Home Blog Page 287

80 வயதில் 20 வயது வலிமை கிடைக்க.. பாலில் இந்த பொடி கலந்து தினமும் குடிங்க!!

0

உங்கள் உடல் எலும்பு வலிமை அதிகரிக்க,மூட்டு வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க இந்த பாலை தினமும் குடித்தால் பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – ஒரு கப்
2)பார்லி அரிசி – அரை கப்
3)ஏலக்காய் – ஐந்து
4)வெள்ளை எள் – 25 கிராம்
5)பால் – ஒரு கப்
6)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:-

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் கருப்பு உளுந்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

அடுத்து 25 கிராம் வெள்ளை எள்ளை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.பஅதேபோல் அரை கப் பார்லியை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இதனுடன் ஐந்து ஏலக்காயை போட்டு வறுக்க வேண்டும்.

இந்த பொருட்களை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் அரைத்த பொடி தேவையான அளவு கொட்டி கெட்டிப்படாமல் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பால் நன்கு கொதித்து வந்ததும் ஒரு கிண்ணத்திற்கு ஊற்றி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் எலும்புகள் பலம் கூடும்.மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி அனைத்தும் குணமாக இந்த பாலை குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – ஒரு கப்
2)கருப்பு உளுந்து – கால் கப்
3)நாட்டு சர்க்கரை – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கப் ராகி போட்டு வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டிவிட வேண்டும்.அடுத்து இதில் கால் கப் கருப்பு உளுந்து போட்டு லேசாக வறுக்க வேண்டும்.

பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி போட்டு கலந்துவிட வேண்டும்.

அடுத்து இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மூட்டு வலி,எலும்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.

தினம் இந்த ஒரு உருண்டையை சாப்பிட்டால் 90 வயதிலும் ஆக்ட்டிவாக எழுந்து ஓடுவீங்க!!

0

நாம் தினமும் வித விதமான உணவுகளை சாப்பிட்டாலும் பின்பற்றும் உணவுமுறை பழக்கம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் ஒரு பயனும் இல்லாமல் போய்விடும்.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சிறுதானிய உணவுகள் மட்டுமே பிரதான உணவாக இருந்தது.கம்பு,ராகி போன்றவற்றில் உணவு தயாரித்து உட்கொண்டு வந்தனர்.

இது தவிர குதிரைவாலி,வரகு,சாமை,தினை,சோளம் போன்ற சிறு தானியங்களும் உணவாக பயன்படுத்தப்பட்டது.இதில் ராகியை பெரும்பாலான மக்கள் உணவாக உட்கொண்டு வந்தனர்.ராகியில் கால்சியம்,இரும்பு,வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

ராகியில் லட்டு,அடை, உருண்டை போன்றவை செய்து சாப்பிட்டு வந்தாலும் ராகி களி பேமஸான உணவாக பார்க்கப்படுகிறது.கொதிக்கும் நீரில் ராகி மாவை போட்டு உப்பு கிளறி இறக்கி உருண்டை பிடிக்க வேண்டும்.இந்த ராகி உருண்டைக்கு வேர்க்கடலை சட்னி,கருவாட்டு குழம்பு,கீரை குழம்பு சிறந்த காமினேஷனாக இருக்கும்.

இந்த ராகி உருண்டையை தண்ணீரில் போட்டு தயிர் ஊற்றி கரைத்து குடித்தால் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.ராகி காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமை அதிகரிக்கும்.ராகியில் இருக்கின்ற கால்சியம் சத்து உடல் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.ராகி களி சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செரிமானப் பிரச்சனை நீங்க ராகி களி சாப்பிடலாம்.ராகி களியை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.குடல் இயக்கம் மேம்பட ராகி களியை உட்கொள்ளலாம்.ராகியில் இருக்கின்ற நார்ச்சத்து பைல்ஸ் பாதிப்பை தடுக்கிறது.உடல் எடையை குறைக்க ராகி களியை தினமும் சாப்பிடலாம்.

கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரைய ராகி களியை சாப்பிடலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட ராகி களி சாப்பிட வேண்டும்.இரத்த சோகை பிரச்சனையை சரி செய்து கொள்ள ராகி களி சாப்பிடலாம்.இரத்தத்தில் இருக்கின்ற சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ராகி களியை உட்கொள்ளலாம்.உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காக்க ராகியை உணவாக சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்!! யாரெல்லாம் இதை சாப்பிடவேக் கூடாது தெரியுமா?

0

நாம் அடிக்கடி உட்கொள்ளும் எலுமிச்சையில் நார்ச்சத்து,வைட்டமின் சி போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.எலுமிச்சை சாறு உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.எலுமிச்சை சாறில் ஜூஸ்,சாதம்,டீ போன்றவை செய்து உட்கொள்கிறோம்.

தினமும் எலுமிச்சை சாறு பயன்படுத்தி வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.எலுமிச்சை சாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.எலுமிச்சையில் இருக்கின்ற வைட்டமின் சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சையை ஜூஸாக சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.எலுமிச்சையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்ற பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை டீ குடித்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.சிறுநீரகத்தில் கற்கள் படியாமல் இருக்க எலுமிச்சை தேநீர் குடிக்கலாம்.உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் இருக்க எலுமிச்சை பானம் உட்கொள்ளலாம்.

வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகளை சரி செய்து கொள்ள எலுமிச்சை சாறு பருகலாம்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.எலுமிச்சை ஜூஸ் குடித்தால் சரும நோய்கள் நீங்கும்.

எலுமிச்சை சாறு நல்லது என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்தாக மாறிவிடும்.வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் பாதிப்பு ஏற்படும்.எலுமிச்சை ஜூஸ் சிலருக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும்.

வாய்ப்புண்,அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ் செய்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்.சிலருக்கு எலுமிச்சை பழம் ஒற்றைத் தலைவலி பாதிப்பை உண்டாக்கலாம்.எலுமிச்சை சாறு சிலருக்கு வாந்தி,குமட்டல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பல் கூச்சம்,பற்சிதைவு போன்ற பாதிப்புகள் எலுமிச்சை சாறு பருகுவதால் ஏற்படலாம்.

நம்புவீங்களா? உடலில் இத்தனை வியாதிகளை திரிபலா சூரணம் குணப்படுத்துமாம்!! இதை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

0

நாம் பயன்படுத்தி வரும் ஆயுர்வேத மூலிகைகளில் திரிபலாவிற்கு தனி சிறப்பு உண்டு.நெல்லிக்காய்,தான்றிக்காய்,கடுக்காய் ஆகிய மூன்றையும் கொண்டு திரிபலா சூரணம் தயாரிக்கப்படுகிறது.இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இந்த திரிபலா சூரணம் ஒரு பழங்கால மூலிகையாக உள்ளது.

திரிபலா சூரணத்தை பொடித்து தண்ணீரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு அமைப்பு மேம்படும்.திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் திரிபலா சூரணத்தை பயன்படுத்தலாம்.

மன அழுத்தம் கட்டுப்பட தினமும் திரிபலா சூரணம் தேநீர் குடிக்கலாம்.உடலில் படியும் தேவையற்ற கழிவுகள் நீங்க திரிபலா சூரணத்தை மருந்தாக உட்கொள்ளலாம்.திரிபலா சூரணம் சரும ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.

கண் பார்வை அதிகரிக்க திரிபலா சூரணத்தில் தேநீர் போட்டு குடிக்கலாம்.உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள திரிபலா சூரணத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.இதயம் சம்மந்தமான தொந்தரவுகளை அனுபவித்து வருபவர்கள் திரிபலா சூரணத்தை வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

குடலில் தேங்கிய கழிவுகள் மற்றும் புழுக்கள் வெளியேற திரிபலா சூரணத்தை சாப்பிடலாம்.இந்த பொடியை இரவில் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

மூட்டு வலி,மூட்டு வீக்கம்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம்.இதை மாத்திரை,பொடி என்று எந்த வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.இந்த திரிபலா பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

திரிபலா டீ செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

1)திரிபலா பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவு திரிபலா சூரணத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த திரிபலா பானத்தை குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சுகர் இருப்பவர்கள் மோர் குடிக்கலாமா? உண்மையை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0

உடலில் எந்த ஒருநோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அதை குணப்படுத்தும் மருந்துகளில் ஒன்றாக உணவு இருக்கின்றது.அதேபோல் சிலவகை உணவுகள் நோய் பாதிப்புகளை அதிகரிக்கிறது.சில நோய் பாதிப்புகளுக்கு உணவுக்கட்டுப்பாடு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் தங்கள் உணவில் கடுமையான கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.சிலவகை உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த உணவு சாப்பிட வேண்டும் எந்த உணவை தவிர்க்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கிறது.

சர்க்கரை நோய் ஏறுபவர்கள் பால் பொருட்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.குறிப்பாக தயிரில் இருந்து கிடைக்கும் மோரை குடித்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.நாம் சாப்பிடும் நூறு மில்லி மோரில் கிட்டத்தட்ட 5 கிராம் கார்போஹைட்ரேட்,3 கிராம் புரதம்,3 கிராம் கொழுப்பு,62 கலோரிகள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மோரில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டு குடித்தால் சர்க்கரை அளவு சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டிற்கு வரும்.சர்க்கரை மட்டுமல்ல இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் பிரச்சனையும் மோர் குடிப்பதன் மூலம் சரியாகும்.மோர் குடித்தால் உடல் சூடு தணியும்.மோர் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு குறைவாக இருக்கின்ற தயிரில் இருந்து மோர் தயாரித்து குடிக்கலாம்.மோர் குடித்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.மோர் குடித்தால் குடல் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.தயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோரில் தண்ணீர் மட்டும் கலந்து பருகுங்கள்.

இதில் உப்பு போன்ற எந்தஒரு சுவையையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.மோரில் உப்பு கலந்து குடித்தால் இரத்த கொதிப்பு,இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.அதேபோல் சிலர் மோரில் இனிப்பு சுவை கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர்.இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

உங்களுக்கு தயிர் மாதிரி திரி திரியா வெள்ளைப்படுதல் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0

பருவமடைந்த பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல்பான ஒன்று.பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் இந்த வெள்ளைப்படுதல் உண்டாகிறது.சளி,தயிர் போன்று இந்த வெள்ளைப்படுதல் இருக்கும்.இது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விஷயம் என்றாலும் இதன் தீவிரம் அதிகமாக இருந்தால் நிச்சயம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,அதிகளவு வெள்ளைப்படுதல்,மஞ்சள் நிறத்தில்,கருப்பு நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் அது நோய் தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம்.வெள்ளைப்படுதல் என்பது கருப்பை வாய் மற்றும் உட்சுவரின் தசைப்பகுதியில் சுரக்கும் ஒரு திரவமாகும்.இந்த திரவம் பெண்களின் யோனிப் பகுதியை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வெள்ளைப்படுதலுக்கான காரணங்கள்:

1)ஹார்மோன் மாற்றம்
2)மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை
3)பாலியல் உறவு
4)கர்ப்பம்
5)பூஞ்சைதொற்று
6)வைரஸ் தொற்று

அதேபோல் மஞ்சள் காமாலை நோய்,தைராய்டு,கருப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனை,காசநோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படும்.உங்களுக்கு துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோல் மஞ்சள் மற்றும் கெட்டியாக வெள்ளைப்படுதல் இருந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.யோனி பகுதியில் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் அதை கவனிக்க வேண்டும்.உங்களுக்கு தொடர்ச்சியாக வெள்ளைப்படுதல் அதற்கான காரணம் என்னவென்று கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

துர்நாற்ற வெள்ளைப்படுதல் பூஞ்சை தொற்று இருப்தற்கான அறிகுறியாகும்.இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள் உடலுறவு கொள்ளும் பொழுது தங்களது ஆண் துணைக்கு பாதிப்பை உண்டு செய்யும்.பெண்கள் அனைவருக்கும் வெள்ளைப்படுதல் பொதுவான பிரச்சனைதான் என்றாலும் அவற்றின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கால தாமதம் செய்யாமல் அதற்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

கோடையில் அசைவ உணவுகள் சாப்பிடுபவர்கள் இதை கட்டாயம் செய்யுங்கள்!! இல்லைனா பிரச்சனை உங்களுக்குதான்!!

0

உங்களில் பலர் அசைவப் பிரியர்களாக இருப்பீர்கள்.அசைவத்தில் மட்டன்,சிக்கன்,மீன் என்று பல வகைகள் இருக்கின்றது.அசைவ உணவுகளில் புரதம்,அமினோ அமிலங்கள்,இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.

அசைவ உணவுகளை பிரியாணி,குழம்பு,கிரேவி,சில்லி,வறுவல் என்று பல விதங்களில் எடுத்துக் கொள்கின்றோம்.அசைவ உணவுகள் எலும்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.கோழி இறைச்சியில் புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது.இரத்த உற்பத்தியை அதிகரிக்க அசைவ உணவுகளை சாப்பிடலாம்.வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் அசைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மீனில் அதிக நல்ல கொழுப்பு நிறைந்திருக்கிறது.மீன் உணவுகளை உட்கொண்டால் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.புரதச்சத்து குறைபாடு இருப்பவர்கள் அசைவ உணவுகளை உட்கொள்ளலாம்.ஆடு,கோழி ஆகிய இறைச்சிகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது.அசைவ உணவில் வைட்டமின் பி 12 நிறைந்து காணப்படுகிறது.உடல் தசைகளை வலிமைப்படுத்தி அசைவ உணவுகளை உட்கொள்ளலாம்.

அசைவ உணவுகளில் செலினியம்,கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.அசைவ உணவுகளை சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அசைவ உணவுகள் தாதுக்கள் பற்றாக்குறையை போக்குக்குகிறது.

என்னதான் அதிக நன்மைகள் அசைவத்தில் இருந்தாலும் அதை கோடை காலத்தில் உட்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.அசைவ உணவுகள் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் பிரச்சனை,வயிற்று வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அதேபோல் அசைவ உணவுகளில் இருக்கின்ற அதிக புரதம் நமது உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.எனவே அசைவ உணவு உட்கொள்ளவதற்கு முன்னர் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அல்லது பழங்களை உட்கொள்வது நல்லது.நார்ச்சத்து நிறைந்த பொருள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நம் உணவுப் பழக்கத்தை இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்!!

0

மனிதர்களுக்கு உணவு,நீர் ஆகியவை உயிர் வாழ்வதற்கான அடிப்படை விஷயமாக இருக்கிறது.இவை இரண்டும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நாம் சாப்பிடும் உணவில் கால்சியம்,புரதம்,இரும்பு,வைட்டமின்கள்,தாதுக்கள் நிறைந்திருக்க வேண்டும்.

இளமை வயதில் நாம் ஆரோக்கிய உணவுகளை தவிர்த்தால் வயதாகும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.தினசரி காய்கறி,பழங்கள் மற்றும் கீரைகளை சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனையை தவிர்க்கலாம்.நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தோல் சுருக்கம்,தோல் வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

எனவே நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்கள்.அதேபோல் வைட்டமின் பி 12,வைட்டமின் டி உணவுகளை சாப்பிட வேண்டும்.கண் பார்வை திறனை அதிகரிக்க வைட்டமின் ஏ உணவுகளை சாப்பிடலாம்.

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பால்,சோயா,காளான்,உலர் விதைகளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.புரதச்சத்து கிடைக்க முட்டை உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின் டி சத்து கிடைக்க சூரிய ஒளிபடும் படியாக நடக்க வேண்டும்.இரத்தம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க பேரிச்சம் பழம்,முருங்கை கீரை,உலர் விதைகளை உட்கொள்ளலாம்.டீ,காபி போன்ற ஆரோக்கியம் இல்லாத பானங்களை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை பானம்,தேன் கலந்த தண்ணீரை பருகலாம்.கால்சியம் சத்து கிடைக்க பால் பருகலாம்.மருத்துவ குணம் நிறைந்த மசாலாக்களை உட்கொள்ளலாம்.ஹோட்டல் உணவுகள்,காரணமான உணவுகள்,கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஆட்டிறைச்சி உணவுகளை மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை உட்கொள்ளலாம்.மீன் உணவுகளை வாரம் ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஜங்க் புட்,பாக்கட் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.தினமும் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும்.மைதா உணவுகள்,மாவுச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

நோட் பண்ணிக்கோங்க! நீங்கள் பின்பற்றி வரும் எட்டு ஆபத்தான உணவுமுறை பழக்கங்கள் இது!!

0

தற்பொழுது ஆரோக்கியமில்லாத வாழ்க்கைமுறையை பலரும் பின்பற்றி வருகின்றனர்.ஆரோக்கியம் இல்லாத உணவு உடல் ஆரோகியத்தை மோசமாக்கிவிடும்.தவறான உணவுப் பழக்கம் உடலில் கொடிய நோய்களை உருவாக்கி உயிரிழப்பை உண்டாக்கிவிடும்.

நம் ஆரோக்கியம் பாதிக்க காரணம் உணவுதான்.தினசரி வாழ்வில் நாம் ஆரோக்கியமில்லாத பழக்கத்தை மட்டுமே பின்பற்றி வருகின்றோம்.அது என்ன மாதிரியான பழக்கம் என்பதை இங்கு தெரிந்த்து கொள்ளுங்கள்.

1)இன்று பெரும்பலான மக்கள் வேலைப்பளு காரணாமாக காலை உணவை தவிர்க்கின்றனர்.இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.காலை உணவு உட்கொள்ளவில்லை என்றால் அல்சர்,வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் உருவாகிவிடும்.

2)குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடும் பொழுது மொபைல் பார்ப்பதை ஒரு பழக்கமாக மாற்றி வருகின்றனர்.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு பழக்கமாகும்.

3)வெள்ளை அரிசி சாதத்தை மட்டுமே மூன்று வேளையும் உட்கொள்ளும் பழக்கத்தை பலரும் கடைபிடிக்கின்றனர்.இதனால் உடலுக்கு எந்த ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.தட்டில் காய்கறி கூட்டு,கீரை,புரத உணவுகள் என்று வண்ணமையமான உணவுகள் இருக்க வேண்டும்.

4)சிலர் அதிகமாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.அளவிற்கு அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியம் இல்லாத பழக்கம்.உடல் பருமன்,கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க இது காரணமாகிவிடும்.

5)சீரான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால் நிச்சயம் ஆபத்து ஏற்படும்.இளம் வயதில் நோய் பாதிப்புகள் வர இதுவே காரணம்.

6)அவரச அவசரமாக உட்கொள்ளுதல்,உணவை மெல்லாமல் விழுங்குதல் போன்ற காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

7)ஆரோக்கிய உணவுகளை தவிர்த்துவிட்டு ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொண்டால் நிச்சயம் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.

8)இன்று பலருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது.தூக்கமின்மை காரணமாக உடல் ஆரோக்கியம் மோசமாகிறது.தற்பொழுது வருகின்ற பாதிப்புகளுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக இருக்கிறது.

கோட்டை விட்ட சிவாஜி மற்றும் ஜெயலலிதா!! எம்ஜிஆர் தான் இதுக்கு சரி.. பிரபலம் கூறும் உண்மை!!

0

சொத்துக்களை பொருத்தவரை எம்ஜிஆர் தன்னுடைய சொத்துக்கள் தனக்குப்பின் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்நாள் முடியும் முன்பாகவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் இந்த விஷயத்தை பொறுத்தவரை சிவாஜி கணேசனும் அம்மையார் ஜெயலலிதாவும் கோட்டை விட்டுவிட்டதாக பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்திருக்கிறார்.

Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருப்பதாவது :-

சிவாஜி கணேசன் அவர்களின் அன்னை இல்லம் வீட்டை பராமரிக்க வேண்டும் என்றால் அதற்கு 20 பேர் வேலைக்கு வேண்டுமென்றும் அத்தனை பேருக்கும் மாத சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் அதற்காகவே தனியே வேலை பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தூங்குவதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்து அவர் சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் என்று இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து கொண்டு வருவதாகவும் அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் வீட்டுக்கு எதிரே இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை தற்பொழுது விற்று விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய சொத்துக்கள் யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது என்பது போல எம்ஜிஆர் அவர்கள் உயில் எழுதி வைத்துவிட்டு மறைந்ததைப் போல ஜெயலலிதா அம்மையாரோ நடிகர் திலகமோ செய்யவில்லை என குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலால்தான் இன்று மூன்று கோடி ரூபாய்க்கு அன்னை இல்லம் வீட்டை அடகு வைப்பது என்பது நிகழ்ந்திருப்பதாகவும் அதனை தன்னால் ஜீரணம் கூட செய்து பார்க்க முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.