Home Blog Page 5745

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

0

உணவில் குண்டூசி வைத்த கொடூர சம்பவம்; பசியில் ஓடிவந்து ரத்தம் கொட்டிய நாய்! எங்கே போனது மனிதநேயம்..?

நாய்க்கு உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசியை ஒளித்து வைத்து வீசுகிறார்கள். பசியில் இருந்த நாய் அதை உண்ணபோது வாயில் குத்தி ரத்தம் வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த பூமியில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் இம்மண்ணில் சம உரிமையுடன் வாழ தகுதியுள்ளது. மனித இனத்தில் பிறந்த சிலருக்கு பிற உயிர்களிடம் அன்பை பற்றியோ, அதன் வாழ்க்கைமுறை பற்றியோ தெரியாமல் விபரீத விளையாட்டை விளையாடுகிறார்கள்.

பசியால் வந்த நாய்க்கு வாய்முழுக்க ரத்தம் கொட்டிய புகைப்படம் பார்ப்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. இதுகுறித்து விஜயகுமார் என்கிற வலைதளவாசி தனது முகநூலில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

எத்தனை பெரிய மனிதனுக்கு
இத்தனை சிறிய மனமிருக்கு
நாய்க்கு தின்ன உணவளிப்பது போல பன்னுக்குள் குண்டூசிகளை நிறைய ஒளித்து வைத்து நாய் முன்னாடி வீசியுள்ளார்கள்

பசியில் ஓடிப் போய்த் தின்னும் நாயின் வாயில் குத்தி ரத்தம் வருவதைப் பாருங்கள்.

நாய் அப்படி ஓடிப்போய் தின்பதற்குக் காரணம் அது மனிதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் மனிதன் செய்வது நம்பிக்கைத் துரோகம்

இயற்கைக்கு உயிரினங்களுக்கு
சுற்றுச் சூழலுக்கு இந்த மனித நாய்கள்கள்தான் பேராபத்து

இயற்கைக்கு பயங்கரவாதி மனிதகுலம்தான்

ஏதாவது கோள் மோதி பூமி அழிந்தால்கூட மிக்க மகிழ்ச்சிதான்

ஜாதிமதம், ஏழை, பணக்காரன், இலக்கியம், சினிமா, தத்துவம், குடும்பம், ‌அன்பு என எதுவும் அறிய வேண்டியதில்லை.

இந்த உலகில் சாவதைவிட வாழ்வதுதான் மிகக் கொடூரம், அப்படி ஆக்கிவைத்தது இந்த பகுத்தறிவற்ற இழிந்த மனித நாய்கள்தான்.

https://m.facebook.com/story.php?story_fbid=2565897960401256&id=100009432313466

இந்த சம்பவம் சென்னையில் நடந்ததாக கூறப்படுகிறது.

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

0

ஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!

அரண்மனையில் இருந்து ஹாரி – மேகன் தம்பதியனர் அதிகார பூர்வமாக மார்ச் 31 ல் வெளியேறுவதால் ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்துள்ளார் இங்கிலாந்து ராணி.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக ஹாரி- மேகன் தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டயானாவின் மகனான ஹாரி கடந்த 2018ம் ஆண்டு மேகனை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, இந்த நிலையில் அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடிவெடுத்தனர். இங்கிலாந்து இராணி முதல் அரச குடும்ப உறுப்பினர்கள் வரை சமாதானம் செய்தனர்.

ஆனால் அவர்கள் முடிவை மாற்றமுடியவில்லை. இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு ராணி அனுமதியளித்தார். கனடாவில் குடியேறும் அவர்கள் சஸ்ஸக்ஸ் ராயல் என பெயரிடப்பட்ட நிறுவனம் ஒன்றையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சாதாரண வாழ்க்கையை தொடங்கும் ஹாரி – மேகன் தம்பதி மார்ச் 31 தேதி சட்டப்படி பக்கிங்ஹாம் அரண்மனை விவகாரங்களிலிருந்து முழுமையாக வெளியேறுகின்றனர். இந்த நிலையில் 2 பேரும் வரும் வாரத்தில் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சியில் இறுதியாக பங்கேற்க உள்ளனர்.

காதல் மனைவிக்காக இளவரசர் பட்டத்தையே துறந்த ஹாரிக்கு உலகம்  முழுவதும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

0

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் தெலுங்குப் பதிப்பை ஜூனியர் என் டி ஆர் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

இந்த பாடல் கொலவெறி மற்றும் ராஜகாளியம்மன் படத்தில் இடம்பெற்ற சந்தன மாளிகையில் தூளி கட்டிப் போட்டேன் என்ற பாடலின் காப்பி என சொல்லப்பட்டது. ஆனாலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இந்த பாடல் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்போதே பலபேரின் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் மாஸ்டர் தெலுங்கு வெர்ஷனில் இந்த பாடலை வெகுவிரைவில் பதிவு செய்திருக்கும் அனிருத் அதற்காக டிக் செய்திருக்கும் நபர் யார் தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஜூனியர் என் டி ஆரைத் தேர்வு செய்துள்ளார் அனிருத். இது சம்மந்தமாக என் டி ஆரிடம் பேச அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகளவில் இந்த பாடல் சென்று சேரும் என சொல்லப்படுகிறது.

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

0

இந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?

இந்தியன் வங்கி இனி 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி ஏடிஎம்களில் பயன்படுத்துவதை நிறுத்துவதாக கூறியுள்ள செய்தி பல்வேறு விதமாக திரிக்கப்பட்டு பொது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலர் உண்மை என்னவென்று தெரியாமல் குழம்பியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட காரணத்தால், ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொதுவான கருத்து கூறப்பட்டது.

இந்தியன் வங்கி கூறிய உண்மை நிலவரம் :

வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கியில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தணை நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இதற்கான உண்மை நிலவரத்தை அகில இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் கூறியதாவது ;

இந்தியன் வங்கி பணப்பரிவர்த்தணையில் 2000 நோட்டுகள் தொடர்ந்து நடைமுறையில் பயன்படுத்தப்படும், ஏடிஎம் -களில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார். மேலும், ஏடிஎம் களில் அதிகமான தொகையாக பணம் எடுப்பவர்களுக்கு 2000 ரூபாய் நோட்டே வருகிறது. இதனால் சில்லறைக்காக வங்கிக்குள் நுழைகின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கும் , மக்களுக்கும் நேரம் வீணாகிறது. ஏடிஎம் மிஷன் கொண்டு வந்ததே வங்கியின் பணப்பரிவர்த்தணை நேரத்தை குறைப்பதற்குத்தான். சில்லறை சிக்கலுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறினார்.

இனி வங்கி ஏடிஎம் களில் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே நிரப்பப்படும். 2000 ரூபாய் நோட்டுக்கான ஏடிஎம் டிரேக்களில் இனி பணம் நிரப்புவதில்லை என்பதையே பலர் திரித்து கூறுவதாக தெரிவித்தார்.

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

0

ஆரம்பமே அசத்தல் – உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா !

பெண்களுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கிய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸி. இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா (29), ரோட்ரிக்யூஸ்(26) மற்றும் திபாலி ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடினர்.

இதனால் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அல்ஸியா ஹீலி 51 ரன்களும்,  அஷ்லே கார்ட்னர் 34 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் ஆஸி. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்களும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களும் அதிகபட்சமாக எடுத்தனர். இதன் மூலம் உலக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது.

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

0

புதுச்சேரி: இலவச அரிசிக்கு பதில் பணம் கொடுக்க பிறப்பித்த உத்தரவு செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுச்சேரியில் ரேசன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு இலவச அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்க துணை நிலை ஆளுநர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதுச்சேரியின் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையல் பணத்திற்கு பதிலாக இலவச அரிசியை வழங்குவது தொடர்பாக பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான அறிக்கையை முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநரான கிரண்பேடியை சந்தித்து தெரிவித்துள்ளார்.

இதற்கு கிரண்பேடி, தொடர்ந்து ரேசன் கார்டுகளுக்கு பணமே கொடுக்கலாம் என்று கூறி மறுத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்த தகவல் வெளியானதை அடுத்து, கிரண்பேடி தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு நான் தடையாக இல்லை என்றும், மேலும் பொது மக்கள் நல்ல தரமான அரிசியை வாங்குவதற்கு இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்க கூறினேன் என்றும் கூறினார். மக்களுக்கான இலவச அரிசி வழங்க நான் தடையாக இருக்கிறேன் என்பது பொய்யான தகவல் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இவ்வழக்கில் முதலமைச்சர் நாராயாணசாமி தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !

0

அஜித்துக்கு கட்டுப்பாடு விதித்த ஃபெப்சி: ஆர் கே செல்வமணி உறுதி !

இனி அஜித் படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் நடக்கும் என தென்னிந்திய சினிமா தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அஜித் நடிக்கும் பெரும்பாலான படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் அல்லாமல் வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளில்தான் நடந்து வருகிறது.

இதற்குக் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால், அஜித் படத்தின் ஷூட்டிங்கை தமிழ்நாட்டில் வைத்தால் ரசிகர்களின் அன்புத்தொல்லைக்கு மத்தியில் நிம்மதியாக நடத்த முடியாது என்பதுதான். இந்த காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என்றாலும் இதனால் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

ஆந்திராவில் நடந்தால் பெரும்பாலும் அம்மாநில தொழிலாளர்களையே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். இதனால் பெரும்பாலான நாட்களில் தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இப்போது தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர் கே செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அஜித்திடம் இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த சம்மதித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் நடக்கும் ரஜினி படத்தின் படப்பிடிப்பும் அடுத்த கட்டத்தில் இருந்து சென்னையில் நடக்கும்’ என சந்தோஷமான செய்தியை அறிவித்துள்ளார்.

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

0

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

காதலித்த பெண் தன்னுடன் பேசாத காரணத்தால் அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டு போலீஸ் பூத்தில் விழுந்து எரிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பாவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியராக இருந்து வருகிறார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக அப்பெண் இவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் பேசாத காரணத்தால் அப்பெண்ணின் மீது பெட்ரோல் குண்டை வீசுவதற்கான திட்டத்துடன் காதலியை தேடி அவரது கல்லூரிக்கே இருசக்கர வாகனத்தில் வெங்கடேஷ் சென்றுள்ளார். நீண்ட நேரம் கல்லூரி வெளியே காத்திருந்தும் அப்பெண் வெளியே வரவில்லை. இதனால் வெறுப்பான வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை தூக்கி கவனமே இல்லாமல் ஒரு ஓரமாக வீசினார்.

ஓரமாக விழுந்த பெட்ரோல் குண்டானது அருகில் இருந்த போலீஸ் பூத்தில் பற்றி எரிய ஆரம்பித்தது. போலீஸ் பூத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. திடீரென தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் பதட்டத்துடன் தூரமாக நின்றனர். நிலைமை மோசமாவதை அறிந்த வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் தீயினை கட்டுபடுத்தி, தப்பியோடிய வெங்கடேஷை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் வாகன நம்பரை வைத்து ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்; வெங்கடேஷ் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் அவரது காதலி தற்போது பி.காம் படிப்பதாகவும் கூறினர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான காதலனை அப்பெண் பலமுறை திருத்த முயற்சித்தும் பலனில்லை. ஆகவே, தான் வேறொருவரை காதலிக்கபோவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்டு காதலி மீது பெட்ரோல் குண்டு வீச பிளான் செய்ததாக காவல்துறையின் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வழக்குகள் வெங்கடேஷ் மீது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவளை கொலை செய்ய வேண்டும் என்னை விடுங்கள் என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வெங்கடேஷ் புலம்பியதாக கூறப்படுகிறது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

0

21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

ஐதராபாத்தில் “இந்தியா 2030 ஆம் ஆட்டுக்குள் சூப்பர் பவர்” என்ற தலைப்பிலே கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும்,ராஜ்ய சபை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி கலந்து கொண்டார்.அதில் அவர் கூறியதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 37 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இந்தியா 2030 ஆம் ஆண்டில் பொருளாதார வள்ளலரசாக மாற முடியும்.அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் நாம் சீனாவை எளிதில் பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவுக்கே பொருளாதாரத்தில் சவால் விட முடியும் என்றார்.

ஜிஎஸ்டி என்பது இருத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனம் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம் ஜிஎஸ்டி! பாஜக எம்.பி சுப்பிரமணியன்சாமி விலாசல்

மேலும் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற வேண்டுமானால் ஒரு தேசம் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.முதலீடுகளை ஈர்க்க வதி விதிப்பும்,வசூலும் இலகுவாக இருத்தல் வேண்டும்.ஆனால் ஜி.எஸ்.டி அவ்வாறு உள்ளாறு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.

ஜி.எஸ்டி,வருமான வரியை கணினியில் செலுத்தச் சொல்கிறார்கள் கணியை அறியாத பல தொழில் முனைவோரும் நம்மிடையே உள்ளனர்.அவர்கள் செய்யும் தொழிலுக்கு வரி செலுத்துவதோடு மட்டும் இல்லாமல் வரிகணக்கை தாக்கல் செய்ய தனியாக செலவிட வேண்டிய சூழலுக்கு ஆளாகிறார்கள்.

மேலும் முன்னாள் பாரதப்பிரதமர் நரசிம்மராவுக்கு பாரதரத்னா வருது வழங்க வேண்டும் எனவும் கூறினார்.ஏனெனில் இந்தியாவில் அவருடைய ஆட்சியை தவிர வேறு யாருடைய ஆட்சியிலும் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டவில்லை.அவரே பல பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்த ஜாம்பவான் என்றும் குறிப்பிட்டார்.

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

0

கோயில் இடத்தை கழிவறையாக மாற்றிய உடன்பிறப்பு; வாடகை தராமல் 22 லட்சம் பாக்கி! மதுரையில் திமுகவினர் அராஜகம்..!!

மதுரை மாவட்டம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிப்பறைகளாக மாற்றி வாடகை விட்டு திமுக நிர்வாகி பணம் சம்பாதித்து வந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பான இந்த செயலை செய்த திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் உட்பட 12 நபர்களின் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வைகை நதிக்கரையின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு உள்ளே இருக்கும் பழமை வாய்ந்த கல் மண்டபத்தில் கோயிலுக்கு வரும் பக்தரக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வந்தனர். இதனை சுற்றிய குறிப்பிட்ட நிலப்பகுதியை அறநிலையத்துறை அதிகாரிகளால் குறைந்த அளவில் வாடகை விடப்பட்டது. கோயில் நிர்வாகம் இந்த வாடகை ஒப்பந்தத்தை 1998 ஆம் ஆண்டு முடித்து வைத்து, புதிய ஆட்களிடம் வாடகைக்கு விட முடிவு செய்தது.

வாடகைக்கு விடப்பட்ட காலங்களில் திமுக நிர்வாகி உட்பட பலர் வாடகையே தராமல் தனது சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. திமுகவின் மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ.போஸ் காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் தடுப்பு சுவர் எழுப்பி நவீன கழிவறைகளை வாடகை விட்டு பணம் வசூலித்துள்ளார். ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு தரவேண்டிய குறைந்தபட்ச வாடகை தொகையை கட்டவே இல்லை என்று கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திமுக நிர்வாகி மட்டும் வாடகைத் தொகை ரூபாய்.22 லட்சம் பாக்கி வைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுத்தும் இவர்கள் அசரவில்லை, காரணம் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டனர். இதனையடுத்து, கல் மண்டபம் கடைகளை காலி செய்யுமாறு மதுரை நீதிமன்றம் உத்தவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்புடன் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகள் காலி செய்யப்பட்டு கல்மண்டபம் உட்பட அனைத்து கடைகளும் சீல் வைக்கப்பட்டது.

மேலும், பழமை வாய்ந்த கல் மண்டபத்தை மறு சீரமைத்து மீண்டும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இடமாக மாற்ற வேண்டுமென்று கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தர வேண்டிய வாடகை தொகையை நீதிமன்றத்தின் வாயிலாக திமுக நிர்வாகியிடம் வசூலிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக நிர்வாகியின் இந்த செயல்பாடு மதுரை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.