Home Blog Page 285

திடீரென ஹஜ் பயணிகளின் தங்குமிடத்தை ரத்து செய்த சவுதி!! கேள்விக்குறியாக உள்ள 52,000 இந்தியர்களின் நிலை!!

0

வருகிற ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் புனித தளத்திற்கு 1.72 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சவுதி அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், திடீரென 52 ஆயிரம் இந்தியர்களுக்கான தங்கும் இடத்தை ரத்து செய்து இருக்கிறது.

சவுதி அரேபியா அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடிய 1.72 லட்சம் இந்தியர்களில் 52,000 இந்தியர்கள் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு மூலமாக செல்ல இருப்பதாகவும், இவர்களுக்கு மெக்கா அருகில் இருக்கக்கூடிய மினாவில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மினாவில் இந்தியர்களுக்காக 5 மண்டலங்களாக இடம் பிரிக்கப்பட்டுள்ளது தற்பொழுது 2 மண்டலங்களில் தங்குவதற்கான வசதியின் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் பீதமுள்ள 3 மண்டலங்களில் தங்குவதற்கான பணத்தை செலுத்தக்கூடிய வழியை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காரணம், ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் சவுதிக்கு புனித யாத்திரை செல்லக்கூடிய இந்தியர்களின் உடைய கட்டணம் தாமதமாக செலுத்தப்பட்டதால் இது போன்ற ஒரு முடிவை சவுதி அரேபியா எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய அரசு இது குறித்து சவுதி நாட்டிடம் பேச வேண்டும் என்றும் இந்தியர்கள் நிம்மதியாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒன்றிய அமைச்ச ஜெய்சங்கர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

அக்ஷய திருதியை நாளுக்கான சூப்பர் அறிவிப்பு!! தங்கம் வாங்கணும்னா இதை தெரிஞ்சுக்கோங்க!!

0

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்ஷய திருதியை நன்னாளானது மக்களால் பெரிதளமும் போற்றப்பட்டு வருவதோடு அந்த நாளில் தங்கம் வாங்கி வைப்பதால் சகல செல்வங்களும் தங்களது வீட்டில் நிறைந்து வழியும் என மக்கள் அனைவரும் நம்பி அதன்படி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று வருகிற ஏப்ரல் 30 அன்று 2025 ஆம் ஆண்டுக்கான அக்ஷய திருதியை வரக்கூடிய நிலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

பொதுவாக அக்ஷய திருப்தியை அன்று நேரில் சென்று தங்கம் வாங்குவது சற்று சிரமமான காரியம் என்பதால் பலரும் முன்கூட்டியே சென்று தங்களுக்கு தேவையான நகையை தேர்வு செய்து அவற்றிற்கான பணம் முழுவதையும் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டு வருவது வழக்கமான ஒன்று. இதில் பலரும் முழுவதுமாக பணம் செலுத்த முடியவில்லை என்றாலும் மாதாந்திர தவணை திட்டத்தின் மூலம் அக்ஷய திருப்தியை நன்னாளில் தங்கம் வாங்குவதற்காக சேமிப்புகளை துவங்குகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு இதில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அவை பின்வருமாறு :-

✓ முதலில் அக்ஷய திருப்தியை நன்னாளில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் முன்கூட்டியே சென்று தங்களுக்கு தேவையான நகைகளுக்கான முழு பணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் சமீப காலமாக தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து வரும் நிலையில் இந்த மாத துவக்கத்தில் விலையானது சரிந்தது குறிப்பிடத்தக்கது.

✓ இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், தங்கத்திற்கு முழு பணத்தையும் செலுத்தி முன்பதிவு செலுத்தக்கூடியதானது மக்களிடையே குறைந்திருக்கிறது. எனவே நிலையில்லா தங்கம் விலையை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் அதிக அளவு ஆர்வம் செலுத்துகின்றனர்.

✓ இந்த ஆண்டு அக்ஷய திருதியைக்கு நகை வாங்க நினைப்பவர்கள் தங்களுக்கு தேவையான நகைகளை முன்பணம் மட்டுமே செலுத்தி புக் செய்து வைத்துக்கொண்டு அக்ஷய திருதியை அன்று வகை கடைகளுக்கு சென்று முன்பதிவு செய்த நாளிலிருந்து அக்ஷய திருப்தியை நாளுக்குள் எந்த நாளில் நகையின் விலை ஆனது குறைந்து இருக்கிறதோ அந்த நாளினுடைய விலைமதிப்பின்படி தங்கத்திற்கான முழு பணத்தையும் செலுத்தி தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி தங்கம் வாங்க நினைப்பவர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இதுபோன்ற ஒரு அறிவிப்பானது வெளியாகாமல் முதல் முறை இந்த ஆண்டு வெளியாவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமையல் உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

0

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய உத்தரவு மையங்களில் காலியாக உள்ள 236 மேல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அழைப்பு விடுத்திருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருக்கக்கூடிய 236 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை வட்டாரம் வாரியாக நேரடியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அந்த வட்டாரங்களினுடைய சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை என்றும் வயது நிர்ணயம் குறித்த வரையில் அறிவிப்பு தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் உதவியாளராக பணி நியமனம் செய்யப்படுபவருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு காலத்திற்கு பின்பு தான் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

www.tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாநகராட்சி நகராட்சி போன்ற அலுவலகத்தில் பெற்று கூட விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29 மாலை 5.45 மணி வரையில் மட்டுமே என்றும் விண்ணப்பிக்க வருபவர்கள் தன்னுடைய விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குடும்ப அட்டை இருப்பிடச் சான்று ஆதார் அட்டை ஜாதி சான்று போன்றவற்றின் நகல்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளி பெண்கள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அவர்களால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குனர் ஸ்டான்லி காலமானார்!! கண்ணீரில் திரைத் துறையினர்!!

0

திரைப்பட இயக்குனராகவும் எழுத்தாளராகவும் நடிகராகவும் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் இயக்குனர் ஸ்டான்லி. இவர் இயக்கக்கூடிய படங்கள் சமூக உணர்வை விழிப்புணர்வு படைப்புகளாகவும் குழந்தைகள் மற்றும் பின்தங்கி சமூகங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் திரைப்படங்களாகவும் அமைவது சிறப்பு அம்சம் பெற்றவர்.

கேரள மாநிலத்தில் 1967ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் நாள் பிறந்த இவர் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். சினிமா மீது கொண்ட பற்றின் காரணமாக 12 ஆண்டுகள் இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி ஆகியோரின் உதவியாளராக பணியாற்றி அதன் பின் தன்னுடைய இயக்குனர் பயணத்தை துவங்கி குறிப்பிடத்தக்க சில வெற்றி படங்களையும் கொடுத்திருக்கிறார். அதன்படி ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அதன்பின் சில நிதி பிரச்சனைகள் காரணமாக படங்களை இயக்குவதில் இருந்து ஓய்வெடுத்த இவர் நடிகராக களம் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் பிரசாந்த் சினேகா போன்ற பலரை அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும். இப்படிப்பட்ட இயக்குனராகவும் நடிகராகவும் சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி அவர்கள் ஏப்ரல் 15 2025 ஆம் ஆண்டான இன்று அதிகாலை சென்னை நகரில் தன்னுடைய இறுதி மூச்சை விட்டிருக்கிறார். தமிழ் திரைப்படத்துறையில் தன்னுடைய தனித்துவமான பங்களிப்பால் அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கக் கூடிய ஸ்டான்லி இறைவனடி சேர்ந்திருப்பது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ரகசியமா பாட சொன்னா.. இப்படியா பண்ணுவீங்க!! MSV பேச்சை தட்டாமல் செய்த பிரபல பாடகி!!

0

இந்திய சினிமா துறையை பொறுத்தவரை இசையில் சாதித்தவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் இவர் என்றாலே இசை தன்னால் நம் மனதில் வந்து தாண்டவம் ஆடும் என்றால் ஒரு சிலரை குறிப்பிட்டு கூற முடியும். அப்படித்தான் பிரபல பாடகி ஆகவும் ரசிகர்களின் பட்டாலத்தை கொண்டவராகவும் இருக்கக்கூடிய பாடகி பி சுசிலா அவர்கள் செய்திருக்கக் கூடிய ஒரு செயல் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.

எப்பொழுதுமே ஒரு இசை அமைப்பாளர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு அப்படியே செய்யக்கூடியவராகத்தான் பி சுசிலா அவர்கள் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எம்எஸ்வி அவரை ஒரு பாடலை ரகசியமாக பாடச் சொல்ல மிகவும் ரகசியமாக பி சுசிலா அவர்கள் அந்த பாடலை பாடியிருக்கிறார்.

1963 ஆம் ஆண்டு வெளியான பெரிய இடத்துப் பெண் நடிகர் எம் ஜி ஆர் நடிப்பால் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நாயகியாக சரோஜாதேவி அவர்களும் எம் ஆர் ராதா அசோகன் நாகேஷ் டி ஆர் ராஜகுமாரி போன்றோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் காண பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பொழுது தான் ரகசியம் பரம ரகசியம் என்ற பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் பி சுசிலா அவர்களிடம் ரகசியமாக பாட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்ட பி சுசிலா அவர்களும் ரெக்கார்டிங் ரூமிற்கு சென்று அங்கிருந்த கோரஸ் பெண்களான 2 பேருக்கு கூட அந்த பாடல் கேட்காத அளவுக்கு மிகவும் ரகசியமாக பாடி இருக்கிறார். இதை பார்த்த எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இது யாருக்குமே கேட்கவில்லை கொஞ்சம் சத்தமாக பாடுங்கள் என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் கேட்டது போலவே அந்த பாடலை பாடி முடித்து கொடுத்திருக்கிறார் பி சுசிலா.

2025 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி!! ஏப்ரல் 16 முதல் விண்ணப்பிக்கலாம்!!

0

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் வருகிற புதன்கிழமை அதாவது ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம் என இணைப்பதிவாளர் பா ஜெய்ஸ்ரீ அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

2025 ஆம் நிதி ஆண்டிற்கான 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கு காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய கூட்டுறவு நிறுவனங்களை சேர்ந்த நிரந்தர பணியாளர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விண்ணப்பிக்கக் கூடியவர்கள் கட்டாயமாக 10 வது மற்றும் 12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் இதற்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்றும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் கூட்டுறவு மேலாண்மை துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி குறித்த மேலும் விவரங்களை அறிய நினைப்பவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஏப்ரல் 16ஆம் தேதி விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தொடங்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்கள் புகைப்படங்கள் போன்றவற்றை வைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயை இணைய வழியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான கட்டணம் 20,850 ரூபாய் மட்டும் பயிற்சி பெறுபவர்களிடம் நேரடியாக பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு ,

அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம்,
5A வந்தவாசி சாலை,
ஆட்சியர் அலுவலகம் எதிரே,
காஞ்சிபுரம் – 631501

தொலைபேசி எண் – 04427237699

என் நண்பர் விஜயகாந்த்!.. பிரதமர் நரேந்திர மோடி ஃபீல் பண்ணி பேசிட்டாரே!…

0

மறைந்த நடிகர் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டதுதான் தேமுதிக. துவக்கத்தில் தனியாக போட்டியிட்டாலும் அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த். ஆனால், அதிமுக அமைச்சர்களுடன் சண்டை போட்டு நாக்கை துருத்தி அவர் கோபப்பட்ட வீடியோ வெளியிட்டு அவரின் இமேஜை டேமேஜ் செய்தார்கள்.

அதன்பின் பாஜகவுடன் கூட்டணியிலும் தேமுதிக இணைந்திருந்தது. அப்போது டெல்லி சென்றிருந்த விஜயகாந்தை கன்னத்தில் தடவி பிரமதர் மோடி அன்பு காட்டிய வீடியோவும் அப்போது வைரலானது. உடல்நலக்குறைவால் விஜயகாந்த் மரணமடைந்துவிட அதற்கு பின்னர் நடந்த தேர்தல்களிலும் தேமுதிக பாஜக உள்ள கூட்டணியிலேயே இருந்தது.

தற்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிக என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. தற்போது தேமுதிக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தலைமையில் செயல்பட்டு வருகிறது. எப்படியும் அவர் அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இணைவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் யாருடனும் கூட்டணி பற்றி பேசவில்லை என பிரேமலதா கூறியிருந்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி பற்றி ஒரு வீடியோவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘பிரதமர் மோடிக்கும் கேப்டன் விஜயகாந்துக்கும் இடையில் இருந்த உறவு அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டு சிங்கம் என பிரதமர் அழைப்பார். இருவரது நட்பு, பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட மிகவும் அரிதான ஒன்று.

கேப்டனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது ஒரு சகோதரனைப் போல கவலைப்பட்டு அடிக்கடி தொடர்பு கொண்டு அவரின் உடல்நலம் பற்றி விசாரித்தார்’ என பேசியிருக்கிறார். பிரேமலதா பேசியிருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் ‘என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும் அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன் இணைந்து பனியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக, தலைமுறைகள் தாண்டியும் அவர் நினைவு கூரப்படுவார்’ என பதிவிட்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளை தோற்கடிக்கும் அரசு பள்ளிகள்!! வெளிநாட்டுக்கு இணையான கல்வி சூழல்.. தமிழக அரசு அதிரடி முடிவு!!

0

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களுடைய கல்வி தரம் குறித்து பல முக்கிய முடிவுகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கட்டாயமாக கல்வி என்பது ஒன்று கோளாய் அமைய வேண்டும் என்பது யாராலும் மறக்க முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. எனினும் இப்பொழுது பல தனியார்கள் பள்ளிகளில் ஸ்டேட் போர்டு சிபிஎஸ்சி என பல்வேறு கல்வித் தகுதிகள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவுகள் :-

✓ அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகள் உட்பட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் 6000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

✓ 2000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு வசதிகள் செய்யவும் அதன் மூலம் கல்வி தரத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

✓ பள்ளிகளில் அதிநவீன வசதிகளை பொருத்துவதன் மூலம் கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அறிவு வளரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ 2025 2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை AI மற்றும் கோடிமுறை போன்ற அத்தியாவசிய பாடங்கள் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கணினி அறிவியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரம் கற்றல் போன்றவற்றையும் பாடத்திட்டங்களாக இணைக்க அடிப்படை கவனங்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மாணவர்கள் விரிவான கல்வியை பெற முடியும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிலை மாற்றத்தின் மூலம் மாணவர்கள் எளிமையான முறையில் அணுகக் கூடியதாகவும் ஏற்கக் கூடியதாகவும் நவீன கல்வி அமையும் என்றும் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உடைய முக்கியத்துவம் எதிர்கால மாணவர்களுக்கு கிடைப்பதோடு கல்வி மேம்பாட்டிற்கான வளர்ச்சி மாணவர்களிடையே அதிகரிக்கும் என்றும் திறமையான அறிவுள்ள மற்றும் எதிர்கால தலைமுறைகளை வளர்ப்பதில் அரசு இதுபோன்ற ஒரு முக்கிய முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

IPL 2025:மிகவும் ஆபத்தான வீரர் M S தோனி!!நான் இப்படி சொல்ல இது தான் காரணம்..ரிக்கி பண்டிங்!!

0

மார்ச் 22 2025 அன்று துவங்கிய ஐபிஎல் தொடரில் 18 ஆவது சீரிஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான வீரராக தோனி இருக்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.

தோனி குறித்து ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பதாவது :-

இது பெரிய அணிகள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் புதிதாக தோன்றிய சில அணிகள் தங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த ஐபிஎல் தொடரானது மிகவும் விறுவிறுப்பாக சென்று வருகிறது என தெரிவித்திருக்கிறார். எது எப்படி இருந்தாலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை மிகவும் ஆபத்தான வீரராக மகேந்திர சிங் தோனி இருக்கிறார் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தோனியின் உடைய விக்கெட் கீப்பிங் வேகமானது இன்றளவும் குறையவில்லை என்றும் அதோடு தன்னுடைய பகுதியை மிகவும் சிறப்பாக அவர் விளையாடுகிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். பாட்டிங் என வரும்போது இறுதியாக இறங்கி 10 முதல் 15 பந்துகளில் அதிக அளவு ரன்களை குவித்து தாக்கத்தை ஏற்படுத்துகிற வீரராக அமைத்திருக்கிறார் என்றும் தன்னை பொறுத்தவரையில் இந்த வருடம் மிகவும் ஆபத்தான வீரர் அவர் தான் என்றும் இந்த ஆண்டு ஆட்டத்தை பொறுத்தே அவர் ஓய்வு முடிவுகளையும் அறிவிப்பார் என தெரிவித்திருக்கிறார்.

நீ என்ன பெரிய ஆளு.. எனக்கு உன்னுடைய இசை சுத்தமா பிடிக்கல!! இளையராஜாவின் இசையை வெறுக்கும் பிரபலம்!!

0

80 காலகட்டங்களில் இருந்து இளையராஜா இசை உலகை ஆழ துவங்கி விட்டார் என்றும் இசை மாமேதை இசை ஞானி இசை கடவுள் என பல்வேறு பெயர்களால் ரசிகர்கள் இளையராஜாவை அழைத்து வருகின்றனர். இப்படி இசையுலகில் 50 ஆண்டு காலமாக தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருக்கக்கூடிய ஒருவரின் இசை பிடிக்கவில்லை என பிரபலம் தெரிவிப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா தெரிவித்திருப்பதாவது :-

அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா அவர்களை பஞ்சு அருணாச்சலம் அறிமுகப்படுத்திய பொழுது இந்த இசையமைப்பாளர் இன்னும் 25 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளாக விளங்குவார் என அப்பொழுதே தான் கணித்ததாகவும் ஆனால் தனக்கு அவருடைய இசையில் சுத்தமும் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். காரணம் இளையராஜாவிற்கு முன்னதாக தமிழ் சினிமா துறையில் எத்தனையோ இசை அமைதிகள் இருந்துள்ளனர் என்றும் அவர்களில் ஒருவரை பின்பற்ற கூடியவராகவே இளையராஜா இருக்கிறார் என்று மற்றபடி இசைக்கே ராஜா என்ற அளவிற்கு நாம் இவரை புகழ்ந்து விடக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இளையராஜா இசையில் வளர்ந்த பின்பு தான் பாப் மார்லி போன்ற மக்கள் பிரச்சனைகளை பாடக்கூடியவர்கள் வந்தனர் என்றும் அவர்களை குப்பை என இளையராஜா கூறியிருப்பதையும் குறிப்பிட்டார். இளையராஜாவைப் போன்ற பாப் மார்லியும் ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து இசையை மக்கள் மத்தியில் சேர்ப்பதற்காக வந்தவர் என்றும் இளையராஜா சினிமாவின் மூலமாக இசையை மக்கள் மத்தியில் சேர்க்கும் பொழுது பாப் மார்லி நேரடியாகவே இசையை மக்களிடம் கொண்டு போய் புரட்சிகரமாக சேர்த்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கு மிகவும் பிடித்த இசையை அதிலும் மக்கள் இசையை நேரடியாக மக்களிடம் போராடி சேர்த்தவர் பாப் மார்லி என்று அவரை பாராட்டா விட்டாலும் குப்பை என இளையராஜா சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் நான்தான் பெரியவன் என்று ஆதிக்கத்தால் அனைவரையும் இழிவுபடுத்தக் கூடிய ஒருவராகவே இளையராஜா இருக்கிறார் என்றும் சாருநிவேதிதா தெரிவித்திருக்கிறார்.