சனிக்கிழமை, அக்டோபர் 4, 2025
Home Blog Page 5678

வேலையை அப்புறம் பார்க்கலாம், முதல்ல நரியை பிடிங்க: பாராளுமன்ற ஊழியர்களுக்கு உத்தரவு

0

பாராளுமன்ற பணிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நரியை பிடியுங்கள் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தின் நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று நரி ஒன்று திடீரென நுழைந்து விட்டது. பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்த நரி அதன்பின்னர் எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றது. இதனை சிசிடிவி வழியாக பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்கு அந்த நரியை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சில மணி நேரம் போக்கு காட்டிய நரியை ஊழியர்கள் பிடித்து வனத்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த நரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது

இது குறித்து கருத்து கூறிய ஆளுங்கட்சி எம்பி ஜூலியோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இதுவரை பிரிட்டன் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுதான் மற்ற சம்பவங்களை விட முதலிடத்தில் உள்ளது என கூறினார். 24 மணிநேரமும் பாதுகாப்பு உள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தில் நரி ஒன்று திடீரென நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

0

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாஜகவினருக்கு எதிராக விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவினருக்கு போக்கைக் கண்டிக்கும் விதமாக திரை  தொழிலாளிகளின் கூட்டமைப்பான பெஃப்சியின் தலைவரான செல்வமணி ‘ பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாவில் அரசியல் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூகவலைதளத்திலும் பாஜகவுக்கு எதிரானக் குரல்கள் எழுந்துள்ளன. பலர் என்ன செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

0

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நிக்கோல்ஸ் 41 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த பிளண்டல் 21 ரன்களை சேர்த்து அவ்ட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய குப்தில் 79 ரன்களில் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பின் வந்த வீரர்களான லாதம், நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், சாப்மேன் மற்றும் சவுத்தி ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேற நியுசிசிலாந்து ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் மறுபக்கம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற  ராஸ் டெய்லர் 9 ஆவது விக்கெட்டுக்கு வந்த பந்துவீச்சாளரான ஜேமிஸன் என்பவரோடு கைகோர்த்து விக்கெட்டை இழக்காமல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்திய பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒருகட்டம் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியில் இறங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த அணியால் கௌரவமான ஸ்கோரான 273 ரன்களை சேர்க்க முடிந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

0

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலிஸ் குறித்த செய்திகளை எதிர்பார்த்து வரும் வேளையில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்தியன் 2 இப்போது தள்ளிபோகும் என அறிவிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் அந்த படத்துடனான மோதலைத் தவிர்ப்பதற்காக இந்தியன் 2 ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது. மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அப்போது படம் வெளியானால் கமலின் அரசியல் செல்வாக்குக்கு உதவும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பயிகிறது.

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

0

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

சச்சின் ஆஸ்திரேலிய வீர்ர மார்னஸ் லபுஷானின் கிரிக்கெட் விளையாடும் திறன் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத காட்டுத்தி சேதங்களுக்கான நிவாரணத்துக்காக கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட இரு அணிகளில் ஒன்றுக்குரிக்கி பாண்டிங்குக்கும் மற்றொரு அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் தலைமையேற்றுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங்கின் அணிக்கு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை நடக்க வுள்ள போட்டித் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று  நடந்தது. அப்போது சச்சினிடம் இப்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் உங்களைப் போலவே விளையாடுபவர் யார் என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு சச்சின் ‘ நான் கடந்த மாதம் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா லார்ட்ஸ் போட்டியை எனது மாமனாருடன் பார்த்தேன். ஸ்டீவ் ஸ்மித் வெளியேறிய பிறகு லபுஷானின் ஆட்டத்தை  பார்த்தேன். அப்போது ஆர்ச்சர் பந்தில் தலையில் அடிவாங்கிய மார்னஸ் லபுஷான் அதன் பிறகு ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பானது. அப்போதே நான் நினைத்தேன் இவர் ஸ்பெஷல் வீரர் என்று. அவரது கால்நகர்வு துல்லியமாக உள்ளது, அதற்கு உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியான உறுதி வேண்டும். தலையில் அடிவாங்கிய பிறகு மன உறுதி இல்லை எனில் உங்கள் கால் உங்கள் பேச்சைக் கேட்காது.’ எனக் கூறியுள்ளார்.

பலரும் சச்சின் கோலி அல்லது ஸ்மித்தைதான் சொல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள லபுஷானை சச்சின் சொல்லி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனால் சச்சின் கணிப்பின் படி லபுஷான் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அவரது டெஸ்ட் ஆவரேஜ் 63 ஆகவும் ஒருநாள் ஆவரேஜ் 53 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

0

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

சீன மக்களிடையே பீதியைக் கிளப்பி இருக்கும் கொரோனா வைரஸ்  பெயரை சொல்லி ஒரு பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர் லீ வென்யவாங்கையே பலி கொண்டுள்ளது இந்த வைரஸ். இதனால் சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று அச்சுறுத்தும் ஒரு பெயர் உண்டு என்றால் அது கொரோனாதான். இப்படிப்பட்ட கொடூரமான ஒரு வைரஸின் பெயர் ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகருக்கு அருகில் உள்ளது ஜிங்ஷாய் எனும் நகர். இந்த நகரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து திருட முயன்றுள்ளார் ஒரு நபர். அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த  பெண்  ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அந்த பெண்ணைப் பார்த்த திருடும் ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டு அவரை வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அந்த இளைஞரைப் பார்த்து அந்த பெண் சத்தம் போட ஆரம்பித்துள்ளார். இதனால் அவரின் கழுத்தைப்பிடித்து நெறுத்து சத்தம் வராமல் தடுத்துள்ளார் அந்தநபர்.

இதனால் அந்த பெண்ணுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. அந்த இருமலை வைத்துத் தப்பிக்க நினைத்த அப்பெண் தொடர்ந்து இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் திருடனிடம் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வந்துள்ளதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த நபர் தப்பித்தால் போதுமென்று அந்த இடத்தை விட்டு அலறியடித்து ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் போலீஸில் புகாரளிக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்பார் தோல்வியால் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் நல்ல வசூலை பெற்ற போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்ற காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது

தர்பார் படத்தின் பட்ஜெட் 250 கோடி என்பதால் தான் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும் இந்த படத்தினால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் தலைவர் 168 என்ற படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியாக ரஜினியின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் இல்லையெனில் இந்த படத்தை நிறுத்த போவதாக கூறியதாகவும் செய்திகள் வெளியானது

தலைவர் 168’ படத்தை நிறுத்துவதற்கு பதிலாக சம்பளத்தை குறைத்து நடிக்கலாம் என்று முடிவு செய்த ரஜினிகாந்த், தனக்கு ரூபாய் 118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ள நிலையில் பாதியாக அதாவது ரூ.58 கோடி சம்பளம் பெற ரஜினி ஒப்புக்கொண்டதாகவும், இதனை அடுத்தே இந்த படம் தற்போது தொடர உள்ளதாகவும் கூறப்படுகிறது

’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

0

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி சுரங்கத்தில் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தரக்கூடாது என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விஜய்யை பயமுறுத்த ஆளும் மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகளை ஏவி விட்டதாக அரசியல்வாதிகளும் அரசியல் விமர்சகர்களும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவினர் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருவது பெரும் பரப்பு ஏற்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

0

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப் போராடிய மருத்துவர் லி வென்லியாங்
கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் இன்று பலியான சீனர் ஒருவருக்காக அந்த நாடே அஞ்சலில் செலுத்தி வருகிறது. அவர்தான் மருத்துவர் லி வென்லியாங். ஏன் இவருக்காக மொத்த நாடும் அஞ்சலி செலுத்துகிறது என்றால் இவர்தான் முதன் முதலில் டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் தாக்குதலைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அரசுக்கு எதிராக ஆவணங்களைத் திரட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதனால் கொரோனா வைரஸ் சாவுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இவரையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன்பாக நேற்றே இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. அவரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்த போது அவருக்கு லேசாக நாடித்துடிப்பு இருந்துள்ளது. அதன் பின்னர் மீண்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படு நான்கு மணிநேரம் உயிரோடு இருந்தார்.

தன் மூலம் யாருக்கும் கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதால் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொண்டார். தொடுதல் மூலம் வைரஸ் பரவுகிறது என அவர் நினைத்ததே இதற்கு முக்கியக் காரணம்.

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

0

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

இந்திய அணி நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்த சாதனை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மோசமான இன்னொரு சாதனையை செய்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த சாதனையைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சந்தோஷ மிகுதியில் திளைத்தாலும் மற்றொரு புறம் ஒரு மோசமான சாதனையையும் செய்துள்ளது. இதன் மூலம் தங்கள் சம்பளத்தின் பெரும்பகுதியை இழந்துள்ளது.

நியுசிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு டி 20 போட்டிகள் மற்றும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கபட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 4ஆவது டி 20 போட்டியில் ஒரு ஓவர் தாமதமாகவும், 5-ல் 2 ஓவர் தாமதமாகவும் வீசியது. இதற்காக முறையே போட்டி ஊதியத்தில் இருந்து முறையே 20 மற்றும் 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஆனால் அப்பொதும் அந்த தவறை சரிசெய்து கொள்ளாத இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் 4 ஓவர்கள் தாமதமாக வீசியது. அதற்காக இந்த போட்டியின் ஊதியத்தில் 80 சதவீதத்தை இழந்தனர். இன்னும் ஒரு ஓவர் தாமதமாக வீசி இருந்தால் மொத்த சம்பளத்தையும் இழந்திருக்கும். கோலி தலைமையிலான அணி வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வரும் வேளையில் கட்டுக்கோப்பாக பந்து வீச முடியாமல் தடுமாறி வருகிறது. வரும் போட்டிகளிலாவது இந்த தவறை சரி செய்து கொண்டு மீண்டு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.