வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 2

காங்கிரஸ்-தி.மு.க உறவில் பிளவு? கார்த்திக் சிதம்பரத்தின் கடும் குற்றச்சாட்டு! சிக்கலில் தி.மு.க

0

D.M.K: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் கட்டத்தில் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அதிமுக, பாமக கட்சிகளிடையே தலைமை போட்டியும், முக்கிய தலைவர்களின் பிரிவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக மிகவும் நேர்த்தியான முறையில் கூட்டணி கட்சிகளிடமும், மக்களிடமும் தங்களின் ஒற்றுமையையும், நிலைப்பாட்டையும் உறுதி செய்து வருகிறது.

இதனால் அடுத்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் திமுக இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு வெறும் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினர்.

இதனை தொடர்ந்து கார்த்திக் சிதம்பரமும் அவருடைய கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் திமுக தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசு முடிவுகளில் காங்கிரஸ் கருத்துகள் மதிக்கப்படவில்லை என்றும், கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக தனிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினர்.

“கூட்டணியின் பலம், அனைவரின் பங்களிப்பில் தான் இருக்கிறது. ஆனால், காங்கிரசுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை” என்ற அவரது கூற்று, கூட்டணி அரசில் புதிய பிளவைஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் கூட, திமுக-வுடனான கூட்டணி குறித்து கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடும் வாய்ப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. கார்த்திக் சிதம்பரத்தின் இந்த கூற்றுகள், அரசியல் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. திமுக தரப்பில் இதற்கு என்ன பதில் வரும் என்பது அடுத்த கேள்வியாக உள்ளது.

அ.தி.மு.க-வில் உருவாகும் புதிய கூட்டணி! த.வெ.க கூட்டணியில் பங்கு பெறுமா?

0

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிக பெரிய கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக தற்போது பல்வேறு சிக்கல்களையும், உட்கட்சி பிளவுகளையும் சந்தித்து வருகிறது. இது நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக-விற்கு பாதகமாக அமையலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆனாலும் மற்ற கட்சிகளை போலவே தேர்தலுக்கு தயாராகி கொண்டிருக்கும் அதிமுக கடந்த 1 வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணியை அமைத்துவிட்டது. இந்த கூட்டணி தொடரும் பட்சத்தில், பாஜக கூட்டணியில் இருந்து டி.டி.வி தினகரன் விலகி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த கூடாது என்று கூறி புதிய திருப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனால் அதிமுக-வில் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக பல அணிகளாக பிரிந்திருக்கும் நிலையில் அக்கட்சியுடன் யார் கூட்டணியில் இணைய போகிறார்கள் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்ட போது அதிமுக எங்களுக்கு நிரந்தர எதிரியும் அல்ல; நிரந்தர நண்பனும் அல்ல என்று கூறினார்.

இதனால் அவர் அதிமுக-வில் இணைய போவதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யின் தலைமையில் உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகம், அதிமுக-வின் நிரந்தர எதிரியான திமுக-வை எதிர்த்து வருவதால், இ.பி.எஸ் தவெக-விற்கு அழைப்பு விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் எந்த பதிலும் கூறாமல் இருப்பது அவர் எதிர்காலத்தில் அதிமுக-உடன் கூட்டணி அமைப்பார் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

அதிமுக-வுடன் தேமுதிக, மதிமுக, தவெக போன்ற கட்சிகள் இடம் பெறுமா என்பது சட்டமன்ற தேர்தலில் தான் தெரியவரும். அதிமுக தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி, வரவிருக்கும் தேர்தலில் திமுக-வுக்கு கடுமையான சவாலாக அமையுமா என்பது அரசியல் ஆர்வலர்களின் கேள்விக்குறியாக உள்ளது.

வெறிச்சோடிய ஒரத்தநாடு கூட்டம்.. பிரேமலதாவின் வெளிப்படையான அதிருப்தி!

0

D.M.D.K:தேமுதிக தலைவராக விஜயகாந்த் இருந்த போது அக்கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு, தேர்தல் பிரச்சாரத்திற்கும் பெருமளவு தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி தேமுதிக கட்சி பின்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், கட்சிக்கான மக்களின் ஆதரவும் குறைந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆனால், அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த அளவில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதனால் கோபமடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது அதிருப்தியை வெளிப்படையாக காட்டியிருந்தார். “கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியும் ஆகும்” என்று கூறினார்.

இவ்வாறான குறைந்த பங்கேற்பு, தேமுதிக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, பொதுச்செயலாளர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் ஏற்ற பிறகு, கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதற்காக கூட்டணி அமைப்பதும், பிரச்சாரம் செய்வதும் என பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் கைக்கொடுப்பதாக தெரியவில்லை. தலைமை மாற்றத்திற்கு பிறகு தேமுதிக பல இடங்களில் பலவீனமடைந்துள்ளதை இந்த சம்பவம் காட்டுகிறது. இது, தேமுதிக-வின் எதிர்கால வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. அதேசமயம், அடுத்தடுத்த தேர்தல்களை முன்னிட்டு பிரேமலதா, நிர்வாகிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகள் எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்தை மறைமுகமாக சாடிய இ.பி.எஸ்! கைக்கூலிகள் எனவும் விமர்சனம்..

0

A.D.M.K: நீண்ட நாட்களாகவே அதிமுக-வில் பிரிவுகள், தலைமை பிரச்சினை என பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய இ.பி.எஸ் தற்போது கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனையும் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டுமென்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், செங்கோட்டையன் எந்த விதமான கருத்தும் கூறாமல் இருப்பது இ.பி.எஸ் பாஜக-விடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தர்மபுரியில் நடைபெறவிருந்த அதிமுக பிரச்சாரத்தை வானிலை நிலவரத்தை காரணம் காட்டி இ.பி.எஸ் ஒதுக்கி வைத்திருப்பது அவர் டெல்லி செல்வதற்கான அறிகுறி என்றும், அமித்ஷா-விடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கு பதிலளித்த இ.பி.எஸ் மழை காரணமாக மட்டுமே பிரச்சாரம் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, நான் டெல்லி செல்கிறேன் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறேன் என்று கூறுவதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், துணை முதலமைச்சர் பதவி கொடுத்ததும் சிலர் திருந்தவில்லை என்று ஓ.பி.எஸ்-யை மறைமுகமாக சாடியுள்ளார். எனக்கு ஆட்சியை விட தன்மானமே முக்கியம். கைகூலிகளை வைத்து ஆட்டம் போட்டனர். அவர்கள் இப்போது கண்டெடுக்க பட்டுவிட்டனர். சிலர் அதிமுக-வை அழிக்க பார்த்தார்கள். ஆனால் அது நடக்க நான் விட மாட்டேன்.

அதிமுக உடைய காரணமாக இருந்தவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும் என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு பேசி இருப்பது பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க முடியாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

“எதையும் எதிர்ப்பது தி.மு.க வழக்கம்”-நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

0

D.M.K B.J.P: பல வருடங்களாகவே பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. என்னதான் மத்திய அரசில் வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் நிலை பெறுவது பாஜக-விற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது. தனியாக தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக, கூட்டணி வைத்தாவது திமுக-வை ஆட்சியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அதிமுக உடனான கூட்டணியில் திட்டம் தீட்டி வருகிறது.

இந்நிலையில் மதுரை அண்ணா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜி.எஸ்.டி குறைப்பு மத்திய அரசு மக்களுக்கு வழங்கிய தீபாவளி பரிசு என்றும், இதன் மூலம் பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் லாபம் அடைந்துள்ளனர்.

ஆனால், தமிழக முதலமைச்சர் இதனை பாராட்ட மறுக்கிறார். வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டால் குத்தம், கால்ப்பட்டால் குத்தம் என்ற பழமொழியை போல் மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும் பழக்கம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு என்றும், மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதனை, பாராட்டுவதற்கு முதல்வர் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார்.

மேலும் பேசிய அவர் அதிமுக-வில் ஜனநாயகம் உள்ளதால் அதிமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்தித்து வருகிறார்கள். திமுக-வில் ஜனநாயகம் இல்லாததால் திமுக தலைவர்கள் அமித்ஷா-வை சந்திக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அதே போல் அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்பதே என்னுடைய கருத்து என்றும் கூறினார்.

இளைஞர் ஆதரவுக்கான நேரடி போட்டி: உதயநிதி VS விஜய்?

0

T.V.K D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் வலுவான கோட்டையாக கருதப்பட்டாலும், சமீபத்தில் ஏற்பட்ட பிரிவுகள், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் போன்றோரின் பிரிவுகள் அதிமுக ஆதரவாளர்களை குறைத்துள்ளது. இந்த சூழலில் திமுக தனது செல்வாக்கை விரிவாக்க உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது.

திமுக-வின் இளைஞர் முகமாக திகழும் உதயநிதி, சேலம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால், இந்த முன்னேற்றம் வெறும் அதிமுக-வுக்கு மட்டுமல்ல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கும் சவாலை ஏற்படுத்தும். காரணம், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்கள் மீது விஜய்க்கு அதிக ஆதரவு இருக்கிறது.

திமுக அதே இளைஞர் வாக்காளர்களை கவர முயற்சி மேற்கொண்டால், விஜய்யின் வாக்கு வங்கியில் குறைவு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், விஜய்யின் அரசியல் வளர்ச்சிக்கும் சவாலை ஏற்படுத்தும். விஜய்க்கு முக்கிய பலமாக கருதப்படும் இளைஞர்கள் மீது உதயநிதி தாக்கம் செலுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது விஜய்க்கு நேரடி போட்டியாக மாறும் அபாயம் உள்ளது.

ஆனால், இதை மறுபுறமாக பார்க்கும்போது, உதயநிதியின் வருகை விஜய்க்கு ஒரு மறைமுக வாய்ப்பையும் தரலாம். காரணம், அதிமுக கோட்டையில் திமுக வலுப்பெறும் பட்சத்தில், அதிமுக-வில் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் புதிய மாற்றத்திற்காக விஜய்யை நாடலாம். இதனால், விஜய்க்கு முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களின் ஆர்வம், தவெக-வுக்கு இன்னும் பெரிய பலமாக இருக்கும்.

சேலத்தில் உதயநிதி வருகை இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் . ஒன்று, விஜய்க்கு இளைஞரின் வாக்கில் குறைவு ஏற்படும். இரண்டாவது, அதிமுக பிளவு காரணமாக விஜய்க்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில், இந்த அரசியல் போட்டி யாருக்கு பலன் தருகிறது என்பதை அடுத்தடுத்த தேர்தல் சூழ்நிலைகள் தான் தீர்மானிக்கும்.

சேலத்தில் திமுக வியூகம் தீவிரம்! இளைஞர் வாக்காளர்களை கவர உதயநிதியின் சேலம் மிஷன்..

0

A.D.M.K  D.M.K: சேலம் எப்போதுமே அதிமுக-வின் கோட்டையாக கருதப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், அதிமுக வாக்காளர்கள் இங்க அதிகம் இருக்கின்றனர். ஆனால், சமீபத்தில் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள், தலைமை மாற்றம், செங்கோட்டையன், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் பிரிவுகள், அதிமுக வலிமையை குறைத்துவிட்டன.

இந்த சூழ்நிலையில், திமுக மிகவும் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சேலத்திற்கு வருகை தருகிறார். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; இது தி.மு.க-வின் தேர்தல் யுக்தியாக கருதப்படுகிறது. இளைஞர்களிடையே தனக்கு அதிக வரவேற்பு இருப்பதாக திமுக நம்புகிறது.

இதனால் இளைஞர்களிடையே தன்னுடைய செல்வாக்கை மேலும் விரிவாக்கும் முயற்சியோடு, அதிமுக-வின் பாரம்பரிய கோட்டையை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. திமுக-வின் மூத்த தலைவர்கள், “அதிமுக தற்போது பலவீனமடைந்துள்ளது. இந்த சூழலில் அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் சேலம் போன்ற பகுதிகளில் திமுக வலிமை பெற வாய்ப்புள்ளது” என நம்புகின்றனர்.

அதேவேளை, எடப்பாடி அணியினர் சேலம் எங்கள் கோட்டை, எங்கள் வாக்காளர்கள் அசைய மாட்டார்கள் என்று உறுதியாக கூறி வருகின்றனர். சேலத்தில் திமுக வலுவடையும் பட்சத்தில், அது பெரிய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். அதிமுக-வின் அடிப்படை வாக்காளர்கள் குறைந்தால், அது வரவிருக்கும் தேர்தலில் அதிமுக-வுக்கு பெரிய சவாலை உருவாக்கும்.

இதை உணர்ந்த திமுக, சேலத்தில் தன் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்படுகிறது. உதயநிதியின் இந்த வருகை அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர்களிடையே அதிக வரவேற்பை பெற்றிருக்கும் உதயநிதி, அதிமுக-வின் பாரம்பரிய ஆதரவாளர்களிடமும் தாக்கம் ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயநிதியின் வருகையால் திமுகவு-க்கு சேலத்தில் புதிய நிலை கிடைக்குமா? அல்லது அதிமுக தனது கோட்டையை தக்க வைத்துக் கொள்கிறதா? என்பது தான் அடுத்த கட்ட அரசியல் கேள்வி.

எனக்கு பதவியெல்லாம் முக்கியமில்லை.. எடப்பாடி பகீர் பேச்சு!! பரபரப்பில் டெல்லி தலைமை!!

0

ADMK BJP: அதிமுக கட்சியானது நான்கு முனைகளாக பிரிந்துள்ளது. அதிலும் சமீபத்தில் செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறி எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். அவர்கள் கெடு விதித்த மறுநாளே அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி எடப்பாடி உத்தரவிட்டார். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் செங்கோட்டையன் உடனடியாக டெல்லி சென்று நிதியமைச்சர் உள்ளிட்டவர்களை பார்த்து வந்தார். கூட்டணி அமைத்திலிருந்தே பாஜக சைலன்டான முறையில் அதிமுகவை கையாள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அந்த வகையில் கட்சியிலிருந்து நீக்கிய மற்றவர்களை கூட பார்க்க நேரம் ஒதுக்காமல் செங்கோட்டையனிடம் என்ன பேச்சுவார்த்தை நடந்திருக்கும் என்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இவர் மீண்டும் கட்சியிலிருந்தால் மட்டும்தான் கோபிசெட்டிபாளையம் எனத் தொடர்ந்து சாதிய வாக்குகள் என அனைத்தும் கிடைக்கும். ஆனால் தொடர் பிரச்சனைகளால் அதிமுக வலுவிழந்து வந்தால் சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி எதிலும் தலை தூக்க இயலாது. இந்த நிலைமை மாறவேண்டுமென்றால் எடப்பாடி ஒரு அடி கீழே இறங்கிதான் வரவேண்டும்.

அதற்காக இவர் டெல்லி செல்ல உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. மேலும் கட்சியிலிருந்து வெளியேறிய செங்கோட்டையனை மீண்டும் இணைக்க சமாதானம் பேசுவதாகவும் கூறியிருந்தனர். இது ரீதியாக நேரடியாகவே எடப்பாடி யிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, என் தன்மானத்தை இழந்து நான் எதையும் செய்ய மாட்டேன், அதிகாரத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் எனக் கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் இவர் டெல்லி செல்ல வாய்ப்பில்லை மீண்டும் செங்கோட்டையன் கட்சியில் எந்த ஒரு பதவியிலும் தொடர முடியாது என்பது திட்ட வட்டமாக தெரிகிறது.

அ.தி.மு.க தலைமை மாற்றம்!! எடப்பாடி தலையில் விழும் பெரும் இடி!!

0

A.D.M.K: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி-யின் தலைமையை ஏற்க விரும்பாத சில முக்கிய தலைவர்கள் குறிப்பாக டி.டி.வி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பை தேடி வருகின்றனர். இ.பி.எஸ்-யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று டி.டி.வி தினகரன் கூறி இருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவு அதிகம் இருப்பதால் செங்கோட்டையனை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்களா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. பிரிந்த குழுக்களை இணைக்கும் திறன் அவரிடம் அதிகம் உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் இதற்கு தடையாக இருப்பது இ.பி.எஸ் தான். ஏனென்றால் கட்சியின் அதிகாரம், சட்டபூர்வ அங்கீகாரம் தற்போது அவர் கையில் தான் உள்ளது.

எனவே தலைமை மாற்றம் உடனடியாக நிகழ வாய்ப்பு இல்லை. இ.பி.எஸ் தலைமையில் அதிமுக செல்லும் பட்சத்தில் பிரிந்த குழுக்கள் தனித்தனியாக செல்லலாம். மாறாக செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளர் ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. அதிமுக-வின் தலைமை மாற்றமே அடுத்த தேர்தலில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இ.பி.எஸ் ஒதுங்கினால் தான், செங்கோட்டையன் முதல்வர் வேட்பாளராகவும், பிரிந்த அணிகள் ஒருங்கிணையவும் முடியும். இல்லையென்றால், அதிமுக பிரிந்த நிலையிலே தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இது எடப்பாடி-யின் தலைமைக்கு ஆபத்தாக மாறுவதோடு, அதிமுக சட்டமன்ற தேர்தலிலும் பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறுகின்றனர்.

காலையிலேயே பரபரப்பு: பாமக தலைவர் அன்புமணி கிடையாது.. செக் வைக்கும் ராமதாஸ்!!

0

PMK: பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதன் முழு அங்கீகாரத்தையும் அன்புமணிக்கு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் சார்பாக இரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருவரும் நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் யாருடைய பொதுக்குழு கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டும் என்று விமர்சனம் செய்து வரும் போதே அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கிவிட்டார்.

ஆனால் நேற்று அன்புமணியின் பொதுக்குழு தான் செல்லும் எனவும்  2026 வரை அவர் தான் தலைவர் அவர் எடுக்கும் முடிவுகள் தான் இறுதி எனக் கூறி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறினார். இதனை ராமதாஸ் அணியினர் சிறிதும் கூட ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் ராமதாஸ் தான் தலைவர் என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது கட்சிச் சின்னம் மற்றும் அதன் முடிவுகளை பறிக்கவே இப்படி செய்கின்றனர் என தனது கொந்தளிப்பை எம்எல்ஏ அருள் வெளிப்படுத்யுள்ளார்.

மேலும் இது ரீதியாக அவர் கூறுகையில், 46 வருடமாக இந்த இயக்கத்தை கட்டி காத்து வந்த நிறுவனரிடமிருந்து பறிக்க நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கட்சிக்காக 21 பேர் உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். அப்படி இருக்கையில் வழக்கறிஞர் பாலு பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இதனால் கட்சி கொடி சின்னம் என எதையும் ஆக்கிரமிக்க முடியாது. இது ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராமதாஸ் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.