Home Blog

இறுதி கட்டத்தை நெருங்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணி.. பொருந்தா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்?

0

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டமன்ற தேர்தலானது முன்பு எப்போதும் இல்லாத அள்வுக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் அவர்களின் வருகை தேர்தல் களத்தில் யாருக்கு சாதகம் பாதகம் என்பதை கணிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் முன்பு இல்லாத வகையில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியா அல்லது விஜய் அவர்களுக்கு கிடைத்த புதிய ஆதரவா என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அமைத்துள்ள தேர்தல் கூட்டணியின் நம்பகத்தன்மை குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. திமுக கூட்டணியை பொருந்தா கூட்டணி என்றும், அதிமுக கூட்டணியை டபுள் என்ஜின் கூட்டணி என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதில் குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நீண்ட நாட்களாகியும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ் தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தது, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் திமுகவை விமர்சனம் செய்தது.இறுதியில் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் தேர்தல் நேர சமரசத்துடன் கூட்டணி உறுதியானது என பல்வேறு குழப்பங்களுடன் திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது.

அந்த வகையில் கொள்கை ஒற்றுமையோ அல்லது மக்கள் நலனோ இல்லாமல், வெறும் அதிகாரப் பசிக்காக திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அக்கூட்டணி இன்று பல்வேறு முரண்பாடுகளால் சிதைந்து போய் நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. இரு கட்சிகளும் அளித்த பொருந்தாத வாக்குறுதிகள், முரண்பட்ட மேடைகள் என நிறைய முரண்கள் நிலவின. குறிப்பாக எந்தவொரு வலுவான கூட்டணியும் பொதுவான செயல்திட்டத்தையே முன்வைக்கும். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக உள்ளன. தமிழக மக்களுக்காக ஒருமித்த ஒரு செயல் திட்டத்தை கூட உருவாக்க முடியாத இவர்களால் எப்படி ஒன்றிணைந்து பயணிக்க முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது. இன்றைய காகித அறிக்கையிலேயே இணைய முடியாத இவர்கள் நாளை ஆட்சியில் எப்படி இணைந்து செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட தாமதம், இரு கட்சிகளுக்கிடையேயான நம்பிக்கையின்மையை வெளிப்படையாக காட்டுகிறது. அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடமில்லை என்ற திமுகவின் தெளிவான நிலைப்பாடும் இந்த இடைவெளியை மேலும் பெரிதாக்கியுள்ளது. இதனால், இந்த அமைப்பு ஒரு உறுதியான கூட்டணியாக அல்லாமல், கட்டாயமாக இணைக்கப்பட்ட உறவாகவே தோன்றுகிறது.

மேலும், கூட்டணிக்கே ஒரு பெயரைத் தீர்மானிப்பதில்கூட ஒருமித்த கருத்து இல்லாத நிலை உருவாகியுள்ளது. ராகுல் காந்தி “இந்தியா (INDI) கூட்டணி” என்று குறிப்பிடுவதற்கு மாறாக, மு.க. ஸ்டாலின் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (SPA)” என்றே வலியுறுத்துகிறார். அடிப்படை விஷயங்களிலேயே இவ்வளவு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்ற நிலையில், ஒருங்கிணைந்த எதிர்காலத்தை உருவாக்கும் திறன் குறித்து கேள்விகள் எழுகின்றன. மொத்தத்தில், இந்த கூட்டணி தெளிவின்மையும் குழப்பமும் நிறைந்த அமைப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு கூட்டணியின் வலிமை அதன் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதில்தான் உள்ளது. ஆனால், ராகுல் காந்தி மற்றும் மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் தோன்றுவதில் தெளிவான இடைவெளி காணப்படுகிறது. இது திட்டமிட்ட தவிர்ப்பு போலத் தெரிகிறது என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமீபத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பான உரையில், மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, ஸ்டாலினை குறிப்பிடாதது கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவே கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், இந்த இடைவெளி மேடை மொழிபெயர்ப்புகளிலும் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி ஸ்டாலினை “சகோதரர்” என குறிப்பிட்டபோதும், அதை தமிழில் மொழிபெயர்க்கும்போது அந்த வார்த்தை தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இரு தரப்பினருக்கிடையேயான நெருக்கம் குறைந்து வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

கூட்டணிக்குள் உள்ள உள்கட்சி முரண்பாடுகள் தற்போது வெளிப்படையாகத் தென்படத் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திமுக அரசின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சிப்பதோடு, அதற்கு பதிலாக திமுகவினரும் காங்கிரஸின் அடிப்படை அமைப்பு பலவீனத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் கூட தேவையான தொண்டர்களை திரட்ட முடியாத நிலை காங்கிரஸுக்கு உள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், கூட்டணிக்குள் உள்ள மற்ற கட்சிகளிடமிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன. பிரேமலதா விஜயகாந்த், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலேயே, தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது. இந்த வகையான குற்றச்சாட்டுகள், தற்போதைய ஆட்சியின் செயல்திறன் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.

தன் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளுக்கே உரிய பாதுகாப்பும் நம்பிக்கையும் வழங்க முடியாத நிலையில் இருக்கும் அரசு, பொதுமக்களின் நலனை எவ்வாறு உறுதி செய்யும் என்ற கேள்வி எழுகிறது.

இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஒருங்கிணைந்த மற்றும் கட்டுப்பாட்டான அணியாக செயல்படுகிறது என அதன் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், டி.டி.வி தினகரன், ஜி.கே. வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நோக்கத்துடன் இணைந்து செயல்படுகின்றனர் என கூறப்படுகிறது.

இது வெறும் கட்சிகள் இணைந்த கூட்டணியாக அல்லாமல், மாநிலத்தின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட ஒற்றுமையான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில், மக்கள் முன்னிலையில் ஒரு முக்கியமான தேர்வு நிலவி வருகிறது — அதிகார நோக்கத்தில் இயங்கும் கூட்டணியா, அல்லது வளர்ச்சி நோக்கில் செயல்படும் கூட்டணியா என்பதைக் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில், தமிழகத்தின் எதிர்காலம் குறித்து மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் அரசியல் நிலைமை உள்ளது.

புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026.. பாஜக வெளியிட்ட அட்டகாசமான தேர்தல் அறிக்கை

0

தமிழ் புத்தாண்டு எனும் சிறப்பான நாளில், தமிழக பாஜக தனது தேர்தல் அறிக்கையான “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026”-ஐ வெளியிட்டுள்ளது. “சங்க கால வேர்களில் இருந்து செழிப்பான எதிர்காலத்தை நோக்கி” என்ற நோக்கத்துடன், மாநிலத்தின் முழுமையான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இந்த அறிக்கை வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனின் தேவைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கை, தமிழகத்திற்கு புதிய மாற்றத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

மகளிர் மற்றும் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000 ஊக்கத்தொகை வழங்குவது, ஆண்டுக்கு மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்குவது, பெண்களின் பாதுகாப்பிற்காக ‘ஜீரோ எஃப்ஐஆர்’ முறையை வலுப்படுத்துவது போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் தொழில் முனைவோருக்கு ₹50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் மற்றும் எலக்ட்ரிக் வாகனம் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான திட்டங்களிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், கல்விக் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட வேலைஇல்லா இளைஞர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயிற்சி அளிப்பதுடன், மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இளம் தொழில்முனைவோருக்கு மற்றும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. PM-KISAN திட்டத்தின் கீழ் கூடுதலாக ₹3,000 வழங்கப்படும் என்றும், கால்நடை வளர்ப்பிற்கு ₹50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சிறிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பதுடன், பருத்தி அரைக்கும் ஆலைகளும் உருவாக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் ₹12,000 ஆக உயர்த்தப்படுவதுடன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ₹2,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக, தொழில் பூங்காக்கள் மற்றும் அதிவேக ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய முயற்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சென்னை-பெங்களூரு-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் பாதைகள் அமைப்பது, கோவை-திருப்பூர்-சேலம் இடையே பிரத்யேக ரயில் வழித்தடம் உருவாக்குவது போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு துறையில் தமிழகத்தை முன்னிலை மாநிலமாக மாற்றும் இலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாச்சாரம் மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளிலும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. தைப்பூசம் மாநில திருவிழாவாக அறிவிக்கப்படுவதுடன், கோயில்களின் பாரம்பரியத்தை பாதுகாக்க புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. போதைப்பொருள் ஒழிப்பிற்காக தனி துறைகள் அமைப்பதும், பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த பல நகரங்களை தூய்மையான நகரங்களாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அனைத்து வாக்குறுதிகளும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நிறைவேற்றப்படும் என பாஜக தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் அவசியம் எனக் கூறி, மக்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.

முடிசூட்டல் அரசியலா? உதயநிதி உயர்வு குறித்து வெடிக்கும் விமர்சனம்!!

0

 

தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் சூட்டில் சுழன்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், (திமுக) கட்சியின் உள்ளக இயக்கங்கள் குறித்து பல்வேறு அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பொதுவாக “மக்கள் நலன், சமூக நீதி” என்ற கோஷங்களுடன் மேடைகளில் குரல் கொடுக்கப்பட்டாலும், கட்சியின் எதிர்காலத் தலைமையைச் சுற்றிய விவாதங்கள் அமைதியாக வேகமெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் குறுகிய காலத்திலேயே வேகமாக உயர்ந்துள்ளது. இளைஞரணி பொறுப்பில் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், பின்னர் துணை முதலமைச்சர் என அவருடைய முன்னேற்றம் திட்டமிட்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இதனால், “இது இயல்பான வளர்ச்சியா, இல்லையா ஒரு திட்டமிட்ட வாரிசு அரசியல் நடைமுறையா?” என்ற கேள்வி எழுகிறது.

அதே சமயம்,ஸ்டாலின் தலைமையில் அரசு இயங்கிக் கொண்டிருந்தாலும், கட்சியின் மைய கவனம் மெதுவாக உதயநிதியை நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மூத்த தலைவர்களின் புகழ்ச்சிப் பேச்சுகள், அவரை எதிர்கால தலைவராக முன்வைக்கும் முயற்சிகள் ஆகியவை, தமிழக அரசியலில் குடும்ப ஆதிக்கம் மீண்டும் வலுப்பெறுகிறதா என்ற விவாதத்தை தூண்டும் விதமாக உள்ளன.

ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம், மக்கள் ஆதரவின் மூலம் தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதுதான். ஆனால், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் அரசியல் தொடர்ச்சியே முன்னிலைப்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழும்போது, அது அரசியல் கலாச்சாரத்தையே பாதிக்கக்கூடியதாக மாறுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் பின்தள்ளப்படுகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும் அபாயமும் உள்ளது.

இந்த நிலைமையில், முக்கியமான கேள்வி ஒன்று முன் நிற்கிறது: தமிழகம் மீண்டும் கொள்கை அரசியலுக்குத் திரும்புமா? அல்லது தனிநபர் மையப்படுத்தப்பட்ட வாரிசு அரசியல் வலுப்பெறுமா?

இறுதியில், இந்த விவாதங்களுக்கு முடிவு கட்டுவது வாக்காளர்களே. அவர்களின் தீர்ப்பே, தமிழகத்தின் அரசியல் திசையை நிர்ணயிக்கும் முக்கியமான சக்தியாக இருக்கும்.

அண்ணா பிறந்த காஞ்சியில் சத்தமே இல்லாமல் தவெகவின் விசில் சத்தம்.. வெளியான கருத்துக்கணிப்பு 

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 23 இல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் களம் காண்கிறது. அதே போல நாம் தமிழர் கட்சி, விஜய் ஆரம்பித்துள்ள தவெக மற்றும் சசிகலா & ராமதாஸ் அணி என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் இம்முறை ஐந்து முனை போட்டி நிலவுவதால், தேர்தலானது மிகவும் சவாலுடையதாகவும் வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத நிலையையும் உருவாக்கியுள்ளது. இதனையெல்லாம் தாண்டி பலரும் இம்முறை மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க முயற்சிக்கின்றனர். காலம் காலமாக நான், நீ என்று ஆண்டு வந்த 

திமுக மற்றும் அதிமுகவை தாண்டி ஆட்சியை பிடிக்க நாம் தமிழர் கட்சியும் தவெகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் “ஆயிரம் கோயில்களின் நகரமான” காஞ்சிபுரத்தில் ஐந்து முனை போட்டியில் தவெக தனது விசில் சத்தத்தை அதிகப்படுத்தி விட்டதை சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

காஞ்சிபுரம் தொகுதி:

கோயில்களின் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை, பாமக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எழிலரசன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2 லட்சத்து 76 ஆயிரம் வாக்குகள் உள்ள இத்தொகுதியில் வன்னியர் மற்றும் முதலியார் உள்ளிட்ட சமூக வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் தான் வேட்பாளர்களும் களமிறக்கப்படுகின்றனர்.

திமுகவுக்கு மைனஸ்:

திமுக சார்பில் இந்த தொகுதியில் நித்யா சுகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. களத்தை பொறுத்த வரையில் சிட்டிங் எம்.எல்.ஏவான எழிலரசன் மீது அதிருப்தி நிலவுவதாகவே வெளியான அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அடுத்து மேயர் மகாலட்சுமி  யுவராஜ்  மற்றும் ஒன்றிய செயலாளர் பிஎம் குமார் உள்ளிட்டோர் சீட் பெறுவதற்கான முயற்சியில் இருந்த நிலையில் நித்யா சுகுமாருக்கு கிடைத்துள்ளது இவர்களின் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் தொடர்ந்து தொகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது இந்த தேர்தலில் தீவிரமாக எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. பட்டுக்கு பெயரெடுத்த இங்கு பட்டு நூலின் விலை உயர்வு, இடைத்​தரகர்​களின் ஆதிக்​கம் உள்ளிட்டவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளது. அடுத்து ஆன்மீக தளமாக விளங்கும் இங்கு அதிகரிக்கும் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சாலைகள் அமைக்காமல் இருப்பதால் உருவாகும் வாகன நெரிசல், அடுத்து கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்லியல் துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை திமுகவுக்கு எதிராக அமையும் என்று கூறப்படுகிறது.

அதிமுகவின் சிக்கல்:

அதிமுக சார்பில் சோமசுந்தரம் இங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில் வன்னியர் சமுதாய வாக்குகள் இவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சமூக வாக்குகள் அனைத்தும் அவருக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் தான். பாமகவில் அப்பா மகன் இருவரும் தனித்தனியே தேர்தல் களத்தை சந்திக்கும் நிலையில் ராமதாஸ் அணியின் வேட்பாளர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாக்கு வங்கியை கொண்ட வன்னியர் சமூக வாக்குகள் பிரிவதால் அதிமுக வெற்றியை அது பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

காஞ்சியில் விசிலடிக்கும் தவெக: 

திமுக அதிமுக கோட்டையை தகர்க்கும் வகையில் தவெக வின் “விர்சுவல் வாரியர்ஸ்” அதி தீவிரமாக தங்களது கள பணியை செய்து வருகின்றனர். காஞ்சியில் தவெக சார்பாக (ஆர்.வீ.ஆர்) ஆர்.வீ . ரஞ்சித்குமார் போட்டியிடுகிறார். மாற்றத்தை நோக்கிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் காஞ்சி நகர மக்கள் இவருக்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக உள்ளூர் இன்ஸ்டாகிராம் சேனல் மற்றும் தனியார் செய்தி ஊடகங்கள் News7 Tamil மற்றும் மின்னம்பலம் எடுத்த கருத்து கணிப்பில் திமுக, அதிமுகவை கடந்து தவெகவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளனர். அந்தவகையில் திமுக அதிமுக கோட்டையான அண்ணா பிறந்த காஞ்சியில் தவெக விசில் சத்தம் எகிறும் என்று கூறப்படுகிறது.  

கண்டுகொள்ளாத நாதக:

நாதக சார்பில் வெற்றி செல்வி போட்டியிடுகிறார். அரசியல் விவாதங்கள் முதல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வரை நாம் தமிழர் கட்சியை பெரிதாக யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. மற்ற மூன்று கட்சிகளை பிரதானப்படுத்தி, மற்றவை என்ற இடத்தில் நாம் தமிழர் கட்சி சுருங்கி விட்டது என்றே சொல்லலாம்.

காஞ்சிபுரம் தொகுதியில் நிலவும் திமுகவின் உட்கட்சி பூசல், தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள், அதிமுகவின் கூட்டணி குழப்பம் உள்ளிட்ட காரணங்கள் அக்கட்சிகளுக்கு பின்னடைவாக அமைய தவெக வெற்றியை இங்கு உறுதி செய்கிறது. அந்த வகையில் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் தவெகவுக்கு கிடைக்கும் ஆதரவு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்து சற்று அச்ச நிலையிலேயே உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

“2021 வாக்குறுதிகள் எங்கே? 2026க்கு புதிய ‘மெகா’ வாக்குறுதிகளா?”

0

சென்னை: 2021 தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கே இன்னும் முழுமையான நிறைவேற்றம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக 2026 தேர்தலை முன்னிட்டு புதிய ‘மெகா’ திட்டங்களுடன் ஆட்சியாளர் தரப்பு முன்வருவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது உண்மையில் மக்கள் நலனுக்கான திட்டங்களா அல்லது வேறு நோக்கங்களுக்கானதா என்ற சந்தேகங்களும் சமூகத்தில் பேசப்படுகின்றன.

“சொன்னதைச் செய்வோம்… செய்வதைச் சொல்வோம்…” என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து விவாதம் நிலவுகிறது. அதிகாரப்பூர்வமாக பல சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நிலவரம் அதனை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுகின்றன.

கல்வித்துறையில், கல்விக்கடன் ரத்து மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற முக்கிய அறிவிப்புகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. மடிக்கணினிக்கு பதிலாக ‘டேப்லெட்’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும், அது பலரிடம் இன்னும் சென்றடையவில்லை என்பதும் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயத் துறையிலும் பல வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. நெல் மற்றும் கரும்புக்கு உயர்ந்த ஆதார விலை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்பதும், சர்க்கரை ஆலைகளின் நிலுவைத்தொகைகள் குறித்து தீர்வு காணப்படாததும் விவசாயிகளின் அதிருப்திக்கு காரணமாகியுள்ளது. மேலும், நில ஒருங்கிணைப்புச் சட்டம் போன்ற நடவடிக்கைகள் விவசாய நில பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்புகின்றன.

பெண்கள் நலத் திட்டங்களிலும் பல அறிவிப்புகள் நிறைவேறாமல் உள்ளன என விமர்சனங்கள் உள்ளன. மானியக் கடன்கள், சிறுதொழில் உதவிகள், அரசு வேலை வாய்ப்புகள் போன்ற பல வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாததால், பெண்கள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறாதது குறித்தும் அதிருப்தி நிலவுகிறது. அத்துடன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளும் முழுமையாக பரிசீலிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மின்கட்டண உயர்வு, புதிய இணைப்புகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் போன்றவை பொதுமக்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் உள்ளன. மேலும், ஊழலைத் தடுக்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளும் நடைமுறையில் பலவீனமடைந்துள்ளன என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்த நிலையில், 2026 தேர்தலை முன்னிட்டு ₹8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுவது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. பழைய வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில் புதிய திட்டங்கள் அறிவிப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மொத்தத்தில், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அவற்றின் நடைமுறைப்படுத்தல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறிவிப்புகளுக்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதே எந்த ஆட்சிக்கும் முக்கிய சவாலாக இருப்பது தெளிவாகிறது.

“குளத்தூர் கொடூரம்: ஒரு உயிர், பல கேள்விகள் – நிர்வாக அலட்சியத்தின் வெளிப்பாடு”

0

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் நடந்த 17 வயது மாணவியின் கொலைச் சம்பவம், ஒரு குடும்பத்தின் துயரத்தை மட்டுமல்லாமல், நிர்வாகத் தவறுகளின் தீவிரத்தையும் வெளிக்கொணர்கிறது. “எங்க புள்ளைய நாங்களேதான் தேடி எடுத்தோம்…” என்று உறவினர்கள் கதறிய குரல், ஒரு தனிப்பட்ட வேதனை அல்ல; அது அமைப்பின் செயலிழப்புக்கு எதிரான ஒரு கடும் குற்றச்சாட்டு.

கடந்த வாரம் மாலை, இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற அந்த மாணவி வீடு திரும்பாத நிலையில், மறுநாள் அருகிலுள்ள புதர்பகுதியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல்நிலை பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில், இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சம்பவம் நடந்த பிறகும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படாததால், குடும்பத்தினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தின் ஆரம்பத்திலேயே தேடுதல் நடவடிக்கைகள் தாமதமானது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் தாமாகவே தேடிச் சென்று உடலை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வழக்கமான நடவடிக்கைகளாக சில அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டாலும், அதனால் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது.

மேலும் அதிர்ச்சியளிப்பது, இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் முன்பே ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என்பது. இப்படிப்பட்ட நபர்கள் சமூகத்தில் சுதந்திரமாகச் சுழல்வதை கண்காணிக்கத் தவறிய அமைப்புகளின் பொறுப்பும் கேள்விக்குறியாகிறது.

இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக மட்டும் இல்லாமல், சமீப நாட்களில் மாநிலம் முழுவதும் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதினரும் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பெருமையாகப் பேசப்படும் சூழலில், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கின்றன. குறிப்பாக, புகார் அளிக்கப்பட்ட பிறகே வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள், காவல்துறையின் செயல்பாட்டை பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன.

 

போதைப்பொருட்களின் பரவல் மற்றும் கண்காணிப்பு குறைபாடுகள் போன்றவை இத்தகைய குற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது வெறும் சட்ட அமலாக்க பிரச்சினை மட்டுமல்ல, சமூக பாதுகாப்பின் அடிப்படை சிக்கலாக மாறியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது எந்த அரசின் முக்கிய பொறுப்பாகும். புள்ளிவிவரங்களைக் காட்டிலும், தரமான பாதுகாப்பு உணர்வை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இல்லையெனில், பாதுகாப்பு குறித்த வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே இருந்து விடும்.

டிஜிட்டல் உலகில் புதிய அத்தியாயம்.. வெர்ஸேவில் தலைமை மாற்றம்!!

0

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட VerSe Innovation நிறுவனம், தனது தலைமை தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரியாக (CPTO) Prasanna Prasad அவர்களை நியமித்துள்ளது. Dailyhunt, Josh, NexVerse.ai, Magzter, OneIndia போன்ற பிரபல டிஜிட்டல் தளங்களை இயக்கும் இந்த நிறுவனம், அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

புதிய பொறுப்பில், நிறுவனத்தின் பொறியியல், தயாரிப்பு மற்றும் தரவு அறிவியல் பிரிவுகளை ஒருங்கிணைத்து வழிநடத்துவது பிரசன்னாவின் முக்கிய பணி ஆகும். குறிப்பாக, அனைத்து தளங்களிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆழமாக இணைத்து, பயனர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச அனுபவம் கொண்ட பிரசன்னா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பக் குழுக்களை முன்னிலைப் படுத்தியுள்ளார். இதற்கு முன்பு Verve Group நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய அவர், ஏஐ மூலம் வணிக வளர்ச்சியை உயர்த்தியவர் என அறியப்படுகிறார்.

இந்த நியமனம் மூலம், படைப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் விளம்பரத் துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வரவும், பயனர்களுக்கு துல்லியமான உள்ளடக்க பரிந்துரைகளை வழங்கவும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நிறுவன இணை நிறுவனர் உமங் பேடி கூறுகையில், “இன்றைய டிஜிட்டல் சூழலில் ஏஐ முக்கிய சக்தியாக மாறியுள்ளது. தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்த பிரசன்னாவின் தலைமை எங்களுக்கு பெரும் பலம் தரும்” என்றார்.

பிரசன்னா பிரசாத் கூறுகையில், “பயனர்களின் அனுபவத்தை உயர்த்தவும், உள்ளடக்க தரத்தை மேம்படுத்தவும் தொழில்நுட்பம் முக்கிய பாலமாக செயல்பட வேண்டும். இந்த வளர்ச்சி கட்டத்தில் இணையுவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும் VerSe Innovation – நியமனம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

0

பெங்களூரு, மார்ச் 31, 2026 – VerSe Innovation நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கான நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் சுயாதீன இயக்குநராக P. R. Ramesh நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் ஆடிட் குழுத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட (Chartered Accountant) ஆன ரமேஷ், நிதி கண்காணிப்பு, நிறுவன ஆட்சி, ஒழுங்குமுறை ஆலோசனை மற்றும் நிர்வாக வழிநடத்தலில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். அவர் முன்பு Deloitte India நிறுவனத்தின் தலைவர் மற்றும் Deloitte Global Board உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

தன் தொழில்முறை வாழ்க்கையில், பல முன்னணி இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆட்சி முறைகள், அபாய மேலாண்மை, நிதி அறிக்கை தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், Air India, Cipla, Nestlé India, Larsen & Toubro உள்ளிட்ட பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

நிறுவன ஆட்சி துறையில் சிறப்பான பங்களிப்புக்காக 2022–23 ஆம் ஆண்டிற்கான “Best Independent Director” விருதையும் பெற்றுள்ளார். மேலும், SEBI, RBI, IRDA போன்ற முக்கிய அமைப்புகளின் ஆலோசனைக் குழுக்களிலும் பங்கேற்று கொள்கை உருவாக்கத்தில் பங்களித்துள்ளார்.

நிறுவனத்தின் இணை நிறுவனர் Umang Bedi கூறுகையில், “நிறுவன வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளம் வலுவான நிர்வாகமும் நிதி ஒழுங்குமுறையும் ஆகும். ரமேஷ் அவர்களின் அனுபவம் எங்கள் நிர்வாக தரத்தை மேலும் உயர்த்தும்” என்றார்.

இதற்கு பதிலளித்த ரமேஷ், “இந்தியாவின் டிஜிட்டல் துறையில் பெரிய அளவில் வளர்ந்துள்ள நிறுவனமாக VerSe உள்ளது. இந்த வளர்ச்சிக்கு இணையாக நிர்வாகம், நிதி கட்டுப்பாடு மற்றும் அபாய கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

VerSe Innovation நிறுவனத்தில், ரமேஷ் ஆடிட் குழுவை தலைமை தாங்கி நிதி வெளிப்படைத்தன்மை, உள்கட்டுப்பாடு, அபாய மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தன்மையை கண்காணிப்பார். இது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கும் முதலீட்டாளர் நம்பிக்கைக்கும் முக்கிய ஆதாரமாக அமையும்.

VerSe Innovation நிறுவனம் Dailyhunt, Josh போன்ற பிரபல செயலிகளை நடத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களின் மூலம் இந்தியாவின் பல மொழிகளில் உள்ள பயனர்களுக்கு தனிப்பயன் உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.

இந்த நிறுவனம் இந்தியாவின் உள்ளூர் மொழி டெக் துறையில் முன்னணி யூனிகார்ன் நிறுவனமாக திகழ்கிறது. மேலும், Google, Microsoft, Goldman Sachs உள்ளிட்ட பல முன்னணி முதலீட்டாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு

0

தமிழ்நாட்டுக்கு மாபெரும் முக்கியத்துவம்: மத்திய பட்ஜெட்டில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிவிப்பு

சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த யூனியன் பட்ஜெட், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு, தொழில்துறை விரிவாக்கம் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கான விரிவான திட்டங்களை முன்வைக்கிறது. இந்த அறிவிப்புகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை காட்டுகின்றன.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக இரண்டு அதிவேக ரயில் பாதைகள், ரயில்வே திட்டங்களுக்கு ₹6,600 கோடியை மீறும் நிதி, MSME களுக்கான ₹10,000 கோடி நிதி, ஆதிச்சநல்லூர் தொல்லியல் தள மேம்பாடு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

உள்கட்டமைப்பு மற்றும் ரயில்வே விரிவாக்கம்
நீண்டகால பொருளாதார முன்னேற்றத்திற்கு உள்கட்டமைப்பு முக்கிய அடித்தளம். இதை முன்னிறுத்தி, பட்ஜெட்டில் போக்குவரத்து இணைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு அதிவேக ரயில் பாதைகள்
சென்னை – பெங்களூரு
ஹைதராபாத் – சென்னை
இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், முக்கிய தென் இந்திய நகரங்களுக்கிடையிலான பயண நேரம் குறையும். தொழில்முறை நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நகர்வு எளிதாகி, வர்த்தகம் வலுப்பெறும்.

ரயில்வே நிதி உயர்வு
UPA காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக ஆண்டுக்கு ₹879 கோடி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது ₹6,600 கோடியை மீறும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்:
நிலுவையில் உள்ள ரயில் திட்டங்கள் விரைவாக நிறைவேற்றம்
இரட்டை பாதை அமைப்பு
ரயில் நிலைய மேம்பாடு
பாதுகாப்பு வசதிகள் மேம்பாடு
என பல திட்டங்கள் வேகமெடுக்கலாம்.
தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி
தமிழ்நாட்டின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

MSME களுக்கான ₹10,000 கோடி நிதி
கோயம்புத்தூர், திருச்சி போன்ற தொழில்துறை மையங்கள் இதனால் பெரிதும் பயனடையும். குறைந்த வட்டி கடன் மற்றும் செயற்பாட்டு ஆதரவால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் விரிவடைய வாய்ப்பு உள்ளது.

இந்திய செமிகண்டக்டர் மிஷன்
தமிழ்நாடு இந்த திட்டத்தில் முக்கிய பங்காளியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் சிப் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் தொழில்நுட்ப வளாகங்கள் இதனால் பயனடையலாம்.

பாரம்பரிய துறைகளுக்கும் ஆதரவு
துணிநூல் உற்பத்திக்கு ஊக்கத் திட்டங்கள்
தேங்காய் மற்றும் முந்திரி விவசாயிகளுக்கு ஆதரவு
கடலோர சமூகங்களுக்கான மீன்வள மேம்பாட்டு திட்டங்கள்
பண்பாட்டு மற்றும் சுற்றுலா மேம்பாடு
பொருளாதாரத்துடன் சேர்த்து பாரம்பரிய வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் மேம்பாடு
தமிழ்நாட்டின் முக்கிய தொல்லியல் தளமான ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து, அதை சர்வதேச பண்பாட்டு மையமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் சுற்றுலா
புலிக்காட் ஏரியில் பறவைகள் பார்வை பாதை
கொல்லிமலையில் நடைபயணம் பாதை
இத்திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு சேதமின்றி உள்ளூர் மக்களுக்கு வருமான வாய்ப்புகளை உருவாக்கும்.
செயல்படுத்தல் சவால்கள் மற்றும் அரசியல் விவாதம்
திட்ட அறிவிப்புகள் வரவேற்பைப் பெற்றாலும், நிலம் கைப்பற்றல் மற்றும் நிர்வாக அனுமதிகள் போன்ற தாமதங்கள் சவாலாக இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

மேலும், மத்திய–மாநில அரசுகள் இடையே நலத்திட்டங்களுக்கு யார் கௌரவம் என்ற விவாதமும் தொடர்கிறது. மத்திய அரசு சில திட்டங்களுக்கு மாநில அளவில் உரிய அங்கீகாரம் இல்லை என குற்றம்சாட்ட, மாநில அரசு கூட்டாட்சி அமைப்பு இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

தொழில் துறையின் எதிர்வினை
சென்னை தொழில்நுட்ப வட்டாரங்கள் – செமிகண்டக்டர் திட்டம் உலகளாவிய முதலீட்டை ஈர்க்கும் என நம்பிக்கை
கோயம்புத்தூர் தொழில் அமைப்புகள் – MSME நிதி சிறு தொழில்களுக்கு உதவும்
மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி வணிக அமைப்புகள் – ரயில் இணைப்பு மேம்பாட்டால் போக்குவரத்து செலவு குறையும்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் பரந்த அளவிலான வளர்ச்சி நோக்கைக் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்துறை ஊக்கம், பண்பாட்டு முதலீடு—இவை அனைத்தும் ஒருங்கிணைந்த வளர்ச்சி அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன.
ஆனால் அறிவிப்புகள் எவ்வளவு விரைவில் நடைமுறைக்கு வரும்? அதன் பலன்கள் எப்போது மக்களுக்கு கிடைக்கும்? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. செயல்படுத்தும் வேகம் மற்றும் திறனே இந்த திட்டங்களின் உண்மையான வெற்றியை தீர்மானிக்கும்.

‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?

போதையில்லா தமிழ்நாடு’ என்ற வாக்குறுதியை மீறி… மாநிலத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பரவல்?

போதையில்லா தமிழ்நாடு” என்ற அரசின் வாக்குறுதி குறித்து தற்போது பல தரப்புகளில் கேள்விகள் எழுகின்றன. மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் போதைப்பொருள் பறிமுதல் சம்பவங்கள், வன்முறை குற்றங்கள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள அதிர்ச்சி தகவல்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் காவல்துறையினர் மேற்கொண்ட பறிமுதல் நடவடிக்கைகள், மருந்து மாத்திரைகள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் பரவல் வேகமாக அதிகரித்திருப்பதை காட்டுகின்றன. 2023ஆம் ஆண்டில் 39,910 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது சுமார் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இது சட்டவிரோத விநியோகச் சங்கிலி விரைவாக விரிவடைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

“கஞ்சா வேட்டை” போன்ற பெரிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், செயற்கை போதைப்பொருட்கள் இளைஞர்களிடம் விரைவாக பரவி வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் 2023ல் 39,910 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2024ல் அது 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது. 10 முதல் 17 வயது சிறார்களில் 34% வரை போதைப்பொருள் பயன்பாடு இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. நாங்குநேரி இரட்டை கொலை உள்ளிட்ட சம்பவங்கள் போதைப்பொருள் தொடர்பு குறித்து கவலை எழுப்புகின்றன. பள்ளி வளாகங்கள் வரை போதைப்பொருள் சென்றடைவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் – வன்முறைக்கு இணைப்பு
மாநிலத்தின் பல மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு வன்முறை குற்றங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. 2026 மார்ச் 2ஆம் தேதி நாங்குநேரியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் இதை மேலும் தீவிரமாக்கியது. ஜான் மற்றும் திரிநாத் ஆகியோர், மது மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் இருந்ததாக கூறப்படும் குழுவினரால் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு 2023ஆம் ஆண்டு மாணவர் சின்னதுரை மீது நடந்த சாதி அடிப்படையிலான தாக்குதல் வழக்கில் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் குற்றம் புரிய வாய்ப்பு கிடைத்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த டிசம்பரில் திருத்தணியில் நான்கு சிறார்கள் வெளிமாநிலத் தொழிலாளியை தாக்கிய சம்பவமும் போதைப்பொருள் தாக்கம் குறித்து சந்தேகங்களை கிளப்பியது.

பள்ளி வளாகங்கள் வரை பரவும் போதைப்பொருள்
10 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களில் போதைப்பொருள் பயன்பாடு 34% வரை இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கூல் லிப்” போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கஞ்சா கலந்த சாக்லேட் போன்றவை பள்ளிகள் மற்றும் டியூஷன் மையங்களின் அருகே விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மாணவர்களுக்கு போதைப்பொருளை எளிதில் அணுகக் கூடிய சூழலை உருவாக்குகிறது.
சில விநியோகஸ்தர்கள் டிஜிட்டல் முறைபோன்ற விநியோக வலையமைப்புகள் மூலம் மாணவர் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக மாத்திரைகள் அனுப்புவதாகவும் கூறப்படுகிறது.

கடுமையான நடவடிக்கை அவசியம்
பறிமுதல் அதிகரிப்பு, இளைஞர் தொடர்பு, வன்முறை சம்பவங்கள் ஆகியவை மாநிலத்தின் போதை எதிர்ப்பு முயற்சிகள் குறித்து பொதுமக்கள் இடையே விமர்சனங்களை தூண்டியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுவது: விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் திடீர் சோதனைகள் மட்டும் போதாது. ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோக வலையமைப்புகளை முறியடிக்க வலுவான உளவுத்துறை நடவடிக்கைகள், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பள்ளி–கல்லூரி பகுதிகளில் தீவிர பாதுகாப்பு தேவை.

உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
போதையில்லா தமிழ்நாடு” என்ற முழக்கமே சவாலுக்கு உள்ளாகும் சூழல் உருவாகிறதா என்ற கேள்வி தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது.