வியாழக்கிழமை, டிசம்பர் 11, 2025
Home Blog

தவெக-வைத்தியலிங்கம்.. அவர் செங்கோட்டையன் மாதிரி இல்ல!! தினகரன் சொல்வதென்ன!!

0

AMMK TVK ADMK: 2026 இல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக கட்சிகளும் தீவிரமாக உழைத்து வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுகவும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளிடம் விவாதித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்ற, அது பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது.

மேலும், இந்த கட்சியில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் முக்கிய அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பேன் என கூறி இருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கம் தவெகவில் இணைய போவதாக தகவல் பரவி வந்தது. இது குறித்து வைத்தியலிங்கம் எந்த கருத்தையும் கூறாத நிலையில், அது உறுதி என அனைவரும் நினைத்தனர்.

இவ்வாறான நிலையில் இது குறித்து பேசிய, டிடிவி தினகரன், நான் உறுதியாக சொல்கிறேன், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் தவெகவில் இணைய மாட்டார் என்றும், அவர் நன்கு யோசித்து முடிவெடுக்க கூடியவர் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து செங்கோட்டையனை மறைமுகமாக விமர்சித்தது போல் உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்த போது அதனை பற்றி அவர் என்னிடம் கூறவில்லை என்று தினகரன் கூறியது அவர்களுக்குள் உள்ள முரண்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

டிசம்பர் 14 யில் நயினார்.. இன்னக்கி எடப்பாடி பழனிசாமி!! பாஜக போடும் அரசியல் கணக்கு!!

0

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக, அதிமுகவை விட அதிகமாக சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் பாஜகவின் முயற்சிகள் அனைத்தும் சுக்கு நூறாகி கொண்டிருக்கின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் பாஜகவில் ஐக்கியமாவார்கள் என்று நினைத்த சமயத்தில் செங்கோட்டையன் திடீரென தவெகவில் இணைந்து விட்டார். டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை NDA கூட்டணியில் சேர மாட்டோம் என்று முடிவாக உள்ளார். அதிமுகவில் நுழைந்தே தீர வேண்டுமென ஓபிஎஸ் போராடி வருகிறார்.

இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ், 5 தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவரை தொடர்ந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு வர, அவரும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க, அதற்கு பின் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசினார். இவ்வாறு வரிசையாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி வரும் சூழல் பரபரப்பை உருவாக்கியது. இதனால் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்தது. இந்த கேள்வியை மேலும் பலப்படுத்தும் வகையில், டிசம்பர் 14 அன்று, தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்று அவரை சந்திக்க உள்ளார்.

அந்த சந்திப்பிற்கு முன், இன்று இபிஎஸ்யை நயினார் சந்தித்து பேசியது கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை டெல்லி சென்று வந்தவுடன் தினகரனை சந்தித்தது போலவே டெல்லி செல்வதற்கு முன்பு நயினார் இபிஎஸ்யை சந்தித்தது, ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரை கட்சியில் சேர்ப்பதை பற்றியும், பாஜகவின் அரசியல் வியூகம் குறித்தும் கலந்துரையாட பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவுடன் பாமகவின் டாப் தலை நடத்திய மீட்டிங்.. அன்புமணி விஜய் மட்டும் தான் மிஸ்ஸிங்!!

0

TVK PMK: பாமகவில் ஏற்பட்டுள்ள தலைமை பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. எதிர் தரப்பு ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வந்த அன்புமணியும், ராமதாசும், இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்கினார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பை சட்டரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் அறிவித்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அன்புமணி தான் தலைவர் என்ற கருத்தை மறுக்கவில்லை.

மேலும், பாமகவில் தற்சமயம், தலைமை போட்டி நிலவி வருவதால், தேர்தல் நேரத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை எழும் என்பதால், பாமகவின் மாம்பழம் சின்னம் தற்சமயம் முடக்கி வைக்கபடுகிறது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை ராமதாஸ் தரப்பு கொண்டாட, அன்புமணி தரப்பு அதனை விமர்சித்து வந்தது. இவ்வாறான நிலையில் பாமகவின் கூட்டணி யாருடன் என்பது தற்சமயம் வரை உறுதி  செய்யபடவில்லை. அன்புமணி அதிமுக பக்கம் ஆதரவு தெரிவித்து வருவதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

17 ஆம் தேதி ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால், அதற்கு திமுகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி ஆதரவாளர் பாலு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று தவெகவுக்கும் அழைப்பது விடுத்த அவர், அழைப்பிற்கு பின், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் என அனைவரிடம் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் விஜய் தலைமயிலான கூட்டணியில் பாமக சேர்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்காக அப்பாவை உதறிய விஜய்.. KAS பிடியில் தவெக!! ஆப்பு வைத்த இணைவு!!

0

TVK: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 10 முறை தோல்வியடைந்த அதிமுக 11 வது முறையாவது வெற்றி பெற வேண்டுமென வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென திமுக கடுமையாக முயற்சித்து வருகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று உறுதியாக கூறி வருகிறது. மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களமிறங்கினாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென கூறி வருகிறது. இவ்வாறு அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மற்ற கட்சிகளை விட அதிகளவு மக்களை ஈர்த்துள்ள கட்சி என்றால் அது தவெக என்றே கூறலாம். 

விஜய் கட்சிக்கு பெருகும் ஆதரவை கண்ட, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைய ஆரம்பித்திருக்கின்றனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தான். அவர் இணைந்த பிறகு தான், நாஞ்சில் சம்பத் மற்றும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைய ஆரம்பித்தனர். கரூர் சம்பவம் ஏற்படத்திலிருந்தே தவெகவில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் சமயத்தில், தற்போது புதிதாக செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்துள்ளதால், மேலும் சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், விஜய்யின் முன்னாள் மேனேஜராக இருந்த பி.டி. செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்த நிலையில், தவெக குறித்து பேசிய அவர், தவெகவில் புதிய நபர்களின் வருகையால், விஜய்யின் தந்தைக்கே மதிப்பு குறைந்து விட்டது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். அவர் புதிய நபர்கள் என்று சொன்னது செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத்தை தான் என்பது விளங்குகிறது. இவரின் இந்த கருத்து, தவெகவில் ஏற்பட்டுள்ள பிரிவினையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் அர்ஜுனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் புதிய நபர்களின் வருகையால், சொந்த அப்பவே ஒதுக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கும் ஓபிஎஸ்.. ஆனா ஒரு கண்டிஷன்!! இபிஎஸ் போட்ட ரூல்!!

0

ADMK: தேர்தல் நெருங்கும் சமயத்தில் மாநில கட்சிகளிடையே பல்வேறு திருப்பங்கள் நிலவி வருகின்றன. திமுகவின் கூட்டணி கட்சிகள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ள நிலையில், தவெகவின் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவில் பிரிவினைகள் அதிகரித்து வருகின்றன. அதிமுகவிலிருந்து பிரிந்த தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு உரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இபிஎஸ்க்கு கெடு விதித்திருந்தார். அதன் படி நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இபிஎஸ் இதனை தட்டிக் கழித்து விட்டார். இதன் மூலம் இவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது நடக்காத காரியம் என்பதை இபிஎஸ் தெளிவுபடுத்தி விட்டார்  என்று ஒரு தரப்பு கூறி வந்தது.

ஆனால் அதிமுகவை சேர்ந்தவர்கள், பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ் மௌவுனம் காத்ததால், அரை மனதாக ஒருங்கிணைப்புக்கு அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என்று கூறுகின்றனர். மேலும் ஓபிஎஸ் அதிமுகவில் இணைக்கப்பட்டாலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கபடாது என்றும், இபிஎஸ் கை காட்டும் தொகுதியில் தான் ஓபிஎஸ் வேட்பாளராக நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிபடுத்த படாத நிலையில், ஒரு வேலை இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அதிமுக, பாஜக மற்றும் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

செங்கோட்டையனை போட்டிக்கு அழைத்த நயினார்.. ஒன் டு ஒன் மேட்சுக்கு ரெடியான திருநெல்வேலி!!

0

BJP TVK: அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அதிருப்தி அமைச்சர்களை தவெகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இவரின் இந்த இணைவு குறித்து, பலரும் அவர்களது கருத்துக்களை கூறி வருவதோடு, இது விவாதங்களுக்கும் வழிவகுத்ததுள்ளது. அந்த வகையில் இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் தவெக எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றும் தவெகவில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை என்றும், தவெகவை மிகவும் தாழ்மைப்படுத்தி பேசியிருந்தார்.

செங்கோட்டையனின் தவெக இணைவு தவறான முடிவு என்பது போலவும் ஒரு கருத்தை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்கிறார் நயினார், அவருக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். அவர் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன். அவர் எங்கு நிற்கலாம் என தொகுதியை தேடி கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நிற்க சொல்லுங்கள் என்று சவால் விட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய நயினார், செங்கோட்டைனுக்கு என்மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை, நான் நியாமான விசயத்தை தானே சொன்னேன். ஒரு வேளை செங்கோட்டையன் என்னை டெபாசிட் இழக்க செய்வாரானால், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கருத்து, 2026 தேர்தலில் செங்கோட்டையனும், நயினாரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் திருநெல்வேலி தொகுதியில் போட்டி அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

தவெக துணை முதல்வர் பதவியும் இவருக்கு தானா.. 18 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

0

TVK: அதிமுக, திமுக என இருந்த தமிழக அரசியல் தற்போது தவெக, நாதக-வையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிறது. விஜய் முதன் முதலில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போவதால் அவர் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முடிவில் தான் விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம்  ஓட்டாக மாறுமா என்பது தெரியவரும். இந்நிலையில், தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக வரும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்ற கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் பலரும் விஜய்யுடன் கைகோர்த்து வருகின்றனர்.

இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் அமைந்த சம்பவம் தான் செங்கோட்டையன் சேர்க்கை. என்னை தொடர்ந்து இன்னும் பலர் தவெகவில் இணைய போகிறார்கள் என செங்கோட்டையன் கூறினார். இதனை தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை தவெக பக்கம் ஈர்ப்பதற்க்கான பணியை செங்கோட்டையன் கையிலெடுத்துள்ளார். தவெகவில் இணைந்த இவருக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே 2 பதவிகளை வகித்து வரும் செங்கோட்டையனுக்கு மூன்றாவதாக ஒரு பதவியை ஒதுக்க விஜய் முடிவெடுத்துள்ளாராம். வரும் 18 ஆம் தேதி ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், செங்கோட்டையனுக்கு தவெகவின் துணை முதல்வர் பதவியை அறிவிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்த படாத நிலையில் இது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஈரோடு செங்கோட்டையனின் கோட்டை என்பதால், இந்த இடத்தில் இதனை அறிவிப்பது தான் சரியாக இருக்கும் என்று விஜய் நினைக்கிறாராம்.

திமுகவில் இணைந்த விஜய்யின் நெருங்கிய நண்பர்.. ஆட்டம் காணும் அரசியல் களம்!!

0

DMK TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் அரங்கு பரபரப்பாக உள்ளது. மக்களும் தேர்தலை எதிர்நோக்கி உள்ள சமயத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலையும் தன் வசப்படுத்த வேண்டுமென பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளும், பழைய எதிரியான அதிமுகவும், புதிய எதிரியான தவெகவும் அதனை சிதைக்க முயன்று வருகின்றன. அதிமுகவையும், கூட்டணி கட்சிகளையும் கூட திமுக சமாளித்து விடும். ஆனால் தவெகவை சமாளிப்பது அதற்கு பெரும்பாடாக உள்ளது.

திமுக, தவெகவை எதிரியாக ஏற்று கொண்டதே இதற்கு உதாரணம். இந்நிலையில் விஜய்க்கு மேலும் பலத்தை கூட்டும் வகையில் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். இன்னும் சில அமைச்சர்களை கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தவெகவுக்கு பலம் கூடி கொண்டே செல்வது திமுகவிற்கும், அதிமுகவிற்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். இவ்வாறான நிலையில் தான் விஜய்யின், முன்னாள் மேனேஜர் பி.டி. செல்வகுமார் திமுகவில் இணைந்துள்ளார்.

இவர் புலி படத்தின் இயக்குனராகவும், புறா, வில்லு, போக்கிரி படத்தின் பிஆர்ஓ-வாகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் விஜய்க்கு மிகவும் நெருக்கம் என்று திரைதுறை வட்டாரங்கள் கூறுகின்றன. அப்படி இருக்க இவர் ஏன் திமுகவில் இணைந்தார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விஜய்யின் நண்பர் என்பதால், அவரை எதிர்ப்பதற்காக பி.டி. செல்வகுமாருக்கு உயர்ந்த பதவி தற்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய் வந்தா என்ன வராட்டி என்ன.. நம்ப வின் பண்ண இவங்க மட்டும் போதும்!! பாஜக போட்ட பிளான்!!

0

BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் அதிமுக உடன் கூட்டணி. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்று அதனுடன் கூட்டணி அமைத்த பாஜக, அடுத்ததாக நயினார் நாகேந்திரன் தலைமையில் சுற்று பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.

ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளார். இதற்காக அமித்ஷா எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை. அமித்ஷா விஜய்யை நேரில் சந்தித்து பேசுவது மட்டும் தான் பாக்கி. இவர்களின் முயற்சி கை கூடாததால் ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமல்லாமல், விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் வேலையை பாஜக கை விட போவதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. அதற்கு பதிலாக, பாமக, தேமுதிக, ஜான்பாண்டியன் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணியை தீவிரப்படுத்த போவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்யை கூட்டணியில் சேர்த்தால் அதிக வாக்குகள் வரும்.

அதாவது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். பீகார் தேர்தலை போலவே தமிழகத்திலும் வரலாற்று சாதனை படைக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. மேலும் அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை போல விஜய்யும் இருக்க வேண்டும் என பாஜக நினைத்தது. ஆனால் விஜய் இவை எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் அவரை தவிர்த்து வேறு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம். தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்ததற்காக விஜய் இருந்தால் மட்டும் தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்று பொருளில்லை என பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.

இவர நம்பவே முடியலையே.. யூடர்ன் அடித்த தினகரன்!! பதறும் விஜய்!! கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

0

AMMK DMK TVK: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், அண்மையில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று கூறி NDA கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் தற்போதைய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும் கூறி வந்தார். இதனை தொடர்ந்து இவரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது ஈடேறவில்லை. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் டிடிவி தினகரன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழ, அவர் விஜய் அல்லது திமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே அவரது நடவடிக்கைகளும் இருந்தது. மேலும் தவெகவுக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திமுகவுக்கும் தான் போட்டி என்று அவர் கூறியதால் தவெக பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருந்தது. ஆனால் தற்போது அவர் கூறிய கருத்து விஜய்யை எதிர்த்தும் திமுகவிற்கு ஆதரவாகவும் இருக்கிறது. நேற்று முன்தினம் புதுவையில், பொதுக்கூட்டம் நடத்திய விஜய், புதுச்சேரி தமிழகத்தை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டி இருந்தார். இது பலரின் கண்டனங்களுக்கும் ஆளான நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

பாண்டிச்சேரி தமிழ்நாட்டை விட சிறப்பாக உள்ளது என்பது விஜய்யின் கருத்து, என்னுடைய கருத்து அது கிடையாது என்று விஜய் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதை அவர் உணர்த்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததால் தினகரனும் கூடிய விரைவில் விஜய் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்ட நிலையில், இவரின் இந்த பேச்சு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் காரணமாக இவர் திமுகவில் சேர்வதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது.