சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5661

தண்டனையில் இருந்து தப்பிக்க தன்னைத் தானே காயபடுத்திக் கொண்ட குற்றவாளி ! நிர்பயா வழக்கில் புது திருப்பம் !

0

தண்டனையில் இருந்து தப்பிக்க தன்னைத் தானே காயபடுத்திக் கொண்ட குற்றவாளி ! நிர்பயா வழக்கில் புது திருப்பம் !

8 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய டெல்லி நிர்பயா கொலை மற்றும் கற்பழிப்பு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் ஒரு மைனர் சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதில் மைனர் சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் அவர்களின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பதாகவும் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் நிர்பயாவின் தாயார் மகளிர் அமைப்புகளுடன் சேர்ந்து போராடினார். இதற்கிடையில் சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிடவேண்டும் என தீர்ப்பு வெளியானது. இதை அடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் தூக்கில் இடப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து இதற்காக ஹேங்க்மேன் மற்றும் தூக்குக் கயிறு ஆகியவைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அப்போது குற்றவாளிகளில் ஒருவரின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டிருந்ததால் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. இதனால் குற்றவாளிகளின் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என நிர்பயாவின் தாயார் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.இதே வழக்கில் குற்றவாளிகளுக்குத் தனித்தனியாக தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என மத்திய அரசு கோரியது.

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அனைவருக்கு ஒன்றாகதான் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக் கூறியது. இந்நிலையில் நீதிமன்றம் மார்ச் 3 ஆம் தேதி நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவுப் பிறப்பித்துள்ளது. ஆனால் தண்டனையை தள்ளிப் போகச் செய்ய குற்றவாளிகளில் ஒருவரான வினய் என்பவர்  சிறை சுவரில் தலையை மோதி தனக்குத் தானே காயம் ஏற்படுத்திக் கொண்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டப்படி தேதி மாற்றப்படுமா அல்லது மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

0

கோயில் சுவர்களில் கட்சி விளம்பரம்! எதிர்த்து கேள்வி கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு?

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நேற்று சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டமும் எந்த அசம்பாவித மும் இல்லாமல் நடைபெற்று, கோவை போன்ற இடங்களில் விடிய விடிய போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்ற 22 ஆம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்து, அதற்கான சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரங்களை செய்து வருகிறது. இந்நிலையில், இந்து கோயில்களில் இருக்கும் சிலைகள் அசிங்கமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு திருமாவளவன் விமர்சனம் செய்திருந்தார். ஆனால், அவரது கட்சி தொண்டர்கள் தனது சுயநல அரசியல் தேவைக்காக இந்து கோயில் சுவர்களில் கட்சி விளம்பரங்களை வண்ணம் தீட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர்.

தேசம் காப்போம் மாநாட்டிற்காக வீட்டு சுவர்கள், பல்வேறு கட்டிடங்களில் விளம்பரம் செய்கிறார்கள். இந்து கோயில் சுவர்களில் எந்த அனுமதியும் கேட்காமல் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கேள்வி கேட்டால் வன்கொடுமை சட்டத்தால் பாதிக்கப்படுவோம் என்பதால் யாரும் கேட்பதில்லை என்றும், இவர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்து கோயில்களில் சுவர் விளம்பரம் செய்யும் விசிகவினர் கிறித்தவ தேவாலங்களிலோ, மசூதிகளிலோ விளம்பரம் செய்ய முடியுமா என்கிற கேள்வியை பலர் முன்வைக்கிறார்கள். கடந்த காலங்களில் இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என்று திருமாவளவன் சர்ச்சையாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

0

திருப்பூரில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் பலி! அரை தூக்கத்தால் நடந்த விபத்து!!

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டு சென்ற சொகுசு பேருந்து கட்டுபாட்டை இழந்த லாரியின் மீது மோதியதால் கோர விபத்து நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி 48 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டது. இதேபோல் டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்லர் லாரி வந்து கொண்டிருந்தது. இவ்விரண்டு வாகனங்களும் இன்று அதிகாலை நேரத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பலத்த வேகத்துடன் மோதிக்கொண்டன. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்த விசாரணையில் அதிகாலை நேரத்தில் வாகனம் ஓட்டிய லாரி டிரைவர் அரை தூக்கத்துடன் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கன்டெய்னர் லாரி சென்டர் மீடியன்களை உடைத்துக் கொண்டு எதிர் வழித்தடத்திற்கு சென்றதால் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி கோர சம்பவம் நடந்துள்ளது.

இந்த கோர சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !

0

3 பேரின் உயிரைக் குடித்த விபத்து!இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபரீதம் !

சென்னையில் நடைபெற்று வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்  போது விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியாகியுள்ளனர்.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து படத்தை முடிக்கும் பொருட்டு படக்குழு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் பரபரப்பாக படப்பிடிப்பினை நடத்தி வந்தது.

நேற்று நள்ளிரவு நடந்த படப்பிடிப்பின் போது ராட்சச கிரேன் ஒன்று அறுந்து விழுந்து உதவி இயக்குனர் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தால் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது தமிழ் சினிமா உலகில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை

0

இராணுவத்தில் பணி செய்ய விருப்பமா? வந்தாச்சு அப்டேட்…விண்ணப்பக் கட்டணம் இல்லை

உலக அளவில் நிலவும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வேலை வாய்ப்பின்மை.குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமான நாடுகளில் மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது வேலைவாய்ப்பின்மை.

சமீபத்திய ஆய்வுகளில் வேலையின்மையின் காரணமாக தற்கொலை நிகழ்வதில் இந்தியா முக்கிய இடம் வகிப்பதாக தெரிவிக்கின்றது.அந்தவகையிலே இந்தியாவில் ஒவ்வொரு வேலை வாய்ப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நெடுங்காலமாகவே தமிழக இளைஞர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்ற மிகவும் விருப்பம் கொண்டவர்களாக இருந்து வருகின்றனர்.

தற்போது இந்திய இராணுவத்தில் பணிசெய்ய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஸ்டோர் கீப்பர்,சிப்பாய்,எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக்தில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் இருந்தும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு 01-03-2020 முதல் 31-03-2020 வரை இனையவழியில் www.joinindianarmy.nic.in என்ற இனையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மைதானத்தில் 15-04-202 முதல் 25-04-2020 வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கடினமான உழைப்பால் மட்டுமே இந்திய இராணுவத்தில் சேரமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு

0

பிரபல வசனமான “அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல” திரௌபதி படத்தில் இருக்கா இல்லையா? 14 இடங்களில் கட் செய்த தணிக்கை குழு

பல்வேறு சாதி மறுப்பு அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பையும் சமாளித்து விட்டு பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவர்களின் அடுத்த படமான திரௌபதி வருகின்ற பிப்ரவரி 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.

தொடர்ந்து சாதி மறுப்பு பேசும் படங்களே தமிழ் திரையுலகில் வெளிவந்த நிலையில் முதல் முறையாக சாதிகள் உள்ளதடி பாப்பா என சாதியை ஆதரித்து வெளியான இந்த திரைப்படத்தின் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக இருப்பதாக கூறி சர்ச்சைகளுக்குள்ளான திரௌபதி படத்திற்கு தடை விதிக்க கோரி, அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மத்திய திரைப்பட தணிக்கை துறையிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் மறு தணிக்கை செய்யப்பட்டு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் திரௌபதி படத்தில் 14 இடங்களில் ஆடியோவில் கட் செய்யப்பட்டு படத்திற்கு யு/ஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில் பெண்களை திட்டமிட்டே காதலித்து ஏமாற்றும் நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் அண்மையில் வெளியாகி தமிழக மக்களிடையே பரபரப்பை பற்ற வைத்தது திரௌபதி படத்தின் டிரைலர் காட்சிகள். இதனையடுத்து காலங்காலமாக கலப்பு திருமணத்தின் மூலமே சாதியை ஒழிக்க முடியும் என்று கூறி வந்த போலி சாதி ஒழிப்பு போராளிகள் இந்த படத்தை கடுமையாக எதிர்க்க தொடங்கினர்.

மேலும் இதனையடுத்து திரௌபதி படம் தங்கள் சமூகத்திற்கு எதிரானது எனக் கூறி சம்பந்தப்பட்ட சாதி அமைப்பு மற்றும் போலி சாதி ஒழிப்பு போராளிகள் சார்பில் திரௌபதி படத்தை தடை செய்யுமாறு மத்திய தணிக்கைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த புகாரால் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரௌபதி திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமைதிரௌபதி திரைப்படம் மறுதணிக்கைக்காக சென்சார் குழுவினர் முன்னிலையில் திரையிடப்பட்டது.

நடிகை கவுதமி உள்ளிட்ட 9 பேர்கள் கொண்ட தணிக்கை குழுவினர் இந்த திரௌபதி படத்தை பார்த்தனர். இந்த குழுவில் 5 பெண்கள் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 2 மணி நேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சுமார் 14 இடங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்தனர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய அந்த 14 காட்சிகளிலும் ஆடியோவை மட்டும் கட் செய்ய அறிவுறுத்தியதாகவும், மேலும் 3 இடங்களில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கும் கட் கொடுத்ததாக கூறப்படுகின்றது.

குறிப்பாக இந்த படத்தில் அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல… என்று இளைஞர் ஒருவர் பேசும் வசனத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. மறுதணிக்கை செய்யப்பட்ட திரௌபதி படத்தில் இந்த வசனத்திற்கும் கட் கொடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாவது இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மூலமாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுவினர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிஅளித்துள்ளனர்.இவ்வாறு அனைத்து தடைகளையும் மீறி திரைக்கு வரும் திரௌபதி படத்தை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் முக்கியமான அந்த வசனம் தணிக்கை குழுவினரால் கட் செய்யப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து திரௌபதி படம் வருகிற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி, இந்த படம் எந்த சாதிக்கும் எதிரானது அல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கே தெரியாமல் மோசடியாக நடத்தப்பட்ட 3000 நாடக காதல் திருமணங்கள் குறித்து தான் இந்த படம் பேசப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு

0

முன் சீட்டில் உட்காரும் பெண்களுடன் டிரைவர்கள் பேசக் கூடாது: புதிய தடை உத்தரவால் பரபரப்பு

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு பேருந்துகளில் இனிமேல் முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக்கூடாது என கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசு பேருந்துகளில் டிரைவர்கள் முன்சீட் மற்றும் பேனட்டில் பெண்களை டிரைவர்கள் உட்கார வைத்துக் கொண்டு அவர்களுடன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்குவதால் கவனக் குறைவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதாக பல புகார்கள் எழுந்து உள்ளது. இதனை அடுத்து முன் சீட்டில் உட்காரும் பெண்களிடம் டிரைவர்கள் பேசக் கூடாது என்றும், பேனட்டில் யாரையும் உட்கார வைக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக இயக்குனர் கூறியதாவது: அரசு பஸ்கள் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பஸ்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கவனக்குறைவாக வாகனங்களை இயக்கக்கூடாது உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். குறிப்பாக முன்சீட்டில் உட்காரும் பெண்களிடம் பேசக்கூடாது, பேனட்டில் யாரையும் உட்கார வைக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்ல்

ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் கத்தியால் குத்தி கொலை! ஓட்டல் வெளியே நடந்த கொடூர சம்பவம்..!!

0

ஜொமாட்டோ டெலிவரி ஊழியர் கத்தியால் குத்தி கொலை! ஓட்டல் வெளியே நடந்த கொடூர சம்பவம்..!!

மும்பையில் போவாய் நகர பகுதியில் ஜொமோட்டோ ஊழியர் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜொமாட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையில் இருந்த அமோல் பாஸ்கர் என்ற இளைஞர் வழக்கம்போல தனது ஆர்டருக்காக ஓட்டல் வெளியே காத்திருந்தார். ஓட்டலுக்கு வெளியே தள்ளுவண்டியில் பழக்கடை வைத்திருந்த தினேஷ் சிங் என்பவருடன் முதலில் சிறிய பேச்சுத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் கடும் போபமடைந்த தினேஷ் சிங் பழத்தை அருக்க வைத்திருந்த கத்தியை எடுத்து கோபத்தில் அமோல் பாஸ்கரை கொடூரமாக குத்தினார். நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயப்பட்ட அமோல் அங்கேயே சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அமோல் பாஸ்கரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த தகவலை கேட்டு தினேஷ் சிங் தனது சொந்த ஊருக்கு தப்பியோட முயற்சித்தபோது, குர்லா ரயில் நிலையத்தில் ஏற்கனவே போலீசார் உஷாராக இருந்ததால் அவர்களிடம் மாட்டிக் கொண்டார். தினேஷ் சிங் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அவரது நண்பர் ஜிதேந்தர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதியப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், ஏற்கனவே இருவருக்கும் சிறிய சண்டைகள் நடந்ததாகவும் அதன் தொடர்ச்சிதான் இந்த கொலையில் முடிந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்த 60 பேர் கைது: என்ன காரணம் தெரியுமா?

0

அவசரமாக ரயில்வே டிக்கெட் எடுப்பவர்கள் தட்கல் மூலம் டிக்கெட்டை எடுத்து வரும் நிலையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து போய் விடுவதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதில் சட்டவிரோதமான சாப்ட்வேர்களை பயன்படுத்தி ஏஜென்டுகள் ஒருசிலர் தட்கல் டிக்கெட்டை எடுப்பதால் தான் இந்த பற்றாக்குறை ஏற்படுவதாக ரயில்வே துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை கட்டுப்பாட்டு ஆணையம், சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்து 60 ஏஜெண்டுக்களை கைது செய்தனர். இதனை அடுத்து இனிமேல் ரயில் பயணிகளுக்கு எளிதாக தட்கல் டிக்கெட் கிடைக்கும் என்று ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படிப்பட்ட மென்பொருள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் 60 ஏஜென்ட்களிடம் இருந்து நடைபெறும் விசாரணையில் மேலும் ஒரு சிலர் இதே போன்று முறைகேடாக டிக்கெட் எடுக்கின்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஏஜெண்டுக்கள் ரூ. 50 கோடி முதல் 100 கோடி வரை தட்கல் டிக்கெட் எடுத்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜப்பான் கப்பலில் சிக்கிய பயணிகளுக்கு விடுதலை: புதிய தகவல்

0

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பல் ஒன்றில் சுமார் 3000 பயணிகள் பயணம் செய்த நிலையில் அவர்களில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அச்சம் ஏற்பட்டதால் அந்த கப்பலை எந்த துறைமுகமும் அனுமதிக்கவில்லை. இதனால் நடுக்கடலில் சுமார் 3000 பயணிகளுடன் சென்ற கப்பல் கடந்த இரண்டு வாரங்களாக நின்று கொண்டிருந்தது

இந்த நிலையில் 14 நாட்களுக்கு பின்னர் அந்த கப்பலில் இருக்கும் பயணிகள் ஒரு சிலரை வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பானின் மருத்துவ குழு ஒன்று கப்பலுக்குள் சென்று அங்கிருந்த பயணிகளிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கின்றதா என கண்டறியப்பட்டு வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு மீதமுள்ளவர்களை உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்ற ஜப்பான் அரசு முடிவு செய்தது.

இதன் காரணமாக இன்று முதல் கட்டமாக சுமார் 500 பேர் வெளியேறுவார்கள் என்றும் படிப்படியாக கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லாதவர்கள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்த கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழர்கள் உள்பட பயணிகள் அனைவரும் விடுதலை கிடைத்துவிட்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்