புதன்கிழமை, டிசம்பர் 3, 2025
Home Blog

செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லா.. ஒரே சந்திப்பில் வெளிவந்த உண்மை!! அதிருப்தியில் விஜய்!!

0

DMK TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சு வார்த்தையும் தொடங்கபட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திராவிடக் கட்சிகளின் உள் வட்டாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது வருகின்றன. அதிலும் முக்கியமாக அதிமுகவில் தொடரும் பிளவுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.  அதிமுக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருந்து வரும் சூழலில், அங்கு அதன் செல்வாக்கை அடியோடு சறுக்கும் வகையில் முக்கிய அமைச்சர்களின் விலகல் தொடர்ந்து வருகிறது.

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமைக்கு எதிரானவர்களுடன் சேர்ந்ததால் கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டார். இதன் பின்னர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அமித்ஷா சொல்லி தான் அவர் தவெகவில் இணைந்தார் என்று எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் விமர்சித்து வந்தனர்.

விஜய் பாஜகவை எதிரி என்று கூறியதால், செங்கோட்டையன் மூலம் விஜய்யை வீழ்த்த பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்தும் வலுப்பெற்றது. இதனை செங்கோட்டையன் அறவே மறுத்திருந்தார். இந்நிலையில் இது குறித்து, பாஜக மாநில தலைவர் நயினாரிடம் கேட்ட போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து பேசி விட்டு தான் செங்கோட்டையன் தவெகவிற்கு சென்று இருக்கிறார்.

என்ன பேசிவிட்டு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லாக தவெகவிற்கு சென்று இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறது. தவெகவில் சேந்த பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவும், திமுகவும் ஒன்று தான் என்று கூறி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட போது திமுக அவரை கட்சியில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலையின் இறுதி முடிவு.. டிசம்பரில் புதிய ரூட்!! பாஜகவிற்கு விழப் போகும் அடி!!

0

BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் அதன் பணிகளை விரைந்து செய்து வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் மக்கள் மனதில் தங்களை நிலைநிறுத்தும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அமைப்பதற்கு முன்பு, மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தான் இபிஎஸ் பாஜக கூட்டணியில் சேர்ந்தார்.

அதன் படி, அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின் அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாததால் பாஜக மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வருவதாக பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக இவர் புதிய கட்சி துவங்க போகிறார் என்ற வாதமும் வலுப்பெற்றது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுகவின் பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அண்ணாமலை டிசம்பரில் புதிய கட்சி ஆரம்பிக்க போகிறார். அதன் பின் விஜய் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சில மாதங்களாகவே அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்க போகிறார் என்ற செய்தி பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவர் கூறிய கருத்து அதனை மேலும் வலுப்படுத்துவது போல அமைந்துள்ளது. பாஜகவிற்கு தமிழகத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின் பாஜகவிற்கான ஆதரவு சற்று அதிகரித்தது. இந்த சமயத்தில் அண்ணாமலை கட்சி தொடங்க இருப்பது பாஜகவிற்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆளுங்கட்சியில் நாளை நடக்க போகும் புதிய திருப்பம்.. நீயா நானா போட்டிக்கு தயாரான முதல்வர்!!

0

DMK CONGRESS: சுமார் 10 வருடங்களுக்கு பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுக, இந்த முறையும் அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதிமுகவை போல் இல்லாமல் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் பரஸ்பர உறவை பேணி பாதுகாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. அதிமுகவின் கூட்டணி பலவீனத்தை பயன்படுத்த நினைத்த திமுகவிற்கு கூட்டணி கட்சிகளும் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் விசிகவிற்கு அடுத்தபடியாக முக்கிய கட்சியாக அறியப்படுவது காங்கிரஸ் தான். இந்நிலையில் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வந்த காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவுக்கு பின்பு அமைதியாகிவிட்டது. தமிழக தேர்தலுக்காக, 5 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ் தலைமை, நாளை ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தையில், கடந்த தேர்தலை விட 2 மடங்கு அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் இவர்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் திமுக தலைமையோ பீகார் தேர்தலில் தோல்வியடைந்ததை மையப்படுத்தி குறைந்த தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் மறுக்க திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே காங்கிரஸ் விஜய் கூட்டணியில் சேரப்போவதாக கூறப்படும் நிலையில் காங்கிரசின் கோரிக்கைக்கு திமுக மறுத்தால் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து கழக குரல் எழுந்து வரும் வேளையில், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை திமுக கூட்டணியின் முடிவை தீர்மானிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளரை தவெக பக்கம் இழுத்த செங்கோட்டையன்.. செம்ம குஷியில் விஜய்!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் முன்னணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் எல்லா ஊடகங்களிலும் விஜய்யின் தவெக பற்றிய செய்தி தான் தலைப்பு செய்தியாக உள்ளது. மற்ற கட்சியில் கூட நிர்வாகிகள் தான் கட்சி மாறி இணைந்து வருகின்றனர். ஆனால் தவெகவில் முக்கிய அமைச்சர்கள், அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் இணைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் முக்கியமாக அதிமுகவில் 50 ஆண்டு காலம் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பேசு பொருளானது. அதிமுக ஒருங்கிணைய  வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனின் நிபந்தனை மறுக்கப்பட்டதால், பிரிந்தவர்களை ஒன்று சேர்ப்பேன் என்று செங்கோட்டையன் சபதம் எடுத்தார். தவெகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை, அதற்கான வேலைகளை செய்து வருகிறார்.

கொங்கு மண்டலத்தில் ஒருவரும், டெல்டா மாவட்டத்தில் ஒருவரும் தவெகவில் சேர இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், தற்போது அதில் புதிய திருப்பமாக ஓபிஎஸ்யின்  தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனுடன் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் ஓபிஎஸ்யின் ஆதரவாளர் என்பதாலும், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்பதாலும், இபிஎஸ்யின் தலைமையை கடுமையாக எதிர்ப்பவர் என்பதாலும் இவர் தவெகவில் இணைவார் என்று கணிக்கப்படுகிறது.

திமுகவின் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக.. முழிக்கும் ஸ்டாலின்!! ஹேப்பி மோடில் விஜய்!!

0

DMK TVK: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார். ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது திமுக-தவெக என்ற நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்து வரும் திமுகவை பகைத்து கொண்டது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

இந்நிலையில், விஜய் தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், முதல்வர் பதவி போன்றவற்றிற்கு ஆசைப்படுவதை பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் விஜய்யையும், அவரது தொண்டர்களையும் அரசியல் அறிவு இல்லாதவர்கள் தற்குறிகள் போன்ற தகாத வார்த்தைகளால் கிண்டலடித்து வந்தனர். தவெகவுக்கு திமுக அரசியல் எதிரியாக இருக்கும் பட்சத்தில் இவ்வாறான வார்த்தைகளை தவெக தொண்டர்கள் மீது பயன்படுத்த கூடாது என திமுகவின் எம்எல்ஏ எழிலன் பொது நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இது திமுகவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. தவெகவுக்கு ஆதரவாக கருத்து கூறியதால் கூடிய விரைவில், இவர் தவெகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, திமுகவின் முக்கிய அமைச்சர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று கூறியதும், தவெகவுக்கு ஆதரவாக பேசியதற்காக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உள்ளரங்கு மக்கள் சந்திப்பில் விஜய் எழிலனுக்கு நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

கரூர் துயரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட மனு!! ஆடிப்போன விஜய்!!

0

DMK TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக விஜய் மாற்றியுள்ளார். இவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2 மாபெரும் மாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய்க்கு அவரது அரசியல் வாழ்க்கையை அடியோடு வீழ்த்தும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். விஜய் பிரபலமான நடிகர் என்பதால் அவரை காண கூடிய கூட்டம் காரணமாக 41 பேர் உயிரிழந்ததுடன், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த செய்தி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த அசம்பாவிதம் திமுகவின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜியின் தொகுதியில் நடைபெற்றதால் இதற்கு திமுக அரசு தான் காரணம் என தவெக கூற, தவெகவின் அரசியல் அறியாமை தான் காரணம் என திமுக அரசு கூறி வந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர, திமுக அரசு தனி நபர் குழுவை அமைத்தது. ஆனால் ஆளுங்கட்சி மீது தவெகவிற்கு சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை திமுக அரசு அமைத்த குழு விசாரிக்க கூடாது, சிபிஐக்கு கை மாற்ற வேண்டும் என விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஏற்ற நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து வரும் சிபிஐ, நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனா, மதியழகன், நிர்மல் குமார் போன்றோரிடம் சுமார் 18 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வந்த தமிழக அரசு தற்சமயம், கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கூடாது என உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு இதனை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யவும், இந்த குழுவின் பணிகள் தொடர அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கரூர் சம்பவத்தில் திமுக அரசின் சதி இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

0

AMMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் அரங்கு வேகமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய உடன் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டார். 

இதனையடுத்து 1 வருடத்திற்கு முன்பு அதிமுக பாஜக கூட்டணியில் சேரும் போது, தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இது நிறைவேறாத நிலையில், அண்மையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தினால் தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் கூட்டணியிலிருந்து விலகினார்கள். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் ன்றாக இணைந்தது பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி இருந்த நிலையில் தான் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து தினகரன், ஓபிஎஸ், சசிகலா மூவரும் தவெகவில் இணைவார்கள் என்று கருதப்பட்ட சமயத்தில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவியவில்லை. விஜய் உடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தினகரன் கூறி வந்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு விஜய் தினகரனை கருத்தில் கொள்ளவில்லை என்ற வாதமும் வலுத்து வருகிறது. விஜய்யை வைத்து இபிஎஸ்யை பழிவாங்க வேண்டும் என்று நினைத்த தினகரனுக்கு விஜய்யின் செயல்பாடு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன் பாஜகவிற்கு கொடுத்த வாக்கு.. விரக்தியில் விஜய்!! குஷியில் அமித்ஷா!!

0

TVK BJP: 2026 தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருகிறது. இது அனைவரது மத்தியிலும் சிரிப்பை வரவழைத்தது.

இது மட்டுமல்லாமல், பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் கூறியது அவரது அரசியல் வாழ்க்கைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. விஜய் எதிரி என்று கூறிய இரண்டு கட்சிகளும் விஜய் விமர்சிக்காமல் இருந்தன. பின்னர் திமுக விஜய்யை மறைமுகமாக விமர்சிக்க ஆரம்பித்தது. ஆனால் பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் தெளிவாக இருந்தார். தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு சிறிதளவும் இல்லாத காரணத்தினால், இங்க வலுப்பெற வேண்டுமென பாஜக முயற்சித்து வரும் சமயத்தில், இதற்கு தடையாக அதிமுக, திமுக இருக்கிறது.

இதனால் அதிமுக உடன் கூட்டணி அமைத்து அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவின் அரசியல் எதிரியாக வலம் வரவேண்டும் என்ற நோக்கில் பாஜக உள்ளது. இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தது, பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வெளியிலிருந்து விஜய்யை வீழ்த்த முடியாது என்பதை அறிந்த பாஜக, செங்கோட்டையன் மூலம் தவெகவை தரைமட்டமாக்க திட்டம் தீட்டி உள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பாஜக சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தார் என்பது உறுதியாகிறது.

இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.. பாஜகவின் முக்கிய புள்ளி பர பர பேட்டி!!

0

ADMK BJP: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் எவ்வளவு முயன்றும் அது பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கே இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது.

பாஜக இந்திய அளவில் மிக பெரிய கட்சி என்பதால், தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால் இங்கு அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் கூறி வந்தனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜகவிற்கு அதிமுக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைத்து தங்களுடைய வலுவான தடத்தை பாதிக்கலாம் என பாஜக நினைத்தது. ஆனால் தமிழகத்தில், வெற்றி பெரும் வரை தான் கூட்டணி. அதன் பிறகு ஒற்றை தலைமை என்ற முறை தான் நீடித்து வருகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்ற மரபே கிடையாது என்று தொடர்ந்து கூறி வந்தார்.

அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தாலும், அதன் உள் வட்டாரத்தில் சில முரண்பாடுகள் நிலவிய வண்ணம் உள்ளன. இப்படி இருக்கும் சமயத்தில் அதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையிலும், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நோக்கிலும், பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார். NDA வெற்றி பெற்றால் தனி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் கூட்டணி ஆட்சி என்ற முடிவிலோ இருந்து பாஜக பின் வாங்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது.

தவெகவில் சேர்ந்ததும் உடனிருந்தவர்களை மறந்த செங்கோட்டையன்.. வருத்தத்தில் டிடிவி தினகரன்!!

0

AMMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அரசியல் களத்தை அதிர வைக்கும் வகையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. இவருக்கு சினிமாவில் அதிகளவு ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ரசிகர் கூட்டம் அத்தனையும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாக மாறியது வியப்பில் ஆழ்த்தியது. விஜய்க்கான ஆதரவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது.

ஆனாலும் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்த நிலையில் அதனை முறியடிக்கும் வகையில், அதிமுகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவரின் இந்த இணைவு தவெகவிற்கு மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் கோரிக்கை நிறைவேறாமல் போனதால், தவெகவில் சேர்வதற்கு முன்பு இவர் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் தான் இருந்தார்.

பதவிகள் பறிக்கப்பட்ட போதும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட போதும் செங்கோட்டையனுக்கு முழு ஆதரவை தெரிவித்தது இவர்கள் மூவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்த நிலையில் தான் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் தவெகவில் சேர்ந்த கையுடன், இவர்கள் மூவரையும் இணைக்கும் செயலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக செங்கோட்டையன் சில செயல்களை செய்து வருவது போல் தெரிகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து 5 நாட்கள் ஆன நிலையில், இவர்கள் மூவரும் இன்னும் விஜய்யுடன் கை கோர்க்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, தவெக கூட்டணியில் சேருமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இதுவரை என்னை அழைக்கவில்லை என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் இதற்கு முன் ஒரு முறை, செங்கோட்டையன் தவெகவில் சேர்வது பற்றியோ, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது பற்றியோ என்னிடம் எதுவும் கூறவில்லை என்று தினகரன் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த கருத்தும், செங்கோட்டையனின் நடவடிக்கையும் தவெகவில் சேர்ந்த உடன் உடனிருந்தவர்களை மறந்து விட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.