Home Blog Page 5767

பெங்களூரில் திடீரென பாதி மட்டுமே சாய்ந்த கட்டிடம்: பெரும் பரபரப்பு

0

பெங்களூரின் முக்கிய பகுதியான ஹெப்பால் கேம்பபுரா என்ற பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென பைசா நகரத்து கோபுரம் போல் சாய்ந்து நிற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலக அதிசயங்களில் ஒன்றான பைசா நகரத்து கோபுரத்தை உலகெங்கிலும் உள்ள சுற்றுலா பயணிகள் அதன் அழகை கண்டு ரசிக்கின்றனர். ஆனால் பெங்களூரில் இந்த கட்டிடம் சாய்ந்து இருப்பதை பார்த்து அதன் அருகில் செல்லவே அருகில் செல்லவே அச்சப்பட்டு எல்லோரும் திகிலுடன் பார்த்து வருகின்றனர்

ஐந்து மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் மொத்தம் எட்டு வீடுகள் இருப்பதாகவும் அதில் சுமார் 35 பேர் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்டிடம் சாய்ந்த தகவல் அறிந்ததும் உடனடியாக அந்த வீட்டிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர்

அதுமட்டுமின்றி அந்த வீட்டிற்கு எதிரில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் எந்த நேரமும் இந்த கட்டிடம் சாயம் முழுவதுமாக சரிந்து விழும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

https://twitter.com/yessirtns/status/1225070700144148480

சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

0

சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

பிரசவத்தின் போது தாய்க்கு வழங்குவது போல தந்தைக்கும் இனி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படும் என பின்லாந்து அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்லும் கர்ப்பமான பின்னர் வேலையை மறந்துவிட வேண்டிய சூழ்நிலையே ஒரு காலத்தில் நிலவி வந்தது. ஆனால் சோவியத் ரஷ்யா பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பை முதல் முறையாக அறிவித்தது. பின்னர் அது அனைத்து நாடுகளிலும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போது பல நாடுகளில் பேறுகால விடுப்பு 6 மாத காலமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த பேறுகாலத்தின் மனைவிக்குத் துணையாக இருக்கவேண்டிய கணவன் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைப் பராமரிப்பில் தங்கள் கடமையை செய்ய இயலாமல் போகிறது. அதனால் பல நாடுகளில் ஆண்களுக்கும் இந்த விடுமுறையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு:இனி தந்தைக்கும்!அறிவித்தது பின்லாந்து!

இந்நிலையில் இது சம்மந்தமாக பின்லாந்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தாய்க்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது போல தந்தைக்கும் 5 மாதம் விடுப்பு வழங்கவேண்டும் என அறிவித்துள்ளது. இந்த முடிவை உலகநாடுகள் வரவேற்றுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் இது போல கொண்டுவரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே மனிதவளத்தை மதிக்கும் விதமாக பின்லாந்து அரசு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் 6 மணிநேரம் என வேலை நேரத்தைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!

0

நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!

தோனியின் எதிர்காலம் இந்திய அணியில் என்ன என்பது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

யானை இருந்தாலும் மறைந்தாலும் ஆயிரம் பொன் என சொல்லுவார்கள். அதுபோல தோனி ஆறுமாத காலமாக அணியில் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சுகளுக்குக் குறைவில்லை. தோனி கடைசியாக இந்திய அணிக்கு விளையாடியது உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்தான். 38 வயதாகும் தோனி இந்திய அணியில் விளையாடுவது சந்தேகம்தான் என அன்றுமுதல் பேச்சுகள் எழுந்துள்ளன.

நானும் தோனியின் ரசிகன்தான்:ஆனால்? எம் எஸ் கே பிரசாத் கருத்து!

இதற்கிடையில் பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியலில் இருந்து தோனியை நீக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர்களான கபில்தேவ், ரவி சாஸ்திரி ஆகியோரும் தோனி இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என்றே சொல்லியுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் ஓய்வுப் பெறப்போகும் இந்திய அணியின் தேர்வுகுழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத், தோனி குறித்து பேசியுள்ளார். அவர் ‘நான் தோனியின் ஒரு மிகப்பெரிய ரசிகன்.2020 மற்றும் 2021 ஆண்டு என தொடர்ந்து இரு டி20 உலககோப்பை  தொடர் வருவதால் தேர்வுக்குழு தோனியை விட்டு நகரவேண்டிய சூழலுக்கு ஆளானது. தோனி தனது கிரிக்கெட் பயணத்தில் எட்டாத உயரம் இல்லை. இந்தியாவுக்காக அனைத்துக் கோப்பைகளையும் பெற்றுத்தந்துள்ளார். என் பதவியை எடுத்துவிட்டால் நானும் அவரது ரசிகந்தான். ஆனால் இளம்வீரர்களைக் கண்டறிவதுதான் தேர்வுக்குழுவின் பணி.’ எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் தோனிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என தோன்றவில்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு!

0

அப்போ ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன வசூல் சாதனை:இப்போ மாட்டி முழிக்கும் பிகில் குழு! 

பிகில் படத்தோடு சம்மந்தப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் ரெய்டுக்கு மிக முக்கியமானக் காரணம் ஆன்லைன் டிராக்கர்ஸ் சொன்ன ஊதிப் பெருக்கப்பட்ட வசூல் கணக்குகளும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சம்மந்தமாக எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது மற்றும் அடுத்தகட்ட விசாரணை தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ரெய்டுக்கு பிகில் படக்குழு செய்த ஒரு செயலும் முக்கியமானக் காரணம் என சொல்லப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் ரசிகர்களை குஷியாக வைத்துக்கொள்ள படத்தின் வசூல் சாதனை விவரங்கள் இப்போது தேவைப்படுகின்றன. இந்த விவரங்களை அறிவிப்பதற்காகவும் ஆன்லைன் டிராக்கர்ஸ் என்ற சிலர் உள்ளனர். இவர்களின் டிவிட்தான் ரசிகர்களுக்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

பிகில் படம் வெளியான போது ஒவ்வொரு நாளும் இதுபோல டிராக்கர்ஸ் படம் இத்தனைக் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என அடுக்கிக் கொண்டே சென்றனர். இது ரசிகர்களை சிலிர்த்துப் போய் சில்லறைகளை சிதற விட வைத்தது. இந்த ஆன்லைன் டிராக்கர்ஸ்தான் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவித்தவர்கள்.படத்தின் தயாரிப்பு நிறுவனம் எந்த இடத்திலும் வசூல் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் இதுபோன்ற டிராக்கர்ஸ்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவித்து ரசிகர்களை போதை மனநிலையிலேயே இருக்க வைத்தது. இந்த செயல்தான் இப்போது ரெய்டில் அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. இந்த வசூல் விவரங்களை வைத்தேக் கேள்விகள் எழுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த ரெய்டு சிக்கல்களுக்கு தயாரிப்புக் குழுவும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை!

0

இந்தியாவில் வெளியானது ரியல்மி C3:பல வசதிகளுடன் சந்தைக்கு வருகை!

ரியல்மி நிறுவனத்தின் புதிய செல்போன் மாடலான C3 இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரியல்மி நிறுவனம் குறிப்பிடத்தக்கதாக மாறி வருகிறது. இந்நிலையில் ரியல்மி தற்போது தங்களது புதிய மாடலான C3 ஐ இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 5,000mAh பேட்டரி மற்றும் பின் பகுதியில் இரு கேமரா வசதி கொண்டுள்ள இந்த மாடல் ரியல் மி மற்றும் பிளிப்கார்ட் இணையதளங்களின் வழி பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. அதன் பின்னர் கடைகள் மற்றும் ஷோரூம்களில் விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

ரியல் மி C3ன் வசதிகள்:-

  • 6.5-inch HD+ (720×1600 pixels) waterdrop notch டிஸ்பிளே
  • f/1.8 aperture மற்றும் 1.25μm ultra-large single-pixel area உடன் 12-மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் f/2.4 aperture 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா
  • 5-megapixel AI ஃப்ரண்ட் கேமரா உள்ளது
  • 5,000mAh பேட்டரி
  • 195 கிராம் எடை
  • இரட்டை நானோ சிம்
  • 3GB RAM + 32GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999
  • 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.7,999

என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

0

என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா தனது நிறம் குறித்து விமர்சிக்கப்படுவது ஆதங்கமாக பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு தொடரின் போதும் தேர்ந்தெடுக்கப்படும் அணியில் குறிப்பிட்ட அளவு கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்பதை விதியாகக் கொண்டுள்ளனர்.

அதுபோல எடுக்கப்படும் வீரர்கள் ஆடும் லெவனில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கருப்பின வீரர்கள் ஊடகங்கலாலும் சக வீரர்களாலும் கேலி செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார் தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் அவர் அவ்வப்போது காயம் காரணமாகவும் பார்ம் அவுட் காரணமாகவும் அணியில் இருந்து நீக்கப்படுவதும் பின்பு சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 98 ரன்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் தனது நிறம் மற்றும் உயரம் குறித்து கேலி செய்யப்படுவது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் ‘என் நிறம் கருப்பு. ஆனால் நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். நான் அணியில் இடம்பெறுவது எனது ஆட்டத் திறமைக்காகத்தான்.நான் இல்லாதபோது எனது நிறம் மற்றும் உயரத்தை வைத்து நான் கேலி செய்யப்படுகிறேன் என்பது தெரியும் போது சங்கடமாக உணர்கிறேன். பயிற்சியாளர் காலிஸ் நான் ஃபார்முக்கு வருவதற்கு பெரிதும் உதவினார். அவரது ஒட்டுமொத்த பேட்டிங் நுணுக்கத்தையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்’ எனப் பேசியுள்ளார். பவுமாவின் பேச்சு அணிக்குள் நிலவும் நிறத்தாக்குதல்கள் பற்றி சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

பூவிற்கும் பெண்மணி வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்?

0

கர்நாடக மாநிலத்திலுள்ள ராகியம்மாள் என்ற பூவிற்கும் பெண்மணியின் வங்கி கணக்கில் திடீரென 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்தில் ராகியம்மாள் வங்கிக்கணக்கில் திடீரென ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டதால் வங்கி அதிகாரிகள் அந்த பெண்ணை அழைத்து உங்களுடைய கணக்கில் 30 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் எப்படி வந்தது என்றும் கேட்டுள்ளார்கள்

இதனால் அதிர்ச்சி அடைந்த ராகியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் சேலை வாங்கியதாகவும் அந்த சேலைக்கு பரிசு விழுந்துள்ளது எனக்கூறி தங்களுடைய வங்கி கணக்கை ஒருவர் கேட்டு பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்

இதன் மூலம் அந்த பூ விற்கும் பெண்மணி வங்கி கணக்கை சிலர் தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு வேறு சிலர் எடுக்க முயற்சித்ததையும் வங்கி அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

0

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

தர்பார் படத்தின் நஷ்டம் குறித்து விளக்கம் அளிக்க ரஜினியைத் தொடர்பு கொள்ள முயன்று அது முடியாததால் இப்போது இயக்குனர் முருகதாஸை குறிவைத்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.

பெரிய எதிர்பார்ப்புடன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட சில விநியோகஸ்தர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரஜினியை அவர் வீட்டில் சந்தித்து நஷ்டம் சம்மந்தமாக விளக்கம் அளிக்க அவர்கள் முயன்றனர். ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்காததால் அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

தர்பார் நஷ்டப் பிரச்சனை:ரஜினியை விட்டு முருகதாஸை பிடித்த விநியோகஸ்தர்கள்!

அதன் பின் நட்புரீதியாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை சந்தித்து முறையிட அவர்கள் முயல, அவரும் விநியோகஸ்தர்களை சந்திக்க மறுத்தார். அதோடு நில்லாமல் காவல்துறையில் புகார் அளித்தார். அங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பாதுகாப்புக் கோரினார். இது விநியோகஸ்தர்களுக்குக் கடுமையான கோபத்தை வரவைக்கவே முருகதாஸுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இயக்குனர் A R முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தில் பல கோடி நஷ்டமடைந்து நீதி கேட்டு தார்மீக அடிப்படையில் அலுவலகம் வந்த விநியோகிஸ்தர்களை காவல் துறையை விட்டு அவமானப்படுத்திய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே மன்னிப்பு கேள்’ எனத் தெரிவித்துள்ளனர். இதனால் தர்பார் விவகாரம் இப்போது ரஜினியை விட்டு முருகதாஸ் பக்கம் திரும்பியுள்ளது.

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

0

ரெய்டால் முடக்கப்பட்ட விஜய்:சென்னைக்குத் திரும்பிய படக்குழு!மாஸ்டர் படப்பிடிப்பு பாதிப்பு!

விஜய் வீட்டில் கடந்த இரு தினங்களாக ரெய்டு நடந்து வரும் வேளையில் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முதல் நடைபெற்று வரும் சோதனையில் பல கோடு ரூபாய் கைப்பற்ற பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக பிகில் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்ல. வீட்டில் ரெய்டு நடப்பதால் விஜய்யின் செல்போன் மற்றும் வீட்டு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதாலும் அவருடன் தொடர்பு கொள்ளாத  முடியாத நிலையிலும் அவர் எப்பொது திரும்ப ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் எனத் தெரியவில்லை. அதனால் படக்குழு மொத்தமும் படப்பிடிப்பை ரத்து செய்து செய்துவிடு சென்னைக்கு திரும்பியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு தள்ளிப்போவதால் ரிலிஸ் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆன்லைனில் ஏமாந்த திருப்பதி பக்தர்கள்: கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக புகார்

0

திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் நன்கொடை கொடுப்பது வரை ஆன்லைனில் செய்து வரும் நிலையில் போலியான இணைய தளங்களில் பல பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாந்து உள்ளதாகவும் இதில் கோடிக்கணக்கான பணம் முறைகேடாக மர்மநபர்கள் சம்பாதித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது

திருப்பதி தேவஸ்தானம் செல்லும் பக்தர்கள் இணையதளம் வழியாக தரிசன டிக்கெட் முன்பதிவு, வாடகைக்கு அறை எடுப்பது, நன்கொடை மற்றும் உண்டியல் காணிக்கை செலுத்துதல் ஆகியவைகளை ஆன்லைன் மூலமே செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சில மர்ம நபர்கள் திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலியான இணையதளங்கள் ஆரம்பித்து அதன் மூலம் பக்தர்களை கவர்ந்து பணத்தை மோசடியாக பெற்று வருவதாக தெரிந்துள்ளது. இதனை சமீபத்தில் கண்டுபிடித்த திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் மொத்தம் 19 போலி இணையதளங்கள் இருப்பதாகவும் அதனை அடையாளம் கண்டு பொதுமக்கள் அதில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தரிசன டிக்கெட் நன்கொடை உட்பட அனைத்து வங்கி நடைமுறைகளை கீழ்க்கண்ட மூன்று இணையத்தளங்களை மட்டுமே பக்தர்கள் தொடர்பு கொள்ள வேண்டுமென்றும் தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த இணையதளங்கள் இவைதான்;

1.tirupatibalaji.ap.gov.in
2.ttdsevaonline.com
3.www.tirumala.org