சனிக்கிழமை, டிசம்பர் 6, 2025
Home Blog

அமித்ஷாவிடம் மல்லுக்கட்டும் தினகரன்.. அதிமுகவை பாஜக இயக்குவது குறித்து ஓபன் டாக்!!

0

BJP AMMK: அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து தனிக்கட்சி ஆரம்பித்தார். இதன் பின்னர் பாஜக கூட்டணியில் தொடர்ந்து வந்த இவர், அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த உடன், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அமமுக பாஜக கூட்டணியில் இணையாது என்று திட்டவட்டமாக கூறி வந்தார். இவர் கூட்டணியிலிருந்து விலகிய உடன் இவருக்கு ஆதரவாக ஓபிஎஸ், சசிகலா போன்றோர் இருந்தனர். ஆனால் தற்போது இவர் தனித்து விடப்பட்டது போல் தெரிகிறது.

இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்ற கருத்துக்கு ஓபிஎஸ்யும் துணை நின்றதால் இவர்கள் இருவரும் ஒன்றாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஓபிஎஸ்யை அழைக்க, அவரும் டெல்லி சென்று அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஓபிஎஸ் டிடிவி தினகரனை விட்டு விலகி பாஜக உடன் சேரப்போகிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தினகரனும் அமித்ஷாவை சந்திப்பார் என்ற சந்தேகம் எழுந்த போது, இது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், நான் அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. என்னை அழைக்கவும் மாட்டார்கள் நானும் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவை பாஜக இயக்குகிறதா என்ற கேள்விக்கு, அதை பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். பாஜகவின் பிடியில் அதிமுக இல்லையென்றால் அதனை இவர் நேரடியாக கூறி இருக்கலாம். அதனை தவிர்த்து தெரியாது என்று இவர் கூறிய பதில் அதிமுகவை பாஜக தான் இயக்குகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நான் அமித்ஷாவை சந்திக்க மாட்டேன் என்று கூறியது பாஜகவிற்கும், இவருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை எடுத்துக்காட்டியுள்ளது.

அடுத்த டார்கெட்டை பிக்ஸ் பண்ண செங்கோட்டையன்.. தலையசைத்த அதிமுக தூத்துக்குடி மா.செ.!!

0

TVK ADMK: அதிமுகவின் முக்கிய அமைச்சராகவும், கோபிச்செட்டி பாளையத்தை கோட்டையாகவும் கொண்ட செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், முதலில் அவரது பதவிகள் பறிக்கபட்டது. பின்னர் அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இவரது அடுத்த கட்ட நடவடிக்கையை அரசியல் களமே உற்றுநோக்கி கொண்டிருந்தது. அப்போது தான் இவர் தவெகவில் இணைந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

அதிமுகவிலிருந்து இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளார்கள். அவர்கள் யார் என்பதை பற்றி இப்போது கூற முடியாது என்று பகீர் கிளப்பினார். அதற்கான வேளையில் ஈடுபட்டுள்ள செங்கோட்டையன் முதலில், அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்து கிருஷ்ணணை தவெகவில் இணைத்துள்ளார். அடுத்ததாக தூத்துக்குடி பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தூத்துக்குடியின் மாவட்ட செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன், இபிஎஸ்யின் வருகைக்கு பிறகு, அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு டம்மி பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இதனால் இவர் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பது அம்பலமானது.

செங்கோட்டையன் முதலில் குறிவைப்பது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் என்பதால், அவரின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது செல்லப்பாண்டியன் என்பது தெளிவாகியுள்ளது. செங்கோட்டையன் செல்லப்பாண்டியனிடம் தவெகவில் இணையும் படி கூறியதாகவும், அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நீங்கள் தவெகவில் சேர்ந்த உடன் தூத்துக்குடி மா.செ. பொறுப்பும், எம்எல்ஏ பதவியும் வழங்குவது என்னுடைய பொறுப்பு என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். இதனால் கூடிய விரைவில் செல்லபாண்டியன் தவெக இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டு.. செங்கோட்டையனுக்கு மகுடம் சூட்டு!! விஜய் போட்ட உத்தரவு!!

0

TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்க்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முன்னணி கட்சிகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என் கணிக்கப்படுகிறது. அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின், பின்தங்கிய நிலையிலிருந்த தவெக, தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டோம் என்பதை தெளிவுப்படுத்தியது.

இதனை தொடர்ந்து SIRயை எதிர்த்து போராட்டம், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு போன்றவற்றை நடத்திய தவெகவுக்கு, ஜாக்பாட் அடித்ததை போல அமைந்த நிகழ்வு தான் செங்கோட்டையனின் சேர்க்கை. தவெகவில் சேர்ந்தவுடன் இவருக்கு, தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையன் வருகையால் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஓரங்கட்டபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜயுடன் நேரடி தொடர்பில் இருப்பவரும், தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விஜய்யை விட அதிகளவில் ஊடக வெளிச்சத்தில் இருந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த.

இந்நிலையில் கரூர் சம்பவத்தில் இவர் தலைமறைவானதிலிருந்தே விஜய்க்கு இவர் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது என தவெக நிர்வாகிகள் கூறினர். இப்படி இருந்த சமயத்தில் செங்கோட்டையனின் வரவு புஸ்ஸி ஆனந்தின் மதிப்பை குறித்து விட்டது என்பது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையனின் வருகையால் புஸ்ஸி ஆனந்த இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தவெகவில் இருப்பதால், விஜய்  புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டி விட்டார் என்று பலரும் கூறுகின்றனர். விஜய்யின் இந்த மாற்றத்தால் ஆனந்த் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

தவெகவுக்கும் எனக்கும் தான் போட்டி.. விஜய் தொகுதியில் போட்டியிடும் வலுவான வேட்பாளர்!!

0

TVK NTK: முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் விஜய் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். தவெக ஒன்றரை வயதை மட்டுமே எட்டியுள்ள நிலையில் அதற்கான ஆதரவும், ஆரவாரமும் பெருமளவில் உள்ளது. இந்நிலையில் தவெகவில் பலரும் இணைந்து வர, அவர்களுக்கு கட்சியில் என்ன பொறுப்பு வழங்கலாம் என்பதில் விஜய் மும்முரமாக உள்ளார். அதிமுக, திமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். ஆனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண் ராஜாவை தவிர்த்து மற்ற யாரையும் மக்களுக்கு தெரியாது.

இதனால் திராவிட கட்சிகளில் இருக்கும் தலைவர்களை மக்கள் நியாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களையும் உயர்த்த வேண்டும் என விஜய் முயற்சித்து வருகிறார். இவ்வாறான நிலையில் தான் 234 தொகுதிகளுக்கும் தவெக சார்பில் வலுவான வேட்பாளர்களை தேடும் பணியில் விஜய் ஈடுபட்டுள்ளார். இப்படி இருக்கும் சமயத்தில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. “வி” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்ற செய்தி பரவியது.

ந்நிலையில் விஜய்யை எதிர்த்து அதிமுக, திமுக, நாதக போன்ற முன்னணி கட்சிகளிலிருந்து யார் போட்டி போட போகிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்த நிலையில், நாதகவின் கொள்கை பரப்பு செயலாளரான சாட்டை துரைமுருகன் விஜய் எந்த தொகுதியில் நிற்கிறாரோ அதே தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார். இவரின் இந்த நிலைப்பாடு அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே விஜய் போட்டியிடும் தொகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய வேட்பாளர்கள் தவெகவை எதிர்த்து போட்டியிட போவது உறுதியாகியுள்ளது.

நாஞ்சில் சம்பத் விஜய்யிடம் கேட்ட முக்கிய பொறுப்பு.. ராஜ் மோகனுக்கு புல்ஸ்டாப்!!

0

TVK: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவருக்கு பெருகி வரும் ஆதரவை கண்கூடாக பார்க்க முடிகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட போகிறது என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து அந்த கட்சியில் இளைஞர்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தான் மக்களை சந்திக்கும் பணியை தொடங்கிய விஜய் 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்தார். ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெக வெளியில் தலை காட்டமலிருந்தது. இதனை தொடர்ந்து தவெக சார்பில் சிறப்பு பொதுக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றதை உணர்த்தியது.

விஜய்க்கு அரசியலில் ஆதரவு அதிகளவில் இருந்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற காரணத்தை வைத்தே அவரை பின்னுக்கு தள்ளப்பார்த்தனர். இந்நிலையில் தான்  50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அதன் வலிமையை கூட்டினார். இவரை தொடர்ந்து திமுகவில் தலைமை கழக பேச்சாளாராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். இவர் ஆரம்பத்திலிருந்தே விஐய்க்கு ஆதரவு தெரிவித்து வந்ததால், இவர் தவெகவில் இணைவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான்.

தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு விசியங்களை பகிர்ந்த இவர், தவெகவின்  பிரச்சார செயலாளர் பதவியை விஜயிடம் கேட்டதாக கூறியுள்ளார். இந்த பொறுப்பில் ஏற்கனவே ராஜ் மோகன் இருக்கும் நிலையில் இவரும் இந்த பதவியை கேட்டிருப்பது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கும், புஸ்ஸி ஆனந்த்க்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தகவல் எழுந்த நிலையில், தற்போது இந்த சவாலையும் விஜய் எவ்வாறு எதிர் கொள்ள போகிறார் என்பது தெரியவில்லை.

அதிமுக முன்னாள் அமைச்சரை லாக் செய்த செங்கோட்டையன்.. கொண்டாட்டத்தில் தவெக!!

0

ADMK TVK: இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளிலும், தொகுதிப் பங்கீட்டிலும் மும்முரம் காட்டி வருகின்றன. மேலும் முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் கட்சி மாறி வருவது வழக்கமாகிவிட்டது. அதிலும் முக்கியமாக அதிமுகவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் திமுகவில் சேர்ந்து அந்த கட்சிக்கு வலிமையை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் புதிய திருப்பமாக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்திலிருந்தே சுமார் 50 ஆண்டு காலமாக அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும், இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம் என செங்கோட்டையன் கூறியதன் விளைவாக அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து சில காலம் அமைதியாக இருந்த செங்கோட்டையன் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து இன்னும் சிலர் தவெகவில் இணைய இருக்கிறார்கள்.

அந்த பணியை நான் செய்து முடிப்பேன் என்று கூறினார். அவர் கூறியதை போலவே, இபிஎஸ் மீது அதிருப்தியில் இருக்கும் சில அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தான் அதிமுகவின் தற்போதைய கன்னியாகுமரி எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் தவெகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்த இவர் தற்போது தவெகவில் இணைந்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த உதயநிதி ஸ்டாலின்.. கூட்டணிக்கு அச்சாரமிட்ட பேச்சு!!

0

DMK AMMK: தமிழகத்தில் தற்சமயம் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, திமுகவும் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக பேசப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைய வாய்ப்பிருப்பது போல, அந்த கட்சிக்கு ஆதரவாக பேசியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருப்பதை ஏற்க மறுத்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தனது எல்லா உரைகளிலும், துரோகம் வீழ்த்தப்படும், எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கபடுவார் என்று கடுமையாக கூறி வந்தார்.

பாஜகவிலிருந்து வெளியேறிய இவர், தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரின் செயல்பாடுகள், திமுக, நால்வர் அணி, தவெக அனைத்திற்கும் ஆதரவு அளிப்பது இருந்ததால், அமமுகவின் கூட்டணி கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று தினகரன் எல்லா இடத்திலும் கூறி வந்த கருத்தை, தற்போது துணை முதல்வர் உதயநிதியும் முன்மொழிந்துள்ளார்.

செஞ்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து பேசிய இவர், வழக்கம் போல அதிமுகவையும், பாஜகவையும் வஞ்சித்து விட்டு, ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று தினகரனுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலேயே இருக்கிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தினகரனுக்கு பாஜக உடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இவர் விரைவில் திமுக கூட்டணியில் இணைவார் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது.

அதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதுடன், மக்கள் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இபிஎஸ்யின் செயல்பாடும் உள்ளது. அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அக்கட்சிக்கு பேரிழப்பை ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர்.

ஆனாலும் இபிஎஸ்க்கு தனது பதவி மேல் இருக்கும் ஆசையால் தொடர்ச்சியாக பலரையும் நீக்கி வந்தார். அதிலும் முக்கியமாக அவரை முதல்வராக்கிய சசிகலாவையும், மற்றும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை நீக்கினார். இது மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் பாஜக உடன் மிகவும் இணக்கமாக இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது என கறாராக கூறி விட்டதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்த வந்த சசிகலாவிடம், அதிமுகவிற்கு அமித்ஷா தான் ஒருங்கிணைப்பாளரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள் என்பதிலும் தேர்தல் நேரத்தில் தெரியவரும். நீங்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை அமித்ஷா தான் மேற்கொண்டு வருகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அதிமுகவில் புதிய தலைமை.. இபிஎஸ்யை ஓரங்கட்ட பாஜக போடும் பிளான்!!

0

ADMK BJP: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதியளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக தற்சமயம் அதிமுகவை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதனை தரை மட்டமாக்கும் நோக்கில் உள்ளது. மேலும் அதிமுகவின் வருகையால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார்கள். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீகத்தை அதிகரித்த அண்ணாமலையின் பதவி பறிக்கபட்டதற்கும் இபிஎஸ் தான் காரணம்.

இதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாது, பாஜகவை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் கூட அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தொடர்ந்தால் அது தேர்தல் முடிவில் பாதகத்தை ஏற்படுத்தும் என பாஜக நினைப்பதால், பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் ஒரு அணியை திரட்டி, அந்த அணியில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தான் ஒபிஸ்யும், அண்ணாமலையும் தனித்தனியாக சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளனர் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் செயலால் வருத்தப்பட்ட சசிகலா.. இப்படி பண்ணுவாருனு நினைக்கல!!

0

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவையே கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரை மட்டுமல்லாது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் சிலர் இபிஎஸ்யின் தலைமை பிடிக்காத காரணத்தினால் தானாக கட்சியிலிருந்து விலகினர். இவ்வாறு கட்சி பல அணிகளாக பிரிந்து கிடந்தது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் இபிஎஸ்யிடம் கூற, அப்போதும் கூட அவர் நீக்கியவர்களை கட்சியில் சேர்க்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் அதிமுகவின் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பேசு பொருளானது. இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, அவர் தவெகவில் இணைவது பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று கூறினார். இத்தகைய நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் என்பதால், அவரது நினைவிடத்திற்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்த வந்தார்.

அப்போது செங்கோட்டையனின் சேர்க்கை குறித்து கேட்ட போது, அவர் தவெகவில் சேர்ந்த பின் நான் அவரிடம் பேசவில்லை என்று கூறி பகீர் கிளப்பினார். மேலும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலாவும் வந்திருந்தார். அவரிடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒருவர் மீது இருக்கும் கோபத்தால் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுக்க கூடாது எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இப்படி செய்வதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறினார். செங்கோட்டையனின் பதவி பறிப்பின் போது இவர்கள் மூவரும் உடனிருந்த நிலையில், இவர்களுக்கு செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் விருப்பமில்லை என்பதை இந்த பதில் தெளிவுபடுத்துகிறது.