ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025
Home Blog Page 2

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த துணை முதல்வர்.. தவெக மேலுள்ள பயத்தை நிரூபித்த பேச்சு!!

0

TVK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை எதிர்நோக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பீகாரை விட தமிழகத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக தமிழகத்தில் ஆளுக்கட்சியாக உள்ள திமுக தனது அரசியல் எதிரி என்று கூறியதிலிருந்தே தவெகவின் அனைத்து கூட்டங்களிலும் திமுகவையும், ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து வருகிறார். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் விஜய் பெயரை கூட செல்வதற்கு அஞ்சுகிறார்கள்.

அதிலும் திமுக தலைவர் ஸ்டாலின் விஜய்யை புதிய எதிரிகள் என்று மறைமுகமாக பல இடங்களில் விமர்சித்துள்ளார். புதிய கட்சியான தவெகவை பல வருடங்களாக அரசியலில் இருக்கும் திமுக விமர்சிக்க தொடங்கினால் விஜய் அரசியலில் வளர்ச்சி அடைந்து விடுவார் என்ற பயத்தினால் திமுக அவரை நேரடியாக விமர்சிக்காமல் இருக்கிறது என்று பலரும் கூறி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக துணை முதல்வர் ஸ்டாலின், ஒரு கருத்தை கூறியுள்ளார்.

இந்திய அளவில் பாஜகவிற்கு எதிரி திமுக தான் என்று கூறிய அவர், புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை, ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒவ்வொரு தொண்டனுக்கும் வரலாறு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இவரின் புதிய கட்சி என்ற கருத்து விஜய்யை தான் குறிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். விஜய் எல்லா இடங்களிலும் திமுகவை நேரடியாக அட்டாக் செய்து வருகையில், திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும் விஜய்யை மறைமுகமாக சாடுவதற்கு அவர் மேல் உள்ள பயம் தான் காரணம் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் பதவியில் அமரும் அண்ணாமலை.. எனக்கு வேலை போகலாம்!! நயினார் சொன்ன ஷாக் நியூஸ்!!

0

BJP: தமிழக பாஜக தலைமை மாற்றியதிலிருந்து நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடில்லை. இதன் வெளிப்பாடாக தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினாருக்கு யாரும் மரியாதை என்பது தருவதில்லை. இது ரீதியாக பல நிகழ்ச்சிகளில் தனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு பக்கம் நியாயமான காரணமாக அண்ணாமலை வந்தது பிறகுதான் வாக்கு சதவீதம், அங்கீகாரம் என அனைத்தும் கிடைத்தது என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால் அவரே ஒரு கட்டத்தில் தனக்கு கொடுத்த மரியாதை தற்போதிருக்கும் பாஜக தலைவருக்கும் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இப்படி இருக்கையில் அதிமுக கூட்டணிக்காக மட்டுமே அண்ணாமலை தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு மாறாக மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் அவ்வாறான அறிவிப்புகள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை.

தமிழகத்தில் அரசியல் நகர்வுகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு நயினார் நாகேந்திரன் தலையாட்டி பொம்மையாக மட்டுமே இருப்பார், அண்ணாமலை அளவிற்கு செயல்பட மாட்டார் என்று அமித்ஷா உள்ளிட்டோர் பார்த்து வருகின்றனர். இதனால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்கலாம் என எண்ணுகின்றனர். அச்சமயத்தில் உத்வேகத்துடன் செயல்படும் அண்ணாமலை தான் சரியான நபர் என்று தேர்ந்தெடுத்துள்ளனர்.

இது ரீதியாக நயினார் நாகேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், அரசியல் என்பது நிரந்தர நண்பன் இல்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம், நான் வெற்றி பெறுவேனோ தோல்வி பெறுவேனோ, எனது பதவி மூன்றாண்டு காலம் தான். அதற்குள் வேறு தலைவர் மாற்றலாம் என்று சூசகமாக கூறியுள்ளார்.

காலையிலேயே பரபரப்பு!! திமுக கூட்டணியை உதறிய காங்கிரஸ்.. இனி எல்லாமே விஜய் தான்!?

0

Congess TVK: பீகாரின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து குறிப்பாக தமிழக கட்சி தலைகள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான தோல்வியை காங்கிரஸ் சந்தித்துள்ளது. இதன் தொடர்ச்சியை தமிழகத்தில் இருக்கக் கூடாது என எண்ணுகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை திமுக அதிமுக என்று மட்டுமே போட்டி இருந்தது. ஆனால் இந்த சட்டப் பேரவை தேர்தல் ஒவ்வொரு கட்சியினருக்கும் சவாலாக தான் இருக்கும்.

விஜய்யின் தவெக வால் பலரது வாக்கு வங்கி சரியக் கூடும். சரத்குமார் கமல் என பலரும் அரசியலுக்குள் நுழைந்து தனி பெரும்பான்மையாக செயல்பட முடியாமல் கூட்டணிக்குள் கைகோர்த்து விட்டனர். அந்த வரிசையில் காலம் காலமாக வாரிசு அரசியல் செய்துவரும் திமுகவே விஜய்யை தனது எதிரியாக பார்க்கும் தரத்தில் உள்ளார். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி என்ன நடந்தாலும் விஜய்யை விமர்சிக்க கூடாது என முடிவெடுத்துள்ளார்.

இது ரீதியாக அவர் அரசியல் நகர்வுகளை கூர்மையாக கவனித்தும் வருகிறார். தமிழகத்தில் போட்டி நிலை இப்படி இருக்கும்போது சாதகமாக அமையும் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவை தற்போது காங்கிரஸ் எடுத்துள்ளதாம். வரும் நாட்களில் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் பெரும்பான்மையான தொகுதிகளாவது கிடைக்கும் என நம்புகின்றனர். ஆளும் கட்சியுடன் கூட்டணி இருந்தாலும் தேவையான இடங்களில் தங்களுக்கு மரியாதை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

குடும்ப அரசியலை மட்டும் தான் அவர்கள் இறுதிவரை வளர்ப்பார்கள் என்பதை உணர்ந்த ராகுல் காந்தி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளாரம். தேர்தல் நேரம் நெருங்கும் சமயத்தில் இவர்கள் கூட்டணி உறுதியாகும் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வெளியே லீக்கான லேப்டாப் வழங்கும் தேதி.. குஷியில் மாணவர்கள்!!

0

DMK: திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரை வழங்கி வந்த விலையில்லா மடிக்கணினி அதன் பின் வந்த திமுக எந்த ஆண்டு மாணவர்களுக்கும் தரவில்லை. இதேபோல இலவச பேக் புத்தகங்கள் பெண்களுக்கு தேவையான நாப்கின் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது இது ஏதும்  நடைமுறையில் இல்லை.

இதே போல மிதிவண்டி வழங்கவும் காலதாமதம் ஆனது. தொடர்ந்து இது ரீதியாக கோரிக்கை எழுப்பிய பின் பரிந்துரை செய்து மிதிவண்டி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி, மிதிவண்டி வழங்கும் நலத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் வரும் திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளிலும் மிதிவண்டி வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

ஆனால் தேர்தல் காலம் முடியும் சமயத்தில் அனைவருக்கும் மடிக்கணினி வழங்குவது ரீதியாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அப்படி மடிக்கணினி வழங்கும் பட்சத்தில் தற்போது கடந்த ஆண்டு மாணவர்கள் அதற்கு முன்பு இருந்த மாணவர்கள் என அனைவருக்கும் கிடைக்குமா என்பது சற்று சந்தேகம்தான். கட்டாயம் தேர்தலுக்கு முன் லேப்டாப் வழங்கி ஆக வேண்டும் என்ற முடிவை தலைமை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க அதிக வாய்ப்புள்ளதாம்.

அரசியலே வேண்டாம்.. நான் வெளிய போறேன்!! விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

0

TVK: தமிழக அரசியல் களத்தில் புதிதாக வந்த விஜய்யை நெருக்கடிக்கு தள்ளும் விதத்தில் தான் ஆளும் கட்சி பல குடைச்சல்களை கொடுத்து வருகிறது. எந்த நடிகருக்கும் கிடைக்காத வரவேற்பானது விஜய்க்கு கிடைத்துள்ளது. இது வெறும் மாயை தான் என பலர் கூறினாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களுக்கும் இப்படித்தான் வரவேற்பு இருந்தது என அனைவரும் உணர்கின்றனர்.

அதை வைத்து இவரை ஆரம்ப கட்டத்திலிருந்து மூலையில் உட்கார வைத்து விட்டால் எந்த பிரச்சனையும் நேராது என எண்ணுகின்றனர். மேலும் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என முயற்சிக்கிறது. அந்த வகையில் ஆளும் கட்சி கொடுக்கும் தொந்தரவுகளில் உச்சகட்டமாக கரூர் உயிரிழப்பு தான் இருந்தது.

ஒவ்வொரு பிரச்சாரத்திற்கு செல்லும் போது ஏதேனும் தடங்கல்கள் இருந்த நிலையில் கரூரில் மட்டும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமும் அதற்கு ஏற்ற காவல் பாதுகாப்பும் இல்லை. இதனால் 41 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதை வைத்து ஒவ்வொரு கட்சியிலும் விஜய்யை ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். அதிலும் திமுக, விஜய் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு இனி பிரச்சாரம் என்பதே இருக்கக் கூடாது எனக் கூறினர்.

ஆனால் கைது நடவடிக்கை மட்டும் செய்யவில்லை. இவ்வாறு செய்துவிட்டால் இவர்களே அவரை அடுத்த கட்ட பெரியாளாக்கி விடுவார்கள் என்பதால் அதனை இறுதிவரை செய்யவில்லை. விஜய் இந்த கரூர் பிரச்சனையிலேயே மிகவும் தொய்வடைந்துவிட்டார். அரசியலே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி மீண்டும் புதிய ஊந்துதலுடன் தொடங்கியுள்ளார்.

அப்படி இருப்பவருக்கு தான் தற்போது பீகாரின் சட்டப்பேரவை முடிவானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல முக்கிய கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வியூக அமைப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஒரு தொகுதியில் கூட இடம்பெறவில்லை. அவருக்கே அந்த நிலை என்றால், நம்மால் என்ன செய்து விட முடியும் என மீண்டும் சிந்திக்கிறாராம். அரசியல் சார்ந்த அனுபவமும் பயிற்சியும் அதிகம் தேவை என உணர்ந்த விஜய் அரசியல் பயணத்தை ரத்து செய்யப் போவதாக பேச்சு அடிபட்டு வருகிறதாம்.

விஜய்யின் அரசியல் வாழ்க்கை பாஜக கையில்.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்!!

0

TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு பரபரப்பாக உள்ளதற்கு காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் கட்சி துவங்கியதே ஆகும். விஜய்யின் அரசியல் பிரவேசம் யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவை பெற்றது. ஆனால் தவெக சார்பில் நடந்த கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் அவரின் அரசியல் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசு மீது தவெக குறை கூறுவதும், தவெக மீது திமுக தொண்டர்கள் குறை கூறுவதும் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் விஜய்யை கூட்டணியில் சேர்க்க துடிக்கும் பாஜக கரூர் சம்பவத்தை விசாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் தமிழக அரசின் தனி நபர் குழுவில் நம்பிக்கை இல்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் சிபிஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அறிந்த விஜய் நீதி வெல்லும் என்று பதிவிட்டிருந்தார். இவ்வாறான நிலையில், சிபிஐ பாஜக கையில் உள்ளதால் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், அவர் மீது வழக்கு பதியக்கூடும் என்ற கருத்து அரசியல் களத்தில் நிலவி வந்த சமயத்தில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரஷாந்த் ஒரு கருத்தை கூறியுள்ளார்.

விஜய் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் சிபிஐ விஜய் மீது கூட வழக்கு பதிவு செய்வார்கள். விஜய்யை விசாரணைக்கு உள்ளக்குவார்கள், புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் உள்ளிட்டோரை கைது செய்வார்கள் , விஜய்யை கைது செய்து திகார் சிறையில் கூட அடைப்பார்கள். விஜய் பாஜக கூட்டணிக்கு வந்து விட்டால் அவர் குற்றமற்றவர், இல்லையென்றால் துணை முதல்வர் பதவி கூட கொடுக்கலாம். இவையெல்லாம், விஜய்யின் முடிவை பொறுத்து தான் உள்ளது என்று அவர் கூறினார்.

ஸ்டாலினுக்கு எதிராக போர் கொடி தூக்கிய திருமா.. கூட்டணிக்கு வைக்கும் வேட்டு!!

0

DMK VSK: திமுகவை கடந்து மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தற்போது வரை தங்களது கூட்டணியை யாருடன் வைத்துக் கொள்வோம் என்பது குறித்து உறுதிப்படுத்தாமலேயே உள்ளனர். அதிலும் குறிப்பாக தேமுதிக தங்களது மாநாட்டிற்கு பிறகு தான் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறியுள்ளது. இவ்வாறு இருக்கையில் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளை கலைக்க வேண்டும் என்று பலரும் எண்ணுகின்றனர்.

ஆனால் அவர்களுக்குள்ளேயே உட்கட்சி பூசலானது உள்ளது. அதிலும் திமுக கூட்டணியில் முதன்மையாக இருப்பது திருமாவின் விடுதலை சிறுத்தைகள் தான். அவர்களுக்கு இரண்டு தொகுதிகளை மட்டும் தான் ஒதுக்குகிறது. இது முற்றிலும் நியாயமற்றது என விசிக கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதனால் இம்முறை அதிகளவு தொகுதிகளை கேட்டு திருமா கோரிக்கை வைத்துள்ளார். இவர்களின் கோரிக்கையை தலைமை ஏற்பதாக தெரியவில்லை.

கூட்டணி கட்சியை எதிர்க்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இப்படி ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடக்கும் போது எதிர்கட்சியினர் தான் முக்கிய ஆதரவாக அவர்களுடன் நிற்பார். ஆனால் அவர்களுக்கு முன்பு திமுகவையே எதிர்த்து நிற்கும் வரிசையில் திருமா முதலாவது ஆளாக உள்ளார். இவையனைத்தும் கட்சிக்குள் உள்ள பகையை அப்பட்டமாக  காட்டுகிறது.

சமயம் பார்த்து திருமாவை மாற்றுக் கட்சியினர் மடக்கிவிடலாம் என எண்ணுகின்றனர். அந்த திட்டம் எந்த அளவுக்கு பழிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் வைத்திருப்பதற்கான காரணம் இது தான்.. லீக் ஆன சீக்ரெட்!!

0

TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு பெருகியுள்ளது. இதனை கண்ட மாநில கட்சிகளனைத்தும் அதிர்ச்சியுற்றன. இதன் காரணமாக இவரை கட்சியில் இணைக்க வேண்டுமென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எதற்கும் அசராத விஜய் அவரது பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.

தவெகவில் விஜய்யை அடுத்து அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா. கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் சரியாக செயல்படவில்லை என்றும், கரூர் சம்பவத்தின் போது விஜய் உடனிருந்து கட்சியை வழி நடத்தவில்லை என்றும் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. முக்கியமாக ஆனந்த் மீது எழுப்பபட்ட கழக குரல் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களிடையே எழுந்தது. இதனால் இவர் கூடிய விரைவில் புஸ்ஸி ஆனந்த் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் , கரூர் சம்பவதிற்கு பிறகு தவெக சார்பாக நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் பேசிய கருத்து விஜய்யை ஆத்திரமடைய செய்துள்ளது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுகவிற்கு விஜய் ஆதரவு அளித்தார் என்ற கருத்தை ஆதவ் அர்ஜுனா கூறியும் அவரை ஏன் இன்னும் கட்சியிலிருந்து விஜய் நீக்காமல் உள்ளார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் அதற்கான காரணத்தை மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கூறியுள்ளார்.

ஆதவின் பேச்சு தவெகவிற்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் பரிசளிக்கிறது. இப்படி இருக்க இவரை இன்னும் கட்சியிலிருந்து நீக்காமல் இருப்பதற்கான ஒரே காரணம் அவர் கட்சிக்காக நிறைய செலவு செய்வதாகும் என்று அவர் விளக்க மளித்துள்ளார். இவரின் இந்த கருத்து அரசியல் களத்திலும், தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதமாகியுள்ளது.

எங்கள் எதிரி தவெக தான்.. அதிமுக அல்ல!! வெளிப்படையாக பேசிய ஸ்டாலின்!!

0

ADMK DMK TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எப்போதும் போல தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தவெக என்னும் புதிய கட்சி தொடங்கப்பட்டு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுக தான் தவெகவின் அரசியல் எதிரி என்று கூறினார். அப்போது முதல் இப்பொது வரை விஜய் அந்த நிலையிலிருந்து மாறவில்லை.

அதேபோல் திமுகவும் இத்தனை வருடங்களாக அதிமுகவை மட்டுமே எதிரி என்று கூறி வந்த நிலையில், தற்போது அந்த வரிசையில் விஜய்யையும் இணைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களில் புதிய எதிரிகள், பழைய எதிரிகள் என்று கூறியுள்ளார். மேலும் சில இடங்களில் விஜய் பற்றிய கேள்வியை அறவே தவிர்த்துள்ளார். இதுவே திமுக தவெகவை எதிரி பட்டியலில் சேர்த்து விட்டது என்பதற்கு உதாரணமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஒரு கருத்தை கூறியுள்ளார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பை கடுமையாக வெளிபடுத்தியதுடன், அதிமுக எதிர்கட்சி மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, அதிமுகவை எதிரி பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தவெகவை அமர்த்திவிட்டது என்பதை  நிரூபிக்கிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கூட்டணிக்காக தேமுதிகவிடம் மன்றாடும் அதிமுக.. தப்பு எங்க மேல தான்!! ஒப்பு கொண்ட அதிமுக அமைச்சர்!!

0

ADMK DMDK: இன்னும் 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகளை வரை, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. தேர்தல் என்றாலே கூட்டணி கணக்குகள் தான் பரபரப்பாக பேசப்படும். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்ட அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை மறந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்க முடியாது என்றும், தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும் தனது முடிவை பகிரங்கமாக அறிவித்தார்.

இதனால் இவ்விரண்டு கட்சிகளும் விஜய் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இவர்களின் விஜய்க்கான ஆதரவு அனைத்தும், வன்மமாக மாறியது. பாஜக டெல்லியில் சக்தி வாய்ந்த கட்சியாக இருந்தாலும், தமிழகத்தில் காலூன்ற ஒரு பலம் வாய்ந்த கட்சி தேவைப்படுகிறது. அதற்கு அதிமுக மட்டுமே போதாது என்று பாஜக நினைத்தது. அதிமுகவும் தற்சமயம் பல பிரிவுகளாக இருப்பதால் அதன் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது. இதனை விஜய்யை வைத்து சரி கட்டி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். இவர்களின் ஆசை நிறைவேறாமல்  போனதால், அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தேமுதிகவிடம் அதிமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று தகவல் பரவியது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஒரு கருத்தை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர், வேட்பாளராக விஜய் பிரபாகரன் நிறுத்தப்பட்டார். இவரின் தோல்விக்கு காரணம் அதிமுக போதிய வசதிகளை இந்த பகுதிக்கு செய்து தராததே ஆகும் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து தேமுதிக, திமுக பக்கம் செல்லாமல் தவிர்ப்பதர்க்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கும் சமயத்தில் அதனை சரி செய்யும் வகையிலும் இவரின் பேச்சு அமைந்துள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், அதிமுக கூட்டணிக்கு யாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் கையேந்தும் நிலைமைக்கு அதிமுக தள்ளப்பட்டு விட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர்.