சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5667

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்!! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

0

காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் போராட்டம்! திரெளபதி படத்தை நினைவு கூறும் சம்பவம்!!

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த நாடக காதலன் வீட்டு முன்பு இளம்பெண் பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்த நாடு பகுதி அருகே காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி நாடக காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரத்தநாடு அருகேயுள்ள சோழகன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புகழ் என்னும் பெயர் கொண்ட இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் மிகவும் பிடித்துப் போன காரணத்தால் வீட்டில் எதுவும் சொல்லாமல் இருவர் வீட்டு பெற்றோருக்கு தெரியாமல் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இதனையடுத்து, வேலையின் காரணமாக காதலன் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிது. பின்னர் தனது காதலனுக்கும் வேறொரு பெண்ணிற்கும் திருமணம் செய்ய இருப்பதாக அருணாவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

சமீப காலத்தில் காதலித்து பெண்களை ஏமாற்றும் நாடக காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நாடக காதல் சம்பவங்களை மையமாக வைத்து திரெளபதி என்ற திரைப்படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

0

பொய்யான டுவிட்டர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி! பாமகவினர் நகைப்பு!!

திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னையில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் இணையத்தில் வீடியோ மற்றும் படங்களாக மிக வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து திமுகவின் எம்பி டாக்டர்.செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னை போராட்டத்தில் நடந்த வன்முறைக்கு அதிமுக மற்றும் பாமக கட்சிகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டி டுவிட் செய்திருந்தார்.

டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இதற்கு காரணம் ஆகிய அதிமுக அரசு மற்றும் ராமதாஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாஜக அமல்படுத்தி CAA சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக மற்றும் பாமக ஆதரவு வாக்கின் விளைவுதான் இன்று தமிழகம் சந்திக்கும் இந்த நிலைக்கு காரணம் என்று பதிவு செய்திருந்தார். அதில் ஒரு இளைஞர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இருப்பது போற்றும் இன்னொரு படத்தையும் தவறாக பயன்படுத்தி இருந்தார். இந்த இரண்டு படங்களுமே போராட்டத்திற்கு சம்பந்தம் இல்லாத படங்களாக பின்பு ஆதாரத்துடன் விளக்கப்பட்டது.

பின்னர், தான் டுவிட்டரில் பதிவிட்டது உறுதி செய்யப்படாத படங்கள்தான் போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் அல்ல என்றும், விபத்தில் காயம் பட்டவர் என்றும் அறிந்த பிறகு அப்பதிவை நீக்கிவிட்டு மறுபதிவில் கவனம் இல்லாமல் பதிவிட்டதாக ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். ஒரு எம்பியாக இருந்து கொண்டு உறுதி செய்யாத தகவலை பதிவு செய்யலாமா என்று பலர் கேள்வி எழுப்பினர். சிலர் பாராட்டியும் வருகின்றனர்.

இவரின் செயலுக்காக அதிமுக மற்றும் பாமக கூட்டணியினர் இடையே நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

0

பள்ளி மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்? அமைச்சர் தொகுதியில் நடந்த அவலம்!!

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் சந்தை ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். படிக்க செல்லும் இடத்தில் மாணவிகள் துடைப்பத்துடன் பாத்ரூம் கழுவும் அவலம் அரங்கேறியுள்ளது.

இப்பள்ளியின் மாணவிகள் சீருடை அணிந்து கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் புகைப்படங்களாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ள நிலையில், தமிழக மாணவர்களை கழிவறை கழுவுதல் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்று சிலமுறை எச்சரித்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் முற்றிலும் தடுக்க எந்த நடிவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இந்த சம்பவம் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் சொந்த மாவட்டத்தில் நடந்ததாகும். சில தினங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்விற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றபோது, ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து காலில் இருந்த செருப்பை கழட்டிய சர்ச்சையான விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அந்த நிகழ்வுக்காக அமைச்சர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திண்டுக்கல் பள்ளி மாணவர்களை ஆசரியர் ஒருவர் சுத்தம் செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் கண்டித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதே கல்விதான் என்பதை தெரிந்தும் இதுபோன்ற தேவையற்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது மிகத்தவறான விஷயம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

0

ரஜினியை வீதிக்கு இழுக்கும் நெட்டிசன்கள்! டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

சென்னை: நடிகர் ரஜினியை போராட்ட களத்திற்கு வருமாறு இணையத்தில் கோரிக்கை வலுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய ரஜினிகாந்த், போர் வரும் நேரத்தில் நிச்சயம் போராடுவோம் என்று பேசியிருந்தார். இதன்பிறகு துக்ளக் பொன்விழாவில் பெரியார் குறித்து பேசிய பேச்சுகளும் சர்ச்சையான விவாதங்களை உண்டாக்கியது.

இந்நிலையில், சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். கைது செய்யபட்ட போராட்டகாரர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். தனது உரிமைக்காக போராடும் வேளையில், மேடை மட்டும் வசனம் பேசிவிட்டு களத்திற்கு வராத ரஜினியை வீதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இன்று டுவிட்டரில் வீதிக்கு வாங்க ரஜினி என்றும், போராட வா ரஜினி தாத்தா என்றும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ திருத்த சட்டத்தை ஆதரித்த காரணத்தால் தற்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. போராட்டம் நேற்றும் கலைந்துவிட்ட நிலையில் இன்று மீண்டும் சில இடங்களில் பாஜகவையும், ரஜினியையும் விமர்சித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!

0

ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் சிறையில் வெளிவந்து தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், குல்பர்கா எனும் மாவட்டத்திலுள்ள போஸ்கா எனும் பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷ் பாட்டீல் என்பவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றார். தனது நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் நண்பரை அவரது மனைவியோடு சேர்ந்து கொலை செய்ததுதான் அவர் மீதான குற்றம்.

சுபாஷ் 14 ஆண்டுகளாக, சிறையில் இருந்த போது தனது குற்றத்தை நினைத்து வருந்தி அதிலிருந்து மீள முடிவு செய்துள்ளார். மருத்துவப் படிப்பை மேற்கொண்டதால் சிறையில் உள்ள மருத்துவர்களுக்கு அவர் மருத்துவ உதவிகளை செய்துள்ளார். அப்போது அவருக்கு வெளியில் சென்று மருத்துவப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற யோசனை உதித்துள்ளது. இதனையடுத்து நன்னடத்தைக் காரணமாக 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ஒவ்வொரு துறவிக்கும் கடந்தகாலம் ஒன்று உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் எதிர்காலம் உண்டு’ எனக் கூறினார். மேலும் ’ ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகத் தொடர்ந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பேன்’ எனக் கூறி இருந்தார்.

ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பைத் தொடர்வதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளிக்க 2019 ஆம் படிப்பை முடித்தார். அதன் பிறகு ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக வேலை செய்து வந்தார். தற்போது அந்த பயிற்சியையும் முடித்து மருத்துவர் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

’சிறையிலிருந்து வெளியேறிய பின் மீண்டும் நல்ல வாழ்க்கையை தொடர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன’ என கூறியுள்ளார் முன்னாள் கைதியும் இன்னாள் மருத்துவருமான சுபாஷ்.

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

0

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளராக விளங்கி வரும் பூம்ராவின் சமீபத்தைய சொதப்பல்கள் குறித்து சக பந்து வீச்சாளர் ஷமி ஆதங்கமாகப் பேசியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

சமீபத்தில்தான் காயத்தில் இருந்து மீண்ட பூம்ரா, நியுசிலாந்து தொடரில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். மூன்றாவது டி 20 போட்டியில் களமிறங்கிய அவர் 5 ஆவது டி 20 போட்டியில் மட்டுமே 3 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பந்து வீசினார். அதே போல ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் அவரது பவுலிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூட பூம்ரா களத்தில் தயக்கம் இல்லாமல் ரிஸ்க் எடுத்து பந்து வீச வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இந்நிலையில் பூம்ராவின் சக வீரரான முகமது ஷமி, இது குறித்து வேறு கோணத்தில் பேசியுள்ளார். அவர் ‘வெறும் 3 அல்லது 4 போட்டிகளை வைத்து நீங்கள் பூம்ராவின் திறமையை சந்தேகப்பட கூடாது. கடந்த ஆண்டுகளில் நாம் அவரால் எத்தனை போட்டிகளை வென்றுள்ளோம் எனப் பார்க்க வேண்டும். நீங்கள் பும்ரா திறமை குறித்து நேர்மறையாகச் சிந்தித்தால், அது அவருக்கு நல்லவிதமாக அமைந்து, அவரின் நம்பிக்கையை மேலும் வளர்க்கும். ஒரு விளையாட்டு வீரர் காயம் படும் போது அவரின் நேர்மறையான விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

0

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

ஹைட்டி நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பதினைந்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் தலைநகர் அருகே உள்ள பெர்மேட் என்னும் நகரில் “சர்ச் ஆப் பைபிள்” என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் சமூக சேவையின் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அங்கு தங்கி இருந்தனர்.

இரவு நேரத்தில் ஜெனரேட்டர் மற்றும் இன்வெட்டரில் எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டு வெளிச்சம் இல்லாமல் போனது. இதன் காரணமாக இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியர் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர். இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக கட்டடத்தில் தீ பற்ற ஆரம்பித்து அறை முழுக்க வேகமாக பரவியது.

தீப்பற்றிய சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. வேகமாக பரவிய தீயில் 15 சிறுமியர் உடல் கருகி பலியாகி இருந்தனர். பலியான குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிறுவர்கள் இறந்திருக்க கூடும் என்ற தகவல் சொல்லப்படுகிறது.

மேலும், தீ விபத்தில் இறந்தவர்கள் 2 லிருந்து 18 வயதிற்கு உள்ளானவர்கள் என்று தகவல் தெரிய வந்துள்ளது. கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பமாகி வெளிப்பகுதியில் கரும்புகை படிந்து காணப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகமும் சூழ்ந்துள்ளது.

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

0

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை ராணுவம் பல்வேறு வகையில் தமிழர்களின் மீது கொடுமை நடத்தினர். இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டு போரில் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவில் நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் திடீர் உத்தரவை சற்றும் எதிர்பாராத இலங்கை அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை அழிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு எதிராக நடத்திய உச்சகட்ட போரில் இலங்கை ராணுவத்தினர் பல்வேறு பிரிவுக்கு தலைமை வகித்தனர். அதில் 58 வது இராணுவ பிரிவுக்கு தலைமை ஏற்று சவேந்திர சில்வா வழி நடத்தினார். இந்த போரின் கடைசி 30 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், இலங்கையின் ராணுவ தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வா சமீபத்தில் அமெரிக்கா பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு கொடுமைகளை நடத்தி மனித உரிமை மீறலில் சவேந்திர சில்வா ஈடுபட்ட ஆதாரங்கள் ஐநா மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அமெரிக்காவிற்குள் சவேந்திர சில்வா நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மைக் பாம்பியோ” முக்கிய உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஈழப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துள்ளார். இது மிகப்பெரும் குற்றம் என்பதால் அவரை அமெரிக்காவில் நுழையத் தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை வெளியுறவுத் துறையின் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் சவேந்திர சில்வாவை பற்றிய உண்மை செய்திகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எங்கள் நாட்டு ராணுவ தளபதியை தீர்மானிக்கும் அதிபரின் சிறப்பு உரிமை மற்றும் அதிகாரத்தை அமெரிக்கா கேள்வி கேட்டது வருந்தத்தக்கது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

0

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

தெலங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் இறந்தது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி வியாழக் கிழமை திருமணமும் அதற்கு முந்தைய நாள் வரவேற்பும் நடந்துள்ளது. திருமணம் நடக்கும் போதே மிகவும் சோகமாக இருந்த அவர் சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு வந்ததுதான் என சொல்லியுள்ளனர்.

மருத்துவர்கள் கூறியதைக் கேட்ட கணேஷின் குடும்பத்தினர் மற்றும் புது மனைவி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தங்களது மகனின் மரணம் தொடர்பாக பேசிய கணேஷின் பெற்றோர்,  வரவேற்பின் போது பாடல்கள் என்ற பெயரில் இரைச்சல் அதிகமாக இருக்கும் வண்ணம் பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன. அதைக் கேட்டதில் இருந்துதான் அவன் களைப்பாகவும் பதற்றமாகவும் காணப்பட்டான் எனக் கூறியுள்ளனர்.

உறுதியாக அதுதான் மாரடைப்பு வந்ததற்கு காரணம் என சொல்ல முடியாது என்றாலும், திருமண வீடுகளில் இதுபோல அளவுக்கு அதிகமாக பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

0

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நேற்று அனிருத் இசையில் விஜய் பாடி வெளியான குட்டிக்கத பாடல் வேறொரு தமிழ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் பாடல் பரவலான கவனத்தை பெற்றுள்ள நிலையில் இப்போது வேறொரு பாடலில் இருந்து இந்த பாட்டு காப்பி அடிக்கப்பட்டதாக புது விமர்சனம் எழுந்துள்ளது.

ராமநாராயணன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ராஜகாளியம்மன். இந்த படத்தில் இடம்பெறும் பாடலான சந்தன மாளிகையில் தூளி கட்டி போட்டேன் என்ற பாடலின் ராகத்தில் இருந்துதான் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை வடிவேலு ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு பாடலின் மெட்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும் குட்டி கத பாடலை காப்பி என சொல்ல முடியாது எனத் தரப்பும் வாதிட்டு வருகிறது.