வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025
Home Blog

அதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!

0

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதுடன், மக்கள் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இபிஎஸ்யின் செயல்பாடும் உள்ளது. அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அக்கட்சிக்கு பேரிழப்பை ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர்.

ஆனாலும் இபிஎஸ்க்கு தனது பதவி மேல் இருக்கும் ஆசையால் தொடர்ச்சியாக பலரையும் நீக்கி வந்தார். அதிலும் முக்கியமாக அவரை முதல்வராக்கிய சசிகலாவையும், மற்றும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை நீக்கினார். இது மக்கள் மத்தியில் பேசுபொருளானது. இது மட்டுமல்லாமல் அதிமுகவின் மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் நால்வரும் பாஜக உடன் மிகவும் இணக்கமாக இருப்பதால் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அவர்களிடம் உதவி கேட்டனர். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது என கறாராக கூறி விட்டதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதையை செலுத்த வந்த சசிகலாவிடம், அதிமுகவிற்கு அமித்ஷா தான் ஒருங்கிணைப்பாளரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள் என்பதிலும் தேர்தல் நேரத்தில் தெரியவரும். நீங்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை அமித்ஷா தான் மேற்கொண்டு வருகிறார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

அதிமுகவில் புதிய தலைமை.. இபிஎஸ்யை ஓரங்கட்ட பாஜக போடும் பிளான்!!

0

ADMK BJP: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதியளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் பாஜக தற்சமயம் அதிமுகவை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் அதனை தரை மட்டமாக்கும் நோக்கில் உள்ளது. மேலும் அதிமுகவின் வருகையால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார்கள். தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீகத்தை அதிகரித்த அண்ணாமலையின் பதவி பறிக்கபட்டதற்கும் இபிஎஸ் தான் காரணம்.

இதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாது, பாஜகவை சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும் கூட அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை தொடர்ந்தால் அது தேர்தல் முடிவில் பாதகத்தை ஏற்படுத்தும் என பாஜக நினைப்பதால், பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில் ஒரு அணியை திரட்டி, அந்த அணியில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக தான் ஒபிஸ்யும், அண்ணாமலையும் தனித்தனியாக சென்று அமித்ஷாவை சந்தித்துள்ளனர் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் செயலால் வருத்தப்பட்ட சசிகலா.. இப்படி பண்ணுவாருனு நினைக்கல!!

0

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவையே கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரை மட்டுமல்லாது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் சிலர் இபிஎஸ்யின் தலைமை பிடிக்காத காரணத்தினால் தானாக கட்சியிலிருந்து விலகினர். இவ்வாறு கட்சி பல அணிகளாக பிரிந்து கிடந்தது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் இபிஎஸ்யிடம் கூற, அப்போதும் கூட அவர் நீக்கியவர்களை கட்சியில் சேர்க்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் அதிமுகவின் பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், மூத்த அமைச்சரான செங்கோட்டையன் இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பேசு பொருளானது. இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, அவர் தவெகவில் இணைவது பற்றி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று கூறினார். இத்தகைய நிலையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் என்பதால், அவரது நினைவிடத்திற்கு ஓபிஎஸ் மரியாதை செலுத்த வந்தார்.

அப்போது செங்கோட்டையனின் சேர்க்கை குறித்து கேட்ட போது, அவர் தவெகவில் சேர்ந்த பின் நான் அவரிடம் பேசவில்லை என்று கூறி பகீர் கிளப்பினார். மேலும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலாவும் வந்திருந்தார். அவரிடமும் இந்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ஒருவர் மீது இருக்கும் கோபத்தால் அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுக்க கூடாது எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இப்படி செய்வதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறினார். செங்கோட்டையனின் பதவி பறிப்பின் போது இவர்கள் மூவரும் உடனிருந்த நிலையில், இவர்களுக்கு செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் விருப்பமில்லை என்பதை இந்த பதில் தெளிவுபடுத்துகிறது.

கடைசி நேரத்தில் கூட்டணி ஆட்டத்தை கலைத்த காங்கிரஸ்.. விஜய்யின் பதிலை எதிர்நோக்கும் ராகுல்!!

0

TVK CONGRESS: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுக கடந்த சில வருடங்களாகவே காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியதாலும், விஜய்-ராகுல் நட்புறவு நல்ல நிலையில் இருப்பதாலும் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்படும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

ஆனால் காங்கிரஸுக்கு 70 வருடங்களாக தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும், இருந்து வரும் திமுகவை விட்டு விலகுவதில் விருப்பம் இல்லை. மேலும் பீகார் தேர்தலில் தோல்வியுற்றதால் திமுகவிடம் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் கேட்டு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்காக சில வழிகளை ஆராய்ந்த காங்கிரஸ், கடைசியாக விஜய்யை பகடை காயாக பயன்படுத்த நினைத்தது. திமுகவிடம் எங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாவிட்டால், தவெக உடன் கூட்டணி அமைத்து கொள்வோம் என்றும் கூறி வந்தனர்.

இது குறித்து திமுக தலைமை எந்த பதிலும் கூறாத நிலையில், நேற்று முன் தினம், காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பீகாரில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை மையப்படுத்தி, அவர்களின் கோரிக்கைகளை திமுக நிராகரித்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியான, பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் காங்கிரஸின் கோரிக்கைகளை திமுக நிராகரித்ததால் தவெக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு விஜய் தரப்பு பதில் என்னவாக இருக்கும் என ராகுல் எதிர்பார்த்து காத்திருப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் தாமரை மலரும்.. ஓபிஎஸ் கொடுத்த வாக்கு!! திண்டாடும் இபிஎஸ்!!

0

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் மும்முரமாக உள்ளன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், அது மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவில் நிலவி வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் முக்கிய தலைவர்களின் விலகலும், மாற்று கட்சியில் இணைவதும், அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதனை கண்டு கொள்ளாத இபிஎஸ் இரட்டை இலையின் வாக்கு எப்போதும் மாறாது என்று கூறி வருகிறார். பாஜக அதிமுக உடன் கூட்டணியில் இருந்து வரும் வேளையில், இபிஎஸ்க்கு எதிராக இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவது இபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் அவருடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.

ஆனால் இவர்களின் சந்திப்பில் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் வேறு தகவல்களை கூறுகின்றன. அதில் ஓபிஎஸ், நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும், பாஜகவில் இணைய போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும் முக்குலத்தோர் வாக்குகள் ஓபிஎஸ்க்கு அதிகளவில் இருப்பதால், பாஜகவை தமிழகத்தில் நிலைபெற வைப்பது என் பொறுப்பு என்றும் அவர் அமித்ஷாவிற்கு வாக்களித்துள்ளார். இவரின் இந்த நிலைப்பாட்டை அறிந்த இபிஎஸ் மிகவும்  அதிருப்தி அடைந்துள்ளதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். 

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நான் அப்படி சொல்லவே இல்லையே!! பல்டி அடித்த ஓபிஎஸ்!!

0

ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தலிலும் தோல்வி தான் என்பது போல சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முதலில் இபிஎஸ் பதவியேற்ற உடனேயே அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், போன்றறை நீக்கினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அது கை கூடவில்லை.

இந்நிலையில் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு, ஓபிஎஸ், தினகரன் போன்றோர் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இபிஎஸ் கூட்டணி அமைத்தார். அப்போது இந்த நிபந்தனை நிறைவேற்றபடவில்லை. ஆனால் அண்மையில் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றும், இபிஎஸ்க்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கூறி ஓபிஎஸ் பாஜக கூட்டணியிலிருந்தும் வெளியேறினார். இந்த இக்கட்டான சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டத்தை கூட்டிய ஓபிஎஸ், டிசம்பர் 15 க்குள் அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்த நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும்.

இல்லையென்றால், என்னுடைய நடவடிக்கைகள் வேறு மாதிரி இருக்கும் என்றும், தனிக்கட்சி ஆரம்பிக்கப்படும் என்ற தொனியில் எச்சரித்திருந்தார். மேலும் ஓபிஎஸ்யின் ஆதரவாளரான வைத்தியலிங்கம், ஓபிஎஸ் தலைமையில் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்யின் பேச்சில் மாற்றம் தெரிகிறது. இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அமித்ஷாவை சந்தித்தது குறித்து பேசிய அவர், நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக எப்போதும் சொல்லவில்லை என்று கூறினார். இவரின் இந்த பதில், அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

SIR குறித்து குவியும் குற்றச்சாட்டுகள்.. வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அதுகாரிகள் வலியுறுத்தல்!! 

0

பல மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) என்ற மாபெரும் பணியை தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் என்பது சட்டரீதியாக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இத்தகைய திருத்தங்கள் வழக்கமாக நடைபெறுபவையே என்றாலும், தற்போது குடிபெயர்வுகள் அதிகரித்தது, இரட்டை பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது போன்ற சூழலால் இப்பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த SIR இன் நோக்கம் தெளிவானது — தகுதியான ஒவ்வொருவரும் பட்டியலில் இடம்பெற வேண்டும்; தகுதி இல்லாதவர்கள் அல்லது இரட்டிப்பு பெயர்கள் நீக்கப்பட வேண்டும்.

SIR ஏன் அவசியமாகிறது?

நகர்ப்புற வளர்ச்சி வேகமாக நடைபெறுதல், மக்கள் மாவட்டங்களுக்கு இடையே இடமாற்றம், மக்கள் தொகை அமைப்பிலான மாற்றங்கள் மற்றும் புதிய பதிவுகள் ஆகியவை பல தொகுதிகளில் தவறுகளை உருவாக்கியுள்ளன.
பழைய பதிவுகள் மற்றும் நகல் பெயர்கள் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
சுத்தமான மற்றும் துல்லியமான வாக்காளர் பட்டியல் ஒரு சுகாதாரமான ஜனநாயகத்திற்குக் கட்டாயம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் கிராமப்புறத்திலிருந்து நகரங்களுக்கு கடும் குடிபெயர்வு நடைபெறுவதால், வாக்காளர் விவரங்களில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, இந்த சரிபார்ப்பு நடவடிக்கை மிகவும் அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

சிறப்பு தீவிர திருத்தத்தின் காலவரிசை:

SIR 4 நவம்பர் 2025 அன்று தொடங்கியது மற்றும் இறுதி பட்டியல் 7 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்படும்.

முக்கிய தேதிகள்:

  • வீடு-to-வீடு சரிபார்ப்பு: 4 டிசம்பர் வரை

  • வரைவு பட்டியல் வெளியீடு: 9 டிசம்பர்

  • விண்ணப்பங்கள் மற்றும் எதிர்ப்புகள்: 9 டிசம்பர் – 8 ஜனவரி 2026

  • சரிபார்ப்பு & விசாரணைகள்: 9 டிசம்பர் – 31 ஜனவரி 2026

  • இறுதி வாக்காளர் பட்டியல்: 7 பிப்ரவரி 2026

நடவடிக்கை எவ்வாறு நடைபெறுகிறது:

2002–2004 காலத்திலும் இதேபோன்ற திருத்தங்கள் முன்னர் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நடவடிக்கையில், பூத் நிலை அலுவலர்கள் (BLO) வீடுகளுக்கு சென்று பெயர், வயது, முகவரி, அடையாள ஆவணங்கள் முதலியவற்றைச் சரிபார்த்து வருகிறார்கள்.
குடிமக்கள் ஆன்லைன் சேவைகள் மூலமும் தங்களில் தொடர்பான திருத்தங்களைச் செய்யலாம்.

அதிகாரிகள் இதன் நோக்கம் சரிபார்ப்பு; திடீரென நீக்குவது அல்ல என்று விளக்கம் அளித்துள்ளனர். பல முறை முயற்சித்தும் உறுதி செய்ய முடியாத பதிவுகளுக்கே மேலதிக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

அரசியல் எதிர்வினைகள் மற்றும் குற்றச்சாட்டுகள்:

தமிழ்நாட்டில் DMK மற்றும் காங்கிரஸ் — SIR மூலம் தவறான நீக்கங்கள் நடக்கும் அபாயம் உள்ளது, குறிப்பாக ஆவணங்கள் இல்லாத அல்லது விழிப்புணர்வு குறைந்த புறக்கணிக்கப்பட்ட சமூகங்களில் இது பாதிப்பை உண்டாக்கும் என்று குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசின் கூட்டணி கட்சிகள் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளன.

தேர்தல் அதிகாரிகள் செயல்முறை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியானது, பல அடுக்குகளிலான ஆய்வு, மேல்முறையீடு வாய்ப்பு, புகார் தீர்வு அமைப்புகள் உள்ளன என்றும், இது அரசியல் நோக்கமற்ற நிர்வாக நடவடிக்கை என்றும் வலியுறுத்துகின்றனர்.

பீகாரின் அனுபவம்:

சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற இதேபோன்ற திருத்தத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு வீதம் 66.91% ஆக உயர்ந்தது.
பெண்கள் 71.6% என்ற சாதனை வாக்குப்பதிவை செய்தனர் — ஆண்கள் 62.8%.
சீரான வாக்காளர் பட்டியல் குழப்பத்தை குறைத்து, பங்கேற்பை ஊக்குவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

INDIA கூட்டணியின் பீகார் தோல்விக்குப் பின்னர் — BJP–JDU கூட்டணி 202 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸ் போட்டியிட்ட 61 இடங்களில் 6 மட்டுமே பெற்றது; RJD 25 இடங்கள்.
சில தலைவர்கள் தோல்விக்குக் காரணம் SIR என கூறினாலும், இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.

முதல்வர் வேட்பாளராகும் அண்ணாமலை.. அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்!! விரக்தியில் இபிஎஸ்!!

0

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, தமிழக தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் கொள்கையே அதற்கு எதிரியாக அமைந்தது விட்டது. அதன் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் ஏற்காததால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. இதனால் பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலையை பார்த்தால் 2026 தேர்தலில் எதிர் கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு உள்ளது. அந்த அளவிற்கு அதிமுக பிளவு ஏற்பட்டு, பலரும் கட்சி மாறி இணைந்து வருவதுடன், புதிய கட்சி துவங்கும் எண்ணத்தில் உள்ளனர்.

இவை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை வெறியால் தான் நிகழ்கிறது என பாஜக நினைக்கிறது. இதனால் இபிஎஸ்யின் தலைமைக்கு எதிராக உள்ளவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது. முதலில் இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், தற்போது புதிதாக பாஜகவின் முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். இது பேசுபொருளான நிலையில், அண்ணாமலை-அமித்ஷா குறித்த விவாதங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் இவர்களின் பேச்சு வார்த்தை என்ன என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதிமுகவின் தலைமையால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருவதால், முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையை நிறுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா என அதிமுகவின் முக்கிய தலைகள் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாலும், இபிஎஸ்யால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று கூறியதாலும் அமித்ஷா இந்த முடிவை எடுத்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

சீமானும் விஜய்யும் பாஜகவின் பி டீம்.. மவுசு குறைந்த நாதக!! ஓப்பனாக பேசிய விசிகவின் டாப் தலை!!

0

VCK BJP NTK TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இதனை மேலும் பரபரப்பாக்கும் வகையில், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. விஜய் கட்சி துவங்கியது முதலே அவருக்கு பெருமளவில் ஆதரவு எழுந்து வருகிறது. மேலும் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் ஆரம்பத்திலேயே கூறி விட்டார். விஜய் மட்டுமல்லாது, சீமானும் திமுகவை அரசியல் எதிரியாக கருதி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

ஆனால் விஜய் தனது எல்லா உரைகளிலும் பாஜகவை விமர்சிக்காமல், திமுகவை மட்டுமே விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பாஜகவின் தற்போதைய கொள்கையாக இருப்பது தமிழகத்தில் திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதே. இதனால் இவர்கள் இருவரும் பாஜகவின் மூலம் திமுகவை எதிர்பதற்காக கட்சி ஆரம்பித்தனர் என்ற கருத்து வலுப்பெற்றது. இந்நிலையில் அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக அக்கட்சியில் நிலவியுள்ள பிரிவுகள் மூலம் மக்கள் அதிமுக மேல் அதிருப்தியில் உள்ளதை அறிந்தது.

இதனால் இந்த முறையும், திமுக ஆட்சிக்கு வந்து விடுமோ என்ற பயத்தினால், விஜய் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்த உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறினர். சீமான் ஏற்கனவே திமுகவை எதிர்த்து வரும் நிலையில் தற்போது அதன் மவுசு குறைந்து விட்டது, அதனால் பாஜகவின் மற்றொரு குழுவாக தவெக களமிறங்கியுள்ளது என விசிகவின் துணை பொது செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார். இவரின் இந்த கூற்று உண்மையானது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழக காங்கிரஸிலிருந்து விலகிய முக்கியப் புள்ளி.. அரசியலில் புதிய திருப்பம்!!

0

CONGRESS: அடுத்த 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதால், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிலும் முக்கியமாக தமிழக தேர்தலில் அதிமுக-திமுக என்ற நிலை மாறி பாஜக-காங்கிரஸ் என்ற நிலை உருவாவது போல சில நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பீகார் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் அதில் பாதியளவு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதனால் தமிழக தேர்தலை மட்டுமே காங்கிரஸ் நம்பி இருக்கிறது.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வந்தது. ஆனால் தேர்தல் முடிவுக்கு பின் வாய் திறக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பீகார் தேர்தல் முடிவின் மூலம் அதிருப்தியில் உள்ளது என பலரும் கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது, திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறி வந்தனர்.

இந்நிலையில் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அந்த குழு திமுகவிடம் ஆட்சி பங்கை கேட்டு வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுத்ததாகவும் தகவல் வெளிவந்தது. இவ்வாறு காங்கரசுக்கும், திமுக தலைமைக்கு தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் வேளையில், தற்போது புதிதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் அவரது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றிய குழு தலைவர், ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்த இவரின் விலகல் காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.