ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5, 2025
Home Blog Page 5657

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

0

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

இயக்குனர் சேரன் தன்னுடைய மெஹா ஹிட் படமான ஆட்டோகிராஃபில் முன்னணி நடிகர்களான பிரபுதேவா மற்றும் விக்ரம் இருவரும் நடிக்க மறுத்தக் காரணத்தை சொல்லியுள்ளனர்.

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சேரன் பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்லார். சமீபத்தில் அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிம்பு, விஜய் சேதுபதி இருவருக்கும் கதை சொல்லியுள்ள அவர் விரைவில் இயக்கத்திலும் முழுவீச்சாக இறங்க  இருக்கிறார்.

இந்நிலையில் தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான ஆட்டோகிராப் படத்தில் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் பிரபுதேவா ஏன் நடிக்க மறுத்தனர் என்பதற்குப் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் முதலில் ‘ ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க பிரபுதேவாவைதான் ஒப்பந்தம் செய்திருந்தோம். கடன் எல்லாம் வாங்கி அட்வான்ஸ் கொடுக்க ஒரு நாள் தாமதமானதால் அவர் இந்த படத்தில்நடிக்க மறுத்து விட்டார்.

அதே போல விக்ரமுக்குக் கதை சொன்னென். அவருக்குக் கதை பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போது நான் பாண்டவர் பூமி படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அவரும்  ஜெமினி படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி போனார். ஆனால் அந்த படம் ரிலீஸானதும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். அதனால் மென்மையானக் கதையம்சம் கொண்ட இந்த படம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.

பிறகு பல ஹீரோக்களிடம் கதை சொன்னேன். சிலருக்குப் பிடித்திருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்னர்தான் நானே நடிப்பது என முடிவானது.’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் ஆட்டோகிராப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றது வரலாறு.

சக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

0

சக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் 9 வயதாகும் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக அழும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் சிறுவன் அவன் தாயோடு வசித்து வருகிறான. அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அகான்ட்ரோபலாசியா எனும் வினோதமான நோய் உள்ளது. இந்த நோய்  எலும்புகளை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கும் ஒரு நோயாகும்.  இந்த குறைபாடு பிறவியிலேயே ஏற்படுவதாகும். இதனால் சக வயதுள்ளவர்களை விட உயரத்தில் குள்ளமாக இருக்கும் குவாடன் அதற்காக சுற்றி இருக்கும் அனைவராலும் கேலி செய்யப்பட்ட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சக மாணவர்களும் அவரை இதனால் கேலி செய்வதும் அடிப்பதுமாக இருந்ததால் மனமுடைந்த அவர் தன் தாயிடம் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக சொல்லி அழுதுள்ளார்.

அதை அவர் ஒரு வீடியோவாக எடுத்துள்ளார் அவரது தாயார். அந்த வீடியோவில் ‘ ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.’ என அழுது மன்றாடுகிறான்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குவாடனின் தாய்‘ ஒரு தாயாக நான் எனது பொறுப்புகளில் இருந்து நான் தவறிவிட்டேன். அதுபோல இந்த கல்வித்திட்டமும் தோற்றுவிட்டது.உடல் ரீதியான கேலிகள், குழந்தைகள் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஒரு மாணவன் குவாடனை தலையில் அடிப்பதை நானே பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்தால் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிந்த அவன் அவனிடம் இருந்து தப்பித்து வந்து காரில் ஏறிய குவாடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழ ஆரம்பித்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.

9 வயது சிறுவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது என்றால் அவன் எவ்வளவு மனக்கஷ்டங்களை அனுபவித்து இருப்பான் என்ற சோகம் மனதைப் பிழிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

0

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் சினிமாவின் பிரபலம் மற்றும் மக்களிடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கி அரசியலிலும் வெற்றி வாகை சூடினார்கள்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் சில ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறார். பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் அரசியலில் களம் கண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் போர் வரட்டும் தமிழக அரசியலில் குதிப்போம் என்று பல வருடங்களாக மழுப்பி வருகிறார். நான் அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தை கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியவர் அவ்வப்போது, சர்ச்சையான கருத்துகளை பேசி வருவதும் அதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டு களேபரம் ஆகின்றது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்த வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். நடிகர்கள் வந்துதான் கட்சியை பலப்படுத்த வேண்டுமா என்றும், காங்கிரஸ் கட்சி தனது அரசியலுக்காக நடிகர்களிடம் தூதுவிட்டு பார்க்கிறது என்றும் சிலர் கருத்தை முன்வைக்கின்றனர். பிகில் பட சர்ச்சையிலும் விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர்களை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது ஒரு வகையில் ஏற்க கூடியதாகவே உள்ளது.

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

0

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய மளமளவென விக்கெட்களை இழந்தது, இதையடுத்து போட்டித் தொடங்கிய நிலையில் மேலும் 7 ரன்கள் சேர்த்த பண்ட் 17 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் அஸ்வின்(0), ரஹானே (46) விக்கெட்கள் விழ முகமது ஷமி அதிரடியாக 21 ரன்களைக் குவித்தார். இதனால் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதன் பின் தன் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியுசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்துள்ளது.

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

0

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

நெய்வேலி பகுதியை சேர்ந்த புதுநகர் 28 வது வட்டத்தில் வசிப்பவர் தான் விக்டர்ஜான். இவருடைய மனைவி சலோமியா. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.25 வயதாகும் சலோமிய வடலூர் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார்.

அலுவலகம் செல்லும் சலோமியா தினந்தோறும் காலையில் தனியார் பேருந்து மூலமாக தான் வடலூருக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி செல்வதால் அவருக்கும் தனியார் பேருந்து நடத்துநர் குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த சலோமியாவை, சுந்தரமூர்த்தி ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனையடுத்து சுந்தரமூர்த்தி தன்னுடைய காதலை சலோமியாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று கூறி, அவரது காதலை ஏற்க மறுத்ததோடு, சுந்தரமூர்த்தியின் நட்பையும் அத்துடன் துண்டித்துள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, சலோமியாவை பழி வாங்கும் எண்ணத்தில் அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல நேற்று காலை சலோமியா வீட்டிலிருந்து வடலூருக்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் பேருந்து நிலையத்திலிருந்து தான் பணி புரியும் நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நடந்து சென்ற சலோமியாவை திடீரென சுந்தரமூர்த்தி வழிமறித்து, சற்றும் எதிர்பாராத வகையில் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் சலோமியா மீது எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவ சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் தீ வைத்த சுந்தரமூர்த்தியை பிடித்து தர்மஅடி கொடுத்து, வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது பற்றி அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அருகிலுள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிக்கபட்ட சலோமியாவிடமும் அவர் விசாரணை நடத்தியிருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த அளித்த புகாரின் பேரில் வடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,குற்றவாளியான சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். திருமணமான பெண் மீதான ஒரு தலைக் காதலுக்காக பட்டப்பகலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண் மீது பேருந்து நடத்துநர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

0

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய அமெரிக்கா மீது வர்த்தக தாக்குதல் நடத்துவதாக விமர்சித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பயணத்தில் அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் உள்ளிட்டோரும் வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, கொலராடோ மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பிரசார பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில், தான் மேற்கொள்ளவுள்ள இந்திய பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது அந்தப் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது.

நான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு போகிறேன். இந்திய பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்திய பயணத்தின் போது நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப் போகிறோம். அவர்கள் வர்த்தகத்தில் பல்லாண்டு காலமாக நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் இந்தியாவில் நம்முடைய பொருட்களுக்கு மிகவும் கூடுதலாக வரியை விதிக்கிறார்கள். உலகிலேயே நமக்கு கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது.

இந்திய பயணத்தின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இதன் மூலம் பெரியதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நல்ல ஒப்பந்தம் அமையாவிட்டால், மேலும் இதையொட்டிய பேச்சுவார்த்தை மந்தமாகி விடும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு, ராணுவ உறவு இருந்தாலும் கூட வர்த்தக உறவில் தொடர்ந்து உரசல்கள் இருந்து கொண்டு தான் வருகிறது.

அதிக வரி விதிப்பது மட்டுமின்றி இந்தியாவுடன் வர்த்தக சம நிலை இல்லை என்றும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் இந்தியாவை பற்றி குறை கூறி வருகிறார்.

அமெரிக்க பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இந்த ஏற்றுமதிக்கு சாதகமாக சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித் தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு சாதகமாக எதையும் செய்து கொடுப்பதாக இல்லை.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தகத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் அவருடைய இந்தப் பயணத்தின் போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

0

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியாட்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

மேலும் சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மனம் அலை பாய்வதை கட்டுபடுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

விரதம் ஏன்?

நம்முடைய மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே இவ்வாறு விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். மேலும் விரதத்தின் போது உணவை தவிர்ப்பதன் வழியாக உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. இவ்வாறு நாம் தினமும் அனுபவிக்கும் நித்திரை, தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விரதத்தின் போது விலிதிருப்பதின் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு விரதத்தின் போது உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலமாக நாம் சாதாரண விழிப்பு நிலையையும் விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம் என்று கூறப்படுகிறது.

அதாவது சாதாரண விழிப்பு மற்றும் உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக உள்ளதாக கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை.அதனால் இறைவனை உணரும் தன்மையை இழந்து விடுகிறோம்.

இதனால் தான் சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணெய் போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது. இதனால் இறைவனை உணரும் தன்மையை அடைகிறோம்.

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

0

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

நாய்க்கு உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசியை ஒளித்து வைத்து வீசுகிறார்கள். பசியில் இருந்த நாய் அதை உண்ணபோது வாயில் குத்தி ரத்தம் வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இம்மண்ணில் சம உரிமையுடன் வாழ தகுதியுள்ளது. மனித இனத்தில் பிறந்த சிலருக்கு பிற உயிர்களிடம் அன்பை பற்றியோ, அதன் வாழ்க்கைமுறை பற்றியோ தெரியாமல் விபரீத விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பசியால் வந்த நாய்க்கு வாய்முழுக்க ரத்தம் கொட்டிய புகைப்படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. இதுகுறித்து விஜயகுமார் என்கிற வலைதளவாசி தனது முகநூலில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

எத்தனை பெரிய மனிதனுக்கு
இத்தனை சிறிய மனமிருக்கு
நாய்க்கு தின்ன உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசிகளை நிறைய ஒளித்து வைத்து நாய் முன்னாடி வீசியுள்ளார்கள்

பசியில் ஓடிப் போய்த் தின்னும் நாயின் வாயில் குத்தி ரத்தம் வருவதைப் பாருங்கள்.

நாய் அப்படி ஓடிப்போய் தின்பதற்குக் காரணம் அது மனிதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் மனிதன் செய்வது நம்பிக்கைத் துரோகம்

இயற்கைக்கு உயிரினங்களுக்கு
சுற்றுச் சூழலுக்கு இந்த மனித நாய்கள்கள்தான் பேராபத்து

இயற்கைக்கு பயங்கரவாதி மனிதகுலம்தான்

ஏதாவது கோள் மோதி பூமி அழிந்தால்கூட மிக்க மகிழ்ச்சிதான்

ஜாதிமதம், ஏழை, பணக்காரன், இலக்கியம், சினிமா, தத்துவம், குடும்பம், ‌அன்பு என எதுவும் அறிய வேண்டியதில்லை.

இந்த உலகில் சாவதைவிட வாழ்வதுதான் மிகக் கொடூரம், அப்படி ஆக்கிவைத்தது இந்த பகுத்தறிவற்ற இழிந்த மனித நாய்கள்தான்.

https://m.facebook.com/story.php?story_fbid=2565897960401256&id=100009432313466

இந்த சம்பவம் சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது.

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

0

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

அரண்மனையில் இருந்து ஹாரி – மேகன் தம்பதியனர் அதிகார பூர்வமாக மார்ச் 31 ல் வெளியேறுவதால் ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளார் இங்கிலாந்து ராணி.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி- மேகன் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டயானாவின் மகனான ஹாரி கடந்த 2018ம் ஆண்டு மேகனை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, இந்த நிலையில் அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இங்கிலாந்து இராணி முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் வரை சமாதானம் செய்தனர்.

ஆனால் அவர்கள் முடிவை மாற்றமுடியவில்லை. இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு ராணி அனுமதியளித்தார். கனடாவில் குடியேறும் அவர்கள் சஸ்ஸக்ஸ் ராயல் என பெயரிடப்பட்ட நிறுவனம் ஒன்றையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சாதாரண வாழ்க்கையை தொடங்கும் ஹாரி – மேகன் தம்பதி மார்ச் 31 தேதி சட்டப்படி பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களிலிருந்து முழுமையாக வெளியேறுகின்றனர். இந்த நிலையில் 2 பேரும் வரும் வாரத்தில் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் இறுதியாக பங்கேற்க உள்ளனர்.

காதல் மனைவிக்காக இளவரசர் பட்டத்தையே துறந்த ஹாரிக்கு உலகம்  முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

0

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் தெலுங்குப் பதிப்பை ஜூனியர் என் டி ஆர் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

இந்த பாடல் கொலவெறி மற்றும் ராஜகாளியம்மன் படத்தில் இடம்பெற்ற சந்தன மாளிகையில் தூளி கட்டிப் போட்டேன் என்ற பாடலின் காப்பி என சொல்லப்பட்டது. ஆனாலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இந்த பாடல் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்போதே பலபேரின் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் மாஸ்டர் தெலுங்கு வெர்ஷனில் இந்த பாடலை வெகுவிரைவில் பதிவு செய்திருக்கும் அனிருத் அதற்காக டிக் செய்திருக்கும் நபர் யார் தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஜூனியர் என் டி ஆரைத் தேர்வு செய்துள்ளார் அனிருத். இது சம்மந்தமாக என் டி ஆரிடம் பேச அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகளவில் இந்த பாடல் சென்று சேரும் என சொல்லப்படுகிறது.