Home Blog Page 5770

கொரோனா பீதி முடியும் முன்னே இன்னொரு அச்சுறுத்தலா?சீனாவில் பரவும் மற்றொரு நோய்!

0

கொரோனா பீதி முடியும் முன்னே இன்னொரு அச்சுறுத்தலா?சீனாவில் பரவும் மற்றொரு நோய்!

சீனாவில் H5N1 எனும் வைரஸ் மூலம் பரவும் பறவைக்காய்ச்சல் நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 300 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க சீன மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளதாக சீன அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதேபோல இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்றும் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த நோய் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத சீன மக்கள் இப்போது புதியதாக நோய் பீதிக்கு ஆளாகியுள்ளனர். சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் மொத்தமுள்ள 8000 கோழிகளில் 4,500 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருந்ததால் அவற்றைக் கொன்றுள்ளனர்.

மேலும் நோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ள 20000 கோழிகளையும் கொல்ல சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. H5N1 என்ற இந்த வைரஸ் நோய்  பறவைகளுக்கு சுவாச நோயை ஏற்படுத்தும் தன்மை உடையது எனவும் அது மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் சீன மக்கள் மி்கப்பெரிய அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!

0

குடிநீர் வீணாவதை கண்டித்து குளியல் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்..! திருப்பூர் மாநகராட்சி கொர்ர்ர்ர்..!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சிறிய குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதைப்பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் குடிநீரில் இறங்கி வித்தியாசமான குளியல் போராட்டத்தை செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்த தமிழக அரசு வீட்டுக்கு வீடு மழைநீர் தேக்க தொட்டியை கட்ட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இருந்தும் பல இடங்களில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் எண்ணம் தமிழக மக்களிடையே ஏற்படவில்லை என்றே கூறலாம்.

மக்களைப் போலவே மாநகராட்சியும் தண்ணீர் விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தால் என்ன செய்வது. திருப்பூர் அவிநாசி சாலை பங்களா பேருந்து நிறுத்தம் அருகே குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாவதை பற்றி புகார் அளித்தும், திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்னும் சமூக ஆர்வலர் குளம் போல் தேங்கிய நீரில் இறங்கி சோப்பு போட்டு குளித்து வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார். இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாநகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்தும், சமூக ஆர்வலரின் அக்கறையை பாராட்டியும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹாங்காங்கில் மருத்துவர்கள் திடீர் ஸ்டிரைக்: கொரோனா வைரஸ் காரணமா?

0

ஏற்கனவே சீனாவுக்கு எதிராக ஹாங்காங் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருவதால் உடனடியாக சீனா எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 400க்கும் அதிகமானோர் பலியாகி உள்ள நிலையில் சீனாவுக்கு வெளியேயும் ஒரு சில உயிர் பலியாகியுள்ளது

இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஹாங்காங்கில் இந்த வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் சீனாவிற்கு வெளியே ஹாங்காங்கில் இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள ஹாங்காங் மருத்துவர்கள் உடனடியாக சீன எல்லையை மூட வேண்டும் என ஹாங்காங் நிர்வாகத்திற்கு கோரிக்கை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஹாங்காங்-சீனா இடையே உள்ள சாலை வழி மற்றும் கடல்வழி ஆகியவற்றை உடனடியாக மூடினால் மட்டுமே இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து ஹாங்காங் மக்களை பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் மருத்துவர்கள் மட்டுமன்றி நர்சுகளும் களத்தில் இறங்கி உள்ளதால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஹாங்காங் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

தர்பார் போராட்டம், பாரதிராஜா குரல், விநியோகிஸ்தர்களுடன் சந்திப்பு: என்ன ஒரு ஒற்றுமை!

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் என ஒரு சில விநியோகஸ்தர்கள் நடத்திய போராட்டம், போராட்டம் நடத்தப்பட்ட அடுத்த நாளே பாரதிராஜா ரஜினி மீது விமர்சனம் செய்து எழுப்பிய குரல், அதன்பின் தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவுடன் சந்திப்பு என இந்த மூன்றையும் இணைத்து ரஜினி ரசிகர்கள் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்

தர்பார் திரைப்படம் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல லாபத்தைக் கொடுத்த நிலையில் வேண்டுமென்றே ஒரு சில விநியோகஸ்தர்கள் இந்த படம் நஷ்டம் அடைந்ததாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டை கூறி வருவதாக ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் திடீரென பாரதிராஜா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’ரஜினியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். தர்பார் விநியோகஸ்தர்கள்களின் போராட்டம், பாரதிராஜாவின் எதிர்ப்புக் குரலை அடுத்து தர்பார் விநியோகஸ்தர்கள் பாரதிராஜாவை இன்று சந்தித்து உள்ளதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த சந்தேகத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் கிளப்பி வருகின்றனர்

திமுகவுக்கு தேர்தல் பணி செய்யும் பிரசாந்த் கிஷோர் போட்ட திட்டம்தான் இது என்று ஒரு சில ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வந்தாலும் இது உண்மையா? என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும்

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!!

0

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி: ஊருக்கே பிரியாணி விருந்து வைத்த உடன்பிறப்பால் மக்கள் நெகிழ்ச்சி..!!!

கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஒருவர், தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்திற்காக ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த பரங்கிப்பேட்டை முத்து பெருமாள் போட்டியிட்டார்.

தேர்தலுக்காக மக்களிடத்தில் பல்வேறு கட்ட பிரச்சாரங்களை செய்து, தேர்தலின் முடிவில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதற்காக பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியாண்டிக்குழி என்னும் கிராமத்தில் விருந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்து, அருகே இருந்த கிராம மக்களுக்கும் சேர்த்து விருந்து பரிமாறி நன்றியை தெரிவித்தார்.

இந்த விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவையான பிரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினர். பிரியாணி விருந்து வைத்ததில் தான் மகிழ்ச்சி அடைந்ததாக கூறி, விருந்துக்கு வந்தவர்களில் சிலரை புதிய திமுக உறுப்பினராக சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!

0

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!

பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு. அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டும் விதமாக தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை செய்தியில் வெளிப்படையாக கூறுபவர். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சரின் பேட்டியை சுட்டிக்காட்டி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குனர் பேரரசு செயல் தலைவர் ஸடாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்துள்ளார்.

மேலும் டுவிட்டரில், இந்துவாய் இருந்து கொண்டு இந்து மதத்தை இழிவாய் பேசி பிற மதங்களை ஆதரிப்பது சரியாம். ஆனால், ஒரு இந்து இந்து மதத்தை ஆதரித்து பேசினால் அவர் பதவியை பறிக்கனுமாம்’ இது நல்ல மதச்சார்பின்மை என்று தனது டுவிட்டரில் இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்து உடனே திமுகவை ஆதாரத்துடன் பலர் தாக்கி வருவது வாடிக்கையாகி உள்ளது.

நடிகர் ரஜினிக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

0

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசிய நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் இந்த சம்மனை அனுப்பியுள்ளதாகவும், வரும் 25ஆம் தேதி ரஜினி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

முன்னதாக தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டு, ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு சமூக விரோதிகள் நுழைந்தது குறித்த தகவல்கள் தெரியும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

0

5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தமிழக அரசால் ரத்து! ராமதாஸின் கோரிக்கைதான் காரணமா..?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதுவது தொடர்பாக 13.09.2019 அன்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் கடந்த காலத்தில் எழுதிய பழைய தேர்வுகளின் முறையில் இறுதி ஆண்டுத்தேர்வும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுத்தேர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த 28 ஆம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். இது சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை நேரில் அழைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கலந்து ஆலோசித்தார்.

கூட்டணி கட்சியான பாமக தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தாமல் இருக்க பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமைச்சர் சொங்கோட்டையனிடம் முதல்வர் சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் ராமதாசுடன் பொதுத்தேர்வு நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசித்ததாகவும் சொல்லப்படுகிறது.

பொதுத்தேர்வுக்கு எதிராக பாமக போராட்டம் அறிவித்தது பின்னர்,போராட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மருத்துவர் ராமதாசு தலையீடு ஒரு காரணமாக இருக்குமோ..? என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. இதனையடுத்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு 2019-2020 கல்வியாண்டின் முதல் பொதுத்தேர்வு நடத்துவதாக கூறப்பட்ட அரசாணையை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மேலும் தேர்வானது பழைய நடைமுறையின் படியே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

0

அரசியல் கூட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற நாம்தமிழர் கட்சியினர்! கன்னியாகுமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 6 பேர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று புகார் எழுந்த நிலையில் நாம்தமிழர் கட்சி போராட்டத்திற்காக பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் பதறியடித்து மாணவர்களை தேடி பள்ளிக்கு சென்றனர். எங்கே யாருடன் சென்றார்கள், என்ன ஆனார்கள் என்பதை அறிய முடியாமல் மாணவர்களின் பெற்றோர் பயந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களுக்கு மாணவர்கள் மாயமான தகவல் வேகமாக பகிரப்பட்டது.

காவல்துறையினர் தேடுதலுக்கு பின்பு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நாம்தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆறு சிறுவர்களும் திட்டமிட்டு அழைத்துச் சென்றதாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விஷயம் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று காவல் துறையினரும், பெற்றோர்களும் பள்ளி மாணவர்களை மீட்டனர். நாம்தமிழர் கட்சியை சேர்ந்த ராகுல் என்பவர் மாணவர்களின் நெருங்கிய சொந்தம் என்கிற அடிப்படையில் கட்சி கூட்டத்திற்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினர். தங்களிடம் சொல்லாமல் குழந்தைகளை ராகுல் அழைத்துச் சென்றதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. அரசியல் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்திய சம்பவம் கன்னியாகுமரியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபலங்கள்

0

சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளை தாண்டி வரும் எட்டாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இலங்கையிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஏப்ரல் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் நான்கு பேர் இணைந்துள்ளனர். மனோஜ் பாரதிராஜா, பிக்பாஸ் புகழ் டேனியல், ஒய்ஜி மகேந்திரன் மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகியோர் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது