Home Blog Page 295

எடப்பாடிக்கு பெரும் அடி.. அவரு எங்கள் கூட்டணி!! பாஜகவுடன் இணைய தயாராகும் OPS!!

0

OPS: அதிமுகவின் முக்கிய நபராக விளங்கியவர் பன்னீர்செல்வம். இவர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது கூட முதல்வராக இருந்தவர். அவரின் மறைவுக்குப் பிறகு மீண்டும் இவருக்கு முதல்வர் பதவி வந்தாலும் பல காரணங்களால் அதனை தொடர முடியவில்லை. பின்பு இரட்டை தலைமை என்று எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரின் கீழ் கட்சியானது செயல்பட்டு வந்தது. நிர்வாகிகள் பலரும் ஒற்றை தலைமை வேண்டுமென கூறினர். இதன்பிறகு ஒருமித்தமாக எடப்பாடியை தேர்வு செய்தனர். பொதுச் செயலாளர் இணை பொது செயலாளர் என்று எடப்பாடி மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் முக்கிய பதவியும் கொடுக்கப்பட்டது.

நாளடைவில் பாஜகவுடன் கூட்டணியை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டார். அதன் விளைவு கட்சியை விட்டு நீக்கம் செய்ய வைத்தது. மீண்டும் கட்சியை தன் வசப்படுத்த பலமுறை போராடியும் அனைத்தும் எடப்பாடி பக்கத்திற்கே சாதகமாக அமைந்தது. இப்படி இருக்கும் சூழலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அப்போதாவது தனக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்குமென வெகுவாக காத்திருந்தார். அதேபோல அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆரம்ப கட்டத்தில் எடப்பாடி ஒத்து வராத நிலையில் ஓபிஎஸ் வைத்து அதிமுகவை கூட்டணியில் இழுத்துக் கொள்ளலாம் என்று பாஜக நினைத்திருந்தது. ஆனால் அந்தத் திட்டமெல்லாம் தவிடு பொடியாகும் வகையில் எடப்பாடி மீண்டும் கூட்டணிக்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அதில் சில வரைமுறைகள் வகுத்துள்ளார். அதில் முக்கியமாக இருப்பதே கூட்டணி பிரச்சனையில் தலையிடக்கூடாது என்பதுதான், அதன்படி ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் வாய்ப்பு கேட்டபோது உட்கட்சி பிரச்சினைகளில் தலையிட முடியாது என்று அமித்ஷா கூறிவிட்டார். இதனால் பன்னீர்செல்வம் தனி கட்சி அமைத்து பாஜகவுடன் இணக்கமாக இருப்பதாக கூறுகின்றனர்.

தன் காதலை வெளிப்படுத்திய சமந்தா!! யாருக்குன்னு தெரியுமா.. ட்விஸ்ட் இருக்கு!!

0

நடிகை சமந்தா அவர்களின் வாழ்வு குறித்தும் அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ரசிகர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. காதல் திருமணம், விவாகரத்து, மயோ சிட்டிஸ் நோய் அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் தோல்வி போன்றவை அவரை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த சமந்தா தெரிவித்திருப்பதாவது :-

பல நாட்களுக்கு சமந்தாவை மேடையில் பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த சந்தோஷத்தில் பலர் சமந்தாவை நோக்கி ஐ லவ் யூ என தெரிவித்தனர். சமந்தாவோ ஐ லவ் யூ டூ என எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்தார். ஆனால் அதனை தொடர்ந்து ஒருவர் ஐ லவ் யூ மம்மி என தெரிவித்ததற்கும் கோபமோ முகத்தில் சுழிப்போ எதுவும் இல்லாமல் உடனடியாக சிரித்துக்கொண்டே ஐ லவ் யூ டூ மகனே என சமந்தா பதில் அளித்து இருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அப்பொழுது பேசிய சமந்தா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் படங்களில் கிட்ட எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் கூட ரசிகர்கள் என் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் அதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெரியவில்லை ஆனால் இந்த அன்பிற்கு நான் தகுதியானவளா என்றும் கூட எனக்கு தெரியவில்லை என்பது போல பேசி மேடையில் கண்கலங்கி இருக்கிறார்.

குறிப்பாக சமந்தா எப்பொழுதுமே தைரியமாக பெண்ணாக காட்சி கொடுக்க காரணம் அவரது வாழ்க்கை பயணம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களினுடைய தைரியத்தால் இயங்குகிறதாகும். சமந்தா அவர்களின் சமூக வலைதளத்தில் அவர் போட்டிருக்கக்கூடிய பதிவில் , ” இன்று இந்த நாளை சுயமரியாதையோடு வாழ பழகி கொள்கிறேன். எந்த நேரத்திலும் என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன். அமைதிக்கொள் மனமே, அமைதிக்கொள் ” என தன்னுடைய பதிவில் தெரிவித்திருப்பதோடு முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும் என்றும் தைரியமாக இருக்க இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இவரையெல்லாம் பதவியில் வைத்திருப்பது பெரிய துரோகம்.. உடனே நீக்குங்கள்- OPS பரபரப்பு குற்றச்சாட்டு!!

0

DMK: திமுக அமைச்சர்கள் தங்கள் பேச்சுனாலையே தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இலவச பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்று கூறி அதில் தானே நீங்கள் செல்கிறீர்கள் என்று பெண்களை நேரடியாக வசை பாடினார். இதனால் தமிழகமெங்கும் கண்டனங்கள் எழுந்தது. அதேபோல தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி சைவம் வைணவம் எனக் கூறி விலைமாது பெண்களை குறித்து மிகவும் கொச்சையாக பேசியுள்ளார்.

இவர் பேசிய இந்த வீடியோவால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் ஸ்டாலினுக்கு அழுத்தம் கிளம்பியுள்ளது. இவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குங்கள் இப்படிப்பட்டவர் கட்சியிலிருப்பது அவகேடு என்று கூறுகின்றனர். இவர் கட்சியை சேர்ந்த கனிமொழி உள்ளிட்டோரும் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஓ பன்னீர்செல்வம் இது ரீதியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இப்படி கொச்சையாக பேசுபவரை அமைச்சர் பதவியில் வைத்திருப்பது பெண்களுக்கு செய்யும் துரோகம் உடனடியாக அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பொன்முடி நான் தடுமாற்றத்துடன் அவ்வாறு பேசி விட்டேன் அதனால் தற்போது வருந்துகிறேன் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மனப்பூர்வமாக கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்முடி பதவிக்கு ஆப்பு வைத்ததே உதயநிதி தான்.. அடுத்து உங்களுக்கும் தான்!! துரைக்கு போன எச்சரிக்கை!!

0

DMK: திமுகவில் உட்கட்சி பூசலானது அவரின் மகனாலேயே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தற்போது வந்த தன் மகனுக்காக துணை முதல்வர் பதவியை தூக்கிக் கொடுக்கலாமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்த ஒன்று?? இது ரீதியாக கட்சியின் சீனியர் சிட்டிசன் பலரும் அதிருப்தியில் இருந்தனர். ஒரு சில மேடைகளில் இது குறித்து துரைமுருகன் வாய் திறந்து மறைமுகமாக பேசியிருப்பார்.

அதற்கேற்றார் போல் ஸ்டாலினும் இளைஞர்களுக்கு வழி விடுங்கள் என பதிலடியம் கொடுத்ததுண்டு. ஆனால் கட்சியில் உள்ள அனைத்து சீனியர் சிட்டிசனுக்கும் பட்டென்று நெற்றியில் அடிக்கும்படி அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு தண்டனை கிடைத்துள்ளது. மற்றவர்கள் இப்படி பேசினாலும் அவர்களுக்கும் அதே கதி தான் என்பதை திமுக உணர்த்தியுள்ளது. இதற்குப் பின்னணியில் ஸ்டாலின் கிடையாது உதயநிதி தான் இருக்கிறார் என கூறுகின்றனர்.

தற்போதைய துணை முதல்வர் பதவியில் வகிக்கும் உதயநிதிக்கு கட்சியின் மரியாதை என்பது மிகவும் முக்கியம். அதற்கு களங்கம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். தொடர்ந்து திமுக என்றாலே சர்ச்சை பேச்சு என அக்மார்க் ஸ்டாம்ப் குத்திவிட்டனர். இதனை மாற்றும் வகையிலும் மற்ற அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடும் நோக்கத்திலும் இவரின் பதவியானது பறிக்கப்பட்டுள்ளது.

இந்த காரணத்தினாலேயே அமைச்சர் துரைமுருகன் தானாகவே வந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இவரும் ஒரு பொது நிகழ்ச்சியில் ஊனமுற்றோரை அவதூறாக பேசியுள்ளார். அப்படி பேசிவிட்டு தானாகவே வந்து தற்போது மன்னிப்பும் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக – பாஜக கூட்டணியை மற்ற கட்சிகள் ஏன் எதிர்க்கிறது?!. இதுதான் காரணமா?!…

0

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்திருக்கிறது. நேற்று மாலை சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவும் இதை உறுதி செய்துவிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்’என கூறினார்.

மேலும், யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார்.

பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை. அதோடு, அவர்களுக்கு சிறுபான்மையுனர் ஓட்டும் கிடைக்காது. எனவே பாஜகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவை பலவீனமாக்கும். இது பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அதிமுகவினர்தான். ஆனால், திமுக மற்றும் அக்கட்சியுன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தை கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கழகம் போன்றவைகள் போட்டி போட்டு எதிர்ப்பு தெரித்து அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

இவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி பலவீனமானால் இவர்களுக்கு என்ன வந்தது? இவர்கள் ஏன் இப்படி துடிக்கிறார்கள்? அதிமுக மீது இவ்வளவு அக்கறை இருப்பவர்கள் அக்கட்சியோடு கூட்டணி வைத்து அதை பலப்படுத்தியிருக்க வேண்டாமா? பிறகு எதற்காக இலவச ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என யோசித்தால் ஒன்று புரியும்.

இவர்கள் அத்தனை பேரின் வேதனை என்னவென்றால், அதிமுக-பிஜேபி கூட்டணி அமையாமல் இருந்தால் அதிமுகவை கை காட்டி, திமுகவை மிரட்டி கூடுதல் இடங்களை பெற்றிருப்பார்கள். இப்போது, திமுக கொடுகும் இடங்களை பெற்றுக்கொண்டு 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும். அதுதான் உங்கள் அத்தனை பேரின் கோபமும்’ என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

AI மூலமாக பிறந்த ஆண் குழந்தை!! ஆச்சரியத்தை நிகழ்த்திய மருத்துவர்கள்!!

0

உலகிலேயே முதல்முறையாக மனிதர்களின் பார்வைப்படாமல் முடிக்கப்பட்டு IVF முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

பொதுவாக மனிதர்களின் கைகளால் மேற்கொள்ளப்படக்கூடிய ICSI செயல்முறை 23 படிநிலைகளை கொண்டிருக்கும். ஆனால் தானியங்கி முறையில் இவை அனைத்தும் AI உதவியுடன் முடிக்கப்பட்ட வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சாதனையானது அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Conceivable life sciences என்ற நிறுவனத்தில் இருக்கக்கூடிய டாக்டர் ஜாப்ஸ் என்பவரது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்முறைக்காக 40 வயது மதிக்கத்தக்க பெண்ணினுடைய டோனர் முட்டைகளின் உதவியைக் கொண்டு கருத்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக 5 கருமுட்டைகளில் கருக்கூட்டப்பட்டதில் 4 முட்டைகள் வெற்றிகரமாக கரு கூட்டத்தில் இணைக்கப்பட்டது. அதிலிருந்து தற்பொழுது 1 கருமுட்டை மட்டும் நன்றாக வளர்ந்து நல்லபடியாக உலகின் முதல் AI குழந்தையாக ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறது.

இந்த முறை முழுவதும் AI மூலமாக தானாகவே விந்தணுவை தேர்ந்தெடுப்பது முதல் கரு வளர்ந்து பிறப்பது வரை அனைத்தும் தானியங்கி முறையில் நடைபெற்றது என்றும் இது உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய IVF சிகிச்சை முறையின் புரட்சியாகவும் பார்க்கப்படுகிறது. எதிர்காலங்களில் IVF சிகிச்சையானது தானியங்கி முறையிலும் துல்லியமாகவும் நடைபெற இந்த AI முறையானது பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் என்னுடைய சொத்து.. நான் மொகாலய வாரிசு!! உரிமை கொண்டாடும் யாகூப்!!

0

இந்தியா சுதந்திரத்திற்கு முன்பாக பல குறுநில மன்னர்கள் மற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னர்கள் என பல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இதில் வட இந்தியாவை நூறாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது முகாலய பேரரசு.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மன்னராட்சி ஆனது முழுவதுமாக ஒழிக்கப்பட்டு உயிரோடு இருக்கக்கூடிய மன்னர்களின் வாரிசுகளுக்கு சொத்துக்கள் வழங்கப்பட்டது மற்ற சொத்துக்கள் அரசுடுமையாக மாற்ற ப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த சொத்துக்களில் புராதான மதிப்புமிக்க சொத்துக்கள் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அப்படி கொண்டுவரப்பட்டதில் முக்கியமான ஒன்றுதான் தாஜ்மஹால். இந்த தாஜ்மஹால் ஆனது உலக அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மொகாலயம் அண்ணன் ஷாஜஹான் தன்னுடைய மனைவி நினைவாக கட்டிய வெள்ளை மார்பில் மாளிகையானது மிகவும் நுட்பமாகவும் அழகாகவும் பல்லாயிரக்கணக்கான வேலைபாடுகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தினம் தோறும் உலக அளவில் இருந்து ஆயிரம் கணக்கான சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை கண்டு ரசிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் ஹைதராபாத்தில் வசிக்கக்கூடிய யாகூப் ஹபீபுதீன் டுசி என்பவர் தாஜ்மஹால் தனக்கு சொந்தம் என்றும் தான் மொகாலய மன்னர்களின் வாரிசு என்றும் தெரிவித்திருக்கிறார். அதிலும் இவர் இந்தியாவை ஆண்ட கடைசி முகாலய மன்னரான பகதூர் ஷாபர் என்பவரின் ஆறாவது தலைமுறை என்றும் தன்னுடைய அடையாளம் குறித்த தகவல்களையும் தெரிவித்து இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, மொகாலய மன்னரின் வாரிசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய டி என் ஏ பரிசோதனை சான்றிதழையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் நீதிமன்றமும் இவருடைய டி.என்.ஏ சான்றிதழை சரி பார்த்து ஏற்றுக் கொண்டிருப்பது இவருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாத அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கக்கூடிய நிலமானது தனக்கு சொந்தமான நிலம் என்றும் ராமர் கோயில் கட்டுவதற்காக 1.80 கோடி மதிப்புள்ள செங்கலை தான் காணிக்கையாக கொடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். எனினும் ராமர் கோயில் தன்னுடைய நிலத்தில் இருப்பது குறித்து தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“எடப்பாடி நீக்கம்” கட்டாயம் நீங்கள் நினைத்தது நடக்கும்.. டிடிவிக்கு உறுதியளித்த அண்ணாமலை!! 

0

BJP AMMK: தமிழக அரசியல் களத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக ஒன்றினைந்துள்ளது இதன் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்பதை எடப்பாடி தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார். அதேபோல அண்ணாமலை நீக்கிய பிறகு இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது. இப்படி இருக்கையில் தனியார் ஊடகத்திற்கு அண்ணாமலை, டிடிவி தினகரன், மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் அண்ணாமலை, டிடிவி தினகரனிடம் உறுதி அளித்தது குறித்துதான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர். முதலில் டிடிவி தினகரனை நோக்கி அண்ணாமலை, உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என கூறினார். பின்பு மருத்துவமனை முன்பதிவு செய்தது குறித்து பேசினார். மேற்கொண்டு நீங்கள் சிறந்த மனிதர் இது அனைத்தும் எங்களுக்கு தெரியும், நீங்கள் அரசியல் ரீதியாக எதிர்பார்க்கும் அனைத்து மாற்றங்களும் கட்டாயம் நிகழும் என்று உறுதியளித்துள்ளார். இப்படி அண்ணாமலை உறுதியளிக்கின்றார் என்றால் கட்டாயம் பின்னணியில் ஏதோ ஒரு திட்டம் இருக்கும்.

அதிமுக கட்டாயம் கூட்டணியில் தினகரனை ஏற்றுக் கொள்ளாது. மாறாக பாஜக இவர்களுடன் கூட்டணி வைக்கப் போகிறதா?? என்பது குறித்த பேச்சானது தற்போது உள்ளது. அதேபோல மற்றொரு பக்கம், பாஜக அதிமுகவில் மீண்டும் கூட்டணி வைக்குமென்றால் கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிய பிறகுதான் என கூறியிருந்தார். காலப்போக்கில் அந்த மாற்றம் ஏதேனும் நிகழுமா என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் தற்காலிக சூழலில் டிடிவி தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைக்கப் போவது உறுதி எனக் கூறுகின்றனர்.

எடப்பாடியை தூக்கி எறிந்த மாஜி அமைச்சர்.. தவெக-வில் காத்திருக்கும் முக்கிய பதவி!!

0

ADMK TVK: தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய விஜய் தற்பொழுது கூட்டணியின்றி தவித்து வருகிறார். ஒரு பக்கம் திமுக கூட்டணி கட்சியை கலைக்க முயற்சித்தார் ஆனால் அதுவும் கை கொடுக்கவில்லை. மற்றொரு பக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விஜய் கொடுத்த டிமாண்டானது எடப்பாடிக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் ரூட்டை மாற்றி பாஜகவிடமே மீண்டும் சரணடைந்தார். அந்த வகையில் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

இவர்களின் கூட்டணிக்காகவே அண்ணாமலையும் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியேறியுள்ளார். இதற்கு முக்கிய காரணமாக பாஜகவுடன் கூட்டணி வைத்த தான் என தெரிவித்துள்ளார். தற்சமயம் இவரை தங்கள் பக்கம் இழுக்க மாற்றுக் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். அந்தவகையில் இவர் விஜய் யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லும் பட்சத்தில் முக்கிய பதவி வழங்குவதுடன் நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறுகின்றனர்.

பாஜக திமுக என இரு பக்கமும் சேர முடியாத ஜெயக்குமார் கட்டாயம் விஜய்யுடன் கைகோர்ப்பார் எனக் கூறுகின்றனர். ஏனென்றால் இவருக்கும் ஓபிஎஸ்சிக்கும் ஒரு துளி கூட ஒத்து வராது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட ஓபிஎஸ் குறித்த கேள்வி கேட்ட பொழுது, அவர் ஒரு கொசு, பல பிரச்சனைகள் இருக்கும் போது கொசுவை பற்றி பேசுவதற்கு நேரமில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“அதிமுக – வுடன் பாஜக கூட்டணி” எனக்கு செட் ஆகாது.. கட்சியை விட்டு வெளியேறுகிறேன் – ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு!!

0

ADMK BJP: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். புரட்சித்தலைவி இருந்த காலத்திலிருந்து கட்சிக்கு பெரிய ஊன்றுகோலாக இருந்து வந்தவர். பாஜக கூட்டணியிலிருந்ததால்தான் அதிமுக வெற்றி பெறவில்லை என்று கடந்த தேர்தலின் போது பகிரங்கமாக கூறியிருந்தார். மேற்கொண்டு கூட்டணியை விட்டு பிரிகையில் அதிக மகிழ்ச்சி அடைந்த வரும் இவர்தான்.

தொடர்ந்து பாஜக ரீதியாக எதிர் கருத்தை தெரிவித்தும் வந்தார். தற்போது பாஜக அதிமுக கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நான் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி வழியில் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் கட்சி கலக்கத்தில் உள்ளது. அதிமுக வுடன் கூட்டணி வைக்கவேண்டு மென்பதற்காகவே பாஜக அண்ணாமலையை கட்சியிலிருந்தே தூக்கியது.

தற்சமயம் அதிமுக முன்னாள் சீனியர் அமைச்சர் இவ்வாறு கூறி கட்சியை விலகியிருப்பது இவர்களுக்கிடையே மன கசப்பை ஏற்படுத்தலாம். மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள் அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறுகின்றனர். அப்படி பேசும் பட்சத்தில் அவர் மீண்டும் கட்சிக்குள் இணைந்தாலும் அவரின் அரசியல் வேகமானது சற்று குறைந்து தான் இருக்கும் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.