சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 2

தவெக விஜய்யின் மாநாட்டுக்கு வரும் தடை!! வெளியான ஷாக் நியூஸ்!!

0

TVK: தமிழகத்தில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விஜய்யின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரை மாவட்டத்தில் 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்று கனமழை பெய்யக்கூடுமா? அப்படி பேயும் பட்சத்தில் மாநாடு நடக்குமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது.

இது ரீதியாக தனியார் வானில ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், மதுரையை பொருத்தவரை வரும் 21 ஆம் தேதி பகல் நேரத்தில் அதீத வெப்பநிலையும் அதாவது 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மாலை நேரம் வெப்பம் குளிர்ந்து கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. அதிலும் மதுரை மாவட்டம் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இயல்பான நாட்களில் வரும் வெப்பநிலையை காட்டிலும் அன்று அதிகமாகவே இருக்கும். அதேபோல வெயிலும் தாக்கமும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மழை இரவு நேரம் முழுவதும் நீடிக்கும் என கூறியுள்ளதால் மாநாட்டு தேதியில் மாற்றம் ஏற்படுமா என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இரண்டாவது மாநாட்டில் தேதியானது தற்போது இரண்டாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலில் பண்டிகை தினங்கள் மாநாடு எனக்கூறி அனுமதி அளிக்காததால் 21 ஆம் தேதியை தேர்ந்தெடுத்தனர். தற்போது மழை பாதிப்பானது அதிகமாக இருக்கும் எனக் கூறுவதால் தொண்டர்கள் ரசிகர்கள் நலனை எண்ணி தேதியை மாற்றலாம் என தெரிவித்துள்ளனர். கடந்த முதல் மாநாட்டிலேயே சரியான திட்டமிடல் இல்லாததால் தொண்டர்கள் பலரும் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.

தற்பொழுதும் அது போல் எந்த ஒரு சிரமமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் முனைப்புடன் வேலைகளை பார்த்து வருகிறது. அந்த வகையில் கனமழை பெய்யும் எனக் கூறினால் மாநாடு நடத்த முடியாமல் போகும் இதனால் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர்.

திரையில் கூலி – வாழ்விலும் கூலி: ஒன் இந்தியா கொண்டுவந்த வித்தியாச கொண்டாட்டம்!!

0

முதன்முறையாக, ஒன் இந்தியா திரைப்பட காட்சியை ஒரு சாதாரண நிகழ்வாக அல்லாது, உண்மை வாழ்க்கை நாயகர்களின் கொண்டாட்டமாக மாற்றியது. எதிர்பார்க்கப்பட்ட கூலி படத்தின் சிறப்பு காட்சிக்காக, சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் 100 கூலிகளையும், 50 வாசகர்களையும் ஒன்றாகக் கூட்டி, மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்தியது.

“சென்னை துறைமுகத்திலிருந்து பெரிய திரை வரை” என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சி, ரீல் உலகமும் ரியல் உலகமும் சந்திக்கும் பாலமாக அமைந்தது. தினசரி உழைப்பாலும் மன உறுதியாலும் வாழும் கூலிகள், படத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் நாயகர்களாக அழைக்கப்பட்டனர். மேலும், திறந்த போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வாசகர்களும் அவர்களுடன் சேர்ந்து திரையரங்கில் பங்கேற்றனர்.

இந்த முயற்சி குறித்து ஒன் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ராவணன் என். கூறியதாவது:
“ஒன் இந்தியாவில், திரையில் சொல்லப்படும் கதைகளின் சக்தியிலும், அன்றாட வாழ்க்கையில் அமைதியாக வாழப்படும் கதைகளின் சக்தியிலும் நாங்கள் நம்புகிறோம். சென்னை துறைமுக கூலிகளையும் எங்கள் வாசகர்களையும் கூலி படக்காட்சிக்காக ஒன்றுபடுத்தி, காணப்படாத நாயகர்களுக்கு ஒளி பாய்ச்சி, சினிமாவின் மந்திரத்தை கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். உண்மையான வாழ்க்கை, உண்மையான போராட்டங்கள், உண்மையான பாரதத்தை கௌரவிக்கும் வழி இதுவாகும்.”

திரையரங்கம் வெறும் கைதட்டல்களால் மட்டுமல்ல; உணர்ச்சி பூர்வமான பிரதிபலிப்புகள், நன்றியுணர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றால் முழங்கியது. முக்கிய காட்சிகளில் எழுந்த ஆரவாரங்களிலிருந்து அமைதியான ஒப்புதல்கள் வரை, சினிமாவுக்கும் அன்றாட வாழ்க்கை நாயகர்களுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தியது.

இந்த தனித்துவமான முயற்சியின் மூலம், ஒன் இந்தியா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது – அங்கீகாரத்தை சென்றடைவையும், கதை சொல்லலையும் சமூக தாக்கத்தையும் ஒருங்கிணைக்கும் திறனை ஒரு திரைப்பட வெளியீடு என்பது வெறும் பிரசாரம் மட்டுமல்ல, தானே ஒரு கதை ஆக கூட மாற முடியும்.

அதிமுக பாஜக கூட்டணிக்குள் திடீர் பிரளயம்.. விஜய் பக்கம் ஓடும் எடப்பாடி!! வாய்திறந்த முக்கிய புள்ளி!!

0

ADMK TVK: அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன் பல்வேறு விமர்சனங்களும் அரசியல் களத்தில் பேசப்பட்டது. அதாவது விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறார் இது ரீதியாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அது ஏதும் ஒத்துவராமல் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தனர். இவர்களுடன் சில கோட்பாடுகளை முன்னிறுத்தி தான் கூட்டணி அமைத்தனர்.

ஆனால் தற்போது அதிமுக தலைமையில் கேட்காமலேயே செய்து ஊடகத்திற்கு, இலையின் மீது தான் தாமரை மலரும் கூட்டணி ஆட்சி எனக் கூறி வருகின்றனர். இது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை. அதேபோல வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டோரை இணைக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.

இவர்களெல்லாம் கட்சியில் ஒருபோதும் இணையக்கூடாது என்பதை தான் எடப்பாடி வழிமொழிந்து வருகிறார். ஆனால் இதனையும் பாஜக காது கொடுத்து கேட்கவில்லை. இப்படி இருக்கையில் மீண்டும் விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்ற ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக நாம் தமிழர் கட்சி அபுபக்கர் கூறியுள்ளார். இது ரீதியாக மேலும் அவர் கூறியதாவது, நமக்கு எப்படி தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவும் தமிழக அளவில் திமுக அதிமுகவும் எதிரிகளோ விஜய்யும் அப்படி தான்.

மேலும் கட்சி ரீதியாக விமர்சனம் செய்யும் பொழுது அதில் உள்நோக்கம் ஏதும் சொல்லக்கூடாது. மற்ற கட்சிகளைப் போல இதையும் எதிர்க்கட்சியாக தான் விமர்சிக்க வேண்டும். அதேபோல தேசியமும் திராவிடமும் கலந்தது தான் எங்களது கட்சியின் கொள்கை எனக் தவெக வினர் கூறி வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை.

அதேபோல பாஜக மற்றும் திமுகவின் ரகசிய கைக்கூலியாக விஜய் இருப்பாரோ என்று சந்தேகமும் எழுந்துள்ளது. தற்போது வரை சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு அறிக்கை கூட வெளியிவிடவில்லை. மேலும் தனது கட்சியில் அம்பேத்கர் மற்றும் ஈவேராவை கொள்கை தலைவர் என கூறி வருகிறார் ஆனால் தற்போது வரை கவின் ஆணவ படுகொலைக்கு எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

இதைப் பற்றி பேசினால் அவரது வாக்கு வங்கியை குறையும் என்பதால் வாய் திறக்காமல் உள்ளார். மாறாக லாக்கப் மரணமடைந்த அஜித்குமார் வழக்கில் மட்டும் தலையீடு செய்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி தற்போது வரை தனித்து தான் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி சரி வராததால் மீண்டும் விஜய் பக்கம் எடப்பாடி திரும்பி உள்ளார்.

இதனால் கட்சிக்குப் பின்னணியில் மறைமுக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. குறிப்பாக தொகுதி பங்கீடு குறித்து தான் பேரம் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ADMK வுக்கு கொடுத்த கிரீன் சிக்னல்.. அன்புமணியை ஓரங்கட்டிய பாமக!! டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்!!

0

PMK ADMK:பாமகவில் ராமதாஸ் உடைய பொதுக்குழு கூட்டமானது வெற்றிகரமாக இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழுவின் பின்னணியில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளனர். அதாவது பெரும்பாலும் இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை வெளியேற்றாமல் அவருடைய பவரை மட்டும் பறித்துள்ளனர். சொல்லப்போனால் கட்சிக்குள் டம்மியாக்கி வைத்துள்ளனர்.

முதலில் பொதுக்குழு கூட்டம் தொடங்கப்பட்ட போது அன்புமணிக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படும் என நினைத்திருந்தனர். ஆனால் அந்த இடத்திற்கு காந்திமதி அமர்ந்தபட்டது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அந்த வகையில் அன்புமணியை நீக்கிவிட்டு அதற்கு நேர் எதிராக தனது மகள் காந்திமதியை இறக்குவது அப்பட்டமாக காட்டிவிட்டார். அதேபோல காந்திமதியின் மகன் முகுந்தனும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மூலையில் இருந்தார். அவரை அமர சொல்லியும் அமரவில்லை.

அதுமட்டுமின்றி இதில் அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்கும்படி தீர்மானமும் வரையறுத்துள்ளனர். இதனையெல்லாம் நீக்குவது வெகு தொலைவில் இல்லை. மேலும் முகுந்தனுக்கு அடுத்த பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக கூறுகின்றனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி என்று கூச்சலிட்டுள்ளனர். தற்போது பாமகவின் தலைவராக ராமதாஸ் உள்ள நிலையில் கூட்டணி குறித்து உங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு தான் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்ற ஹின்டையும் கொடுத்துள்ளார். அதன் மூலம் வரும் நாட்களில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மோடியுடன் ரகசிய டீல்.. ரீ என்ட்ரி கொடுக்கும் ரஜினி!! விஜய்க்கு வரும் நேரடி சவால்!!

0

BJP TVK: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்திலிருந்து பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவளித்து வருகிறார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைத்ததில் இருந்து தற்போது வரை மிகவும் நல்ல தலைவர் மோடி தான் என கூறுகிறார். அப்படி இருக்கையில் தற்போது ரஜினியை சினிமா பயணம் 50 ஆண்டுகளை கடந்துவிட்டது.

அந்த வகையில் 171 வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி வெளியாகி வெற்றி நடை போடுகிறது. ரஜினி 50 ஆண்டுகளைக் கடந்ததால் சினிமா வட்டாரங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மோடி தனது எக்ஸ்ட்ராத்தில் இது ரீதியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளித்து ரஜினியும், உங்களிடமிருந்து வாழ்த்து பெற்றது மிகவும் சந்தோஷம்.

மேலும் நீங்கள் தான் ஆகச்சிறந்த நல்ல தலைவர் என்றும் பாராட்டினார். இவ்வாறு இருக்கவே சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரசுக்குள் வருவதாகவும் கூறினார். பின்பு அரசியல் பயணம் சரி வராது எனக் கூறி பின் வாங்கினார். அப்படி இவர் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தால் கட்டாயம் பிஜேபி வசம் தான் இருப்பார் என்பதில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ரஜினி நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறி வந்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் எட்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆதரவு பாஜகவுக்கு தான் என்பதை வெளிகாட்டும் விதமாக இவையனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் தேர்தல் சமயத்தில் நட்சத்திர பேச்சாளராக கூட களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏனென்றால் விஜய்க்கு எதிரான மிகப்பெரிய ஜாம்பவானை இறக்க வேண்டுமென்றால் இவர்தான் சரியான ஆள் என்று மோடி தீர்மானித்துள்ளாராம்.

வரும் நாட்களில் விஜய்க்கு எதிராக ரஜினி இருப்பார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

கிளைமாக்ஸை எட்டிய பாமக தலைமை.. பூஜ்ஜியமாகும் அன்புமணி பவர்!! பொதுக்குழுவில் அதிரடி!!

0

PMK: பாமக கட்சிக்குள் அதிகாரம் மோதல் போக்கானது தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று நடந்து முடிந்த ராமதாஸின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புகளால் அன்புமணி பதவியிலிருந்தும் எந்த பலனும் இல்லை. நேற்று நடைபெற்ற பொதுக்குழு மேடையில் ராமதாஸின் வலது பக்கத்தில் அவரது மகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் அந்த இடத்திற்கு அன்புமணி தான் வருவார்.

ஆனால் அவர் எப்படி தனது மகள்களை வைத்து கட்சியை செயல்படுத்துகிறாரோ அதேபோல ராமதாஸ் தனது மகளை வைத்து காய் நகர்த்துகிறார். அதுமட்டுமின்றி அன்புமணி நியமித்த நிர்வாகிகள் அவரது அறிவிப்பு என எதுவும் செல்லாது என இந்த பொதுக்குழு மூலம் வெளிப்படையாக சொல்லாமல் தெரிவித்துள்ளனர். அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து முடிவுகளையும் ராமதாஸ் தான் எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் கட்சி நிறுவனர் தலைவர் என ராமதாஸ் அவர்களே தொடர்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் தலைவருக்கு எதிராக அன்புமணி பேசிய பொய்கள் அனைத்தையும் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கௌரவத் தலைவர் ஜி கே மணி கேட்டுக்கொண்டார். இவ்வாறு பல தீர்மானங்களை வைத்து பார்க்கையில் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அன்புமணிக்கு இனி கட்சிக்குள் எந்த ஒரு பவரும் இல்லை என்பது தெள்ளந் தெளிவாகத் தெரிகிறது.

ADMK Vs BJP: பாஜக கூட்டணிக்கு போடும் எண்டு.. விஜய்யுடன் பெரிய திருப்பத்தில் EPS!! ரிவீலான சீக்ரெட்!!

0

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணியானது பல நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தில் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பது பாஜக தான், அவர்களுடன் கூட்டணி அமைத்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை என்று குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கும் பட்சத்தில் எப்படி மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய முடியும்?? இப்படி இருக்கையில் இது அனைத்தும் ஒத்து போகாமல் தான் பலரும் திமுக கட்சிக்குள் நுழைந்து வருகின்றனர்.

அதேபோல அதிமுக பாஜக இரண்டாவது முறையாக கூட்டணி வைக்கும் போது பல்வேறு கோட்பாடுகளை வரையறுத்துள்ளது. ஆனால் அதனையெல்லாம் மறந்து பாஜக ஆளுமை செய்ய வேண்டும் என நினைக்கிறது. இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. பாஜக கூட்டணிக்கு முன்பாகவே விஜய்யுடன் இணையதான் முக்கிய பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தொகுதி பங்கீடு ஆளும் தலைமை என எதுவும் எடப்பாடிக்கு ஒத்து வராததால் அதை அப்படியே கைவிட்டார்.

ஆனால் தற்போது பாஜகவிற்கு விஜய்யே மேல் என நினைக்கிறாராம். இதனால் அவர்களது கூட்டணியை கை கழுவி விட்டு விஜய்யுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி பழனிசாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்தது அதிமுக பாஜக இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தான் அரசியல் வட்டாரங்களும் பேசுகின்றனர். கடந்த சில மாதங்களாக பாஜகவின் அதிகார ஓங்கல் என்பது சற்று அதிகமாவே உள்ளதையும் பார்க்க முடிகிறது. இதனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கோடணி முடிவில் மாற்றம் வரலாம்.

பாஜகவில் இணையும் 2 வெயிட் லீடர்ஸ் இவர்கள் தான்.. வெளியே கசிந்த ரகசியம்!! DMK வுக்கு பெரும் சவால்!!

0

DMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அமைத்ததிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புதுவித புயலை கிளப்பியுள்ளார். அதாவது வரும் நாட்களில் திமுகவிலிருக்கும் முக்கிய தலைகள் பாஜகவில் இணைய போவதாக தெரிவித்துள்ளார். இவர் அவ்வாறு கூறியதும் அரசியல் வட்டாரத்தில் யார் அந்த முக்கிய தலை என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

தற்சமயம் திமுகவில் எந்த பதவியும் இல்லாமல் தனது பேச்சுக்காக தண்டிக்கப்பட்டு டம்மியாக ஒருவர் உள்ளார். அவரேனும் பாஜகவில் இணைவாரா என வியூகிக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல மற்றொருவர், கட்சிக்குள் என்னை டம்மி அமைச்சராக வைத்திருந்தாலும் உனது மகனைப் போல் எனது மகனுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.

இப்படி இருவரும் திமுக மீது அதிருப்த்தியில் உள்ள நிலையில் அவர்களை  கட்சியிலிருந்து தூக்கி விடலாம் என்ற பிளானில் பாஜக இறங்கியுள்ளதா கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் திமுகவில் முக்கிய அங்கம் என்பதால் இவர்களை திமுகவிலிருந்து தூக்கும் போது கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். மேலும் பாஜவில் முக்கிய தலைகள் இணைய ஸ்டாலின் விட மாட்டார் என்றும் பேச்சு அடிப்பட்டு வருகிறது.

எடப்பாடியை வெளியேற்ற சதி திட்டம்.. ஓங்கி நிற்கும் பாஜக கை!! ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி சசிகலா!!

0

ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதால் மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி நீண்ட நாள் நீட்டிக்குமா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மீது தேவையற்று பாஜக அண்ணாமலை குற்றம் சுமத்தி பேசியதால் இந்த கூட்டணி முறிவு பெற்றது. ஆனால் தற்சமயம் மீண்டும் கூட்டணி அமைத்து புதிய கோட்பாடுகளை வரையறுத்துள்ளனர்.

அதிலும் சில குழப்பங்கள் தான், பாஜக கூட்டணி ஆட்சி என்று ஒரு பக்கம் கூறவே எடப்பாடி அதனை முழுமையாக மறுத்து வருகிறார். அதேபோல பாஜகவுடன் இணை இருக்கும் டிடிவி தினகரன் குறித்து எடப்பாடி விரைவில் பேசுவார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் எடப்பாடி இவை அனைத்திற்கும் மௌனம் காத்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் ஓபிஎஸ் சசிகலா டிடிவி உள்ளிட்டோர் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

அப்படி தகவல்கள் வெளியான சமயத்தில் கட்சிக்குள்ளேயும் எந்த ஒரு மோதல் போக்கும் காணப்படவில்லை. தற்போது பாஜக தங்கள் கீழ் கூட்டணி ஆட்சி என கூறவே அதிமுகவிலிருந்து விலகிய அனைவரும் இணைய துடிக்கின்றனர். அதிலும் சசிகலா சுதந்திர தின விழாவிற்கு பொதுச் செயலாளராக இருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மறுபுறம் ஓபிஎஸ் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சிக்கு சென்று விட்டனர்.

இவையனைத்தும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளது. இதனால் முதல்வர் வேட்பாளர் பதவி கேள்விக்குறிதான்?? எடப்பாடிக்கு செல்லுமா என்பதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இதில் பாஜகவிற்கு ஒத்துப்போகக்கூடிய வேறு யாரேனும் தலைவர் பதவிக்கு வரலாம். அதிலும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரும் இதில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி வைத்தும் எடப்பாடிக்கு பாதகம்தான்.

பாமக வில் பரபரப்பு.. ராமதாஸ் இல்லத்தில் அன்புமணி!! பொதுக்குழு கூட்டத்துக்கு முன் அதிரடி திருப்பம்!!

0

PMK: பாமக கட்சிக்குள் அதிகார மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். இது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது மகனைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கிக் கொண்டே போனார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிலுள்ள கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் மேலும் அவரது இருக்கை அடியிலேயே ஒட்டு கேட்கும் கருவி சிம்முடன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது ரீதியாக சைபர் கிரைமிடம் புகார் அளித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாமக பொதுக்குழு கூட்டத்திலாவது ஒன்று செய்வார்கள் என பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் இருவரும் தனித்தனி பொதுக்குழு கூட்டத் தேதியை அறிவித்து நீதிமன்றம் வரை சென்று விட்டது. அதில் அன்புமணிக்கு தான் பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தன்னுடைய வெற்றி என பறைசாற்றி வந்தார்.

இதன் நடுவே ராமதாஸின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கும் வேளையில் ஏதேனும் கட்சி இணக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்குமா என்ற கேள்வியை பலர் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர் தாயாரின் பிரனதனால் என்பதால் அவரை காண்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அதேபோல ராமதாஸ் வெறும் வழிகாட்டி தான் செயல் தலைவராக அன்புமணி தான் இருந்தார் என கூறி வருவதை ஒருவரும் ஏற்கவில்லை. இவர்களின் உட்கட்சி மோதல் தீர்வு கண்டால் மட்டுமே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கான அங்கீகாரத்தை பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தற்போது தைலாபுரம் சென்றிருக்கும் அன்புமணி முடிவை கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.