திங்கட்கிழமை, நவம்பர் 24, 2025
Home Blog

பாஜகவிலிருந்து அதிரடியாக வெளியேறும் திராவிட கட்சி.. ஓபிஎஸ் முடிவால் பரபரப்பு!!

0

ADMK BJP: பாஜகவிற்கும், அதிமுகவிற்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் 2026யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இரண்டு நிபந்தனைகளை முன் வைத்த பின்பே இபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தார். அதில் முதலாவது அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவியை பறிக்க வேண்டும். இரண்டாவது, இபிஎஸ்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக கூட்டணியிலிருந்து விலகி வேண்டும்.

இதில் முதலாவது நிபந்தனை அப்போதே நிறைவேறியது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறாமலிருந்த நிலையில், தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளுக்கு மறுப்பு தெரிவித்த இருவரும் அண்மையில் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பாஜகவை சேர்ந்த பலரும் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனுமில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டுமென ஓபிஎஸ்யும், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத தினகரனும் இனி பாஜகவில் இணைய மாட்டார்கள் என்று நினைத்த சமயத்தில், பாஜகவில்  மீண்டும் இணைய போவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், NDA கூட்டணியில் சேர்வதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். இவர்கள் மீண்டும் NDA கூட்டணியில் இணைந்தால், அதனை இபிஎஸ் ஏற்பாரா என்பது சந்தேகம் தான். இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் என மூவருக்கும் கடுமையான போட்டி நிலவி வரும் வேலையில், இவர்களின் இணைவு கூட்டணியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் இருவரும் NDAவில் இணைந்தால் அதிமுக பாஜகவிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்றும் அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். 

சிபிஐயிடம் சிக்கிய தவெகவின் முக்கிய புள்ளிகள்.. அதிரும் அரசியல் அரங்கு!!

0

TVK: புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். விஜய் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் என்பதால், அவரை பார்க்க கூடிய கூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் திமுகவின் கோட்டையாக அறியப்படும் கரூரில் நடைபெற்றதால், இது செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைமையின் சதி திட்டம் என்று தவெக நிர்வாகிகள் கூறி வர, தவெகவின்  அரசியல் அறியாமை என்று திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வந்தனர்.

இதனால் இதனை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், தனி நபர் குழு அமைத்தது. தேசிய கட்சியான பாஜகவும் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியது. இதனை ஏற்காத தவெக, சிபிஐ விசாரணையை கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தமிழக அரசு மீது தவெக குற்றம் சுமத்தி இருப்பதால் இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த குழு விசாரிக்க கூடாது என்று கூறி இதனை சிபிஐ வசம் ஒப்படைத்தது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் சிபிஐ, கரூருக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து, தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த மற்றும் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகம் தேர்தலை நோக்கி வேகமெடுத்துள்ள நிலையில், கரூர் சம்பவம் மற்றும் சிபிஐ விசாரணை போன்றவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாஜகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர்.. அச்சத்தில் இபிஎஸ்!!

0

ADMK BJP: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு முயற்சித்தும் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. பாஜக தமிழகத்தினுல் வரவிடாமல் தடுப்பதே, பாஜகவின் இந்துத்துவவாத கொள்கையை தமிழக மக்கள் எதிர்ப்பதே ஆகும். இந்த முறை பீகாரில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது பாஜகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. இதன் காரணமாக பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இபிஎஸ், பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு இரண்டு நிபந்தனைகளை முன் வைத்தார். ஒன்று, அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், மற்றொன்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதாகும். இதில் அண்ணாமலையின் பதவி விலகல் மட்டுமே அப்போதைக்கு நடந்தது. ஓபிஎஸ்யும், தினகரனும், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, நயினாரின் செயல்பாடுகள் சரியில்லை என கூறி கூட்டணியிலிருந்து விலகினார்கள். இவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜகவை சேர்ந்தவர்கள் எவ்வளோவோ முயற்சி செய்தும் அதற்கு இவர்கள் இணங்கி வரவில்லை.

ஆனால், தற்சமயம் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய போவதாக மறைமுகமாக கூறியுள்ளார். மீண்டும் பாஜகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், NDA கூட்டணியில் இணைவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கூறினார். இவரின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு வேலை இவர்கள் மீண்டும், பாஜகவில் இணைந்தால் அதற்கு இபிஎஸ்யின் ரியாக்க்ஷன் என்னவாக இருக்கும், அதிமுக NDA கூட்டணியில் தொடருமா போன்ற பல்வேறு கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர். இதற்கான முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தவெக-அமமுக கூட்டணி.. ஓப்பனாக பேசிய டிடிவி தினகரன்!! குளோஸ் ஆகும் இபிஎஸ்யின் சமஸ்தானம்!!

0

TVK AMMK: 2026 தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. திராவிட கட்சியான அதிமுகவும், திமுகவும், கூட்டணி குறித்து மூன்றாம் நிலை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்த தேர்தல் அதிமுகவிற்கு மிகவும் முக்கியம். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது, சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் ஏகப்பட்ட சச்சரவுகள் நிலவி வருகிறது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது, அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினைகள்.

பிரிந்து சென்றவர்களும், இபிஎஸ்யால் வெளியேற்றபட்டவர்களும் ஒரு அணியாக இணைந்து செயல்படுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளர் ஏற்காத அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போது நால்வர் அணியில் ஒருவராக இருப்பதால், இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லை. செய்தியாளர் சந்திப்பில் எப்போதும் ட்விஸ்ட் வைத்து பேசி வரும் இவர்கள் நால்வரும், தற்போது கூட்டணி குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கூட்டணி குறித்து பேசி வருகிறோம்.

முடிவு என்ன என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார். இவருக்கு விஜய்யுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பம் இல்லையென்றால், அதை வெளிப்படையாக கூறி இருக்கலாம். அதனை தவிர்த்து அவர் கூறிய பதில் தவெக கூட்டணிக்கு மறைமுகமாக சம்மதம் தெரிவித்தது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வரை வேட்பாளராக ஏற்க சம்மதம், என்று கூறிய டிடிவி தினகரன், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்வார் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

திமுகவில் இணையும் அதிமுகவின் டாப் தலை.. செம்ம குஷியில் ஸ்டாலின்!! காலி ஆகும் இபிஎஸ்!!

0

DMK ADMK: இன்னும் சில மாதங்களில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களின் தலைமையில் ஒவ்வொரு தொகுதியிலும், இதற்கான விழாவும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் முன்னிலை பெறுவது திமுக என்றே கூறலாம். அதிலும் முக்கியமாக திமுகவின் அரசியல் எதிரியான, அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்து வருவது இபிஎஸ்க்கு பாதகமாகவும், ஸ்டாலினுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜி வசம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட பலரும் திமுகவில் இணைந்த நிலையில் அடுத்ததாக, செங்கோட்டையனை இணைப்பதற்கான முயற்சியை செந்தில் பாலாஜி மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்து வரும் செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எதிர்த்த திமுகவில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும், திமுகவில் இணைவது போன்ற போக்கை காட்டினால், அதிமுக ஒன்றிணையும் என்று செங்கோட்டையன் நினைக்கிறார் என்றும் அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள், கூடிய விரைவில் செங்கோட்டையன் திமுகவில் இணைவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். செங்கோட்டையன் திமுகவில் இணைவாரா, இல்லையா என்பது இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் செங்கோட்டையனின் நிலைப்பாடு 2026 தேர்தலை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக பாஜகவின் பி டீம்.. உள்ளரங்கு மக்கள் சந்திப்பில் நிரூபித்த விஜய்!!

0

TVK BJP: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே அந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தமிழக கட்சிகள், தேசிய கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகள் என அனைத்தும் விஜய்யுடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டி வந்தன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற பாஜகவும், அதிமுகவும் விஜய்யின் குரலாகவே ஒழித்து வந்ததை பார்க்க முடிந்தது. இதனை பொருட்படுத்தாத விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக இருந்தார்.

இதனை பொது மேடையிலும் அறிவித்திருக்கிறார். அப்போதும் கூட பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியை கைவிடவில்லை. இது ஒரு புறம் இருக்க, திமுகவை சேர்ந்தவர்களும், தவெகவை எதிர்ப்பவர்களும், விஜய் பாஜகவின் பி டீம் என்று கூறி வந்தனர். இதனை தவெக தொடர்ந்து மறுத்து வந்தது. ஆனால் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் ஒரு செயலை செய்திருக்கிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு சிறப்பு பொதுக்குழுவை நடத்திய விஜய், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளரங்கு மக்கள் சந்திப்பை நேற்று நடத்தினார்.

இதில் பேசிய அவர், வழக்கம் போல திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவர் தனது அனைத்து உரைகளிலும் பாஜக, திமுக என இரண்டையும் சேர்த்து விமர்ச்சிப்பது வழக்கம். இந்த முறை பாஜகவை விமர்ச்சிக்காமல் இருந்தது அரசியல் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பற்றி விஜய் பேசாதது, விஜய் பாஜகவின் பி டீம் என்பதை உணர்த்துகிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் இணைய போகும் புதிய கட்சி.. போட்டுடைத்த செல்வப்பெருந்தகை!!

0

TVK CONGRESS: பீகாரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென மிக தீவிரமாக உள்ளது. பீகாரின் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் சில கோரிக்கைகளை முன்வைத்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்கு பின் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவிடம் பேச காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்த குழு 2026 தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், தொகுதிகள் குறித்தும் திமுகவிடம் கலந்தாலோசிக்கும்.

காங்கிரசின் முக்கிய தலைவர்கள் விஜய்க்கு நெருக்கம் என்பதால் இந்த இரண்டு கட்சியும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது இதனை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் இரண்டாம் கட்ட தலைவர்களின் நடவடிக்கைகளும் இருந்தது. இன்னும் சில தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்ற முடிவிலே அவர்களது கருத்தை கூறி வந்தனர். இதனால் இது இரு தலை பட்சமாகவே இருந்து வந்தது. தற்போது அதற்கு ஒரு முடிவு கிடைத்தது போல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஒரு கருத்தை கூறியுள்ளார்.

காங்கிரஸின் கூட்டணி நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக தலைவருடன் ஒரு வாரத்தில் பேச்சு வார்த்தை நடத்துவோம். அவர் அமைக்கும் குழுவுடன், காங்கிரஸ் குழுவும் பேசும். கூட்டணிக்கான சந்தேகங்கள், தொகுதி பங்கீடு குறித்த கேள்விகளை அப்போது தெளிவுப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, 2026 தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, இதெல்லாம் முன்கூட்டியே சொல்லக்கூடிய விசியம் இல்லை.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகே தலைவர் முடிவை தெரிவிப்பார் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு வெளியேறினால் நிச்சயம் இந்த கட்சி விஜய்யுடன் தான் கூட்டணி அமைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும், செல்வபெருந்தகையின் கூற்று காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய்யுடன் இணைவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது.

அதிமுகவுடன் கூட்டணியா.. தவெகவின் முக்கிய தலை பளிச் பதில்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய்யும் களமிறங்கியுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளையும், மக்கள் சந்திப்பையும் மேற்கொண்டு வரும் விஜய்க்கு கரூர் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதிலிருந்து மீண்டு வருவதற்கே விஜய்க்கும், தவெகவிற்கும் 1 மாத காலம் தேவைப்பட்டது. இதன் பிறகு தான் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமானது விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது, தவெக தலைமையில் தான் கூட்டணி என்பதுமாகும்.

விஜய்க்கான ஆதரவை கண்ட அதிமுக அவரை கட்சியில் இணைத்து விடலாமே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. அதிமுகவின் முயற்சிகளை அறிந்தும் விஜய் அதை பற்றி எந்த கருத்தும் கூறாமலிருந்தார். அதன் பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் அதிமுகவிற்கு பதில் கிடைத்தது. இதனால் அதிமுக-தவெக கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்த சமயத்தில் இதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் தவெகவின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்.

இது குறித்து பேசிய அவர், நாங்கள் எங்கள் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியது போல தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். விஜய்யின் கூட்டணி தான் 2026 தேர்தல் களத்தையே ஆட்டம் காண வைக்க போகிறது என்பதால் அதனை எதிர்நோக்கியே தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

70% ஓகே.. தயவு செஞ்சி வந்துருங்க.. அதிமுக-வில் இரட்டை தலைமை!! எடப்பாடியின் திடீர் முடிவு!??  

0

ADMK: அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களது  கூட்டணி குறித்து பேசினாலே எடப்பாடி, இருக்கும் நாற்காலியை காலி செய்து விடுகிறார். அப்படிதான் செங்கோட்டையனின் பதவியும் போனது. மேலும் பாஜக தலைமை முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை பலரும் எடப்பாடி இடம் இது ரீதியாக பேச்சாளர் நடத்திவிட்டனர்.

வெளியே கூட்டணிக்காக அலையும் நேரத்தில் இவர்கள் கூட்டணி உருவாக்கிக் கொண்டால் அதிமுக வாக்கு சிதறாது என்றும் தெரிவித்து விட்டனர். வருவதை வைத்து எதிர்க்கட்சியாக வந்தாலும் கூட இவர்களது கூட்டணி அறவே வேண்டாம் என எடப்பாடி பிடிவாதமாக உள்ளார். அவரையும் இவர்கள் விடுவதாகவே தெரியவில்லை. நேற்று கூட ஓபிஎஸ் கூறுகையில், மீண்டும் அதிமுக இணைவதற்கான பேச்சுவார்த்தை தினகரன் மற்றும் சசிகலாவிடம் நடந்து வருகிறது. கட்டாயம் இணையும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் மனம்  எடப்பாடி ஒத்துப் போகும் பட்சத்தில் இவர்களுக்கெல்லாம் புதிய பதவி காத்தயுக்கியதாம். குறிப்பாக செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகராக பவர் அமையுமாம். அவரை வைத்து தொடர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி என அனைவருக்கும் மவுசு இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் கூட்டணியை பெருமளவு எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடிக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது.

அச்சமயம் அதிமுக மீண்டும் காலூன்ற பெரிய ஆதரவை தேடுகிறது எனவும் பேசியுள்ளனர். ஆனால் யாருடைய கூட்டணி இன்றி எடப்பாடி அதிமுக-வை பலம் வாயிந்ததாக மாற்றலாம் என என்னியுள்ளராம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை விட்டு விலக்கியாவர்களை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் உள்ளாராம்.

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

0

சளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!

தீராத சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

உடலில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதன் காரணமாக தீராத சளி இருமல் ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி மண்டலங்கள் வலு இழப்பதன் காரணமாகவும் காய்ச்சல், இருமல், சளி இவை ஏற்படும்.

இருமல் வருவதற்கான காரணம் நுரையீரல் பகுதியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் படிவது மற்றும் தொண்டைகளின் வறட்சி ஆகியவை இருமல் வருவதற்கான காரணமாகும்.

தீராத சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்த வெங்காயம்,பூண்டு இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடல் பகுதியில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற இவை உதவுகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் அதிக சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாட்டிக்காக செயல்படுகிறது. இவை உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாக்க உதவுகிறது.

வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள மூலப்பொருட்கள் சளி, இருமலை குணப்படுத்துவதோடு சுவாசம் மண்டலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்தும். தீராத சளி, இருமல் குணமடைய தேவையான செய்முறைகள்.

இரண்டு வெங்காயம் இரண்டு பூண்டு ஆகியவற்றை சிறியதாக நறுக்கி ஒரு கப் நீரில் இதனை நன்றாக வேக வைத்து அதன் பிறகு இதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வருவதன் காரணமாக நம் நுரையீரல் உள்ள பாக்டீரியாக்களை அளித்து சுவாசப் பாதையில் உள்ள பாக்டீரியாக்களை அளிக்கும்.

நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து சளி இருமல் ஆகியவற்றை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.