Home Blog Page 240

நம்புங்க.. இந்த விஷயம் தெரிந்தால் இனி திராட்சை விதையை தூக்கி வீசவே மாட்டீங்க!!

0

பழங்களில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பழம் என்றால் அது திராட்சைதான்.இந்த திராட்சையில் இருக்கின்ற சதைப்பற்று மற்றும் விதைகள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டவையாகும்.பச்சை திராட்சையைவிட கருப்பு திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

கருப்பு திராட்சை பழத்தை சாப்பிடும் பொழுது அதன் விதைகளை தூக்கி எறிவதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மையில் கருப்பு திராட்சை விதையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.திராட்சை விதையில் உள்ள சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.

திராட்சை விதையை பொடித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி,வைட்டமின் ஈ சத்து கிடைக்கும்.இரத்த கொழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.

இரத்தக் குழாய் வீக்கம் இருப்பவர்கள் திராட்சை விதையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.மூல நோய் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகளை கரைக்க திராட்சை விதையை சாப்பிடலாம்.மாலைக்கண் நோய் இருப்பவர்கள் திராட்சை விதையை வறுத்து பொடித்து சாப்பிடலாம்.தசை வலிமையை அதிகரிக்க திராட்சை விதை உட்கொள்ளலாம்.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாக திராட்சை விதையை சாப்பிடலாம்.கண் புரை குணமாக திராட்சை விதை உட்கொள்ளலாம்.மூளை செயல்திறனை மேம்படுத்த திராட்சை விதையை வறுத்து சாப்பிடலாம்.

கால் மரத்து போதல் பிரச்சனை இருப்பவர்கள் திராட்சை விதையை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக திராட்சை விதையை பவுடராக்கி வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

0

இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் உணவுமுறை பழக்கமே.கடந்த காலங்களில் வயது முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருந்த சர்க்கரை நோய் தற்பொழுது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:

1)அதிக இனிப்பு உணவுகள்
2)மாவுச்சத்து நிறைந்த உணவுகள்
3)சோம்பல் வாழ்க்கைமுறை
4)பரம்பரைத் தன்மை
5)தூக்கமின்மை
6)உடல் பருமன்
7)மது மற்றும் புகைப்பழக்கம்

சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

1.அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதேபோல் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2.உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

3.அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.மது மற்றும் புகைப்பழத்தை கைவிட வேண்டும்.

4.அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5.தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி,நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகள்,பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.இனிப்பு குறைவான பழங்களை சாப்பிடலாம்.ராகியை அரைத்து களி,கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.குளிர்பானங்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.உணவில் பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வால்நட்ஸ் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 10 வித ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

0

உலர் விதைகளை எடுத்துக் கொண்டால் வால்நட்டில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த உலர்விதை மற்றவற்றைவிட தனித்துவம் நிறைந்தவையாக இருக்கிறது.வால்நட்டில் பைபர்,புரதம்,மெக்னீசியம்,கால்சியம்,மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

அதேபோல் செலினியம்,துத்தநாகம்,வைட்டமின் ஈ,வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்திருக்கிறது.வால்நட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

மூளை சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வால்நட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.மூளையின் செயல்பாடு அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.இந்த வால்நட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

குடல் ஆரோக்கியம் மேம்பட வால்நட்டை வறுத்து தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வால்நட்டை சாப்பிடலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட வால்நட் உட்கொள்ளலாம்.இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வால்நட் உட்கொள்ளலாம்.உடல் பருமனாக இருப்பவர்கள் வால்நட்டை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கும்.ஞாபகத் திறன் மேம்பட வால்நட்டை ஊறவைத்து சாப்பிடலாம்.

மாம்பழம்,வாழைப்பழம்,வால்நட் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கிண்ணத்தில் போட்டு தேன் கலந்து சாலட்டாக சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.வால்நட்டை பொடித்து பாலில் கலந்து குடித்தால் மூளை வளர்ச்சி மேம்படும்.

சரும ஆரோக்கியம் மேம்பட வால்நட் உட்கொள்ளலாம்.தினமும் ஐந்து வால்நட் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இரத்த நாளங்கள் செயல்பாடு அதிகரிக்க வால்நட் சாப்பிடலாம்.உடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்த வால்நட் சாப்பிடலாம்.கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட் உட்கொள்ளலாம்.

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நாம் மறந்து வரும் உணவுமுறை பழக்கங்கள்!! இதை கடைபிடித்தால் 100 வருஷம் வாழலாம்!!

0

நமது உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த பல வகை உணவுகள் இருக்கின்றது.இஞ்சி,பூண்டு,சிட்ரஸ் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது.

எலுமிச்சம் பழத்தில் ஜூஸ் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.சிட்ரஸ் பழமான எலுமிச்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.மிளகு கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் தொண்டை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

பூண்டு பற்களை இடித்து கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.மஞ்சள் கலந்த நீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும்.தூதுவளை இலையை கொண்டு சூப் மற்றும் ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.

தினமும் ஒரு கிளாஸ் மோர் குடித்தால் ஜீரண சக்தி மேம்படும்.சிவப்பு நிற உணவுப் பொருட்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஆப்பிள்,செவ்வாழை போன்றவை இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மணத்தக்காளி பழத்தை சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.மணத்தக்காளி காயை உலர்த்தி பொடித்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.கசப்பு உணவுகளான பாகற்காய்,கோவைக்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.மாவுச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தூதுவளை இலையை கொண்டு ரசம் செய்து சாப்பிட்டால் சளி,இருமல் பாதிப்பு குணமாகும்.பெர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அதிகளவு கீரை உணவுகளை சாப்பிட்டால் உடலில் போலிக் ஆசிட் அளவு அதிகரிக்கும்.

இரவில் AC காற்று இல்லாமல் தூங்க முடியலையா? இது தெரிந்தால் நிச்சயம் அதிர்ந்து போயிடுவீங்க!!

0

முன்பெல்லாம் மின்விசிறி கற்றில் தூங்கினோம்.ஆனால் தற்பொழுது ஏர் கூலர்,ஏசி காற்றில் தூங்கி பழகிவிட்டோம்.அடிக்கும் வெயிலுக்கு ஏசி காற்று,ஏர் கூலர் போன்றவற்றை ஆன் செய்துவிட்டால் மட்டுமே இங்கு பலருக்கு தூக்கம் வருகிறது.இரவில் இந்த குளிர் காற்று இல்லாமல் தூங்குவது என்பது கடினமான ஒன்றாகும்.

ஏசி காற்று குளிர்ச்சி நிறைந்தவை என்றாலும் அவற்றை சுவாசிக்கும் பொழுது நமக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.ஏசி காற்றில் தூங்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விழுப்புணர்வு அவசியம்.

ஏசி காற்றில் தூங்கினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

நாம் தினமும் ஏசி காற்றில் தூங்கினால் சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பாடும்.ஏசி காற்று நுரையீரல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.

ஏசி காற்றை சுவாசித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.ஏசி காற்றை சுவாசிக்கும் பொழுது நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியாது.ஏசி காற்றை சுவாசித்தால் தொண்டை எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.

ஏசி அறையில் உறங்குவதால் சுவாசப் பாதையில் கிருமி தொற்றுக்கள் அதிகம் பரவிவிடும்.சுவாசப் பாதையில் பாக்டீரியா கிருமி தொற்றுகள் பரவிவிடும்.கோடை காலத்தில் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கிறது.

ஏசி காற்றில் தூங்கினால் கண் வறட்சி,தோல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.ஏசி காற்று தோலில் படுவதால் தசைகள் இறுக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும்.

தொடர்ந்து ஏசி காற்றை சுவாசித்து கொண்டு தூங்கினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனமாகிவிடும்.ஏசி காற்று சிலருக்கு அலர்ஜி பாதிப்பை உண்டாக்கும்.சைனஸ்,சருமப் பிரச்சனை இருப்பவர்கள் ஏசி காற்றில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

கண் எரிச்சல்,தும்மல்,மூக்கடைப்பு,மூக்கில் நீர் வடிதல் பிரச்சனை இருப்பவர்கள் ஏசி காற்றில் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

உடலில் எந்த ஊட்டச்சத்து குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும்? அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் இதோ!!

0

நமது உடலில் ஊட்டச்சத்து குறைந்தால் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.நமது உடலுக்கு புரதம்,கால்சியம்,வைட்டமின்,தாதுக்கள் அனைத்தும் அவசியம் தேவைப்படுகிறது.இதில் ஒன்று குறைந்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

உடலில் ஊட்டச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் வளர்சிதை குறைபாடு ஏற்படும்.உடல் எடை மற்றும் உடல் உயரத்தில் மாற்றம் ஏற்படும்.

2)ஊட்டச்சத்து குறைந்தால் உடல் பலவீனப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.ஊட்டச்சத்து குறைந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

3)காய்ச்சல்,இருமல்,சளி போன்ற பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.எலும்பு சம்மந்தபட்ட பாதிப்புகளை அதிகமாக சந்திக்க நேரிடும்.

இரும்புச்சத்து குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

பலவீன தசை உணர்வு
முடி உதிர்தல்
இரத்த சோகை
மூளை நரம்பு சேதம்
தலைச்சுற்றல்
தலைவலி
உடல் பலவீனம்

கால்சியம் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

எலும்பு வலி
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
உடல் தசை பலவீனம்
எலும்பு முறிவு

வைட்டமின் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை
உடல் தசை தளர்தல்
எலும்பு பலவீனம்
எலும்பு வளர்ச்சியில் பிரச்சனை
உதடு வெடிப்பு

புரதம் குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்:

வளர்சிதை மாற்றம்
மராஸ்மஸ்
உடல் சோர்வு
எலும்பு குறைபாடு

அயோடின் சத்து குறைந்தால் ஏற்படும் பிரச்சனைகள்:

உடல் பலவீனம்
தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனை
சுவாசப் பிரச்சனை

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க வழிகள்:

பழங்கள,காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.

முட்டை,அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.பால்,பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை,உப்பு,கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐஸ்கட்டியை பின்பக்க தலையில் வைத்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா?

0

நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றுதான் தலைவலி.இந்த பாதிப்பு ஏற்பட்டால் வலி,பாரம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.குறிப்பாக ஒற்றத் தலைவலி பாதிப்பு வந்தால் கடுமையான பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும்.தலைவலி பிரச்சனையை சரி செய்ய மருந்து மாத்திரை பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை.அதற்கு பதில் ஐஸ்கட்டிகளை தலைக்கு பின்னால் வைத்து அழுத்தம் கொடுத்தால் தலைவலி குணமாகிவிடும்.

பின்பக்க தலையில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1)ஐஸ் பேக்கை பின் பக்க தலையில் வைத்து அழுத்தம் கொடுத்தால் இரத்த நாளங்கள் குளிரும்.இதன் காரணமாக தலைவலி பாதிப்பு குணமாகும்.

2)பின்பக்க தலையில் ஐஸ்கட்டிகளை வைப்பதால் வலி,காயங்கள் குறையும்.ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருப்பவர்கள் ஐஸ் பேக்கை தலைக்கு பின்னால் வைத்தால் வலி குறையும்.

3)தலையில் இரத்த நாளங்கள் வீங்கி இருந்தால் அதை ஐஸ் பேக் கொண்டு சரி செய்யலாம்.இதனால் வீக்கம் குறையும்.அதேபோல் நரம்புகளில் வீக்கம் இருந்தால் ஐஸ்பேக் வைத்து அழுத்தம் கொடுத்து சரி செய்யலாம்.

நமது கழுத்தின் பின்பக்கத்தில் கரோடிட் தமனிகள் இருக்கிறது.இந்த பகுதியில் ஐஸ்பேக் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.தலைவலியின் போது இரத்த நாளங்கள் குறுகி வலியை ஏற்படுத்துகிறது.இதனால் தலைவலி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.

ஐஸ்பேக் வைப்பது எப்படி?

குளிர்ந்த நீரில் ஒரு டவலை போட்டு ஊறவைத்து தலைக்கு பின்னால் அழுத்தம் கொடுக்கலாம்.அதேபோல் ஐஸ் துண்டுகளை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி தலைக்கு பின்னால் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி குறையும்.

அதேபோல் கடைகளில் கிடைக்கும் ஐஸ்பேக் வாங்கி தலைக்கு பின்னால் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தலைவலி,ஒற்றைத் தலைவலி குணமாகும்.

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை..!! இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் கோடி புண்ணியம் உண்டாகும்..!!

0

விசுவாவசு ஆண்டின் முதல் அமாவாசை நாளை ஞாயிற்றுக் கிழமை (27.4.2025) அன்று வருகிறது. இந்த அமாவாசை நாள் இரவு தூங்குவதற்கு முன்பு இந்த ஒரு தீபத்தை ஏற்றினால், பித்ரு தோஷங்கள் நீங்கி கோடி புண்ணியங்கள் உங்களை வந்து சேரும். இந்த ஒரு தீபம் குடும்ப முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தவறாமல் இந்த ஒரு தீபத்தை அமாவாசை நாள் அன்று இரவு ஏற்றுங்கள்.

தமிழ் வருடத்தின் முதல் அமாவாசை நாள் செய்யக்கூடிய இந்த தீப வழிபாட்டை கட்டாயம் செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். இத்தனை மாதங்களாக முன்னோர் வழிபாடுகளை அமாவாசை நாட்களில் செய்ய தவறியவர்கள், இந்த ஒரு நாள் மட்டும் இந்த ஒரு தீப வழிபாட்டை செய்து பாருங்கள் கண்டிப்பாக முன்னோர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் கண்டிப்பாக தேவை. இவர்களது ஆசி ஒரு குடும்பத்திற்கு கிடைக்கவில்லை என்றால், அந்த குடும்பம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த பிரச்சனைகளை சரி செய்ய என்ன தான் முயற்சி செய்தாலும் அதற்கான வழி பிறக்காது.

எனவே குலதெய்வத்தின் அருளையும், நமது முன்னோர்களின் அருளையும் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான வழிபாடுகளை சரியாக செய்து வந்தோம் என்றால் நிச்சயம் அவர்களது ஆசியை நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட வழிபாடுகளுள் ஒன்று தான் நாளை வரக்கூடிய அமாவாசை நாள் அன்று ஏற்றக்கூடிய இந்த தீப வழிபாடு.

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படுவதில் தடைகள், பண வரவில் தடைகள், குடும்பம் முன்னேற்ற தடைகள், அடிக்கடி நோய்வாய்ப்படுதல் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் காரணம் நாம் இந்த முன்னோர் வழிபாடுகளை தவிர்ப்பதால் தான். எனவே மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களை மறவாமல் கண்டிப்பாக வணங்க வேண்டும்.

முன்னோர்களின் அருளும், குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைத்துவிட்டால் போதும் எந்த ஒரு பிரச்சனையும் நம்மை எளிதில் நெருங்காது. ஏனென்றால் மற்ற தெய்வங்களை காட்டிலும், இந்த இரண்டு தெய்வங்களின் அருள் தான் ஒரு குடும்பத்திற்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு தெய்வங்களின் அருள் ஒரு குடும்பத்திற்கு இருந்தால் மட்டுமே, மற்ற தெய்வங்களும் அந்த குடும்பத்திற்கு அருள் புரியும்.

ஒரு சில குடும்பங்கள் மட்டுமே மாதம் மாதம் அவர்களது முன்னோர்களை மறவாமல் படையல் வைத்து வழிபட்டு வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் அந்த பழக்கங்களை வைத்திருப்பது இல்லை. அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் இந்த ஒரு தீபத்தை வருடத்தின் முதல் அமாவாசை நாளான நாளைய தினம் ஏற்றினால், அவர்களது குறைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

அமாவாசை நாள் இரவு 7:00 மணி முதல் 12 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த ஒரு தீபத்தை ஏற்றிக் கொள்ளலாம். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு அருகில் ஒரு டம்ளர் அல்லது நிறை சொம்பு தண்ணீர் வைக்க வேண்டும்.

அமாவாசை அதிகாலையில் நமது முன்னோர்களை வரவேற்று படையல் வைப்போம். அதேபோன்று அன்று இரவு அவர்கள் பூலோகத்தை விட்டு செல்லும் பொழுது அவர்களுக்கான ஒரு ஒளியாக இந்த ஒரு தீபத்தையும், அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரையும் வைத்து அவர்களை வழி அனுப்ப வேண்டும். இவ்வாறு தீபம் ஏற்றி வைத்து, உங்களது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை உங்களது முன்னோர்களிடம் கூறி வேண்டிக் கொள்ளலாம்.

இந்த தீபம் ஒரு அரை மணி நேரம் எரிந்தால் போதும். அடுத்த நாள் காலை அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம். இந்த தீபத்தை தூங்க செல்வதற்கு முன்பு தான் ஏற்ற வேண்டும். இது போன்ற தீப வழிபாட்டை இந்த ஒரு மாதம் மட்டும் அல்லாமல் மாதந்தோறும் ஏற்றி வழிபாடு செய்யலாம். இதனால் நமது முன்னோர்களின் மனம் குளிர்ந்து அவர்களது ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.

கோவிலில் கொடுக்கும் விபூதியை பூஜை அறையில் இத்தனை நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது..!!

0

ஒவ்வொருவரும் ஆசை படக்கூடிய வாழ்க்கை எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்றால், பூஜை அறை என்பதை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதேபோன்று பூஜை அறைக்கு உரிய சாஸ்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடிக்கவும் வேண்டும்.

ஒரு சிலர் தெய்வத்தின் மேல் கொண்ட ஆர்வத்தினால் நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்திருப்பார்கள். இது போன்ற நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்துக் கொண்டால், அதனை சரியான முறையில் பராமரிக்க முடியாது என்பதால் தான் நிறைய படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது என்கிறார்கள்.

தினமும் சுவாமி படங்களுக்கு உரிய வழிபாடுகள் மற்றும் பூஜைகளை தவறாமல் கடைபிடிக்க முடியும் என்பவர்கள், எத்தனை சுவாமி படங்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முடியாதவர்கள் தேவையான சுவாமி படங்களை மட்டுமே பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் மற்ற தெய்வங்களின் படங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, பெருமாள் ஆகிய சுவாமி படங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத் தவிர்த்து உங்களுடைய இஷ்ட தெய்வங்களின் புகைப்படத்தை வைத்துக் கொள்ளலாம்.

அதேபோன்று திரௌபதி அம்மன், காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் ஆகியவை சாந்தமான தெய்வங்கள் ஆகும். காளியம்மன், வனபத்ரகாளி இது போன்ற கடவுள்கள் ஆக்ரோஷமான கடவுள்கள் ஆகும். இது போன்ற கடவுள்களின் புகைப்படங்கள் உங்களது பூஜை அறையில் இருந்தால் கட்டாயம் தவறாமல் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

அதேபோன்று பூஜை அறையில் வழிபாடு செய்யும் பொழுது, நிறை சொம்பு தண்ணீர் வைப்பது என்பது மிக மிக அவசியம். நம்மை எவ்வாறு தினமும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ, அதே போன்று தான் பூஜை அறையையும், சமையல் அறையையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஊதுபத்தியை வைப்பதற்கு இப்பொழுதுதான் ஸ்டாண்ட் போன்ற பொருட்கள் வந்துவிட்டது. ஆனால் முந்தைய காலங்களில் ஊதுபத்தியை வாழைப்பழங்களில் தான் குத்தி வைப்பார்கள். அவ்வாறு வாழைப்பழங்களில் ஊதுபத்தியை குத்தி வைப்பதும் ஒரு சாஸ்திர வழிபாடாக கூறப்படுகிறது. அதாவது இதன் மூலம் திருஷ்டிகள் விலகுவதாகவும் கூறப்படுகிறது.

நாம் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு கோவில்களுக்கும் செல்வோம். அவ்வாறு செல்லும் பொழுது அங்கு கொடுக்கக்கூடிய விபூதியை நமது பூஜையறையில் கொண்டு வந்து தான் வைப்போம். அவ்வாறு வைக்கப்படும் விபூதி பிரசாதங்களை 1 வருடம் அல்லது 1 வருடம் 3 மாதங்களுக்கு மேல் பூஜை அறையில் வைத்திருக்கக் கூடாது.

இது போன்ற விபூதிகளை ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு பேப்பர் அல்லது இலையில் வைத்து ஓடுகின்ற நீரில் கரைத்து விட வேண்டும். அதேபோன்று சுவாமி படங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது பூக்களை போட்டு வழிபட வேண்டும். அவ்வாறு வைக்கக்கூடிய பூக்களை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

உதாரணமாக வெள்ளிக்கிழமை சுவாமி படங்களுக்கு பூக்களை வைத்தால் சனிக்கிழமை அப்படியே விட்டு, ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக அந்த பூக்களை அகற்றி விட வேண்டும். காய்ந்த பூக்கள் ஒருபொழுதும் சுவாமி படங்களில் இருக்கக் கூடாது. ஒரு சிலர் ஒரு வாரம் முழுவதும் அப்படியே காய்ந்த பூக்களை வைத்திருப்பார்கள்.
அவ்வாறு வைத்திருப்பது மிகவும் தவறான ஒன்று.

காய்ந்துபோன மலர்களை அப்படியே வைத்திருந்தால் வீட்டில் பல தடைகளை ஏற்படுத்திக் கொடுத்து விடும். எனவே காய்ந்துபோன மலர்களை பூஜை அறையில் வைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

0

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

குணச்சித்திர நடிப்பின் முன்னோடி, எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி. சக்ரபாணி

மருதூர் கோபாலன் சக்ரபாணி, பொதுவாக எம்.ஜி. சக்ரபாணி என அழைக்கப்படுகிறார், 1911ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, பழைய மட்ராஸ் பிரெசிடென்சி பகுதியில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் வடவன்னூரில் பிறந்தார். அவரது தந்தை கோபால மேனன், தாய் சத்யபாமா. பிறந்த சில ஆண்டுகளில் குடும்பம் இலங்கையின் கண்டி நகரத்துக்கு இடம்பெயர்ந்தது. அங்கு அவரது தந்தை நீதிபதியாக பணியாற்றினார். ஆனால் சில வருடங்களிலேயே தந்தையும் சகோதரியும் உயிரிழந்தனர்.

தாயாருடன் சக்ரபாணி மற்றும் அவரது தம்பி எம்.ஜி. ராமச்சந்திரனும் (பின்னர் எம்.ஜி.ஆர்) இந்தியாவிற்கு திரும்பி, கும்பகோணத்தில் தங்கினர். வறுமை காரணமாக இருவரையும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்த தாயார், நாடகங்களில் நடித்துவிட்டு வாழ்க்கைத் துன்பங்களை எதிர்கொள்ள வைத்தார்.

சினிமா அறிமுகம்:

சினிமா உலகில் சக்ரபாணி 1936ஆம் ஆண்டு ‘இரு சகோதரர்கள்‘ என்ற படத்தில் காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் ‘மாயா மச்சிந்திரா‘, ‘ஜோதி‘, ‘மஹாமாயா‘ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 1944ஆம் ஆண்டு ‘மஹாமாயா‘ படம் வந்தது, இதில் அவர் ‘நீலன்‘ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் நடிப்பிற்கு பாராட்டு கிடைத்தாலும் படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதன் பின் பல படங்களில் துணை நடிகராக நடித்தார். ‘மலைக்கள்ளன்‘, ‘அலிபாபாவும் 40 திருடர்களும்‘, ‘நாடோடி மன்னன்‘, ‘மன்னாதி மன்னன்‘, ‘இதய வீணை‘ போன்ற திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் ‘நம் நாடு‘ படத்தை தயாரித்தார் மற்றும் ‘அரசகட்டளை‘ என்ற படத்தை இயக்கினார்.

எம்.ஜி.ஆர் அரசியல் வாழ்க்கைக்கு உதவி:

சினிமா துறைக்கு மட்டுமல்ல, அவரது தம்பியான எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் உறுதுணையாக நின்ற ஆதரவு சக்ரபாணி தான். எம்.ஜி.ஆர் தனது அண்ணனை “பெரியவர்” என அழைத்தார். அவர் கருத்துக்கேட்டு, முக்கிய முடிவுகளை எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன.

எம்.ஜி. சக்ரபாணி: தமிழ் திரையுலகத்தின் மறக்க முடியாத முன்னோடி

குடும்பம்:

சக்ரபாணிக்கு மனைவி மீனாக்ஷி மற்றும் 10 குழந்தைகள் உள்ளனர் (7 ஆண்கள், 3 பெண்கள்). தனது இறுதிக் காலத்தில் அவர் சென்னையில் தங்கியிருந்தார். 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி 75 வயதில் காலமானார்.

தமிழ் திரைப்பட வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு பின்னால் இருந்த திடமான ஆதரவாகவும், திரை கலைஞர் சக்ரபாணியாகவும், அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாததாகும்.