Home Blog Page 306

நாங்க பின் வாங்க மாட்டோம்!. டிரம்ப் விதித்த வரிக்கு பதிலடி கொடுத்த சீனா….

0

இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது. ஒருபக்கம், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.

அடுத்து சீனா பக்கம் திரும்பிய டிரம்ப் ‘அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதிக்கு 34 சதவீத வரியை சீனா விதிகிறது. அதை 24 மணி நேரத்தில் திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரியாக 50 சதவீத கூடுதல் வரி விதிப்போம்’ என எச்சரித்தார். ஆனால், சீனா எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, சீனா மீதான 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு அமுலுக்கு வருவதாக இன்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதனையடுத்து சீன பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் 104 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா – சீனா இடையே வர்த்தகப்போர் துவங்கியிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது சீனா. நீங்கள் 50 சதவீத கூடுதல் வரி விதித்தால் நாங்களும் அதையே செய்வோம் என காட்டி இருக்கிறார் சீன அதிபர். இதற்கு டிரம்ப் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மீண்டும் ஏன் அரசியல்?.. ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா!.. இப்படி சொல்லிட்டாரே!…

0

இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பாட்ஷா பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது என பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் ரஜினி பகைத்துக்கொண்டார்.

எனவே, ரஜினி அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், திமுகவையும், மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி சேர வைத்து அந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். ரஜினி ஆதரவு கொடுத்ததால் மக்கள் அந்த கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய அதிமுக தோற்றுப்போனது.

அதன்பின் தொடர்ந்து நடித்த பல படங்களிலும் ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கி வசனம் பேசி வந்தார் ரஜினி. ஜெயலலிதாவை மனதில் வைத்தே படையப்பா படத்தில் நீலம்பரி வேடத்தை உருவாக்கினார்கள். இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரே ஊடகம் ஒன்றில் ஒத்துகொண்டார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா என எல்லா படங்களிலும் அரசியல் வசனம் பேசினார் ரஜினி.

rajinikanth

ரஜினி எப்படியும் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் 25 வருடங்களாக காத்திருந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு பின்னர் டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். எனது உடல்நிலைக்கு அரசியல் செட் ஆகது’ என சொல்லிவிட்டார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளான இன்று ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘பாட்ஷா பட விழாவில் அந்த படத்தின் தாயரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருக்கும்போதே நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினான். இதனால், கோபமடைந்த ஜெயலதா ஆர்.எம்.வியை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட்டார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும் இது முக்கியமான காரணம்’ என சொல்லியிருக்கிறார்.

திடீரென ஏன் இந்த விஷயத்தை ரஜினி பேசினார் என தெரியவில்லை. அரசியலில் இல்லை என்றாலும் தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேச வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாரா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் மணி ‘என்னிடம் அரசியல் கேள்வி கேட்காதீர்கள் என சொல்வார்.

mani

ஆனால் தன் இருப்பை காட்டிக்கொள்ள இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இப்படி எதையாவது செய்வார். இவருக்கு மக்களிடம் எந்த செல்வாக்கும் இப்போது இல்லை. அரசியலுக்கு வருவேன் என ஒரு தலைமுறை ரசிகர்களை ஏமாற்றியவர் இவர். பழைய அரசியல் கதையை இன்று இவர் பேசவேண்டிய அவசியமென்ன? ரஜினி ஒரு காலி பெருங்காய டப்பா. இப்படி சர்ச்சையாக பேசி கவனத்தை ஈர்க்க பார்க்கிறார். இதை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்’ என சொல்லியிருக்கிறார்.

Picture Courtesy : Find time Media…

குடும்ப வறுமை.. சினிமா லட்சியம்!! சின்னத் திரையை விட்டு விலக இதுதான் காரணம்.. காவ்யா அறிவுமணி!!

0

பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற விஜய் டிவி சீரியல் நடித்த காவ்யா அறிவுமணி தான் ஏன் சின்னத்திரையில் இருந்து வெளியேறினேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

காவியா அறிவுமணி வெற்றி விளக்குவதற்கான காரணம் குறித்து தெரிவித்திருப்பதாவது :-

சாதாரண குடும்பத்தில் பிறந்த சினிமா ஆசை கொண்ட பெண்ணாகத்தான் தன்னுடைய வாழ்வை துவங்கியதாகவும் தன்னுடைய சொந்த ஊரான ஆம்பூரில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து பல இடங்களில் அலைந்த பொழுது தனக்கு youtube சேனலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தது என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின் 2 வருடங்கள் சென்ற பிறகுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பதற்காக தன்னை அழைத்ததாகவும் அதில் முக்கியமான கதாபாத்திரம் தனது கொடுக்கப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற மேலும் சில சீரியல்கள் தனக்கு வாய்ப்பு தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தன்னுடைய கனவு வெள்ளித்திரைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் என்பதால் தொடர்ந்து பல ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும் தற்பொழுது தனக்கு பல பட வாய்ப்புகள் வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கூட இன்னும் பல திரைப்படங்களுக்கான ஆடிஷண்களில் கலந்து கொண்டுதான் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மிறள், ரிபப்பரி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய வீட்டில் ஏழ்மை காரணமாக பண தேவை அதிக அளவில் இருந்ததாகவும் தன் தங்கையின் படிப்பிற்கு கூட பணம் இல்லாத நேரத்தில் சீரியல்களில் நடிப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும், குடும்ப வறுமை ஒரு புறம் இருக்க குடும்ப வறுமைக்காக சின்னத்திரையிலேயே இருந்து விடுவோமோ என்ற பயம் தன்னை வாட்டியதாகவும் எது எப்படி இருந்தாலும் தன்னுடைய லட்சியமே முக்கியம் என நினைத்து வெள்ளித்திரைக்கு வந்து விட்டதாகவும் காவியா அறிவு மணி தெரிவித்திருக்கிறார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஓப்புதல்!.. விஜய் வெளிய வாங்க!..

0

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சினிமா படப்பிடிப்பில் இடைவெளி கிடைக்கும்போது மக்களிடம் அரசியல் பேசி வருகிறார். கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுதான் அவரின் கடைசிப்படம். இந்த படம் முடிந்தபின் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள்.

இடையில் விக்கிரவாண்டி மாநாடு, தவெக இரண்டாமாண்டு விழா, தவெக பொதுக்குழு கூட்டம் என மூன்றிலும் விஜய் பங்கேற்று திமுகவை திட்டி பேசினார். திமுக ஆட்சியை மன்னராட்சி என தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்.

விஜய் வொர்க் ஃபிரம் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து கமெண்ட் அடித்து வந்தார். விஜய் களத்தில் இறங்கி மக்களை சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக எல்லோராலும் வைக்கப்படுகிறது. சமீபத்தில் பாராளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு மசோதாவுக்கு எதிராக இன்று தமிழகமெங்கும் தவெக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் விஜய்க்கு இன்று ஷூட்டிங் எதுவுமில்லை. அவர் வீட்டில்தான் இருந்தார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

vijay

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்கள் குடியிருக்கும் பகுதியில் சென்று அதற்கு ஆதரவு தெரிவித்தும் பேசினார். இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு முதல்கட்ட ஒப்புதலை வழங்கியது ஒன்றிய அரசு. கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது. 5476 ஏக்கர் பரப்பளவில் ரூ.27,400 கோடி செலவில் விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதைத்தொடந்து பிரபல சினிமா விமர்சகர் மற்றும் அரசியல் விமர்சகர் புளூசட்ட மாறன் இந்த தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ‘தளபதி விஜய்.. உங்கள் வாளுக்கு வேலை வந்துவிட்டது. வெளிய வாங்க’ என கலாய்த்திருக்கிறார்.

ஒரே பாடலில் உலகத்தை சுற்றிய கிராமத்து பெண்!!

0

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கும்கி. திரைப்படமானது வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் உள்ள பாடல்களும் இன்றுவரையில் மக்களிடையே ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ” சொய் சொய்” பாடல் பாடிய கிராமத்து பெண் குறித்த விவரங்களும் அவருக்கு இந்த பாடல் பாட கிடைத்த வாய்ப்பு குறித்த விவரங்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.

தன் கணவரின் உடைய கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த கிராமத்து பெண் தான் மகிழினி மணிமாறன். கச்சேரிகளில் பாடும் பொழுது பெண்களுக்கான பாடல்களை அதிலும் கருத்துள்ள பாடல்களை பாடுவதில் சிறந்தவராக விளங்கி வந்துள்ளார். இவரது திறமையை கண்ட தபேலா வாசிக்கக் கூடிய ஒருவர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்பு போராடி 5 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். அந்த வாய்ப்பு குறித்து அவர் தெரிவிக்கும் பொழுது நீண்ட நாட்களாக வாய்ப்பு தேடி அலைந்ததாகவும் ஒரு நாள் டி இமான் சாரிடமிருந்து தனக்கு பாடுவதற்கு அழைப்பு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கச்சேரிகளில் பாடுவதற்கும் சினிமாவில் பாடல்களை பாடுவதற்கும் மிகப்பெரிய அளவில் வித்தியாசங்கள் இருந்ததாகவும் இந்த ஒரு பாடலுக்காகவே தான் இலங்கை, அமெரிக்கா என பல நாடுகளுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இப்பொழுதெல்லாம் கச்சேரிகளுக்கு செல்லும் பொழுது அங்கு இந்த பாடல் மட்டுமே தன்னை பாட வைப்பதாகவும் அதிலும் இந்த ஒரு பாடலை 3 முறையாவது பாட வைத்து விடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நான் பாடிய பாடல் இப்பொழுது டிரண்டாகி வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ஒரு தாய் என்னிடம் என்னுடைய பாடல் குறித்து சொல்லும் பொழுது முன்பெல்லாம் குழந்தைக்கு நிலாவை காட்டி தான் சோறு ஊட்டுவேன் என்றும் இப்பொழுதெல்லாம் உங்களுடைய பாடலை போட்டு தான் என் குழந்தைக்கு சோறு ஊட்டுகிறேன் என சொல்லும் பொழுது மகிழ்ச்சியின் அளவு குறிப்பிட முடியாத அளவாக இருந்தது என தெரிவிக்கிறார்.

களைகட்டிய டிக்கெட் புக்கிங்!. முதல் நாளே 100 கோடி வசூலை தாண்டுமா குட் பேட் அக்லி?…

0

Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது குட் பேட் அக்லி. ஏனெனில், விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோவில் அஜித் ஏற்கனவே நடித்து வெளியான பில்லா, மங்காத்தா, தீனா போன்ற படங்களின் ரெப்ரன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. ‘அவன் பயத்துக்கே பயம் காட்டுறவன்’ என அஜித்துக்கு பில்டப் ஏத்துகிறார்கள். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கடந்த 4ம் தேதி இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் துவங்கியது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கும் மேல் புக்கிங் செய்திருக்கிறார்கள். எனவே, முதல் நாளிலே இப்படம் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஆனலைன் புக்கிங்கை பொறுத்தவரைஒ 80 சதவீத டிக்கெட்டுக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஏற்கனவே புக் செய்யப்பட்டு விட்டதால் ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறரக்ள். என்கிறார்கள். மீதமிருக்கும் டிக்கெட்டுகளையும் பிய்த்து பிய்த்து கார்ப்பரேட் கம்பெனிகளாலே வாங்கி கொண்டதால் முதல் 4 நாட்களுக்கு ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்காது எனவும் சிலர் சொன்னது குறிப்பிடத்தக்கது.

தன் ஊழியர்களுக்கு ஈவு இரக்கம் காட்டாத ரயில்வே!! உணவு.. கழிவறை இடைவெளி கூட கிடையாது!!

0

லோகோ பைலட் என அழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு தங்கள் பணிநேரத்தின் பொழுது உணவு அருந்தவோ அல்லது கழிவறை இடைவெளியோ வழங்குவதற்கான சட்டம் ஏற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது.

இந்தியன் ரயில்வே துறைக்கு ரயில்வே ஓட்டுநர்கள் வைத்த நீண்ட கால கோரிக்கையாக உணவு இடைவெளி மற்றும் சிறுநீர் இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்து வந்த நிலையில், இதற்காக சட்டம் இயற்றும் சாத்தியமில்லை என்றும் பணிநேரத்தின் பொழுது இது போன்ற இடைவெளிகள் வழங்கப்பட முடியாது என்றும் ரயில்வே துறை தெரிவித்திருக்கிறது. விபத்துக்கள் நிகழாமல் இருக்க இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது என பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வாரியத்தின் ஐந்து நிர்வாக இயக்குநர்கள், ரயில்வேயின் ஆராய்ச்சிப் பிரிவான ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பின் (RDSO) ஐந்து நிர்வாகக் குழுவினர் சேர்ந்து ரயில்வே துறையின் மேம்பாடு குறித்தும் ரயில்வே பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மண்டல ரயில்வே களின் மேலாளருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பரிந்துரைகளின் பொழுது ரயில்வே ஓட்டுநர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருக்கக்கூடிய இடைவெளி காலமானது ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறு இல்லை என பரிந்துரையின் பொழுதே தெரிவிக்கப்பட்டிருப்பது லோகோ பைலட்டுகளை வருத்தம் அடைய செய்துள்ளது.

ரஜினி கமல்.. இவர்களால் தான் என் குரல் ஒட்டு மொத்தமாக காலியாகும்- மணிகண்டன்!!

0

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகர் என்று கூறும் விக்ரம் அளவிற்கு வளர்ந்து வருபவர் தான் மணிகண்டன். இவரின் ஆரம்ப கட்ட படமான பாய்ஸ், காதல் எப்எம் போன்றவை கை கொடுக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்து நடித்த சிறிய கதாபாத்திரமும் பெரிய பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

அந்த வரிசையில் ஜெய் பீம் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று கூறலாம். படத்தின் கதையே இவரை சுற்றியதாக தான் காட்டப்பட்டிருக்கும். இதற்கு அப்படியே எதிராக லவ் ஸ்டோரி படமான குட் நைட் ஆனது ஃபேமிலி என்டர்டைன் மூவியாக அமைந்தது. இதுவும் அவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து லவ்வர் தற்போது ரிலீசான குடும்பஸ்தன் உள்ளிட்டவை வெற்றி படிக்கட்டுகளாக அடுத்தடுத்த அமைந்துள்ளது.

குறிப்பாக குடும்பஸ்தன் படம் நடுத்தர வீட்டில் இளம் ஆண்கள் படும் சூழலை அப்படியே வெளி கொணர்ந்து நடித்திருப்பார். இது பெருமான்மையான இளைஞர்களுடன் வாழ்க்கையை ஒத்துப்போக வைத்துள்ளது. அதனால் இப்படம் குடும்பங்கள் எடுத்தும் கொண்டாடும் அளவிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளது என்றே கூறலாம்.

இவர் சமீபத்தில் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதிலும் நான் டாப் ஹீரோக்களின் பல குரல்களை மிமிக்கிரி செய்வேன் இதனால் எனது சொந்த குரல் மிகவும் பாதிக்கும். ஒன்றல்ல இரண்டு நாட்கள் வேறொரு குரலில் பேசுவது போல் தான் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் மிமிக்ரி செய்வது கடினம் என தெரிவித்திருப்பார்.

அமைச்சருக்கு ரூ.10,000 என்றால் முதலமைச்சருக்கு ரூ.20,000 வாங்கு வாங்க போல!! புலம்பித் தள்ளும் மருத்துவர்!!/.’O-

0

அரசு விழாவிற்காக PHC மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் பணம் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டதாகவும் குலதெய்வ கோவில்களுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தங்களுடைய நிலை மோசமாகிவிட்டதாகவும் மருத்துவர் ஒருவர் புலம்பும் ஆடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

தென்காசியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் பேசி இருக்கக்கூடிய ஆடியோவில் தெரிவித்து இருப்பதாவது :-

தென்காசியில் சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிக்காக அங்கு இருக்கக்கூடிய மருத்துவர்கள் இடம் பணம் கேட்கப்பட்டுள்ளது. அதிலும் ஒருவரிடம் 10,000 ரூபாய் வீதம் வசூலிக்க வேண்டுமென கூறியுள்ளனர்.

இதுபோன்ற அரசு விழாக்களுக்கு எல்லாம் மருத்துவர்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றால் எங்கே செல்வது என்றும் மன உளைச்சலோடு தான் வேலை பார்க்கக்கூடிய நிலை இருக்கிறது என்றும் எதற்காக BMO – Block Medical Officer ஆக படித்து வந்துள்ளோம் என்றும் புலம்பி கொட்டியுள்ளார். அமைச்சர் நிகழ்ச்சிக்காக வருகிறார் என்றால் அரசினுடைய பணத்தில் மேடை அமைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு லோ அமைச்சர் நிகழ்ச்சிக்காக வருகிறார் என்றால் அரசினுடைய பணத்தில் மேடை அமைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு மாறாக அரசு நிகழ்ச்சிக்கு நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்பது போல கேள்விகளையும் அந்த மருத்துவர் எழுப்பியுள்ளார்.

முன்பெல்லாம் இது போன்ற அரசு நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் 5000 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 10,000 ரூபாய் வசூல் செய்ய துவங்கியிருப்பதாகவும் எடுத்துக் கொடுப்பதற்கு எங்கே பணம் இருக்கிறது என்றும் கேட்டிருக்கிறார். தங்களை பணம் கொடுக்க வேண்டும் என சொல்வதைத் தாண்டி பிறரிடமும் சென்று வசூலித்து வர சொல்வது மிகவும் மோசமான ஒன்றாக இருப்பதாகவும் அப்படியே ஒருவரிடம் சென்று வசூலிக்க பார்த்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித காரணங்களை கூறுவதாகவும் புலம்பி இருக்கிறார்.

இவை ஒருபுறம் இருக்க வருடம் முழுவதும் சேவை மற்றும் பணி செய்து வரக்கூடிய தங்களுக்கு குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்காமல் அந்நாளில் கூட அமைச்சர் வருகிறார் என வேலைகளை வாங்குவதாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரும் இன்று ஒரு நாள் ஆவது குலதெய்வ கோவிலுக்கு வரலாம் அல்லவா என்பது போல அழைத்துக் கொண்டே இருப்பதாகவும் மருத்துவராக இருப்பதில் நிம்மதியே இல்லை என்றும் அந்த ஆடியோவில் பேசிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

டீல் பேசியாச்சு!! அதிமுக தலைவர் செங்கோட்டையன்.. அமித்ஷா கொடுத்த உறுதி!! பவர் இல்லா இபிஎஸ்

0

ADMK BJP: அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து வந்தவுடன், செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்துள்ளார். இது அதிமுக தலைமைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது, இவர் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்கப் போகிறார் மேற்கொண்டு அதிமுக கட்சி ரீதியான வழக்கும் நிலுவையில் உள்ளது.

கடந்த முறையை இந்த வழக்கானது ஓபிஎஸ்-க்கு சாதகமான நிலையில் தற்பொழுது நீதிமன்ற உத்தரவு அதன்படியே வரும் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மற்றொன்று செங்கோட்டையன் கட்சியின் மூத்த நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில் சரியான மரியாதை கொடுப்பதில்லை. குறிப்பாக அவர் தொகுதியிலேயே அவருக்கு எதிரான நிர்வாகிகளை கிளப்பி விட்டு எடப்பாடி வேடிக்கை பார்த்து வருகிறார். இதனின் உச்சகட்ட கோபத்தில் தான் செங்கோட்டையன் ஓபிஎஸ் பக்கம் சென்றால் கட்சியை வளைத்து விடலாம் என்று திட்டம் போட்டுள்ளார்.

இவையனைத்தையும் சம்பந்தப்பட்டு பேசுவதற்காக தான் செங்கோட்டையன் டெல்லி சென்றுள்ளார். ஆனால் டெல்லியில் இவருக்கு வேறொரு ட்விஸ்ட் காத்திருந்துள்ளது. உங்களுக்கு எடப்பாடிக்கு நிகரான தலைவர் பதவி ஒன்று அமைத்து பொறுப்பேற்று விடுகிறோம். இருவரும் இணைந்து வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுங்கள். வெற்றி பெற்ற பிறகு அந்த தலைமை பதவிக்கு தகுந்த அனைத்து அதிகாரங்களையும் எடப்பாடிடமிருந்து மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். டெல்லி மேலிடம் சொன்ன வார்த்தை நம்பி அதிமுகவில் இணைந்து செங்கோட்டையன் வேலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.