செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 2, 2025
Home Blog

தவெகவிற்கு தாவும் அதிமுகவின் கொங்கு மண்டல தலை.. சொன்னதை செய்த செங்கோட்டையன்!!

0

ADMK TVK: சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவை பகைத்து கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோன்றிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால், என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பது பணிகளை மேற்கொள்வோம் என செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இதனால் இவர் தனி கட்சி தொடங்குவார், இல்லையென்றால், ஓபிஎஸ் போல ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக, தவெகவில் இணைந்து, அங்கு அதிமுக ஒருங்கிணைப்பை மேற்கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் செங்கோட்டையன் கூறியது போல ஒருங்கிணைப்பு பணியை ஆரம்பித்து விட்டார். கோபி செட்டிபாளையத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் எம்.எல்.ஏ வான செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் அறிந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு கொங்கு மண்டலத்தில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தி இருக்கிறார்.

இப்படி இருக்கும் சூழலில், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கை மேலும் சறுக்கும் வகையில் செங்கோட்டையன் ஒரு செயலை செய்து வருகிறார். அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான தங்கமணி, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானத்தில் இடம் பெறாதது அவருக்கு, இபிஎஸ் மேல் உள்ள அதிருப்தியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மேலும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போது, அதில் இவருக்கு சற்றும் விருப்பமில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் இவரை தவெகவில் இணைப்பதற்கான பணியை செங்கோட்டையன் மேற்கொண்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

செங்கோட்டையன் மீது இபிஎஸ் சரமாரி தாக்கு.. ஆச்சரியத்தில் அரசியல் களம்!!

0

ADMK TVK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களுடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியை விட்டு அடியோடு நீக்கபட்டார். இவ்வாறு கட்சி பலவீனமடைந்து வருவதை உணர்ந்த இபிஎஸ் கட்சியை பலப்படுத்த விஜய் கூட்டணியை தேர்வு செய்தார்.

ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து பின் வாங்கவில்லை. ஆனாலும் இபிஎஸ் விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் பணியை கைவிடவில்லை. இதனை அறிந்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற கூடாது என்பதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த நாளே தவெகவில் இணைந்தார். இந்நிலையில் செங்கோட்டையனை விமர்ச்சித்தால் அது விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதற்கு சமம். இதனால் இபிஎஸ் அவரை விமர்ச்சிக்காமல் விட்டுவிடுவார் என்று பலரும் நினைத்தார்.

ஆனால் நேற்று செங்கோட்டையனின் கோட்டை என கருதப்படும் கோபிச்செட்டிபாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி, செங்கோட்டையனை தாக்கி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கோபியில் அதிமுக தோற்க்கடிக்கப்படும் என்று யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள், அதை உடைத்து விட்டீர்கள் என்றும், அதிமுகவிற்குள் இருந்து கொண்டே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன் என்றும் பேசியிருந்தார். இவரின் இந்த கருத்து விஜய்யையும் சேர்த்து விமர்சித்திருப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இத்தனை தொகுதிகள் வேண்டும்.. பாஜக கூட்டணி கட்சி கறார்!! ஷாக்கில் அமித்ஷா!!

0

BJP PNK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட, புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது, திமுக கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் என்ற நிலையில் உள்ளது.

அதிமுக உடன் பாஜக, தமாக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், தற்போது 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக உடன் புதிய நீதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேசிய புதிய நீதி கட்சியின் நிறுவனர், ஏ.சி. சண்முகம் இந்த முறை 8 அல்லது 9 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கறாராக கூறியிருக்கிறார். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, கீழ்பென்னாத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒன்றில் புதிய நீதி கட்சி போட்டியிடும் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

பாஜக கட்சி அதிமுக தலைமையின் கீழ் இயங்கி வரும் நிலையில் புதிய நீதி கட்சி இவ்வாறான கோரிக்கையை முன் வைத்திருப்பது பாஜகவிற்கு மட்டுமல்லாது, அதிமுகவிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில், புதிய நீதி கட்சி 9 தொகுதிகளை கேட்பது அதிமுகவின் உள்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யை முதலில் ஆதரிச்சது நாங்க தான்.. ஆனா இப்போ.. ஓப்பனாக பேசிய திமுக கூட்டணி கட்சி!!

0

TVK VCK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியபட்ட விஜய், தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அப்போதிலிருந்தே இவரது கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் தவெக மீண்டு வராது என நினைத்த சமயத்தில் அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இந்நிலையில் தவெகவின் முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் விஜய் அறிவித்திருந்தார்.

தவெகவின் எதிரி திமுகவாக இருக்கும் பட்சத்தில் திமுகவின் கூட்டணி கட்சிகள் சில தவெகவையும், விஜய்யையும் விமர்சிப்பதை விட்டு விட்டு அவருக்கு ஆதரவாகவும், அவர் அரசியலில் வெற்றி பெற, அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். அதிலும் முக்கியமாக திமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் விசிகவின் நிலைப்பாடு விஜய் வருகைக்கு பின் மாறி இருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருகிறது. விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த போது, விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

இது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக செய்தியாளர்களிடம் பேசிய திருமா, விஜய் வெறுப்பு அரசியலை உயர்த்தி பிடிக்கிறார். தவெக முன்வைக்கும் அரசியல், கொள்கை சார்ந்த அரசியலாக இல்லாமல், ஆளுங்கட்சி மீதான வெறுப்பை உமிழும் அரசியலாக இருக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய்யின் அரசியல் வருகையை முதன் முதலில் வரவேற்றது விசிக தான் என்றும் கூறியிருக்கிறார். திமுகவை கடுமையாக எதிர்க்கும் விஜய்யை ஆதரித்தோம் என கூறும் இவரது கருத்து திமுகவிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த செங்கோட்டையன்.. அதிரும் அரசியல் அரங்கு!!

0

TVK CONGRESS: அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால், செங்கோட்டையன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைமைக்கு எதிரானவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 1 மாதத்திற்கு முன்பு கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்திலும் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் பின்னர், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நிலையில் தவெகவில் இணைந்த இவர், தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையிலெடுத்துள்ளார். அதிமுக, திமுக வினுடைய கூட்டணிகள் ஓரளவுக்கு உறுதியான நிலையில், தவெக உடனான கூட்டணி மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. விஜய், கட்சி ஆரம்பித்தது முதல் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்ற குரல் ஓங்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே காங்கிரஸ் தலைவர்களும் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் இது உறுதியாகியுள்ளது. தற்போது தவெகவின் முக்கிய தலைவராக அங்கம் வகித்து வரும் செங்கோட்டையன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசை ஒரு சுப நிகழ்ச்சியில் சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து திருநாவுக்கரசர் விளக்கம் அளித்த போது, இது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சந்திப்பு. அரசியல் ரீதியானது அல்ல என்று விளக்கம் அளித்தார். ஆனால் இந்த சந்திப்பு கூட்டணி குறித்த அச்சாரமாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு விஜய்-ராகுலின் நட்புறவும், காங்கிரஸ் திமுக கூட்டணியிடம் சில நிபந்தனைகளை முன் வைப்பதும் உதாரணமாக பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முதன்மை கட்சி.. ஆளுங்கட்சிக்கு முற்றுப்புள்ளி!!

0

MDMK DMK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பணியையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளிடமும் ஒத்துழைப்பை நல்கி வருகிறது.

ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ தேர்தல் நெருங்கும் தருவாயில், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றன. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழிக்கும் ஸ்டாலினுக்கு தற்போது புதிதாக திமுகவில் பல ஆண்டுகளாக அங்கம் வகித்து வரும் மதிமுக விலக போகிறது என்ற பகீர் தகவலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா கூறியுள்ளார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த இவர், திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேற போவதாகவும், வைகோ வேறு ஒரு கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறார் என்றும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு முறை வைகோவிற்கு பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருக்கிறது என்று கூறியதால், மதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைகோவின் மகன் இந்த தேர்தலில், தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததையெல்லாம் வைத்து பார்த்தால் கூடிய விரைவில் மதிமுக திமுகவை விட்டு விலகும் என்பது உறுதியாகியுள்ளது.

வெளிவரும் செங்கோட்டையனின் அட்டுழியம்.. தவெகவின் அழிவு ஆரம்பம்!! நடுங்கும் விஜய்!!

0

TVK: 2 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கபட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுகவின் தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றபட்ட சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கையை அனைவரும் எதிர் நோக்கி இருந்தனர். அப்போது தான் அவர் விஜய் தலைமையில் தவெகவில் இணைந்தார்.

இவர் தவெகவில் இணைந்தது, விஜய்க்கு ஜாக்பாட் அடித்தது போல இருந்தாலும், மற்றொரு புறம் இது அவருக்கு பாதகமாவே அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், திமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்து வரும் நிலையில், இது அதிமுகவிலும் ஆரம்பித்துள்ளது. இதுவே இந்த இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் தோல்வியை பெற காரணமாக அமையும் எதிர்பார்க்கப்பட்டது. இது தவெகவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்பட்ட சமயத்தில், இந்த ஊழல் வழக்கு தற்போது தவெகவிலும் தலை தூக்கியுள்ளது. அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் அவர் மீது சில குற்றசாட்டுகள் எழுந்துள்ளது

விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் போக்குவர்த்து துறை அமைச்சராக இருந்த போது, ரூ.2.6 கோடி ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது போன்ற பல்வேறு வழக்குகள் அவர் தவெகவில் இணைந்த பிறகு மீண்டும் உயிர் பெற தொடங்கியுள்ளன. திமுகவின் ஊழல் புகாரை மட்டுமே மையமாக வைத்து பிரச்சாரம் செய்து வந்த விஜய்க்கு தற்போது அவரது கட்சியிலேயே இது போன்ற நிகழ்வு அரங்கேறி இருப்பது பெறும் அதிர்ச்சியையும், பயத்தையும் வரவழைத்து இருப்பதாக பலரும் கூறுகின்றனர். மேலும் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கோபத்தில் இருக்கும் இபிஎஸ் அவருக்கு எதிரான சில ஆவணங்களையும் வெளியிட போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கூட்டணி குறித்து உறுதி தெரிவித்த பிரேமலதா.. அதிருப்தியில் திராவிட கட்சிகள்!!

0

DMDK TVK: அடுத்த 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் அரங்கு எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக உடன் பாஜக, தமாக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கும் நிலையில், திராவிட கட்சிகள் இரண்டும் பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் நிலையில், ராமதாஸ் திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த கூட்டணி தற்சமயம் உறுதியாவது போல தெரியவில்லை. தேமுதிகவோ திமுக, அதிமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணியை அறிவிப்போம் என பிரேமலதா முடிவாக இருந்தார். ஆனால் அதற்கு முன் நடைபெறும் பிரச்சாரம் ஒவ்வொன்றிலும் தனது கூட்டணியை மறைமுகமாக அறிவித்த வண்ணமே உள்ளார்.

இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணத்தின் போது, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, 2026 நிச்சயமாக கூட்டணி ஆட்சி தான் அமையும். அப்போது தேமுதிக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்போது இருக்கும் அரசியல் சூழலில் விஜய் மட்டும் தான் கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் பங்கு என கூறியிருக்கிறார். இதனால் பிரேமலதா விஜய் உடனான கூட்டணியை தான் மறைமுகமாக கூறியிருக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெகவில் செங்கோட்டையனால் வெடிக்க போகும் பூகம்பம்.. திக்குமுக்காடும் விஜய்!!

0

TVK: திராவிட கட்சிகளுக்கு இணையாக தமிழகத்தில் ஒரு கட்சி பேசப்படுகிறது என்றால் அது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான். பெருமளவில் ஆதரவை பெற்ற இந்த கட்சி கரூர் சம்பவத்திற்கு பின் சற்று தொய்வடைந்தது. இதனையடுத்து 1 மாதத்திற்கு பிறகு தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. மேலும் SIR க்கு எதிரான போராட்டங்கள், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கரூர் சம்பவத்திற்கு 1 மாதத்திற்கு பின் பழைய நிலைக்கு திரும்பிய தவெகவுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது தான் மூத்த தலைவர் செங்கோட்டையனின் இணைவு.

இவர் சுமார் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்தவர் மட்டுமல்லாது 8 முறை எம்.எல்.ஏ பதவியையும் வகித்திருக்கிறார். இப்படி இருக்க இவர் புதிய கட்சியான தவெகவில் இணைந்தது தவெகவுக்கு நல் வாய்ப்பாக அமைந்தது. ஏனென்றால் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். இதனால் இவரின் வருகை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்தது. தவெகவில் அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவர் மிகவும் மூத்த அரசியல் வாதியாக இருப்பதால், இவரின் ஆலோசனைக்கு விஜய் மற்றும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உடன்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்மாறாக சில செயல்கள் நடந்து வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் விஜய் கட்சியில் சேர்ந்து முழுமையாக 1 வாரம் கூட நிறைவு பெறாத நிலையில் இவரின் கருத்துக்கு எதிராக சில குரல்கள் எழுந்து வருவது தவெக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என பலரும் கூறுகின்றனர். 

அதிமுகவின் வாக்கு வங்கி சிதறாது.. திமுக கூட்டணி கட்சி தலைவர் உறுதி!!

0

ADMK DMK CONGRESS: 2026 யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் புதிய புதிய திருப்பங்களால், நொடிக்கு நொடி பரபரப்பாகவே உள்ளது. இந்த பரபரப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அதிமுகவில் பல அணிகள் உருவாகி உள்ளன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், மற்றும் அண்மையில் நீக்கப்பட்ட செங்கோட்டையன் போன்றோர் ஒன்றிணைந்து நால்வர் அணியாக உருவெடுத்தனர்.

இவர்கள் நால்வரும் அதிமுகவின் முக்கிய முகம் மட்டுமல்லாது, இவர்களின் ஆதரவாளர்கள் அதிமுகவில் நிறைய பேர் உள்ளனர். இப்படி இருக்கும் பட்சத்தில், இவர்கள் ஒரு அணியாக உருவெடுத்தது, அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய் உடன் கூட்டணி அமைக்க இபிஎஸ் முயன்றார். ஆனால் இது தோல்வியிலேயே முடிந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இபிஎஸ்யை பழிவாங்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் எதிர் பாராத சமயத்தில் தவெகவில் இணைந்தார்.

50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன், மிகப்பெரிய திராவிட கட்சியிலிருந்து விலகி, புதிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றது எந்த வித மறுபாட்டையும் ஏற்படுத்தாது.

அதிமுகவிற்கு வாடிக்கையாக வரும் வாக்குகள் அவர்களுக்கு வந்து விடும். என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில காலமாகவே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர், அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது. அவர்களின் வாக்கு சிதறாது என்பது போன்ற கருத்தை கூறியிருப்பது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அதிமுக முதன்மை கட்சி என்பதையும் உணர்த்தியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.