Home Blog Page 260

வீட்டிலிருந்த படியே பாஸ்போர்ட் பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!இதை மட்டும் செய்தால் போதும்!!

0

இன்றைய நவீனமயமாக்கப்பட்ட காலத்தில் நமக்கு தேவையான முக்கிய ஆவணங்களை வீட்டிலிருந்து படிய பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :-

✓ முதலில் https://passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை ஹோட்டலுக்கு செல்ல வேண்டும்.

✓ புதிய பயனர் பதிவு விருப்பத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

✓ அதன்பின் உங்களுடைய ஐடி பாஸ்வேர்ட் கொடுத்து போர்டலினுள் நுழைந்தவுடன் ” apply for fresh password / re issue ” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

✓ அதன்பின் உங்கள் பெயர் முகவரி பிறந்த தேதி கல்வி தகுதி மற்றும் பிறவிவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

✓ pay and schedule appointment என வரக்கூடியதை தேர்வு செய்து உங்களுக்கான பாஸ்போர்ட் சேவா கேந்திரா அல்லது பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கான பணத்தை நீங்கள் செலுத்தியவுடன் உங்களுக்கு விருப்ப குறிப்பு எண் மற்றும் சந்திப்பு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப அரசியல் பதிவிறக்கம் செய்யப்படும்.

✓ பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கொடுத்த முகவரிக்கு உங்களுடைய பாஸ்போர்ட் ஆனது ஸ்பீட் போஸ்ட் மூலமாக வந்து சேரும்.

✓ தோராயமாக பாஸ்போர்ட் உங்களது கையில் வந்து சேர 30 முதல் 45 நாட்கள் வரை எடுக்கும். ஆனால் தட்கல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்தவர்களுக்கு 7 நாட்களில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

ஆதார் பற்றின இந்த கட்டுப்பாட்டை முதலில் தெரிஞ்சுக்கோங்க!! இது தெரியலனா ரொம்ப சிக்கல்!!

0

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமான அட்டையாகவும் வங்கி கல்வி மருத்துவம் என எங்கு சென்றாலும் அனைத்து துறைகளிலும் முதலில் கேட்கப்படக்கூடிய அட்டையாகவும் ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட முக்கிய ஆவணத்தில் எத்தனை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் அதிலும் குறிப்பாக எதற்கு எத்தனை முறை மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் பலரும் தற்பொழுது தங்களுடைய ஆதார் அட்டைகளில் மாற்றங்களை செய்து வருகின்றனர். இது கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு தகவல்.

✓ பெயர் மாற்றம் :-

ஆதார் அடையாள அட்டையில் பயனர்கள் தங்களுடைய பெயரை 2 முறை மாற்ற முடியும். காரணம் திருமணம் ஆன பெண் பெண்கள் தங்களுடைய துணை பெயரை மாற்றுவதற்கு வசதியாக இது போன்ற ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

✓ பிறந்த தேதி மாற்றம் :-

ஆதார் அட்டையில் பிறந்த தேதி தவறாக இருக்கிறது என்றால் அதனை 1 முறை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். அதற்கும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு தான் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ முகவரி மாற்றம் :-

ஆதார் அடையாள அட்டைகளை பொருத்தவரை எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காரணம் புதிய ஊர்களுக்கு குடிப்பெயர்ந்தால் அந்த ஊர்களுக்கு ஏற்றவாறு தங்களுடைய ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வகையில் இந்த ஏற்பாடானது மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

✓ மொபைல் எண் :-

ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்ணை பலமுறை மாற்றிக் கொள்வதற்கான அனுமதியும் ஓடிபி உள்ளீடு செய்து மாற்றிக் கொள்வதற்கான அனுமதியும் தபால் அலுவலகங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

✓ பாலினம் மாற்றம் :-

ஆதார் அட்டை பயனர்கள் தங்களுடைய பாலினத்தை ஒருமுறை மட்டுமே மாற்றிக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் தவறுதலாக ஆதார் கார்டு அப்டேட் செய்யும் பொழுது ஏதேனும் ஒரு திருத்தங்கள் இருப்பின் அதனை மாற்றுவதற்காக இந்த ஒரு முறை மாற்றமானது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அரசு ஊழியர்கள் கட்டாயமாக இதை பின்பற்ற வேண்டும்!! மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் தமிழக அரசு!!

0

தமிழகத்தில் பணியாற்றி வரக்கூடிய அனைத்து ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய பணி நேரத்தின்பொழுது ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வரக்கூடிய சூழலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவிற்கு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் ஐடி கார்டு அணிவதும் தற்பொழுது கட்டாயமாகப்பட்டிருக்கிறது.

பொதுவாக அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது மட்டுமே தங்களுடைய ஐடி கார்டுகளை பயன்படுத்துவதாகவும் வேலை நேரங்களில் ஐடி கார்டு போடாமல் இருப்பது குறித்து பல்வேறு முறை எச்சரிக்கப்பட்ட பொழுதும் வேலை நேரத்தில் ஐடி கார்டு அணிவதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வர நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிக்கை இது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசு அறிவிப்பில் வெளியிட்டிருப்பதாவது :-

தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயமாக தங்களுடைய மணி நேரத்தின் பொழுது ஐடி கார்டு அணிந்திருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு முறை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தும் அரசினுடைய சில துறைகளில் மேற்கண்ட வழிமுறைகளை கவனமாக பின்பற்றவில்லை என்றும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஜூலை 7ஆம் தேதி அன்று அழைக்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி கட்டாயமாக அதிகாரிகள் ஐடி கார்டு அடைந்திருக்க வேண்டும் என்றும் நீரினால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகி இருப்பது அரசு ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

போலீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்!! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு!!

0

தமிழக அரசு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டுதல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்புகளை எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இதன் மூலம் மாணவர்கள் பணம் கட்டி வெளியில் படிக்க முடியாமல் அவதிப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயனடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்க கூடிய செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கக்கூடிய 1200 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் இதில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி நாள் மே 3 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.inusrb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று காவல் சார ஆய்வாளர்கள் தேர்விற்கு எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாகர்கோவிலில் ஏப்ரல் 23ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற இருப்பதால் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர நினைக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பித்த நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆதார் அட்டை நகல் என அனைத்தையும் எடுத்துக் கொண்ட நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரடியாக வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே இலவச பயிற்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

0

கறிவேப்பிலை நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.கறிவேப்பிலை முடி வளர்ச்சி உதவுகிறது.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை சாப்பிடலாம்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.கண் பார்வை திறன் மேம்பட கறிவேப்பிலை சாப்பிடலாம்.இதனுடன் சீரகம்,பட்டை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை பொடி – 100 கிராம்
2)சீரகப் பொடி – 50 கிராம்
3)பட்டை பொடி – 25 கிராம
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரோ ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீர் ஈர்த்துவிட்டு இரண்டு மணி நேரம் உலர்த்த வேண்டும்.

2.பின்னர் இந்த கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்க வேண்டும்.

3.அடுத்து 50 கிராம் சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதேபோல் 25 கிராம் பட்டையை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இப்பொழுது கறிவேப்பிலை,பட்டை மற்றும் சீரகத்தை நன்றாக ஆறவைக்க வேண்டும்.

4.அதன் பிறகு இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதற்கு அடுத்து அரைத்த கறிவேப்பிலை பொடியை அதில் கொட்டி காய்ச்ச வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பானத்தை செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – 100 கிராம்
2)கருப்பு மிளகு – 10 கிராம்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கறிவேப்பிலையை நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.இதை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் 10 கிராம் கருப்பு மிளகை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பொடி 10 கிராம் எடுத்து தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த பானத்தில் இனிப்பு சுவை எதையும் சேர்க்கக் கூடாது.

எச்சரிக்கை.. இனிமேல் நாவல் பழம் சாப்பிடும் போது இந்த தவறுகள் செய்யாதீங்க!!

0

நாவல் பழம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.நாவல் பழம்,நாவல் விதை,நாவல் இலை,நாவல் மரப்பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்ட பொருளாகும்.ஊதா நிறத்தில் இருக்கும் இந்த பழம் ஜாமுன் என்றும் அழைக்கப்படுகிறது.இனிப்பு,துவர்ப்பு நிறைந்த இந்த நாவல் பழம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நாவல் பழம் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நன்மைகள் நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படும்.

அதிகளவு நாவல் பழம் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.நாவல் பழம் வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.நாவல் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிறு எரிச்சல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அளவிற்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும்.நாவல் பழத்தில் வைட்டமின் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும் சிலருக்கு இது ஒவ்வாமையாக மாறலாம்.அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் நாவல் பழத்தை உட்கொண்டால் பருக்கள்,சரும எரிச்சல் நீங்கும்.

அளவிற்கு அதிகமாக நாவல் பழம் சாப்பிட்டால் குமட்டல்,நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நாவல் பழத்தில் இருக்கின்ற அமிலம் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.பல் ஆரோக்கியம் மேம்பட நாவல் பழம் சாப்பிடலாம்.

நாவல் பழம் உட்கொண்ட பின்னர் தண்ணீர்,பால் போன்ற எதையும் உட்கொள்ளக் கூடாது.இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.கர்ப்பிணி பெண்கள் நாவல் பழம் அதிகம் சாப்பிடக் கூடாது.சிலருக்கு நாவல் பழம் சாப்பிடுவதால் தொண்டை பிடிப்பு,நெஞ்சு கரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே நல்லது என்ற காரணத்திற்காக நாவல் பழம் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இரவில் தூங்கும் முன் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? வைத்தால் என்னாகும் தெரியுமா?

0

தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு உறங்கினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் உடல் சூடு தணிந்துவிடும்.தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி சேதமாகாமல் இருக்கும்.தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து உறங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1)தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து உறங்கினால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

2)தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு தூங்கினால் முடி உதிர்வு,முடி வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

3)தலைக்கு எண்ணெய் வைத்தால் உச்சந்தலை சூடு தணியும்.உச்சந்தலைக்கு எண்ணெய் வைத்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.

4)தலைக்கு எண்ணெய் வைத்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க தலைக்கு எண்ணெய் வைக்கலாம்.

5)தலைமுடி அடர்த்தி அதிகரிக்க,தலை வறட்சி ஆகாமல் இருக்க எண்ணெய் வைக்கலாம்.தேங்காய் எண்ணெய் தடவினால் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்.இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்தால் மண்டை சூடு தணியும்.செம்பருத்தி எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் போன்றவற்றை தலைக்கு வைக்கலாம்.

சிலர் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டுவிடும் என்று எண்ணெயை சிறிது சூடாக்கி பயன்படுத்துகின்றனர்.ஆனால் இப்படி செய்தால் தலைமுடி உதிர்வு ஏற்படும்.அதேபோல் தலைக்கு அதிகளவு எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும்.தலைக்கு அதிக எண்ணெய் வைத்தால் முகத்தில் பருக்கள்,எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை ஏற்படலாம்.

சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் எண்ணையில் மிளகு சேர்த்து ஊறவைத்து பின்னர் தலைக்கு பயன்படுத்தலாம்.தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்தால் தலைமுடி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

புரத உணவுகள் சாப்பிட்டால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? இதை மிஸ் பண்ணாம படிங்க!!

0

நம் உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகிறது.குறிப்பாக புரத உணவுகள் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய ஊட்டச்சத்தாகும்.புரதமானது அமினோ அமிலங்கள் நிறைந்த ஒரு மூலக்கூறு ஆகும்.பால்,முட்டை,காய்கறிகள் என்று எல்லாவற்றிலும் இருந்தும் புரதம் கிடைக்கிறது.

ஆனால் புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியம் இல்லாத உணவுககை உட்கொண்டால் புற்றுபோய் பாதிப்புகூட வரலாம்.நமது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் புரதம் நிறைந்து காணப்டுகிறது.நமது உடல் கட்டமைப்பில் புரதத்தின் பங்கு இன்றியமையாதது.

நமது உடலில் தேங்கும் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் உடலில் அதிக புரதம் இருந்தால் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக புரதம் உட்கொண்டால் அது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரதம் இருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் அளவிற்கு அதிகமாக புரதம் சாப்பிட்டால் சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது சரும அலர்ஜி,செரிமானப் பிரச்சனை,தலைவலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.குறிப்பாக ஆட்டிறைச்சி,மாட்டிறைச்சி போன்றவற்றில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.ஆனால் அதிக புரதம் நிறைந்த உணவுகள் கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகப்படுத்திவிடும்.இதனால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகரிக்கும்.

புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவுகள்:

பாதாம் பருப்பு,முந்திரி பருப்பு,பாசி பருப்பு,பீன்ஸ் போன்ற உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு ஆரோக்கிய புரதம் அதிகமாக கிடைக்கும்.நாம் தினமும் நல்ல புரத உணவுகளை உட்கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆபத்து.. இந்த 5 பழங்களை சாப்பிட்ட பின்னர் தப்பி தவறியும் தண்ணீர் குடிச்சிடாதீங்க!!

0

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பழங்கள் உட்கொள்ளலாம்.பல நோய்களுக்கு பழங்கள் மருந்தாக திகழ்கிறது.நீர்ச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் என்று எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது.

நாம் எந்த பழங்களை உட்கொண்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறிவிடும்.பழங்கள் உட்கொண்ட பின்னர் தண்ணீர்
குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எந்தெந்த பழங்கள் உட்கொண்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

1)தர்பூசணி பழம்

தண்ணீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி பழம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.ஆனால் இந்த பழத்தை உட்கொண்ட பின்னர் தண்ணீர் குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

2)ஆப்பிள்

இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

3)வாழைப்பழம்

மெக்னீசியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ள வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வாழைப்பழம் உட்கொண்டு 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

4)எலுமிச்சை

எலுமிச்சை சாறு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.எலுமிச்சை ஜூஸ் குடித்த உடனே தண்ணீர் குடித்தால் அமில அளவு அதிகரித்துவிடும்.

5)பேரிக்காய்

குளிர்ச்சி நிறைந்த பேரிக்காயை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் இருமல்,சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நாம் எந்த பழத்தை உட்கொண்டாலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெற்றிலை கொடியை வைப்பதற்கு முன் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

0

பொதுவாக அனைவரது வீட்டிலுமே ஏதேனும் ஒரு செடியை வளர்த்து வருவார்கள். அது அழகிற்காகவும் இருக்கலாம் அல்லது வாஸ்துவிற்காகவும் இருக்கலாம். பல விதமான செடிகளை வளர்த்து அதனை பராமரித்து வரும் பொழுது மன அமைதி, மன நிம்மதி போன்றவை ஏற்படும். இயற்கையின் பசுமை நிறத்தை பார்க்கும் பொழுதே அனைவரது உள்ளத்திலும் ஒரு அமைதி ஏற்பட்டுவிடும்.

இதற்காகத் தான் பெரும்பாலான வீடுகளில் பலவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வாஸ்துவிற்காகவும் என பலவிதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வாஸ்துவிற்கு எந்தெந்த செடிகளை வளர்க்க வேண்டும் என்று தெரிந்தவர்கள், அந்த செடிகளை எவ்வாறு வைக்க வேண்டும்? எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பதை தெரியாமல் இருக்கிறார்கள்.

கண் திருஷ்டியை நீங்க வேண்டும், மகாலட்சுமியின் வரவு வேண்டும், பணவரவு ஏற்பட வேண்டும், குடும்ப அமைதி வேண்டும் என எண்ணி பலவிதமான வாஸ்து செடிகளை மக்கள் வளர்த்து வருகின்றனர். அத்தகைய வாஸ்து செடிகளுள் ஒன்றான வெற்றிலை கொடியை எப்படி வைத்தால் பண வரவு ஏற்படும் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம்.

வெற்றிலை கொடி என்பது வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி பணவரவு ஏற்பட வேண்டும் என்பதற்காக வளர்க்கப்படுகிறது. அத்தகைய வெற்றிலை செடியை வைப்பதற்கு முன்பு அந்த இடத்தில் 3 ஐந்து ரூபாய் நாணயங்களையும், சிறிதளவு மஞ்சள் குங்குமத்தையும் போட்டு அதன் பிறகு தான் வெற்றிலை கொடியை நடவு செய்ய வேண்டும்.

இவ்வாறு வெற்றிலை கொடியை நடவு செய்து, தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வர வேண்டும். வெற்றிலை கொடி வளர வளர வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். வெற்றிலை கொடி என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது. எனவே இந்த செடியை நடவு செய்வதற்கு முன்பு இந்த தாந்திரீக பரிகாரம் என்பது மிகவும் அவசியம்.

வெற்றிலை கொடியை ஒரு தொட்டியில் நடவு செய்தாலும் சரி, நிலத்தில் நடவு செய்தாலும் சரி இந்த முறையில் தான் நடவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் வாஸ்து பிரச்சனைகள் நீங்கி பணவரவு ஏற்படும்.