Home Blog Page 185

மணத்தக்காளி கீரையை இப்படி சாப்பிட்டால் வாய் வயிறு புண்கள் வேரோடு குணமாகும்!!

0

கசப்பு நிறைந்த மணத்தக்காளி கீரை குடல் புண்,வாய்ப்புண் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இந்த கீரை மட்டுமின்றி மணத்தக்காளி காயும் வயிற்றுப்புண்களை குணப்படுத்த உதவுகிறது.அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக மணத்தக்காளி கீரையில் தண்ணி சாறு செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

ஒரு கைப்பிடி மணத்தக்காளி கீரை
அரை தேக்கரண்டி வெந்தயம்
அரை தேக்கரண்டி சீரகம்
இரண்டு வர மிளகாய்
கால் தேக்கரண்டி மிளகு
10 சின்ன வெங்காயம்
10 பூண்டு பற்கள்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு தேக்கரண்டி எண்ணெய்
ஒரு மூடி துருவிய தேங்காய்
ஒரு கப் அரிசி ஊறவைத்த நீர்

செய்முறை விளக்கம்:-

முதலில் கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரையை எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யுங்கள்.

அடுத்து ஒரு மூடி தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து வாணலி வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம்,வெந்தயம்,மிளகு போட வேண்டும்.பிறகு வர மிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம்,பூண்டு பற்களை அதில் போட்டு வதக்க வேண்டும்.

அதற்கு அடுத்து மணத்தக்காளி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.கீரை நன்கு சுண்டி வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள் தூள் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் அரிசி ஊறவைத்த நீர் ஒரு கப் அளவிற்கு எடுத்து அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

கீரை நன்கு வெந்து வந்த பிறகு அரைத்த தேங்காய் பாலை அதில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.ஐந்து நிமிடங்கள் வெந்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம்.இந்த மணத்தக்காளி தண்ணி சாறு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஈரலில் குவிந்த கொழுப்புகளை கரைத்து தள்ளும் மூலிகை கஷாயம் செய்முறை இதோ!!

0

உங்கள் கல்லீரலில் குவிந்துள்ள கொழுப்புகளை கரைத்து தள்ள உதவும் நமது பாரம்பரிய வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கரிசலாங்கண்ணி
2)முசுமுசுக்கை

செய்முறை விளக்கம்:-

முதலில் கரிசலாங்கண்ணி மற்றும் முசுமுசுக்கை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நிழலில் பரப்பி நன்றாக காய வைக்க வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கஷாயம் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைக்க வேண்டும்.இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால் ஈரலில் குவிந்த கொழுப்பு கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கலக்கி வெறும் வயிற்றில் பருகி வந்தால் ஈரலில் குவிந்த கொழுப்பு கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பூண்டு பானத்தை வடித்து பருகினால் ஈரல் கொழுப்பு நன்றாக கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஆளிவிதையை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

அதன் பிறகு அரைத்த ஆளிவிதையை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து பருகி வந்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.

மீல் மேக்கர் வைத்து கறி வறுவலை மிஞ்சும் சுவையில் ஓர் அருமையான ரெசிபி!!

0

சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கரை வைத்து அசைவ சுவையை மிஞ்சும் ஒரு அருமையான ரெசிபி செய்வது குறித்து இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மீல்மேக்கர் – அரை கப்
2)சின்ன வெங்காயம் – 10
3)தக்காளி – ஒன்று
4)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
5)கடுகு – அரை தேக்கரண்டி
6)கறிவேப்பிலை – ஒரு கொத்து
7)பூண்டு – 10 பல்
8)இஞ்சி – ஒரு துண்டு
9)பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
10)சீரகம் – கால் தேக்கரண்டி
11)கரு மிளகு – கால் தேக்கரண்டி
12)வர கொத்தமல்லி – அரை தேக்கரண்டி
13)பட்டை – ஒரு துண்டு
14)கிராம்பு – இரண்டு
15)உப்பு – தேவையான அளவு
16)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
17)கொத்தமல்லி தழை – சிறிதளவு
18)கறிவேப்பிலை – ஒரு கொத்து
19)வர மிளகாய் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் இஞ்சி,பூண்டை தோல் உரித்துவிட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து கொத்தமல்லி விதை,சீரகம்,சோம்பு,பட்டை,மிளகு,கிராம்பு,வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றுங்கள்.

பிறகு கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை போட வேண்டும்.அடுத்து நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,தக்காளி போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து அரைத்த இஞ்சி,பூண்டு விழுதை அதில் போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.அதற்கு அடுத்து மீல் மேக்கரை சூடு நீரில் போட்டு ஊறவைத்து வதங்கி கொண்டிருக்கும் கலவையில் போட வேண்டும்.

அதன் பிறகு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்க வேண்டும்.

நன்கு கிரேவி பதத்திற்கு வந்த பிறகு கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.இந்த மீல் மேக்கர் கிரேவியை சூடான சாதம்,சப்பாத்தி,பூரி,பரோட்டா,இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

தொண்டை கரகரப்பு? இந்த 5 பொருள் கொண்ட கஷாயம் வச்சி குடித்தால் தீர்வு கிடைக்கும்!!

0

தற்பொழுது கோடை மழைக்காலம் என்பதால் பலருக்கும் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியுள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள சில மூலிகை பொருட்களை வைத்து கஷாயம் செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்:-

1)சுக்கு
2)அதிமதுரம்
3)திப்பிலி
4)கொத்தமல்லி
5)மிளகு
6)பனங்கற்கண்டு
7)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் வாணலி வைத்து சுக்கு,5 கிராம் திப்பிலி,10 கிராம் திப்பிலி,கால் தேக்கரண்டி கொத்தமல்லி விதை,ஐந்து கருப்பு மிளகு ஆகியற்றை
போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த பொடியை பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு கப் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த கஷாயம் நன்றாக கொதித்து வந்த பின்னர் சிறிதளவு பனங்கற்கண்டு போட்டு குடித்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆடாதோடை இலை
2)கரு மிளகு
3)நாட்டு சர்க்கரை
4)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து இரண்டு ஆடாதோடை இலையை அதில் போட வேண்டும்.

பிறகு 10 கருப்பு மிளகை போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையை அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)பசும் பால்
3)பனங்கற்கண்டு

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மஞ்சள் கலந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

+2 தேர்ச்சி போதும்!! மத்திய அரசாங்கத்தில் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

0

மத்திய அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதாவது CISF-இல் காலியாக உள்ள Head Constable பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த பணிகளுக்கு என்று மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் ஜூன் 06 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை(CISF)

Central Industrial Security Force

வேலை: Head Constable

காலிப்பணியிடங்கள்: Head Constable பணிக்கென்று மொத்தம் 403 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

Head Constable பணிக்கு விண்ணப்பம் செய்ய அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

Head Constable பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.81,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Head Constable பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 23 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக்கட்டணம்:

பொது பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.100/-

இதர வகுப்பினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Head Constable பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் http://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 06/06/2025

கொழுப்பு கட்டியை வெண்ணெய் போல் கரைத்தெடுக்கும் மஞ்சள் மற்றும் இந்த ஒரு பொருள்!!

0

உடலில் காணப்படும் கொழுப்பு கட்டியை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வீட்டு வைத்தியத்தை செய்யலாம்.நாள்பட்ட கொழுப்பு கட்டி தானாக கரைய இந்த வைத்திய குறிப்புகள் நிச்சயம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள்
2)நல்லெண்ணெய்

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றுங்கள்.

பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு குழைத்துக் கொள்ளுங்கள்.இந்த கலவையை கொழுப்பு கட்டி மீது பூசி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.இவ்வாறு செய்வதால் கொழுப்பு கட்டி சீக்கிரம் கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)முட்டை
2)உப்பு

செய்முறை விளக்கம்:-

முதலில் கிண்ணம் ஒன்றில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் இந்த கலவையை கொழுப்பு கட்டி மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் கொழுப்பு கட்டி சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கொடிவேலி தைலம்

செய்முறை விளக்கம்:-

முதலில் சிறிதளவு கொடிவேலி தைலம் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த தைலத்தை கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் ஊற்றி தேய்க்கவும்.இப்படி செய்தால் கொழுப்பு கட்டி பாதிப்பு சீக்கிரம் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு
2)காட்டன் துணி
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இவை சூடு பொறுக்கும் அளவிற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு கல் உப்பை அதில் போட்டு கரையவிட வேண்டும்.அடுத்து ஒரு காட்டன் துணியை அதில் போட்டு நினைத்து கொழுப்பு கட்டி மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

கோடை சரும கொப்பளத்தை போக்க உதவும் 04 குறிப்புகள்!! ட்ரை பண்ணி பாருங்க!!

0

உடலில் காணப்படும் சூட்டு கொப்பளங்கள் சில தினங்களில் மறைய நீங்கள் பின்பற்ற வேண்டிய வீட்டு வைத்தியக் குறிப்புகள் இதோ.

தீர்வு 01:

மஞ்சள் தூள்
தேங்காய் எண்ணெய்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கொட்டி நன்கு கலக்குங்கள்.இதை சரும கொப்பளங்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.

தீர்வு 02:

கற்றாழை ஜெல்
மஞ்சள் தூள்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அதை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்யுங்கள்.பிறகு இதை சூட்டு கொப்பளங்கள் மீது தடவுங்கள்.இப்படி செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 03:

சந்தனப் பொடி
பன்னீர்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனப் பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் சிறிதளவு பன்னீர் ஊற்றி கலக்குங்கள்.இதை சூட்டு கொப்பளம் மீது தடவி நன்றாக காயவிடுங்கள்.இதுபோன்று செய்து வந்தால் கொப்பளங்கள் தானாக குணமாகிவிடும்.

தீர்வு 04:

விளக்கெண்ணெய்
மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை உடலில் காணப்படும் சீழ் கொப்பளங்கள் மீது தடவி நன்கு காயவிடுங்கள்.இப்படி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கொப்பளங்கள் அப்படியே பொடிந்துவிடும்.

ஜாக்பாட் அறிவிப்பு!! மாணவர் மாணவிகளுக்கு அரசு தரும் ரூ 8000!! இது தான் கடைசி உடனே அப்ளை பண்ணுங்க!!

TN GOVERNMENT: தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் பள்ளிப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க காலை உணவு திட்டத்தையும் கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமின்றி, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்காக அவர்களின் சுமையை குறைக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்த்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் பட்டியலின மாணவர் மாணவிகள், வேறு மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழக அரசு திட்டத்தின் கீழ் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையானது கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப் படிப்பு அதாவது கல்லூரி முடிக்கும் வரை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரியில் பயிலுபவர்களுக்கு 7500 முதல் 8000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30ஆம் தேதி தான் கடைசி என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர் மற்றும் மாணவிகள் வரும் 30ம் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், கல்வி சான்று, சாதி சான்றிதழ் உள்ளிட்டவற்றை வைத்து umis.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் தரவுகளில் ஏதேனும் பிழை இருப்பின் அதனையும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.

ஸ்டாலின் அப்பா வா.. ச்சீ சூடு சொரணையே கிடையாதா- சிவி சண்முகம் ஆவேசம்!!

0

ADMK: சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக தன்னை இளைஞர்கள் அப்பா என்று அழைப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அது ரீதியாக தற்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்தவகையில் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தொகுதிவாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடலூர் மாவட்டம் புவனகிரியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கினார்.

மேற்கொண்டு அவர் அந்நிகழ்ச்சியில் பேசியதாவது, யாருக்காவது சூடு சொரணை வெட்கம் இருந்தால் தமிழக முதல்வரை அப்பா என்று கூப்பிட முடியுமா பெற்ற குழந்தை கூட அம்மா என்று தான் அழைக்கும் அப்பா என்று எப்படி சொல்லும் என்று ஆவேசமாக பேசினார்.அதேபோல அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் நீங்கள் ஆயிரம் இல்லை 1500 ரூபாய் பெற்றி றுப்பீர்கள். அது மட்டுமா இலவசமாக வருடத்திற்கு ஆறு சிலிண்டர்களும் வந்திருக்கும். இதனை நீங்கள் தான் தவற விட்டு விட்டீர்கள். அதுமட்டுமின்றி தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தையும் இழந்துள்ளீர்கள்.

மீண்டும் மறைந்த முதல்வர் அம்மா வழியில் அதிமுக ஆட்சி அமைய வேண்டுமென கூறியுள்ளார். இவர் தமிழக முதல்வரை அப்பா என்று அழைப்பவர்கள் சூடு சொரணை அற்றவர்கள் என்று பேசியது சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியானது எம்எல்ஏ அருள் மொழி தேவன் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி மதுபான ஊழல்.. வசமாக சிக்கும் து முதல்வர் உதயநிதி!! ED வலையில் மாட்டிய உயிர் தோழன்!!

0

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஒன்பது மாதங்களில் வர உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் பாஜக மறைமுகமாக திமுகவை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். அமலாக்கத் துறையை வைத்து ஒவ்வொரு முக்கிய இலக்கா அமைச்சர்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான் அமைச்சரவையில் இருந்து முக்கிய மூன்று பேர் மாற்றம் செய்யப்பட்டது.

அதிலும் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான செந்தில் பாலாஜி பதவி விட்டு விலகியுள்ளார். இப்படி இருக்கையில் அடுத்த அடி துணை முதலமைச்சருக்கு கொடுக்க திட்டம் தீட்டிள்ளனர். அந்த வகையில் மதுபான ஆலைகளில் ஊழல் நடந்துள்ளதால் இது ரீதியாக அதன் இயக்குனர் விசாகன் மற்றும் தனியார் மதுபான நிறுவனங்களின் நிர்வாகிகள் தொழிலதிபர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதோடு டாஸ்மாக்கின் முன்னாள் மண்டல மேலாளரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதிலும் குறிப்பாக சினிமா தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் தொழிலதிபர், ரித்தீஷ் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இவர்கள் உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி முன்னிலையில் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் சோதனை செய்ய அமலாக்கத்துறை சென்றபோது அவர் இறுதி வரை வீட்டிற்கு வரவில்லை அப்படியே தலைமறைவாகிவிட்டார்.

இவரையடுத்து தயாரிப்பாளர் ஆகாஷூம் இந்தியாவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் உதயநிதியின் நெருங்கிய சிநேகிதர்கள் என்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை அவர் மீது திரும்பும் எனக் கூறுகின்றனர்.