Home Blog Page 315

3 ஆயிரமோ.. 3 கோடியோ எனக்கு சம்பளம் வந்தா ஜாலியாக குடித்து செலவு செய்வேன்!! இப்படி போட்டு உடைச்சிட்டீங்களே விமல்!!

0

நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு கூத்து பட்டறையில் நடிப்பை கற்றுக்கொண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விமர். இவருக்கு ஒரு சில படங்கள் வெற்றியை கொடுத்த பொழுதிலும் பல படங்கள் தோல்வியையே வழங்கியுள்ளன.

இவருடைய பாஷையும் உருவ தோற்றமும் கிராமத்து படங்களுக்கு அருமையாக பொருந்தின. இந்த காரணத்திற்காகவே கிராமத்து கதைகளாக தேடி தேடி நடிக்க தொடங்கினார் நடிகர் விமல். களவாணி திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களை தன் பக்கம் இருத்தவராக இவர் கருதப்படுகிறார்.

களவாணி படத்தில் எப்படி ஹீரோயினை காரில் அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வாரோ அதே போன்று தான் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் காரல் சென்று நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்து இருக்கிறார். அதன் பின்பு மார்க்கெட்டை இழந்த விமல் அவர்களுக்கு சுந்தர் சி கலகலப்பு திரைப்படத்தின் மூலம் மற்றொரு வாய்ப்பை வழங்கினார்.

நடிகர்களாக நடித்த சம்பாதித்த பணத்தை வைத்து பலரும் தயாரிப்பாளராக மாறி இன்னும் பணம் சம்பாதித்து ஆடம்பரமாக வாழ நினைக்கும் பொழுது விமல் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. மன்னர் வகையறா திரைப்படத்திற்கு தயாரிப்பாளராக உருவெடுத்த விமல் அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடனாளியாக மாறியுள்ளார். இருப்பினும் துவண்டு போகாமல் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்துவிட்டு மீண்டும் படம் நடிப்பதில் இறங்கினார்.

இப்படி அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க தன்னுடைய வாழ்க்கை குறித்து அவரே ஊடகம் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-

ஆண்டவன் புண்ணியத்தில் தான் நன்றாக இருப்பதாகவும் எப்பொழுதுமே என்னுடைய தேவைக்கு பணத்தை செலவு செய்யாமல் பணம் எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்றார் போல என்னுடைய செலவுகளை மாற்றி அமைத்துக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். அதிலும் கூத்தப்பட்ட ரயில் 2000 ரூபாய் சம்பளம் பெற்ற பொழுது எப்படி ஜாலியாக சுற்றி குடித்துக் கொண்டு செலவு செய்தேனோ அதேபோன்றுதான் இன்று கோடிகளில் சம்பளம் பெற்றாலும் நடந்து கொள்கிறேன் என தெரிவிப்பது ரசிகர்களை உணர்ச்சி வசப்பட செய்துள்ளது.

ரூ.50 விலை உயர்த்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

0

இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டு உபயோக சிலிண்டர் களின் விலையானது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறார். எப்பொழுதும் குறைவாக உயரக்கூடிய சிலிண்டர் விலை தற்பொழுது ஒரேடியாக 50 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்திருப்பதாவது :-

இதுவரை இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது 50 ரூபாய் கூடி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களை பெறக்கூடிய குடும்பங்களுக்கு 500 ரூபாயிலிருந்து 550 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். மாதத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இது போன்ற சிலிண்டர் விலை ஏற்ற இறக்கங்கள் வெளியிடப்படும். கடந்த இரண்டு மாதங்களாகவே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படக் கூடிய சிலிண்டர்களின் விலை மட்டுமே உயர்ந்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் 2025 ஆம் ஆண்டான இந்த மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நானும் சீமானும் ஒன்றுதான்!.. மேடையிலேயே சொன்ன அண்ணாமலை!. அப்பா அதான!…

0

திமுக எதிர்ப்பு என்கிற ஒரு புள்ளியில் பாஜக, நாம் தமிழர் கட்சி இரண்டும் இணைகிறது. எனவே, சீமானை எப்போது தாக்கி பேசமாட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதேபோல், சீமானை எங்கு சந்தித்தாலும் அவரிடம் பேசிவிட்டே செல்வார் அண்ணாமலை. சில நாட்களுக்கு முன்பு கூட சீமானை பார்த்தபோது ‘அண்ணே விட்றாதீங்க. தொடர்ந்து ஃபைட் பண்ணுங்க’ என உற்சாகப்படுத்திவிட்டு போனார்.

தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே சீமானின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர்.

அவ்வப்போது சர்ச்சையாகி பேசி வழக்குகளில் சிக்குவார். எனவே, அடிக்கடி போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வார். அதில் பல வழக்குகளுக்கு நேரில் செல்ல மாட்டார். அதன்பின் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தால் அதன்பின் செல்வார். இந்நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலையோடு சீமானும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அண்ணாமலை ‘அண்ணன் சீமானை போர்க்களத்தில் நிற்கும் ஒரு தளபதியாகவே பார்க்கிறேன். கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற நிலைப்பாட்டோடு தைரியமாக இருப்பவர் சீமான். நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லை’ என பேசியிருக்கிறார். சமீபத்தில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்தார் என செய்திகள் கசிந்த நிலையில் இப்போது பாஜகவினரோடு விழாவில் பங்கேற்றுள்ளதால் வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாஜகவுன் அங்கம் வகிக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

பிறப்பு சான்றிதழ் அடையாள அட்டை இரண்டு மட்டும் போதும்.. அக்கவுண்டுக்கே வரும் ரூ 1500!!

0

TN Gov: தமிழக அரசானது பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவித்தொகை நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளி படிக்கும் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் ரூ ஆயிரம் உதவித்தொகையாக வழங்குகிறது. அத்தோடு கல்லூரி படிப்பை தொடர்பவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கி உதவுகிறது. அத்தோடு குடும்ப தலைவிகளை உயர்த்தும் வகையில் மாதம் ஆயிரம் வழங்குகிறது.

மேற்கொண்டு அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதாகவும் இம்முறை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது திருநங்கைகளுக்கென்று புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஆதரவற்ற திருநங்கைகளை ஆதரிக்கும் வகையில் மாதம் 1500 ரூபாயை ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கென்று தனி வரையறையை கொடுத்துள்ளனர்.

அதன்படி இத்திட்டம் பயன்பெற விரும்புவோர் கட்டாயம் 40 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும். திருநங்கை நல வாரியத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம். இதனோடு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உள்ளிட்டதையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்த ஓய்வூதியம் பெரும் திருநங்கை தங்களின் குடும்பம் சார்ந்த யாரிடமும் உதவி பெறாத நபராக இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.

திட்டம் மூலம் பயன்பெற நினைப்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல அலுவலரை சந்திக்க வேண்டும். அவரிடம் உங்களது விண்ணப்பத்தை கொடுத்து ஒப்புதல் வாங்கும் பட்சத்தில் மாதம் ரூபாய் 1500 ஐ ஓய்வூதியமாக தமிழக அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!.. நீதிபதி கடும் எச்சரிக்கை…

0

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். சினிமா உலகில் இயக்குனராக இருந்து அரசியலுக்கு வந்தவர் இவர். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதே இவரின் நோக்கம். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

அநேரம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறிவிட்டனர். ஒருபக்கம், நடிகை விஜயலட்சுமி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டும் சீமானின் மீது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவரின் வீட்டில் சம்மன் ஒட்ட போலீசார் சென்றபோது, அதை சீமானின் பாதுகாவலர் கிழிக்க அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் போலீஸ் நிலையம் சென்று வாக்குமூலம் கொடுத்தார் சீமான்.

அவ்வப்போது சர்ச்சையாகி பேசி வழக்குகளில் சிக்குவார். எனவே, அடிக்கடி போலீஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு செல்வார். அதில் பல வழக்குகளுக்கு நேரில் செல்ல மாட்டார். அதன்பின் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தால் அதன்பின் செல்வார். தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக டிஐஜி வருண்குமார் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், சீமான் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது இன்று மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராக வேண்டும். இல்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தளபதி பெரும் தலைவர்.. எல்லாமே எனக்கு சீமான் தான்- அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

0

BJP NTK: பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியானது சமீப நாட்களாக இணக்கத்தில் இருக்கிறோம் என்பதை காட்டும் விதமாகவே நடந்து கொள்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் வகையிழும் தொகுதி வரையறை உள்ளிட்டவற்றை கண்டித்து அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை திமுக நடத்தியது. ஆனால் அதில் அனைத்திற்கும் குரல் கொடுக்கும் சீமான் அதில் கலந்து கொள்ளவில்லை. அப்போதே சீமான் மற்றும் பாஜக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை இருக்கும் என கூறி வந்தனர்.

இதனின் ஒரு படி மேலாக, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமானும் அண்ணாமலையும் கைகோர்த்து பேசிக்கொண்டனர். குறிப்பாக அண்ணாமலை சீமானிடம், விட்றாதீங்க அண்ணா எனக் கூறியது இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தது. தற்பொழுது மீண்டும் அனைத்து கட்சி பொதுக்கூட்டம் ஒன்றை தமிழக அரசு நடத்தும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதிலும் சீமான், நான் இந்த நாடகத்திற்கெல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று மழுப்பும் பதிலை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இப்படி இருக்கையில் இன்று சீமான் மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சேர்ந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சொல் தமிழா சொல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் அண்ணாமலை சீமான் குறித்து வெகு விமர்சையாகவே புகழ்ந்து பேசியுள்ளார். ஒவ்வொரு வார்த்தையிலும் தலைவர், தளபதி என பேசினார். நான் சீமானை கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் என்றெல்லாம் கூற மாட்டேன் போர்க்களத்தில் நிற்கும் தளபதி தான் இவர்.

அப்படித்தான் அவரைப் பார்க்கிறேன். இவர் தமிழக அரசியலிலேயே தனிப்பெரும்பான்மையுடைய தலைவர். எதிர்வரும் அனைத்தையும் எதிர்த்து தைரியமாக போராடக் கூடியவர். எங்களுக்குள் ஒரே வித்தியாசம் தான். நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன், அவர் தமிழில் தேசத்தை பார்க்கிறார் அவ்வளவுதான். தற்போது வரை எனது ஆதரவு அவருக்கு உள்ளதென்றால், அதற்கு முக்கிய காரணம் நேர்மையம் நெஞ்சுருதியும் அரசியலில் உள்ளது என்றால் அதில் அவர் ஒருத்தருக்கு தான்.

இதேபோல தேசியக் கட்சிகள் மாநில நலனை முக்கியமாகவும், மாநிலக் கட்சிகள் தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தான் நல்ல ஆளுமையுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் இன்று அரசியல் சூழலானது அப்படி இல்லை. மாநில கட்சியின் தேசிய கட்சிகளும் உச்சகட்டத்திற்கு செல்லும் பட்சத்தில் நடுவில் உள்ள மக்கள்தான் என்ன நடக்கிறதென்று அறியாமல் முழிக்கிறார்கள் என பேசினார்.

பட்டென சரிந்த தங்கம் விலை.. இது தான் கடைசி!! நிபுணர்கள் போடும் அடுத்த குண்டு!!

0

Gold Silver Price: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புதிய வரி விதிப்பிற்கு பிறகு தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளது. அதாவது 68,480 ஆக இருந்த விலை தற்பொழுது 66,280 ஆக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த விலையை காட்டிலும் 15% உயர்ந்து தான் உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல விலையானது குறையுமா அல்லது உயரக்கூடுமா என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்பொழுது வரை தங்கத்தின் மீது முதலீடு செய்வது பாதுகாப்பானது என நம்புகின்றனர். தற்போது ட்ரம்ப்பின் வரி விதிப்பால் பணவீக்கமானது அதிகரிக்கக்கூடும். அச்சமயத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது பணத்தை போடும் பட்சத்தில் மீண்டும் தங்கம் விலை பழைய நிலைக்கு செல்லக்கூடும். ஆனால் ட்ரம்ப் வரி விதிப்பிற்கு முன்பு அதிகரிக்கக்கூடும் என்ற பேச்சு அடிபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவது பொறுத்து அதன் விலையில் மாற்றம் ஏற்படும். இன்று தங்கத்தின் ஒரு கிராம் விலை 8,285 ஆகவும், ஒரு பவுன் 66 ஆயிரத்து 66,280 ஆகவும் உள்ளது. நேற்றைய விலையை காட்டிலும் 200 ரூபாய் குறைந்துள்ளது. இதுவே வெள்ளி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் எட்டு கிராம் ரூ 824 ரூபாய் என்று நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஐஜி வழக்கு: சீமான் மீது பாய்ந்த பிடிவாரண்ட்.. கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!!

0

NTK: விக்ரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியிருந்தார். இது ரீதியாக இவர் மீது புகார் அளித்த நிலையில் சைபர் க்ரைம் கைது செய்தது. இந்த கைதுக்கு பின்னணியில் திருச்சி எஸ் பி வருண்குமார் தான் உள்ளார் என்பதை சீமான் கூறினார். அத்தோடு குறிப்பிட்ட சாதி வகுப்பினரை சொல்லி அவர்களுக்கெல்லாம் இவரை பிடிக்கவே பிடிக்காது என்று குறிப்பிட்டும் பேசியிருந்தார்.

இது அனைத்தும் பூகமமாக வெடிக்கவே, எஸ் பி வருண்குமார், எங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் போன் செய்து கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளித்திருந்தார். மேற்கொண்டு அதில், சாதி வகுப்பினரை குறிப்பிட்டு எப்படி என்னை பேசலாம் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கானது திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ஒவ்வொரு முறையும் சீமான் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.

குறிப்பாக நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகவில்ல்லை. இன்று இந்த வழக்கானது அமர்வுக்கு வந்த நிலையில், எஸ் பி வருண் குமார் ரீதியான சாட்சியங்கள் கூறப்பட்டு அவர் தரப்பு வாதங்கள் முடிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பு பேசுவதற்காக சீமான் அங்கு இல்லை. இதனால் நீதிபதி இன்று மாலைக்குள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், இல்லையென்றால் கட்டாயம் பிடிவாரண்ட் உத்தரவு போடப்படும் என கூறியுள்ளார். சீமான் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால் கட்டாயம் கைது செய்யப்படுவார்.

இனி நீ கட்சிக்கு தேவையில்லை.. செங்கோட்டையனை டீலில் விடப்போகும் எடப்பாடி!! அதிமுக நிர்வாகி ஓபன் டாக்!!

0

ADMK: செங்கோட்டையன் அதிமுகவின் ஆரம்ப கட்ட காலத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் சமீப காலமாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் ஒத்துவரவில்லை. எடப்பாடிக்கு நடத்திய பாராட்டு விழாவில் இவருக்கு பெரும்பாரியான மரியாதையானது விழா அழைப்பிதழில் கூட கிடைக்கவில்லை. இதனால் கோவமடைந்த செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடியை சாடி பேசி வந்தார். இவர்களது இந்த பணி போரானது சட்டசபை வரை நீடித்தது.

இறுதியில் சபாநாயகருக்கு எதிராக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒன்று சேர்ந்தனர். ஆனால் இவர் தலைமையையும் தாண்டி டெல்லிக்கு சென்று அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்தித்து வந்தது தற்போது அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் திமுகவும் இவரை எங்கள் பக்கம் வந்து விடுங்கள் என்று தூது அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. இதனையெல்லாம் தவிர்த்து விட்டு தனக்கென்று தனி ஆலோசனை வைத்து ஓபிஎஸ் உடன் இணைய திட்டமிட்டு வந்தார்.

மேற்கொண்டு ஓபிஎஸ் போட்ட வழக்கும் நிலுவையில் உள்ளதால், அவருக்கு சாதகமாகும் பட்சத்தில் அவருடன் கை கோர்த்தால் கட்டாயம் அதிமுகவை இந்த பக்கம் இழுத்து விடலாம் என்று எண்ணியுள்ளார். இதனையெல்லாம் அறிந்து பொறுமையாக இருந்த எடப்பாடி, இவர் டெல்லிக்கு தனியாக சென்று மத்திய மந்திரியை சந்தித்து வந்தது அரவே பிடிக்கவில்லை. இதனால் அவரை கட்சியை விட்டு நீக்கம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியாக அக்கட்சியின் நிர்வாகியே கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்சமயம் அதிமுகவுடன் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை இணைக்க வேண்டுமென்பதில் குறியுடன் உள்ளதால் , இனி இவர் நமக்கு செட் ஆக மாட்டார் என்று எடப்பாடி முடிவெடுத்துள்ளாராம்.

மீண்டும் தலைவராகப் போகும் அண்ணாமலை.. டெல்லி மேலிடம் திடீர் ஆலோசனை!!

0

BJP ADMK: தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகப் போகிறார் என்ற அறிவிப்பானது சமீபத்தில் உலாவி வந்தது. மேற்கொண்டு அண்ணாமலையும் இதனை உறுதி செய்து விட்டார். ஆனால் பாஜக இவ்வளவு தூரம் தமிழகத்தில் வளர்ந்து வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம், அவரை பதவியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்று அவரது தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேற்கொண்டு அவரை ஆதரித்து சமூக வலைத்தளம் முழுவதும் மேலிடத்திற்கு பிரஷர் கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லியில் நயினார் நாகேந்திரன் பதவியேற்க முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மதிமுக மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டுமென்றால் கட்டாயம் அண்ணாமலை இருக்கக் கூடாது என்று அவரை டார்கெட் செய்ததால் டெல்லி மேலிடம் இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆனால் அண்ணாமலை ஆதரவுகள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கொண்டு அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சரவையில் பெரிய பதவி கிடைக்கப்போகிறது எனவும் கூறுகின்றனர். இப்படி இருக்கையில், சுலபமாக தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கி விட முடியாது என்று ஒரு பக்கம் தகவல் கிடைத்துள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அதனை தமிழக பாஜக நிர்வாகிகளும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள் என்பதால் மேலிடம் சற்று ஆலோசனை செய்ய இருப்பதாக கூறுகின்றனர்.

மேற்கொண்டு தனிக் குழு அமைத்து அதிமுகவுடன் இது குறித்து பேச நயினார் நாகேந்திரனை அனுப்பி வைக்கவும் டெல்லி முடிவு செய்துள்ளதாம். இந்த ஆலோசனையில் அதிமுக சற்று தலையசைக்கும் பட்சத்தில் மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என கூறுகின்றனர்.