Home Blog Page 5760

50 ஓவர் போட்டி:35 ரன்களுக்குள் சுருண்ட அணி!மோசமான சாதனை!

0

50  ஓவர் போட்டி:35 ரன்களுக்குள் சுருண்ட அணி!மோசமான சாதனை!

நேபாளம் மற்றும் யு எஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா 35 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான சாதனைப் படைத்துள்ளது.

கிரிக்கெட்டை உலகம் முழுக்க பரப்பும் விதமாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது கிரிக்கட்டில் இப்போது ஆர்வம் காட்டி வருகின்றன. இதையடுத்து ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டியில் நேபாளம் – யு.எஸ்.ஏ அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த அமெரிக்க அணி வீரர்கள் வருவதும் பெவிலியன் திரும்புவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டு இருந்தனர். அந்த அணியின் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாகும். நேபாளத்தைச் சேர்ந்த பவுலர் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். அமெரிக்க அணி மொத்தமே 12 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டது. ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே மிகவும் சீக்கிரமாக முடிந்த போட்டியாகும்.

இதையடுத்து களமிறங்கிய நேபாள அணி 5.2 ஓவர்களில் வெற்றி இலக்கை 2 விக்கெட்கள் மட்டுமே இழந்து அடைந்தது. இந்த போட்டியின் மூலம் குறைந்த ரன்கள் அடித்த அணி என்ற மோசமான சாதனையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43 ரன்கள் குறைந்தபட்ட ரன்களாகும்.

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

0

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு ….. இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

பாரம் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின் மேடையில் அநாகரீகமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சைக்கோ படம் வெளியானதில் இருந்து விமர்சகர்களுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான வார்த்தைப் போர் உச்சத்தைத் தொட்டு வந்தது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யாமேனன் உள்பட பலர் நடித்த ’சைக்கோ’ திரைப்படம் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகியது. இளையராஜாவின் இசை மற்றும் கேமரா ஆகியவற்றுக்காக படம் ரசிகர்களால் பரவலாக பாராட்டப்பட்டாலும், லாஜிக் ஓட்டைகள் கொண்ட திரைக்கதையை பெரிதும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத இயக்குனர் மிஷ்கின் இதற்குப் பல காரணங்களை சொல்லிக் கொண்டு வந்தார்.

இந்நிலையில் இப்போது சைக்கோ படம் தொடர்பாக தனக்கும் ரசிகருக்கும் இடையே நடந்த உரையாடல் ஒன்றை வெளிப்படுத்தி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளார். இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்றுள்ள தமிழ்த் திரைப்படம் பாரம். இந்த படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் ரிலிஸ் செய்கிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார்.

சைக்கோ படத்தை இரண்டு தடவைப் பார்க்கும் அளவுக்கு ஒரு **** இல்லை:ரசிகனைக் கலாய்த்த மிஷ்கின்!

விழாவில் அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது பேச்சில் ‘என்னுடைய சைக்கோ படத்தை ஒரு ரசிகர் ரெண்டு தடவை பார்த்ததாக சொன்னார். அவரிடம் ரெண்டு தடவைப் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு முடியும் இல்லை. உனக்கு வேலையில்லையா எனக் கேட்டேன்’ எனக் கூறியது மேடையில் இருந்தவர்களையே முகம் சுளிக்க வைத்தது. வேறொரு படத்தின் விழாவில் இப்படி தன்னைப் பற்றியும் தன் படங்களைப் பற்றியுமே பேசிக் கொள்வதை இயக்குனர் மிஷ்கின் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

0

ஸ்டாலின் மீண்டும் உளறல்: திமுகவை வச்சி செய்யும் அதிமுக ஐடி விங்..!!

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் நாடக செயல் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். மேலும் வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்று மாற்றி கூறியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக 31 இடங்களில் கிணறுகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், அதிமுக அறிவித்திருப்பது அரசியலுக்கானது என்றும் விமர்சித்தார்.
ஸ்டாலின் பேசிய வீடியோவை அதிமுக ஐடி விங் தனது இணையப் பகுதியில் வெளியிட்டு கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகிறது.

சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழா மேடையில் பேசிய ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்கிற சராசரி அறிவு கூட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்று விமர்சித்தார். இதனையடுத்து எடப்பாடியின் அறிவிப்பை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று கிண்டலாக பேசிய ஸ்டாலின் வீடியோ தற்போது அதிமுகவின் மூலம் பங்கமாக கலாய்க்கப்பட்டுள்ளதை பலர் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..! டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

0

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..!
டுவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்சேதுபதி!!

நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாக கூறப்பட்ட வதந்திக்கு நெத்தியடி அடித்தது போல் ஒரு டுவிட்டர் பதிவை போட்டுள்ளார் விஜய்சேதுபதி. நடிகர்கள் பலர் வெவ்வேறு மதம் மாறிவருவதாகவும், பணத்தின் மூலம் தனது நண்பர்களையும் சேர்த்து மதம் மாற்றி வருவதாகவும் விஜய் உள்ளிட்ட பலர் மீது விமர்சனம் எழுந்தது.

நடிகர் விஜய், ரமேஷ் கண்ணா, விஜய்சேதுபதி மற்றும் சில நடிகைகள் கிறித்தவ மதம் மாறியதாக சமூக வலைதளத்தில் வதந்தி மிக வேகமாக பரவியது. இந்த வதந்திகளை யார் பரப்புகிறார்கள் என்பதை நடிகர்கள் நிச்சயம் அறிந்திருக்க வாய்ப்புண்டு. இருப்பினும் தவறான தகவலை பரப்பும் நபர்களின் பெயரை எதுவும் குறிப்பிடாமல் “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று செவிட்டில் அறைந்தாற்போல் நடிகர் விஜய்சேதுபதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிறித்தவ மதத்தை பரப்பி பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும், சரியான வருமானவரி கட்டாமல் போனதாலும் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது, இதனையடுத்து நடிகர் விஜய் தனது பலத்தை காட்ட வேன் மற்றும் பேருந்து மீது ஏறி செல்பி எடுப்பது போன்ற வீடியோக்கள் பரப்பாக இணையத்தில் வைரலாக பரவியது.

மதமாற்றம் செய்வதாக நடிகர்களை மட்டும் குறிவைத்து பொய்யான தகவலை பரப்பியவர்களுக்கு எதிராகவும், அதே சமயம் விஜய்சேதுபதிக்கு ஆதரவாகவும் அவரது பதிவில் கருத்து பதியப்பட்டு வருகிறது. பலர் விஜய்சேதுபதியின் கருத்தை ஆதரித்தாலும் சிலர் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர். நடிகர் விஜயும், விஜய்சேதுபதியும் மாஸ்டர் படத்தில் ஒன்றாக நடித்து வருகின்றனர். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தஞ்சை பேட்டியில் நடிகர் விஜய் கிறித்தவ மதத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

0

கடன் வாங்கிய தொழிலாளிக்கு கடவுள் காட்டிய கருணை! அடித்தது 12 கோடி ஜாக்பாட்.!!

கேரள கூலித் தொழிலாளி ராஜன் என்பவருக்கு லாட்டரியில் 12 கோடி ஜாக்பாட் விழுந்துள்ளது. இவரது மகளின் திருமண செலவிற்காக வங்கியில் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கியுள்ளார். கூலித் தொழிலில் அதிக வருமானம் இல்லாத காரணத்தால் கடனை அடைக்க முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறி சுமார் 7 லட்சம் கடன் ஏறியுள்ளது.

இந்நிலையில், ராஜன் தனது அதிஷ்டத்தை நம்பி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். வந்தால் வரட்டும் போனால் போகட்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தவருக்கு கடவுள் கருணை காட்டியதுபோல் லாட்டரி சீட்டில் 12 கோடி ஜாக்பாட் அடித்திருந்தது. லாட்டரி சீட்டில் பரிசுத் தொகை விழுந்த விஷயத்தை முன்பே அவர் அறியவில்லை. வாங்கிய லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு சென்ற ராஜனுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் வாங்கிய லாட்டரிக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகை விழுந்ததை கேட்டவுடன் கூலித் தொழிலாளி ராஜன் நம்பமுடியாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். வெறும் 300 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரியில் 12 கோடி விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை தன் குடும்பத்துடன் மகிழ்ந்து கடனை அடைத்துவிட்டு மகள்களை மேற்கொண்டு படிக்கவைக்க இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். லாட்டரி பரிசுத்தொகையால் கேரளாவில் லாட்டரியை ஆர்வத்துடன் வாங்கும் நபர்கள் மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

0

மாமூல் கேட்ட ரவுடிக்கு மாவுக்கட்டு போட்ட காவல்துறை; விழுப்புரத்தில் விதி விளையாடியது!

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிக்கு கால் உடைந்து மாவுக்கட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நீண்ட நாட்களாக மாமூல் கைவரிசையை காட்டிவந்த ரவுடி உதயன் என்பவன், கத்தியை காட்டி வியாபாரிகளிடம் பண வசூல் வழக்கில் தேடப்பட்டவன். இன்று ரவுடி உதயன் இருக்கும் இடம் போலீசாருக்கு ரகசிய தகவலின் மூலம் தெரிய வர ரவுடியை தேடி காவல்துறை தனிப்படை முடுக்கிவிடப்பட்டது.

விழுப்புரம் குயிலாப்பாளையத்தை சேர்ந்த மாமூல் ரவுடி சில நாட்களுக்கு முன்பு, ஒரு வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பண வசூல் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் கடை உரிமையாளரின் வாகன கண்ணாடியை உடைத்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாட்டுக்காரன் சாவடி அருகே நீர்தேக்க தொட்டியின் மேலே மறைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததை அடுத்து, நீர் தேக்கத் தொட்டியை நெருங்கிய காவல்துறை ரவுடி மேலே இருப்பதை உறுதி செய்து கொண்டு இரும்பு படிக்கட்டின் வழியாக மேலே ஏறினர்.

போலீசார் தன்னை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட ரவுடி என்ன செய்வதென்று தெரியாமல் திடீரென நீர்தேக்க தொட்டியின் மேலிருந்து கீழே குதித்தான். இதனால் அவனது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. ரவுடியின் பரிதாப நிலையை பார்த்த காவல் துறையினர் பொறுப்புடன் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டனர். மாமூல் ரவுடி உதயனிடம் இருந்து சில ஆயுதமும் அவனுடைய இருசக்கர வாகனத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர். சமீப காலங்களாக சமூகத்தில் தவறு செய்யும் பலர் பாத்ரூமில் வழுக்கிவிழுந்து மாவுக்கட்டு போடுவது வழக்கமாகி வருகிறது.

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

0

வேர்க்கடலையா… வெடிமருந்தா..? விமான நிலையத்தில் அதிர்ச்சியை உண்டாக்கிய கடத்தல் சம்பவத்தின் வைரல் வீடியோ..!!

டெல்லியின் சர்வதேச விமான நிலையத்தில் வேர்க்கடலையில் வெளிநாட்டு பணத்தை நூதன முறையில் கடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய விமான பயணிகளை வழக்கம் போல் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனையின் போது முரட் ஆலம் என்னும் வெளிநாட்டு பயணியின் பையில் அயல்நாட்டு பிஸ்கட்டுகளும், வேர்க்கடலைகளும் இருப்பது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பியது. சந்தேகத்தின் பேரில் பயணியின் பொருட்களை தீவிர சோதனை செய்யப்பட்டது. வேர்க்கடலையை உரித்துப் பார்த்த போது அதில் வெளிநாட்டு படங்கள் சிறிய உருளையாக கட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்தவுடன் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், பிஸ்கட் பாக்கெட்டுகளையும் சோதனை செய்த போது, பிஸ்கட்டுகளின் நடுவே ஓட்டை போடப்பட்டு அதில் பணத்தை லாவகமாக அடைத்து கடத்தியது தெரிய வந்தது. கடத்தப்பட்ட பணங்களின் மதிப்பு 40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பிண்ணனி குறித்து விசாரணை நடந்து வருகிறது.

திமுக ஜெயிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்! உடன்பிறப்பு சபதம்..!!

0

திமுக ஜெயிக்கும் வரை செருப்பு போட மாட்டேன்! உடன்பிறப்பு சபதம்..!!

கட்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தொண்டர்கள் தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் உண்டு. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் திமுக கட்சியின் மீது தீராத பற்று கொண்டவர். தமிழக அரசியலில் எந்த சட்டமன்றத் தொகுதியும் ஒரு கட்சியின் கோட்டையாக இருக்க முடியாது.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக இருந்தது. திமுகவின் விசுவாசிகள் அதிகம் நிறைந்த சட்டமன்ற தொகுதியில் கலசப்பாக்கமும் ஒன்றாகும். ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த திமுகவின் அரசியல் பலம் கடந்த நான்கு தேர்தல்களாக சரிந்ததால் அதிமுகவின் செல்வாக்கு உயர்ந்து திமுகவின் வெற்றிக்கனி தேர்தலின் மூலம் பறிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால் தொடர்ந்து திமுக தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் சமூக வலைதளங்களில் சூடு பிடித்து மக்களிடம் இருந்து உடனடி விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. திமுகவின் தொண்டர் காளியப்பனை பிற கட்சி தொண்டர்கள் அரசியல் ரீதியாக தொடர்ந்து கேலி செய்து வந்த காரணத்தால் காளியப்பன் வெறுப்பின் உச்சகட்டத்தை அடைந்து, தனது சட்டமன்ற தொகுதியில் திமுக எப்போது வெற்றி பெறுகிறதோ அப்போதுதான் காலில் செருப்பு போடுவேன் என்றும், அதுவரை செருப்பு போடாமல் வெறும் காலில் நடப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இவர் ஏற்கனவே பல ஆண்டுகளாக செருப்பு அணிவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக் குழு பதவிக்கு போட்டியிட்டு காளியப்பன் வெற்றி பெற்றது ஒருபக்கம் இருந்தாலும், திமுக மாவட்ட நிர்வாகிகள் பலர் காளியப்பனை செருப்பு போட சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

0

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்தியாவின் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

இந்நிலையில் ஒருநாள் தரவரிசையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது முதல் இடத்தை இழந்துள்ளார். நியுசிலாந்தின் ட்ரண்ட் போல்ட் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை:-

  1. போல்ட் – 727
  2. பும்ரா – 719
  3. முஜீப் – 701
  • ரபடா – 674
  • கம்மின்ஸ் – 673
  • வோக்ஸ் – 659
  • அமீர் – 656
  • ஸ்டார்க் – 645
  • ஹென்றி – 643
  • ஃபெர்குசன் – 638
காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

பேட்டிங்கைப் பொறுத்தவரை கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

  1. கோலி – 869
  2. ரோகித் – 855
  3. பாபர் – 829
  • டெய்லர் – 828
  • டூப்ளெசிஸ் – 803
  • வார்னர் – 796
  • டி காக் – 782
  • கானே வில்லியம்சன் – 773
  • ஜோ ரூட் – 770
  • ஃபின்ச் – 769

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

0

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

ஆந்திராவில் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக நினைத்த விவசாயி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 1115 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 47000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுதான் இந்த வைரஸ் மூலம் நடக்கும் தாக்குதலுக்கு கோவிட்-19 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்குதல் சீனாவில் மட்டுமே இருந்தாலும், அந்த வைரஸ் சம்மந்தமான பீதி உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்துள்ள பகுதி தொட்டம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணையா என்ற விவசாயி. இவர் சிறுநீரக தொற்று காரணமாக அவதிப்பட்டுள்ளார். அதனால் காய்ச்சலும் இருந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் மருந்துகள் கொடுத்து பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து வெளியே செல்ல சொல்லியுள்ளனர்.

எனக்குக் கொரோனா இருக்கிறது அருகில் வராதீர்கள் –ஆந்திர விவசாயி பீதியில் எடுத்த விபரீத முடிவு !

ஆனால் காய்ச்சல் குறையாததால் தனக்குக் கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதாக அவரே கற்பனை செய்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் யாரும் தன்னருகில் வராமல் இருக்க அவர்களை விட்டு விலகி இருந்துள்ளார். மீறி வந்தாலும் கற்களால் அடித்து விரட்டி இருக்கிறார். குடும்பத்தினர் கொரோனா பற்றி எடுத்து சொல்லியும் அதை அவர் கேட்க மறுத்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினருக்கு நோய் பரவி விடக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.