Home Blog Page 271

நான் காணாமல் போனதற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்!! நடிகை நஸ்ரியாவின் உருக்கமான பதிவு!!

0

சில நாட்களாக ஏன் வெளியில் வரவில்லை என்றும் எப்பொழுதும் துருதுருவென இருக்கக்கூடிய நான் சில நாட்களாகவே காணாமல் போனதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தன்னுடைய இந்த நிகழ்விற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் நடிகை நஸ்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நஸ்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு :-

சில நாட்களாக நான் ஏன் வெளியே வரவில்லை என்பது குறித்த தகவலை உங்களிடம் பதிவு செய்ய நான் விரும்புகிறேன் என்றும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தது போல இந்த அற்புதமான சமூகத்தில் நான் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஒரு உறுப்பினராகவே இருந்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் ஆகவே தன்னுடைய மனநலம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளானதாகவும் இது தன்னுடைய வாழ்வை கடினமாக மாற்றிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் தன்னுடைய 30 அவதார் பிறந்தநாள் புத்தாண்டு சூட்சம தர்ஷினி படத்தினுடைய வெற்றி என இன்னும் பல முக்கிய தருணங்களை தன்னால் கொண்டாட முடியவில்லை என்றும் இத்தனை நாட்களாக யாருடைய அழைப்புகளையும் எடுக்காததற்கும் மெசேஜ்களுக்கு பதில் வழங்காததற்கும் தன்னுடைய அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறியிருக்கிறார். தன்னால் தன்னுடைய சக நண்பர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் கவலைகாகவும் உண்மையில் தான் மிகவும் வருந்துவதாகவும் கூறியதோடு வேலை விஷயமாக தன்னை தொடர்பு கொள்ள முயற்சித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இது போன்ற இடையூறுக்கு மிகவும் வருந்துவதாகவும் கூறியிருக்கிறார்.

தற்பொழுது தன்னுடைய வாழ்வில் இருப்பது ஒரு கடினமான பயணம் என்றும் ஆனால் ஒவ்வொரு நாளும் இதிலிருந்து தான் குணமடைவேன் என கவனமாக செயல்பட்டு வருவதாகவும் கூறியதோடு இது போன்ற ஒரு கடினமான நேரத்தில் உங்களுடைய புரிதலுக்கும் ஆதரவக்கும் மிகுந்த நன்றி என்றும் முழுமையாக திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்றும் நஸ்ரியா தெரிவித்து இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.

சொல்றத கேளுங்க!. இல்லனா விஜய் கட்சிக்கு போங்க!.. பொங்கிய சீமான்!…

0

சினிமா இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

‘2026 சட்டமன்ற தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள். நான் சொல்வதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி விஜயின் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.. நானே சேர்த்துவிடுகிறேன்’ என பேசியிருக்கிறார். ஏற்னவே, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பலரும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இனைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

உச்ச நடிகருனா இப்படித்தான் செய்வீங்களா!! சூர்யா மட்டும் சிவகார்த்திகேயனின் செயலுக்கு பதில் கேட்கும் நெட்டிசன்கள்!!

0

சமீப காலமாகவே இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வரக்கூடிய நடிகர் ஶ்ரீ. இவர் போதைக்கு அடிமையாகி விட்டார் என்றும் அதனால் தான் மனநல பாதிக்கப்பட்டு தற்போது இது போன்ற ஒரு நிலையில் இருப்பதாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவை அனைத்தும் இல்லை இதற்கு வேறொரு காரணம் இருக்கிறது என அவருடைய தோழி உண்மையை உடைத்து இருக்கிறார்.

நடிகர் ஸ்ரீ அவர்களின் தோழியான தோத்தி ஸ்ரீனுடைய இந்த நிலைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா இருவர் மட்டுமே காரணம் என்றும் இவர்கள் இருவரால் தான் தற்பொழுது ஸ்ரீ இது போன்ற ஒரு மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என கூறியுள்ளார். முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய டான் திரைப்படத்தில் நண்பராக இருக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஶ்ரீ அவர்களை தேர்ந்தெடுத்த பொழுது அவர் தனது நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் மறுத்து விட்டதாகவும் அதன் பின் நடிகர் சூர்யா தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர் ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்காததாலும் அதிக அளவு மன உளைச்சலுக்கு தன்னுடைய நண்பன் ஆளாக்கிவிட்டதாக தோத்தி தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஸ்ரீ அவர்களினுடைய இந்த நிலைக்கு சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் தான் காரணம் என்ற தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மிகப்பெரிய நடிகர்கள் என்றால் இப்படித்தான் செய்வீர்களா என தங்களுடைய கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் அடுத்தடுத்து வெளியாக இருக்கக்கூடிய சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படங்கள் அடி வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!

0

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டு இருக்கிறார்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக படித்தபட்ட வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை விண்ணப்பங்களை தற்பொழுது வழங்கி வருவதாகவும் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் உதவி தொகையை பெறுவதற்கு சில தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அதர் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்து இருக்க வேண்டும் என்றும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதிகள் பெற்று இருக்க வேண்டும் என்றும் பெற்று இருக்க வேண்டும் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிட்ட திட்டத்தில் உதவி தொகை பெற நினைக்கக்கூடிய நபர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு புதுப்பித்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு 45 ஆண்டுகள் வரை வயது தளர்வு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுய தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றும் குடும்ப வருமானம் ஒரு ஆண்டுக்கு 72,000 குறைவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நினைப்பவர்கள் சென்னை கிண்டியில் இருக்கக்கூடிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரல் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களுடைய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏற்கனவே வேற ஏதேனும் ஒரு திட்டத்தில் பயன்பெறக்கூடியவர்களுக்கு திட்டத்தின் கீழ் பயன்பட முடியாது என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அறநிலையத்துறையில் வாரி வழங்கப்பட்ட சலுகைகள்!! அனைத்து கோவில்களிலும் கட்டண தரிசனம் ரத்து!!

0

தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் விவாதங்கள் நடைபெற்ற நிலையில் விவாதங்களின் முடிவில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விவாதங்களின் முடிவில் புதிய அறிவிப்புகளாக திருக்கோயில் பூசை உபகரணங்கள் திருமண உதவித் தொகை அர்ச்சகர்களுக்கு இருசக்கர வாகனம் மானியம் கோயில் திருப்பணிக்கான நிதி உயர்வு என பல்வேறு சிறப்பு திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை வெளியிட்ட புதிய அறிவிப்புகள் :-

✓ ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 19,000 திருக்கோயில்களுக்கு 15 கோடி ரூபாயில் பித்தளை, தாம்பளம், தூபக்கால், மணி மற்றும் விளக்கு உள்ளிட்ட பூசை உபகரணங்கள் வழங்கல்.

✓ இந்த ஆண்டு 1000 ஜோடிகளுக்கு 70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்க முடிவு

✓ ஒரு கால பூஜை திட்ட கோயில்களில் வேலை பார்க்கக்கூடிய அர்ச்சகர்கள் கிராம கோயில்களில் இருக்கக்கூடிய பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருக்கக் கூடிய கிராம கோவில் பூசாரிகள் ஆதிதிராவிடர் கோவில் பூசாரிகள் அர்ச்சகர்கள் என 10 ஆயிரம் நபர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க தலா 12,000 ரூபாய் மானியமாக வழங்க முடிவு.

✓ பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு வரக்கூடிய கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு அனைத்து நாட்களிலும் கட்டணம் இல்லா உணவு வழங்க முடிவு

✓ திருவண்ணாமலை பார்த்தசாரதி கோயில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் திருச்செந்தூர் பழனி திருவரங்கம் திருத்தணி உள்ளிட்ட 10 திருக்கோவில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டணம் இல்லா தரிசனம்

✓ ஹிந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்களில் 70 ஓதுவர் காலி பணியிடங்கள் நிரப்ப முடிவு

✓ வின்ச் மற்றும் ரோப் கார்களில் இறை தரிசனத்திற்கு கட்டணமில்லா சேவை

✓ திருவரங்கம் கோவிலில் புதிய கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்க முடியும்

நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் முடிவு மேலே குறிப்பிட்ட பல முக்கிய புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து தேர்வு இல்லாமல் IRCTC இல் வேலைவாய்ப்பு!! ரூ.67,000 சம்பளத்தில்.. உடனே விண்ணப்பிக்க!!

0

இந்தியன் ரயில்வே வாரியத்தின் ( IRCTC ) மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்க வெளியாகி இருக்கிறது. இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

IRCTC இல் பணிபுரிய வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படியும் இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 25 2025 என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சல் வழியில் மட்டுமே பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி :-

மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கட்டாயமாக பட்டப்படிப்பு அதிலும் குறிப்பாக பிஎஸ்சி, பி டெக் அல்லது பி இ பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லது மேலாண்மையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கூடியவர்களுக்கு வயது வரம்பு 55க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எழுது தேர்வுக்கு பதிலாக நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிகளுக்கான தேர்வு நடைபெறும் என்றும் இதில் தகுதியும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய நபர்களுக்கு சம்பளம் 67 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் இதற்கான விண்ணப்பங்களை கட்டாயமாக அஞ்சல் வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் IRCTC தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி கூட்டணி.. சீமான் பரபரப்பு பேட்டி!!

0

BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கடந்த சில மாதங்களாகவே இணக்கத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனியாகத்தான் செயல்படுவோம் என்று தெரிவித்து வருகிறார். அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதே நிகழ்ச்சிக்கு வந்த சீமானிடம் கை கொடுத்து இதே போல் போராடுங்கள் விட்டு விடாதீர்கள் என கூறினார். இதனை அடுத்து கல்லூரி நிகழ்ச்சியிலும் சீமானை புகழறையில் மூழ்கடித்தார். அவருக்கேற்றார் போல் சீமானும் அண்ணாமலையே விடாது புகழில் மகுடம் சூடினார். இது மட்டும் போதாது தமிழக அரசு பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடத்திய போது கூட கலந்து கொள்ள மாட்டேன் என கூறி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இப்படி ஒன்றன்பின் ஒன்றாக சீமான் பாஜகவிற்கு சாதகமாக ஒவ்வொரு செயல்முறையும் அமைந்ததை அடுத்து இவர்கள் கூட்டணி வைக்கப் போவது உறுதியென கூறி வந்தனர். அதேபோல பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், சீமானை எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு அவர் அழைப்பு விடுத்ததற்கு சீமான் இன்று பேட்டி அளித்துள்ளார்.

அதில் கூறியதாவது, தேசிய கட்சியில் கூட்டணி வைக்க எங்களை அழைத்த பாஜக மாநில தலைவருக்கு மிகுந்த நன்றி. எங்கள் அரசியல் பயணம் எங்களது கால்களை நம்பி தான் இருக்கிறது வேறொருவர் தோல்களை நம்பி கிடையாது. தேர்தல் அரசியல் கட்சி அரசியல் கூட்டணியை நம்பி தான் அரசியல் செய்வார்கள். நாங்கள் மக்களை வைத்து தான் அரசியல் செய்கிறோம் அதனால் எங்களுக்கு கூட்டணி தேவைப்படாது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக வுடன் சீமான் கூட்டணி வைப்பது கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

அதிமுக வில் ஓபிஎஸ் சசிகலா ரீ என்ட்ரி!! பாஜக கொடுத்த அட்வைஸ்.. OK சொன்ன எடப்பாடி!!

0

ADMK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் தான் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக முதலில் கூட்டணி வைப்போம் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை கைக்குள் வசப்படுத்திக் கொள்வோம் என்று எண்ணி வருகிறதாம். அந்த வகையில் முதலில் எடப்பாடி போட்ட கண்டிஷனுக்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு தற்பொழுது அவர்கள் நிர்வாகிகளை வைத்து அவரின் மனதை மாற்றி வருகிறார்களாம்.

அதன் வெளிப்பாடுதான் தினகரன் மீது கொடுக்கப்பட்ட வழக்கை எடப்பாடி வாபஸ் பெற்றது. பாஜக சிறு கட்சிகளை கூட தங்கள் வசம் வைத்து 2026 தேர்தலை திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அதிமுக விடம் பணிந்து நடந்து கொள்கிறது. இதனின் அடுத்த கட்ட டார்கெட் சீமான் மற்றும் இதர சிறு கட்சிகள் எனக் கூறுகின்றனர். அதன்படி அதிமுக வாக்குகளை சிதறவிடாமல் இருக்க ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை உள்ளிழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

முதலில் முடியவே முடியாது என கூறிய எடப்பாடி, தற்பொழுது உங்கள் நிர்வாகிகளை அதுவும் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு எதிராக திரும்பும் படி ஓபிஎஸ் உடன் இணக்கத்தில் உள்ளனர். இப்படி கூட்டணியில் கட்சி சேர்ந்த பிறகு, மூத்த நிர்வாகிகள் வெளியேறும் நிலை வந்தால் கட்சிக்கு தான் சேதாரம். அதனால் கட்சியை  கட்டுக்குள் வைக்க கட்சியை விட்டு நீக்கிய முன்னால் நிர்வாகிகளுடன் மீண்டும் சமரசம் பேசலாம் என கூறியுள்ளனர்.

ஆனால் எடப்பாடி சிறிது காலம் போகட்டும் என கூறியுள்ளாராம். வரும் நாட்களில் எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இணைவது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். பாஜக நேரடியாக ஆர்டர் போட்டால் அதிமுக கேட்காதென்று அவர் நிர்வாகிகளை வைத்தே பொம்மலாட்டத்தை தொடங்கியுள்ளது.

பெண்களின் வங்கி கணக்கிற்கு வரும் ரூ 5000.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு திடீர் அறிவிப்பு!!

0

TN Gov: 2025 மற்றும் 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரானது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் சார்ந்த  நடவடிக்கைகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ளார். இதில் முதலாவதாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டால் அதே வீட்டிலிருக்கும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது தவிர்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த மானிய கோரிக்கை விவாதத்தில், அதற்கு தளர்வு அளித்துள்ளனர்.

எந்த வீட்டில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுகிறார்களோ, அதே குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு குடும்ப அட்டை மூலம் ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என தொடங்கி திருநங்கைகள் வரை அனைவருக்கும் உதவி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த மானியமானது கிட்டத்தட்ட 2000 பெண்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளனர். இதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மாவரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியத்தை தமிழக அரசு வழங்க உள்ளது. அந்த வகையில் தமிழக அரசு 5000 கொடுத்து உதவும். குறிப்பாக என் திட்டத்திற்கு கணவனால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், ஆதவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பெண்கள் சுய தொழில் தொடங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு 50 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்பவர்களுக்கு 3 லட்சம் வரை கடனுதவி 50% வரை மானியம் போன்ற எண்ணற்றத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு தான் ஐயாயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்து பேசினால் அவ்வளவு தான்.. கப் சிப் தான் இருக்கனும்!! எடப்பாடி நயினார் கொடுத்த வார்னிங்!!

0

ADMK BJP: தமிழ்நாட்டில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளது. அமித்ஷா சென்னைக்கு வருகை புரிந்த போது இவர்கள் கூட்டணியை உறுதி செய்து, மத்தியில் ஆட்சிக்கு மோடி மாநில ஆட்சிக்கு எடப்பாடி எனக் கூறியிருந்தார். இதை வைத்து பல ஊடகங்கள் 2026 யில் அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி முறையை மேற்கொள்ளும் என்று கூறிவந்தது.

இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமியிடம் கேள்வி எழுப்பிய போது, கிடையாது என்று மறுப்பு தெரிவித்தார். திமுகவை வீழ்த்த கூட்டணி வைத்துக்கொண்டமே தவிர, கூட்டணி ஆட்சி செய்ய மாட்டோம் என தெரிவித்தார். இதே போலவே அக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், ஒருபோதும் தமிழகத்தில் கூட்டணி முறையில் ஆட்சி செய்ய மாட்டோம் இனி யாரும் அது போல் செய்யவும் மாட்டார்கள் என தெரிவித்தார்.

இப்படி அதிமுக கூட்டணி ஆட்சி இல்லை என தெரிவிக்கவே இது குறித்து பாஜக மாநில தலைவரிடம் கேள்வி எழுப்பினர். அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியது பாஜக தலைமை தான். மேற்கொண்டு அது குறித்த முடிவுகளையும் மேலிடமே எடுக்கும் என தெரிவித்தார். இப்படி அதிமுகவும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி ஆட்சி குறித்து பேசி வந்ததால் மீண்டும் விரிசல் உண்டாகும் என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

அதனை உணர்ந்த எடப்பாடி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். இனிவரும் நாட்களில் கட்சி நிலைப்பாடு மற்றும் அதன் செயல்முறை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பத்திரிக்கை ஊடகங்களுக்கு யாரும் சம்பந்தமில்லாமல் பேட்டியளிக்கக்கூடாது என தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தது பாஜக மேலிடம் தான்.

என்ன செய்வதென்று அவர்களுக்கு தெரியும். அமித்ஷா மற்றும் இபிஎஸ் இது குறித்து பேசி கொள்வார்கள், அவர்களை தவிர்த்து கூட்டணி குறித்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என எச்சரித்துள்ளார். நிர்வாகிகளால் ஏதேனும் கட்சிக்கு வில்லங்கம் உருவாகிவிடும் என்பதாலேயே அதிமுக மற்றும் பாஜக தலைமை முன்கூட்டியே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை எச்சரித்துள்ளது.