வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2025
Home Blog

கோவை மதுரையில் சதி செய்யும் திமுக அரசு.. நயினார் சொன்ன சீக்ரெட்!!

0

DMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறது. பாஜக தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக எதிர்த்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதுவும் தற்சமயம் தேர்தல் நெருங்க இருப்பதால் அவர்களுக்குள் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்கான அனுமதியை திமுக அரசு மத்திய அரசிடம் கேட்ட போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவை பல்வேறு இடங்களில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த திட்டத்தை மத்திய அரசு மறுக்கவில்லை. விரிவான விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளது என்று விளக்கமளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கோவை மற்றும் மதுரை அதிமுக வசம் இருப்பதாலும், தற்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருப்பதாலும் அங்கு எந்த திட்டமும் சென்றடைய கூடாது என்று திமுக அரசு குறைவான தகவலை மட்டுமே அறிக்கையில் சமர்ப்பித்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு திட்ட அறிக்கையை அனுப்பியுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க போதிய இட வசதியை பெற்று தருவதாக திமுக அரசு இது வரை கூறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இவரின் இந்த கருத்து கொங்கு மண்டலத்தில் அதிமுகவிற்கு அவப்பெயர் பெற்றுத் தரும் நோக்கில் திமுக செயல்படுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த மெட்ரோ ரயில் திட்டம் சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கட்சி பெயரிலே கூட்டணியை அறிவித்த மல்லை சத்யா.. வைகோவை வீழ்த்த இது தான் சரியான வழி!!

0

TVK DVK: 2026 யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக இறங்கியுள்ளன. மக்களை சந்திக்கும் பணிகளும், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் விஜய் கட்சி துவங்கியுள்ளார். இவரது கட்சியான தவெக யாரும் எதிர்ப்பார்த்திடாத அளவு ஆதரவை பெற்றது. இதற்கு காரணம் விஜய்யின் பிரபலம் தான் என்ற விவாதம் நடைபெற்று கொண்டிருந்தது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் தவெகவின் வருகையிலிருந்தே மீளமுடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது புதிதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் வருகையையும் வரவேற்றிருக்கிறது. நேற்று தனது கட்சியின் பெயரை அறிவித்த மல்லை சத்யா அதற்கு திராவிட வெற்றிக் கழகம் என்று என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் பல்வேறு விவாதங்களுக்கு ஆளாக்கபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்-திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயருடன் ஒத்துப் போவதால், மல்லை சத்யா தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று யுகங்களும் பரவி வருகிறது. அதன் காரணமாக தான் முன் கூட்டியே யோசித்து தவெக கட்சியின் பெயரை போலவே தம் கட்சிக்கும் பெயர் சுட்டி இருக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுக கூட்டணியில் மதிமுக சற்று பின் தங்கிய நிலையில் இருப்பதால் மதிமுகவை வீழ்த்த விஜய் தான் ஒரே வழி என்று மல்லை சத்யா முடிவெடுத்து இருக்கிறாராம்.

பாஜக கூட்டணியில் மட்டும் தான் உள்ளது.. ஆட்சி இபிஎஸ் கையில்!! அதிமுகவின் டாப் தலை கொடுத்த பதில்!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மத காலமே இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகாரில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாஜக அடுத்த கட்டமாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.

இந்த கூட்டணி உறுதியானத்திலிருந்தே அதிமுகவை பாஜக ஆட்டி வைக்கிறது, பாஜகவிற்கு அடிமையாக அதிமுக இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்க்கட்சிகள் பொது மேடையிலேயே விமர்சித்து வந்தன. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் டெல்லி செய்வது இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போல அமைந்திருந்தது. மேலும் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் நடக்கும், தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று பலரும் கூறி வந்தனர்.

இந்நிலையில் கூட்டணி ஆட்சி, பாஜக ஆதிக்கம் போன்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை. இது குறித்து பேசிய அவர், கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. 

ராஜாஜியே அப்படி செய்யும் போது விஜய்க்கு என்ன.. விஜய்யின் இமேஜை காலி செய்த தமிழிசை!!

0

BJP TVK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்த விஜய் அதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். 2 மாபெரும்  மாநாடுகளையும், 5 தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்திய தவெக கரூர் சம்பவத்திலிருந்து பின்தங்கி இருந்தது. இந்நிலையில் தனது முதல் மாநாட்டிலேயே பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் திட்ட வட்டமாக கூறியிருந்தார்.

தற்போது வரை அந்த நிலையிலிருந்த்து பின் வாங்காமல் உள்ளார். விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியிருந்தாலும், பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை. மாறாக அவருடன் கைகோர்க்கவே ஆசைப்பட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையால், அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது.  தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு அதிமுக மட்டும் போதாது என்று நினைத்த பாஜக விஜய்யுடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதில் உறுதியாக இருந்தார்.

இதனால் இவ்வளவு நாட்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த பாஜக தலைவர்கள் தற்போது விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக ஒரு கட்சியே இல்லை என்ற நோக்கில் ஒரு கருத்தை கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பற்றி தரக்குறைவான கருத்தை பேசியது மட்டுமல்லாமல், விஜய் பாஜக கூட்டணிக்கு நோ சொல்லியதால் அதன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜி காங்கிரஸை வீழ்த்த வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்துடன் திமுக உடன் கூட்டணி அமைத்தார். ராஜாஜி போன்றவர்களே அவ்வாறு செய்யும் போது விஜய் போன்றவர்கள் திமுக எதிர்ப்பாளர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து ராஜாஜியுடன் விஜய்யை ஒப்பிட்டு பேசி அவ்வளவு பெரிய தலைவர்களே கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்கும் போது, இப்போது வந்த விஜய்க்கும் கூட்டணி அமைப்பதில் என்ன சிரமம் என்ற தோணியில்  அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் குறித்த தமிழிசையின் கருத்து அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பாமக.. இதெல்லாம் ரொம்ப ராங்!! அச்சத்தில் ஸ்டாலின்!!

0

DMK PMK: அடுத்த வருடம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை. இது திராவிட கட்சிகளுக்கு பொருந்தும். அதனால் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்து வருவதால், மூன்றாம் நிலை கட்சிகளிடம் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு காரசார விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் திமுக தங்களது கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது. ஒரு வேலை இப்போது இருக்கும் கூட்டணி பிரிந்தாலும், தேமுதிக, பாமக கூட்டணியை வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று திமுக திட்டம் தீட்டிய நிலையில் அந்த ஆசையும் தற்போது நிறைவேறாமல் போய் விட்டது.

முதலில் பாமகவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுகவிற்கு அப்பா-மகன் சண்டை பெரும் தடையாக உள்ளது. இதனால் ராமதாஸ், திமுக பக்கமும், அன்புமணி அதிமுக பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இதனை காரணமாக பாமக கூட்டணி உறுதியாகாமலே இருந்தது. ஆனால் நேற்று நடந்த தூய்மை பணியாளர் போராட்டத்தில் அதற்கு முடிவு கிடைத்துவிட்டது. தனியார்மயத்தை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  நேரில் சென்று ஆறுதல் அளித்த பாமக பொருளாளர் திலகபாமா, பொது மக்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் சமயத்தில் மட்டும், அப்பா-மகன் வேடம் போடும் ஸ்டாலின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கூறியிருந்தார். திமுகவை கடுமையாக எதிர்த்திருக்கும் இவரின் கருத்து, பாமக, திமுக உடன் கூட்டணியில் சேர போவதில்லை என்பதை தெளிவாக கூறியிருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. இந்த தொகுதி தான் வேண்டும்!! இதனால் அதிமுகவுக்கு தான் பாதிப்பு!!

0

ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பலரும் கூறுகின்றனர். பீகாரில் NDA கூட்டணி யாரும் எதிர்பார்த்திராத அளவு மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தற்போது தமிழகத்தில் நடைபெற போகும் தேர்தலுக்காக திராவிட கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தலை நோக்கி இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளனர்.  இந்நிலையில் பீகாரில் வெற்றி பெற்ற பாஜக தற்போது தமிழக தேர்தலில் முனைப்பை காட்ட தொடங்கியுள்ளது.

அந்த வகையில், அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் முக்கியமாக கொங்கு மண்டலத்தை அதிமுகவிடம் கேட்டு பெற வேண்டுமென பாஜக உறுதியாக உள்ளதாம். என்னதான் பீகாரில் பெரியளவில் பாஜக வெற்றி பெற்றாலும் அதற்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. இப்படி இருக்க பாஜகவிற்கு அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொண்டு மண்டலத்தை கொடுத்தால் அந்த பகுதியில் அதிமுக தோல்வியை தான் சந்திக்கும்.

அதிமுகவின் வாக்கு வாங்கி தற்சமயம் பிரிய தொடங்கியுள்ளதால், அது கொங்கு மண்டலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த சூழலில் கொங்கு மண்டலத்தை பாஜகவிற்கு ஒதுக்குவது சரியான முடிவு அல்ல என்று இபிஎஸ் யோசிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பீகாரில் வெற்றி பெற்றதை பகடை காயாக வைத்து பாஜக அதிமுகவிடம் சில நிபந்தனைகளை முன் வைத்து வருகிறது. இந்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் சம்மதிக்கவில்லை என்றால் அதிமுக-பாஜக கூட்டணி பிரிய நேரிடலாம் என்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுக்கெல்லாம் காரணம் விஜய் தான்.. டென்ஷன் ஆனா ஸ்டாலின்!!

0

DMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மூழ்கியுள்ளன. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. அதற்காக கடந்த  சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற தொகுதிகளில் இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்று அந்த பகுதிகளில் இரண்டாம் கட்ட தலைவர்களை இறங்கியுள்ளது. தோல்வியுற்ற இடங்களில் மக்களை கவரும் பணி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

திமுகவை அதிமுக கடுமையாக எதிர்த்து வரும் சுழலில் தற்போது திமுகவை எதிர்க்க தமிழக வெற்றிக் கழகம் என்னும் ஒரு புதிய சக்தியும் உருவெடுத்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனது அரசியல் எதிரி திமுக தான் என்று கூறி வருகிறார். மேலும் விஜய்க்கு யாரும் எதிர்பார்த்திடாத அளவு ஆதரவு இருந்ததால், இதனை பகடை காயாக பயன்படுத்த நினைத்தது திமுகவின் கூட்டணி கட்சிகள். அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தராவிட்டால் நாங்கள் தவெக கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று திமுக கூட்டணிகள் மறைமுகமாக கூறி வந்தன.

அது மட்டுமல்லாமல், இதனை நாட்களாக அமைதியாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும், சாதிய வன்கொடுமைகள் அதிகரித்தது விட்டது என்பது போன்ற கருத்துக்களை பகிர்வது திமுகவிற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இவர்களின் இந்த தொடர் கருத்தும், திமுகவிருக்கு எதிரான நடவடிக்கைகளும், ஸ்டலினுக்கு விஜய்யின் மேல் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் பாஜக.. அடிபணிவாரா விஜய்!!

0

TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கும் நிலையில், தேர்தல் களம் புதிய வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் வருகை. விஜய் புதிய கட்சி துவங்கியதிலிருந்தே அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இவரின் வருகை திராவிட கட்சிகளுக்கே சவால் விடும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக-பாஜக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்தது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தது மட்டுமல்லாமல், கரூர் விவகாரத்தை விசாரிக்க பாஜக சார்பில் தனி நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது.

இவை எதற்கும் அடிபணியாத விஜய், கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதை தெளிவாக கூறிவிட்டார். ஆனாலும் பாஜக விஜய் உடனான கூட்டணி பேச்சு வார்த்தையை கை விடுவதாக தெரியவில்லை. திமுக சார்பில் நடத்தப்பட்ட  அறிவு திருவிழாவில், கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் விஜய்யை பற்றியே விமர்சனத்தை முன் வைத்தனர். இதற்கு பதிலடியாக பேசிய விஜய் இது அறிவு திருவிழா இல்லை, அவதூறு திருவிழா என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த திமுகவின் துணை முதல்வர் உதயநிதி அறிவு இருக்கவன் அறிவு திருவிழா நடத்துறான் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது உதயநிதியின் கருத்து குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, இவர்களுக்கு மட்டும் தான் அறிவு இருக்கிறதா? மற்றவர்களுக்கு அறிவு இல்லை என்பது போல இவர்கள் பேசுகிறார்கள். அறிவாலயம் என்று பெயர் வைத்து கொண்டால் உங்கள் எல்லோருக்கும் அறிவு இருக்கிறது என்று அர்த்தம் ஆகி விடாது என்று அவர் பதிலடி கொடுத்திருக்கிறார். உதயநிதியின் கருத்து விஜய்யை விமர்சித்து இருக்கும் பட்சத்தில், தமிழிசை சௌந்தரராஜன் விஜய்க்கு ஆதரவாக பேசி இருப்பது, பாஜக மீண்டும் மீண்டும் விஜய் கூட்டணியில் இணைக்க முயற்சிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ் போட்டியிட போகும் தொகுதி இதுவா.. காங்கிரஸுக்கு ஆப்பு வைக்க போகும் முடிவு!!

0

ADMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் அதன் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வர விடாது என்ற கருத்து நிலவுகிறது. 

அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா போன்றோர் நால்வர் அணியாக உருவெடுத்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவர்கள் எந்த அணியில் இணைவார்கள் என்ற கேள்வியை பலரும் எழுப்பி வர, அதற்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ் திமுக பக்கம் சாய்வதாகவும் தகவல் வந்தது.

ஆனால், போடி தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ்யை இந்த முறை திமுக வீழ்த்தும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடியாக ஓபிஎஸ் அவரது கருத்தை கூறியிருந்தார். போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இந்த முறை திருவாடானை தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. திருவாடானை தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வென்றது. தற்போது அதனை பறிக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஓபிஎஸ்யின் இந்த வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மல்லை சத்யா இணைய போகும் கட்சி இது தான்.. வெளியான தகவல்!! ஷாக்கில் வைகோ!!

0

DMK DVK MDMK: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக தங்களது கூட்டணியை பலப்படுத்த கட்சிகளனைத்தும் முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் அதில் புதிய திருப்பமாக தோன்றியது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இவரின் வருகை அனைத்து கட்சிகளுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இந்த கணிப்பு கிட்ட தட்ட உறுதியாவது போலுள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அரசியல் வருகையிலிருந்தே மீள முடியாமல் தவிக்கும் அரசியல் களம், தற்போது மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவின் புதிய கட்சியை நோக்கி திரும்பியுள்ளது. திராவிட வெற்றிக் கழகம் என்னும் தனது கட்சி பெயரை இன்று அறிவித்த மல்லை சத்யா, அடுத்த கட்டமாக எந்த கட்சியுடன் கூட்டணி சேரப் போகிறார் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

இது குறித்து விவாதம் எழுந்த போது, அவர் திமுகவில் இணைய போவதாக தங்கள் வந்துள்ளது. மதிமுக பல வருடங்களாக திமுக கூட்டணியில் பயணித்து வரும் நிலையில், மதிமுகவிலிருந்து பிரிந்தாலும் திமுக கூட்டணியில் தான் தொடருவோம் என்பதை இவரது முடிவு உறுதிப்படுத்தியிருக்கிறது என்று பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மல்லை சத்யா திமுக உடன் தான் இணைவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.