வியாழக்கிழமை, நவம்பர் 27, 2025
Home Blog

விஜய்யுடன் ஐக்கியமான செங்கோட்டையன்.. தவெகவில் முக்கிய பதவி!!

0

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் முதலிடம் பிடித்தது திமுக என்றாலும், அதனை பின்னுக்கு தள்ளியுள்ளது தவெக. 50 ஆண்டுகளாக அதிமுகவில் அங்கம் வகித்த வரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய முகமான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து விஜய்யின் கட்சியான தவெகவில் இணைந்துள்ளார்.

2 வாரங்களாகவே 27 ஆம் தேதி செங்கோட்டையன் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இன்று விஜய் தலைமையில் அவர் இணைந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இத்தனை வருடங்களாக ஈரோடு மாவட்ட செயலாளராக இருந்த செங்கோட்டையனுக்கு, தவெகவில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பளார் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவரின் இந்த இணைவு அரசியல் களத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. 50 ஆண்டு கால அரசியல் அனுபவமும், 8 முறை எம்எல்ஏ பதவியும் வகித்த செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தது தவெக பக்கபலமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு பல  வருடங்களாக திராவிட வடையை அறிந்த செங்கோட்டையனுக்கு புதிய திருப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்த செய்தி இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெகவில் அதிமுக ஒருங்கிணைப்பு.. KAS போட்ட பிளான்!! திகைப்பில் இபிஎஸ்!!

0

TVK ADMK: 2026யில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசியல் களம், எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டியை எதிர்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு கட்சிகளை நோக்கி சுழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல் புதிய புதிய திருப்பங்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் அமைந்தது தான் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை, விஜய்யின் அரசியல் வருகை. விஜய்யின் கட்சி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், கரூர் சம்பவம் அதனை தலைகீழாக மாற்றியது.

ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் விஜய்க்கு சாதகமாவே அமைந்தது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக இணைவது உறுதியாகி விட்டது. பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கவில்லை என்றால் அந்த பணியை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டி வரும் என கூறிய செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை தவெகவில் இணைப்பதற்கான பணியை மும்முரமாக செய்து வருகிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே பாஜகவின் மூத்த மாநில தலைவராக இருந்த சாமிநாதன் தவெகவில் இணைய போவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது இந்த செய்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட போதே அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்காணோர் கட்சியிலிருந்து விலகினார். அதோடு சத்ய பாமா போன்ற முக்கிய முகங்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். செங்கோட்டையனுக்கு ஆதரவாளர்கள் அதிகளவில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அனைவரும், தவெக இணைந்தால் அது தவெகவுக்கு இரட்டிப்பு பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பாஜக முன்னாள் மாநில தலைவரை தட்டி தூக்கிய விஜய்.. வெளியான சீக்ரெட்!!

0

BJP TVK: பீகாரில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நீண்ட காலமாகவே தமிழகத்தில் நுழைய முடியாத பாஜக இந்த முறை பீகாரில் பெற்ற வெற்றியை மையப்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முயற்சித்து வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் சுற்று பயணத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

பாஜக வெற்றி பெற வேண்டுமானால் இந்த இரண்டு மட்டும் போதாது. அதற்கு முக்கியமாக விஜய்யின் கூட்டணி அவசியம். இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் தெளிவாக உள்ளார். இந்நிலையில் பல முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைவது கிட்ட தட்ட உறுதியாகியுள்ளது.

இவரை தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவரான, புதுச்சேரியின் பாஜக மாநில தலைவராக நீண்ட காலம் இருந்த, சாமிநாதன் தவெகவில் இன்று இணைய போவதாக செய்திகள் பரவி வருகின்றன. தவெகவை கூட்டணியில் சேர்த்து வெற்றி பெறலாம் என நினைத்த பாஜகவிற்கு, பாஜகவை சேர்ந்த பலரும் தவெகவில் இணைந்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் கொள்கையை ஏற்காத தமிழக மக்கள், இந்த முறை விஜய் வருகையால் பாஜகவை எதிர்க்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு வருத்தம்பா.. செங்கோட்டையன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய தினகரன்!!

0

ADMK AMMK: தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்னரே நாம் தாம் இந்த தேர்தலில் வெல்ல போகிறோம் என அனைத்து கட்சிகளும் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் வழக்கம் போல அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு கொண்டிருக்கிறது. இது  எப்போதும் நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது, புதிதாக மூன்றாவது அணியும் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத உச்சத்தில் உள்ளது.

முன்னணி கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கூட தவெகவில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் அதிமுகவின் முக்கிய முகமாகவும், கோபிச்செட்டிபாளையத்தில் 8 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது. இவர் தவெகவில் சேர்வது உறுதியான நிலையில், இது குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போது, பேசிய அவர், இரு தினங்களுக்கு முன்பு கூட செங்கோட்டையன் அண்ணனை சந்தித்தேன். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவர் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறார். பழைய கதைகள் எல்லாம் பேசுவார்.

அந்த சந்திப்பின் போது கூட, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதை பற்றியோ, விஜய்யை சந்திப்பதை பற்றியோ அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கூறியுள்ளார். செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்பு நால்வர் அணியுடன் ஐக்கியமானார். இதன் பின்னர் இவர் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுடன் தான் பயணிப்பார் என்று நினைத்த சமயத்தில், இவர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைய போகும் செய்தி, தினகரனுக்கு தெரியாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினகரனின் இந்த கருத்து அவர் செங்கோட்டையன் மீது மன வருத்தத்தில் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. 

சட்டசபையில் செங்கோட்டையன் செய்த சம்பவம்.. கொண்டாட்டத்தில் திமுக!!

0

ADMK DMK: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் அரங்கில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென முயற்சித்து வரும் வேளையில், தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வருகிறது. இவ்வாறு அதிமுகவிற்கும், திமுகவிற்கும் போட்டி நிலவி வரும் சமயத்தில், அதிமுக மீண்டும் தோல்வியுறும் வகையில் சில நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு அணியாக திரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கட்சியின் முக்கிய முகமாகவும், கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தொடர்ந்து வெற்றியை மட்டுமே பதிவு செய்து வந்த, செங்கோட்டையன் தவெகவில் இணைய போவதாக தகவல் வந்தது. இந்நிலையில், தனது எம்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்த செங்கோட்டையன், அதன் பிறகு இரண்டு முறை திமுகவின் மூத்த அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு  தான் தற்போது ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. இவர் தவெக இணைவதற்கான சாத்திய கூறுகள் இருந்த பட்சத்தில் சேகர் பாபு உடனான உரையாடல் அவர் திமுகவில் இணைய போவதாகவே பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் காலூன்ற வேண்டுமென பல முயற்சிகளை கையில் எடுத்து வரும் திமுகவிற்கு செங்கோட்டையனின் இணைவு ஒரு தொடக்க புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஒருவேளை திமுகவில் இணைவது உறுதியானால் அது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோபிச்செட்டிபாளையத்தில் மாஸ் காட்டும் திமுக.. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!!

0

ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், தொகுதி வாரியாக மாற்று கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல், 2021 தேர்தலில் திமுக தோல்வியுற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென தொகுதி வாரியாக திமுகவின் முக்கிய அமைச்சர்களை நியமித்து, அங்கு மக்களை திமுக பக்கம் இழுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொண்டு மண்டலத்தை, தம் பக்கம் ஈர்க்க வேண்டுமென திமுக போராடி வருகிறது. ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இது நிராசையாகவே உள்ளது. இந்த முறை கொங்கு மண்டலத்தின் குறிப்பிட பகுதிகள் திமுக வசம் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதுற்கு அதிமுகவே வழி அமைத்து விட்டது. அப்படி அரங்கேறிய நிகழ்வு தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கபட்டது. இவரை அதிமுகவின் அனைத்து பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் போன்ற எல்லாவற்றிலிருந்தும் நீக்கப்பட்ட போதிலிருந்தே, செங்கோட்டையனின் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் திமுக காலூன்ற வேண்டுமென முயற்சித்து வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில், இன்று செங்கோட்டையன் தனது கோபி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது திமுகவிற்கு சாதகமாகிவிட்டது. செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீங்கியதால் ஈரோட்டில் அதிமுக தலைமை மீதும், கட்சியின் மீதும் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்த அதிருப்தி வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கான ஆயத்த பணிகளை விரைந்து செய்ய வேண்டுமென திமுக தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம்.

கோபிச்செட்டிபாளையத்தில் கோட்டை விட்ட இபிஎஸ்.. திக்குமுக்காடும் அதிமுக!!

0

ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. எப்போதுமே அதிமுக-திமுக என இருந்த அரசியல் களம் தற்போது நான்கு முனை போட்டியாக மாறியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முக்கிய கட்சிகளின் தாக்கம் பெரியளவில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், தொகுதி பங்கீட்டிலும், கூட்டணி வியூகங்ககளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கு நிலையில், திராவிட கட்சிகளில் பல்வேறு சச்சரவுகள் நிலவி வருகின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகளும் அவர்கள் ஒரு அணியாக உருவானதும் தான்.

இவ்வாறு நால்வர் அணியாக உருவானவர்கள், இதனை மையப்படுத்தியே இயங்குவார்கள் என்று நினைத்த சமயத்தில் ஆளுக்கொரு திசையில் செல்ல முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அப்படி அமைந்தது தான் ஓபிஎஸ்யின் தனிக்கட்சி முடிவு, தினகரனின் கூட்டணி, மற்றும் செங்கோட்டையனின் பதவி விலகல். கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் கோபிச்செட்டிபாளையத்தில், 8  முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் இந்த தொகுதி அப்போதிலிருந்தே அதிமுகவின் தொகுதியாகவும், செங்கோட்டையனின் கோட்டையாகவும் கருதப்பட்டது.

இந்நிலையில் இவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் தவெகவில் இணைய போகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் இபிஎஸ் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். கோபியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் அதிமுக இம்முறை செங்கோட்டையனின் விலகலால் பலவீனமடைந்துள்ளது. இதன் காரணமாக 2026 தேர்தலில் கோபியில் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு அடுத்ததாக கோபியில் வலுவான வேட்பாளரை நிறுத்துவற்கான பணியை இபிஎஸ் மேற்கொண்டுள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செங்கோட்டையன் கேம் ஸ்டார்ட்.. இபிஎஸ்க்கு கெடு முடிஞ்சது!! அதிரும் அரசியல் அரங்கு!!

0

ADMK TVK: அதிமுகவில் பல்வேறு சச்சரவுகள் நிகழ்ந்து வரும் வேளையில், அதனை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அதிமுகவின் தலைமையால் 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட இவர், நால்வர் அணியாக உருவெடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர்கள் நால்வரும், ஒரு அணியாக இணைந்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் பிறகு, ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்தார். டிடிவி தினகரனும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் செங்கோட்டையன் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இவருக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல ஆதரவு இருப்பதால் திமுக இவரை கட்சியில் சேர்க்க முயற்சிக்கிறது என்ற தகவல் பரவியது. ஆனால் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்தால் அது அதிமுகவிற்கு செய்யும் துரோகம் என, செங்கோட்டையன் நினைப்பதாக அவரின் ஆதரவாளர்கள் கூறினார். இதனால் வேறு வெளியே இல்லாமல் அவர் தவெகவில் இணைய போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவியது. இது குறித்து தவெக சேர்ந்தவர்கள் செங்கோட்டையனிடம் பேசி வருகிறார்கள் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறின.

இவ்வாறு செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு மீது பல்வேறு விமர்சனங்களும், வியூகங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இன்று தனது கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு தமிழக அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 27 ஆம் தேதியான நாளை செங்கோட்டையன் தவெகவில்  இணைய போகிறார் என்ற செய்தி பரவி வரும் நிலையில், இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தது தவெகவில் இணைவதற்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு இபிஎஸ்க்கு பேரிடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜியை மாட்டி விட்ட தவெக நிர்வாகிகள்.. முழிக்கும் திமுக தலைமை!!

0

TVK DMK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்படும் விஜய்யை பார்க்க கூடிய கூட்டம் காரணமாக இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டது நாட்டையே உலுக்கியது. கரூருக்கு முன்பு விஜய் 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதெல்லாம் நிகழாத அசம்பாவிதம் திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நிகழ்ந்ததால், இது நிச்சயம் திமுகவின் சதி திட்டமாக இருக்கும் என தவெக நிர்வாகிகள் தொடங்கி தலைமை வரை கூறி வந்தனர்.

ஆனால் திமுகவை சேர்ந்தவர்களோ, தவெக தொண்டர்களுக்கு கூட்டத்தை சரியாக வழி நடத்த தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததால் இத்தனை இழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று மாறி மாறி குறை கூறி வந்தனர். இதனால் தமிழக அரசு இதனை விசாரிக்க ஒரு தனி நபர் குழுவை அமைத்தது. இதனை மறுத்த தவெக தரப்பு சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இது திமுகவின் சதி திட்டம் என்பதையும், இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி என்றும் இவர்கள் கூறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சில பேர் மீது ஊழல் புகார் இருக்கும் நிலையில், தற்போது இதனையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திமுக தலைமை குழப்பத்தில் உள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

திமுக நேரடி அரசியல் எதிரி.. அதிமுக மறைமுக எதிரி!! விஜய்யின் மாஸ்டர் மைண்ட்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதிமுக, திமுக தான். அதனை மிஞ்சும் வகையில் உதயமாகியுள்ளது தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். திராவிட கட்சிகளை நோக்கியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம் தற்போது மூன்றாவதாக விஜய் பக்கம் திரும்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே தவெகவின் கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.

திமுகவை எதிரி என்று கூறியதால் நிச்சயமாக அவர் அதிமுக உடன் தான் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விஜய் அதிமுக உடனும் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் விஜய் அதிமுகவை மறைமுக எதிரியாக நினைத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம், விஜய் அதிமுக கூட்டணியை உதறித் தள்ளியது. மேலும் கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்து எல்லா வகையிலும் விஜய்க்கு உதவிய அதிமுகவிற்கு விஜய் இது வரை ஒரு நன்றி கூட சொல்லவில்லை.

அது மட்டுமல்லாமல், சில பரப்புரையில் அதிமுகவை மறைமுகமாகவும் விமர்சித்துள்ளார். விஜய் அதிமுகவையும் எதிரியாக தான் நினைக்கிறார் என்பதற்கு முக்கியமான சான்று செங்கோட்டையனை தவெகவில் சேர்க்க நினைப்பது. செங்கோட்டையனை மட்டுமல்லாது, மேலும் சில முக்கிய தலைவர்களை தவெகவில் சேர்ப்பதற்கான பணியை விஜய் செய்து வருகிறார். திமுகவை அரசியல் எதிரி என்று நேரடியாக அறிவித்த விஜய், அதிமுகவை மறைமுகமாக எதிர்க்கிறார் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.