Home Blog Page 286

ஆப்ரேஷன் செய்தவர்களுக்கு மீண்டும் பைல்ஸ் பாதிப்பு வருமா? மருத்துவர் சொன்ன உண்மை!!

0

ஆசனவாய் பகுதியில் உள்ள சதைகளில் தோன்றும் புண்களை மூலம் அதாவது பைல்ஸ் பாதிப்பு என்று அழைக்கின்றோம்.பைல்ஸ் பாதிப்பு மலம் கழிப்பதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.நாள்பட்ட
மலச்சிக்கல்,மலத்தை அடக்கி வைத்தல்,நீர்ச்சத்து குறைபாடு,செரிமான அமைப்பில் பிரச்சனை போன்ற காரணங்களால் பைல்ஸ் உண்டாகிறது.

பைல்ஸை குணப்படுத்த தற்பொழுது பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றது.மூல நோயில் உட்புற மற்றும் வெளிப்புற மூல நோய் என்று இரு வகைகள் இருக்கின்றது.

மூல நோய் அறிகுறிகள்:

1)ஆசனவாயில் துர்நாற்றம்
2)மலத்தில் சிவப்பு இரத்தம் வெளியேறுதல்
3)மலம் கசிதல்
4)மலம் கழிப்பதில் சிரமம்
5)குத சளி வருதல்

மூல நோய்க்கான காரணங்கள்

1)நாள்பட்ட மலச்சிக்கல்
2)கர்ப்பம்
3)உடல் பருமன்
4)கடுமையான செரிமானப் பிரச்சனை

பைல்ஸ் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.மலத்தை அடக்கி வைக்காமல் வெளியேற்றிவிட வேண்டும்.

மூல நோய் உயிரை பறிக்கும் பாதிப்பு இல்லையென்றாலும் அதனை குணப்படுத்திக் கொள்ள தவறினால் கடுமையான கொடுமைகளை அனுபவிக்க நேரிடும்.மூல நோயில் நான்கு நிலை இருக்கின்றது.இதில் முதல் மூன்று நிலையில் இருப்பவர்களுக்கு பைல்ஸ் அறுவை சிகிச்சை எளிதில் மேற்கொள்ள முடியும்.நான்காம் நிலை பைல்ஸ் ஆபத்தை உண்டாக்கலாம்.

பெரும்பாலானோருக்கு மூல நோய் அறுவை சிகிச்சை செய்த பின்னர் மீண்டும் வருமா என்று கேள்வி இருக்கிறது.இதற்கு மருத்துவர்கள் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு மீண்டும் அந்த பாதிப்பு வர வாய்ப்பிருக்கிறது.ஆனால் இதன் தாக்கம் குறைவாகத்தான் இருக்கும்.

மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும்.எப்சம் குளியல் போட வேண்டும்.ஆரோக்கிய உணவுமுறைகளை பின்பற்ற வேண்டும்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.

எச்சரிக்கை நியூஸ்.. ஜிம் போறவங்க கண்டிப்பாக இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!!

0

நமது உடல் எடையை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.உடற்பயிற்சி உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.இன்று நடிகர்,நடிகைகள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரும் தங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

இதற்காக ஜிம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.சிலர் ஜிமிலேயே நாள் முழுவதும் நேரத்தை செலவிடுகின்றனர்.சிலர் கடுமையான எடை தூக்குதல் பயிற்சியை செய்கின்றனர்.ஆனால் அதீத உடற்பயிற்சி ஆபத்தை உண்டாக்கிவிடும்.

அதிக நேரம் உடற்பயிற்சி செய்தால் உடல் சோர்வு உண்டாகும்.அதிக உடற்பயிற்சி ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்துவிடும்.நீண்ட நேரம் ஜிம் பயிற்சி செய்தால் உடல் செயல்திறன் குறைந்துவிடும்.நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் உடலில் காயங்கள்,வீக்கங்கள் ஏற்படும்.

முதுகு வலி,பக்கவாதம்,மாரடைப்பு,மூட்டு வலி,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதிக
நேரம் ஜிம் பயிற்சி செய்தால் மன அழுத்தம் உண்டாகும்.மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மச் னசோர்வு,மன வலி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்..இதய நோய் பிரச்சனை இருப்பவர்கள் அதிக நேரம் ஜிம் பயிற்சி செய்தால் மாரடைப்பு,ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அதிக நேர ஜிம் பயிற்சி இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.அதிக எடை தூக்கி ஜிம் பயிற்சி மேற்கொண்டால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.ஜிம் பயிற்சி நல்லது என்றாலும் அதை அதிக நேரம் செய்வது உடல் ஆரோக்கியத்தை ஆபத்தாக மாறிவிடும்.எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி மட்டும் ஜிம் பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

அதேபோல் சிலர் சீக்கிரம் கட்டுடல் பெற விரும்பி முட்டை,அசைவம் போன்ற புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.புரதச்சத்து வேண்டும் என்பதற்காக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.

எனவே ஜிம்க்கு செல்பவர்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை பழக்கத்தை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டும்.

6 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டநாயகன் விருது!! தோனி சொன்ன ஒற்றை வார்த்தை!!

0

IPL 2025 : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடைய வெற்றியை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில் நேற்று இரவு ஏழு முப்பது மணிக்கு லக்னோவில் 30 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட் VS சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய நிலையில், இந்த முறையாவது சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுமா என்பது போல அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். CSK அணியின் வெற்றிக்காக கேப்டன் தோனி அவர்கள் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் TOSS வென்றது CSK அணி.

பவுலிங் தேர்வு செய்த தோனி LSG அணிக்கு பேட்டிங் வழங்கினார். முதலில் பேட்டிங் இறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய CSK அணி தொடக்கத்தில் அதிவேகமாக ரன்களை குவித்து வந்த நிலையில், மிடில் ஆடலில் ஆட்டத்தை இழக்க தொடங்கியது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய எம்எஸ் தோனி அவர்கள் 11 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு மொத்தமாக 26 ரன்கள் எடுத்திருந்தார். இதோடு மட்டுமல்லாது ஆயுஷ் பட்டோனியை ஸ்டம்பிங் செய்த தன்னுடைய 200 ஆவது ஆட்டமிழப்பை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காகத்தான் 6 ஆண்டுகளுக்குப் பிறகு எம் எஸ் தோனி அவர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆனால் இறுதி பெற்றவுடன் ஆட்டநாயகன் விருதை, ” அவங்க எனக்கு ஏன் விருந்து கொடுக்குறாங்கன்னு தெரியல ? நூர் அகமத் ரொம்பவே நல்லா வந்து சேர்ந்தார். அவருக்கு கொடுத்திருக்கலாம் ” தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்ற தோனி அவர்கள் 43 வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற அதாவது மிக வயதான வீரர் எம் எஸ் தோனி என்ற இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கண் பயிற்சி பார்வை திறனை மேம்படுத்துமா? கண்ணாடி அணிபவர்களுக்கு இது செட்டாகுமா?

0

நாம் முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஒரு உறுப்பு கண்.இந்த உலகத்தை பார்க்க நமது கண் உதவுகிறது.கண் பார்வை திறனை நாம் மேம்படுத்தினால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் கண்ணாடி அணியும் ஏற்படாமல் இருக்கும்.பார்வை குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று கிட்டப் பார்வை மற்றொன்று தூரப்பார்வை.

இன்று பெரும்பாலானோர் கண்ணாடி அணிகின்றனர்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிகின்றனர்.அதிக நேரம் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துதல்,பிறவி குறைபாடு,கண்களில் பிரச்சனை போன்ற காரணங்களால் பார்வை திறனை குறைகிறது.

கண் பார்வை திறன் குறைய காரணங்கள்:

**கண்புரை பாதிப்பு
**மாகுலர் சேதம்
**கண் நரம்பு பிரச்சனை
**மாலைக்கண் நோய்
**கண் நோய் தொற்று

ஒருமுறை கண்ணாடி அணியும் நிலை வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதே நிலை தான் நீடிக்கும்.சிலரால் கண்ணாடி அணியாமல் பார்ப்பது கடினமாக இருக்கின்றது.கண் பார்வை திறனை அதிகரிக்க உணவுமுறையில் அக்கறை செலுத்த வேண்டும்.வைட்டமின் ஏ உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும்.அதேபோல் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு பழம்,பாதாம் பருப்பு,மாம்பழம்,உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை திறம் மேம்படும்.சிலர் கண் பார்வை திறனை அதிகரிக்க கண் பயிற்சி செய்கின்றனர்.கண்களை சுழலச் செய்தல்,கண் யோகா,கண்களை நன்றாக சிமிட்டி பார்ப்பது போன்ற பயிற்சிகளை செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் கண் பயிற்சி செய்வதால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்று எந்த ஆய்வுகளும் தெளிவுபடுத்தவில்லை.கண் பயிற்சி செய்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்படாத உண்மை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெயில் காலத்தில் அக்குள் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த.. இதை அங்கு தடவி குளிங்க!!

0

தற்பொழுது அதிக வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது அதிகரிக்கிறது.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை சுரந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த அக்குள் வியர்வை துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.

தீர்வு 01:

கற்றாழை
மஞ்சள் தூள்

ஒரு கற்றாழை மடலின் ஜெல்லை பிடித்து தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூளை கற்றாழை ஜெல்லுடன் போட்டு மிக்ஸ் செய்து அக்குளில் பூசி உலரவைத்து க்ளீன் செய்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.

தீர்வு 02:

வெட்டி வேர் பொடி
பாசிப்பருப்பு பொடி
ரோஸ் வாட்டர்
சந்தனத் தூள்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.வாங்கிக் கொள்ள வேண்டும்.இதில் வெட்டி வேர் பொடி,பாசிப்பருப்பு பொடி மற்றும் சந்தனத் தூள் ஆகிய மூண்றையும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கிண்ணத்தில் சேர்க்க வேண்டும்.

அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் கலக்க வேண்டும்.அதன் பிறகு அக்குள் பகுதியில் இதை தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் குளிர்ந்த நீரில் அக்குளை க்ளீன் செய்ய வேண்டும்.இதுபோன்று செய்தால் அக்குள் துர்நாற்றம் நீங்கும்.

தீர்வு 03:

தயிர்
ரோஸ் வாட்டர்
சந்தனத் தூள்

கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூளை போட்டு கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர்,ஒரு தேக்கரண்டி தயிர் ஊற்றி கலந்துவிட வேண்டும்.இந்த பேஸ்டை அக்குளில் தடவி குளித்தால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தீர்வு 04:

வேப்பிலை பொடி
ரோஸ் வாட்டர்
மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி,ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.அடுத்து அதில் ஒன்றரை தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும்.இதை அக்குள் மீது தடவி சுத்தம் செய்தால் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

நான்கு மிளகை வைத்து மூக்கில் ஒழுங்கும் மொத்த சளியையும் கரைந்து வந்துவிடும்!!

0

கோடை,குளிர்,மழை என்று எந்த பருவ காலத்திலும் சளி தொந்தரவு உங்களைவிட மாட்டேங்குதா.இந்த தீவிர சளி தொந்தரவை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)தேன்

பயன்படுத்தும் முறை:

நான்கு கருப்பு மிளகை வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து தேன் குழைத்து சாப்பிட்டால் சளி கரைந்துவிடும்.மிளகு மற்றும் தேன் ஆகிய இரண்டுமே சளித் தொந்தரவை சரி செய்யும் அருமருந்தாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)நெய்

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் வாணலி வைத்து கால் தேக்கரண்டி மிளகு போட்டு லேசாக வறுத்தெடுக்க வேண்டும்.பின்னர் இதை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த கருமிளகுத் தூளை நெயில் கலந்து சாப்பிட்டால் சளி தொந்தரவு அகலும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)பசும் பால்
2)மிளகுத் தூள்

பயன்படுத்தும் முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி கால் தேக்கரண்டி மிளகுத் தூள் கலந்து குடித்தால் சளி கரைந்துவிடும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)சர்க்கரை
3)தண்ணீர்

பயன்படுத்தும் முறை:

நான்கு மிளகை கொரகொரப்பாக அரைத்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பருகினால் சளி பிரச்சனை குணமாகும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)மிளகு
2)சுக்கு
3)மஞ்சள்

பயன்படுத்தும் முறை:

பாத்திரத்தில் கால் தேக்கரண்டி மிளகு.ஒரு துண்டு சுக்கு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வடித்து குடித்தால் சளி பிரச்சனை குணமாகும்.

நம்புங்க.. இந்த பொடியை சாப்பிட்டால் முக்காமல் மலத்தை வெளியில் தள்ளலாம்!!

0

குடலில் தேங்கிய மலக் கழிவுகள் முழுமையாக வெளியேற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பயனுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.

மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்:

**நீர்ச்சத்து குறைபாடு
**கெட்டி மலம்
**வறண்ட மலம்
**செரிமானக் கோளாறு
**மலம் அடக்கி வைத்தல்

மலச்சிக்கலுக்கு சிம்பிள் தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி
2)தான்றிக்காய் பொடி
3)நெல்லிக்காய் பொடி

செய்முறை விளக்கம்:-

கடுக்காய்,தான்றிக்காய்,நெல்லிக்காய் ஆகிய மூன்றையும் வற்றல் பதத்தில் 50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஒருமுறை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த பொடி கால் தேக்கரண்டி அளவு போட்டு காய்ச்சி குடித்து வந்தால் மலக் கழிவுகள் சீக்கிரம் வெளியேறும்.

நெல்லிக்காய்,தான்றிக்காய்,கடுக்காய் ஆகிய மூன்றும் கலந்து திரிபலா சூரணமாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.பொடி செய்ய முடியாதவர்கள் இதை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த பொடி குடலில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றி வயிற்றை சுத்தப்படுத்துகிறது.இதை மாதம் இருமுறை மலமிளக்கியாக பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)ஒம்ம
2)பட்டை
3)வெந்தயம்
4)பெருஞ்சீரகம்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஓமம்,ஒரு துண்டு பட்டை,அரை தேக்கரண்டி வெந்தயம் மற்றும் கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு வறுக்க வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் குடலில் இருக்கின்ற கழிவுகள் முழுமையாக அகலும்.

சம்மரில் குடிக்க வேண்டிய 5 ட்ரிங்க்!! உடல் சூட்டை உறிஞ்சி குளிர்ச்சி கொடுக்கும்!!

0

சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஐந்து ஆரோக்கிய பானங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

1)மோர்

தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் குளிர்ச்சித் தன்மை கொண்ட பானமாகும்.இந்த பசு மோரை காலை நேரத்தில் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.இது கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற சிறந்த பானம்.

வெயில் காலத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க மோர் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

2)இளநீர்

வெயிலை தணிக்க பெரும்பாலானோர் இளநீர் குடிக்கின்றனர்.இளநீர் இயற்கை குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை தினமும் குடித்து வந்தால் வெயில் கால நோய்கள் உங்களை அண்டாமல் இருக்கும்.

3)தர்பூசணி சாறு

நீர்ச்சத்து,வைட்டமின் சி,மெக்னீசியம்,இரும்பு,தாமிரம் போன்ற பல நன்மைகளை கொண்டிருக்கிறது.இந்த தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.தர்பூசணி சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கோடையில் தர்பூசணி சாறு குடித்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.தர்பூசணி சாறு தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

4)க்ரீன் டீ

தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால் கோடை காலத்தில் நாள் முழுவதும் உடல் புத்துணர்வுடன் இருக்கலாம்.

5)எலுமிச்சை ஜூஸ்

வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த எலுமிச்சை ஜூஸை ஒரு கிளாஸிற்கு பிழிந்து தண்ணீர் கலந்து குடித்தால் உடல் புத்துணர்வுடன் இருக்கும்.கோடை கால சரும பாதிப்புகள் வராமல் இருக்க இந்த எலுமிச்சை ஜூஸை குடிக்கலாம்.

நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

0

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அரச மரம் ஒரு வழிபாடு மரமாக பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த அரச மரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.அரச இலை முதல் அரச மர வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

அரச மர இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து குடித்தால் உடலில் பித்தம்,வாதம்,கபம் ஆகிய மூன்றும் சமநிலைக்கு வரும்.அரசமர பட்டையை பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அரச மர பட்டையை பொடித்து தேன் குழைத்து சருமத்தில் பூசினால் சொறி,சிரங்கு பாதிப்பு குணமாகும்.சருமம் பளபளப்பாக மாற அரச மர பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.அரச மரத்தில் இருந்து வடியும் பாலை சேற்றுப்புண்கள் மீது பூசினால் சீக்கிரம் குணமாகும்.

அரசமர கொழுந்தை பொடித்து பாலில் கலந்து குடித்தால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக அரசமர வேரை பொடித்து தேன் கலந்து சாப்பிடலாம்.

மாதவிலக்கு பிரச்சனை இருக்கும் பெண்கள் அரச மரத்தின் வேர் மற்றும் விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்கள் அரசமர பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.அரசமர பட்டை ஊறவைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

அரச மர பட்டை பொடியை உடலில் பூசினால் வெட்டை குணமாகும்.காயங்கள் மீது அரச மர இலையை வைத்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

அரசமர விதையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அரசமர கொழுந்தை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் பல் ஆரோக்கியம் மேம்படும்.அரச மர வேரை கொண்டு பல் துலக்கினால் பல் வலிமை அதிகரிக்கும்.

ஒரு கிளாஸ் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து கலந்து குடித்தால் கிடைக்கும் 8 நன்மைகள்!!

0

அன்றாட வாழ்வில் பால் சம்மந்தப்பட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.நெய்,மோர்,வெண்ணெய்,பாலாடை,சீஸ்,தயிர் என்று பாலில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

இதில் வெண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நெய் நல்ல கொழுப்பு நிறைந்த பொருளாக உள்ளது.நெய்யில் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது.இந்த நெய்யை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.

நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று பலரும் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் நெய் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.நெயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

1)காலையில் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்புகள் கரையும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெய் ட்ரிங்க் எடுத்துக் கொள்ளலாம்.

2)காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் நெய் கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.செரிமானப் பிரச்சனை சரியாக நெய் ட்ரிங்க் குடிக்கலாம்.

3)சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க நெய் ட்ரிங்க் குடிக்கலாம்.நெய்யை சருமத்தில் தடவினால் வறட்சி,சுருக்கங்கள் நீங்கும்.

4)நெய் பானம் சளி,இருமலை குணப்படுத்த உதவுகிறது.காய்ச்சல்,ஜலதோஷம் இருப்பவர்கள் நெய்யை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

5)நெய் கலந்த தண்ணீரை குடித்து வந்தால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.மூளை செயல்திறன் அதிகரிக்க இந்த ட்ரிங்க் குடிக்கலாம்.

6)சூடு நீரில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் உடலில் இருக்கின்ற அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.

7)உடலில் தேங்கி இருக்கும் அழுக்கு கழிவுகள் வெளியேற நெய் கலந்து தண்ணீரை குடிக்கலாம்.

8)கண் பார்வை திறன் அதிகரிக்க நெய் பானம் பருகலாம்.டீ,காபிக்கு பதிலாக இந்த நெய் பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.