சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5670

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

0

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு பாஜகவினரின் பேச்சுகளேக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக அமித்ஷா பதவியெற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜக அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தோல்விக்கான காரணம் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ‘ எங்கள் தலைவர்கள் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் எனப் பேசியது மக்களுக்குப் பிடிக்கவில்லை, மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களிடம் பயங்கரவாதி போல சித்தரித்ததையும் அவர்கள் விரும்பவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

0

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் ராகுலைப் பற்றி சக வீரரான தவான் வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தோனிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்ததை அடுத்தும் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்தும் கே எல் ராகுல் பின் வரிசை ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இந்த எதிர்பாராத சூழ்நிலை நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான ராகுல் பின் வரிசையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் அவர் சேர்த்துள்ள மொத்த ரன்களே அதற்கு சாட்சி. 8 இன்னிங்ஸ்களில் அவர் 428 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடைசி ஒருநாள் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி சதமடித்து அசத்தினார். அதனால் இப்போது நம்பிக்கை அளிக்கும் பின் வரிசை வீரராக மாறிவரும் அவரை விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சக வீரரான ஷிகார் தவான் ராகுலைப் பற்றி ‘அவர் 12 ஆவது இடத்தில் இறங்கினாலும் சதமடிக்கும் திறமை கொண்டவர்’ எனக் கூறியுள்ளார். காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட தவான் விரைவில் அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

0

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து ஓடியதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலையில் திடீரென பால் வடியத் தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து வருகின்றனர். சாலையில் சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் அருகே சென்று உற்று பார்க்கின்றனர். மரத்தில் இருந்து பால் எப்படி வரும் என்று யோசித்தபடியே இயற்கையிடம் லயித்து போயுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று மரத்தில் பால் வடியும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்நிகழ்வை பலர் செல்போன் மூலம் போட்டோவும், வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் பக்கத்து கிராம மக்களுக்கு பரவியதால் வேப்ப மரத்தின் அருகே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. வழக்கமாக இதுபோன்று மரத்தில் பால்வடிந்தால் அந்த மரத்தில் சாமி இருப்பதாக கருதி வெட்டாமல் அங்கு பூஜை நடத்தி வழிபாடுகளும் நடைபெறுகிறது.

அந்த காலத்தில் இருந்தே மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காக மரத்தில் சாமி இருப்பதாக கூறி மரத்தையும், இயற்கையையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள். மரங்கள்தான் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

0

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் வந்தாலே பலருக்கு அந்த நாள் முழுக்க குதூகலமாக அமைந்துவிடுகிறது. இந்த காதலர் தினம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றில் தேடிப்பார்ப்போம்.

காதல் செய்யும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்த விரும்புவார்கள். காதலர் தினம் பற்றிய வரலாற்று சான்றுகள் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் கிடைத்துள்ளதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சி நடந்தபோதுதான் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தன்னுடைய நாட்டில் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில், இனி யாரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசனின் உத்தரவை எதிர்த்து அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் என்பவர் ரகசியமான காதல் திருமணங்களை நடத்தி வைத்தார். அரசனின் உத்தரவை மீறியதன் விளைவாக பாதிரியார் வாலண்டைன் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு அவருக்கு மரண தண்டைனைக்கான நாளும் அரசனால் குறிக்கப்பட்டது.

சிறையில் இருந்த வாலண்டைனுக்கும் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் உருவானது. இருவரும் சிறையில் இருந்தாலும் இவர்களின் காதல் சுதந்திர பறவையாகவே இருந்தது. இந்த காதல் விவகாரம் சிறைக்காவலருக்கு தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தார். இருவரும் பிரிந்த தூரமான நிலையில் இருவருக்குமான காதல் மிக நெருக்கமாகியது  தனது காதலியை பார்க்கமுடியாத வாலண்டைன் காதலி அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்தினை அட்டை மூலம் எழுதி அனுப்பினார்.

வாழ்த்து அனுப்பிய வாலண்டைனுக்கு அதே நாளே, கல்லால் அடித்தும் கொடுமையான சித்ரவதை செய்து அவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். வாலண்டைன் கொல்லப்பட்ட தினம் கி.பி.270 பிப்ரவரி 14ம் நாளாகும். இந்த நாளைதான் வாலண்டைன் தினம் அல்லது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் இறந்தாலும் உண்மையான காதல் ஒருபோதும் சாகாது என்பதற்கு இவர்களின் அன்பே சாட்சியாகும்.

சூரரைபோற்று நாயகியின் சூடேற்றும் படங்கள்! இப்படியா போஸ் கொடுப்பது!!

0

சூரரைபோற்று நாயகியின் சூடேற்றும் படங்கள்! இப்படியா போஸ் கொடுப்பது!!

தமிழ் சினிமாவின் வெற்றிப்படமான இறுதிச் சுற்று படத்தின் இயக்குனர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கொழுக் மொழுக் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் கருணாஸ், மோகன்பாபு உள்ளிட்ட பலர் திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக நாயகி அபர்ணா கொடுத்துள்ள அநாகரிகமான போஸ் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைப்பதாக இருக்கிறது. கேரளா புடவையில் இருப்பது அழகாக காட்டினாலும் மற்ற இரண்டு படங்கள் சற்று இறுக்கமாக இருப்பது போல் முன்னும் பின்னும் எடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவிற்கு கவர்ச்சி அவசியம்தான் என்றாலும் ஆரம்பத்திலேயே இப்படியா என சிலர் சிலாகிக்கின்றனர். மேலும் சூர்யாவின் படம் கோடை விடுமுறையில் கொண்டாட்டம் காண திரைக்கும் வரும் என்று கூறப்படுகிறது. விஜயின் மாஸ்டர் படத்திற்கும் சூர்யாவின் படத்திற்கும் போட்டி வந்தாலும் வரலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைக்கள் மின்னி மறைந்துள்ளனர். அந்த வகையில் அபர்ணா தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் தனித்த இடம் பிடிப்பாரா அல்லது ஓரிரு படங்களில் ஓரம்கட்டப்படுவாரா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியவரும்.

கடந்த இருபது ஆண்டுகளில் இதுதான் என்னுடைய சிறந்த படம் என்று சூர்யா உறுக்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

0

எனது பள்ளிக்காலத்தில் இருந்து இதைதான் சொல்லி வருகிறார்கள்!மீண்டும் ரஜினியை சீண்டும் மூன்றாம் கலைஞர்!

நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியை மறைமுகமாக கேலி செய்துள்ளார்.

செல்லும் இடம் எல்லாம் ரஜினியை சீண்டிப் பார்ப்பதற்காகவே திமுகவில் ஒருவரை வைத்துள்ளார்கள் என்றால் அது மிகையில்லை. அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை. உடன்பிறப்புகளால் மூன்றாம் கலைஞர் என அன்பாக அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்தான். சமீப வருடங்களில் அரசியலுக்கு வந்து கட்சிக்குள் அதிகாரமிக்க பதவிகளுள் ஒன்றைப் பெற்றுள்ள அவர் கட்சி கூட்டங்களில் முன்னிலைப் படுத்தப் பட்டு வருகிறார்.

ரஜினி சமீபத்தில் பேசிய துக்ளக் பொன்விழா பேச்சு மற்றும் குடியுரிமைத் திருத்த சட்டம் பற்றிய பேச்சு ஆகியவற்றைக் கலாய்த்து சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வந்த அவர் இப்போது பொது மேடைகளிலும் ரஜினியை சீண்ட ஆரம்பித்துள்ளார்.

அந்தவகையில் இன்று வடலூரில் நடைபெற்ற திமுக விழாவில் கலந்து கொண்ட அவர் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர் ‘நான் பள்ளி படிக்கும் போதில் இருந்தே ஒருவர் அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டுள்ளார். அப்படியே அவர் இப்போது வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்ட ரஜினி ரசிகர்கள் சிலர் ‘என்ன செய்வது உங்களைப் போல அவருக்கு அப்பாவும் தாத்தாவும் இல்லையே!’ என கேலி செய்துள்ளனர்.

282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!

0

282 கோடி ரூபாய் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்த கிரிக்கெட் வீரர்!ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான மைக்கேல் கிளார்க் தனது மனைவி கைலியை விவாகரத்து செய்ய 192 கோடியை ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரான மைக்கேல் கிளார்க் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையோடு சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டார். அப்போது அடிக்கடி ஏற்படும் காயங்களாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடவுமே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் 2012 ஆம் ஆண்டு கைலி என்பவரை மணந்தார். அவர்களுக்கு  4 வயதான கெல்ஸி லீ என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக இருவரும் தி ஆஸ்திரேலியன் நாளிதழுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ‘இருவரும் மனப்பூர்வமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் எதிர்காலத்துக்காக பொறுப்பேற்றுள்ளோம்’ எனக் கூறியுள்ளனர்.

விவாகரத்துக்குப் பிறகு மகள் கெல்ஸி லீ தந்தை கிளார்க்குடன் இருப்பார் எனத் தெரிகிறது. இந்த விவாகரத்துக்காக கிளார்க் தனது மனைவிக்கு 40 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஜீவனாம்சமாகக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 282 கோடி ரூபாய் ஆகும். இந்த விலையுயர்ந்த விவாகரத்தை ஆஸ்திரேலிய மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதுவரை வர் 115 டெஸ்ட் போட்டிகளிலும், 245 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள கிளார்க் 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார்.

ஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன் விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ!!

0

ஏய் பொண்டாட்டி… அவ ஒன்னும் கெட்டவ இல்லடி; சீமானுடன்  விஜயலட்சுமி இருக்கும் வைரல் வீடியோ!!

 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி வீடியோ எடுப்பது போலவும் சீமான் சினிமா வசனங்களை பேசுவது போலவும் எடுக்கப்பட்டுள்ளது.

சீமான் மீதான பாலியல் புகாரில் 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக முன்பு விஜயலட்சுமி கூறியிருந்தார் தற்போது சில புகைப்படங்களும், வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். புதிய வீடியோவில் சினிமா டயலாக் பேசி காண்பிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பழைய வீடியோவில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் இருந்தன. தன்னைக் காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் சீமான் ஏமாற்றியதாக கடந்த காலத்தில் விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது.

மேலும், மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன் என்றும், 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று விஜயலட்சுமி முன்பு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் நாம்தமிழர் கட்சி தொண்டர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. திராவிட கழகத்தில் இருந்து பல்டி அடித்து நாம்தமிழர் கட்சியின் அரசியல் பயணத்தில் இருக்கும் சீமானுக்கு நடிகையின் மூலம் சோதனை புதிய வந்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் கடவுளை அநாகரிகமாக விமர்ச்சித்த சீமான், 2009 காலகட்டத்திற்கு பிறகு திராவிட இயக்க அரசியலை தவிர்த்து தமிழ் அரசியலில் புதிய பயணத்தை தொடர்ந்தார். சமீபத்தில் தஞ்சை கோயிலில் சீமான் வழிபட்ட புகைப்படங்களுடன் பழைய வீடியோவுடன் இணைத்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தன. இந்திலையில் , நடிகை விஜயலட்சுமி நேரடி காணொளியில் சீமானை பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

அதில், நான் ஒரு சிவபக்தை என்றும் சிவனைப்பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை என்றும் காட்டமாக பேசியிருந்தார். இதனையடுத்து இன்று சீமானை பழிவாங்கும் விதமாக விஜயலட்சுமி சில வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோக்களை பேஸ்புக்கில் ஒருவர் பதிவிட்டதால் சமூக வலைதளங்களில் மிகவேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

0

ராமாவரத்தில் வைத்து ரஜினியை அடித்தாரா எம் ஜி ஆர்?ரகசியத்தை பகிர்ந்துகொண்ட மெய்க்காபாளர்!

ரஜினிகாந்தை எம் ஜி ஆர் தனது ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாக சொல்லப்படும் செய்தியை எம்ஜிஆரின் பாதுகாவலர் கே பி ராமகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

ரஜினிகாந்த் 1980 களில் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் வாய்வழிச் செய்தியாகவும் கிசுகிசுக்களாகவும் பல ஆண்டுகளாக ஒரு தகவல் உலாவந்து கொண்டு இருக்கிறது..அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இது ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கெடுப்பதாக செய்யப்படும் அவதூறு என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த செய்தியின் உண்மைத் தன்மையை எம் ஜி ஆரிடம் பாதுகாவலராக இருந்த கே பி ராமகிருஷ்ணன் என்பவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் ‘அது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. ஆனால் கோவையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கட்சி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒரு தொண்டரை தோட்டத்துக்கு அழைத்து எம் ஜி ஆர் அடித்தார்’ எனக் கூறி பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதே போல இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட நடிகை லதாவும் ஒரு நேர்காணலில் இதை மறுத்துள்ளார். அதில் ‘பாவம் ரஜினியைப் பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. அவரைப் பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை’ என்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

0

வரிசையாகக் கலக்கும் இளம்வீரர்!திறக்குமா இந்திய அணியின் கதவு?

மும்பை அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாடும் சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

தற்போது மாநில அணிகள் பங்கேற்கும் ரஞ்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரராக சர்பராஸ் கான் உருவாகி வருகிறார். சர்பராஸ் கான் என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பழக்கப்பட்டது. பெங்களூர் அணிக்காக ஐபிஎல்-ல் சில போட்டிகளிலும் இந்திய அணிக்காக சில போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் மோசமான பார்ம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

முன்னதாக உத்தர பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் முச்சதம் அடித்த அவர், அடுத்த போட்டியில் இமாச்சல பிரதேசம் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 226 ரன்கள் விளாசினார். இதனால் அவர் மீதான கவனம் உருவான நிலையில் தற்போது இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம அடித்துள்ளார். இதன் மூலம் நான்கு போட்டிகளில் 800 ரன்களை சேர்த்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்காக வாய்ப்புக்காக கதவைத் தட்ட ஆரம்பித்துள்ளார். கீப்பிங் செய்யும் திறமையும் இருப்பதால் ரிஷப் பண்ட் மற்றும் சஹா ஆகியோருக்கான மாற்று வீரராக இவர் தேர்வு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.