சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5673

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

0

பெண்களை இழிவுபடுத்தி பைக்கில் வசனம்; திரெளபதி இயக்குனரின் புகாரால் காவல்துறை நடவடிக்கை..!!

திரெளபதி படத்தின் டிரெய்லர் கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிய போதும், அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில்களை தனது பேட்டியின் மூலம் விளக்கமளித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பெண்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தும் நாடக காதலை மையப்படுத்தி உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதைக்களமே திரெளபதி படம் என்று கூறியிருந்தார்.

திரெளபதி படத்தில் சொன்னது போலவே பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் தனது பைக்கின் பின் புறத்தில் தவறான வாசகங்களை எழுதியுள்ளார். அந்த வாசகத்தை இயக்குனர் மோகன் ஜி தனது டுவிட்டர் பக்கத்தில்: இந்த இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைத்தவர்கள் உடனே களை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தமாக கூறியிருந்தார்.

இந்த பதிவு இணையத்தில் பல்வேறு நபர்களுக்கு வேகமாக பரவியது. சிலர் இந்த வாகனத்தின் விலாசத்தை இணையத்தின் மூலம் கண்டுபிடித்து பதிவிட்டனர். பின்னர், தவறான வாசகத்தை எழுதியிருந்த நபரை பிடித்து காவல்துறை தனது பாணியில் கவனித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிராக இருந்த வாசகம் காவல்துறையினரின் கவனிப்பால் நீக்கப்பட்டது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இனி எழுத கூடாது என்றும் அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்தார். நாடக காதல் செய்பவர்களை இப்படித்தான் தோலுரிக்க வேண்டும் என்று இயக்குனரை பலர் பாராட்டி வருகின்றனர்.

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

0

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

சந்தானத்துக்கு மன்மதன் படத்தில் சிம்பு முதன் முதலாக வேடம் கொடுத்த போது அதை கவுண்டமணி விரும்பவில்லை என சந்தானத்தின் நண்பரான லொள்ளு சபா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடன் லொள்ளு சபாவில் நடித்து இப்போது ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் ‘சந்தானத்துக்கு முதலில் ஹீரோவாகும் ஆசை எல்லாம் இல்லை. அது இப்போது வந்ததுதான். சந்தானம் மன்மதன் படத்துக்கு முன்னரே சில படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது மன்மதன்தான். அந்த படத்தில் சிம்பு சந்தானத்துக்கு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்தார். ஆனால் அதை அந்த படடத்தில் நடித்த ஜாம்பவான் நடிகரான கவுண்டமணி விரும்பவில்லை.

சிம்புவிடம் சென்று அவன் சினிமாவைக் கலாய்த்து லொள்ளு சபாவில் நடிக்கிறான். நீ ஏன் அவனுக்கு சான்ஸ் கொடுக்கற? எனக் கேட்க, அவரின் பேச்சைக் காதில்  வாங்காத சிம்பு, சந்தானத்தின் காட்சிகளை அதிகமாக்கியதாகக் கேள்விப்பட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சிம்பு கவுண்டமணியின் பேச்சைக் கேட்டு சந்தானத்தை படத்தில் இருந்து தூக்கி இருந்தால் தமிழ் சினிமா முக்கியமான ஒரு நகைச்சுவை நடிகரை இழந்திருக்கும்.

இனிமேல் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய்க்கு இதுதான் பெயர்:அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

0

இனிமேல் கொரோனா வைரஸ் தாக்குதல் நோய்க்கு இதுதான் பெயர்:அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சீனாவில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கையை (774) இந்த நோய் தாண்டியுள்ளது.

இந்த நோய் தொற்று வெகு விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நோய் தொற்றால் கொரோனா பற்றி உலகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரே இறந்துள்ளதால் மக்கள் முகமூடி அணிந்தே வெளியெ செல்கின்றனர். சீனா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா என்ற பெயரே பீதியைக் கிளப்பி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகும் நோய்க்கு உலக சுகாதார நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக பெயரை அறிவித்துள்ளது. எந்த ஒரு இடத்தையோ, விலங்கையோ, குறிப்பிட்ட சமுதாய மக்களையோ குறிப்பிடாமல் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த நோய்கு கோவிட்-19 அதாவது COVID-19 (coronavirus disease 2019) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு எதிரான வழக்கு: விஷாலுக்கு ஆதரவான உத்தரவால் பரபரப்பு

0

தமிழக அரசுக்கு எதிராக விஷால் பதிவு செய்த வழக்கு ஒன்றில் விஷாலுக்கு ஆதரவாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்து வரும் நிலையில் திடீரென தயாரிப்பாளர் சங்கத்திற்கு என். சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமனம் செய்தது. இந்த நியமனத்துக்கு விஷால் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அடுத்து விஷால் தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் விஷால் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

0

நடிகர் ஜோசப் விஜய் கிறித்துவ மதத்தை பரப்புகிறார்! அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு!!

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், தஞ்சை பெரிய கோயிலில் வழிபட்ட போது நடிகர் விஜயை பற்றி முக்கிய குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முன்வைத்தார். அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்து தனது நண்பர்களின் மூலம் கிறித்தவ மதத்தை பரப்புவதாக கடுமையாக சாடினார். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடத்த காரணம், அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்கிற அடிப்படையில் சோதனை நடக்கிறது. இதை சிலர் ரஜினியுடன் தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் விஜயை தொடர்புபடுத்தி பேசுவது தவறானது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில், ரஜினியின் வீட்டிலும் வருமானவரி சோதனை அதிரடியாக நடத்தப்பட்டது. பிறகு அதன் மூலம் சில ஆவணங்களும் கிடைத்தது உண்மைதான். சோதனையின் முடிவுக்கு பின்னர் வருமான வரித்துறையினரே ரஜினிக்கு நற்சான்றிதழ் வழங்கியதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்யும் சோதனை நடப்பதாக கூறினார்.

விஜய் தனது சினிமா பிரபலத்தை வைத்தும் அதன் வருமானத்தை வைத்தும் கிறித்தவ மதத்தை பரப்புவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பேட்டியினால் சில விஜய் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பு கிளப்பியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் ,விஜயை பார்த்து அவ்வளவு பயமா என்று அர்ஜூன் சம்பத்தை நோக்கி கேட்டது குறிப்பிடத்தக்கது.

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

0

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்துக் கருத்துகளையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றன. தேசிய கட்சியானக் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்ல. இதையடுத்து காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று தெரிவித்து தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தனது நண்பரும் ஆம் ஆத்மியின் வெற்றி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுகு கமல் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார். அப்போது ‘அரவிந்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்கள் வளர்ச்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். இதைப்போல தமிழக மக்களும் வருகின்ற  தேர்தலில் முடிவெடுப்பர். நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்வோம்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்த நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ‘நேர்மை மற்றும் வளர்ச்சிக்குப் பெயரே நீங்கள் தான் சார்’ எனக் கூறியுள்ளார். இது கமலுக்கு அளிக்கும் பாராட்டா அல்லது கேலியா எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!

0

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!

இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய அடைந்த வொயிட்வாஷ் போட்டிகளின் விவரம் :-

1983-1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர். இதில் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

1988/89 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர். இதிலும் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2006/07 ஆம் ஆண்டு தொடர். அப்போது முதல் போட்டி மழையால் கைவிடப்பட அடுத்து வந்த 4 போட்டிகளிலும் தோற்ற இந்திய 0-4 என்ற கணக்கில் தோற்றது.

அதையடுத்து நியுசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றுள்ளது.

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

0

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாமலும், வெற்றிக் கனியை பறிக்காமலும் முழுவதுமாக மண்ணை கவ்வியது டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது

இந்த தேர்தல் தோல்வி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டுவிட்டரில் வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இளைஞர் ஒருவர் குஷ்புவிற்கு அரசியல் பாடத்தையே கற்பித்து விட்டார். அப்பதிவில் இளைஞர் கூறியிருப்பதாவது:

உங்கள் கட்சிக்கு அரசியலில் வேகமோ, மூர்க்த்தனமோ கடுமையாக உழைத்து வெற்றியை பறிக்கும் வெறித்தனம் இல்லை, தெளிவு இல்லை என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இளைஞரின் ஒட்டுமொத்த அரசியல் பேச்சுக்கும் “நான் இதை ஒப்புக் கொள்கிறேன்” என்று அதிர்ச்சி தரும் விதமாக குஷ்பு பதில் அளித்திருந்தார். குஷ்புவின் பதிலை பலரும் எதிர்பாராத வியப்பில் ஆழ்ந்து போனார்கள்.

மேலும், டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் நாம் வருத்தம், வேதனையுமாய் இருப்பதை மாற்றி அமைக்கும் விதமாக இனி நமது செயல்பாடு இருக்க வேண்டும் என குஷ்பு பதிவிட்டிருந்தார். டெல்லியில் போட்டியிட்ட ஆளும் கட்சி பாஜகவும் பெரிய அளவில் வெற்றி வாகை சூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமாக ஒயிட்வாஷ் செய்தது போல் டெல்லியில் ஒரு இடத்தை கூட ஜெயிக்காத காங்கிரஸ் கட்சி, இனி வருங்கால அரசியலில் தலை தூக்குமா என்பது இந்த தேர்தலின் மூலம் கேள்வியாகி உள்ளது.

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

0

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான சைவ உணவுகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ஏற்படும் பண இழப்பை காலை மற்றும் இரவு உணவு விற்பனை மூலம் சரிக்கட்டுவதாக வீரபாகு தெரிவித்துள்ளார்.

பரபரப்பான இடங்களில் சாலிகிராமம் பெயர் பெற்ற இடம் அதுமட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் நிறைந்த இடமும் கூட. 10 ரூபாய் உணவில் மோர், ரசம், பொரியல் கிடைப்பதால் இந்த ஓட்டலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதால், அவரின் பெயரில் மக்களுக்கு நான் சேவை செய்கிறேன் என்றும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

0

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

 விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடித்துள்ள் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் வித்தியாசமான முறையில் விஜய்க்கு அரசியல் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் அடித்துள்ள போஸ்டரில் ‘அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என வேண்டுகோள் விடுப்பது போல அச்சடித்து ஒட்டியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையேயான மோதல் இப்போது முடியாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.