ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog

டிடிவி தினகரனை நோஸ்கட் செய்த ஆர்.பி. உதயகுமார்.. இதெல்லாம் தேவையில்லாத கேள்வி!!

0

AMMK ADMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பாஜக கூட்டணியில் இணைந்த இவர், தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காமல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்றும் அழுத்தமாக கூறி வருகிறார். மேலும் தினகரன் புதிய கட்சி தொடங்கியதிலிருந்தே இபிஎஸ்யை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரின் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் இபிஎஸ்யை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இபிஎஸ் அவரை பற்றி அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்.

அண்மையில் கூட விஜய்-அதிமுக கூட்டணி குறித்து கூறிய தினகரன், விஜய் அதிமுக உடன் கூட்டணிக்கு சென்றால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரி ஆர்.பி உதய குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, அவரை பற்றி பேச வேண்டாமென இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார் என்று கூறினார். மக்கள் பணியில் கவனம் செலுத்தி பேச வேண்டும், அதை விட்டு விட்டு அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார். 

கூட்டணி கட்சிகளின் மூலம் விஜய்க்கு தூது அனுப்பிய இபிஎஸ்.. வெட்ட வெளிச்சமாகிய இபிஎஸ்யின் வீக்னஸ்!!

0

ADMK TVK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்ட  அதிமுக தற்போது அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கட்சியின் முன்னாள் தலைவர்கள் வழி நடத்தியது போல இபிஎஸ் கட்சியை வழி நடத்தவில்லை என அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தலைவர் பொறுப்பை ஏற்றதிலிறுந்தே அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் கட்சி மாறுவதையும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும் இருந்தனர்.

தற்போது 2026 தேர்தலுக்காக அதிமுகவும் தேசிய கட்சியான பாஜகவும் கூட்டணியில் உள்ள நிலையில், வேறு எந்த கட்சியும் உறுதி கூட்டணிக்கு செய்யப்படவில்லை. இதனால் தமிழகத்தில் பலம் வாய்ந்த வேறு கட்சியை தேடிவந்த இபிஎஸ்க்கு ஜாக்பாட் அடித்தது போல உதயமானது கட்சி தான் தமிழக வெற்றிக் கழகம். இபிஎஸ்யின் நல்ல நேரம், விஜய் திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறிவிட்டார். ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று அறிவித்தார்.

இதனால் சற்று பதற்றமடைந்த இபிஎஸ் விஜய்யை சமாதானபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். அப்போதும், விஜய் பாஜக கூட்டணியை விட்டு விலகினால் தான் உங்களுடன் கூட்டணி வைக்க முடியும் என்று உறுதியாக கூறி விட்டதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பாஜகவிற்கு தூதாக செயல்பட்டு, விஜய்யுடன் போனில் பேசியதாக சொல்லப்பட்டது.

இவரை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இணைந்த தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும் திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விஜய்க்கு மறைமுகமாக அழிப்பு விடுத்துள்ளார். இவரின் இந்த அழைப்பு அதிமுகவின் தூதாக இவர் செயல்ப்படுவதை நிரூபிப்பதோடு, இபிஎஸ்யின் வீக்ஸ்யும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை.. விஜய்யை வைகோ நேரடி விமர்சனம்!!

0

MDMK TVK: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சிகள் விஜயின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள நிலையில், வைகோவும் தமது கருத்தை வெளிப்படுத்தினார். கூட்ட நெரிசல் குறித்து விஜய்க்கு முன்னரே எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், விபத்து நிகழ்ந்ததும் அவர் உடனே சென்னைக்கு திரும்பிச் சென்றது சரியான நடவடிக்கை அல்ல. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால் அது மனிதநேயமான செயல் ஆகியிருக்கும் என அவர் விமர்சித்தார்.

மேலும், அதிக கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என வைகோ வலியுறுத்தினார். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அரசியல் பேரணிகளிலும் சமூகக் கூட்டங்களிலும்  மீண்டும் நடைபெறாமல் இருக்க நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து வைகோ தன்னம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. கரூர் சம்பவம் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. புதிதாக களமிறங்கும் விஜய் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற வாதம் பொருந்தாது என அவர் உறுதியாக கூறினார்.

இரண்டு அமைச்சர்கள் இருந்தும் பயனில்லை.. மேயர் விவகாரத்தில் கோட்டை விட்ட திமுக அரசு.. செல்லூர் ராஜு சாடல்!!

0

ADMK DMK: மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் 54 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முனிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, திமுக மற்றும் தமிழக அரசை சாடினார். அவர் தனது உரையில், அதிமுக கடந்த 31 ஆண்டுகளில் சாதாரண மக்களுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் பதவி வழங்கி சமத்துவத்தை நிலைநிறுத்தியது.

பெண்களுக்கு உரிய உரிமை அளித்தது இந்த கட்சி தான். திமுகவிலிருந்து பிரிந்து உருவான அதிமுக இன்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உயர்ந்துள்ளது என்றார். அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என ஸ்டாலின் கூறுவது பொய். வைகை கரையில் சாலை அமைத்ததும், 170 கோடி மதிப்பிலான கோரிப்பாளையம் சந்திப்பு பாலத்திட்டத்தையும் வடிவமைத்ததும் அதிமுக ஆட்சிதான். ஆனால் திமுக அரசில் அது இன்னும் நிறைவேறவில்லை.

மதுரை மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டு போராடி 200 கோடி சொத்து வரி ஊழலை வெளிக்கொண்டு வந்தனர் என்றார். மேலும் அவர், திமுக ஆட்சியில் கல்யாண மண்டபங்கள், வீடுகளுக்கு அநியாயமான வரி விதிக்கப்பட்டது. அதன் விளைவாக மேயர் இந்திராணி ராஜினாமா செய்ய நேரிட்டது. மேயரின் கணவர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு வாரங்களாகியும் புதிய மேயரை தேர்வு செய்ய முடியாத திமுக இரண்டு அமைச்சர்கள் இருந்தும் செயலிழந்துள்ளது. 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது நாட்டுக்கே ஆபத்து என்றும் கூறினார். அவர் கடைசியாக, அதிமுக கூட்டணிக்காக ஒருவரையும் வற்புறுத்தாது. எங்கள் கொள்கைகளுக்கு இணங்க யார் வந்தாலும் வரவேற்போம் என்றும் தெரிவித்தார். 

ஒரு கட்சியையே கொத்தாக தூக்கிய இபிஎஸ்.. அப்புறம் என்ன ஆட்சி நம்ம கையில தான்.. கொண்டாட்டத்தில் அதிமுக!!

0

ADMK TMC: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெற்றி பெறுவதற்காக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடனும் கூட்டணி அமைக்கும் அமைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. மேலும் தமிழகத்தில் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்படும் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு அதிமுக தலைமையை வலியுறுத்தி வருவதாக பேசப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு அந்த கட்சி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் மாபெரும் திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுகவுடன் யாரும் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. அனைத்து பிரச்சாரங்களில் மாபெரும் கட்சி, மிகப்பெரிய கூட்டணி என்று இபிஎஸ் சொல்லி கொண்டாலும், இது நாள் வரை பாஜகவை தவிர எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் தற்போது அதனை தகர்த்தெறியும் வகையில், அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியை தமாகா தலைவர் ஜி.கே வாசன் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில்  இடம் பெற்ற தமாகா கூட்டணி 32 தொகுதியில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றிருக்கிறது. தமாகா தனது தேர்தல் வரலாற்றிலேயே அதிக தொகுதிகளை வென்ற கூட்டணி என்றால் அது அதிமுக கூட்டணி தான் என்பதும்  குறிப்பிடத்தக்கது. 

பாமகவில் அன்புமணிக்கு எண்டு கார்டு கொடுத்த ராமதாஸ்.. இனிமே அக்காவின் ஆட்டம் ஆரம்பம்!!

0

PMK: பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும்  இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. ராமதாஸின் மூத்த மகளின் மகனான முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராமதாஸ் வழங்கினார். இதில் உடன்பாடில்லாத அன்புமணி மேடையிலேயே தனது  எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நீண்டது.

இதனால் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதிவியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. அன்புமணியின் தலைவர் பதவி இன்னும் சிறிது காலத்தில் முடிவடைய போகிறது என்று ராமதாசின் ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக, தருமபுரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் தனது மூத்த மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவர் பதவியில் நியமித்திருக்கிறார் ராமதாஸ்.

செயல் தலைவர் பதவியை ராமதாஸ் ஏற்காததால் இந்த முடிவு என்று ராமதாஸ் கூறியுள்ளார். காந்திமதி ஏற்கனவே பாமக நிர்வாக குழு உறுப்பினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கட்சி இரண்டாக பிரிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும், பாமகவின் அதிகாரம் என்னிடம் தான் உள்ளது என்று ராமதாஸ் கூறிவந்தார். தற்போது இவரின் இந்த முடிவு அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த செய்தி அன்புமணிக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அன்புமணியின் அடுத்த  கட்ட நடவடிக்கை  என்னவாக இருக்கும் என்று ஒட்டு மொத்த அரசியல் களமும் உற்று நோக்கி வருகிறது. 

10 ரூபாய் பாலாஜி போய் 40 ரூபாய் கமிஷனுக்கு ஆளான திமுக.. நயினார் சரமாரி தாக்கு!!

0

BJP DMK: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணம் இன்று மாலை பெரம்பலூரிலும், அதன் பின்னர் அரியலூரிலும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்தின் போது தமிழக அரசின் ஆட்சியில் நிலவி வரும் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளேன்.

தஞ்சாவூரில் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை நேரில் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறும் நிகழ்வும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நெல்லின் கொள்முதல் ஈரப்பதம் 17 சதவீதமாக உள்ளது. அதை 22 சதவீதமாக உயர்த்தி வாங்குவதற்கான ஆய்வுக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யவும் இன்று மற்றும் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் என்றார். மேலும் அவர், தமிழக அரசு நெல் கொள்முதலை சரியாக கையாளவில்லை. உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் தாமதம் செய்வது விவசாயிகளை பாதிக்கிறது.

இதற்கிடையில் கொள்முதல் பணியில் 40 ரூபாய் வரை கமிஷன் கேட்கப்படுவதாக புகார்கள் வருகின்றன என குற்றஞ்சாட்டினார். அதே நேரத்தில், தென் மாவட்டங்களில் நடைபெறும் கனிம வளக் கொள்ளையில் ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்காற்றுவதாக அன்புமணி கூறியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். திருநெல்வேலி மட்டுமல்ல, தமிழகமெங்கும் ஆளும் கட்சியினர் கல்குவாரி லாரிகளுக்கு குறிப்பிட்ட தொகை வசூலித்து வருகின்றனர். அதிகாரிகளை மதிக்காத கூட்டணியே திமுக கூட்டணி என நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார். 

அண்ணாமலையை துரத்தும் ரசிகர்கள்.. அன்பு தொல்லையில் தத்தளிக்கும் அண்ணாமலை.. விஜய்க்கு அடுத்து இவர் தானோ!!

0

BJP: தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவர் பாஜகவிற்கு வந்த பிறகு தான் அந்த கட்சிக்கு தமிழகத்தில் நல்ல மரியாதையை கிடைத்தது எனலாம். அவரின் ஆணி தனமான பேச்சு, சாமர்த்தியமான சிந்தனை போன்றவை தமிழக மக்களின் மனதில் அவருக்கு ஒரு தனி இடத்தை பிடித்து தந்தது. அந்த வகையில் அண்மையில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், அவர் பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பித்து அதற்கான கொடியினை அறிமுகம் செய்திருந்தனர்.

இந்த செய்தியறிந்த அண்ணாமலை, என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு மிக்க நன்றி, ஆனால் என் பெயரில் நற்பணி மன்றம் துவங்குவது, கொடியை வெளியிடுவது போன்ற செயல்பாடுகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருந்தார். ஆனாலும் அவரது ஆதரவாளர்கள் அதனை கைவிடுவதாக தெரியவில்லை. தற்போது புதிதாக நெல்லையில் அண்ணாமலையின் பெயரில் நற்பணி மன்றத்தை திறக்கவும், அதன் கிளைகளை விரிவுபடுத்தவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதன்  திறப்பு விழாவிற்கு அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும் வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இது குறித்து அண்ணாமலை நற்பணி மன்றத்தை  தொடங்கிய வேல்கண்ணன் பேசிய போது, இதில் அரசியல் ஏதுமில்லை. அவர் மீது எங்களுக்கு உள்ள அன்பினால் மட்டுமே நற்பணி மன்றம் தொடங்கினோம். இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். இந்த மாறியான நிகழ்வு விஜய்க்கு அடுத்து அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருவதை நிரூபிக்கிறது என்று மதிப்பிடப்படுகிறது. 

அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை.. விஜய் மௌனத்தின் பின்னணி இது தானா.. வெளிவந்த உண்மை!!

0

TVK ADMK: கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில், 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 1 மாதமாகியும் அதனை பற்றிய செய்தி வந்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணமான கட்சியின் தலைவர் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விஜய்யின் குரலாக ஒளித்து வருவதை அறிய முடிகிறது. 

மேலும் அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இது குறித்து விஜய் எதுவும் கூறாத  நிலையில், விஜய்க்கு இதில் விருப்பமில்லை என்று அவரை சார்ந்தவர்கள் கூறி வந்தனர். மேலும் அதிமுக-தவெக கூட்டணி அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், யாரை கேட்டு இபிஎஸ் இதனை உறுதி செய்தார் என்று விஜய் கோபப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த சமயத்தில் விஜய்யின்  கூட்டணி குறித்து அவரை தவிர அனைவரும் பேசி வருகின்றனர்.

விஜய் மௌனம் காப்பதன் பின்னணி என்னவென்று ஆராயும் போது, இபிஎஸ் தலைவர் பதவியை ஏற்றதிலிருந்தே அதிமுக பலவீனமடைந்ததை உணர்ந்த விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. மேலும் திமுக தனது அரசியல் எதிரி என்று பகிரங்கமாக கூறிய விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணி இல்லையென்று சொல்ல நீண்ட நேரம் ஆகாது என்றும் பேசப்படுகிறது. 

மோதிக்கொண்ட துரைமுருகன்-செல்வப்பெருந்தகை.. திமுக கதை முடியும் நேரம் வந்துவிட்டது போல.. ஸ்டாலின் வேதனை!!

0

DMK CONGRESS:  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறுவது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. அதனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது போதாதென்று, தமிழக வெற்றிக் கழகத்தையும் கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆளுங்கட்சியாக திமுகவும் தன்னுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்பட்டது.ஆனால் காங்கிரஸோ விஜயுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வந்தது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செம்பரபாக்கம் ஏரியில் நீர் திறக்க பட்டதை என்னிடம் ஏன் அறிவிக்கவில்லை, மக்கள் பிரதிநிதிகளிடம் ஒரு வார்த்தை சொன்னால் என்ன என்று நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டார். இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், செல்வபெருந்தகை போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இப்படி நடந்து கொள்வதற்கு வருத்தப்படுகிறேன்.

உண்மை என்னவென்று அறிந்து பேச வேண்டும் என்று கூறியிருந்தார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்டு வலியுறுத்து வரும் நிலையில், துரைமுருகன் இவ்வாறு கூறியது, காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளையே அதிகம் சார்ந்திருக்கும் திமுக தலைமைக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மதிப்பிடப்படுகிறது.