Home Blog Page 261

முதுகு தண்டுவட வலி வர காரணங்கள் மற்றும் அதற்கு உரிய சிகிச்சை முறைகள்!!

0

நமது முதுகு தண்டுவட பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது எலும்பு தேய்மானமானாலோ வலி ஏற்படும்.விபத்து,காயங்கள்,சேதம் போன்ற காரணங்களால் முதுகு தண்டில் வலி ஏற்படுகிறது.

அதேபோல் தண்டுவட பகுதியில் உள்ள நரம்புகளில் அலர்ஜி ஏற்பட்டால் பலவீன உணர்வு ஏற்படும்.முதுகு தண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால் வலி,வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தண்டுவட புற்றுநோய் பாதிப்பு இருந்தால் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நம் உள்ளுறுப்புகளில் முக்கியமான ஒன்று முதுகு தண்டு.இதன் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயம் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

முதுகு தண்டுவட வலிக்கான காரணங்கள்:

1.வயது முதுமை
2.காசநோய்
3.எலும்பு முறிவு
4.ஜவ்வு வீக்கம்
5.நரம்பு சேதம்
6.நோய் தாக்குதல்
7.கால்சியம் சத்து குறைபாடு

முதுகு தண்டுவட வலியால் ஏற்படும் பாதிப்புகள்:

1.முதுகு வலி
2.அமர முடியாத நிலை
3.சிறுநீர் கழிப்பதில் சிரமம்
4.உணர்ச்சியின்மை
5.மூச்சுத் திணறல்

முதுகு தண்டுவட பகுதியில் உள்ள வலியை சரி செய்ய வழிகள்:

உங்களுக்கு முதுகு தண்டுவட பகுதியில் வலி இருந்தால் மருத்துவரை அணுகி சம்மந்தப்பட்ட பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.தண்டுவட பகுதியை ஸ்கேன் செய்து என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.அதேபோல் CT ஸ்கேன் செய்து தண்டுவட வலிக்கான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.பிசியோதெரபி மூலம் தண்டுவட வலி பாதிப்பை சரி செய்யலாம்.

பிசியோதெரபி மூலம் முதுகு தண்டுவட பாதிப்பு குணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் வரை ஆகலாம்.உங்களுக்கு பிசியோதெரபி மூலம் முதுகு தண்டுவட வலி குணமாகவில்லை என்றால் அறுவை சிகிச்சை மூலம் வலிக்கு தீர்வு காணலாம்.

உங்கள் வீட்டில் இந்த மூன்று இடத்தில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

0

ஒரு குடும்பத்தில் என்றென்றைக்கும் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி, பணவரவு இது போன்ற அனைத்தும் இருந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சொர்க்கத்தை தரக்கூடிய நம்முடைய வீடு எப்பொழுதும் பாதுகாப்பாகவும், வீட்டில் இருப்பவர்களை எதிர்மறை சக்திகள் தாக்காமலும் இருக்க வேண்டும்.

இதுபோன்று எந்தவித தீய காரியங்களும் வீட்டில் நடைபெற கூடாது, குடும்பம் நல்லபடியாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டில் இந்த மூன்று இடங்களில் மட்டும் கிராம்பை வைத்து பாருங்கள், நல்ல ஒரு அதிசயம் நடக்கும். குறிப்பாக உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை மற்றும் கண் திருஷ்டி நீங்கி பணப்புழக்கம் அதிகரிக்கும்.

கிராம்பு என்பது அனைவரது வீட்டிலுமே இருக்கும். இந்த கிராம்பை பயன்படுத்தி நாம் சமைக்கும் பொழுது அதனுடைய வாசனை வீடு முழுவதும் பரவி இருக்கும். இந்த கிராம்பின் இயற்கை குணமே தீய சக்திகளை விரட்டுவது தான். இத்தகைய குணம் கொண்ட கிராம்பை இந்த மூன்று இடங்களில் வைக்கும் பொழுது அதனுடைய சக்தி மென்மேலும் அதிகரித்து, தீய சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் வராமல் தடுத்து நிறுத்தி விடும்.

கிராம்பை இந்த மூன்று இடங்களில் வைக்கும் பொழுது வெளியில் சென்று வீட்டிற்கு வருபவர்களின் சோர்வு, கண் திருஷ்டி, அவர்கள் மேல் இருக்கும் பொறாமை குணம் ஆகிய அனைத்தையும் போக்கி விடும். 108 கிராம்பை மாலையாக கட்டி அம்பாளுக்கு சாத்தும் பொழுது, பணவரவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

1. உங்கள் வீட்டிற்குள் முதலில் நுழையக் கூடிய இடம் அதாவது வராண்டா அல்லது ஹால் போன்ற இடத்தில் தான் முதலில் கிராம்பை வைக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி அல்லது செராமிக் பவுலில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு அதில் மூன்று கிராம்பை வைத்து விட வேண்டும்.

கண்ணாடி அல்லது செராமிக் பவுல் இல்லாதவர்கள் அகல் விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கண்ணாடி பவுல் மிகவும் சிறந்தது.
இதைத் தவிர்த்து அலுமினியம், செம்பு இது போன்ற பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. வீட்டிற்கு உள்ளே நுழையக் கூடிய இடத்தில் இந்த கிராம்பை வைக்கும் பொழுது, எந்த ஒரு தீய சக்தியையும் வீட்டிற்கு உள்ளே நுழைய விடாமல் வெளியே துரத்தி விடும். மேலும் பண வரவையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

2. அடுத்ததாக வீட்டின் ஹால் பகுதியில் வைக்க வேண்டும். அதாவது உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எந்த இடத்தில் அதிகமாக அமர்ந்து பேசுவீர்களோ, அந்த இடத்தில் வைக்க வேண்டும். ஒரு சிறிய கண்ணாடி பவுலில் மூன்று கிராம்பை மட்டும் அந்த இடத்தில் வைக்க வேண்டும்.

உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் வந்து பேசும்பொழுது அவர்களுடைய கஷ்டங்கள் துயரங்களை கூறுவார்கள், அல்லது இவர்கள் எப்படி இவ்வளவு வசதியாக இருக்கிறார்கள் என்ற எண்ணத்துடன் கூட அந்த இடத்தில் அமர்ந்திருக்கலாம். அப்பொழுது ஒரு நெகட்டிவ் எனர்ஜி அங்கு உருவாகிவிடும்.

எனவே அந்த இடத்தில் இந்த கிராம்பை வைக்கும் பொழுது அந்த நெகட்டிவ் எனர்ஜியை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றி கொடுக்கும்.

3. மூன்றாவதாக உங்களுடைய சமையல் அறையின் மேல் பகுதியில் அதாவது அதிகம் புலங்காத இடத்தில் மூன்றே மூன்று கிராம்பை மட்டும் வைக்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் தங்களுடைய கோபத்தையும், வெறுப்பையும் அதிகம் காட்டக் கூடிய இடம் என்றால் அது சமையலறை தான்.

அந்த சமையலறையில் மூன்று கிராம்பை மட்டும் தனியாக எடுத்து வைக்கும் பொழுது அந்த இடத்தில் பாசிட்டிவ் எனர்ஜி பரவ தொடங்கும்.
மேலும் சமையலறை என்பது பூஜை அறையைப் போன்றே மிகவும் முக்கியமான ஒரு அறையாகும்.

எனவே பெண்கள் அந்த இடத்தில் தங்களுடைய கோபம் மற்றும் வெறுப்பை காட்டாமல், மன அமைதியுடன் இருப்பது நல்லது.

குலதெய்வ வழிபாட்டை இப்படி செய்தால் உங்களுடைய வம்சமே செழிப்பாய் இருக்கும்..!!

0

ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது குலதெய்வம் தான் ஆணிவேர். மற்ற தெய்வங்களின் அருள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தின் அருள் என்பது அனைத்து குடும்பங்களுக்கும் மிகவும் முக்கியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குலதெய்வம் ஒரு சிலருக்கு ஆண் தெய்வமாக இருக்கும், ஒரு சிலருக்கு பெண் தெய்வமாக இருக்கும். அதே போன்று ஒரு சிலருக்கு ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வமாக இருக்கும். சிலருக்கு உருவ வழிபாடு இருக்காது. அதாவது ஒரு பெட்டியை குலதெய்வமாக நினைத்தோ அல்லது ஒரு மரம், கல், பானை, கிணறு இதுபோன்று உருவம் இல்லாத குலதெய்வமும் ஒரு சிலருக்கு இருக்கும்.

ஆனால் ஒரு சிலர் குலதெய்வமே எது என்று தெரியாமல் திருப்பதி வெங்கடாஜலபதியை தான் குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறோம் அல்லது திருத்தணி முருகரை தான் குலதெய்வமாக நினைத்து வழிபட்டு வருகிறோம் என்று கூறுவோரும் உள்ளனர். இதுபோன்று குலதெய்வம் தெரியாதவர்கள் அவர்களுடைய ஜாதக கட்டத்தில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் லக்னத்தை அடிப்படையாகக் கொண்டு குலதெய்வத்தை கண்டறியலாம்.

இல்லையென்றால் பிரசன்ன முறையில் குலதெய்வத்தை கண்டறியலாம். குலதெய்வம் என்பது மிகவும் முக்கியமான ஒரு தெய்வம். எனவே அவரவர் குலதெய்வம் எது என்று சரியாக அறிந்து, சரியான முறையில் வழிபாட்டை மேற்கொள்வது என்பதும் மிகவும் முக்கியம்.

உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை நாட்களிலும், பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாட்களிலும், ஆண் பெண் இருவரும் சேர்ந்த தெய்வம் என்றால் ஒரு முறை அமாவாசை நாளிலும், மறுமுறை பௌர்ணமி நாளிலும் சென்று வழிபட வேண்டும்.

இந்த நாட்களில் உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று ஐந்து தேங்காய் உடைக்க வேண்டும். ஐந்து தேங்காயை உடைத்தால் பத்து மூடிகள் கிடைக்கும். அதில் ஒரு மூடியை தானமாக கொடுத்து விட வேண்டும். மீதம் இருக்கக்கூடிய ஒன்பது மூடி தேங்காயில் சுத்தமான பசு நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதனுடன் வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம் மற்றும் 101 ரூபாய் காணிக்கை ஆகியவற்றை வைத்து உங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு வர வேண்டும்.

இது போன்ற முறையில் உங்களுடைய குலதெய்வ கோவிலில் தீபத்தை ஏற்றி வழிபாடு செய்து விட்டு, வீட்டிற்கு வந்து பாருங்கள் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். குல தெய்வத்தை எப்பொழுதும் மறக்க கூடாது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும்.

உங்களால் முடிந்த அளவிற்கு உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்னதானம் செய்வது, உங்களால் முடிந்த காணிக்கையை கொடுப்பது இதுபோன்ற செயல்களை செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுடைய வம்சம் செழிப்பாக இருக்கும்.

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

0

1. மேஷம்:

முருகனைப் போல் துணிச்சலையும், தைரியத்தையும் கொண்டவர்கள் தான் மேஷம் ராசிக்காரர்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு வெற்றியைக் காண்பார்கள். துணிவு அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும். எனவே எந்த ஒரு செயலையும் பயமின்றி செய்யலாம்.

2. ரிஷபம்:

லட்சுமி தேவியை போல் பொறுமையையும், கடின உழைப்பையும், செழிப்பையும் பெற்றிருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். முயற்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உழைப்பின் மூலம் வளம் சேரும். எனவே லட்சுமி தேவியை போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

3. மிதுனம்:

நாராயணன் போல் புத்திசாலித்தனமும், வியூகத் திறனும் கொண்டவர்கள் தான் மிதுனம் ராசியினர். எந்த சூழ்நிலையிலும் யோசனையின் மூலம் வெற்றி பெறுவீர்கள். அறிவே உங்களுடைய சக்தி. விஷ்ணுவை போல் யூகமாக உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள்.

4. கடகம்:

ராமர் போல் நேர்மை, செழிப்பு, குடும்ப அக்கறை போன்றவற்றை கொண்டவர்கள் தான் கடக ராசியினர். அன்பிலும், பெருமையிலும் சாமர்த்தியம் கொண்டவர்கள். உண்மை மற்றும் தர்மம் தான் உங்களுடைய வலிமை. எனவே ராமரை போல் நேர் வழியில் சென்று வெற்றி காணுங்கள்.

5. சிம்மம்:

சூரிய நாராயணன் போல் பிரசன்ன ஆளுமையும், உயர்ந்த எண்ணங்களையும் கொண்டவர்கள் தான் சிம்மம் ராசிக்காரர்கள். எந்த ஒரு இடத்திலும் தலைமைத்துவம் அமைத்து முன்னேறுவார்கள். நீங்கள் ஒரு தலைவர். எனவே சூரிய நாராயணன் போல் ஒளியை பரப்புங்கள்.

6. கன்னி:

கிருஷ்ணர் போல் புத்திசாலித்தனமும், கலை ஞானமும், யோசனை திறனும் கொண்டவர்கள் தான் கன்னி ராசியினர். எதை செய்தாலும் அன்புடனும், சரியான திட்டத்துடனும் செய்வார்கள். தெளிவு மற்றும் தர்மம் தான் உங்களுடைய அடையாளம். எனவே கிருஷ்ணரை போல் சிந்தித்து செயலாற்றுங்கள்.

7. துலாம்:

அஷ்டலட்சுமி தேவி போல் சமத்துவம், அழகு, செழிப்பில் வாழ்பவர்கள் தான் துலாம் ராசியினர். மற்றவர்களை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வைத்துக் கொள்வார்கள். சமநிலை தான் உங்களுடைய வெற்றி. லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

8. விருச்சிகம்:

ஆறுமுக முருகனைப் போல் பயமற்ற சக்தியினை கொண்டவர்கள் தான் விருச்சிக ராசிக்காரர்கள். கடுமையான சூழ்நிலையிலும் உறுதியுடன் செயல்படுவார்கள். வீரம் தான் உங்களுடைய அடையாளம். முருகனைப் போல் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று செயல்படுங்கள்.

9. தனுசு:

பரசுராமர் போல் தீர்மானம் சிந்தனை கடமை உணர்வு ஆகியவற்றை கொண்டவர்கள் தான் தனுசு ராசியினர். எந்த சவாலாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றியை காண்பார்கள். உறுதி தான் உங்களுடைய அடையாளம். பரசுராமரைப் போல் தர்மத்திற்காக போராடுங்கள்.

10. மகரம்:

மீனாட்சியம்மன் போல் செழிப்பு, நுட்ப அறிவு, தீர்க்க தரிசனம் ஆகியவற்றை கொண்டவர்கள் தான் மகரம் ராசியினர். கடின உழைப்பால் உயர்வை அடைவீர்கள். நீங்கள் உழைத்தால் வெற்றி நிச்சயம். எனவே மீனாட்சி அம்மன் போல் வலிமையுடன் இருங்கள்.

11. கும்பம்:

ஆஞ்சநேயர் போல் நம்பிக்கையும், ஆற்றலும் கொண்டவர்கள் தான் கும்பம் ராசிக்காரர்கள். எந்த மனநிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இவர்களிடம் இருக்கும். நம்பிக்கை தான் உங்களுடைய சக்தி. ஆஞ்சநேயர் போல் பக்தியுடன் இருங்கள்.

12. மீனம்:

பிரம்ம தேவர் போல் கற்பனை திறனும், புத்திசாலித்தனமும், அறிவும் நிறைந்தவர்கள் தான் மீனம் ராசியினர். புதிய விஷயங்களை உருவாக்கும் திறமை கொண்டவர்கள். உங்களுக்கு தெய்வீக ஞானம் உள்ளது. பிரம்ம தேவரை போல் சிந்தித்து செயல்படுங்கள்.

கார் ரேஸில் அஜித்தின் அணிக்கு 2வது இடம்!.. ரசிகர்கள் வாழ்த்து..

0

நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் அதிக ஆர்வம் உள்ளவர். கார் ரேஸில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி முதுகு, கால் போன்ற பகுதிகளில் இவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த வலிகளையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.

திருமணம் ஆனபின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ள அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் டீம் கலந்துகொண்டது. அந்த போட்டியில் அஜித்தின் டீம் 3வது பரிசை வென்றது. இதுவரை இந்தியாவை சேர்ந்த யாரும் அந்த போட்டியில் பரிசை வென்றது இல்லை.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களிலும் நடித்துவிட்டு கார் ரேஸுக்கு போனார். இந்த ரேஸ் நடந்தபோது அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. ஆனாலும், அஜித் அதிர்ஷ்டவசமாக தப்பினார். துபாய் ரேஸ் முடிந்ததும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ளப்போனார் அஜித்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை அஜித் கார் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பின்னரே அவர் புது படம் பற்றி யோசிப்பார் என்கிறார்கள். தற்போது பெல்ஜியம் நாட்டில் கார் ரேஸ் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி 2வது இடத்தை பிடித்திருக்கிறது. துபாயில் 3வது இடத்தை பிடித்த அஜித்தின் அணி இப்போது 2வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

 

இனிமேல் எல்லாம் நல்லதா நடக்கும்!. மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த துரை வைகோ!..

0

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மல்லை சத்யாவுடன் துரை வைகோவுக்கு கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என செய்திகள் வெளியானது. அதேநேரம்,

ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நிர்வாகிகள் கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். அவர்கள் சொன்னது போலவே மதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யா – துரை வைகோ இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கட்சி பணிகளை தொடர் இருவருக்கும் வைகோ அறிவுறுத்தியிருக்கிறார்.

vaiko

அதாவது மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே உள்ள பிரச்சனையை இருவரும் பேசவிட்டு வைகோ சரி செய்துவிட்டார் என்கிறார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா ‘எனது செயல்கள் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என்று துரை வைகோவிடம் கூறினேன்.

மறுபரீசலனை செய்து தொடர்வதாக கூறியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். கட்சி பணிகளுக்காக இருவாரும் இணைந்து செயல்படுவோம்’ என சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ ‘மதிமுகவிற்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா கூறினார். மல்லை சத்யாவின் வாக்குறுதி அடிப்படையில் எனது முடிவை நான் வாபஸ் பெற்றேன். நானும் அவருக்கு உறுதுணையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்தேன். ஜனநாயக இயக்கத்தில் வேறுபாடுகள் இருக்கும். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும். இனிமேல் நடப்பது நல்லதாக இருக்கட்டும்’ என சொல்லியிருக்கிறார்.

காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிக்கிறேன்!. துரை வைகோவை சமாதானம் செய்த நெல்லை சத்யா..

0

மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நாளை நடக்கவுள்ள கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். அவர்கள் சொன்னது போலவே மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யா – துரை வைகோ இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கட்சி பணிகளை தொடர் இருவருக்கும் வைகோ அறிவுறுத்தியிருக்கிறார்.

அதாவது மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே உள்ள பிரச்சனையை இருவரும் பேசவிட்டு வைகோ சரி செய்துவிட்டார் என்கிறார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா ‘எனது செயல்கள் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என்று துரை வைகோவிடம் கூறினேன்.

மறுபரீசலனை செய்து தொடர்வதாக கூறியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். கட்சி பணிகளுக்காக இருவாரும் இணைந்து செயல்படுவோம்’ என சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது.

ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால்!.. குஷ்பு ஓப்பனா பேசிட்டாரே!…

0

பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார். எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது.

அதன்பின் தொடர்ந்து நடித்த பல படங்களிலும் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனம் பேசி வந்தார் ரஜினி. ஜெயலலிதாவை மனதில் வைத்தே படையப்பா படத்தில் நீலம்பரி வேடத்தை உருவாக்கினார்கள். இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஊடகம் ஒன்றில் ஒத்துகொண்டார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா என எல்லா படங்களிலும் அரசியல் வசனம் பேசினார் ரஜினி.

ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனது உடல்நிலைக்கு அரசியல் செட் ஆகது’ என சொல்லிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளில் ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பாட்ஷா பட விழாவில் அந்த படத்தின் தாயரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும்போதே நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினான். இதனால், கோபமடைந்த ஜெயலதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும் இது முக்கியமான காரணம்’ என சொல்லியிருந்தார்.

இந்நிலையில், புதிய தலைமுறையின் மனதோடு உரையாடு வித் சமஸ் நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு ‘நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து அரசியல் பேசியிருக்கிறேன். சரியான நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் மேப் மாறியிருக்கும்’ என சொல்லியிருக்கிறார்.

ராஜினாமா முடிவு வாபஸ்!. பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு!.. மதிமுகவில் திருப்பம்..

0

திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். மதிமுக முதன்மை செயலர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், திடீரென மதிமுக முதன்மை செயலர் பொ|றுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்தியாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய மதிமுக நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நடக்கவுள்ள கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர்.

இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யா – துரை வைகோ இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கட்சி பணிகளை தொடர் இருவருக்கும் வைகோ அறிவுறுத்தியிருக்கிறார்.

அளவுக்கு மீறி சம்பாதிச்சிட்டேன்!. இது நடந்தா போதும்!. உருகிப் பேசிய சூரி…

0

சினிமாவில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் சூரி. சுசீந்தரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்தார். விஜயுடன் ஜில்லா, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் அஞ்சான், ரஜினியுடன் அண்ணாத்த என பெரிய நடிகர்களுடன் நடித்தார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அப்படி நடித்து வந்தவரை இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார் சூரி.

mandadi

அதோடு, இனிமேல் காமெடி நடிகனாக நடிக்கமாட்டேன் எனவும் முடிவெடுத்தார். விடுதலை 2 படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும், கருடன் படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இப்போது மாமான், மண்டாடி என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், மண்டாடி பட விழாவில் பேசிய சூரி ‘ஒன்னுமே இல்லாம வந்தேன். பெயிண்ட் அடிச்சேன். அப்புறம் அடிச்சி புடிச்சி சினிமாவுக்கு வந்துட்டேன். இப்ப சக்திக்கு மீறி சம்பாதிச்சிட்டேன்.. எனக்கு இது போதும். இதுக்கு அப்புறம் எனக்கு பிடித்த படங்கள் பண்ணினால் போதும். அதிகமாக சம்பாதிக்கணும்னு அவசியமே இல்லை. அப்பப்போ புடிச்ச படங்களை பண்ற அளவுக்கு கலைத்தாய் என்னை வைத்திருந்தால் போதும்’ என உருகி பேசியிருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி மதுரையில் நிறைய இடங்களில் சூரி ஹோட்டல் தொழிலையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.