ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5, 2025
Home Blog Page 5658

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

0

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

இந்தியன் வங்கி இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக கூறியுள்ள செய்தி பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட காரணத்தால், ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொதுவான கருத்து கூறப்பட்டது.

இந்தியன் வங்கி கூறிய உண்மை நிலவரம் :

வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தணை நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதற்கான உண்மை நிலவரத்தை அகில இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் கூறியதாவது ;

இந்தியன் வங்கி பணப்பரிவர்த்தணையில் 2000 நோட்டுகள் தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்தப்படும், ஏடிஎம் -களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும், ஏடிஎம் களில் அதிகமான தொகையாக பணம் எடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டே வருகிறது. இதனால் சில்லறைக்காக வங்கிக்குள் நுழைகின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கும் , மக்களுக்கும் நேரம் வீணாகிறது. ஏடிஎம் மிஷன் கொண்டு வந்ததே வங்கியின் பணப்பரிவர்த்தணை நேரத்தை குறைப்பதற்குத்தான். சில்லறை சிக்கலுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினார்.

இனி வங்கி ஏடிஎம் களில் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே நிரப்பப்படும். 2000 ரூபாய் நோட்டுக்கான ஏடிஎம் டிரேக்களில் இனி பணம் நிரப்புவதில்லை என்பதையே பலர் திரித்து கூறுவதாக தெரிவித்தார்.

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

0

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸி. இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா (29), ரோட்ரிக்யூஸ்(26) மற்றும் திபாலி ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அல்ஸியா ஹீலி 51 ரன்களும்,  அஷ்லே கார்ட்னர் 34 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் ஆஸி. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்களும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இதன் மூலம் உலக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது.

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

0

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநரான கிரண்பேடியை சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதற்கு கிரண்பேடி, தொடர்ந்து ரேசன் கார்டுகளுக்கு பணமே கொடுக்கலாம் என்று கூறி மறுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, கிரண்பேடி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நான் தடையாக இல்லை என்றும், மேலும் பொது மக்கள் நல்ல தரமான அரிசியை வாங்குவதற்கு இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன் என்றும் கூறினார். மக்களுக்கான இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்பது பொய்யான தகவல் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில் முதலமைச்சர் நாராயாணசாமி தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !

0

அஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !

இனி அஜித் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நடக்கும் என தென்னிந்திய சினிமா தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அஜித் நடிக்கும் பெரும்பாலான படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் அல்லாமல் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில்தான் நடந்து வருகிறது.

இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், அஜித் படத்தின் ஷூட்டிங்கை தமிழ்நாட்டில் வைத்தால் ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கு மத்தியில் நிம்மதியாக நடத்த முடியாது என்பதுதான். இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும் இதனால் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஆந்திராவில் நடந்தால் பெரும்பாலும் அம்மாநில தொழிலாளர்களையே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான நாட்களில் தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்போது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர் கே செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அஜித்திடம் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த சம்மதித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் நடக்கும் ரஜினி படத்தின் படப்பிடிப்பும் அடுத்த கட்டத்தில் இருந்து சென்னையில் நடக்கும்’ என சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளார்.

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

0

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

காதலித்த பெண் தன்னுடன் பேசாத காரணத்தால் அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டு போலீஸ் பூத்தில் விழுந்து எரிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பாவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியராக இருந்து வருகிறார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக அப்பெண் இவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் பேசாத காரணத்தால் அப்பெண்ணின் மீது பெட்ரோல் குண்டை வீசுவதற்கான திட்டத்துடன் காதலியை தேடி அவரது கல்லூரிக்கே இருசக்கர வாகனத்தில் வெங்கடேஷ் சென்றுள்ளார். நீண்ட நேரம் கல்லூரி வெளியே காத்திருந்தும் அப்பெண் வெளியே வரவில்லை. இதனால் வெறுப்பான வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை தூக்கி கவனமே இல்லாமல் ஒரு ஓரமாக வீசினார்.

ஓரமாக விழுந்த பெட்ரோல் குண்டானது அருகில் இருந்த போலீஸ் பூத்தில் பற்றி எரிய ஆரம்பித்தது. போலீஸ் பூத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. திடீரென தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் பதட்டத்துடன் தூரமாக நின்றனர். நிலைமை மோசமாவதை அறிந்த வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் தீயினை கட்டுபடுத்தி, தப்பியோடிய வெங்கடேஷை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் வாகன நம்பரை வைத்து ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்; வெங்கடேஷ் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் அவரது காதலி தற்போது பி.காம் படிப்பதாகவும் கூறினர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான காதலனை அப்பெண் பலமுறை திருத்த முயற்சித்தும் பலனில்லை. ஆகவே, தான் வேறொருவரை காதலிக்கபோவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்டு காதலி மீது பெட்ரோல் குண்டு வீச பிளான் செய்ததாக காவல்துறையின் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வழக்குகள் வெங்கடேஷ் மீது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவளை கொலை செய்ய வேண்டும் என்னை விடுங்கள் என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வெங்கடேஷ் புலம்பியதாக கூறப்படுகிறது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

0

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

ஐதராபாத்தில் “இந்தியா 2030 ஆம் ஆட்டுக்குள் சூப்பர் பவர்” என்ற தலைப்பிலே கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,ராஜ்ய சபை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.அதில் அவர் கூறியதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 37 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்தியா 2030 ஆம் ஆண்டில் பொருளாதார வள்ளலரசாக மாற முடியும்.அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நாம் சீனாவை எளிதில் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவுக்கே பொருளாதாரத்தில் சவால் விட முடியும் என்றார்.

ஜிஎஸ்டி என்பது இருத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற வேண்டுமானால் ஒரு தேசம் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.முதலீடுகளை ஈர்க்க வதி விதிப்பும்,வசூலும் இலகுவாக இருத்தல் வேண்டும்.ஆனால் ஜி.எஸ்.டி அவ்வாறு உள்ளாறு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

ஜி.எஸ்டி,வருமான வரியை கணினியில் செலுத்தச் சொல்கிறார்கள் கணியை அறியாத பல தொழில் முனைவோரும் நம்மிடையே உள்ளனர்.அவர்கள் செய்யும் தொழிலுக்கு வரி செலுத்துவதோடு மட்டும் இல்லாமல் வரிகணக்கை தாக்கல் செய்ய தனியாக செலவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.

மேலும் முன்னாள் பாரதப்பிரதமர் நரசிம்மராவுக்கு பாரதரத்னா வருது வழங்க வேண்டும் எனவும் கூறினார்.ஏனெனில் இந்தியாவில் அவருடைய ஆட்சியை தவிர வேறு யாருடைய ஆட்சியிலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டவில்லை.அவரே பல பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்த ஜாம்பவான் என்றும் குறிப்பிட்டார்.

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

0

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிப்பறைகளாக மாற்றி வாடகை விட்டு திமுக நிர்வாகி பணம் சம்பாதித்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த செயலை செய்த திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் உட்பட 12 நபர்களின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வைகை நதிக்கரையின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளே இருக்கும் பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் கோயிலுக்கு வரும் பக்தரக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர். இதனை சுற்றிய குறிப்பிட்ட நிலப்பகுதியை அறநிலையத்துறை அதிகாரிகளால் குறைந்த அளவில் வாடகை விடப்பட்டது. கோயில் நிர்வாகம் இந்த வாடகை ஒப்பந்தத்தை 1998 ஆம் ஆண்டு முடித்து வைத்து, புதிய ஆட்களிடம் வாடகைக்கு விட முடிவு செய்தது.

வாடகைக்கு விடப்பட்ட காலங்களில் திமுக நிர்வாகி உட்பட பலர் வாடகையே தராமல் தனது சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிவறைகளை வாடகை விட்டு பணம் வசூலித்துள்ளார். ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு தரவேண்டிய குறைந்தபட்ச வாடகை தொகையை கட்டவே இல்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திமுக நிர்வாகி மட்டும் வாடகைத் தொகை ரூபாய்.22 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும் இவர்கள் அசரவில்லை, காரணம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டனர். இதனையடுத்து, கல் மண்டபம் கடைகளை காலி செய்யுமாறு மதுரை நீதிமன்றம் உத்தவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள் காலி செய்யப்பட்டு கல்மண்டபம் உட்பட அனைத்து கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

மேலும், பழமை வாய்ந்த கல் மண்டபத்தை மறு சீரமைத்து மீண்டும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாக மாற்ற வேண்டுமென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தர வேண்டிய வாடகை தொகையை நீதிமன்றத்தின் வாயிலாக திமுக நிர்வாகியிடம் வசூலிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியின் இந்த செயல்பாடு மதுரை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

0

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவரும், நடன இயக்குனர் ஒருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பல பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடன இயக்குனர் ராகேஷ் மற்றும் துணை நடிகை கராத்தே கல்யாணி ஆகிய இருவரையும் சம்பந்தப்படுத்தி ஆபாசமாக சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ ஆதாரங்களை சேகரித்து துணை நடிகை கராத்தே கல்யாணி இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த வீடியோ ஆதாரங்களை பார்த்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இன்னும் எத்தனை திருமணம் செய்வேனோ தெரியவில்லை! அனுஷ்கா புலம்பல்

0

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. பாகுபலி படத்தின் நாயகனான பிரபாசை காதலித்து வருகிறார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரபாஸ் இதனை உறுதியாக மறுத்தார்

இதன் பின்னர் ஒரு டாக்டருடன் அனுஷ்காவுக்கு காதல் என்றும், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து விட்டதாகவும் வதந்தி பரவியது. தற்போது புதிதாக அவர் ஒரு கிரிக்கெட் வீரரை காதலித்து வருவதாகவும் இவ்வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் ஒரு கிசுகிசு பரவி வருகிறது

இது குறித்து தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை அனுஷ்கா ’இன்னும் எத்தனை முறைதான் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என்று தெரியவில்லை. பத்திரிகையாளர்களும் கிசுகிசுக்கள் எழுதுபவர்களும் எனக்கு பல முறை ஏற்கனவே திருமணம் செய்து வைத்து விட்டார்கள். இதை எல்லாம் கட்டுகதை, வதந்தி என்று தெரிந்தும் ரசிகர்கள் அதை படித்து மகிழ்ந்து வருகிறார்கள்

எனக்கு திருமணம் என்றால் அது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையுடன் தான். என்னுடைய வாழ்வில் காதல் திருமணம் என்ற ஒன்று கிடையாது. எனது திருமணம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். திருமணம் செய்யும் போது நானே முறைப்படி அறிவித்து அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அனுஷ்கா ஷெட்டி கூறியுள்ளார்

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

0

சிம்புவை இயக்குகிறாரா சேரன்: சக்கரைப் பொங்கல்& வடகறி காம்பினேஷன் !

சிம்பு நடிகும் அடுத்த படத்தை இயக்குனர் சேரன் இயக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். ஆனாலும் சிம்புவால் காலதாமதம் ஏற்பட்டு படத்தை டிராப் செய்வதாக அறிவித்தார். அதன் பின் சிம்பு மீண்டும் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்க ஒருவழியாக படம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் மாநாடு படத்தை முடித்ததும் சிம்பு தனது அடுத்த படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை பிக்பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான இயக்குனர் சேரன் தான். அவர் சொன்ன கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கே அடுத்த படத்தின் கால்ஷீட்டை அவர் கொடுத்துள்ளாராம்.

ஒரு காலத்தில் பொற்காலம், பாரதி கண்ணம்மா, ஆட்டோ கிராப் போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுத்து வெற்றிகரமாக வலம் வந்த சேரன் அதன் பின் கொடுத்த தோல்வி படங்களால் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றார். வெளியே வந்த அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக அறிவித்தார். இதற்கிடையில் இப்போது சிம்புவை வைத்து அவர் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவருமே வேறு வேறு ஜானரில் படம் பண்ணக் கூடியவர்கள். இரண்டு பேரும் சேர்ந்தால் அந்த படம் எப்படி இருக்குமென ரசிகர்கள் இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.