ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 5, 2025
Home Blog Page 5659

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

0

பெற்றோரை தலைகுனிய வைக்கும் பள்ளி மாணவர்கள்! தலைநிமிர வேண்டிய வயதில் தாலிகட்டி சீரழியும் புள்ளீங்கோ..!! (வீடியோ)

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சீருடையில் இருக்கும் பள்ளி மாணவிக்கு பள்ளி சீருடை அல்லாத ஒருவர் தாலிகட்டும்போது அந்த மாணவி வெட்கத்துடன் சிரித்து ஏற்றுக் கொள்வது போல உள்ளது. அருகே சில மாணவர்களும் இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்திய சட்டப்படி 18 வயது நிரம்பிய பெண்களுக்கு மட்டுமே திருமணம் செய்ய உரிமை உண்டு. பதினெட்டு வயதிற்குள் செய்தால் அது சட்டப்படி குற்றமாகும்.

https://twitter.com/dinajith_thala/status/1230453058724933632?s=20

நவீன காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் இதுபோன்று தறிகெட்டு தவறான வழியில் சென்று பெற்றோரை தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன். குறைந்தபட்சம் வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத இவர்களுக்கு திருமணம் ஒரு கேடா..? என்று சமூக வலைதளங்களில் கோபத்துடன் பலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.

மாணவர்களிடம் “கனவு காணுங்கள்” என்று சொன்ன அப்துல்கலாம் பிறந்த மண்ணில் இதுபோன்ற அவலங்கள் நடப்பது அனைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. சமூக வலைதளத்தை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த பெற்றோர் முற்பட வேண்டும் இல்லையேல் இதுபோன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் அவரவர் வீட்டிலேயே அரங்கேற வாய்ப்புண்டு. டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு இணையத்தால் தினந்தோறும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

0

ஆஸ்கர் வென்ற படத்தைக் கேலி செய்த ட்ரம்ப்: பதிலடி கொடுத்த விநியோகஸ்தர் !

கடந்த வாரம் நடந்து முடிந்த 92 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற பாராசைட் படத்தை அமெரிக்க அதிபர் கேலி செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் `பாராசைட்’ என்ற தென் கொரிய திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, வெளிநாட்டுத் திரைப்படம் என நான்கு பிரிவுகளில் விருதைப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. முதன் முதலாக அமெரிக்காவில் தயாராகாத ஒரு திரைப்படம் நேரடியாக இத்தனை விருதுகளைப் பெறுவது இதுவே முதல் முறை. இதையடுத்து உலகம் முழுவதும் இந்த படத்தின் மீதான கவனம் குவிந்தது.

இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது கேலியாக விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,
தென் கொரியாவுடன் நமக்கு வர்த்தக பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராசைட் படத்துக்கு 4 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த படம் நன்றாக இருக்கிறதா? அதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. கொரியாவிலிருந்து ஒரு சிறந்த திரைப்படம்! சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன்’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார்.

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு அமெரிக்காவில் பாராசைட் படத்தை விநியோகம் செய்தவரான நியோன் ‘ட்ரம்ப்பால் சப் டைட்டிலைப் பார்க்க முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

0

முதல் நாளில் இந்தியா சொதப்பல்: மழையால் சீக்கிரமே முடிந்த போட்டி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாளில் 122 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

0

பிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் உருவான வரலாறு

மனிதன் தகவல்களை பரிமாறி கொள்ள மொழி அத்தியாவசியமாகிறது. ஆதி மனிதன் சகைககள் மற்றும் குறியீடுகள் மூலமாக தகவல்களை பரிமாறி கொண்டிருந்த நிலை மாறி மொழியின் மூலமாக தகவல்களை பரிமாற ஆரம்பித்தது முதல் மனித இனத்தின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் மனித வளர்ச்சியில் மொழி என்பது இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த உடனே பேசிய தாய் மொழி மூலமாக தான் அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. ஒருவர் பல்வேறு மொழிகளில் வல்லுனராக இருந்தாலும் அவருடைய சிந்திக்கும் மொழியானது தாய் மொழியாக தான் இருக்கும்.

இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தாய் மொழியை சிறப்பிக்கும் வகையில் தான் உலக தாய் மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி கடைபிடிக்கபடுகிறது.

தாய்மொழி தினம் உருவான விதம்:

* 1952 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வங்கமொழியை காக்க டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தினார்கள்.

* போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 மாணவர்கள் மொழிக்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்தனர்.

* இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்க யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

* இதனையடுத்து 2000 ஆம் முதல் பிப்ரவரி 21 ஆம் தேதியானது உலகெங்கும் வாழும் மக்களால் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.  

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதித்த சுதா கொங்கரா: தளபதி 65 குறித்த தகவல்

0

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்பது 99.9% முடிவாகிவிட்டது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் விஜய், ஜிவி பிரகாஷ், மற்றும் சுதா கொங்கராஆகிய மூவருக்கும் ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது

இந்த நிலையில் சுதா கொங்கரா, சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விஜய்க்கு ஒரு சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாகவும், இந்த நிபந்தனைகளை ஒப்புக்கொண்டால் மட்டுமே தான் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளாராம்

விஜய் உள்பட யாரும் தன்னுடைய திரைக்கதையில் தலையிடக்கூடாது என்றும் மாஸ் காட்சிகளை வற்புறுத்தக்கூடாது என்றும், தயாரிப்பு செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் படப்பிடிப்பு தளத்தில் சன் பிக்சர்ஸ் குழுவினர் யாரும் வரக்கூடாது என்றும் நிபந்தனை இருந்ததாக தெரிகிறது

இந்த நிபந்தனைகளை விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டதை அடுத்து, வரும் ஏப்ரல் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

0

ஏமாற்றிய விராட் கோலி ! 4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 88 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

இதனால் இந்திய அணி ஓரளவு நிலைபெற்ற நிலையில் மயங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஹனுமா விஹாரியும் ரஹானேவும் தற்போது களத்தில் உள்ளனர்.

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை

0

பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை

சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் 5 மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது.  இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று பாகிஸ்தானிற்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினார். இது பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோஷமிட்ட அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.  மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களை பாகிஸ்தானிற்கு ஆதரவாக பாஜகவினர் சித்தரித்து வரும் நிலையில் தற்போது இந்த பெண் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டது அவர்களுடைய சுயரூபம் வெளிப்பட்டதாகவே விமர்சிக்கபடுகிறது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

0

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி..? யாரெல்லாம் விரதம் இருக்கலாம்.! அரிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

சிவராத்திரியில் எல்லா சிவன் கோயில்களிலும் சிறப்பான வழிபாடுகள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

மாசி மாதம் வருகின்ற தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த இனிய நாளில் சிவனிடம் மனமுருகி வேண்டுதல் வைத்து விரதம் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது தெய்வ நம்பிக்கை.

விரதம் எப்படி இருப்பது..?

அதிகாலை எழுந்து பச்சை நீரில் குளித்து தூய ஆடைகளை உடுத்தி வீட்டு பூஜை அறையில் அமர்ந்து இரு கைகளை வணக்கம் வைத்தவாறு மேலே உயர்த்தி “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற பக்தி வாசகத்தை மூன்றுமுறை வாய்விட்டு கூறவும். பின்னர் கையை இறக்கிவிட்டு எம்பெருமானே இந்த நன்னாளில் நான் உமக்காக விரதம் இருக்கப் போகிறேன்’ என் விரதமும், வேண்டுதலும் எந்த தடங்களும் எந்த தடங்களும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொள்ளலாம்.

விரதம் தொடங்கிய பிறகு சிவனின் ஒரே நாமம் “ஓம் நமசிவாய” எனும் நாமத்தை விரதம் முடியும்வரை சொல்லிக் கொண்டே இருங்கள். விரதம் இருப்பவர்கள் மூன்று வேளையும் உண்ணாமல் இருப்பது நல்லது. முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது இரண்டு வேளை பால் பழம் மட்டும் எடுத்துக் கொண்டு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை விரதம் முடியும் வரை சொல்ல வேண்டும்.

காலை வீட்டில் விரதம் முடிந்து மாலை நேரம் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று நான்கு கால வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

முதல் காலம்: சோமாஸ்கந்தரை வழிபட வேண்டும்

இரண்டாம் காலம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்

மூன்றாம் காலம்: லிங்கோத்பவரை வழிபட வேண்டும்.

நான்காம் காலம்: சந்திரசேகர் என்னும் ரிஷபாரூடரை வழிபட வேண்டும்.

இதுபோன்று முறையாக சிவனின் நாமத்தை நினைத்து, நான்கு காலத்தை வழிபடுவதன் மூலமே உங்களுடையை விரதம் முழுமை அடையக்கூடும். இந்த விரதத்தை முழுமையாக கடைபிடித்தால், மன அமைதி, ஆன்மீக சிந்தனை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம், வீட்டில் செல்வம் பெருகுவது மற்றும் பல நல்ல விஷயங்கள் நடைபெறும். அகத்தின் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமே விரதம் இருக்கலாம்.

குறிப்பு: விரதம் இருக்கிறேன் என்கிற பெயரில் குடும்பத்தோடு அரட்டை அடிப்பது, கண்விழித்து சினிமா பார்ப்பது போன்ற செயல்களால் எந்த நன்மையும் கிடைக்காது.
ஆழ் மனதில் ஆடவல்லானை தரிசித்து அமைதியை பெறுவதே விரதம் பெறுவதற்கான வழிமுறையாகும்.

இது உங்கள் வீடு எனத் தெரியாது!வீட்டுச் சுவற்றில் திருடனின் மன்னிப்புக் கடிதம்

0

இது உங்கள் வீடு எனத் தெரியாது!வீட்டுச் சுவற்றில் திருடனின் மன்னிப்புக் கடிதம்

கேரளாவில் ஒரு வீட்டுக்குத் திருடப்போன திருடன் பொருட்கள் எதையும் எடுக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவாங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு நள்ளிரவில் திருடப் புகுந்துள்ளார் ஒரு திருடன். பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே கனக்கசித்தமாக உள்ளே சென்ற அவர் வீட்டை நோட்டம் விட்டுள்ளார். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக சில புகைப்படங்களைப் பார்த்துள்ளார். ராணுவ உடையில் அந்த வீட்டின் உரிமையாளர் இருப்பதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் பயந்து போன திருடன் அந்த வீட்டில் இருந்து எந்த ஒரு பொருளையும் திருடாமல் சென்றுள்ளான். அத்துடன் வீட்டு சுவற்றில் ‘இந்த வீடு ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறி தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’ என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

இதையடுத்து வீட்டு உரிமையாளர் வந்து அதைப் பார்த்த பின்பு போலீஸாருக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதைப் பார்த்த பொலிஸார் அந்த திருடனைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்துள்ளதா கொரொனா வைரஸ் பாதிப்பு? சீன அரசு அறிவிப்பு!

0

குறைந்துள்ளதா கொரொனா வைரஸ் பாதிப்பு? சீன அரசு அறிவிப்பு!

சீனாவில் வேகமாக பரவி 2000க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற கோவிட் 19 நோய் பரவல் தற்போது குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2118 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர்.

70000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்
Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர்.

சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது. இதற்கான பிரத்யேக மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் நோய் எதிர்ப்பு மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகிக் கொண்டே சென்று கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸால் 1749 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 394 பேர் மட்டுமே. இதனால் வைரஸ் பரவல் கணிசமாகக் குறைந்துள்ளதாக சீன சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் உண்மை நிலவரம் போக போகதான் தெரியும் என சொல்லப்படுகிறது.