Home Blog Page 311

சீமான் தான் ரொம்ப முக்கியம் எடப்பாடியை தூக்கி போடுங்க.. மோடியின் மாஸ் திட்டம்!!

0

BJP NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜகவில் இணைப்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். இது குறித்து டெல்லி மேலிடத்திலும் பேசியுள்ளாராம். இதனால் தான் சீமானை ஒரு இடத்தில் கூட விட்டுக் கொடுக்காமல் முப்பொழுதும் புகழாரம் சூட்டியே வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கல்லூரியில் சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை, சீமான் குறித்து அவர்தான் தளபதி” இவரைப் போல ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார்.

சீமானும் அண்ணாமலையை, பாஜக தமிழகத்தில் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம் இவர் தான் எனக் கூறியுள்ளார். இப்படி மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் புகழாரம் சூடிக் கொள்கின்றனர். அதேபோல சீமான் வாக்குக்கு பணம் அளிக்காமல் தனி பெரும்பான்மையை சேர்த்து உள்ளதால் பாஜகவுடன் இணையும் பொழுது என் டி ஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இவரை நிறுத்தலாம் என கூறுகின்றனர்.

ஆனால் சீமான் இதற்கு ஒத்துவர மாட்டார் என்பதால் ஒவ்வொரு முறையும் பாஜக இவருக்கு முட்டுக் கொடுத்து வருகிறதாம். தற்சமயம் சீமானும் ஒரு சில நேரங்களில் பாஜகவுடன் கூட்டு வைக்க நினைப்பதாகவும் அதனாலையே பாஜகவை எதிர்க்கும் எந்த ஒரு கண்டன போராட்டத்திலும் கலந்து கொள்வதில்லையாம். வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் பாஜகவுடன் சீமானை கூட்டணியில் நிறுத்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மோடி திட்டமிடுவதாக கூறுகின்றனர். மேற்கொண்டு சீமான் இணையும் பட்சத்தில் எடப்பாடி முக்கியத்துவம் குறையவும் செய்யும்.

கூட்டணி யாரோடு?.. திமுக ஆட்சியை அகற்றுவதுதான் நோக்கமா?!. டிவிஸ்ட் கொடுத்த சீமான்!…

0

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர் சீமான். நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக சீமான் விளக்கம் கொடுப்பது இல்லை. இவர் மீது பல அவதூறு வழக்குகளும் இருக்கிறது. அடிக்கடி நீதிமன்றமும் செல்வார்.

விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியதால் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவரா என்பதும் தெரியவில்லை. ஒருபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சீமான் இணக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த எஸ்.ஆர்.எம் கல்லூரி விழாவில் அண்ணாமலையுடன் சேர்ந்து சீமானும் கலந்துகொண்டார். அதோடு, நிர்மலா சீதாராமனை சீமான் ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, திமுக ஆட்சியை அகற்ற நினைக்கும் சீமான் திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்கிற எண்ணம் பலருக்கும் உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், கூட்டணி பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘கூட்டணி சேர்ந்து ஆட்சியை மாற்றுவது மாற்றம் இல்லை. தீமையை தீமையை வைத்து ஒழிக்க முடியாது. நோயை நோயால் குணப்படுத்த முடியாது. மருந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். அந்த மருந்து மக்களிடம்தான் இருக்கிறது. நாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக வரவில்லை. அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக வந்தவர்கள்’ என பதில் சொல்லியிருக்கிறார். சீமான் சொல்வதை பார்க்கும்போது 2026 சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் எனத் தெரிகிறது.

இனி ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது!! அதிரடியாக மூடப்பட்ட கடைகள்!!

0

TN Gov: தமிழகத்தில் மிகவும் மலிவு விலையில் பாமர மக்கள் என அனைவரும் பயன் பெறும் வகையில் தான் நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசு இரு தரப்பும் இதன் மூலம் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதே சமயம் ரேஷன் கடை ரீதியாக பொதுமக்கள் என தொடங்கி பணியாளர்கள் வரை பலரும் பலவித கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக குடோன்களிலிருந்து வரும் பொருட்களுடன் ஊழியர்கள் உடன் வருவதால் அவர்கள் மீதும் சந்தேகிக்கின்றனர். அதேபோல குடோன்களிலிருந்து மையத்தில் வைக்கப்படும் பொருட்களில் ஒவ்வொரு மூட்டையிலும் இரண்டு கிலோவிற்கு மேலாக எடை குறைந்து தான் உள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் எங்கே எடை குறைகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையெல்லாம்  மையமாக வைத்து குடோன் மற்றும் ரேஷன் கடை என அனைத்திலும் கம்ப்யூட்டர் உடன் எடை தராசை இணைக்க வேண்டும்மென்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நுகர்வோர் வரும்போதும் அவர்கள் கைரேகை பதிவு செய்தவுடன் அவர்கள் விவரங்கள் உடனடியாக வருவதில்லை. அச்சமயம் சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது.

இதையும் சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இது ரீதியாக கோரிக்கை ஏதும் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்துள்ளனர். அந்த வகையில் ரேஷன் கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் ஆரவாரம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழக்கம் போல் கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.

ஒரேசாதி.. தனக்கே எதிரியா!! அண்ணாமலையை ஒழிக்க EPS போட்ட கணக்கு!! வெளியான பரபர தகவல்!!

0

ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு முக்கிய காரணமாக அண்ணாமலை கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறொரு தனிப்பட்ட பிரச்சனையும் இருக்கிறது என கமலாலய வட்டாரம் கூறுகிறது. அதாவது எடப்பாடி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள். அண்ணாமலை பாஜகவில் நுழைந்ததிலிருந்து பலம் பெற்ற அரசியல்வாதியாக வளர்ந்து வருகிறார். இது எடப்பாடியின் தொழில் ரீதியான நண்பர்களின் கவனத்தை திசை திருப்புகிறதாம்.

மேற்கொண்டு இவர் சமூகத்திலேயே இவருக்கான மவுசும் குறைந்து கொண்டே வருகிறதாம். அப்படி இருக்கையில் இவரை பாஜகவிலிருந்தே நீக்க வேண்டுமென்று  எண்ணி வந்துள்ளார். அப்போதுதான் அதிமுக மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சையாக பேசி அண்ணாமலை தானாகவே சிக்கினார். இந்த வாய்ப்பை விடக்கூடாது என்று எடப்பாடி தன்வசம் படுத்தி கூட்டணியை விட்டு வெளியேறினார்.

அதிமுகவின் கூட்டணி எந்த அளவிற்கு தமிழகத்தில் தேவை என்பதை உணர்ந்த பாஜக, மீண்டும் கூட்டணி அமைக்க தூது விட்டது. அந்த சமயம் பார்த்து எடப்பாடி பல கண்டிஷன்களை பாஜக மேலிடத்திற்கு போட்டார். குறிப்பாக அதில், அண்ணாமலையை கட்டாயம் தமிழக தலைமையிலிருந்து மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளார்.

இந்த பிரஷரானது அண்ணாமலை மீது போடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்பொழுது இது ரீதியாக முடிவெடுக்கப்பட்ட பின்னர் தான் அண்ணாமலையே இதனை சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கம் செய்ய இதுதான் உண்மையான காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இவருக்கு தேசிய தலையில் நல்ல பதவி காத்திருக்கிறது எனவும் கூறுகின்றனர்.

எங்களுக்கெல்லாம் ரூல்ஸே இல்லை.. பொண்டாட்டிக்காக கோவிலை மூடக் கூடாது!! சிக்கிய திமுக மினிஸ்டர்!!

0

DMK : அமைச்சர் சேகர்பாபு வின் மனைவி கோவிலுக்கு வருகை தருவதையோட்டி கோவில் நிர்வாகமானது ஆகம விதிகளை மீறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கும் ஆகம விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது யாருக்காகவும் மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில் சேகர்பாபுவின் மனைவிக்காக ஆகம விதியையே மாற்றியுள்ளனர்.

தென்காசியில் உள்ள சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப் படும். இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சேகர்பாபு மனைவி சாந்தி வந்துள்ளார். இவருடன் திமுக நிர்வாகிகள் பலரும் வந்துள்ளனர். தினசரி சங்கரன் கோவிலானது மதியம் 12லிருந்து 1 மணியளவில் நடை மூடப்பட்டு மாலை 4 மணியளவில் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சேகர்பாபுவின் மனைவி சந்திரா நடை மூடும் நேரத்தை தாண்டி வந்துள்ளார். கோவில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறி நடையை இவருக்காக திறந்து வைத்துள்ளது. எப்படி அரசியல் நிர்வாகிகளுக்காக இப்படி ஆகம விதிகளை மீறலாம் என்று இவர் மீது புகார் எழுந்துள்ளது. இது ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது அரசு அப்படியே மூடி மறைத்துவிடுமா என்பது குறித்து பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆளும் கட்சியானது பல சூழலில் அதிகாரத் தன்மையை மீறி நடந்துக் கொள்கிறது.

இதேபோல தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியான வழக்கில் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் போராட 2 வாரத்திற்கு முன் அனுமதி கேட்டிருக்க வேண்டும் எனக் கூறி போராட அனுமதி வழங்ககாமல் மறுத்து விட்டு, தன் கட்சிக்கு மட்டும் உடனடி அனுமதியை வழங்கினர். இது பெருமளவு சர்ச்சையானது.

எடப்பாடி போட்ட ஆர்டர்.. சட்டென பணிந்த செங்கோட்டையன்!! பதவிக்காக இப்படியா??

0

அதிமுகவில் சீனியர் சிட்டிசனான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இதன் உச்சக்கட்ட வெளிப்பாட்டை சட்டசபை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்படி இருக்கையில் செங்கோட்டையன் டெல்லி சென்று தனியாக அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. மேற்கொண்டு இவர் ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை தன்வசம் கொண்டு வரவே இப்படிப்பட்ட ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியானது.

அதேபோல எடப்பாடி சட்டசபையை விட்டு வெளியேறினாலும் இவர் தனது தொகுதி ரீதியான பிரச்சனைகளை கூற வேண்டும் என்பதற்காக இருந்து விடுகிறார். இவையனைத்திற்கும் மேலாக நேற்று கருப்பு பேட்ஜ் ஏந்தி, சட்டப்பேரவைக்குள் உள் நுழைந்தவர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் வெளியேறிய நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மட்டும் சட்டப்பேரவையில் இருந்தனர்.

அங்கு செங்கோட்டையன் வெளியேறாமல் பேட்சை வெளியே கழட்டி விட்டு உள் சென்று தனது வட்டார பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றியது அதன் ரீதியாக பேசினார். இவ்வாறாக அவர் செய்தது ஓபிஎஸ் உடன் கூட்டணி என அனைவரும் கூறினர். ஆனால் இன்று சட்டசபையில் அதிமுக தலைமைக் கிணங்க அனைவரும் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். அதில் , செங்கோட்டையன் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அவரும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். தலைமையை எதிர்ப்பதாக வெளிவந்த செய்தி அனைத்தும் பொய் தான் என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார்.

குட் பேட் அக்லி FDFS டிக்கெட் விலை இவ்வளவா?!.. முதல் காட்சி வெளியாவதில் சிக்கல்!..

0

Good Bad Ugly: விடாமுயற்சி படத்திற்கு பின் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் அடுத்து வரும் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. ஏனெனில், இந்த படத்தில் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான பல காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடித்திருக்கிறார். மேலும், திரிஷா, சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டிரெய்லர் வீடியோ வெளியாகி டபுள் டமாக்காவாக அமைந்திருக்கிறது. ஏனெனில், டீசரில் அமைந்ததை விட பல மடங்கு மாஸான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றிருக்கிறது. மேலும், தீனா, பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களிலும் வந்த அஜித்தின் லுக்கை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். குட் பேட் அக்லி படம் வருகிற 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

பட ரிலீஸுக்கு 4 நாட்கள் முன்பே ஆன்லைன் புக்கிங் துவங்கியுள்ளது. இந்தியா முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியாகவுள்ளது. ஆனால், மதுரையில் முதல்நாள் முதல் காட்சி வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில், மல்டிபிளக்ஸ் அல்லாத தனித்தியேட்டர்களில் ரூ.500க்கு டிக்கெட் விற்க வேண்டும் என வினியோகஸ்தர்கள் சொல்கிறர்கள். ஆனால், தியேட்டர் அதிபர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. இதை ஏற்கவில்லை எனில் முதல் காட்சியை 12 மணிக்கு வெளியிடுங்கள் என வினியோகஸ்தர்கள் செக் வைத்துவிட்டார்கள். எனவே, தியேட்டர் அதிபர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது தெரியவில்லை.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மதுரையில் முதல் காட்சி காலை 9 மணிக்கும், இல்லையெனில் மதியம் 12 மணிக்கும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

உங்க போன் தொலைந்து போய்விட்டதா.. கவலையே வேண்டாம்!! உடனடியாக கண்டுபிடிக்க இதை மட்டும் செய்தால் போதும்!!

0

நாம் பயன்படுத்தக் கூடிய செல்போன் தொலைவது என்பது பலருக்கு கை உடைந்தால் போல மாறிவிடுகிறது. காரணம் பயன்படுத்தக்கூடிய செல்போனில் உள்ள தரவுகள். எங்க தரவுகளை பாதுகாக்கவே பலரும் செல்போன் திருட போய்விட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால் உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

இனிமேல் இதுபோன்ற அலைய வேண்டிய தேவை இல்லாமல் அரசு அறிமுகப்படுத்த உள்ள போர்டலில் விவரங்களை உள்ளீடு செய்தாலே தொலைந்த செல்போன் கூடிய விரைவில் கிடைத்துவிடும். இதற்கு கட்டாயமாக நம் செல்போனில் இருக்கக்கூடிய 15 இலக்க எண்ணான IMEI எண் தெரிந்திருத்தல் அவசியம்.

இந்த எண்ணானது செல்போன் வாங்கும் பொழுது அதன் அட்டையில் இடம் பெற்றிருக்கும். இன்னும் சில மொபைல் போன் மாடல்களில் செல்போன் பேட்டரியில் இந்த எண்கள் ஒட்டப்பட்டு இருக்கும். அதுவும் இல்லை என்றால் செல்போனில் *#06#என்று எண்ணை டயல் செய்வதால் உங்களுடைய IMEI நம்பர் கிடைக்கும்.

உடனடியாக தொலைந்த செல்போனை செயலிழக்க அல்லது மீண்டும் பெற செய்ய வழிமுறைகள் :-

✓ முதலில் செல்போன் தொலைந்தவுடன் அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்து அதன் FIR Copy பெற்று வருதல் அவசியம்.

✓ CEIR என்ற போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

✓ அதில் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட புகார் நகல் மற்றும் தொலைந்த செல்போனின் விவரங்கள், செல்போனின் உடைய உரிமையாளரின் விவரங்கள் என அனைத்து தரவுகளையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

✓ அதன் பின் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்ய வேண்டும்.

✓ உங்கள் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு உங்களுக்கான ஐடி ஒன்று திரையில் தோன்றும். இந்த ஐடியை கட்டாயமாக குறித்து கொள்ள வேண்டும்.

உங்கள் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் CEIR போர்ட்டலின் மூலமாக உங்களுடைய செல்போன் இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நெட்வொர்க்கின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தாலும் உடனடியாக முடக்கப்படும். இதனால் திருடர்களால் திருடிய செல்போன்களை விற்கவோ பயன்படுத்தவோ முடியாது. மீண்டும் உங்களுடைய செல்போன் உங்களுக்கு கிடைத்த பின் CEIR மூலமாக உங்களுடைய போன் முடக்கப்பட்ட இருப்பதை நீக்கி மீண்டும் பயன்படுத்தலாம்.

நிலம் வாங்கும் போது முதலில் பட்டா முக்கியமா.. பத்திரம் முக்கியமா!! இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்த்துவிடலாம்!!

0

சமீப காலமாகவே மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய விவசாய நிலங்களும் வீட்டுமனை நிலங்களாக விற்பனை செய்யப்படுகிறது.

தரிசு நிலங்கள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்பட்ட விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொழுது இருக்கிற கூடிய காலகட்டமானது நிலங்களை அதிக அளவில் வாங்கக்கூடிய மக்களை கொண்டுள்ளது. ஆனால் அதில் தற்பொழுது மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வாங்கக்கூடிய நிலத்திற்கு முதலில் பட்டா முக்கியமா அல்லது பத்திரம் முக்கியமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றில் எது முக்கியம் எவற்றிற்கு என்ன மதிப்பு என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக காணலாம்.

நிலத்திற்கு பத்திரம் மட்டுமே முக்கியம் என நினைக்கும் பட்சத்தில் நிலத்தை வாங்குபவருக்கு சட்டபூர்வமான ஆவணமாக பத்திரம் பார்க்கப்படுகிறது. இந்த நிலத்தை மற்றொருவருக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் எழுத்து வடிவிலான ஆவணங்களையும் பதிவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால் பத்திரம் மட்டுமே இருக்கக்கூடிய நிலம் உள்ளது என்றால் அதை புறம்போக்கு நிலம் என்று கூறி அரசால் எப்பொழுது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ள முடியும்.

ஒருவர் தன்னுடைய நிலத்திற்கு பட்டா மட்டுமே வைத்து இருக்கிறார் என்றால் அதில் பட்டாவினுடைய அனைத்து விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டு இருக்கும். அதாவது நிலத்தினுடைய அளவு நில உரிமையாளரின் பெயர் போன்ற முக்கிய விவரங்கள் பட்டாவில் இடம் பெற்றிருக்கும். பட்டா பெற்றிருக்கக் கூடிய நிலத்தை புறம்போக்கு நிலம் என்று சொல்லி அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதற்கு மாறாக எளிமையாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்து மற்றொருவருக்கு எடுத்துக் கொள்வது எளிதான காரியம்.

பொதுவாக பல நேரங்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம் தன்னுடைய நிலத்தை மற்றொருவர் கையகப்படுத்திக் கொண்டார் என்று அவை பட்டாவின் பெயர் மாறுதல்களால் செய்யப்படக் கூடியவை தான். நிலத்தை வாங்க முடிவு செய்யும் பொழுது பத்திரம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு பட்டாவும் முக்கியம். ஒன்று வாங்கி ஒன்று வாங்கவில்லை என்றால் நிலத்தின் முழு உரிமையும் நம்மிடமிருந்து பறிக்கப்படுவதற்கான அபாயங்கள் அதிகம் இருக்கிறது.

ஏப்ரல் 10 முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடைகள் விடுமுறை!! பொதுமக்களின் கவனத்திற்கு!!

0

தமிழகத்தில் பல்வேறு குடும்பங்களில் ரேஷன் அட்டை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படும் பொருட்களை வைத்து குடும்பங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்பொழுது ரேஷன் கடைகளில் அரிசி துவரம் பருப்பு எண்ணெய் மற்றும் சர்க்கரை அதனோடு கூடவே கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது.

கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இரண்டு கிலோ சிறுதானியங்கள் அதாவது கேழ்வரகு வழங்க இருப்பதாகவும் தமிழக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முன்னோட்டம் தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு புறம் ரேஷன் அட்டைகளின் மூலமாக பொருட்கள் வழங்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் ரேஷன் அட்டைகளை வைத்து தமிழக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதி என மொத்தமாக 3 நாட்கள் ரேஷன் கடைகள் விடுமுறை விடப்படும் என்றும் பொருட்களை வாங்க நினைக்கும் பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் படியும் தமிழக அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.