திங்கட்கிழமை, டிசம்பர் 8, 2025
Home Blog

புதுச்சேரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. விஜய் போட்ட கண்டிஷன்!!

0

TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் களம் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு பணிகளை மேற்கொண்ட விஜய்க்கு கரூர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய் சுமார் ஒரு மாத காலம் வெளியில் தலை காட்டாமல் இருந்தார்.

அதன் பிறகு தவெக சார்பில் நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெற்றது நிரூபணமானது. இவ்வாறான நிலையில் விஜய் புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் போன்றோர் கலந்து கொள்ள வேண்டாமென தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்கள் மரம், கரண்ட் கம்பம் போன்ற மின்சாதன பொருட்கள் மீது ஏறக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.  இந்த பரப்புரைக்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

அதுவும் க்யூ ஆர் கோடு கொண்ட அனுமதி பாஸ் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இது புதுச்சேரியில் நடைபெறும் பிரச்சாரம் என்பதால் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பொது வெளியில் மக்களை சந்திக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் இதனை கரூர் பிரச்சாரம் போல் இல்லாமல் மிகவும் கவனமான முறையில் நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

NDA லிஸ்ட்லயே இல்ல.. டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை!! கடுப்பான அமித்ஷா!!

0

AMMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. SIR பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியான பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜக அடுத்ததாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது.

ஆனால் விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியதால் அதனுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் தெளிவாக உள்ளார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் பாஜகவிற்கு பெரும் இழப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத முடியாது என்று கூறி பாஜகவை விட்டு வெளியேறினார். இவர் பாஜகவிலிருந்து வெளியேறியதிலிருந்தே அவருக்கும் பாஜகவுக்கும் பல்வேறு முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால், NDA கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக விஜய்யின் வருகையால் அதிருப்தியில் உள்ள நிலையில், டிடிவி தினகரன் இவ்வாறான கருத்தை கூறியது பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் விஜய்க்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் ஏற்றுக்கொள்ளாத தலைவர் எடப்பாடி பழனிசாமி.. தவெகவின் டாப் தலை பர பர பேட்டி!!

0

ADMK TVK: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கபட்டு சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், இந்த கட்சி 2026 யில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. விஜய்கான ஆதரவும், ஆரவாரமும் திராவிட கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால், அவர் திமுகவை எதிரி என்று கூறியதால் அக்கட்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு எழுந்தது. இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது.

கடந்த 9 வருடங்களாவே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்தலாம் என நினைத்தது. ஆனால் விஜய் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்று திடமாக கூறி வந்தார். இதனை உடைத்தெறியும் வகையில் கரூர் சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜய் அதிமுக கூட்டணிக்கு தலையசைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் அதிமுக விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தது. செங்கோட்டையனை தவெக பக்கம் இழுத்ததால் மேலும் கோபமடைந்தனர்.

இதனை தொடர்ந்து அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தவெகவையும், விஜய்யையும் கடுமையாக வசைப்பாடி வந்தனர். ஆனால் இபிஎஸ் விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சிக்காமல் இருந்தார். இந்நிலையில் தவெகவின் இணை பொது செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மக்கள் விரும்பாத தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மக்களிடம் இருந்து விலகி வருகிறது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே தலைவர் விஜய் தான் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக- தவெக இடையே மேலும் சலசலப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.

ஓபிஎஸ் இணைய போகும் கட்சி இது தானா.. சஸ்பென்ஸை உடைத்த பெங்களூரு புகழேந்தி!!

0

ADMK BJP: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதற்காக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்ப்பது, விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது, கொங்கு மண்டல தொகுதிகளை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தேர்தலுக்காக கூட்டணியை பலமாக வைத்திருந்த பாஜகவிற்கு அதிமுகவின் வருகையால் அது காணாமல் போய் விட்டது.

பாஜகவில் தங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கப்படவில்லை என்று கூறிய ஓபிஎஸ் முதலில் கட்சியிலிருந்து விலக, அவருக்கு பின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை ஏற்க முடியாது, அவரை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கட்சியில் இணைவோம் என்று கூறி பாஜகவிலிருந்து விலகினார் டிடிவி தினகரன். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடர இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்த அமித்ஷா அதிமுகவை சேர்ந்த பலரையும் டெல்லி அழைத்து பேசினார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றியும், அதிமுக ஒருங்கிணைப்பது பற்றியும் பேசியதாக கூறினார். ஆனால் இவர் கூறிய பதில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதை அமித்ஷாவிடம் கூறி விட்டார், மீண்டும் அதிமுக இணைய போகிறார் என்ற பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, ஓபிஎஸ் எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில் தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஓபிஎஸ் பாஜக உடன் நெருக்கமாக உள்ளதால் இவரின் இந்த கருத்து உண்மை தான் என பலரும் கூறுகின்றனர்

சசிகலாவுக்கு நோ என்ட்ரி.. கதவை மூடிய விஜய்!! அதோகதியாகும் சின்னம்மா நிலை!!

0

TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகிறது. அதிமுகவும் இந்த முறையாவது வெற்றி பெற போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை தன் வசப்படுத்த முயற்சித்து வருகிறது. விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதனை பொறுக்க முடியாத கட்சிகள் அவரை பின்னுக்கு தள்ள ஒரே ஒரு காரணத்தை மட்டுமே வைத்துள்ளன. அது தான் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கூற்று. தவெக தொண்டர்களுக்கும், தலைவருக்கும் அரசியல் அறிவு இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட, அதனை முறியடிக்கும் வகையில் அமைந்த நிகழ்வு செங்கோட்டையனின் தவெக இணைவு. அதிமுகவின் மூத்த நிர்வாகியான இவர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோருக்கே அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தவர்.

இப்படி பட்ட அரசியல் தலைவர் புதிய கட்சியில் இணைந்தது விவாதங்களுக்கு வலி வகுத்தது. இவர் தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு அதிமுக தலைவர்களும் தவெகவுக்கு வர உள்ளனர் என்று கூறினார். அவர்களில் முதன்மையானவர்கள் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது வரை யாரும் இணைந்த பாடில்லை. இதனால் இவர்கள் தவெகவில் இணைவதை விஜய் விரும்பவில்லை என்ற செய்தியும் பரவியது.

இந்நிலையில், செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது தவறு என்பது போல சசிகலா பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சசிகலாவை கட்சியில் சேர்க்கவே கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டும், நால்வர் அணியில் தனித்து விடப்பட்டதாகவும் தொடர்ந்த சசிகலாவின் நிலைமை, விஜய்யின் முடிவால் மேலும் மோசமாகும் என்று மதிப்பிடப்படுகிறது. 

பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன்.. துரோகம் செய்துவிட்டார்!! கடிந்து கொண்ட புகழேந்தி!!

0

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு சவால்களை எதிர் கொண்டது. ஏகப்பட்ட போராட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கபட்டார். இதற்கு பிறகு தான் அதிமுகவின் முக்கிய தலைகளாக அறியப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, அண்மையில் செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், பல்வேறு பதவிகளையும் வகித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.

இவரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கும், விவாதங்களும் வழிவகுத்தது. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் அவருடன் இருந்தவர்களுக்கே அவர் தவெகவில் இணைய போகும் செய்தி தெரியாது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செங்கோட்டையனின் தவெக இணைவு குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து, கொள்ளையடித்து விட்டு, எம்பி, எம்எல்ஏ-வாக இருந்து தன்னை வளர்த்து கொண்டு அந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலரும் செங்கோட்டையனின் முடிவுக்கு எதிராக கருத்து  தெரிவித்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரையும் தவெகவுக்கு கொண்டு வருவேன் என செங்கோட்டையன் கூறிய நிலையில், இவர்களின் கருத்து அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. இதனால் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு பலமாக இருந்தாலும், செங்கோட்டையனுக்கு அது பாதகமாகவே அமைந்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அண்ணாமலை ஓபிஎஸ்யின் அதிரடி முடிவு.. அண்ணாந்து பார்க்கும் இபிஎஸ்!! காரணம் அமித்ஷாவா!!

0

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை. போன்றவை உத்வேகம் எடுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் முக்கியமாக செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நான்கு தினங்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு, தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதால் இவர்களை அமித்ஷா சந்தித்து பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமித்ஷாவிடம் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி கலந்துரையாடினோம் என இருவரும் கூறினார்கள். ஆனால் இருவரும் இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. பாஜகவின் தற்போதைய நோக்கம் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக தமிழகத்தில் நிலைபெற வேண்டும் என்பதே ஆகும்.

இதற்கு இபிஎஸ்க்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும். டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்ற தொனியில் ஓபிஎஸ்யின் பேச்சு இருந்தது. இபிஎஸ்யால் பதவியை இழந்த அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போவதாக வெளியான தகவலை அவர் மறுக்காததால் இவர்கள் இருவரும் இணைந்து இபிஎஸ்க்கு எதிராக கட்சி துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறிது நேரம் கட்சி ஆரம்பிப்பதை பற்றி அவர்களது கருத்தை பரிமாறி கொண்டனர் என்றும் அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி வந்துடுவாரு.. ராமதாஸ் பக்கம் திரும்பிய விஜய்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

0

TVK PMK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் எந்த கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. விஜய் காங்கிரஸுடன் நட்பாக பழகி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. மேலும் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறினார்.

பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தவெகவில் சேர்ந்தால் தான் இபிஎஸ்யை தோற்கடிக்க முடியும் என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனால் முதலில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை தவெகவில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு, அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் சுலபமாக தவெகவில் சேர்ந்து விடுவார் என விஜய் நினைக்கிறார். இதனால் அடுத்தபடியாக தவெகவின் அரசியல் எதிரியான திமுக உடன் ராமதாஸ் இணைவதை தடுக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது என்று தவெகவின்  நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!

0

AMMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக என இருந்த தமிழக அரசியல், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியாக மாறப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் பிரிவினை. அதிமுக தற்சமயம் நான்கு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் அங்கம் வகித்து வரும் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், புதிய கட்சியான தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கேடு விதித்ததற்காக முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவர், பிறகு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் தொடர்பில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அவர்களுக்கே தெரியாது என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பேசிய சசிகலா, 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர், ஒருவர் மீது இருக்கும் கோவத்தில், இவ்வாறான முடிவுகளை எடுப்பதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் சசிகலாவிற்கு விருப்பமில்லை என்பதை காட்டியுள்ளது. சசிகலாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிப்பது போல, டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் போன்ற 53 ஆண்டு அனுபவம் உள்ளவர் ஒரு கட்சியை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தக் கட்சி தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் கோபத்தில் அல்ல, சிந்தனைக்குப் பிறகே முடிவு எடுத்திருப்பார் என்று பேசியுள்ளார். தினகரனின் இந்த கூற்று சசிகலாவை எதிர்ப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!

0

TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து விடும் என அனைவரும் நினைத்த சமயத்தில் தான் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இவ்வாறான நிலையில் தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவின் காட் பாதராக அதில் இணைந்தார். இப்படி  தவெகவில் பல்வேறு திருப்பங்கள் நிலவி வரும் சமயத்தில், தவெக சட்டசபை தேர்தலில் போட்டியிட சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கியுள்ளது. அதில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் , விசில், வெற்றி கோப்பை, உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இந்த சின்னங்கள் அனைத்தும் பாமர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சின்னமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவெகவின் சின்னம் குறித்து பேசிய செங்கோட்டையன், தவெகவிற்கு சின்னம் கிடைக்க போகிறது, அந்த சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியுள்ளார். அந்த சின்னம் பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது. தவெக தனது முதல் தேர்தலிலேயே வெற்றியை இலக்காக கொண்டுள்ளதால் அதற்கு வெற்றி கோப்பை சின்னமாக கிடைத்துள்ளது என பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்த பாடாத நிலையில், இதனை தான் செங்கோட்டையன், எங்களது சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியிருப்பார் எனவும் யூகிக்கப்படுகிறது.