Home Blog Page 5744

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

0

தமிழ் மொழியை நேசிக்கும் சிறுவர்கள்! இணையத்தில் வைரலாகும் ‘அ’ புகைப்படம்..!!

உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் முதன்மையானது நம் தாய்மொழி தமிழ். எந்த தகவலையும் அறியவும், தெரியவும், புரியவும், உணரவும், ஆராயவும் முதன்மையாக இருப்பது மொழிகள்தான். அதிலும் நம் தமிழ்மொழி தனித்துவமான ஒன்றாகும்.

மொழி என்பது பேச்சாக உள்ளுறைந்து நம் வாழ்வின் வரலாற்று வழிகாட்டியாய் இருக்கிறது. ஒரு இனத்தின் நாகரிகத்தை அவ்வினத்தின் மொழியே முதன்மையாக வெளிப்படுத்தும். பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி, தாயிடம் இருந்து கற்பதானலே இதற்கு தாய்மொழி எனப் பெயர் வந்துள்ளது. தகுதி உள்ளதே தப்பி பிழைக்கும் என்ற டார்வினின் கோட்பாட்டின்படி, ஒவ்வொரு மனிதனும் தப்பிப் பிழைக்க காரணம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை நவீனப்படுத்தி தற்காத்துக் கொள்வதுதான் காரணமாகும்.

சங்க இலக்கண இலக்கியத்தில் தமிழ் உண்டு, வரலாற்று கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் தமிழ் உண்டு. தற்போதைய நவீன ஆங்கில மோக கலாச்சாரத்தில் பெருமளவு தமிழ் பற்று குறைந்துவிட்டது. தாய்மொழியின் அருமை, பெருமைகளை நேசிக்காமல், அறியாமல் போனதன் விளைவே அயலார் மொழியை அடுத்த சந்ததி க்கும் கடத்துகிறார்கள் இந்நிலை மாற வேண்டும், மாற்றம் வேண்டும்.

இனி தமிழ்மொழி :

  • தாய்மொழியாம் தமிழை கற்காமலேயே கல்வி கற்கலாம் என்ற நிலை மாற வேண்டும்.
  • கல்விக் கூடத்தில் மட்டும் அல்லாமல் பண்பாடு, கள ஆய்வுகள், அலுவல் பணிகளிலும் தமிழ்தான் ஆள வேண்டும்.
  • கற்பது , தேர்வு எழுதுவது போன்றவை மட்டுமல்லாமல், மாணவர்களை படைப்பாளியாக மாற்றும் வழிகளிலும் நவீன முறையில் பாடத்திட்டங்கள் அமைத்திடல் வேண்டும்.
  • பல்கலைக் கழகங்களில் கதை, உரைநடை , சிறுகதை, புதினம் போன்றவற்றிற்கு தனித்துறைகள் உருவாக்கப்பட்டு நவீன கோட்பாட்டின்படி ஆய்வுமுறைகள் பயனுள்ளதாக நிகழ்த்த வேண்டும்.

தமிழ்மொழி பற்று பெரியவர்களிடம் மட்டுமல்ல சிறுவயது முதலே தமிழை நேசிக்கும் வகையில் மாறியுள்ளது வரவேற்க வேண்டிய ஒன்று. படத்தில் இருக்கும் சிறுவனின் தலையில் தமிழ் மொழியின் உயிரெழுத்தான “அ” என்ற முதல் எழுத்தை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து தலையை வெவ்வேறு வித விதமாக இளைஞர்கள் வெட்டிக் கொள்வது இயல்புதான் என்றாலும். தமிழ்மொழியை அடையாளப்படுத்தும் இச்சிறுவனின் மொழிப்பற்று பாராட்டத்தக்கதே.

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

0

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

குஜராத் மாநிலம் சூரத்தில் முனிசிபல் கார்பரேஷனில் வேலை செய்யும் கிளார்க் பெண்களை நிர்வாணமாக நிறுத்தி அவர்களுக்குக் கருத்தரிப்பு சோதனை நடத்தியது சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.

கடந்த வாரம் குஜராத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 68 மாணவிகளின் உள்ளாடையை கழட்டி மாதவிடாய் இருக்கிறதா என சோதனை செய்ததாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த செய்திகள் பரபரப்பாக வெளிவந்த நிலையில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

பெண்களை நிர்வாணப்படுத்தி சோதனை – மீண்டும் குஜராத்தில் ஒரு சர்ச்சை !

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதல்கட்டமாக இந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர் ஆகிய இருவரும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இருவரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சர்ச்சை முடிவதற்குள் இப்போது  இதேப் போன்ற புது சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. அதுவும் அதே குஜராத்தில் இருந்தே.

குஜராத் மாநிலத்தில் சூரத் நகரத்தின் முனிசிபல் கார்பரேஷனில் வேலை பார்க்கும் 10 க்கும் மேற்பட்ட பெண் கிளார்க்குகளை அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததும் நிர்வாணமாக நிற்கவைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற சோதனையை செய்துள்ளனர். இதில் மேலும் கொடுமை என்னவென்றால் திருமணமாகவில்லை என்று சொன்ன பெண்களையும் இந்த சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த சூரத் ஆணையர் பன்ச்சாநிதிபானி உத்தரவிட்டுள்ளார். 

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

0

நான் தாம்ப்பா பைக் திருடன்: நல்லவங்களை மக்கள் புரிஞ்சுப்பாங்க ஆனா கொஞ்சம் லேட் ஆகும்!

தூத்துக்குடியை சேர்ந்த சாம்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் சரவணன் ஆகியோர் அவரின் பைக்கை திருடியது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

​இதில் கைதான் சந்தோஷ்தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காயமுற்று சிகிச்சையில் இருந்தவர்களை நேரில் பார்க்க சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து ‘நீங்கள் யார்?’ என கேள்வி கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ரஜினிகாந்த் ‘நான் தாம்ப்பா ரஜினிகாந்த்’ என்று பதிலளித்தார்.

தற்போது அவர் ஒரு பைக் திருடன் என்பது தெரிய வந்ததும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் அவரை ‘நான் தாம்ப்பா பைக் திருடன்’ என்று வறுத்து எடுக்கின்றனர். அன்று ரஜினியை கேள்வி கேட்ட சந்தோஷை போராளி போல் காசுக்கு மாறடிக்கும் கூட்டம் ஆதரித்தது. நல்லவங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள், ஆனால் கொஞ்சம் நாள் ஆகும் என்பதுதான் இந்த சம்பவத்தில் இருந்து தெரிய வரும் நீதி ஆகும்

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

0

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

இயக்குனர் சேரன் தன்னுடைய மெஹா ஹிட் படமான ஆட்டோகிராஃபில் முன்னணி நடிகர்களான பிரபுதேவா மற்றும் விக்ரம் இருவரும் நடிக்க மறுத்தக் காரணத்தை சொல்லியுள்ளனர்.

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சேரன் பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்லார். சமீபத்தில் அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிம்பு, விஜய் சேதுபதி இருவருக்கும் கதை சொல்லியுள்ள அவர் விரைவில் இயக்கத்திலும் முழுவீச்சாக இறங்க  இருக்கிறார்.

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

இந்நிலையில் தன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமான ஆட்டோகிராப் படத்தில் முன்னணி நடிகர்களான விக்ரம் மற்றும் பிரபுதேவா ஏன் நடிக்க மறுத்தனர் என்பதற்குப் பதில் அளித்துள்ளார். சமீபத்தில் அளித்த நேர்காணலில் முதலில் ‘ ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்க பிரபுதேவாவைதான் ஒப்பந்தம் செய்திருந்தோம். கடன் எல்லாம் வாங்கி அட்வான்ஸ் கொடுக்க ஒரு நாள் தாமதமானதால் அவர் இந்த படத்தில்நடிக்க மறுத்து விட்டார்.

அதே போல விக்ரமுக்குக் கதை சொன்னென். அவருக்குக் கதை பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்தோம். அப்போது நான் பாண்டவர் பூமி படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அவரும்  ஜெமினி படத்தில் நடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி போனார். ஆனால் அந்த படம் ரிலீஸானதும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற்று ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். அதனால் மென்மையானக் கதையம்சம் கொண்ட இந்த படம் வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்.

பிறகு பல ஹீரோக்களிடம் கதை சொன்னேன். சிலருக்குப் பிடித்திருந்தது. சிலருக்குப் பிடிக்கவில்லை. அதன் பின்னர்தான் நானே நடிப்பது என முடிவானது.’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் ஆட்டோகிராப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்றது வரலாறு.

சக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

0

சக மாணவார்களின் கேலி: தற்கொலை செய்துகொள்வேன் என சொல்லி அழுகை! நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

ஆஸ்திரேலியாவில் 9 வயதாகும் சிறுவன் ஒருவன் தன் அம்மாவிடம் தான் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக அழும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் சிறுவன் அவன் தாயோடு வசித்து வருகிறான. அந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அகான்ட்ரோபலாசியா எனும் வினோதமான நோய் உள்ளது. இந்த நோய்  எலும்புகளை வளர்ச்சி அடைய விடாமல் தடுக்கும் ஒரு நோயாகும்.  இந்த குறைபாடு பிறவியிலேயே ஏற்படுவதாகும். இதனால் சக வயதுள்ளவர்களை விட உயரத்தில் குள்ளமாக இருக்கும் குவாடன் அதற்காக சுற்றி இருக்கும் அனைவராலும் கேலி செய்யப்பட்ட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சக மாணவர்களும் அவரை இதனால் கேலி செய்வதும் அடிப்பதுமாக இருந்ததால் மனமுடைந்த அவர் தன் தாயிடம் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக சொல்லி அழுதுள்ளார்.

அதை அவர் ஒரு வீடியோவாக எடுத்துள்ளார் அவரது தாயார். அந்த வீடியோவில் ‘ ஒரு கயிறு கொடுங்கள் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இல்லையென்றால் என்னை நீங்களே கொலை செய்துவிடுங்கள். என்னுடைய இதயத்தில் கத்தியால் குத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.’ என அழுது மன்றாடுகிறான்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குவாடனின் தாய்‘ ஒரு தாயாக நான் எனது பொறுப்புகளில் இருந்து நான் தவறிவிட்டேன். அதுபோல இந்த கல்வித்திட்டமும் தோற்றுவிட்டது.உடல் ரீதியான கேலிகள், குழந்தைகள் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லுங்கள். ஒரு மாணவன் குவாடனை தலையில் அடிப்பதை நானே பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்தால் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிந்த அவன் அவனிடம் இருந்து தப்பித்து வந்து காரில் ஏறிய குவாடன் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழ ஆரம்பித்தான்’ எனத் தெரிவித்துள்ளார்.

9 வயது சிறுவனின் மனதில் தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது என்றால் அவன் எவ்வளவு மனக்கஷ்டங்களை அனுபவித்து இருப்பான் என்ற சோகம் மனதைப் பிழிகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

0

காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வந்தால் நல்லா இருக்கும்! தூதுவிடும் கே.எஸ்.அழகிரி..!!

தமிழ் சினிமாவின் திரை பிரபலம் நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் தமிழக அரசியலும், தமிழ் சினிமாவும் இரண்டறக் கலந்து பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியது. சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளமானோர் என்றாலும் சிலரால் மட்டுமே அரசியலிம் ஜொலிக்க முடிந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் சினிமாவின் பிரபலம் மற்றும் மக்களிடையே நெருங்கிய தொடர்பை உருவாக்கி அரசியலிலும் வெற்றி வாகை சூடினார்கள்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் சில ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறார். பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் அரசியலில் களம் கண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் போர் வரட்டும் தமிழக அரசியலில் குதிப்போம் என்று பல வருடங்களாக மழுப்பி வருகிறார். நான் அரசியலுக்கு வர வேண்டிய நேரத்தை கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியவர் அவ்வப்போது, சர்ச்சையான கருத்துகளை பேசி வருவதும் அதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் ஏற்பட்டு களேபரம் ஆகின்றது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று பல வருடங்களாக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்த வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியுள்ளார். நடிகர்கள் வந்துதான் கட்சியை பலப்படுத்த வேண்டுமா என்றும், காங்கிரஸ் கட்சி தனது அரசியலுக்காக நடிகர்களிடம் தூதுவிட்டு பார்க்கிறது என்றும் சிலர் கருத்தை முன்வைக்கின்றனர். பிகில் பட சர்ச்சையிலும் விஜய்க்கு ஆதரவாக கே.எஸ்.அழகிரி பேசியிருந்தார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர்களை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்பது ஒரு வகையில் ஏற்க கூடியதாகவே உள்ளது.

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

0

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. 16 ரன்கள் சேர்த்திருந்த போது முதல் விக்கெட்டாக பிருத்வி ஷா 16 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த புஜாராவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. தன் பங்குக்கு 11 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

அதற்கடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்க பட்ட விராட் கோலி களமிறங்கினார். அணியை சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட 2 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் வந்த ரஹானே தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலோடு சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஒரு கட்டத்தில் மய்ங்க் அகர்வால் 34 ரன்களுக்கு அவுட் ஆக இந்தியாவின் நிலை மேலும் மோசமானது.

முதல் நாள் சொதப்பல்: இரண்டம் நாள் பயங்கர சொதப்பல்! 165 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் !

அவரை அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் உடனே நடையைக் கட்டினார். அவருக்கு பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பண்ட் வந்து பொறுமையான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் ரன்களை பற்று கவலைப் படாமல் தடுப்பாட்டம் ஆடினர். 55 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம்  முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட முடிவில் இந்திய அணி 122 ரன்களுக்கு 5விக்கெட்க்ளை இழந்திருந்தது. ரஹானே 38 ரன்களோடும் பண்ட் 10 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய மளமளவென விக்கெட்களை இழந்தது, இதையடுத்து போட்டித் தொடங்கிய நிலையில் மேலும் 7 ரன்கள் சேர்த்த பண்ட் 17 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் அஸ்வின்(0), ரஹானே (46) விக்கெட்கள் விழ முகமது ஷமி அதிரடியாக 21 ரன்களைக் குவித்தார். இதனால் இந்திய அணி 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதன் பின் தன் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியுசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சேர்த்துள்ளது.

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

0

திருமணமான பெண் மீது ஒருதலைக் காதல்! எதிர்ப்பு தெரிவித்ததால் உயிருடன் தீ வைத்து எரிப்பு!

நெய்வேலி பகுதியை சேர்ந்த புதுநகர் 28 வது வட்டத்தில் வசிப்பவர் தான் விக்டர்ஜான். இவருடைய மனைவி சலோமியா. இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.25 வயதாகும் சலோமிய வடலூர் பஸ் நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விக்டர்ஜான் மேற்கு வங்காளத்தில் ராணுவ வீரராக பணி புரிந்து வருகிறார்.

அலுவலகம் செல்லும் சலோமியா தினந்தோறும் காலையில் தனியார் பேருந்து மூலமாக தான் வடலூருக்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடிக்கடி செல்வதால் அவருக்கும் தனியார் பேருந்து நடத்துநர் குமராட்சியை சேர்ந்த ரத்தினசபாபதி மகன் சுந்தரமூர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த சலோமியாவை, சுந்தரமூர்த்தி ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதனையடுத்து சுந்தரமூர்த்தி தன்னுடைய காதலை சலோமியாவிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் தனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்று கூறி, அவரது காதலை ஏற்க மறுத்ததோடு, சுந்தரமூர்த்தியின் நட்பையும் அத்துடன் துண்டித்துள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி, சலோமியாவை பழி வாங்கும் எண்ணத்தில் அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல நேற்று காலை சலோமியா வீட்டிலிருந்து வடலூருக்கு வந்திருக்கிறார். பின்னர் அவர் பேருந்து நிலையத்திலிருந்து தான் பணி புரியும் நிறுவனம் அமைந்துள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நடந்து சென்ற சலோமியாவை திடீரென சுந்தரமூர்த்தி வழிமறித்து, சற்றும் எதிர்பாராத வகையில் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நிலையில் சலோமியா மீது எரிந்த தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவ சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனையடுத்து அவரை மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு அருகிலிருந்தவர்கள் தீ வைத்த சுந்தரமூர்த்தியை பிடித்து தர்மஅடி கொடுத்து, வடலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது பற்றி அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அருகிலுள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக பாதிக்கபட்ட சலோமியாவிடமும் அவர் விசாரணை நடத்தியிருக்கிறார்.

மேலும் இந்த சம்பவம் குறித்த அளித்த புகாரின் பேரில் வடலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து,குற்றவாளியான சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். திருமணமான பெண் மீதான ஒரு தலைக் காதலுக்காக பட்டப்பகலில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்த இளம்பெண் மீது பேருந்து நடத்துநர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

0

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய அமெரிக்கா மீது வர்த்தக தாக்குதல் நடத்துவதாக விமர்சித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பயணத்தில் அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் உள்ளிட்டோரும் வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, கொலராடோ மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பிரசார பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில், தான் மேற்கொள்ளவுள்ள இந்திய பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது அந்தப் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது.

நான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு போகிறேன். இந்திய பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்திய பயணத்தின் போது நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப் போகிறோம். அவர்கள் வர்த்தகத்தில் பல்லாண்டு காலமாக நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் இந்தியாவில் நம்முடைய பொருட்களுக்கு மிகவும் கூடுதலாக வரியை விதிக்கிறார்கள். உலகிலேயே நமக்கு கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது.

இந்திய பயணத்தின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இதன் மூலம் பெரியதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நல்ல ஒப்பந்தம் அமையாவிட்டால், மேலும் இதையொட்டிய பேச்சுவார்த்தை மந்தமாகி விடும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு, ராணுவ உறவு இருந்தாலும் கூட வர்த்தக உறவில் தொடர்ந்து உரசல்கள் இருந்து கொண்டு தான் வருகிறது.

அதிக வரி விதிப்பது மட்டுமின்றி இந்தியாவுடன் வர்த்தக சம நிலை இல்லை என்றும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் இந்தியாவை பற்றி குறை கூறி வருகிறார்.

அமெரிக்க பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இந்த ஏற்றுமதிக்கு சாதகமாக சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித் தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு சாதகமாக எதையும் செய்து கொடுப்பதாக இல்லை.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தகத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் அவருடைய இந்தப் பயணத்தின் போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

0

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி தினத்தன்று நாம் கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையாக இறைவனின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் நம் மனதில் நினைத்த காரியம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

விரதம் கடைபிடிக்கும் நபர்கள் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு மற்றும் பூஜை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியாட்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

மேலும் சிவராத்திரி தினத்திற்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் மனம் அலை பாய்வதை கட்டுபடுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

சிவராத்திரி தினத்தன்று கண் விழிப்பது ஏன்?

விரதம் ஏன்?

நம்முடைய மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே இவ்வாறு விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். மேலும் விரதத்தின் போது உணவை தவிர்ப்பதன் வழியாக உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. இவ்வாறு நாம் தினமும் அனுபவிக்கும் நித்திரை, தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விரதத்தின் போது விலிதிருப்பதின் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு விரதத்தின் போது உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலமாக நாம் சாதாரண விழிப்பு நிலையையும் விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம் என்று கூறப்படுகிறது.

அதாவது சாதாரண விழிப்பு மற்றும் உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக உள்ளதாக கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை.அதனால் இறைவனை உணரும் தன்மையை இழந்து விடுகிறோம்.

இதனால் தான் சிவராத்திரி தினத்தன்று விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணெய் போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது. இதனால் இறைவனை உணரும் தன்மையை அடைகிறோம்.