Home Blog Page 289

ரேஷன் கடைகளில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் குறைந்த விலையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளை பொருத்தவரை மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகள் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் விடுமுறை நாட்களில் கூட தங்களுக்கு அதிக அளவு வேலைப்பளு இருப்பதாக நியாய விலை கடை ஊழியர்கள் தெரிவித்த நிலையில் இதனை சரிப்படுத்தும் விதமாக நியாய விலை கடைகளில் சில முக்கிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு இருக்கிறது.

அதன்படி, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை கணக்கு பார்த்த எடுத்து வைப்பது போன்ற பணிகளுக்காக கடை திறக்க வேண்டிய நிலை இருப்பதால் இனி மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகளில் கூட்டுறவு சங்கங்களில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு எந்த வித பொருட்களையும் அனுப்பக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் நியாய விலை கடை ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.

மத்திய அரசு வழங்கும் கிரெடிட் கார்டு!! மானியத்துடன் வழங்கப்படும் ரூ.30,000 லிமிட்!!

0

கொரோனா காலகட்டம் தொடங்கிய நேரத்தில் மத்திய அரசாணத ஒரு முக்கிய நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டமானது ஜூன் 1 2020 ஆம் ஆண்டு தெருவோர வியாபாரிகளுக்கு நன்மை பயக்கும் விதமாக பிரதான் மந்திரி தெரு வியாபாரி ஆத்ம நிர்பர் நிதி என்ற பெயரில் துவங்கப்பட்டது.

இதில் தெருவோர வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி கிரெடிட் கார்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் 30 ஆயிரம் லிமிட் உடன் 7 சதவிகித ஆண்டு வட்டி என்ற விகிதத்தில் கிரெடிட் கார்டு வழங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதன் முதல் கட்டமாக 10,000 வரை செயல்பாட்டு மூலதன கடன் வழங்கப்படும் என்றும் அதனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தும் பட்சத்தில் இரண்டாவது முறையாக 15,000 ரூபாயும் அதனைத் திருப்பி சரியாக செலுத்தும் பட்சத்தில் இறுதியாக 30,000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை செலுத்துவதற்கான அதிகபட்ச காலமாக 36 மாதங்கள் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரெடிட் கார்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் :-

✓ கேஒய்சி ஆவணங்கள்
✓ ஆதார் அட்டை
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ பான் கார்டு
✓ ஓட்டுநர் உரிமம்

இத்திட்டத்தின் மூலம் 30,000 மட்டுமல்லாது 50,000 வரையிலான கடன் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதழ் தொகையானது முழுவதுமாக ஒரே மானியமாக செலுத்தப்படும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூடிய விற்பனையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 1200 வரை கேஷ் பேக் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

நாளை தான் கடைசி நாள்!! விவசாயிகள் இதை செய்தே ஆக வேண்டும்!!

0

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு முடிவடைகிறது.

இந்தியாவில் இருக்கக்கூடியவர்களுக்கு ஆதார் எண் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயிகளுக்கும் தனியாக அடையாள எண் வழங்குவது முக்கியம் என அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்ட விவசாயிகளின் உடைய பட்டா செட்டா போன்றவற்றை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் நிலத்தினுடைய விவரங்கள் இணைக்கப்பட்டு இவற்றிற்காக பிரத்தியேக எண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை விவசாயிகள் தங்களுடைய சிட்டா அடங்கள் மற்றும் ஆதார் அட்டை இரண்டையும் வைத்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசினுடைய அனைத்து சலுகைகளையும் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் விவசாயிகள் இன்னும் இதனை முறையாக செய்து முடிக்கவில்லை என்றும் அதற்கான காரணம் தங்களுடைய முன்னோர்களின் பெயரில் இருக்கக்கூடிய இளங்கலை தங்களுடைய பெயர்களுக்கு மாற்றி அதன் பின்பு இந்த எண்ணிற்கு விண்ணப்பிக்க காலதாமதம் ஏற்படுவதால் கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

வீட்டை சீரமைக்க நினைப்பவர்களுக்கு நற்செய்தி!!மறு வீடு கட்ட தமிழக அரசு வழங்கும் நிதி உதவி!! 

0

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டமானது துவங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பழுதடைந்த மற்றும் சீரமைக்க முடியாத நிலையில் இருக்கக்கூடிய பழைய அரசு வீடுகளை இடித்து அதை புதிய வீடுகளாக கட்டுவதற்கு தமிழக அரசு தரப்பில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினுடைய முதல் கட்டமாக 600 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் 210 சதுர அடி இருக்கக்கூடிய வீடுகளுக்கு ரூ.2.40 லட்சம் என்ற வேதத்தில் பணம் வழங்கப்படும் என்றும் பயனாளிகள் தங்களுடைய விருப்பப்படி கூடுதல் வசதிகளை சேர்க்க விரும்பினால் அதனை அவர்களுடைய சொந்த செலவில் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2000 2001 ஆம் ஆண்டிற்கு முன்னதாக அரசுத் திட்டங்களின் கீழ் கட்டித் தரப்பட்ட வீடுகள் தற்பொழுது முழுமையாக சேதம் அடைந்திருந்தால் அல்லது பழுது பார்க்கவே முடியாத நிலையில் இருக்கிறது என்றால் அவற்றை திட்டத்தின் கீழ் சரி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு :-

✓ வீடு பயனாளியின் பெயரில் அரசு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருத்தல் அவசியம்

✓ பயனாளி இறந்திருந்தால் அவரது சட்டபூர்வ வாரிசுகள் குடியிருந்தால் மட்டுமே தகுதி பெற முடியும்

✓ பயனாளி வேறு எந்த வீட்டையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது

✓ விற்கப்பட்ட வாடகைக்கு விடப்பட்ட அல்லது சட்டபூர்வமற்ற வாரிசுகள் குடியிருந்தால் அந்த வீடுகள் திட்டத்தில் சேர்க்கப்படாது

✓ ஓய்வு பெற்ற அல்லது பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சொந்தமான வீடுகள் திட்டத்தில் சேர்க்கப்படாது.

பயனாளிகள் தேர்வு செய்யும் முறை :-

வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களுடன் அதாவது ஆறு பேர் கொண்ட குழு இதற்காக அமைக்கப்படும் என்றும் அந்த குழு வீடுகளை ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல சென்ற இளையராஜா!! ஆனால் நடந்ததே வேறு!!

0

சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் அவர்கள் இறந்து பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தினார். இதே போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் இளையராஜாவின் வீட்டிலும் அவரது மகள் பவதாரணி இறந்த பொழுது நிகழ்ந்தது.

இயக்குனர் பாரதிராஜா மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் நீண்ட கால நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து வேலை பார்த்த கடைசி படம்தான் நாடோடி தென்றல். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வந்தனர். இயக்குனர் மற்றும் நடிகரான மனோஜ் இளையராஜா அவர்களின் வீட்டில் தவழ்ந்த விளையாடிய காலங்களும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் மனோஜ் அவர்களின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத பாரதிராஜா அவர்களுக்கு உடனடியாக ஆறுதல் கூற முடியாமல் காலம் தாழ்த்தி இளையராஜா வரை சந்திக்க சென்று இருக்கிறார்.

ஆறுதல் சொல்வதற்காக சென்ற இடத்தில் அரை மணி நேரம் எதுவும் பேச முடியாமல் இளையராஜா ஒரு புறம் மௌனம் காக்க பாரதிராஜா தன் மகன் இறந்த துயரத்தில் மௌனமாகவே அமர்ந்திருக்கிறார். ஆறுதல் கூற சென்ற இடத்தில் எதையும் பேச முடியாமல் அமைதியாகவே அமர்ந்திருந்த அதன் பின் இளையராஜாவும் அங்கிருந்து கிளம்பி விட்டார். பேசி ஆறுதல் செய்வதை விட பேசாமல் அமைதியாக இருந்து அவர்கள் அருகில் இருப்பது மிகப்பெரிய விஷயம் என சொல்லாமல் இளையராஜா அமைதியாக இருந்து வந்து விட்டார் என வலைதளங்களில் பரவி வருகிறது.

திருமணம் ஆகாத பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

0

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில் பல லட்சம் மக்கள் பயன் பெற்று வரும் நிலையில், மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நிராகரிக்கப்பட்டு மீண்டும் விண்ணப்பங்களை தயாரிக்க கூடியவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை நேரில் சென்று தங்களுடைய விண்ணப்பங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிதாக விண்ணப்பிக்க கூடியவர்களில் சில தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த தளர்வுகளின் படி,

✓ குடும்ப தலைவி இல்லாத அப்பா, மகன் மற்றும் மகள் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு அந்த அட்டையில் இருக்கக்கூடிய மகளுக்கு 21 வயது நிரம்பிய நிலையில் அவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஒருவேளை குடும்பத் தலைவி இல்லாத வீட்டில் 2 அல்லது 3 மகள்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில் அதில் மூத்த மகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

✓ அதேபோன்று, விவாகரத்து பெற்று பிரிந்த மகளிர்க்கும் உரிமை தொகை பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரே வீட்டில் இருக்கக்கூடிய இரண்டு பேர் திட்டத்தின் கீழ் பயன்பட முடியாது என்றும் ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டாலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது என திட்டவட்டமாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

விவாகரத்தில் ட்ரெண்டாகும் புதிய முறை!! ஜீவியைத் தொடர்ந்து பிரபுதேவா பார்த்த வேலை!!

0

நடிகர் இயக்குனர் நடன கலைஞர் என பல்வேறு தனித்திறமைகளும் பன்முகத்தன்மையும் கொண்ட பிரபுதேவா குறித்து அவருடைய முதல் மற்றும் முன்னாள் மனைவி ராம்லத் சமீபத்திய பேட்டி ஒன்று பேசியிருப்பது ரசிகர்களிடையே வைரல் ஆக்கி வருகிறது.

இவர்களுடைய திருமணமானது இந்து திரைப்படத்தின் மூலம் காதலாக தொடங்கி அதன் பின் திருமணத்தில் முடிந்திருக்கிறது. பிரபுதேவா நடிகராக அவதாரம் எடுக்கும் பொழுது பிரபுதேவா மற்றும் ராம்லத் ஜோடிக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் ஒரு மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார். அதன் பெண் இருவருக்கும் இடையே விவாகரத்தானது முடிவு செய்யப்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் தான் பிரபுதேவாவின் வாழ்க்கையில் காதல் என்ற கிசுகிசுக்கள் அதிகம் எழுந்தன. ஆனால் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்த பிரபுதேவா தன்னுடைய 47 வயதில் திருமணம் செய்து இப்பொழுது அழகிய பெண் குழந்தைக்கு தந்தையாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் பிரபுதேவா அவர்களின் முன்னாள் மனைவி இராமலத் பிரபுதேவா குறித்து பேட்டி அளித்திருப்பது :-

மகன் ரிஷியினுடைய முதல் நிகழ்ச்சியில் அவர் நடனமாடியது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றும் இத்தனை ஆண்டுகளாக நடனத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்த ரிஷி திடீரென கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த உழைப்பை போட்டு இது போன்று முன்னேறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்ல அது அவருடைய உடம்பில் அவர் தந்தையான பிரபுதேவாவின் ரத்தம் ஓடுகிறது என்றும் அது தான் ஏதோ மேஜிக் செய்து ரிஷியை நடன பாதைக்கு மாற்றி இருக்கிறது என்றும் ராம்நாத் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாது விவாகரத்திற்கு பின்பும் பிரபுதேவா தனக்கு மிகவும் ஆதரவாகவும் ஒரு நண்பர் போன்ற துணையாகவும் இருந்ததாக தெரிவித்திருப்பது விவாகரத்தில் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்குவதாகவே அமைந்திருக்கிறது.

IPL 2025: SRH வீரர்கள் ஒழுங்காக விளையாடவில்லை என்றால்.. காவ்யா மாறன் மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!! உண்மையை உடைத்த புவனேஸ்வர் குமார்!!

0

2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட வீரரும் 2025 ஆம் ஆண்டு இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடக்கூடிய வீரருமான புவனேஸ்வர் குமார் தன்னுடைய முன்னாள் அணியின் உரிமையாளர் காவியா மாறன் குறித்து சில முக்கிய தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

புவனேஸ்வர் குமார் காவ்யா மாறன் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

ஒரு அணி நன்றாக விளையாடவில்லை என்றாலும் அல்லது சில வீரர்கள் தவறுகளை மேற்கொண்டாலும் அந்த அணியினுடைய உரிமையாளர் கோபப்படுவதோ அல்லது மறைமுகமாக கேள்விகள் கேட்பதோ நிகழ்வது சாதாரண விஷயம் என்றும் ஆனால் காவியா மாறனும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும் ஒவ்வொரு நாளும் நேரில் வந்து விளையாட்டை பார்ப்பதோடு மட்டுமல்லாது அங்கு இருக்கக்கூடிய வீரர்களுக்கு போட்டியில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவார் என பலரும் நினைத்திருக்க கூடிய நிலையில் உண்மையில் அங்கு அதுபோன்று நடக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

அதற்கு மாறாக, நாங்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் எதுவும் சொல்ல மாட்டார் என்றும் எப்பொழுதுமே ஒரு நண்பர் போல எங்களை ஆதரிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நான் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது என்றும் புவனேஸ்வர் குமார் கூறியிருப்பது தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்களால் பெரிதளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

போட்டி என்று வந்துவிட்டால் வீரர்களை அவர்களது போக்கில் சென்று ஆறுதல் செய்த விளையாட வைப்பது காவியா மாறனின் பழக்கமாக உள்ளது என்பதை இதன் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை அவர்களை திட்டினாலோ அவர்களிடம் கோபப்பட்டாலோ ஒரு நண்பர்களாக இருக்கக்கூடிய சூழல் என்பது அந்த அணியில் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தலை முடி பராமரிப்பதில் நல்லது என்று நினைத்து நாம் இத்தனை நாளாக செய்யும் மோசமான தவறுகள்!!

0

ஆண்,பெண் அனைவரும் தங்கள் முடியை பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.தலைமுடி நீளமாகவும்,அடர்த்தியாகவும் வளரவும்,கருமை நிறத்தில் இருக்கவும் பல குறிப்புகளை பின்பற்றி வருகின்றோம்.மூலிகை எண்ணெய்,மூலிகை ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை பராமரித்து வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலானோரின் கருத்து.

அதேபோல் தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு வராது.அதேபோல் வெடிப்பு முடியை வெட்டுதல்,அமாவாசை நாளில் முடி வெட்டுதல் போன்றவற்றை செய்தால் முடி வளரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இத்தனை நாட்கள் நாம் பின்பற்றி வந்த பழக்கங்கள் அனைத்தும் தவறானது என்று ஆய்வுகள் சொல்கிறது.

தலைக்கு எண்ணெய் வைப்பதால் முடி வளரும் என்பது தவறான கருத்து.தலைக்கு எண்ணெய் வைப்பதற்கும் முடி வளர்ச்சிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நமது முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமது உடலில் இருந்தால் போதுமானது.

தலைக்கு எண்ணெய் வைத்தால் பொடுகு வராது என்பது பலரது கருத்து.ஆனால் உண்மையில் தலைக்கு எண்ணெய் வைப்பதால்தான் பொடுகு வருகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோல் முடி வெட்டினால் நன்றாக முடி வளரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் முடி வெட்டுவதால் சீக்கிரம் முடி வளர்வதில்லை.குறிப்பாக அமாவாசை நாளில் முடி வெட்டினால் முடி வளரும் என்பது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் ஒரு பழக்கமாக உள்ளது.இது முற்றிலும் தவறான கருத்து.

வெள்ளை முடியை பிடுங்கினால் அவை பெருகிவிடும் என்று பலரும் நினைக்கின்றனர்.ஆனால் உண்மையில் வெள்ளைமுடியை பிடுங்கினாலும் பிடுங்காவிட்டாலும் தலையில் வெள்ளை முடி வரும்.இது ஊட்டச்சத்து குறைபாட்டை பொறுத்துள்ளது.தலைக்கு எண்ணெய் வைக்க விரும்பினால் குளிர்பதற்கு முன்னர் இரண்டு மணி நேரத்திற்கு முன் வைக்கலாம்.அதன் பிறகு குளித்தால் முடி ஆரோக்கியம் மேம்படும்.

இளம் வயதில் தலை சொட்டை விழுந்துவிட்டதா? இதை தலைக்கு தேய்த்து குளித்தால் காடுமாதிரி முடி வளரும்!!

0

தற்பொழுது இளம் வயதினருக்குதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.இளம் வயதில் தலை வழுக்கையாகி விட்டால் சீக்கிரம் முதுமை தோற்றம் வந்துவிடும்.எனவே தலை முடி உதிர்வை முழுமையாக கட்டுப்படுத்த இந்த பயனுள்ள குறிப்பை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் பொடி
2)தேங்காய் பால்
3)முட்டையின் வெள்ளைக்கரு
4)கற்றாழை ஜெல்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை அதில் ஊற்றி மீண்டும் அரைக்க வேண்டும்.

அதன் பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேங்காய் பாலை கிண்ணத்திற்கு வடிகட்டி அரைத்த கற்றாழை ஜெல்லை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி அளவு கடுக்காய் பொடியை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவி நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

அதன் பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.இப்படி செய்தால் தலை முடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலையில் வழுக்கையான பகுதியில் புதிதாக முடி வளரத் தொடங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல்
2)கற்றாழை பேஸ்ட்
3)வெந்தயம்

செய்முறை விளக்கம்:-

ஒரு கப் அளவிற்கு தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கற்றாழை ஜெல்லை தனியாக பிரித்து பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதற்கு முன்னர் இரண்டு தேக்கரண்டி அளவு ஊறவைத்த வெந்தயத்தை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

இப்பொழுது தேங்காய் பாலில் கற்றாழை பேஸ்ட்,வெந்தய பேஸ்ட் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை தலைக்கு தடவி குளித்து வந்தால் நன்றாக முடி வளரும்.