Home Blog Page 5776

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா: பரபரப்பு தகவல்

0

கடந்த ஆண்டு வெளியான ’ஆடை’ என்ற படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அமலாபால் முழு நிர்வாணமாக நடித்து இருந்தார் என்பதும் அந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் அமலாபாலை அடுத்து தற்போது ஐஸ்வர்யா தத்தா ஒரு திரைப்படத்தில் முழு நிர்வாணமாக நடித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. விஜயஸ்ரீ இயக்கிவரும் பப்ஜி என்ற திரைப்படத்தில் தான் ஐஸ்வர்யா தத்தா முழு நிர்வாணமாக நடித்துள்ளார்

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா: பரபரப்பு தகவல்

இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஐஸ்வர்யா தத்தா அந்த காட்சியில் நடித்து கொடுத்ததாகவும் இந்த காட்சியின் படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் இயக்குனர் தவிர வேறு யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது

இந்த காட்சியில் மிகவும் துணிச்சலாக சிறப்பாக நடித்துக் கொடுத்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு இயக்குனர் விஜய் பாராட்டு தெரிவித்ததாகவும் இந்த படத்தில் நிர்வாணக் காட்சி ஏன் என்பது கதையோடு ஒன்றிப் பார்க்கும் ரசிகர்களுக்கு திரைப்படம் பார்க்கும்போது புரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’தர்பார்’ நஷ்டம் என்பது உண்மையா? ரஜினியை மிரட்டுகிறார்களா விநியோகிஸ்தர்கள்?

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்த படம் நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்ததாக லைகா நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் திடீரென நேற்று ஒரு சில விநியோகஸ்தர்கள் தங்களுக்கு தர்பார் படத்தால் பெரும் நஷ்டம் என்றும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கேட்டு கூடினார்கள். இதனையடுத்து இன்று அவர்களை ரஜினியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் முழுவதுமாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளதால் ’தர்பார்’ திரைப்படம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு வசூல் செய்தது என்ற முறையான கணக்கு உள்ளது. அதனால் பெரிய நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் யாரும் நஷ்ட ஈடு கேட்டு வரவில்லை

’தர்பார்’ நஷ்டம் என்பது உண்மையா? ரஜினியை மிரட்டுகிறார்களா விநியோகிஸ்தர்கள்?

ஆனால் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட திரையரங்குகளை உள்ளவர்கள் மட்டுமே தற்போது நஷ்ட ஈடு கேட்டு வந்திருக்கின்றனர். தர்பார் படத்தின் டிக்கெட்டை 100 முதல் 500 ரூபாய் வரை விற்று விட்டு வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட் விற்றதாக அரசிடம் கணக்கு காட்டிவிட்டு, அந்த கணக்கின் படி தங்களுக்கு நஷ்டம் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுவதாகவும் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் தற்போது நஷ்டயீடு கேட்டால் தனக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்பதற்காக ரஜினி எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுத்து விடுவார் என்ற நோக்கத்திலும் மிரட்டும் வகையிலும் அந்த விநியோகஸ்தர்கள் வந்திருப்பதாக கூறப்படுகிறது

உண்மையில் தர்பார் திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல லாபத்தைக் கொடுத்திருக்கும் நிலையில் ரஜினியை விநியோகஸ்தர்கள் மிரட்டுகிறார்கள? என்ற கேள்வி எழுந்துள்ளது

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

0

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றி பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 179 ரன்களை சேர்த்தது.

கடைசிப் பந்து வீசும் முன் ஷமியிடம் கோலி சொன்ன ஒரு வார்த்தை:வெற்றி பெற்றது எப்படி?

அதன் பின் களமிறங்கிய நியுசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடைசி ஓவரை வீசிய ஷமி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கடைசி 9 ரன்கள் சேர்க்கவேண்டிய நிலையில் அவர் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றியதால் போட்டி டை யில் முடிந்தது. அதன் பிறகு இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

20 ஓவரின் கடைசி பந்தை ஷமி வீச இருந்த போது களத்தில் ராஸ் டெய்லர் பேட் செய்து கொண்டிருந்ததால் எளிதாக வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் கோலி ஷமியோடு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்’ பந்தை ஸ்டம்புக்கு நேராகப் போட்டு விக்கெட் எடுத்தாலொழிய நாம் வெல்ல முடியாது’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து ஷமி வீசிய பந்தை டெய்லர் அடிக்க முயன்ற போது அவர் போல்ட் ஆக போட்டி டையில் முடிந்தது. கோலியும் ஷமியும் சேர்ந்து எடுத்த அந்த முடிவுதான் இந்தியா வெற்றிபெறக் காரணமாக அமைந்தது.இதனை போட்டி முடிந்த பின் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அடுத்த மாதம் திருமணம்:பெண்ணைப் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

0

அடுத்த மாதம் திருமணம்:பெண்ணைப் பற்றி மனம் திறந்த யோகிபாபு!

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபுவுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களில் கதை இருக்கிறதோ இல்லையோ யோகி பாபு கட்டாயமாக இருக்கிறார். அந்த அளவுக்கு பிஸீயாக படங்களில் நடித்து வருகிறார். லொள்ளு சபா மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவர் படிப்படியாக இன்று உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ரஜினி, விஜய், அஜித் என சூப்பர்ஸ்டார்களின் படங்களில் நடித்து முடித்துள்ள அவர் இரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரை பற்றி அதிகமாக வெளியாகும் வதந்திகளில் ஒன்று யோகி பாபுவுக்கு நடிகையோடு திருமணம் என்பதுதான். இதுபோல பலமுறை பல நடிகைகளோடு அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. அதை எல்லாவற்றையும் மறுத்த யோகி பாபு தனது திருமணம் விரைவில் நடக்குமென்றும் அதை நானே அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது தனது திருமணம் பற்றி அறிவித்துள்ளார். அதில்’ பார்கவி என்ற எளிய குடும்பத்து பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், பெற்றோர் பார்த்த இந்த பெண்ணை வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இவரது திருமணத்தில் திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் சென்னையில் அடுத்து நடக்கும் வரவேற்பு விழாவில் திரை பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிகிறது.

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்!

0

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்!

டெல்லியில் சி ஏ ஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியோடு சத்தமிட்டுக் கொண்டே மாணவர்களைப் பார்த்து சுடுகிறார். அதில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் உள்ளங்கையில் அடிபட்டது.

ஆனால் இவ்வளவு சம்பவங்களையும் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக வந்திருந்த போலிஸ்காரர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் பொதுமக்களின் கண்டனந்த்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து போலிஸார் தெரிவித்த தகவலிலோ நாங்கள் செல்வதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர் ஷாதாப் பாரூக்கை மருத்துவமனையில் சந்தித்த பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவரின் மருத்துவ செலவை பல்கலைக்கழகம் ஏற்கும் என அறிவித்தார். நேற்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவுதாள் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரைக் கொலை செய்த கோட்சேவைப் போல மற்றொரு நபர் துப்பாக்கியோடு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது இன்னும் கோட்ஸேக்கள் சாகவில்லை, அவர்கள் காந்திகள் உருவாகும் போது கொலை செய்யக் காத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

0

உயர்நீதிமன்றமே ஆணையிட்டும் செயல்படுத்த மறுக்கும் தேர்வு வாரியம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை சமீபத்தில் பாமக சார்பாக சுட்டி காட்டிய நிலையில் உயர் நீதிமன்றமும் அதை ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் தேர்வாணையம் இதை செயல்படுத்த மறுப்பது கண்டிக்கதக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் “ஆசிரியர்கள் தேர்வு: சமூகநீதி தீர்ப்புக்கு
எதிராக வாரியம் மேல்முறையீடு செய்வதா?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதை உறுதி செய்து, புதிய தேர்வுப் பட்டியலை 2 வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாரியம் தீர்மானித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 20-ஆம் தேதியும், ஜனவரி 2-ஆம் தேதியும் இரு கட்டங்களாக வெளியிடப்பட்டன. முதல்கட்டமாக வெளியிடப்பட்ட முடிவுகளில் வேதியியல் பாட ஆசிரியர்கள் தேர்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், அப்பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளுக்கு உட்பட்டு புதிய பட்டியலை தயாரித்து வெளியிடும்படியும் 24.11.2019 அன்று பா.ம.க. வலியுறுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட முடிவுகளில் தமிழ், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு முடிவுகளிலும் அதே போன்று இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருந்ததை ஜனவரி 5-ஆம் தேதி பாமக அம்பலப்படுத்தியது.

இதனிடையே வேதியியல் பாட ஆசிரியர் தேர்வில், பொதுப்பிரிவில் வெற்றி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பொதுப்பிரிவில் சேர்க்காமல், இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கில் கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதியரசர் ஆனந்த் வெங்கடேசன், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி, வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து விட்டு, இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைபிடித்து புதிய தேர்வு பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட இரு வார அவகாசம் கடந்த 23-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இன்றுடன் மூன்றாவது வாரமும் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய பட்டியலை தயாரித்து வெளியிடவில்லை. உண்மையில் நீதிமன்றம் ஆணையிட்ட வேதியியல் பாடத்தில் மட்டுமின்றி, தமிழ், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய பாடங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் இக்குளறுபடி நடந்திருக்கிறது. அதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் தாமாக முன்வந்து குளறுபடி நடந்த அனைத்துப் பாடங்களுக்குமான புதிய பட்டியலை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த பாடத்திற்குமே புதிய பட்டியலை தயாரிக்காத ஆணையம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆசிரியர்கள் தேர்வில் நடந்துள்ள சமூக அநீதியை உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரி செய்துள்ளது. அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவது தான் நியாயமான செயலாகும். ஆனால், அதற்கு மாறாக, சமூக நீதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என எந்த அடிப்படையில் வாரியம் முடிவு செய்தது என்று தெரியவில்லை. தமிழக அரசின் முதன்மை அடையாளங்களில் ஒன்று சமூகநீதி ஆகும். அவ்வாறு இருக்கும் போது முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆகியோருடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கலந்து ஆலோசித்ததா? அல்லது தன்னிச்சையாக இந்த முடிவுக்கு வந்ததா? என்பது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விளக்கமளிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாகவோ, எவரேனும் ஊழல் செய்ததாகவோ எவரும் குற்றஞ்சாட்டவில்லை. உயர்நீதிமன்றமும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது கடுமையான கண்டனம் எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக, பின்னடைவுப் பணியிடங்களையும், நடப்புக் காலியிடங்களையும் ஒன்றாக நிரப்பும் போது முதலில் நடப்புக் காலியிடங்களுக்கான பொதுப்பிரிவு இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; பின்னர் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் முதலில் பின்னடைவுப் பணியிடங்களையும், தொடர்ந்து நடப்புக் காலியிடங்களில் சம்பந்தப்பட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற விதியை தேர்வு வாரியம் பின்பற்றவில்லை; அந்தக் குறையை சரி செய்ய வேண்டும் என்று தான் உயர்நீதிமன்ற நீதியரசர் அவரது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அதை எதிர்த்து வாரியம் மேல்முறையீடு செய்கிறது என்றால், அது சமூகநீதிக்கு எதிராக உள்ளது என்று தான் அர்த்தம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதல் கட்ட தேர்வுப் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே இட ஒதுக்கீட்டு விதி மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி வாரியத் தலைவருக்கு பாமக கடிதம் எழுதியது. பா.ம.க. வழக்கறிஞர்கள் குழுவும் அவரை நேரில் சந்தித்து எடுத்துக் கூறியது. அதன்பின் இப்போது உயர்நீதிமன்றமே ஆணையிட்டும், அதை செயல்படுத்த தேர்வு வாரியம் மறுப்பதால் அதன் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. வாரியத்தின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் சமூகநீதியை காப்பதில் ஈடு செய்ய முடியாத சீரழிவை ஏற்படுத்தி விடும். எனவே, இந்த விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வேதியியல் மற்றும் பிற பாடங்களுக்கு புதிய ஆசிரியர் தேர்வு பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

0

சென்னை விமான நிலையத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1.35 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல்

வியாழக்கிழமையன்று துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அஜ்மல் தாசீன் (23) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டு, அவரிடம் நடத்திய சோதனையில், 3 பொட்டலங்களில் பசை வடிவிலான தங்கமும், 49 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை ஒரு பொட்டலத்திலும் வைத்து, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. 

மொத்தத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 712 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பயணி கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, புதன்கிழமையன்று இரவு கொழும்புவில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்  மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜித் (36), உபைதூர் ரஹ்மான் (37), சபீர் அலி (37) விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மூவரும் பசை வடிவிலான தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்தி வந்திருப்பதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 555 கிராம் எடையுள்ள பசைவடிவிலான தங்கம் மற்றும் 3 தங்க மோதிரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆக மொத்தத்தில்  ரூ.57 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.35 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, மேல்விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

0

இந்திய சர்வதேச தோல் கண்காட்சியை சென்னையில் மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

இந்திய சர்வதேச தோல் கண்காட்சி 2020-ஐ மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் சென்னையில் தொடங்கி வைக்கிறார்

35-ஆவது இந்திய சர்வதேச தோல் கண்காட்சி பிப்ரவரி 01-03, 2020 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.  ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியை மத்திய திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே, 31 ஜனவரி 2020 மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார். 

தொடக்க நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு கே சி கருப்பணன், தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், இந்தியாவுக்கான இத்தாலிய வர்த்தக ஆணையர் அலெஸ்சாண்ட்ரோ லிபரேட்டோரி, தோல் ஏற்றுமதி மையத்தின் தலைவர் பி ஆர் அகில் அகமது, இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு ராஜேஷ் அகர்வால், தோல் ஏற்றுமதி மையத்தின் தென்மண்டல தலைவர் திரு இஸ்ரார் அகமது, துணைத் தலைவர் திரு சஞ்சய் லீகா, சர்வதேச வர்த்தக அமைப்பின் (ஐநா) இயக்குநர் டாக்டர் ஆஸிஷ் ஷா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய தோல் ஏற்றுமதி தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், இந்தியாவை முதலீடு மற்றும் உற்பத்திக்கு உகந்த இடமாக மாற்றுவதோடு, வடிவமைப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான மையமாகவும் மாற்றும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த கண்காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது. 

இந்த கண்காட்சியில், 130 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தோல் பொருட்கள், இயந்திரங்கள்  மற்றும் தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. 

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம், இந்திய காலணி தயாரிப்போர் கூட்டமைப்பு, இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய காலணி உதிரி பாக உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. 

இதற்கான டிக்கெட்டுகள் கண்காட்சி நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விற்பனை செய்யப்படும்.  யாருக்கும் இலவச அனுமதியில்லை.  மாணவர்களுக்கும் சலுகை கட்டணம் ஏதும் வழங்கப்படாது என்றும் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

0

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்புமிக்க சேவைக்காக, குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள்.

இந்தத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறையில்லாத, சிறப்புமிக்க செயல்பாடு அடிப்படையில் இந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

இந்த வகையில், இந்த ஆண்டு சிறப்புமிக்க சேவை புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டிமத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் திருமதி வி.ஸ்ரீதேவிதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி, கணினி போன்ற பல்வேறு தலைப்புகளில் முறையான பயிற்சியாளராக இருப்பவர். வரி ஏய்ப்பு எதிர்ப்புப் பணி, பில் வர்த்தக வழக்குகள் பதிவு ஆகியவற்றில் சாதனை படைத்துள்ள இவர், ஜிஎஸ்டி, மத்திய கலால்வரி ஆகியவற்றின் மூலம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தவர். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது, அதுகுறித்து தூர்தர்ஷன், எஃப்எம் வானொலி, யூடியூப் அலைவரிசை ஆகியவற்றில் தமிழில் விளக்கமளித்து, துறையின் முகமாக விளங்கியவர். ஜிஎஸ்டியில் வர்த்தகம் செய்வதற்கு மிகச்சிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்தவர்.   

இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையிலான, இந்த விருது பின்னர் ஸ்ரீதேவிக்கு வழங்கப்படும் என்று சென்னையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பல்! அனுமதிக்க கூடாது- மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

மருத்துவ கழிவுகளுடன் சென்னை வந்துள்ள சீன கப்பலை அனுமதிக்ககூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளர் . சீன கப்பலை மத்திய அரசு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் பலி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீன மருத்துவ கழிவுகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று சென்னை துறை முகத்திற்கு வந்துள்ளது .

சென்னை துறைமுக அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது . இந்த கப்பலால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கபட்டுள்ளது. இந்த கப்பலை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.