ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog Page 2

விஜய் அரசியலை விட்டு ஒழியும் வரை எதற்கும் அனுமதி இல்லை.. திமுக போட்ட மாஸ்டர் பிளான்!!

0

TVK DMK: தமிழ் திரையுலகில் மிக பிரபலமாகவும், முன்னணி நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய். இவர் சுமார் ன்றரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பிறகு 2 மாநாடுகள் 6 பிரச்சாரங்களை நடத்திய அக்கட்சி கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர்.

இதனை வைத்து தவெகவை வீழ்த்தி விடலாம் என்று திட்டம் தீட்டிய திமுக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தது. கரூர் பரப்புரைக்கு முன் தவெக பரப்புரை மேற்கொள்வதற்காக பல்வேறு இடங்களில் அனுமதி கேட்டும் திமுக அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. அப்படியே அனுமதி அளித்தாலும், மற்ற கட்சிகளுக்கு விதிக்கும்   கட்டுபாடுகளை விட விஜய் கட்சிக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்த தவெக தலைவர்  நீதி மன்றத்திற்க்கு செல்ல இருப்பதாகவும் தகவல் பரவியது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் நடந்து 1 மாதத்திற்கு மேலாகியும் விஜய் இன்னும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என்ற புகார் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த விமர்ச்சனத்தை வைத்து விஜய் ஒரு நல்ல அரசியல் தலைவர் இல்லை என்று மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமென்று திமுக போராடி வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பாதிக்கபட்டவர்களை  சந்திப்பதற்காக விஜய் தரப்பு பல முயற்சிகளை மேற்கொண்டும் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்காதது போல இதற்கும் அனுமதி அளிக்கமால் திமுக  காலம் தாழ்த்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் செல்வதற்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபிக்கு விஜய் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது. 

பாஜக-விசிக தான் கரெக்டா இருக்கும்.. எங்க கூட வந்துடுங்க திருமா.. நயினாரின் புதிய பிளேன்!!

0

VSK BJP: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல தமிழகத்தில் பாஜகவின் அரசியல் எதிரியான திமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்தார்.

மேலும் திமுகவில் சமூக நீதி இல்லையென்று கூறிய அவர், சமூக நீதி இல்லாத இடத்தில்  திருமாவளவன் ஏன் இன்னும் இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பினார். பாஜகவில் தான் சமூக நீதி இருக்கிறது என்றும் கூறிய அவரின் இந்த கருத்து விசிகவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைக்கும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவிலிருக்கும் மூத்த தலைவர்கள் சிலரும் திருமாவை குறி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக உண்மையிலேயே சமூக நீதியை பின்பற்ற கூடிய கட்சியாக இருந்தால், மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது, துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென்று கூறியிருந்தார். தற்போது நயினாரும் இந்த கருத்தை கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விசிக இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்று தெரியவில்லை. மேலும், விசிக திமுக கூட்டணியியை விட்டு வெளியேறும் என்று யாரும் நினைக்க வேண்டாம் என்றும், அப்படி நாங்கள் வெளியேறிவிட்டால் அதனை எதிர்க்கட்சிகள் தீபாவளியாக கொண்டாடுவார்கள் என விசிக தலைவர் கூறியது குறிப்பிடத்தக்கது . 

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா எடப்பாடி?.. டிடிவி தினகரனால் கூட்டணியில் புதிய சர்ச்சை!!

0

BJP ADMK AMMK: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதில் தமிழக வெற்றி கழகம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அரசியலின் புதிய அலை என பேசப்படும் விஜய்யை கூட்டணிக்கு அழைத்த முயற்சியும் அதிமுக சார்பில் நடந்தது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசையே குறிவைத்து பேசிய பழனிசாமியின் கருத்து, விஜய்யை மறைமுகமாக ஆதரித்ததாக கருதப்பட்டது.

ஆனால் விஜய், திமுகவோ அதிமுகவோ உடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனத் தெளிவாக மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவுடன் இணைந்திருக்கும் அதிமுக, கொள்கை எதிரி என விஜய் கூறும் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தற்போது டிடிவி தினகரனும் எழுப்பியுள்ளார்.

இவரின் இந்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவது போல உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இபிஎஸ்யை கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக எங்களால் வீழ்த்தப்படுவார் எனவும் கூறினார். விஜய்யை மீண்டும் மீண்டும் அழைப்பது சுவை கண்ட பூனை போல் உள்ளது.

அதை விஜய் ஏற்றுக்கொண்டால் அது தற்கொலைக்கு சமம் என்றும் அவர் கடுமையாக சாடினார். மேலும், வினை விதைத்தவன் வினை அறுப்பான். 2026 தேர்தலில் பழனிசாமி நிச்சயம் வீழ்ச்சியடைவார் என தினகரன் எச்சரித்தார். இதனிடையே, அதிமுக–பாஜக கூட்டணியின் எதிர்காலம் மற்றும் விஜய்யின் அரசியல் தீர்மானம் குறித்து அரசியல் வட்டாரங்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.

டெல்டாவில் பறக்கும் அதிமுக கொடி.. இபிஎஸ் போட்ட பிளான்.. திமுக தலைமைக்கு அடி மேல் அடி!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை என்றாலே நம் நினைவுக்கு வரும் கட்சி அதிமுக, திமுக தான். ஆனால் இந்த முறை மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். நான்காவது கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. இந்த முறை இந்த 4 கட்சிகளிடையேயும் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் அந்தஸ்து அதிகம் உள்ள இடத்தில் மற்ற கட்சிகள் அதிக கவனம் செலுத்தும்.

அந்த வகையில் இந்த முறையும், திராவிட கட்சிகள் போட்டியிடுகின்றன. கொங்கு மண்டலம் என்றாலே அதில் எப்போதும் அதிமுக மேலோங்கி நிற்பது வழக்கம். இம்முறை அந்த இடத்தை திமுக பிடிப்பதற்கு முயன்று வருகிறது. அதற்காக செந்தில் பாலாஜியை களமிறக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக கோட்டையை யாராலும் அழிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் இபிஎஸ் திமுகவின் டெல்டா பகுதிகளை குறிவைத்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை சேதமடைந்துள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் பேரிடர் என்பதால் திமுக இதன் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இதை முறியடித்து, நெல் மூட்டைகள் சேதமடைந்ததை சாதகமாக பயன்படுத்த நினைக்கும் இபிஎஸ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் அவரது எக்ஸ் தள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து வருத்தமும் தெரிவித்தார். இதனை சமாளிப்பதற்காக அமைச்சர்கள் தொடங்கி துணை முதல்வர் வரை அனைவரும் ஆதாரத்துடன் பேட்டியளித்து வருகின்றனர். டெல்டா பகுதியில் இபிஎஸ்யின் வருகை அவர் அந்த பகுதிகளை தன் வசப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இவரின் இந்த முயற்சி வெற்றி பெறுமா இல்லையா என்பதை சட்டமன்ற தேர்தல் தான் முடிவு செய்ய வேண்டும். 

புஸ்ஸி ஆனந்தும் வேண்டாம் ஆதவ் அர்ஜுனாவும் வேண்டாம்.. நீங்க மட்டும் போதும்.. விஜய் எடுத்த திடீர் முடிவு!!

0

TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறி கட்சியை துவங்கிய விஜய் தற்போது ஆளே காணாமல் போய் விட்டார். கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாநாடுகள், 5 மாவட்டங்களில் பிரச்சாரம் என கட்சியின் ஆரவாரம் பெருமளவு பேசப்பட்டது. ஆனால் அதனை அடியோடு சறுக்கும் வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் கரூர் சம்பவம். இந்த விபத்து நடந்து சுமார் 1 மாதமாகியும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில் தலை காட்டவில்லை.

துயர நேரத்தில் மக்களுடன் நிற்பவர் தான் உண்மையான தலைவர் என்று பலரும் கூறி வந்த சமயத்தில், சென்னை உயர் நீதிமன்றம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லையென்று கடுமையாக விமர்ச்சித்திருந்தது. விஜய் அரசியலுக்கு புதுசு என்பதால் இந்த மாதிரியான நேரத்தில் தலைவனுடனும், மக்களுடனும் உடனிருக்க வேண்டியது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான். ஆனால் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்ட பிறகும் கூட பொதுச் செயலாளரோ, மாவட்ட தலைவர்களோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இதனால் விஜய் தீவிர ஆலோசனையிலும், மிகுந்த வருத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பதவியிலிருந்து நீக்கி வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமென்று கட்சி நிர்வாகிகள் தலைமையிடம் அறிவுறுத்தி  வந்தனர். இதனால் அந்த இடத்திற்கு ஆதவ் அர்ஜுனா வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது புதிய திருப்பமாக, பொதுச் செயலாளர் பதவி கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் பொதுச் செயலாளர் இடத்திலிருந்து அனைத்து வேலைகளையும் ஜான் ஆரோக்கியசாமி தான்  செய்து வருகிறாராம். இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் அவரின் ஆதரவு பெருகி வருவதால், அவர் இந்த பதவிக்கு சரியாக இருப்பார் என்ற கருத்து தவெக உள்வட்டாரத்தில் பேசப்படுவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

சந்தேகத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு.. பின்னணியில் மறைந்திருக்கும் கூட்டணி கணக்கு.. திமுக அச்சம்!!

0

DMK TVK CONGRESS: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி கணக்குகளில் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்கும் முயற்சி தான் முழு வீச்சில் துவங்கி இருக்கிறது. அதற்கடுத்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை விஜய் கூட்டணிக்கு கையேந்தும் நிலைமை வந்து விட்டது.

இந்த நிலை திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களுடைய  தனி பெரும்பான்மையை இழந்து விட்டதை தெளிவாக காட்டுகிறது. மேலும், தவெகவின் முடிவை பொறுத்து தான் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், பாஜக-காங்கிரஸ் விஜய் கூட்டணிக்காக கடுமையாக மோதி கொள்கிறது என்றே கூறலாம். பாஜக கரூர் விவகாரத்தில் முழுக்க முழுக்க விஜய்யின் குரலாகவே செயல்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால் காங்கிரஸ் நேரடியாக தனது விருப்பத்தை தெரிவிக்காமல் தமிழக காங்கிரஸ் தலைவர்களை வைத்து காய் நகர்த்தி வருகிறது.

கே.எஸ். அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த என அனைவரும் ஒரே மாதிரியாக கழக குரல் எழுப்புவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. நேற்று கூட மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனில் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று கூறியிருந்தார். ஆனால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக முக்கியத்துவம்  வழங்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களின்  இந்த பேச்சு திமுக அரசு மீது குற்றம் சுமத்தி விட்டு விஜய் பக்கம் செல்லும் சதி வேலையாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. 

விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜு.. தூக்கி போட்டு கீழே மிதிக்கவும் செய்வோம்.. பரபரப்பு பேட்டி!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் புதிதாக தலை தூக்கியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார் என்று ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சி வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விஜய்க்கு இளைர்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக திட்டம் தீட்டி வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திமுகவை வீழ்த்த விஜய் என்னும் அஸ்திரத்தை  பயன்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார். இது விஜய்யின் ஈகோவை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது, விஜய்யை மேலும் கோபப்படுத்தும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு கருத்தை கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக 54 வது தொடக்க விழா மாநாட்டில் பேசிய அவர், ஸ்டாலினை இன்னும் யாரும் தலைவராக ஏற்று கொள்ளவில்லை என்றும், உதயநிதியை மக்கள் இன்னும் ஒரு கல் ஒரு கண்ணாடி பட கதாநாயகனாகவே பார்க்கிறார்கள் என்றும்  கூறினார்.மேலும் அதிமுக கூட்டணிக்காக  அலைவதாக கூறுகிறார்கள், எங்களுக்கு அந்த அவசியம் கிடையாது, எங்களுக்கு துணையாக யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம், தோழனுக்கு தோள் கொடுப்போம், அதே தோழன் காதை கடித்தால் தூக்கி கீழே போட்டு மிதிக்கவும் செய்வோம் என்று கூறினார்.

இவரின் இந்த கருத்து, விஜய்யை மறைமுகமாக எச்சரிப்பது போல இருப்பதாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். விஜய் ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து துரோகம் இழைத்தால் அவரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்பதை அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார். 

மனிதநேய மக்கள் கட்சியின் அசத்தலான முடிவு.. இனி தனி ரூட் தான்.. பரபரக்கும் தேர்தல் களம்!!

0

MMK: மனிதநேய மக்கள் கட்சி 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர் ஜவாஹிருல்லா ஆவார். கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இந்த கட்சி தோல்வியை தழுவியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து ஆம்பூர், ராமநாதபுரத்தில் வெற்றி பெற்ற இந்த கட்சியை சேர்ந்த இருவர் சட்டமன்ற  உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பிறகு 2016 இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய போவதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்தார்.

அப்போது அந்த அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த 5 தொகுதிகளிலும் மனிதநேய மக்கள் கட்சி தோல்வியை தழுவியது. பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக உடன் கைகோர்த்த இந்த கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை தேர்தல் ஆணைய பட்டியலிலிருந்து நீக்க திட்டமிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியிலிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியை ஏன் நீக்க கூடாது என்று அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தற்போது ஜவாஹிருல்லாவும், அப்துல் சமது ஆகிய இருவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே சட்டமன்றத்தில் இருக்கின்றனர். அதனால் தான் அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் இது போன்ற சிக்கல்களை தடுக்க சட்டமன்ற  தேர்தலில் தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் ஆலோசனையை திமுகவிடம் முன்வைக்க இருப்பதாகவும் அக்கட்சி முடிவெடுத்திருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.  

செங்கல் கூட நடாத திமுக அரசு.. மருத்துவமனைக்கு குடிநீர் கழிவறை கூட இல்லை..பாஜக தலைவர் கடும் தாக்கு!!

0

DMK BJP: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதாக கூறிய தேர்தல் வாக்குறுதி எண் 354 இன்னும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

தாம்பரம் அரசு மருத்துவமனை குறித்து பேசும் போது, இரண்டு மாதங்களுக்கு முன் நான் தானே தொடங்கி வைத்தேன் என்று முதல்வர் கூற வேண்டாம். ரூ.110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அந்த மருத்துவமனையில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளே இல்லை இதுவே நிதர்சனம் என்று நாகேந்திரன் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், சோழிங்கநல்லூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்க படவே இல்லை எனவும், அந்த பகுதிகளில் செங்கல் கூட நடப்படவில்லை எனவும் கூறினார். ஏழை மக்களின் உடல் நலம் புறக்கணிக்கப்பட்டு, அரசு வெறும் வெற்று விளம்பர அரசாக மாறியுள்ளது, எனவும் அவர் கூறினார். திமுக அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டன என்றும், அகங்காரத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசு, மக்களின் கோபத்தில் சாம்பலாகும் நாள் வெகு தூரமில்லை.

2026 தேர்தலில் மக்கள் இதை மறக்க மாட்டார்கள் என்றும்  அவர் எச்சரித்தார். ஏற்கனவே திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை எதிர்க்கட்சிகளும், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் விமர்சித்து வரும் நிலையில் ணியினாரின் இந்த விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுத்தம் செய்பவர்களை பட்டினி போடக் கூடாது.. தமிழக அரசின் மனித நேயம் தீர்மானம்!!

0

DMK: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிப்பன் பில்டிங் அருகே 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுமதியில்லாத இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறி, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் போலீசார் போராட்ட இடத்திற்கு திரளாக குவிக்கப்பட்டு, பலரை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்தச் சூழ்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற்ற 21வது அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுவது, அவர்களின் குழந்தைகளுக்கு உயர் கல்வி ஊக்கத்தொகை, குடும்பத்தினருக்கு சுயதொழில் உதவி, 10 லட்சம் காப்பீடு, 30,000 வீடுகள், மேலும் பணியின் போது உயிரிழந்தால் 10 லட்சம் நிவாரணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என  மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் புதிய திட்டத்திற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக, இந்தத் திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் எனவும், பின்னர் மாநிலத்தின் பிற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி, சமூகத்தின் அடித்தட்டு மக்களின் நலனை உயர்த்தும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.