வியாழக்கிழமை, நவம்பர் 20, 2025
Home Blog

திமுக-அதிமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய பிரேமலதா.. இவ்வளவு தைரியம் இவரால தானா!!

0

DMDK TVK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், மாநில கட்சிகளனைத்தும் தேர்தல் பணியில் முனைப்பை காட்டி வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. தற்சமயம், அதிமுக-பாஜக கூட்டணி, திமுக உடன் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உறுதியாக உள்ளது. அதிலும் திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.

பாமக மெல்ல மெல்ல அதிமுக பக்கம் செல்வது போல் தெரிகிறது. ஆனால் தேமுதிகவோ இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ளது. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்திருப்பது விவாதமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரை  நடைபெற்றது. அதில் பேசிய பிரேமலதா, ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் சவால் விடும் வகையில் தமிழகத்தில் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ளோம் என்று கூறியிருந்தார். பிரேமலதா அதிமுக, திமுகவை ஒருசேர விமர்சித்தது இதுவே முதல் முறை.

பிரேமலதாவும், ஆர்.பி. உதயகுமாரும் சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகும் என்று நினைத்த சமயத்தில் அதிமுகவை பிரேமலதா விமர்சித்து பேசியிருப்பது அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. மேலும் ஸ்டாலினையும் பிரேமலதா பலமுறை சந்தித்து பேசியிருக்கிறார். தற்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் திராவிடக் கட்சிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம் என நினைத்த பிரேமலதா தற்போது இரு கட்சிகளையும் விமர்சித்தது விஜய் இருக்கும் தைரியத்தில் தான் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் தேமுதிக-தவெக கூட்டணி உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோவையில் இம்முறையும் கோட்டை விட்ட திமுக.. செந்தில் பாலாஜி இருந்தும் பிரயோஜனம் இல்லை!!

0

DMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் வேட்டையில் மூழ்கியுள்ளன. அதே போல் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று முயற்சித்து வருகிறது. ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுகவின் கூட்டணி கட்சிகளும் சரி, வேறு எல்லா பிரச்சனைகளும் திமுகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்ற இடங்களை பட்டியலிட்டு அங்கு திமுகவின் முக்கியமான இரண்டாம் கட்ட தலைவர்களை  இறக்கி இந்த முறை அங்கு மாபெரும் வெற்றி பெற உழைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் தோல்வியுற்ற திமுக இம்முறை அங்கு வெற்றி பெற வேண்டுமென செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளது. கோவையில் மக்களை கவரும் பணிகளை செந்தில் பாலாஜி முழுவீச்சில் நடத்தி வருகிறார்.

கோவையில் அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி வெற்றி பெற்றாலும் இந்த முறை அது திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டுமென திமுக அரசு முயற்சித்த சமயத்தில் அதற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யபட்டுள்ளார். இந்த நிகழ்வு திமுக அரசு மீது மக்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இம்முறையும் திமுகவின் ஆசை நிராசையாக மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இபிஎஸ்யிடம் ராஜினாமா கடிதம்.. திமுகவில் இணையும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 6 மாத காலமே உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் இபிஎஸ் அதிமுகவின் ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் இபிஎஸ்யின் தலைமையில் நம்பிக்கையில்லாத பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் அதிமுகவிலிருந்து பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். இவையெல்லாம் பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுகவின் மேல் மக்களுக்கு நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விட்டது.

இதுவே அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் வகையில் நால்வர் அணி உருவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய திருப்பமாக புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கரன் அதிமுகவிலிருந்து திடீரென விலகியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய அவர், இனி கட்சி பணிகளை தொடர முடியாத காரணத்தினால், அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

இவரின் இந்த ராஜினாமா கடிதம் ஒரு அரசியல் சமிக்கையாகவே பார்க்கபடுகிறது. இவரின் இந்த விலகளுக்கு அதிமுக தலைமையின் மேல் உள்ள அதிருப்தியே காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். எம்.ஜி. ஆர். ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக தற்போது இல்லையென்று கூறி பலரும் திமுக இணைந்ததால், அடிப்படை உறுப்பினர் பதவியையும் துறந்த பாஸ்கரனும் கூடிய விரைவில் திமுகவில் இணைவார் என்று யூகிக்கப்படுகிறது. இவரின் இந்த திடீர் முடிவு அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திமுக அரசை எதிர்த்து கேள்வி கேட்ட வைகோ.. செம்ம ஷாக்கில் ஸ்டாலின்!!

0

DMK MDMK: 2026 ல் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதி தான் திமுகவில் நிலவும் தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரமாகும்.

காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை கேட்பது ஸ்டாலினுக்கு பெரும் பாடாக இருக்கும் சமயத்தில் தற்போது புதிதாக திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து புதிய கட்சி துவங்கி, பின்னர் திமுக கூட்டணியிலேயே இணைந்த வைகோ திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி வருவது திமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசின் செயல்பாடுகளில் உள்ள தவறை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது தமிழகத்திற்கு பேராபத்து என்றும், போதையின் உச்சமான டாஸ்மாக்கை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படுவது வேதனையின் உச்சம் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

வைகோவின் இந்த கருத்து, ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் திமுகவிற்கு எதிராக இருக்கும் இவரது பேச்சு, மதிமுகவிலிருந்து வெளியேறிய மல்லை சத்யா வைகோவிற்கு மத்திய அரசுடன் இணையும் ஆர்வம் இருக்கிறது என்று கூறியதை உறுதிப்படுத்தியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அண்மை காலமாக திமுகவில் நிறைய குழப்பங்கள் நிலவு வரும் காரணத்தால் தற்போது இந்த பிரச்சனையையும் திமுக தலைமை எப்படி சமாளிக்கும் என்பது கேள்வி குறியாக உள்ளது. 

ஆட்சி பங்கு கோரிக்கையை நாங்கள் கைவிடவில்லை.. ஓப்பனாக பேசிய திமுக கூட்டணி கட்சி!!

0

DMK VCK: சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் மேலும் தீனி போடும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் அரசியல் வருகை, SIR பணிகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றவையாகும். அதிமுக பல்வேறு அணியாக பிரிந்தது அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேலையில், திமுகவின் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும் ஸ்டாலினுக்கு தற்போது புதிதாக விசிகவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது. இது குறித்து விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன் ஆட்சியில் பங்கிற்காக நாங்கள் எந்த வேலையையும் செய்வோம், என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது விசிகவின் தலைவரான திருமாவளவனும் இது குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பேசிய அவர், 2026 தேர்தலில் ஆட்சி பங்கு என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. அதற்காக இந்த கோரிக்கையை கைவிட போவதும்  கிடையாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, திமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சி மற்றும், மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சி என்றால் அது விசிக தான். அப்படி இருக்க விசிகவின் இந்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க மறுத்தால் திருமாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

ஒருங்கிணைப்பு வேண்டாம்.. திமுக தான் கெத்து!! ஓபிஎஸ் எடுத்த திடீர் முடிவு!!

0

ADMK DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், மாநில  கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென்று தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவும் அதற்கு இணையாக போராடி வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அதிமுகவின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிக்கை இப்போது இல்லையென்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது, அதிமுக பல அணிகளாக பிரிந்து இருப்பது மற்றும் இபிஎஸ்யின் தலைமை வெறி என்று பலரும் கூறுகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்து நால்வர் அணியாக உருவானவர்கள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்கள்  என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற செய்தி பரவி வரும் வேலையில், ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுக பக்கம் சாய்ந்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருது அழகுராஜ், அன்வர் ராஜா,  மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது புதிதாக, ஓபிஎஸ் அணியின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.எஸ் கதிரவன் நேற்று திமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக திமுக பக்கம் செல்வதால் கூடிய விரைவில் ஓபிஎஸ்யும் திமுக பக்கம் செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முன் ஓபிஎஸ் ஒரு முறை அவரது மகனுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியது, மனோஜ் பாண்டியன்  திமுகவில் இணைந்தது குறித்து கேள்வி எழுப்பி போது  எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தது போன்றவை  இதற்கு உதாரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் மூலம் நால்வர் அணியும் திமுகவில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.

இபிஎஸ்க்கு டாடா காட்டிய பிரேமலதா.. அடுத்த டார்கெட் இவங்க தான்!! திடீர் ட்விஸ்ட்!!

0

DMDK ADMK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. அதேபோல் மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தேர்தல் வியூகங்களிலும், கூட்டணி கணக்குகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் மக்களை சந்திக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நேரில் சந்தித்துப் பேசினார்.

இவர்களின் இந்த சந்திப்பு கூட்டணிக்காக அச்சாரம் என்று பேசப்பட்ட சமயத்தில் தற்போது திடீர் திருப்பமாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு இணையாக தேமுதிகவும் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மேற்கொண்டு வரும் பரப்புரை, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போது அதில் பேசிய அவர், SIR மூலம் உங்கள் வாக்குகள் திருடப்படுவதாக தகவல் வந்தது, அதனால் ஒவ்வொரு தனி நபரும் சென்று உங்கள் வாக்கை உறுதி செய்யுங்கள். அதை திருடும் உரிமை இந்த உலகத்தில் எவனுக்கும் இல்லை.

ஜனநாயக நாட்டில் நம்முடைய ஓட்டுரிமையை உறுதி செய்வது நம்முடைய கடமை என்று கூறினார். தற்சமயம் திமுக SIR யை தீவிரமாக எதிர்த்து வருகிறது, அதனால் இவரின் இந்த கூற்று திமுகவிற்கு ஆதரவாக உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக-தேமுதிக கூட்டணி உருவாகுமென்று நினைத்த பட்சத்தில் பிரேமலதாவின் இந்த பேச்சு இவர் திமுக பக்கம் தாவுவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணிக்கு விஜய் மறுத்ததால் ஏமாற்றத்தில் இருந்த இபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து அதனை சரி கட்டி விடலாமென்று நினைத்தார். ஆனால் தற்போது பிரேமலதாவின் இந்த நகர்வு இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சேலம் தான் அடுத்த டார்கெட்.. எடப்பாடி கோட்டையிலேயே கை வைக்கும் விஜய்!! அதிமுக-வை கவுக்க மாஸ்டர் பிளான்!!

0

TVK ADMK: கரூரில் நடந்த அசம்பாவிதத்திற்கு பிறகு விஜய் சில நாட்கள் வெளியே தலைக்காட்டவே இல்லை. இதனிடையே ஆளும் கட்சி மற்றும் மாற்றுக் கட்சியினர் பல நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இனி விஜய் எந்த ஒரு சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும் ஆளும் கட்சி காட்டமாக விதித்து வந்தது. இவையனைத்தையும் தகர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த பிறகு மீண்டும் தனது இயல்பு நிலைக்கு விஜய் திரும்பியுள்ளார்.

அந்த வகையில் இவரின் இக்கட்டான சூழலில் இவருக்காக அதிமுக துணை நின்று பேசியது. மீண்டும் இவர்களது கூட்டணி உறுதியாகும் என கூறினர். அதற்கு தான் எடப்பாடி அடியெடுத்தும் வைத்தார். ஆனால் அவையெல்லாம் வீணாகி போனது. இந்த சூழலில் தான் விஜய் தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி கோட்டையாக இருக்கும் சேலம் மாவட்டத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க இருக்கிறாராம். கடந்த ஐந்தாம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவை காரசாரமாக விமர்சித்திருப்பார்.

அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த உடனேயே தனது நெருங்கிய புள்ளியிடம் சேலத்தில் தான் அடுத்த சுற்றுப்பயணம் எனக் கூறியுள்ளாராம். இது ரீதியான அனுமதி வாங்குதல் இடம் பார்ப்பது உள்ளிட்ட வேலைகளை தற்போதையிலிருந்து ஆரம்பித்துள்ளார்களாம். ஒரு சில மாதங்களில் விஜய் சேலத்திலிருந்து சுற்றுப்பயணத்தை ஆரம்பிப்பார் என கூறுகின்றனர். அன்று எடப்பாடிக்கு எதிராக அவர் களத்திலேயே பேசுவாரா என்பதே பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அரசின் “YUVA AI for ALL” திட்டம் – அனைவருக்கும் இலவச செயற்கை நுண்ணறிவு பாடம்

0

YUVA AI for ALL புதிய டிஜிட்டல் யுகத்துக்காக இந்தியா எடுத்த முக்கியமான படி!

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), IndiaAI Mission திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் – குறிப்பாக இளைஞர்களுக்காக “YUVA AI for ALL” எனப்படும் இலவச தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த பாடத்திட்டம் என்ன?

மொத்தம் 4.5 மணி நேரம் நீளமான, தனித்தே கற்றுக்கொள்ளக்கூடிய (self-paced) இந்த ஆன்லைன் பாடம் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அடிப்படை அறிவை எளிமையாகப் புரியவைக்கிறது.

இதில் இந்தியாவின் உண்மையான உதாரணங்களுடன் கூடிய
எளிமையான விளக்கங்கள் உள்ளன. அதனால் கற்றல் சுவாரஸ்யமாகவும் நடைமுறைப்படியும் இருக்கும்.

எங்கே கற்கலாம்?

இந்த பாடம் இலவசமாக கிடைக்கிறது.

  • FutureSkills Prime

  • iGOT Karmayogi

  • மற்றும் பல பிரபலமான Ed-Tech தளங்களில்.

பாடத்தை முழுமையாக முடித்த பிறகு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் (Certificate) வழங்கப்படும்.

பாடத்தின் முக்கிய அம்சங்கள்

மொத்தம் 6 சிறிய ஆனால் ஈர்க்கும் பகுதிகள் கொண்டது:

  1. AI என்பதென்ன? அது எப்படி செயல்படுகிறது?

  2. கல்வி, கலை, வேலை வாய்ப்புகளில் AIயின் தாக்கம்

  3. AI கருவிகளை பாதுகாப்பாகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது எப்படி

  4. இந்தியாவில் உள்ள உண்மையான AI பயன்பாடுகள்

  5. எதிர்காலத்தில் AI தரும் புதிய வாய்ப்புகள்

  6. நெறிமுறையுடன், பொறுப்புடன் செயல்படும் AI பற்றிய விழிப்புணர்வு

 ஏன் “YUVA AI for ALL”?

  • இது முழுக்க முழுக்க இலவசம்

  • எப்போதும், எங்கிருந்தும் கற்றுக்கொள்ளலாம்

  • இந்திய அரசின் சான்றிதழ் கிடைக்கும்

  • எதிர்கால வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை உருவாக்கும்

  • AI-யை மையப்படுத்திய இந்தியா உருவாகும் பயணத்தின் ஒரு பகுதி

இந்தியாவின் நோக்கம்

இந்த திட்டத்தின் மூலம் அரசு, 1 கோடி இந்தியர்களுக்கு (10 மில்லியன் பேர்) அடிப்படை AI திறன்களை வழங்க விரும்புகிறது.

இதன் நோக்கங்கள்:

  • டிஜிட்டல் பாகுபாட்டை குறைப்பது

  • பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவித்தல்

  • இந்திய இளைஞர்களை எதிர்கால வேலைகளுக்கு தயார் செய்வது

பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியவை இந்த பாடத்தை இணைத்து மாணவர்களுக்கு பரப்பும் வகையில் IndiaAI Mission உடன் இணைந்து செயல்படலாம்.

உருவாக்கியவர்

இந்த பாடத்திட்டத்தை வடிவமைத்தவர் ஜஸ்ப்ரீத் பிந்த்ரா (Jaspreet Bindra),
AI வல்லுநர், AI & Beyond நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் எழுத்தாளர்.

அவர் உலகளாவிய அறிவையும் இந்திய சூழலையும் இணைத்து,
எதிக்கல் மற்றும் இன்கிளூசிவ் AIயை மையப்படுத்தி வடிவமைத்துள்ளார்.

பாடத்திட்டத்தை அணுகும் லிங்க்:

👉 https://www.futureskillsprime.in/course/yuva-ai-for-all/

YUVA AI for ALL

செயற்கை நுண்ணறிவு அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் இந்தியாவின் புதிய இயக்கம்!

ஓபிஎஸ்யின் தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்கிய இபிஎஸ்.. கடுப்பில் ஓபிஎஸ்!!

0

DMDK AIADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இந்த வேகத்தை மேலும் கூட்டும் வகையில் அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. விஜய்யின் அரசியல் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை இதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும் தொடங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறது. திராவிட கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் நாங்கள் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேமுதிகவும் இல்லம் தேடி, உள்ளம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நடந்த தேமுதிக பிரச்சாரத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசி, கூட்டணிக்கு அச்சாரமிட்டார். கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், பிரேமலதாவின் செயல்பாடுகள் அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய பிரேமலதா, போடிநாயக்கனூர்  சட்டமன்றத் தொகுதி கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. தற்போது போடு எம்.எல்.ஏ யார் என்று  தொண்டர்களிடம் கேட்டார், அதற்கு ஓபிஎஸ் என்று பதில் வந்தது.

பூட்டி கதவுகள் திறக்கபடவில்லையா? என கூறிய அவர் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படும் என்று  தெரிவித்தார். இபிஎஸ்க்கு எதிராக உள்ள ஓபிஎஸ்யை நேரடியாக விமர்சனம் செய்ததால், பிரேமலதா அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார் என்பதற்கு சான்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் தேமுதிக-அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போடி தொகுதியை தேமுதிகவிற்கு ஒதுக்குவதாக இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2011 முதல் தற்போது வரை போடி தொகுதியில் வெற்றி பெற்று வரும் ஓபிஎஸ் இவர்களின் செயலால் கடும் கோபத்தில் உள்ளார் என்று  ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.