Home Blog Page 239

அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா.. 2 வருக்கு சிறை செல்ல நீதிமன்றம் பரபர உத்தரவு!!

0

DMK: அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வந்த நிலையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் பாதிப்படைந்தவர்கள் இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இவர் அதிமுக – விலிருந்து திமுக பக்கம் சென்றதும் இந்த வழக்கானது தீவிரமடைய ஆரம்பித்தது. அதில் அமலாக்கத்துறை இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது.

செந்தில் பாலாஜியை அடுத்து, அவரது சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்தது. இவர்கள் மீதும்  சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் போடப்பட்டது. மேற்கொண்டு ஓராண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன், மீண்டும் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கியது. இவர் அமைச்சராக இருப்பதால் சாட்சியங்களை கலைக்க கூடலாம் என எண்ணி இவருக்கு பதவியா ?  ஜாமீனா ?  என்ற ஆப்ஷனை நீதிமன்றம் கேட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் நேற்று இந்த வழக்கு அமர்வுக்கு வந்த நிலையில் , இதில் சம்மந்தப்பட்ட ஜெயராஜ் குமார் மற்றும் பழனி ஆகிய இருவரும், ஜாமீனுக்கான ₹2 லட்சம் உத்தரவாத தொகையை செலுத்தாததால், சென்னை உயர்நீதிமன்றம் அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும், அமலாக்கத்துறை சுமார் 5,000 பக்க ஆவணங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை காகித வடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக வின் 2 முக்கிய புள்ளிகள் அதிரடி நீக்கம்!? எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்!!

0

PMK: பாமகவை உட்கட்சி மோதலுக்கு ஜிகே மணி தான் முக்கிய காரணம் என பாட்டாளி தொண்டர்கள் கூறி வருகின்றனர். ஆரம்ப கட்டத்தில் இவருக்கு தலைவர் பதவியை கொடுத்திருந்தனர். பின்பு ராமதாஸ் அதை அன்புமணிக்கு கொடுத்துவிட்டு இவருக்கு கௌரவ தலைவர் என்ற பதவியை கொடுத்தார். தனக்கு தான் பதவி இல்லை தனது மகனுக்காவது பதவி வேண்டும் என்று ஜிகே மணி நின்றதால், இளைஞரணி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழ் குமரன் லைக்க ப்ரொடக்ஷன் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வந்ததால் கட்சி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

இதனால் தாமாகவே இளைஞரணி பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இப்படி இருக்கையில் அன்புமணி அந்த பதவிக்கு தனது ஆதரவாளரை கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று மனக்கணக்கு போட்டிருந்தார். ஆனால் அவர் நினைத்ததை ராமதாஸ் தவிடு பொடியாக்கி மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமித்தார். இவ்வாறு அவரை நியமிக்க சொல்லி ராமதாஸுக்கு அறிவுரை கொடுத்ததும் ஜிகே மணி தானாம். முகுந்தனை நியமிப்பதால் கட்சிக்குள் பனிப்போர் வெடித்தது. மேடையிலேயே இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டனர்.

கட்சிக்காக வேலை செய்தவர்களுக்கு பதவி வழங்காமல், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதா என்ற கேள்வியை அன்புமணி எழுப்பினார். இது என் கட்சி நான் உருவாக்கியது, நான் என்ன சொல்கிறேனோ அதுதான் நடக்கும். பிடிக்காதவர்கள் வெளியேறி விடுங்கள் என காட்டமாக ராமதாஸ் தெரிவித்துவிட்டார். இப்படி அப்பா மகனுக்குள் சண்டையை மூட்டி விட்டு ஜிகே மணி வேடிக்கை பார்ப்பதாகவும் மறைமுக கூட்டணியில் திமுகவுடன் கைகோர்த்து இருப்பதாகவும் விவரம் தெரிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் தான் சட்டசபையில் ஸ்டாலினை புகழ்ந்தும் பேசியுள்ளார்.

இவற்றையெல்லாம் அறிந்த பாமக நிர்வாகிகள் இவரை கட்சியை விட்டு நீக்குவதோடு முகுந்தனையும் நீக்குங்கள் என்று குரல் எழுப்பி வருகின்றனர். இவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொண்டாலே பாதி பிரச்சனை முடிந்து விடும் என கூறியுள்ளனர்.

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

0

CSK தோல்விக்கு காரணம் இவங்க தான்! அதிருப்தியில் தோனி

நேற்று நடந்த ஆட்டத்தில் “SRH அணியிடம் வீழ்ந்த சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின்னால் வீரர்களின் பொறுப்பற்ற நடத்தை தான் காரணமாக அமைந்தது என தோனி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, அணியின் அண்மைய தோல்விக்குப் பிறகு தனது அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் ஐந்து விக்கெட்டுகளால் தோல்வியடைந்த CSK, வெறும் 154 ரன்களில் ஆட்டமிழந்தது. SRH அணி 18.4 ஓவர்கள் வரை விளையாடி இலக்கை எளிதாக அடைந்தது.

போட்டிக்குப் பின் அளித்த பேட்டியில் தோனி, “இந்த பீட்சில் குறைந்தபட்சம் 180 ரன்கள் எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். ஒருங்கிணைப்பு இல்லாத பேட்டிங் அணியை சரிவிற்கு அழைத்தது,” என கூறினார். இது வரை அமைதியான பேச்சை கடைப்பிடித்த தோனி, வீரர்களின் செயல்பாட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

இதனால் CSK புள்ளிப்பட்டியலில் கீழ்த்தட்டில் உள்ளது. இந்த தோல்வி, பிளேஆஃப் நம்பிக்கைகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி CSK 9 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளையே பெற்றுள்ளது.

இந்த போட்டியில் SRH அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி, CSK அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைத்தார். தோனி, தனது 400வது T20 போட்டியில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது கூடுதல் அதிர்ச்சியாக உள்ளது.

“நாங்கள் ஒரே அணியாகச் செயல்படவில்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக இல்லை. இது ஒரு அணிக்குச் சரியான நிலை அல்ல. இது என் பொறுமையை சோதிக்கிறது,” என தோனி கூறியுள்ளார்.

தோனியின் இந்த கூற்று, அடுத்த போட்டிகளில் CSK வீரர்கள் மனக்கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது. மேலும், CSK பிளேஆஃப் பாதையை காப்பாற்ற விரும்பினால், இப்போது CSK அணியில் மாற்றம் ஏற்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

 

இதெல்லாம் சரியே இல்லை.. மே 15 தான் கடைசி தேதி!! நிர்வாகிகளுக்கு வார்னிங் கொடுத்த EPS!!

0

ADMK: தமிழகத்தில் மீண்டும் 2026 யில் கொடி நாட்ட வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சியை வலுப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. அதன் முதல் கட்டமாக அதிமுகவுடன் மீண்டும் கை கோர்த்தது. மேற்கொண்டு அதிமுகவும் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரம் கட்டி வருகின்றனர். குறிப்பாக பூத் கமிட்டி குறித்து ஓராண்டுக்கு முன்பு திட்டமிட்ட நிலையில் தற்போது வரை அது ரீதியான வேலைகள் மந்தமாக இருப்பதால் நிர்வாகிகள் மீது எடப்பாடி கடிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி விருந்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் முதலாவதாக பூத் கமிட்டி வேலைகள் குறித்து தான் பேசப்பட்டது. 234 தொகுதிகளுக்கு 68,144 பூத்களும் ஒவ்வொரு பூத்களிலும் தலா மூன்று மகளிர் உட்பட ஒன்பது நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாவட்ட செயலாளர்கள் இதன் வேலையை சரிவர கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற எடப்பாடி, ஒரு கட்சிக்கு பூத் கமிட்டி தான் மிகப்பெரிய வெற்றியை வாங்கி தரும்.

அந்த வகையில் ஒவ்வொரு பூத் கிளையும் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே 2026 ஆட்சியை வெல்ல முடியும்?? இதனால் யாரையும் ஏமாற்றாதீர்கள், செயல்பாடுகளை தீவிரமாக்குங்கள். வரப்போகும் தேர்தல் நமக்கு சாதகமாக இருப்பதால் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய காலகட்ட சூழலில் மக்கள் திமுக மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல கட்சிகள் கூட்டணி அமைக்க ஏதுவாக உள்ளது. அதனையெல்லாம் ஒன்று சேர்த்து கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்வோம். கடந்த முறை தேர்தலில் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே ஆட்சியானது கை மீறி போனது, இம்முறை அதனையெல்லாம் சரிகட்டி ஆட்சியை கைப்பற்ற வேண்டும்.

அதனால் மே மாதம் 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி வேலைகளை முடித்தாக வேண்டுமென பழனிசாமி கூறியுள்ளார். மேற்கொண்டு இதன் இறுதி கட்ட தரவுகளை மேலிடத்திற்கு கொடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

0

பாகிஸ்தான் வர்த்தகத் தடைகள்: இந்த பொருட்கள் விலை உயர வாய்ப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாக உலர்ந்த பழம் முதல் கல் உப்பு வரை பல பொருட்கள் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர்,
பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் முக்கியமாக பாகிஸ்தானுக்கு நீர் வழங்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தரப்பு உறவுகளையும் முறித்து கொள்வதற்கான செயல்பாடுகளையே உணர்த்துகிறது.

மேலும் பாகிஸ்தானுடனான அனைத்து இருதரப்பு வர்த்தக உறவுகளையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. இதில், குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வரவுள்ள நாட்களில் இந்தியாவில் சில முக்கிய பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இந்த பட்டியலில் முக்கியமாக உள்ளவை:

உலர்ந்த பழங்கள்: பாதாம், பிஸ்தா, சாக்லைன் போன்றவை பெரும்பாலும் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், இவை மிக விரைவில் விலை உயரக்கூடும்.

கல் உப்பு: ஹிமாலயன் பிங்க் சால்ட் போன்ற பாகிஸ்தானிய உப்புகள் இந்தியாவில் பிரபலமானவை. இவை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம், விலையும் உயரும்.

சிமெண்டு: கட்டடத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட், சில மாநிலங்களில் பாகிஸ்தானிலிருந்து வருவதாகும். இது கட்டுமானச் செலவுகளை உயர்த்தும்.

ஆப்டிக்கல் லென்ஸ்கள்: கண் கண்ணாடி தயாரிப்பில் பயன்படும் லென்ஸ்கள், பாகிஸ்தானில் இருந்து வரும் சில வகைகள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன.

மற்ற பொருட்கள்: பழங்கள், சிமெண்ட், முல்தானி மிட்டி, பருத்தி, இரும்பு மற்றும் தோல் பொருட்கள் என பாகிஸ்தானிலிருந்து பெறப்படும் அனைத்துக்கும் விலை உயர வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், இந்தியா பாதுகாப்பு மற்றும் தேசிய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாகும். ஆனால், இது பொதுமக்கள் நலனையும் பாதிக்கக்கூடியதாக இருக்கலாம். இந்நிலையில், வர்த்தக மாற்றுப் பயணங்கள், உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்பு உள்ளிட்ட முயற்சிகள் அவசியமாகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்தியர்கள் எதிர்கொள்ளும் இந்த விலை உயர்வுகள் குறித்து அரசு எந்த வகையான நிவாரண நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்புக்குரியது.

 

எஸ்.கே-வோட செம க்ளோஸ் ஆயிட்டாரே அஜித்!. ஃபேமிலி போட்டோ செம வைரல்!…

0

சினிமாவை தாண்டி அஜித்துக்கு நிறைய விளையாட்டுக்களில் ஈடுபாடு உண்டு. துவக்கத்தில் நீண்ட தூரம் பைக் ஓட்டுவதிலும், பைக் ரேஸ்களில் கலந்துகொள்வதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. அதன்பின் கார் ஓட்டுவது, கார் ரேஸில் ஆர்வம் வந்தது. அப்படி போட்டிகளில் கலந்துகொண்டதில் விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது.

எனவே, சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். திருமணத்திற்கு பின் கார் மற்றும் பைக் ரேஸ்களில் அஜித் கலந்துகொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் டீம் கலந்துகொண்டது. இதில் அஜித்தின் டீம் 3ம் பரிசை பெற்றது.

இப்போது ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் போட்டிகளில் அஜித்தின் டீம் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ஒரு போட்டியில் 2வது பரிசையும் அவரின் டீம் வென்றது. வருகிற அக்டோபர் மாதம் வரை அஜித்தின் டீம் கார் ரேஸ்களில் விளையாடவுள்ளது. ஒருபக்கம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் சென்னை வந்து குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.

ajith

நேற்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண அஜித் தனது குடும்பத்துடன் வந்தார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைஸ் ஹைதராபாத் டீம் மோதியது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவியுடன் மேட்ச் பார்க்க வந்தார். எனவே, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து மேட்ச் பார்த்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குடும்ப புகைப்படம் போட்டதற்கு இவ்வளவு பெரிய சிக்கலா!! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ ஆர் ரகுமான்!!

0

சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய குடும்பப் புகைப்படத்தை ஏ ஆர் ரகுமான் அவர்கள் வெளியிட்டிருந்தார். இதில் அவருடைய மனைவி மற்றும் இரண்டாவது மகள் முக்காடு அணியாத நிலையில் முதல் மகள் கதீஜா மட்டும் முக்காடு அணிந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமான் இரட்டை வேடம் போடுவதாக பல கருத்துக்களை வெளியிட்டனர். இதுகுறித்து பல வருடங்கள் கழித்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் சமீபத்தில் மனம் திறந்து இருக்கிறார்.

இந்த சர்ச்சைகளுக்கு ஏ ஆர் ரகுமான் வைத்த முற்றுப்புள்ளி பின்வருமாறு :-

பொது வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது ஒரு விருப்பம் மட்டுமே என்றும் பணக்காரன் முதல் கடவுள் வரை அனைவரும் விமர்சிக்கப்பட்ட தான் வருகின்றனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், ஒற்றுமையாகவும் ஆணவம் இல்லாமலும் பிறரை புண்படுத்தாமலும் இருந்தாலே அந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமையும் என்றும் யார் ரகுமான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

என் மகளுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் அவளுடன் சண்டையிடுவதற்கு கூட எனக்கு தகுதி இல்லை என்றும் யா ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார் அதிலும் குறிப்பாக அவள் பொதுவாகவே இரண்டு பக்கம் மின்னஞ்சல்களை மிகவும் அருமையாக எழுதக்கூடியவள் என்றும் அதை நான் எப்பொழுதுமே வியந்து பார்ப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார் கூடிய விரைவில் அப்பாவுக்கு என் கடிதங்கள் என ஒரு புத்தகம் வர வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும் ஏ ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். இதற்கு ஏ ஆர் ரகுமான் அவர்களின் மகள் கதீஜா கூட முக்காடு அணிவது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முடிவு என்றும் என் அப்பா எதற்காகவும் என்னை கட்டாயப்படுத்தவில்லை என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் இம்யூனிட்டி பவர் அதிகரிக்க.. இந்த கீரையில் சூப் செய்து குடிங்க!!

0

முருங்கை கீரையில் இரும்புச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த கீரையை கொண்டு சூப் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை கீரையை சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.உடல் சூடு தணிய கண் ஆரோக்கியம் மேம்பட முருங்கை கீரையை உணவாக உட்கொள்ளலாம்.முருங்கை கீரையில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை கீரை சூப் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)வெள்ளைப் பூண்டு பற்கள் – இரண்டு
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
4)மிளகு – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றிக் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து இரண்டு வெள்ளைப் பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த முருங்கை கீரை பானத்தை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – ஒரு கப்
2)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் முருங்கை கீரையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து இந்த முருங்கை கீரையை போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிரகள ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குடித்தால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முருங்கை கீரை சூப் செய்து குடிக்கலாம்.

நம்புங்க.. சர்க்கரை நோயாளிகள் இந்த சாக்லேட் சாப்பிட்டால் ஒன்னும் ஆகாதாம்!!

0

சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இனிப்பு ஒரு விருப்ப அறுசுவையாக இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒரு இனிப்பு உணவை ருசிப்பதை அனைவரும் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.இதில் டார்க் சாக்லேட்டில் மாங்கனீசு,மெக்னீசியம்,காப்பர்,நார்ச்சத்து போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

டார்க் சாக்லேட் மற்ற சாக்லேட் போன்று அல்ல.இதை சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.இனிப்பு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.ஆனால் இந்த டார்க் சாக்லேட் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1)தினமும் ஒரு டார்க் சாக்லேட் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் இம்யூனிட்டி பவரை அதிகரிக்க உதவுகிறது.

2)தினமும் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் சரும ஆரோக்கியம் மேம்படும்.டார்க் சாக்லேட் சாப்பிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் வராமல் இருக்கும்.

3)உடலில் ஆற்றலை அதிகரிக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.தினசரி டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையும்.

4)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.உடலில் படியும் கெட்ட கொழுப்பு கரைய இந்த டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.

5)மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்கள் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அகல டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க டார்க் சாக்லேட் சாப்பிடலாம்.

6)டார்க் சாக்லேட்டில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

தினசரி ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

0

நம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்களில் ஒன்றான பச்சை மிளகாய்.இது கார சுவை நிறைந்த காயாகும்.நம் நாட்டில் கார உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.பச்சை மிளகாய்,வர மிளகாய் போன்ற கார பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதை அனைவரும் விரும்புகின்றனர்.

இதில் பச்சை மிளகாய் வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இது தவிர பச்சை மிளகாய் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.

நாம் தினசரி பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

செரிமானப் பிரச்சனை குணமாக தினமும் பச்சை மிளகாய் சாப்பிடலாம்.பச்சை மிளகாயில் இருக்கின்ற கேப்சைசின் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

பச்சை மிளகாய் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சரும ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்தத்தில் இருக்கின்ற சர்க்கரை அளவு கட்டுப்பட பச்சை மிளகாய் உட்கொள்ளலாம்.

பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த பச்சை மிளகாயை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பட பச்சை மிளகாய் சாப்பிடலம்.இரத்தக் குழாயில் இருக்கின்ற கொழுப்புகள் கரைய பச்சை மிளகாய் சாப்பிடலாம்.தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டால் இரத்தக் குழாய் ஆரோக்கியம் மேம்படும்.

ஆனால் அளவிற்கு அதிகமாக பச்சை மிளகாய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு எரிச்சல்,குடல் அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.பச்சை மிளகாய் சாப்பிட்டால் நாக்கு எரிச்சல்,தொண்டை எரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எனவே பச்சை மிளகாய் விதையை மட்டும் நீக்கிவிட்டு அதன் சதைப்பற்றை வதக்கி சாப்பிடுங்கள்.