Home Blog Page 303

ஊரெங்கும் அஜித் கோஷம்.. ஆனால் அவரோ!! அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள்!!

0

இன்று அஜித் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்னி திரைப்படமானது இந்தியாவில் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.

இணையதளம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கக்கூடிய அஜித்தின் திரைப்படம் குறித்தும் திரைப்படத்தில் அஜித்தின் உடைய நடிப்பு குறித்தும் செய்திகள் வைரலான வண்ணம் உள்ளன. ஆனால் நடிகர் அஜித் அவர்களே மிகவும் சாதாரண நாளாகவே இன்றைய நாளை கழித்து வருகிறார்.

தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் அஜித் அவர்கள் ” அலுவலக ரீதியாக இது இன்னொரு நாள் ” எனக் குறிப்பிட்டு தன்னுடைய ரேசிங் காரை சரி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ஒருவர் சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடியுமா என்பது போல ரசிகர்களை ஆச்சரிய முடிவு செய்வதாக இந்த செயல் உள்ளது

ரசிகர்கள் நடிகர் அஜித்தின் படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர் அஜித் அவர்கள் தனக்கு மிகவும் பிடித்த ரேசிங் துறையில் தன்னுடைய ரேசிங் காரை சரி செய்வது குறித்த முக்கிய பணியில் இன்றைய நாளை கழித்து இருப்பது மற்றும் இன்றைய நாளை தன்னுடைய மிகப்பெரிய நாளாக நினைக்காமல் எப்பொழுதும் போல இதுவும் ஒரு நாள் என்பது போல தன்னுடைய இயல்பான பணிகளை அவர் மேற்கொண்டு இருப்பது ரசிகர்களை இன்னும் அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

பணம் பணம் பணம்.. மனிதர்களைப் பற்றி உங்களுக்கு கவலையே இல்லையா!! புகழின் உச்சியில் இருக்கக்கூடிய ஒருவரின் செயலால் கலங்கும் ரசிகர்கள்!!

0

காலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் கோசெல்லா இசைவிழா நடைபெற இருந்த நேரத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் பத்திரிகையாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நண்பர்களுடன் காபி ஷாப் வந்த பாடகர் ஜஸ்டின் பீபர் அங்கு வந்த புகைப்பட கலைஞர்களை பார்த்து மிகவும் கோபம் அடைந்து , இது நல்ல காலை ஆகவே இல்லை என சத்தமிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது இவர் ஏற்கனவே அதிக கோபக்காரர் என்பதால் இவருடைய குடும்பத்திலும் நிறைய சிக்கல்கள் இருப்பதாகவும் திருமண வாழ்க்கையிலும் பொது இடங்களிலும் கோபத்தால் இவர் நிறைய இழந்துள்ளார் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தன்னுடைய கோவத்தை கட்டுப்படுத்த முடியாத பாடகர் காபி ஷாப் வந்த இடத்தில் புகைப்பட கலைஞர்களையும் பத்திரிகையாளர்களையும் கண்டு, உங்களுக்கு பணம் பணம் பணம் மட்டும்தான் தெரியுமா ? மனிதர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்பது போல சத்தமிட்டு கூறிவிட்டு காபி ஷாப் உள்ளே தன் நண்பர்களுடன் சென்று இருப்பது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

இதற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் பொதுவெளியில் ஏன் இவ்வாறு கோவப்பட வேண்டும் என்றும் கோபத்தை குறைத்துக் கொள்ளவில்லை என்றால் அதனுடைய பின்பு விளைவுகள் பலவாறு இருக்கும் என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாடகர் என்னுடைய இந்த செயலானது ரசிகர்களை கலக்கமடைய செய்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்த நேரத்தில் அவர் அணிந்திருந்த ஷூ டீ ஷர்ட் போன்றவை தற்போது மிக வேகமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னைப் பெற்ற தாய்க்கும்.. பாட்டு கற்றுக் கொடுத்த தாய்க்கும் உடல் நலம் சரியில்லை!! மனமுடைந்து பதிவிட்ட கவிஞர் வைரமுத்து!!

0

கவிஞர் வைரமுத்து அவர்கள் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தன்னை பெற்றெடுத்த அன்னைக்கு உடல் நிலை சரியில்லை என்றும் தனக்கு பாடலை கற்றுக் கொடுத்த தாயாருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லை என மனமுடைந்து பதிவிட்டு இருப்பது வைரமுத்துவின் ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது.

சிறந்த பின்னணி பாடசியாக விளங்கிய பி சுசீலா அவர்களுக்கு கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்ட அடிக்கடி மருத்துவமனை சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த தாயார் பி சுசீலா என்பதால் தன்னுடைய இரு தாயாரும் உடல் நலமில்லாமல் இருப்பதாக மனம் உருகி பதிவிட்டு இருக்கிறார் வைரமுத்து அவர்கள்.

கவிஞர் வைரமுத்துவின் X தள பதிவு :-

இருபெரும் தாயர்க்கு

உடல் நலமில்லை

ஒருவர்

எனக்குப் பாலூட்டிய தாய்

அங்கம்மாள் ராமசாமி

இன்னொருவர்

எனக்குப் பாட்டூட்டிய தாய்

பி.சுசீலா

நாட்டார் தமிழைக்

கற்பித்தவர் பெற்றதாய்;

பாட்டார் தமிழைக்

கற்பித்தவர் உற்றதாய்

தாங்குதுணை இல்லாமல்

தன்னியக்கம் இல்லை

இருவர்க்கும்

சற்றொப்பச் சமவயதுகொண்ட

தாய்மார்கள்

இருவர்க்குமே வாழ்வு

சர்க்கரையால் கசக்கிறது

நான் பாசத்தோடு படைக்கும்

சத்துமாவுக் கஞ்சிதான்

இருவர்க்கும் ஆகாரம்

இருவரையும்

மாறிமாறி நலம்கேட்கிறேன்

அந்த நான்கு கரங்களையும்

பற்றும்பொழுது

நடுங்குகின்றன

என்னிரு கரங்களும்

இருபெரும் தாயரும்

நலமுற வேண்டும்;

நெடுங்காலம்

நீடு வாழவேண்டும்

“பறவை பறந்துசெல்ல

விடுவேனா – அந்தப்

பரம்பொருள் வந்தாலும் தருவேனா?

உன்னை அழைத்துச்செல்ல

எண்ணும் தலைவனிடம்

என்னையே நான்தர மறுப்பேனா?”

ஒருவர் பாடிய பாடல்

இருவர்க்கும் காணிக்கை

அன்னையர் இருவரும்

ஆண்டுபல நீண்டுவாழ

வேண்டுமென்று

வேண்டுகின்றேன்

யாண்டுமுள்ள நண்பர்களை

என தன்னுடைய இரண்டு தாயாரும் நல்லபடியாக குணமாகி வரவேண்டும் என கடவுளை பிரார்த்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

SBI ஏடிஎம் பயனாளிகளுக்கு புதிய அளவுகோல்களை விதித்த வங்கி!! இனிமே இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!

0

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன் எத்தனை முறை ஏடிஎம் பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வளவு ரூபாய் ஏடிஎம்மில் இருந்து பெறுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது என்பது போன்று முக்கிய விஷயங்களில் மாற்றங்களை மேற்கொண்டு இருக்கிறது.

SBI மேற்கொண்டுள்ள புதிய ஏடிஎம் விதிமுறைகள் :-

✓ முக்கிய பண பரிவர்த்தனை வரம்புகள் – இவற்றில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பொறுத்து உங்களுடைய பரிவர்த்தனை வரம்பானது நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கிளாசிக் டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

✓ நாளொன்றுக்கு 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் பொழுது அதற்கான otp வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கக்கூடிய மொபைல் எண்ணிற்கு வந்து சேரும்.

✓ மெட்ரோ நகரங்களில் ஏடிஎம் கார்டு பயன்படுத்தப்படும் பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

✓ ஏடிஎம் சேவை கட்டணமானது ரூ.21+ஜிஎஸ்டி என முடிவு செய்யப்பட்டுள்ளது.

✓ மினி ஸ்டேட்மெண்ட் பெறுவதற்கு sbi ஏடிஎம் மிஷின்கள் கட்டணம் இல்லை என்றாலும் மற்ற வங்கிகளின் ஏடிஎம் மிஷின்களில் மினி ஸ்டேட்மென்ட் பெறும் பொழுது அதற்கான கட்டணமாக ரூ.10+ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்துல இப்படித்தான் பலரை பிரிச்சு விடுறாங்க போல!! ஒபாமா தம்பதியினர் இடையே நடந்தது என்ன!!

0

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்களுக்கும் அவரது மனைவிக்கும் இடையே விவாகரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பரவிய தகவல்களுக்கு ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா பதிலளித்திருக்கிறார்.

பாட்காஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா கூறியிருப்பதாவது :-

என்னுடைய நாட்களை நானே முடிவு செய்யக்கூடிய சூழல் இப்பொழுதுதான் உருவாக்கி இருக்கிறது என்றும் ஏற்கனவே என்னால் என்னுடைய நாட்களை உருவாக்கிக் கொள்ள க்கூடிய சூழல் இருந்தும் நான் உருவாக்கிக் கொள்ளாததற்கு காரணம் என்னுடைய குழந்தைகள் அவர்களுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என தெரிவித்திருக்கிறார்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பிறர் விரும்புவது தான் நடைபெற்று வருகிறது என்றும் ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வதற்காகத்தான் பல பெண்கள் என்று தங்களுடைய வாழ்வில் போராட்டங்களை சந்தித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். நான் எனக்கான விருப்பத்தை தேர்வு செய்துள்ளேன் என்பதை புரிந்து கொள்ளாத அளவிற்கு நானும் என் கணவரும் விவாகரத்து பெற்ற பிரிய முடிவு எடுத்துள்ளோம் என வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இனி தன்னுடைய வாழ்வில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை தானாகவே முடிவு செய்ய உள்ளதாகவும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்வின் சந்தோஷங்களை தன்னுடைய விருப்பத்தின் பெயரில்தான் மேற்கொள்ள போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதான் ஒவ்வொரு பெண்களும் எதிர்பார்க்கக் கூடியது என்றும் அதை அவர்கள் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜக மாநில தலைவர் தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை!!

0

BJP: தமிழக பாஜக தலைமையை மாற்றுவது உறுதி என அண்ணாமலையே கூறிய நிலையில் அந்த ரேசில் என்னுடைய பெயர் கிடையாது என்றும் நேரடியாகவே சொல்லிவிட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்பதில் பல குழப்பங்கள் நிலவியது. குறிப்பாக நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதீ சீனிவாசன் தற்பொழுது ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் டெல்லி மேலிடம் அண்ணாமலையை போன்று இளம் வயதில் கட்சியை எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்க நபரை தேடுகிறதாம்.

மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிக்கு ஆதரவாகவும் மக்கள் அடையாளம் காணும் நபராக இருக்க வேண்டுமென்றும் யோசிக்கிறார்களாம். இளம் தலைவர் வேண்டுமென்றால் கட்டாயம் ஆனந்தன் அய்யாசாமியை தான் தேர்வு செய்ய வேண்டும். இதுவே மக்கள் அறிந்த முகம் வேண்டுமென்றால் நயினார் நாகேந்திரன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் இவர்களில் யாரையேனும் தேர்வு செய்ய வேண்டும். இது குறித்த அப்டேட்கள் தினசரி வெளிவரும் நிலையில் இன்று பாஜக தலைமை இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் இம்மாதம் 12ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேற்கொண்டு இது குறித்த விருப்ப மனு  தாக்கலானது நாளை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் வேட்பு மனுவை கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். தற்போது வரை அனைவரும் ஒரு யூகத்தில் இவர் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறிய நிலையில். நாளை வேட்பு மனு அளிக்கும் போதே யாருக்கு யார் உடன் போட்டி?? யார் தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அச்சச்சோ பாமக குறித்த கேள்வியா வாயே திறக்க மாட்டேன்.. அண்ணாமலைக்கு டெல்லி கொடுத்த டோஸ்!!

0

BJP: அரசியல் வட்டாரத்தில் இன்றைய ஹாட் டாப்பிக்கே பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதுதான். ராமதாஸ் தனது மகள் வழி பேரனை பதவி அமர்த்த வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஆனால் அன்புமணிக்கு இதில் துளி கூட விருப்பமில்லை. இதனால் தான் இருவருக்கும் பொது மேடையிலேயே வார்த்தை போரானது முற்றியது. அதேபோல நான் தான் நிறுவனர் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியே போங்கள் என்று காட்டமாக ராமதாஸ் கூறிவிட்டார்.

இவர் அப்படி கூறியது அன்புமணிக்கு தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உடனடியாக இவரும் பதிலடி கொடுக்கும் விதத்தில், பனையூரில் புதிய அலுவலகம் திறந்து உள்ளேன் அங்கே வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறினார். இவர்களின் இந்த போரானது ஓரிரு தினங்களில் முடிவுக்கு வந்தது. சுமூகமாக கட்சி செல்கிறது. உட்கட்சி மோதல் என்பது எதுவுமில்லை என்ற நிலையில் தான் ராமதாஸ் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்த கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அண்ணாமலை யாரும் எதிர்பார்க்காத பதிலளித்துள்ளார். இது அவர்களின் உட்கட்சி பிரச்சனை, இதனை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து நல்ல முடிவை எடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்துவார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். எப்பொழுதும் முன்னுக்கு பின்னான முரண்பாடான கருத்தை தெரிவிக்கும் அண்ணாமலை இம்முறை யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறியுள்ளார் .

இதே போல தான் அதிமுக விவகாரத்தில் வாய் திறந்ததால் பதவி கூட தக்க வைக்க முடியவில்லை. அதன் உள் அடியை பார்த்த அண்ணாமலை, தனது கூட்டணி கட்சி குறித்து கேள்வி கேட்ட பொழுது எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அவர்களுக்கு சாதகமாகவே பதிலளித்துள்ளார்.

முதல் நாளே HD பிரிண்ட்.. இணையத்தில் வெளியான குட் பேட் அக்லி!.. படக்குழுவினர் அதிர்ச்சி!…

0

விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை இப்படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு, அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, அவர்கள் அஜித்திடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே படத்தில் இருக்கிறது. படத்தில் அழுத்தமான கதையோ, செண்டிமெண்டோ, லாஜிக்கோ இல்லை. ஆனால், ரசிகர்கள் ரசிக்கும்படி படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ரசிகர்களை அஜித் என்கேஜாக வைத்திருக்கிறார்.

எனவே, அவருக்காகவே படம் பார்க்கலாம். படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் கூட சிறப்பாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். ஒன் மேன் ஆர்மியாக அஜித் படத்தை தாங்கி பிடித்திருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்நிலையில், முதல் காட்சி முடிந்த சிறுதி நேரத்தில் முழு திரைப்படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியடைந்திருக்கிறது.

படம் வெளியான முதல் நாளிலேயே HD தரத்தில் இப்படம் இணையத்தில் வெளியானது அஜித் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அஜித் சார் இப்படி பண்ணுவார்னு எதிர்பார்க்கவே இல்ல!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்!…

0

அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில்தான் குட் பேட் அக்லி ஒன்று வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருந்தது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. குட் பேட் அக்லி படம் 10ம் தேதியான இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

படத்திற்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வருகிறது. படம் முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் லாஜிக்கும் இல்லை. எமொஷனல் கனெக்ட்டும் இல்லை. படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக மட்டுமே. பல மாஸான காட்சிகள் இருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் பெரிதாக ஒன்றுமில்லை. அஜித் ஃபேன்ஸ் மட்டுமே ரசிப்பார்கள்’ என சிலர் சொன்னார்கள். அதேநேரம், கதையை எதிர்பார்க்காமல் ஜாலியாக பார்க்கலாம் என்கிற மனநிலை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படம் பிடிக்கும். இல்லையெனில் படம் ஏமாற்றும் எனவும் ஒருவர் சொன்னார். அஜித் ரசிகர்களுக்கு Good.. நடுநிலையாளர்களுக்கு Bad.. ஹேட்டர்ஸ்க்கு Ugly என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

mohan g

இந்நிலையில், படத்தை பார்த்த இயக்குனர் மோகன் ஜி ‘ஆதிக் இப்படி ஒரு படம் பண்ணுவார்னு எதிர்பாக்கல. பயங்கரமான எண்டர்டெய்னர். ஒரு திருப்தியான படம் பார்த்த ஃபீல் வருது. தல இப்படியெல்லாம் பண்ணுவார்னு எதிர்பார்க்கல.. மங்காத்தா படத்துக்கு அப்புறம் ஃபேன்ஸ் பயங்கரமா என்ஜாய் பண்ணிட்டு வரத இப்பதான் பாக்குறேன்.. லாஜிக்கெல்லாம் பாக்காம போய் படம் பாருங்க.. அஜித் சாரோட மொத்த இமேஜையும் யூஸ் பண்ணி படம் பண்னியிருக்காங்க.. குட் பேட் அக்லி ஒரு பெரிய ரோலர் கோஸ்ட் ரைடு.. எதையும் யோசிக்காமல் படம் பார்த்து என்ஜாய் பண்ணிட்டு வாங்க’ என பாராட்டி தள்ளியிருக்கிறார்.

தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவராக களமிறங்கும் அண்ணாமலை தம்பி.. முக்கிய முடிவெடுத்த டெல்லி!!

0

BJP: பல்வேறு மாநிலங்களில் பாஜக மாநில தலைவர்களை மாற்றும் நேரம் வந்துவிட்டது அதன்படி தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த பாஜக முடிவெடுத்து விட்டது. இதற்கு பின்னணியில் முக்கிய காரணமாக அதிமுகவை தான் கை காட்டுகின்றனர். அதிமுக பாஜக நட்புறவு உடன் இருந்த நிலையில் அதற்கு புள்ளி வைத்து முடித்து வைத்தது அண்ணாமலை தான். மேற்கொண்டு இருவரும் தனி பாதையில் சென்ற போது வெற்றிவாகை சூட முடியவில்லை.

குறிப்பாக திமுகவை எதிர்க்க இவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளது. ஆனால் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி, இதனை சாக்கு காட்டி தனக்கு தேவையான ஒன்றை டெல்லி மேலிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதுதான் அண்ணாமலையை கட்சியிலிருந்து விலக்கி வைப்பது, குறிப்பாக தமிழ்நாடு பக்கம் அண்ணாமலை வாடை கூட வரக்கூடாது என கேட்டுள்ளாராம். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என கூறிய நிலையில் தற்போது இளம் தலைவரான ஆனந்த அய்யாசாமி பெயரும் அடிபட்டு வருகிறது.

இவர் தென் தமிழகம் முழுவதும் மிகுந்த பிரபலமானவர். எப்படி அண்ணாமலை வைத்து கொங்கு பகுதியை வளைத்து போட்டார்களோ அதேபோல தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், நெல்லை போன்ற தென் மாவட்டத்தை வளைத்து போட்டு விடலாம் என்று எண்ணுகின்றனராம். மேற்கொண்டு மற்ற இளந்தலைவரை நியமிப்பதால் பாஜக நிர்வாகிகள் சற்று திருப்தி அடையும் வாய்ப்புள்ளதாகவும் மேற்கொண்டு உற்சாக சுறுசுறுப்புடன் கட்சி இயங்கும்என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இவரை அமர்த்தும் பட்சத்தில் அண்ணாமலைக்கு நிகராகவே அதவாது அவரின் தம்பி போலவேஇவர் செயல்படுவார் என்று கூறுகின்றனர்.