சனிக்கிழமை, நவம்பர் 22, 2025
Home Blog

திமுகவின் பகடை காயாக மாறிய மல்லை சத்யா.. வைகோவின் பிளான் பி!!

0

DMK MDMK: ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை பின் பற்றி வரும் திமுக, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் சமரசப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், இதனை கடுமையாக எதிர்த்த வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார். பின்னர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவர்களுடனே கூட்டணி அமைத்து விட்டார்.

இந்நிலையில் மதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட மல்லை சத்யா, வைகோ உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து புதிய கட்சி ஆரம்பித்த மல்லை சத்யா அதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று பெயர் சூட்டினார். இவரின் இந்த புதிய எழுச்சி, திமுகவின் சதி திட்டமாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். ஏனென்றால் மதிமுகவிற்கு மத்திய அரசுடன் இணையும் ஆசை உள்ளது என்பது திமுகவிற்கு தெரியும். இதனை பாஜகவின் எல். முருகன் கூறியிருக்கிறார்.

மேலும் வைகோ குறித்து விமர்சனத்தை முன் வைத்த மல்லை சத்யா, வைகோவிற்கு பாஜக உடன் இணையும் ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அறிந்த திமுக மல்லை சத்யா மூலம் வைகோவிற்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்நிலையில் இந்த செய்தியறிந்த வைகோ, திமுக கூட்டணியிலிருந்து ஒரு வேளை மதிமுக வெளியேற்றப்பட்டாலோ அல்லது கூட்டணியில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றாலோ உடனடியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து விடுவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவில் வெடித்த பூகம்பம்.. நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம்!! தவிக்கும் ஸ்டாலின்!!

0

MMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல அதிமுகவை திமுகவும், திமுகவை அதிமுகவும் எதிர்த்து வரும் சூழலில் திமுகவுக்கு புதிய எதிரி உருவாகியுள்ளது. தவெகவின் ஆதரவை கண்டு அச்சத்தில் உள்ள திமுகவிற்கு, கூட்டணி கட்சிகள் மேலும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் சில செயல்பாடுகளை செய்து வருகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது.

இதனை கூட்டணி கட்சிகள் பொது வெளியில் பேசி வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. பீகார் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் செய்த தியாகம் போதுமென்று நினைக்கிறேம் என்ற கருத்தை காங்கிரஸ் கட்சியினர் முன் வைத்து வந்தனர். ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் அவர்களின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. காங்கிரஸ் மட்டுமல்லாது, திமுக கூட்டணியில் பல வருடங்களாக தொடர்ந்து வரும் விசிக நிர்வாகிகள், இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டு பெறுவோம், அதற்காக எந்த வேலையையும் செய்வோம் என்று கடுமையாக கூறியிருந்தனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எந்த கருத்தும் கூறாமலேயே இருக்கிறார். இந்நிலையில் திமுக கூட்டணியில், நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம் எங்களுக்கும் மக்கள் செல்வாக்கு உள்ளது என்ற தோணியில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர், ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் ஒன்றும் திமுக கூட்டணியில் சளைத்தவர்கள் அல்ல, மனிதநேய மக்கள் கட்சியை பொறுத்த வரை சென்ற முறை எங்களுக்கு ஒதுக்கிய 2 தொகுதிகளிலும் 100 % வெற்றியை பதிவு செய்திருக்கிறோம்.

மக்கள் மத்தியில் எங்களுக்கு ஆதரவு உள்ளது. அதனால் இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதை நிச்சயமாக வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக தலைமைக்கு பேரிடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் அதிக தொகுதிகளை கேட்டால், திமுக குறைந்த இடங்களில் போட்டியிட நேரிடும் என்ற அச்சம் ஸ்டாலினுக்கு எழுந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் மூலம் இபிஎஸ்க்கு வேட்டு வைக்கும் பிரேமலதா.. இதுவும் போச்சா!! அப்செட்டில் அதிமுக!!

0

ADMK DMDK TVK: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகள் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதை போல, தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் வரும் ஜனவரி 9, 2026 அன்று தேமுதிக சார்பில், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற மாபெரும் மாநாடு நடக்க இருக்கிறது. 

இந்த மாநாடு தொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், துரோகம் இழைத்தவர்களுக்கும், நன்றியை மறந்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கு, பாடமாக இந்த மாநாடு அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாகியுள்ளது. துரோகம் இழைத்தவர்கள் என்று இபிஎஸ்யை மறைமுகமாக சாடி இருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேமுதிகவிற்கும், இபிஎஸ்க்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இபிஎஸ் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று பிரேமலதா பல இடங்களில் கூறியுள்ளார். இதனால் இந்த மாநாட்டில் அதிமுக தேமுதிகவிற்கு இழைத்த துரோகத்தை பற்றி பிரேமலதா பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்திருக்கிறார். இபிஎஸ்யை விமர்சிக்க இருப்பதால், இவர் அதிமுக உடன் கூட்டணி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. இதனால் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்ற யூகங்களும் எழுந்துள்ளது. கடலூர் மாநாட்டில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாநாடு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார்.. காங்கிரஸ் எம்.பி நம்பிக்கை!! ஷாக்கில் திமுக!!

0

TVK CONGRESS: பீகாருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது. இதனை எதிர்நோக்கி தமிழக தேர்தல் களம் மற்றும் மாநில கட்சிகள், பொது மக்கள் என அனைவரும் காத்திருக்கின்றனர். பீகாரில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் தற்போது தமிழக தேர்தலை நம்பி தான் இருக்கிறது என்றே சொல்லலாம். பீகார் தேர்தல் முடிவுக்கு முன்னர் வரை தமிழகத்தில் அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஸ்டாலினை வலியுறுத்தி வந்த காங்கிரஸ் முடிவுக்கு பின்னர் மௌனமாகிவிட்டது.

பீகாரில் தோல்வியை சந்தித்ததால், திமுக காங்கிரஸுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதை உணர்ந்த காங்கிரஸ், தவெக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்று கூறியது ஜாக்பாட் அடித்தது போல அமைந்து விட்டது. விஜய்க்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுடன் நல்ல நட்புறவு இருப்பதால் இந்த கூட்டணி உறுதியாகவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களின் பேச்சும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தவெக கூட்டணிக்கு காங்கிரசுக்கு விருப்பம் இருப்பது போல காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 2026 தேர்தலில் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளை விஜய் குவிப்பார் என்றும், அந்த வாக்கு சீட்டாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று  கூறியுள்ளார்.

மேலும், பிரஷாந்த் கிஷோருக்கு, விஜய்க்கும் நிறைய மாறுபாடுகள் உள்ளன. இருவருக்கும் கிடைத்திருக்கும் ஆதரவு வேறு வேறு. இருவரையும் ஒப்பிட முடியாது என்று கூறி இருந்தார். இவரின் இந்த கருத்து,  பீகாரில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், தமிழகத்தில் விஜய் கணிசமான வாக்குகளை பெறுவதன் மூலம் அவருடன் கூட்டணி அமைக்கலாம் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

பாஜக உடன் நெருக்கம் காட்டும் தவெகவின் முக்கிய புள்ளி.. டாப் சீக்ரெடை உடைத்த பத்திரிகையாளர்!!

0

TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து, தங்களது கட்சியை பாமர மக்களின் மனதில் பதிய வைப்பதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகின்றன. அதற்காக அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசியலுக்கு புதிய வருகையாக அமைந்துள்ளது தான் விஜய்யின் தவெக. இந்த கட்சி பெரும் வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்த வரவேற்பை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். இந்த நிகழ்விற்கு பிறகு சுமார் 1 மாத காலமாக தவெக தலைவரை தொடங்கி, இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை யாரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். அண்மையில் தவெக வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்க தொடங்கியுள்ளது. மேலும் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. அது மட்டுமல்லாமல், விஜய்யுடன் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவராக சிலர் விஜய்யின் அரசியல் வாழ்க்கையை பின்னுக்கு தள்ள பார்க்கிறார்கள் என்ற விவாதமும் எழுந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், மூத்த பத்திரிகையாளர், தாமோதரன் பிரகாஷ் ஒரு கருத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை உடைக்கும் அசைன்மெண்ட் ஆதவ் அர்ஜுனாவுக்கு பாஜக வழங்கியுள்ளதாக கூறினார். இவரின் இந்த கருத்து தவெகவின் கொள்கை எதிரியுடன் ஆதவ் அர்ஜுன நெருக்கமாக இருப்பதை  உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா ஒரு முறை தனி விமானத்தில் டெல்லி சென்றது இதற்கு முக்கிய உதாரணமாக பார்க்கப்படுகிறது. 

கோவை மதுரையில் சதி செய்யும் திமுக அரசு.. நயினார் சொன்ன சீக்ரெட்!!

0

DMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. பாஜக தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவும் தற்சமயம் தேர்தல் நெருங்க இருப்பதால் அவர்களுக்குள் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான அனுமதியை திமுக அரசு மத்திய அரசிடம் கேட்ட போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவை பல்வேறு இடங்களில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுக்கவில்லை. விரிவான விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மற்றும் மதுரை அதிமுக வசம் இருப்பதாலும், தற்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருப்பதாலும் அங்கு எந்த திட்டமும் சென்றடைய கூடாது என்று திமுக அரசு குறைவான தகவலை மட்டுமே அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க போதிய இட வசதியை பெற்று தருவதாக திமுக அரசு இது வரை கூறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவரின் இந்த கருத்து கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு அவப்பெயர் பெற்றுத் தரும் நோக்கில் திமுக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்சி பெயரிலே கூட்டணியை அறிவித்த மல்லை சத்யா.. வைகோவை வீழ்த்த இது தான் சரியான வழி!!

0

TVK DVK: 2026 யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக இறங்கியுள்ளன. மக்களை சந்திக்கும் பணிகளும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் விஜய் கட்சி துவங்கியுள்ளார். இவரது கட்சியான தவெக யாரும் எதிர்ப்பார்த்திடாத அளவு ஆதரவை பெற்றது. இதற்கு காரணம் விஜய்யின் பிரபலம் தான் என்ற விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் தவெகவின் வருகையிலிருந்தே மீளமுடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது புதிதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் வருகையையும் வரவேற்றிருக்கிறது. நேற்று தனது கட்சியின் பெயரை அறிவித்த மல்லை சத்யா அதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் பல்வேறு விவாதங்களுக்கு ஆளாக்கபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்-திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயருடன் ஒத்துப் போவதால், மல்லை சத்யா தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று யுகங்களும் பரவி வருகிறது. அதன் காரணமாக தான் முன் கூட்டியே யோசித்து தவெக கட்சியின் பெயரை போலவே தம் கட்சிக்கும் பெயர் சுட்டி இருக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் மதிமுக சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதால் மதிமுகவை வீழ்த்த விஜய் தான் ஒரே வழி என்று மல்லை சத்யா முடிவெடுத்து இருக்கிறாராம்.

பாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது.. ஆட்சி இபிஎஸ் கையில்!! அதிமுகவின் டாப் தலை கொடுத்த பதில்!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மத காலமே இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகாரில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாஜக அடுத்த கட்டமாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.

இந்த கூட்டணி உறுதியானத்திலிருந்தே அதிமுகவை பாஜக ஆட்டி வைக்கிறது, பாஜகவிற்கு அடிமையாக அதிமுக இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்க்கட்சிகள் பொது மேடையிலேயே விமர்சித்து வந்தன. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் டெல்லி செய்வது இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போல அமைந்திருந்தது. மேலும் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் நடக்கும், தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் கூட்டணி ஆட்சி, பாஜக ஆதிக்கம் போன்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை. இது குறித்து பேசிய அவர், கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

ராஜாஜியே அப்படி செய்யும் போது விஜய்க்கு என்ன.. விஜய்யின் இமேஜை காலி செய்த தமிழிசை!!

0

BJP TVK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்த விஜய் அதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். 2 மாபெரும்  மாநாடுகளையும், 5 தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்திய தவெக கரூர் சம்பவத்திலிருந்து பின்தங்கி இருந்தது. இந்நிலையில் தனது முதல் மாநாட்டிலேயே பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் திட்ட வட்டமாக கூறியிருந்தார்.

தற்போது வரை அந்த நிலையிலிருந்த்து பின் வாங்காமல் உள்ளார். விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியிருந்தாலும், பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை. மாறாக அவருடன் கைகோர்க்கவே ஆசைப்பட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையால், அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது.  தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு அதிமுக மட்டும் போதாது என்று நினைத்த பாஜக விஜய்யுடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால் இவ்வளவு நாட்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த பாஜக தலைவர்கள் தற்போது விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக ஒரு கட்சியே இல்லை என்ற நோக்கில் ஒரு கருத்தை கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பற்றி தரக்குறைவான கருத்தை பேசியது மட்டுமல்லாமல், விஜய் பாஜக கூட்டணிக்கு நோ சொல்லியதால் அதன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜி காங்கிரஸை வீழ்த்த வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்துடன் திமுக உடன் கூட்டணி அமைத்தார். ராஜாஜி போன்றவர்களே அவ்வாறு செய்யும் போது விஜய் போன்றவர்கள் திமுக எதிர்ப்பாளர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து ராஜாஜியுடன் விஜய்யை ஒப்பிட்டு பேசி அவ்வளவு பெரிய தலைவர்களே கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்கும் போது, இப்போது வந்த விஜய்க்கும் கூட்டணி அமைப்பதில் என்ன சிரமம் என்ற தோணியில்  அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் குறித்த தமிழிசையின் கருத்து அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பாமக.. இதெல்லாம் ரொம்ப ராங்!! அச்சத்தில் ஸ்டாலின்!!

0

DMK PMK: அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. இது திராவிட கட்சிகளுக்கு பொருந்தும். அதனால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருவதால், மூன்றாம் நிலை கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு காரசார விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் திமுக தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. ஒரு வேலை இப்போது இருக்கும் கூட்டணி பிரிந்தாலும், தேமுதிக, பாமக கூட்டணியை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக திட்டம் தீட்டிய நிலையில் அந்த ஆசையும் தற்போது நிறைவேறாமல் போய் விட்டது.

முதலில் பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுகவிற்கு அப்பா-மகன் சண்டை பெரும் தடையாக உள்ளது. இதனால் ராமதாஸ், திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனை காரணமாக பாமக கூட்டணி உறுதியாகாமலே இருந்தது. ஆனால் நேற்று நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தில் அதற்கு முடிவு கிடைத்துவிட்டது. தனியார்மயத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  நேரில் சென்று ஆறுதல் அளித்த பாமக பொருளாளர் திலகபாமா, பொது மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் சமயத்தில் மட்டும், அப்பா-மகன் வேடம் போடும் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கூறியிருந்தார். திமுகவை கடுமையாக எதிர்த்திருக்கும் இவரின் கருத்து, பாமக, திமுக உடன் கூட்டணியில் சேர போவதில்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.