Home Blog Page 205

ஓயாமல் ஏப்பம் வருபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!! கட்டாயம் இந்த நோய் அறிகுறியாக இருக்கலாம்!!

0

உணவு உட்கொண்ட பின்னர் ஏப்பம் வருவது இயல்பான ஒரு விஷயம்.ஏப்பம் வந்தால் வயிறு நிரம்பி விட்டது என்று புரிந்து கொள்ளலாம்.ஆனால் இந்த ஏப்பம் அடிக்கடி வந்தாலோ அல்லது புளித்த ஏப்பமாக இருந்தாலோ அதை அலட்சியம் செய்யக் கூடாது.

அதிகளவு ஏப்பம் வரக் காரணம்:-

செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.அஜீரணக் கோளாறு இருப்பவர்களுக்கு புளித்த ஏப்பம் வரலாம்.

சில வகை உணவுகளால் தொடர் ஏப்பம் வரலாம்.வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அடிக்கடி ஏப்பம் வரும்.

வயிற்றில் புண் இருந்தால் புளித்த ஏப்பம் வரும்.உணவு ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்.சிலவகை மருந்துகளால் அடிக்கடி ஏப்பம் வரக் கூடும்.

உணவை வேகமாக உட்கொள்ளும் பொழுது காற்றையும் விழுங்கி விடுகின்றோம்.இதனால் அளவிற்கு அதிகமாக ஏப்பம் வரும்.

அதேபோல் பித்தப்பையில் கற்கள் இருந்தாலும் புளித்த ஏப்பம் அளவிற்கு அதிகமாக ஏப்பம் விடுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஏப்பத்தை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:-

1)ஏலக்காய் விதை – 20
2)வெது வெதுப்பான தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஏலக்காயில் இருந்து விதையை மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.கால் தேக்கரண்டி அளவிற்கு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.இந்த நீரில் ஏலக்காய் விதைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஏப்பம் வருவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – அரை தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் அரை தேக்கரண்டி சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை வடிகட்டி குடித்தால் புளித்த ஏப்பம் கட்டுப்படும்.

எச்சரிக்கை!! உடலில் இந்த கொழுப்பு மட்டும் அதிகமாகிவிட்டால் கட்டயம் இந்த 5 நோய்கள் வந்துவிடும்!!

0

நமது உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்து அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடலில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று இரு வகைகள் இருக்கின்றது.இதில் எல்டிஎல் ஈன்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு குவிந்தால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகளவு குவிகிறது.எண்ணையில் வறுத்த பொரித்த உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடுகிறது.இதனால் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து நோயாளிகளாக மாற நேரிடுகிறது.

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும?

1)எல்டிஎல் கொழுப்பு அதிகரித்தால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.இதய இரத்தக் குழாயில் கொழுப்புகள் படிந்தால் மாரடைப்பு பாதிப்பு ஏற்படும்.

2)இரத்தக் குழாயில் கெட்ட கொழுப்பு படிந்தால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம்,மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

3)உடலில் கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்படும்.இரத்த ஓட்டம் தடைபட்டு இரத்த அழுத்தம்
உண்டாகும்.

4)நமது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் சர்க்கரை நோய் பாதிப்பை அனுபவிக்க நேரிடும்.

5)உடலில் கெட்ட கொழுப்பு குவிவதால் உடல் பருமன் ஏற்பட்டு பல்வேறு நோய் பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.

எனவே உடலில் கெட்ட கொழுப்பு குவியாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதிகளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படாத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிட வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும்.

கரையான் தொல்லை தாங்கலையா? இதை ஒரேடியா ஒழித்துக் கட்ட இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!!

0

மரப் பொருட்களை மெல்ல மெல்ல அரித்து சேதமாக்கும் கரையான்களை வீட்டில் இருந்து அழிக்க முடியாமல் பலரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.மரப் பொருட்கள் அதிகம் உள்ள வீடுகள்,மண் வீடுகளில் அழையா விருந்தாளியாக இந்த கரையான்கள் நுழைந்துவிடுகிறது.ஈரமான இடங்களிலும் மண்ணுக்கு அடியிலும் வசிக்க கூடிய கரையான்கள் ஒருமுறை வீட்டிற்குள் நுழைந்தவிட்டால் நிச்சயம் பெரியளவில் சேதத்தை ஏற்படுத்திவிடும்.

எனவே வீட்டில் கரையான்கள் வராமல் இருக்கவும் வந்த கரையான்களை ஒழித்துக் கட்டவும் இங்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றுங்கள்.

1)வினிகர்

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி வினிகர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை வீட்டில் இருக்கின்ற மர பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்து பராமரித்து வந்தால் கரையான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

2)கிராம்பு

ஒரு தேக்கரண்டி இலவங்கம் அதாவது கிராம்பை எடுத்து தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கிராம்பு பேஸ்டை ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து இதை வீட்டில் இருக்கின்ற மர பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்து பராமரித்து வந்தால் கரையான்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.

3)சிட்ரஸ் எண்ணெய்

பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு சிட்ரஸ் எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சு ஊறவைத்து மரப் பொருட்களை துடைக்க வேண்டும.இப்படி செய்தால் மரப் பொருட்களில் கரையான் பிடிக்காமல் இருக்கும்.

4)வேப்ப எண்ணெய்

ஒரு பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வேப்ப எண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை மரப் பொருட்கள் மீது ஸ்ப்ரே செய்தால் கரையான்கள் வராமல் இருக்கும்.

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

நமது உடலில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு இதயம்.இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.மாரடைப்பு,பக்கவாதம்,நெஞ்சு வலி,சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பல பாதிப்புகளை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கின்றனர்.

நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முதன்மை காரணம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது.

அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள் இதய ஆரோக்கியத்தை பலவீனப்படுத்திவிடும்.உங்கள் இதய ஆரோக்கியம் மோசமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

1)உங்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டால் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.நீங்கள் மல்லாந்து படுத்திருக்கும் போது உங்களுக்கு மூச்சத் திணறல் அதிகமாக இருந்தால் இதய பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.

2)உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.உங்கள் உடல் செயல்பாடு மெதுவாக இருந்தால் உங்கள் இதயம் பலவீனமடைந்துவிட்டது என்று அர்த்தம்.

3)கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்தால் இதயம் பலவீனமடைந்துவிட்டதாக அர்த்தம்.கணுக்கால் பகுதியில் திரவம் சேர்ந்து வீங்கி காணப்படும்.அதேபோல் வயிற்றுப் பகுதியிலும் வீக்கம் ஏற்படும்.

4)மார்பு பகுதியில் வலி,ஊசி குத்தல் உணர்வு இருந்தால் அது இதய பலவீனத்தை காட்டுகிறது.அடிக்கடி மார்பு பகுதியில் இழுத்து பிடித்தல் பிரச்சனை இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதை காட்டுகிறது.

5)சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி தலைச்சுற்றல் பாதிப்பு இருந்தால் இதயம் பலவீனமடைந்துவிட்டது என்று அர்த்தம்.உடல் பலவீனம்,பசியின்மை,குமட்டல் போன்ற பாதிப்புகள் இதயம் பலவீனத்தை உணர்த்துகிறது.அதிகளவு சிறுநீர் கழிக்கும் நிலை வந்தால் அது இதய பலவீனத்தை உணர்த்துகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்.. சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? குடிக்க கூடாதா?

உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது.

மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.நாம் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடித்தால் செரிமான மண்டலத்தில் இருக்கின்ற அமிலங்கள் நீர்த்து செரிமானக் கோளாறை ஏற்படுத்திவிடும்.

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.நாம் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும்.ஏற்கனவே செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகலாம்.அதேபோல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

ஒருவேளை உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருந்தால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படாது.எனவே இனி சாப்பிடும் போது தண்ணீர் பருகுவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுன்னு மாற்ற.. 06 அட்டகாசமான டிப்ஸ் இதோ!!

இந்த வருடம் கோடை வெயில் வழக்கத்தைவிடவும் அதிகமாக இருக்கின்றதை பார்க்க முடிகிறது.கொளுத்தி எடுக்கும் வெயிலால் சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.காலை நேரத்திலேயே வெயில் வாதி வதக்கி வருவதால் வெளியில் செல்ல முடியாமல் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.

வீட்டில் ஃபேன்,ஏசி,ஏர் கூலர் இல்லாமல் ஒரு நிமிடத்தை கூட கழிக்க முடியாத நிலையில் அனைவரும் இருக்கின்றோம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதன பொருளாக இவை மாறிவிட்டது.பணம் இருப்பவர்களால் ஏசி,ஏர்கூலர் வாங்கி அனுபவிக்க முடியும்.பணம் இல்லாதவர்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இப்பொழுது சொல்லப்பட இருக்கின்ற டிப்ஸை பின்பற்றலாம்.

1)வீட்டு ஜன்னல்பகுதியில் ஒரு கனமான பெட்சிட்டை நினைத்து கட்டிவிடலாம்.இதனால் சூரிய வெப்பம் வீட்டிற்குள் நுழைவது கண்ட்ரோல் ஆகும்.

2)வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்தால் வீட்டிற்குள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.அதேபோல் ஒயிட் வாஷ் செய்தால் வீட்டிற்குள் வெப்பம் ஊடுருவது கட்டுப்படும்.

3)வீடு முழுவதும் குளிர்ச்சியாக இருக்க வண்ணமான LED பல்புகளை பயன்படுத்தலாம்.

4)வீட்டை சுற்றி மரக் கன்றுகள்,செடிகளை வைத்து பராமரித்தால் வீட்டிற்குள் குளிர்ச்சியாக இருக்கும்.

5)அடிக்கடி மின்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மின்சாதனங்கள் பயன்படுத்திய பிறகு அதை அன்பிளாக் செய்ய வேண்டும்.நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன்னர் வீட்டு தரையை தண்ணீர் கொண்டு துடைத்தால் வெப்பம் குறையும்.

6)வீட்டு மாடியில் தரையில் தண்ணீர் தேக்கினால் வீட்டிற்குள் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கலாம்.அதேபோல் வீட்டு வாசற்படியில் ஒரு கனமான போர்வையை தண்ணீரில் நினைத்து தொங்கவிட்டால் சூரிய வெப்பம் ஊடுருவல் குறையும்.அதேபோல் வீட்டில் பிரிட்ஜ் தண்ணீர் பயன்படுத்துவதை தவிர்க்க விட்டு மண் பானையில் தண்ணீர் ஊற்றி பருகினால் உடலுக்கு இயற்கை குளுமை கிடைக்கும்.

சிமெண்ட் அட்டை வீடா? கூலிங் பெயிண்ட் அடித்தால்.. ஹீட் குறையுமா?

நாளுக்கு நாள் கோடை வெயில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.எங்கும் வெப்பமயமாக இருப்பதால் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெயில் காலத்தில் வெளியில் செல்ல முடியாமல் பலரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.

அதிகளவு வெப்பத்தால் குழந்தைகள்,கர்ப்பிணிகள்,பெரியவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.அனைவருக்கும் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலைதான் உள்ளது.

வெளியில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்றால் வீட்டில் அதைவிட அதிகமான சூட்டை அனுபவிக்க நேரிடுகிறது.ஃபேன்,ஏசி இல்லாமல் வீட்டில் இருப்பது என்பது தற்சமயம் முடியாத காரியமாக இருக்கிறது.மாடி வீடு முதல் ஓட்டு வீடு வரை எல்லா வீடுகளிலும் வெப்பம் அதிகமாக உள்ளது.குறிப்பாக சிமெண்ட் அட்டை வீடுகளில் வெயில் எப்படி இருக்கும் என்று வசிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.

நண்பகல் நேரத்தில் சிமெண்ட் அட்டை வீடுகளில் இருப்பது சவாலான விஷயமாக உள்ளது.சிமெண்ட் அட்டை வெப்பத்தை கடத்தும் திறன் கொண்டது.இதனால் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் வெப்பமான சூழலே நிலவும்.

மற்ற வீடுகளைவிட சிமெண்ட் அட்டை வீட்டிற்கு ஃபேன்,ஏசி,ஏர்கூலர் போன்றவற்றின் தேவை அதிகமாக இருப்பதால் இந்த மின்சாதனங்களை பயன்படுத்தும் பொழுது கரண்ட் பில் சற்று அதிகமாகிறது.ஆகவே சிமெண்ட் அட்டை அமைந்த வீட்டில் வசிப்பவர்கள் வீட்டை குளிர்விக்க அதிக செலவு இல்லாத சில ட்ரிக்ஸை பின்பற்றலாம்.

சிமெண்ட் அட்டை மீது கூலிங் பெயிண்ட் அடித்தால் வீட்டிற்குள் வெப்பம் ஊடுருவகாமல் இருக்கும்.கூலிங் பெயிண்ட் வெள்ளை நிறத்தில் இருக்கும்.இந்த கூலிங் பெயிண்ட் விலை குறைவாகதான் இருக்கிறது.இதை வீட்டு சிமெண்ட் அட்டை மீது பூசினால் நான்கு முதல் ஐந்து வருடங்கள் வரை வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.கூலிங் பெயிண்ட் அடித்த பிறகு தென்னை ஓலையை பரப்பி வைத்தால் வீட்டிற்குள் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.

உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்க!! இல்லைனா பணம் வந்த வழியே போய்விடும்!!

0

நமது வீடு மங்களகரம் நிறைந்து இருக்க வேண்டியது முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.வீட்டில் அமைதி நிலவ நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்க வநேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் பொருட்களை வீட்டில் வைக்க வேண்டும்.

ஆனால் உங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் உடைந்த பொருட்களை பயன்படுத்தி வருவீர்கள்.இது உங்களுக்கு அதிக அபசகுனத்தை ஏற்படுத்தும்.இந்த பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அந்தவகையில் வீட்டில் இருந்து தூக்கி ஏறிய வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.

**ஓடாத தையல் மெஷின்
**உடைந்த விளக்கு
**உடைந்த பூட்டு
**பயன்படுத்தாத அதாவது ஓடாத கடிகாரம்
**பயன்படுத்தாத சைக்கிள்
**கிழிந்த செருப்பு
**சேதமான கலசம்
**சேதமான துடைப்பம்
**உடைந்த கண்ணாடி பொருட்கள்
**உடைந்த கடவுள் சிலை
**சேதமான கடவுள் படம்

இங்கு சொல்லப்பட்டுள்ள பொருட்களை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும்.இந்த பொருட்கள் வீட்டில் எதிர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.பணப் பிரச்சனை,வீண் விரையம் போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும்.வீட்டில் உடைந்த பொருட்கள் இருப்பது அபசகுனமாக பார்க்கப்படுகிறது.

வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க பூஜை அறையில் குலதெய்வ படத்தை வைத்து வணங்க வேண்டும்.அதேபோல் வீட்டிற்கு வெளியில் கண்திருஷ்டி கணபதி படத்தை வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கிவிடும்.

வீட்டில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ராமர் பட்டாபிஷேகத்தை வீட்டின் முன் மாட்டி வைக்க வேண்டும்.இந்த ராமர் பட்டாபிஷேகத்தை வீட்டில் வைத்தால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களை நெருங்காது.கண் திருஷ்டி,செய்வினை போன்றவை நெருங்காமல் இருக்க வீட்டில் ராமர் பட்டாபிஷேகத்தை வைத்து பூஜை செய்து மனதார வழிபடுங்கள்.

உங்கள் வீட்டில் இந்த பொருளை வைத்தால்.. செய்வினை இருப்பதை கண்டறியலாம்!!

0

இந்த உலகில் கெட்ட சக்திகள் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.பொறாமை குணம்,கோபம்,வெறுப்பு,தொழில் போட்டி போன்ற காரணங்களால் செய்வினை,கண்திருஷ்டி,பில்லி சூனியம் போன்றவை வைக்கப்படுகிறது.உங்களுக்கு செய்வினை இருந்தால் அதை சில அறிகுறிகள் வைத்து கண்டறிந்துவிடலாம்.

குடும்பத்தில் தீராத கஷ்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுதல்,அடிக்கடி கால் விரலில் அடிபடுதல் போன்றவை நிகழ்ந்தால் வீட்டில் செய்வினை
வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

வீட்டில் வெளவால் நடமாட்டம் இருந்தால் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.வீட்டில் துன்பம் தரும் விஷயங்கள் அதிகமாக நடைபெறுதல்,சுப நிகழ்வுகளில் தடங்கல் ஏற்படுதல் போன்றவை வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதை உணர்த்துகிறது.

உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டிருப்பதை கண்டறிய எளிய வழி ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.வீட்டில் கெட்ட சக்திகள் இருப்பதை கண்டறிய கல் உப்பு மட்டும் போதும்.இது லட்சுமி கடாச்சம் நிறைந்த ஒரு பொருளாகும்.இந்த கல் உப்பு வீட்டில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றலை கட்டுப்படுத்தி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு மட்டும் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொருட்களை வைத்து செய்வினை இருப்பதை கண்டுபிடித்துவிடலாம்.ஒரு கண்ணாடி கிளாஸில் சுத்தமான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கைப்பிடி கல் உப்பு போட்டு யார் காலும் படாத இடத்தில் வைத்துவிட வேண்டும்.அதேபோல் யார் கண்ணும் படாத இடத்தில் இந்த கிளாஸ் இருக்க வேண்டும்.இரண்டு நாட்களுக்கு இந்த கிளாஸை பார்க்கக் கூடாது.

இரண்டு நாட்கள் கழித்து தலைக்கு தண்ணீர் ஊற்றிய பிறகு கிளாஸை பார்க்க வேண்டும்.கிளாஸ் நீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் அதாவது தெளிவு இல்லாமல் இருந்தால் அது செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் நல்ல மாந்திரீகரை வைத்து செய்வினையை நீக்கலாம்.

இந்தியா பாகிஸ்தான் போர்.. Full சப்போர்ட் செய்ய தயார்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி பேச்சு!!

0

India Pakistan: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலினால் ராணுவ அதிகாரி உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆரம்ப கட்டத்தில் சிந்து நீர் துண்டிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை போட்டது. பின்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென இந்தியா, ஆப்ரேஷன் சிந்தூர் என்பதை கையில் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் எல்லையொட்டி தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்த முகாம்கள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப்பட்டது. இந்த தாக்குதலலானது நள்ளிரவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகளின் முகாம்களை அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுப்பதாக அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல தொடர்ந்து வான்வழி ஏவுகணை உள்ளிட்டவைகளை அனுப்பியும் வருகிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டினரும் சமாதானமாக போக வேண்டுமென ஐநா சபை அறிவுறுத்தியது. அச்சமயம் பாகிஸ்தானையும் கண்டித்தது குரிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கையில் தற்பொழுது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது ரீதியாக பேசியுள்ளார். அதில், எனக்கு இந்தியா காஷ்மீர் இருவரும் நல்ல பழக்கம். இப்படி போர் செய்து கொள்வது மிகவும் மோசமான ஒன்று. இவர்கள் இருவரும் இதனை சரி செய்ய முன் வர வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன். கூடிய விரைவில் இந்த போர் நிறுத்தப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார். மேற்கொண்டு இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு இந்திய பாகிஸ்தானை சமரசம் பேச அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அழைத்துள்ளது உலக நாடுகள் மத்தியில் திரும்பி பார்க்க வைத்துள்ளது.