Home Blog Page 179

தெரிந்து கொள்ளுங்கள்!! இந்த 3 ராசியினர் கையில் சிவப்பு கயிறு கட்டவேக் கூடாதாம்!!

0

இந்துக்கள் கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக கை மற்றும் கழுத்தில் கயிறு கட்டுகின்றனர்.சிலர் மன நிம்மதி கிடைக்க சாமி கயிறு கட்டுகின்றனர்.சிலர் நினைத்தது நடக்க காய் மற்றும் கழுத்தில் கயிறு கட்டிக் கொள்கின்றனர்.

இப்பொழுது கோயில்களில் பல வண்ணங்களில் கயிறு வழங்கப்படுகிறது.இதில் சிவப்பு நிறத்தில் இருக்கக் கூடிய கயிறு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த சிவப்பு கயிறு மங்களகரமான பொருளாக பார்க்கப்படுகிறது.

இது சிலருக்கு மன ரீதியான நம்பிகையை தருபவையாக திகழ்கிறது.கைகளில் சிவப்பு கயிறு கட்டிக்கொண்டால் கடவுள் அருள் நமக்கு கிடைக்கும் என்பது சிலரது நம்பிக்கை.இப்படி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் சிவப்பு நிற கயிறை சில ராசியினர் கட்டிக் கொள்வது நல்லது அல்ல என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதாவது மகரம்,கும்பம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசியினர் இந்த சிவப்பு நிற கயிறை அணிந்தால் தீமை தரும் செயல்கள் அதிகமாக நடைபெறும்.இந்த மூன்று ராசியினருக்கு சிவப்பு கயிறு எப்பொழுதும் தீங்கு விளைவிக்க கூடிய ஒன்றாகவே இருக்கும்.

மகரம்,கும்பம் மற்றும் மீன ராசியினர் தங்கள் கை அல்லது கழுத்தில் சிவப்பு நிற கயிறு அணிந்தால் சனி பகவான் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.இந்த 3 ராசியினர்’சிவப்பு நிற கயிறு அணிவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

மேலும் மேஷம்,சிம்மம்,விருச்சிகம் ஆகிய மூன்று ராசியில் பிறந்தவர்கள் சிவப்பு நிற கயிற்றை அணிந்தால் அதிக நன்மைகள் உண்டாகும்.இந்த மூன்று ராசியினர் கழுத்து அல்லது கையில் சிவப்பு நிற கயிறு அணிந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.உங்களை சுற்றிய எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று அர்த்தம்.

இரத்த சோகை குணமாக.. இரத்த விருத்தி உண்டாக இந்த கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உங்களில் சிலருக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கலாம்.இதனால் இரத்த சோகை பாதிப்பு,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.உடலில் இரத்த விருத்தி அதிகரிக்க நீங்கள் பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

**சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை
**நெய்
**மிளகுத் தூள்

பயன்படுத்தும் முறை:-

முதலில் சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதன் பிறகு சிறிது மிளகுத் தூளை அதில் போட்டு வதக்கி சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**பொன்னாங்கண்ணி கீரை
**சீரகம்
**பசு நெய்

பயன்படுத்தும் முறை:-

முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிதளவு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதற்கு அடுத்து சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதற்கு அடுத்து சிறிதளவு சீரகத்தை வறுத்து அரைத்து பொன்னாங்கண்ணி கீரையுடன் சேர்த்து வதக்க வேண்டும்.இதை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**எலுமிச்சம் பழம்
**தண்ணீர்

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிளாஸில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள்.இந்த பானத்தை பருகினால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

**நெல்லிக்காய்
**தேன்

பயன்படுத்தும் முறை:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிகாய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.

இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு தேன் கலந்து பருகினால் இரத்த விருத்தி அதிகரிக்கும்.இரத்த சோகை பாதிப்பு குணமாக இந்த நெல்லிக்காய் பானம் செய்து பருகலாம்.

கொச்சி சென்ற கண்டெய்னர் கப்பல் கவிழ்ந்து விபத்து!

0

மே 24, 2025 அன்று, லைபீரியக் கொடியுடன் பயணித்த MSC Elsa 3 என்ற கன்டெய்னர் கப்பல், விசின்ஜம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு செல்லும் வழியில், கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல்கள் தொலைவில் கடுமையாக சாய்ந்தது. இந்த சம்பவம் கடலில் எரிபொருள் கசியலை ஏற்படுத்தியது மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் அவசர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள மூன்று பணியாளர்கள் கப்பலை மீட்டெடுக்கும் பணிகளில் உதவுவதற்காக கப்பலில் தங்கியுள்ளனர்.

இந்த கப்பல் 184 மீட்டர் நீளமுடையது மற்றும் மே 23 அன்று விசின்ஜம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, மே 24 அன்று கொச்சியில் சேர திட்டமிடப்பட்டது. கப்பலில் ஒரு ரஷியர் (கப்பல் தலைவர்), 20 பிலிப்பைனர்கள், இரண்டு உக்ரைனியர்கள் மற்றும் ஒரு ஜார்ஜியர் ஆகியோர் பணியாற்றினர்.

இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் இந்திய கடற்படை இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். INS Sujata கப்பலும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும், கப்பலின் மேலாளர்களுக்கு அவசர மீட்பு சேவைகளை ஏற்பாடு செய்ய இந்திய கப்பல் இயக்குநரகம் (DG Shipping) உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது: கடற்கரையில் எரிபொருள் அல்லது கன்டெய்னர்கள் ஒதுங்கினால், அவற்றை தொடக்கூடாது மற்றும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த சம்பவம் கடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

 

வெறும் 4 பொருளை வைத்து அதிக செலவு இல்லாத.. வீடே மணக்கும் சாம்பிராணி செய்யலாம்!!

0

நமது வீட்டு பூஜை அறையில் பயன்படுத்தும் சாம்பிராணியை இனி கடையில் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.காய்ந்த மலர்கள்,ஏலக்காய் உள்ளிட்ட நான்கு பொருட்களை வைத்து எளிய முறையில் சாம்பிராணி செய்யலாம்.

வீட்டு முறையில் சாம்பிராணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய்
2)இலவங்கம்
3)சூடம்(கற்பூரம்)
4)ரோஜா இதழ்கள்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கைப்பிடி ரோஜா இதழ்களை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பன்னீர் ரோஜாவாக இருந்தால் இன்னும் சிறப்பு.

அடுத்து 10 ஏலக்காய்,10 கற்பூரம் மற்றும் 10 இலவங்கம் அதாவது கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இவை அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பொடியை கிண்ணம் ஒன்றில் கொட்டி ரோஸ் வாட்டர் சிறிதளவு தெளிக்க வேண்டும்.அதன் பிறகு கொழுக்கட்டை மாவு போன்று கலந்துவிட வேண்டும்.

பிறகு ஏதேனும் அச்சு வடிவத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.இதை நிழல் பாங்கான இடத்தில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஈரமில்லாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாம்பிராணியை பூஜைக்கு பயன்படுத்தலாம்.கடையில் கிடைக்கும் சாம்பிராணியைவிட வீட்டு முறையில் தயாரிக்கப்படும் இந்த சாம்பிராணி அதிக வாசனை நிறைந்தவையாக இருக்கும்.

இந்த சாம்பிராணியில் வெட்டி வேர்,சந்தனம் போன்றவற்றை சேர்த்தால் சாம்பிராணி வாசனை இன்னும் அதிகமாக இருக்கும்.அதேபோல் மஞ்சள் கிழங்கு சேர்த்துக் கொண்டால் சாம்பிராணி மணக்கும்.

கொழுப்பு கட்டியை ஐஸ்கட்டி போல் உருக்கும் எண்ணெய்!! முதல் முயற்சியில் தீர்வு உறுதி!!

0

நமது உடலில் ஆங்காங்கே வலி இல்லாத கட்டிகள் உருவாவதை கொழுப்பு கட்டி என்கின்றோம்.இந்த கொழுப்பு கட்டிகள் லிபோமா கட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.இதனை வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்தும் வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு சிறிய தாளிப்பு கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதை அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும்.

பிறகு இதனை கொழுப்பு கட்டிகள் மீது ஊற்றி தேய்க்க வேண்டும்.இதுபோன்று செய்வதால் கொழுப்பு கட்டிகள் கரையத் தொடங்கும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

1)கொடிவேலி தைலம் – கால் தேக்கரண்டி
2)தூஜா எண்ணெய் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் கால் தேக்கரண்டி கொடிவேலி தைலம் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தூஜா எண்ணெய் ஊற்றி கலக்குங்கள்.

இதனை கொழுப்பு கட்டிகள் மீது ஊற்றி தேய்க்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் அவை சீக்கிரமாக குணமாகும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு – இரண்டு தேக்கரண்டி
2)தண்ணீர் – கால் கப்

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த கல் உப்பு நீர் நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.அதன் பிறகு காட்டன் துணி ஒன்றை கல் உப்பு நீரில் போட்டு பிழிந்து கொழுப்பு கட்டிகள் மீது வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.இப்படி செய்து வந்தால் கொழுப்பு கட்டி முழுமையாக கரையும்.

இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்கும் 05 பழக்கங்கள்!!

0

உங்கள் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் நிச்சயம் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

1)நாவல் பழம்

**அடிக்கடி நாவல் பழம் மற்றும் நாவல் விதை பொடி சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டிற்கு வரும்.

**நாவல் விதையை நன்றாக காயவைத்து பொடித்து தேநீர் செய்து குடித்து வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்படும்.

2)நித்தியகல்யாணி

முதலில் சிறிதளவு நித்தியகல்யாணி பூக்களை பறித்து நிழல் பாங்கான இடத்தில் பரப்பி காய வைக்க வேண்டும்.

அதன் பிறகு நித்தியகல்யாணி பூக்களை ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அதன் பிறகு நித்தியகல்யாணி இதழ்கள் சிறிதளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து இந்த நித்திய கல்யாணி பானத்தை வடித்து பருக வேண்டும்.காலை மற்றும் மாலை என இரு நேரமும் பருகி வந்தால் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு வரும்.

3)பாகற்காய்

பாகற்காய் மற்றும் பாகல் இலையை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.பாகல் இலையை அரைத்து சாறு எடுத்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தினமும் ஒரு பாகற்காயில் ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

4)கொய்யா இலை

முதலில் இரண்டு கொய்யா இலையை நறுக்கி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கொய்யா இலை பானத்தை வடித்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வரும்.

5)வெந்தயம்

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த வெந்தய பானத்தை வடித்து பருகினால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

பேட் கொலஸ்ட்ராலை சர்ர்னு கரைக்கும் உணவுகள்!! இனி சாப்பிட்டே எடையை குறைக்காலம்!!

0

இந்த கால கட்டத்தில் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் நோய் பாதிப்புகள் எளிதில் அண்டிவிடுகிறது.சோமல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்கள் நமது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடும்.

நமது உடலில் இரு வகையான கொழுப்பு இருக்கின்றது.ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று எல்டிஎல் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு.இதில் LDL கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்தை பாழாக்குகிறது.

இந்த கெட்ட கொழுப்பை கரைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

1)முழு தானிய உணவுகள் மற்றும் ஓட்ஸ்

தினமும் காலையில் எழுந்ததும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.ஓட்ஸ்,பழுப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

2)கொழுப்பு மீன்கள்

கடல் மீனில் நல்ல கொழுப்பு அதிகளவு உள்ளது.வாரம் ஒருமுறை இந்த மீன் உணவை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

3)பருப்பு

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ராஜ்மா,காராமணி,சுண்டல் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.

4)உலர் விதை மற்றும் உலர் பழங்கள்

திராட்சை,அத்தி,கிவி போன்ற உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.

அதேபோல் பாதாம் பருப்பு,வால்நட் போன்ற உலர் பருப்புகளை சாப்பிட்டால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்.

5)டார்க் சாக்லேட்

அடிக்கடி டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மனச் சோர்வு நீங்கும்.

6)நீர்பழங்கள்

தர்பூசணி,முலாம் பழம்,வெள்ளரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

இதை செய்தால் கொடிய விஷப் பாம்பு கடித்தாலும்.. உயிர் பிழைக்கலாம்!!

0

நமது இந்தியாவில் பல வகை பாம்புகள் வாழ்கின்றன.விஷப் பாம்பு,கொடிய விஷம் கொண்ட பாம்பு,விஷம் இல்லாத பாம்பு என்று பல வகை பாம்பு இனங்கள் உயிர் வாழ்கின்றன.இதில் அதிக விஷம் நிறைந்த பாம்பு இனங்களே நமது இந்தியாவில் காணப்படுகிறது.

இந்த விஷப் பாம்புகள் கடித்தால் உயிர் பிழைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.நம் நாட்டில் ஆண்டு தோறும் விஷப் பாம்பு கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.நமது நாட்டில் மிகவும் கொடிய விஷம் நிறைந்த பாம்பு என்றால் அது ராஜநாகம் அதாவது கிங் கோப்ரா தான்.

நம் முன்னோர்கள் காலத்தில் பாம்பு கடித்தால் அதை குணப்படுத்திக் கொள்ள கை மருத்துவம்,சித்த மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டது.ஆனால் தற்பொழுது அதன் மீதான நம்பிக்கை குறைந்து அலோபதி மருத்துவத்தை நாட ஆரம்பித்துவிட்டோம்.

இருவரை நாகப் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாகப் பாம்பு கடித்தால் ஏற்படும் அறிகுறிகள்:

1)சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனை

2)கை மற்றும் கால்கள் பலவீனமாதல்

3)செயல்பாட்டில் மாற்றம்

4)கண் பார்வை தெளிவின்மை

பாம்பு கடித்தவருக்கு செய்ய வேண்டிய உதவிகள்

1.பாம்பு கடித்த நபரை முதலில் ஓர் இடத்தில் அமர வைக்க வேண்டும்.அவரை நடக்கவோ,நிற்கவோ வைக்க கூடாது.

2.பாம்பு கடித்த இடத்தில் இறுக்கமான ஆடை இருந்தால் அதை அகற்ற வேண்டும்.அதேபோல் அணிகலன்கள் இருந்தால் அதையும் அகற்றிவிட வேண்டும்.

3.பாம்பு கடித்த நபருக்கு பயம்,பதற்றம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

4.பாம்பு கடித்த நபருக்கு சுய மருத்துவம் செய்தலை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சினிமாவில் காட்டுவது போன்று பாம்பு கடித்த இடத்தில் கீறல் போடுதல்,இரத்தத்தை உரிதல் போன்ற தவறான செயல்களில் ஈடுபடக் கூடாது.

பாம்பு கடித்த நபருக்கு செய்ய கூடாத விஷயங்கள்:

1.பாம்பு கடித்த இடத்தில் ஐஸ்கட்டி வைத்தல்,இறுக்கமான துணியை வைத்து கட்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

2.பாம்பு கடித்தவருக்கு டீ,காபி,மது போன்ற பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் பாம்பு கடித்த நபருக்கு பதற்றம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.பாம்பு கடித்தால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உடனடி சிகிச்சையை வழங்க உதவ வேண்டும்.

ஹாஸ்பிடலில் பணத்தை கொட்டாமல் இருக்க.. பனங்கற்கண்டை இப்படி சாப்பிடுங்கள்!!

0

நாம் கடந்த காலங்களில் அதிகளவு பயன்படுத்தி வந்த இனிப்பு பொருட்களில் ஒன்று பனங்கற்கண்டு.இது பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள்.நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பனங்கற்கண்டு பயன்பாடு அதிகளவில் இருகின்றது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,வெல்லத்தை ஒப்பிடுகையில் பனங்கற்கண்டில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கற்கண்டை சாப்பிட்டால் உடலுக்கு என்னென்னெ நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:-

1)வெங்காய ஜூஸ்
2)பனங்கற்கண்டு
3)தண்ணீர்

முதலில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு இடித்துக் கொள்ளுங்கள்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு சிறிதளவு பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் கிட்னி கற்கள் கரையும்.

தினமும் காலையில் ஒரு துண்டு பனங்கற்கண்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குணமாகும்.பசு நெயில் பனங்கற்கண்டு தூளை போட்டு சாப்பிட்டால் சளி,இருமல் குணமாகும்.

பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் சளி தொந்தரவு குணமாகும்.அதேபோல் பனங்கற்கண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

பனங்கற்கண்டு மற்றும் சீரகத்தை சேர்த்து சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.கண் பார்வை திறன் மேம்பட பாதாம் பருப்பு மற்றும் பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிடலாம்.அதேபோல் மிளகு,பாதாம் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.தினமும் பனங்கற்கண்டு சாப்பிட்டால் ஆஸ்துமா,சுவாசப் பிரச்சனை போன்றவை குணமாகும்.

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. BP பிரச்சனைக்கு சீக்கிரம் தீர்வு கிடைக்கும்!!

0

நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவு பல நோய்களை குணப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றது.குறிப்பாக இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

இன்று இரத்த அழுத்தப் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.உணவுகள் மூலம் உங்கள் உயர் இரத்த அழுத்த பாதிப்பை ககட்டுக்குள் வைக்கலாம்.

1)கீரை

போலிக் அமிலம் நிறைந்த கீரைகளை அடிக்கடி சாப்பிட்டால் உங்கள் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கீரையில் இருக்கின்ற பொட்டாசியம்,மெக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)வாழைப்பழம்

பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழத்தை உட்கொண்டால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

3)ஓட்ஸ்

இரத்த அழுத்தம் கட்டுப்பட ஓட்ஸை தினமும் உணவாக சாப்பிடலாம்.ஓட்ஸில் பீட்டா குளுக்கன் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது.இந்த ஓட்ஸை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

4)பூண்டு

உங்கள் இரத்த அழுத்தம் எப்பொழுதும் கட்டுப்பாட்டில் இருக்க நீங்கள் பூண்டு சாப்பிட வேண்டும்.பூண்டு தேநீர்,பூண்டு சாறு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

5)தயிர்

தினமும் தயிர் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.அதேபோல் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

6)மாதுளை

பழங்களில் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் மாதுளையை அரைத்து பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

7)பீட்ரூட்

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் சாறு பருகினால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்கு வரும்.