சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5668

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

0

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் 29 ஆம் தேதி ஐசிசியின் உயர்மட்ட குழுவின் கூட்டம் நடைபெற  இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது.

இதனால் கங்குலிக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் அவர் ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகும். ஒருவேளை ஐபிஎல் தொடக்க விழா மட்டும் முன்னதாகவே நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

0

காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இசுலாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை ஸ்டாலின் கண்டித்து பேசியுள்ளார். பிப்ரவரி 14 காதலர் தின இரவை கறுப்பாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

CAA, NRC, NCR ஆகிய மூன்று சட்ட திருத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இசுலாமியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தமிழக உடனடியாக இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடியை நடத்தி, 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர், போராடிய இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதாக கூறப்பட்டதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது. இருப்பினும் சிலர் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களிடம் காவல்துறையினர் மீண்டும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜனநாயக ரீதியாக போராடியவர்களை திட்டமிட்டு தடியடி நடத்தியதாகவும், அமைதியின் வழியில் போராடிய மக்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை தாக்கியுள்ளதாகவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

0

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார்.

இணையத்தில் வெளியான வீடியோ குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, சீமான் சிரித்து சமாளித்து மழுப்பினார். செய்தியாளர்களிடம் மழுப்பியதற்கு பதிலடி தரும் வகையில் சீமானை பற்றி மீண்டும் ஒரு வீடியோவை நடிகை வெளியிட்டார். அதில் தன்னைப்பற்றிய தவறான எண்ணம் பரவி இருப்பதாகவும் அது எல்லாமே பொய் என்று நிரூபிக்கவும் நான் தொடர்ந்து பேசுவேன் என்று சீமானை விமர்சனம் செய்துள்ளார்.

இணையத்தில் ஏற்படும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் சீமானும் அவருடைய தம்பிகளும் திணறி வருகின்றனர். விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் காதலை பற்றிய வீடியோ ஒன்றை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் காதலில் ஒன்றுமில்லை ஆனால், காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமே இல்லை. காதலுக்காக யாரும் சாக கூடாது, அதேபோல் யாரும் காதலிக்காமல் சாக கூடாது என்றும் பேசியுள்ளார்.

தன் மீது எழுந்த அந்தரங்கை சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க சீமான் இதுபோல் பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் வைக்கப்படுகின்றன. சீமானுக்கு ஆதரவாக இருந்த பலர் தற்போது அவரிடம் இருந்து சற்றே விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குனர் சேரன் சீமானால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. நடிகை விஜயலட்சுமியால் நாம்தமிழர் கட்சிக்கு வந்திருக்கும் சோதனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

0

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே மாற்றிய அவர் தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனே போலிஸிடம் தகவல் சொல்ல அங்கு விரைந்துள்ளனர் போலீஸார். போலீஸார் வரும் வரையும் அவர் தூங்கிக் கொண்டே இருந்துள்ளார்.

போலிஸார் அவரைத் தட்டி எழுப்பியதும் அதிர்ச்சியுடன்  முழித்துள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் விசாரணையை மேற்கொள்ள தனது கதையை சொல்லியுள்ளார். , மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த அவரது பெயர் சஞ்ஜீவ். திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கைக்குக் கிடைத்த பொருட்களைத் திருடிய அவர் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக மதுவகைகளைப் பார்த்து சபலப்பட்டுள்ளார். அவைகளை குடித்த அவர் அப்படியே போதையாகி அங்கேயே தூங்கியுள்ளார்.

தென்னாப்ரிக்கா உடனான 2 வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

0

தென்னாப்ரிக்கா உடனான 2 வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது இங்கிலாந்து அணியில் ராய் மற்றும் பட்லர் தொடக்க வீரராக களமிறங்கினர் பட்லர் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதிரடியாக ஆடிய ராய் 40 ரன்களிலும் பேர்ஸ்டோ 35 ரன்னிலும் வெளியேறினர். மோர்கன் 27 ரன்னிலும் மொயீன் அலி 11 பந்துகளில் 39 ரன் விளாசினார்.

சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில் அந்த அணியின் கேப்டன் டிகாக் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 22 பந்தில் 65 ரன் குவித்தார். பவுமா, மில்லர் ஆகியோர் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வாண்டர் டெசன் ஆட்டமிழக்காமல் 43 ரன்களுடன் இருந்தார். 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், ஜோர்டன், டாம்கரண் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

0

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலும் ஷம்மு சமூக வலைதளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியானப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அதன் பின்னர் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஆனால சமூக வலைதளங்களில் அவருக்கு வேறு முகம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிரும் பழக்கம் கொண்டவர் ஷாலு.

அதில் ஆபாசமாகவும் கேலியாகவும் பேசும் ரசிகர்களுக்கு கடுமையான பதிலும் கொடுப்பார். இப்படியாக சமூகவலைதளத்தில் அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் அவர். இந்நிலையில் சாதா நாட்களிலேயே புகைப்படங்களாக போட்டுக் கொண்டு இருக்கும் அவர் காதலர் தினத்தன்று சும்மா இருப்பாரா? கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார். அதில் உடலில் ஆடைகள் இல்லாமல் ரோஜா மலர்களால் அந்தரங்க பகுதிகளை மட்டும் மறைத்தபடி உள்ளார் அவர். மேலும் அந்த புகைப்படத்தோடு ‘வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது… இருந்தாலும் நாம் காதலர் தினத்தைக் கொண்டாடாமல் இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல தங்கள் ஆபாச கமெண்ட்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஒருவர் மிகவும் ஆபாசமாக ‘அந்த ரோஜாக்களை அகற்றிவிட்டால் நாங்கள் இன்னும் சந்தோஷமாக பார்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அதற்கு ஷாலுவின் தரப்பில் இருந்து பதில்வரவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

0

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பிறப்பித்த பதவியேற்பு ஆணையில் பல்வேறு அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சத்யேந்தர் ஜெய்ன், மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெஹ்லோட், கோபால் ராய், இம்ரான் ஹூசைன் மற்றும் ராஜேந்திர கெளதம் ஆகியோர் பதவியேற்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசின் சோனியா காந்தி மற்றும் பல முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பாஜக குறிப்பிட்ட சில இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

0

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது டி 20 டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 2 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பின் வந்த பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரும் அதிரடியில் புகுந்தனர். பேர்ஸ்டோ 35 ரன்களிலும் ராய் 40 ரன்களிலும் அவுட் ஆகினர். கேப்டன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடிய ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் கடைசியாக இறங்கிய மொயின் அலி 11 பந்துகளில் 39 ரன்களை சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஒவர் முடிவில் இங்கிலாந்து அணி 204 ரன்களை சேர்த்து 7 விக்கெட்களை இழந்திருந்தது.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 22 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் அடங்கும். அதன் பின் வந்த வீரர்கள் சீராக விளையாட வெற்றி தென் ஆப்பிரிக்கா கைவசம் இருந்தது.

ஆனால் இடையில் எதிர்பாராத விதமாக சில விக்கெட்கள் விழுந்ததால் கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரை டாம் கரன் வீச 4 பந்துகளில் அதிரடியாக 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்த வேளையில் கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட்கள் விழுந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

0

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது.

தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய நேரத்தில் பந்தய நேரத்தை கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நூறு மீட்டருக்கும் சேறு கலந்த தண்ணீரில் எருமை மாட்டுடன் வேகமாக ஓட வேண்டும் என்பது விளையாட்டின் விதிமுறையாகும். இவர் 142.5 மீட்டர் தொலைவை 13.62 நொடியில் ஓடி சாதித்துள்ளார். இந்த தூரத்தை தரையில் ஓடுவது எளிது, தண்ணீர் கலந்த சேற்றில் எருமை மாட்டுடன் ஓடுவது மிக சவாலான விஷயமாகும்.

மேலும், பந்தயத்தில் 100 மீட்டர் ஓட வேண்டிய இலக்கை வெறும் 9.55 நொடிகளில் கடந்து சாதித்துள்ளார். இது உலக மின்னல் மனிதன் என்று சொல்லப்படும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்டின்” வேகத்தை விட அதிகம். உசைன் போல்ட் 100 மீட்டர் தொலைவை 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. போல்ட்டின் உலக சாதனையை ஸ்ரீனிவாஸ் கவுடா முறியடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டு மாடுகளை ஏர் போல பூட்டி சகதி நிறைந்த தண்ணீரில் வேகமாக விரட்டி குறைந்த நொடிகளில் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கம்பளா என்னும் வேளாண்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த பந்தய போட்டியில் மிக கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மங்களூரை ஆண்ட அலுப்பா மன்னர்கள் காலத்தில் இருந்தே கம்பளா போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

0

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா இடங்கள், பீச், மால்கள், தியேட்டர்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் காதல் பரிசுகளை வாங்கி அன்பை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவரை விரட்டிச் சென்று மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலிக்கும் மனைவிக்கும் இடையே மாட்டிக் கொண்டு எந்த பக்கம் தப்பிப்பது என தெரியாமல் அந்த இளைஞர் விழிபிதுங்கி நின்றார்.

கணவனின் துரோக செயலை பொறுக்க முடியாத மனைவி, சாலையிலேயே வெளுத்து வாங்கியுள்ளார். சண்டை அதிகரிக்கவே அங்கு லேசான கூட்டம் கூடியது. இச்சம்பவத்தை அறிந்த போக்குவரத்து போலீசார் பிரச்சினை நடக்கும் பகுதிக்கு உடனடியாக வந்து சிக்கலை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் அப்பெண் பேசியதாவது: எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர், தனது கணவர் மனம்மாறி தவறான பாதையில் போவதாக அப்பெண் குற்றம் சாட்டினார். இதனையடுத்து போலீசார் கணவனிடம் விசாரிக்கையில், கணவன் கூறியதாவது : இன்று காதலர் தினம் என்பதால் எனது காதலியை வெளியே கூட்டிச் சென்றேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் அவரின் மனைவியிடம் அதிக கோபம் வெளிப்பட்டது.

மேலும், பிரச்சினை எளிதில் தீர்க்க முடியாத காரணத்தால் கணவன், மனைவி, காதலி உட்பட மூன்று பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இருக்கும் போதே காதலியுடன் ஊர் சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.