின் நெக்ஸ்ட் மூவ்!!

0

ADMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சிகளனைத்தும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் எப்போதும் அதிமுக-திமுக என இருந்த தேர்தல் களம், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. விஜய் கட்சி தொடங்கியதிலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி, அதனை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் திமுகவை எதிர்க்கும் அளவிற்கு தவெகவிற்கு அரசியல் அனுபவம் இல்லை என்ற வாதம் வலுப்பெற தொடங்கியது.

இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் வாய்ந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த கையுடன், இன்னும் சில அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதற்கான வேளைகளில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் அடுத்த கட்டமாக அதிமுக தொண்டர்களையும் தவெக பக்கம் சேர்ப்பதற்கான முயற்ச்சியில்  இறங்கியுள்ளதாக தெரிகிறது. இவரின் செயல்பாடுகளும் அதனையே பிரதிபலிக்கிறது.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தனது எக்ஸ் தளபக்கத்தில் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து போஸ்டரில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய், புஸ்ஸி ஆனந்த படங்களுடன் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இவரின் இந்த போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் விஜய் கட்சியில் சேரும் போது கூட அவரது சட்டை பையில் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருந்தார். இவரின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் அதிமுக தொண்டர்களை தவெக பக்கம் இழுக்கிறார் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறது.

டெல்லி சென்ற ஓபிஎஸ்.. அமித்ஷாவுடன் சந்திப்பு!! செய்தியாளர்களிடம் பர பர பேட்டி!!

0

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி முக்கிய தலைவர்கள் பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். அதில் ஒருவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். இந்த குழுவில் இபிஎஸ் தலைமைக்கு எதிரானவர்களும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என நினைத்தவர்களுக்கு முக்கிய பங்காற்றினார்.

இத்தனை வருடங்கள் ஆகியும் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ளாமல், இருந்ததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். இல்லையெனில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் முடிவு வேறு மாதிரி இருக்கும் என்றும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் நேற்று டெல்லி சென்றது பேசு பொருளானது. இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடம் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பு அதிமுக ஒருங்கிணைப்பு குறித்ததா, தனிக்கட்சி துவங்குவது பற்றியதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது.

இத்தகைய சூழலில், டெல்லியில் இருந்து திருப்பிய ஓபிஎஸ், சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தேவைபடும் போது அமித்ஷாவிடம் அரசியல் பேசுவேன், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலைகளை பற்றி அமித்ஷாவிடம் விவாதித்து வந்திருக்கிறேன் என்று கூறினார். இவரின் இந்த பேச்சு பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் சமயத்தில், இப்போது இவர் அமித்ஷாவை சந்தித்து பேசியது குறித்து கூறிய கருத்து ஏற்புடையதாக இல்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.