சனிக்கிழமை, நவம்பர் 22, 2025
Home Blog

திமுகவில் மறைந்து போன காங்கிரஸ். உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்!!

0

DMK CONGRESS: பீகாரில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் பேசப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் பீகாரில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது பீகாரில் மட்டுமல்ல அனைத்து மாநிலத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதன் மதிப்பு குறைந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரம் போன்றவற்றை வலியுறுத்தி வந்தன.

ஆனால்  தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் அமைதியாகிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும், திமுக கூட்டணியில் அதன் நிலை குறித்தும் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் காங்கிரஸுக்கு ஒன்னும் புதுசு இல்ல என்று கூறும் காங்கிரஸ், விஜய்யை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் பீகாரில் தோற்றத்தை அதிமுகவை விட அதிகம் விமர்சித்தது திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக தான் காங்கிரஸை அதிகம் விமர்சித்துள்ளது என்ற இவரது கூற்று, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பதை நிரூபித்திருக்கிறது. பீகாரில் தோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலை நம்பி இருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் மதிப்பு குறைந்தால், அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இருக்கும் நிலைமையில் விஜய்யுடனும் கூட்டணி சேர காங்கிரஸ் யோசிப்பதால், தமிழக தேர்தலிலும் அதன் நிலை கேள்விக்குறியாகும் என்றே பலரும் கூறுகின்றனர்.

விஜய்யின் வீக்கெண்ட் பயணம் தொடருமென அறிவித்த தவெக.. பொரிந்து தள்ளும் நெட்டிசன்கள்!!

0

TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யால் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சி துவங்கப்பட்டது. இந்த கட்சிக்கு இளைர்களின் ஆதரவு அதிகளவில் இருந்தது. இது விஜய்க்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இந்நிலையில் 2026 தேர்தலை எதிர்நோக்கி விஜய் பரப்புரையை மேற்கொண்ட போது, கரூரில் எதிர்பாராத விதமாக 41 இழப்புகள் நிகழ்ந்து விட்டன. இதற்கு திமுக அரசின் சாதி தான் காரணம் என்று தவெக தொண்டர்கள் கூற, தவெகவின் அறியாமை தான் காரணம் என்று திமுகவை சேர்ந்தவர்கள் கூறிவந்தனர்.

இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்தும் அதனை ஏற்க்காத விஜய் சிபிஐ விசாரணை வேண்டுமென மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், தவெக சார்பில் SIRயை எதிர்த்து போராட்டம், சிறப்பு பொதுக்கூட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் தவெக மீண்டும் உயிர் பெற தொடங்கியுள்ளது.

அந்த வகையில், நாளை காஞ்சிபுரத்தில், விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த சந்திப்பு முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு மட்டுமே என்பதை தவெக தெளிவாக கூறியுள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு QR கோடின் மூலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை, வார இறுதி விடுமுறை தினத்தில் நடைபெறுவதால், கரூர் சம்பவத்திற்கு பின்னும் கூட  விஜய் வீக்கெண்ட் பயணத்தை கைவிடவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

சீட் கொடுத்த உங்க கூட கூட்டணி வெச்சிக்கணுமா.. ட்விஸ்ட் வைத்து பேசிய பிரேமலதா!!

0

ADMK DMDK: 2026 காண தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்களை சந்திக்கும் வேலைப்பாடுகளும், கூட்டணி குறித்த பேச்சும், தொகுதி பங்கீடும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் தங்களது கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறது. பாமகவில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேமுதிக மட்டும் கூட்டணியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது.

தேமுதிக பிரச்சாரத்தில்  அதிமுக  அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும், பிரேமலதாவும் சந்தித்து பேசிக்கொண்டதால் தேமுதிக அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதே போல் நேற்று நடந்த பிரச்சாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் விஜய் உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இவ்வாறு கூட்டணி குறித்த செய்தியை பிரேமலதா மிகவும் பொறுமையாக கையாண்டு வருகிறார். இந்நிலையில் தேமுதிக பரப்புரையில் பேசிய அவர், அதிமுக எங்களுக்கு சீட் தருவதாக கூறி விட்டது, அதற்காக அதனுடன் கூட்டணி என்று சொல்லி விட முடியாது.

இந்த சீட்டை நாங்கள் 2025 இல் தருவார்கள் என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர்களுடன் கூட்டணி என்பதை இப்போது சொல்லிவிட முடியாது என்று கூறினார். இவரின் இந்த கருத்து இபிஎஸ் சீட் தராததால் தேமுதிக இன்னும் அதிமுக மேல் கோபத்தில் தான் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது. மேலும் துரோகம் செய்தவர்களுடன் எப்படி கூட்டணி என்று சொல்ல முடியும் என்பதையும் பிரேமலதா தெளிவாக கூறியிருக்கிறார்.

தவெகவிற்கு ஷிஃப்ட் ஆனா அதிமுக எம்.எல்.ஏ.. தவிடு பொடியாகும் இபிஎஸ் தலைமை!!

0

ADMK TVK: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக இருந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமர்வது என்பதில் தொடங்கிய சண்டை இன்னமும் யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முந்தியடித்த கட்சிகளெல்லாம் தற்போது அதிமுக என்றாலே யோசிக்கிறது. அது மட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சியில் இணைந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதற்கெல்லாம் இபிஎஸ்யின் தலைமை தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்த கூற்று உண்மை என்பது போல தான் அதிமுகவின் நடவடிக்கையும் உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் விஜய் கட்சி துவங்கி இருக்கிறார். இவர் அரசியலில் நுழைந்ததிலிருந்தே முன்னணி கட்சிகளை சேர்ந்த பலரும் தவெகவில்  இணைந்து வருகின்றனர். அதிலும் முக்கியமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசானா தவெகவில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இவரின் இந்த இணைவு அதிமுகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் அதிமுகவிலருந்து பலரும் விலகி வருவதால் இபிஎஸ்யின் தலைமையின் மேல், அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக இன்னும் பலர் அதிமுகவை விட்டு விலகி வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் இணைவதற்கு ஆயத்தமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.. ஒரே போடாய் போட்ட திமுக கூட்டணி கட்சி!!

0

MDMK DMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஆளுங்கட்சியை நிலவும் உட்கட்சி பிரச்சனையும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகாரும் தான். இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென என பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது தான் அமைச்சர்கள் மீதான புகார்.

இதனால் தங்களை நிரூபிக்க அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு திமுகவின் உள்ளகத்தில் சச்சரவு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது புதிதாக திமுக கூட்டணியில் பல வருடங்களாக பயணித்து வரும் மதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என்று தலைமையிடம் கேட்டுள்ளோம் என்று கூறிய அவர், எல்லா இயக்கங்களுக்கும் தனிப்பட்ட முறையில் சின்னம் உண்டு.

அதில் போட்டியிட வேண்டுமென்பதே எங்களுடைய கருத்து, இது குறித்து எங்கள் தலைமையும், திமுக தலைமையும் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றால் அது திமுகவின் வெற்றியாகவே கருதப்படும், இதனை மதிமுக விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

எங்க வீட்டு பிள்ளை கூட தான் கூட்டணி.. ஓப்பனாக பேசிய பிரேமலதா!!

0

TVK DMDK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி பற்றிய பேச்சுகளும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, மக்களை சந்திக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையம், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதே போல் தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரயை மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஜனவரி 9 ஆம் தேதி தேமுதிக சார்பில் கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய மாநாடு ஒன்று நடக்க இருக்கிறது. துரோகம் இழைத்தவர்களை வீழ்த்தும் வகையில் இந்த மாநாடு அமையும் என்று பிரேமலதா கூறியிருந்தார். மேலும் இந்த மாநாட்டில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்பதையும் அறிவிக்கப்போவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில், பரப்புரையில் பேசிய பிரேமலதா, விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தது தவெக-தேமுதிக கூட்டணியை உறுதிப்படுத்தி இருக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

விஜய் குறித்து பேசிய அவர், விஜய் எங்கள் வீட்டு பிள்ளை. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. விஜயகாந்தை போலவே விஜய்யும் அரசியலில் சாதிக்க வேண்டும். விஜய்க்கு எப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு, கடலூர் மாநாட்டிற்கு முன்பே பிரேமலதா கூட்டணியை அறிவித்து விட்டதாக பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் விஜய்யை விளாசிய இவர் தற்போது விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பது, விஜய் ஆட்சியில் பங்கு என்று கூறியதால் தான் என்ற கருத்தும் வலுப்பெறுகிறது.

இபிஎஸ்க்கு எதிராக தனி அணியை உருவாக்கும் பாஜக.. நால்வருடன் இணையும் அதிமுக முக்கிய புள்ளி!!

0

ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது அடியை எடுத்து வைத்துள்ளது பாஜக. பீகாரில் பெற்ற மாபெரும் வெற்றியை தமிழகத்திலும் பெரும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் தேவை. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றோர் நால்வர் அணியாக திரண்டு அதிமுக தலைமைக்கு எதிராக நிற்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நால்வர் அணி உருவாக பாஜக தான் காரணம் என்று பலரும் கூறி வந்தனர். அது ஏனென்றால், அதிமுக பல பிரிவுகளாக இருந்தால் தமிழகத்தில் அதிமுகவின் வாக்குகள் சிதறும். இது பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக பிரிந்தவர்களை ஒன்றிணைத்து, அதிமுகவில் இன்னும் மீதமிருக்கும் முக்கிய தலைவர்களை இந்த நால்வர் அணியுடன் இணைத்து விட்டால், இபிஎஸ் பலவீணமடைந்து விடுவார். அப்போது வேறு வழியில்லாமல் அவர்களை அதிமுக கூட்டணியில் சேர்த்து தான் ஆக வேண்டும். இது தான் பாஜகவின் திட்டம் என்று தகவல் பரவியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது தான் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரனின் பதவி விலகல். இவர் சில தினங்களுக்கு முன்பு கட்சி பணியை தொடர முடியாத காரணத்தினால், அடிப்படை உறுப்பினர் போன்ற எல்லா பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதினார். இதன் பின் இவர் எந்த கட்சியிலும் இணைய மாட்டார் என்று பலரும் கூறி வந்த சமயத்தில், தற்போது அவர் பாஜகவில் இணையப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜகவில் இணைந்த சில தினங்களில் இவர் நால்வர் அணியுடன் இணைந்து இபிஎஸ் எதிராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் இந்த முயற்சி இபிஎஸ்யை கீழிறக்குவதற்கான திட்டம் என்றே பார்க்கப்படுகிறது.

அன்புமணிக்கு ஆப்பு வைக்கும் ராமதாஸின் பிளான் பி.. பரபரக்கும் தேர்தல் களம்!!

0

PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தமிழக கட்சிகள் அனைத்தும் தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகின்றன. அந்த வரிசையில் பாமக முதலிடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். அதிமுக, திமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவினாலும், அந்த கட்சிக்கு யார் தலைமை என்பதில் ஒரு தெளிவு உள்ளது. ஆனால் பாமகவில் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடுநிலையில் உள்ள தொண்டர்கள் யார் பக்கம் நிற்ப்பதென்று  தெரியாமல் திணறுகின்றனர். இந்த சண்டை உச்சத்தை எட்டிய நிலையில், இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி வந்தனர். இந்நிலையிலும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இனி அன்புமணிக்கு கட்சியில் இடமில்லை, வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது அது ராமதாஸுக்கே யூடர்ன் அடித்துள்ளது.

கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் கூறியதை ஏற்காத ராமதாஸ் இதனை சட்டரீதியாக எதிர்  கொள்வதாக கூறியிருந்தார். இந்த பிரச்சனை பெரிதாகி கொண்டே போவதால், தேர்தல் சமயத்தில் கட்சியை, தேர்தல் ஆணையம் முடக்கி விட்டால் சிரமம் என்றுணர்ந்த ராமதாஸ் ஐயா பாமக என்ற பெயரில் தனி கட்சி துவங்க போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இதற்காக 100 பேரிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் பணியும் நடந்து வருகிறதாம். ராமதாஸின் இந்த அதிரடி முடிவு, அன்புமணிக்கு பாதகத்தை தான் ஏற்படுத்துமென்று ராமதாஸின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

நீங்க பீகாரில் வின் பண்ண நாங்க தான் காரணம்.. பாஜகவை சூடேற்றிய அதிமுக அமைச்சர்!!

0

ADMK BJP: 2026யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தனது கவனத்தை தமிழக தேர்தலில் திருப்பியுள்ளது. மத்திய அரசில் பாஜக பலமாக இருந்தாலும் தமிழகத்தில் அதனால் நுழைய முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இறுதியில் அது தோல்வியிலேயே முடிந்தது.

தமிழகத்தில் நிலைபெற வேண்டுமென நினைக்கும் பாஜக, இந்த முறை தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வதற்காக திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளது. அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் இருவரும் இணைந்துள்ளனர். ஆனால் அப்போதும் கூட இருவருக்குள்ளும் வெளி வராதா சச்சரவுகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தீனி போடும் வகையில்  அமைந்துள்ளது செல்லூர் ராஜுவின் கருத்து.

பீகாரில் பாஜக வெற்றி பெற்றது குறித்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி தான் பாஜக பீகாரில் வெற்றி பெற்றது என்று கூறியுள்ளார். அவர்கள் வெற்றி பெற்றதற்கு நாங்கள் தான் காரணம் என்று கூறிய இவரின் இந்த கருத்து பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியான பாஜக அதிமுகவால் தான் வெற்றி பெற்றது என்ற இவரது கருத்துக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பாஜக-அதிமுக கூட்டணியில் சச்சரவு நிலவி வரும் வேளையில் இவரின் இந்த பேச்சு அதனை பெரிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.

விஜய் கூட்டணியில் இணையும் புதிய கட்சி.. உடைத்து பேசிய கட்சி தலைவர்!!

0

TVK PT: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்க்கு மாறாக இந்த முறை அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். இந்த முறை அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்ககளிளேயே திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டியாக வந்தது விஜய் பார்த்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

இதனால் விஜய் இணையும் கூட்டணி தான் வெற்றி பெரும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் விஜய் தவெக எந்தக் கூட்டணியிலும் இணையாது, கூட்டணிக்கு தவெக தான் தலைமை தாங்கும் என்று திட்ட வட்டமாக கூறி விட்டார். இது வரை விஜய் உடன் கூட்டணி சேர்வது குறித்து எந்த கட்சியும் பேசாத நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விஜய் கருத்தை முன் வைத்து பேசி இருப்பது, புதிய தமிழகம் -தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய போகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய அவர், பீகாரை போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென கூறியுள்ளார். இது போன்று ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் புதிய தமிழகம் எந்த கட்சியுடன் கூட்டணி சேரும் என்பதை ஜனவரியில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். விஜய் அவர்கள் எங்களுடன் கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் தரப்படும் என்று கூறியதும், கிருஷ்ணசாமி கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று கூறியதும் ஒத்து போவதால் புதிய தமிழகம் தவெக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.