Home Blog Page 5785

தொடர்ச்சியாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

0

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் வீடியோ கேமில் மூழ்கி அதிலேயே அவர்கள் மணிக்கணக்காக நேரத்தை செலவிடுவதால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை சில சமயம் ஏற்படுகிறது. இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடக்கூடாது என்று பெற்றோர் கட்டுப்படுத்தினால் அவர்கள் கடும் கோபமடைந்து விபரீதமான முடிவுகளை எடுத்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹமீம் மிர்சன் என்ற இளைஞர் கடந்த சில தினங்களாக அவரது வீட்டில் பாப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தொடர்ச்சியாக அவரது அந்த கேமை விளையாடிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கேம் விளையாடி கொண்டிருந்தபோதே திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்ந்தபோது அவரது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தார். தொடர்ச்சியாக அதிக நேரம் அதிக ஆர்வத்துடன் பப்ஜிகேம் விளையாடும் போது மூளைக்குச் செல்லும் ரத்தம் பாதிக்கப்படும் என்றும் எனவே எந்த ஒரு கேமாக இருந்தாலும் சில குறிப்பிட்ட நேரம் மட்டுமே அந்த விளையாட்டை விளையாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பப்ஜி கேம் மட்டும் என்று எந்த கேமாக இருந்தாலும் சரி மொபைலில் விளையாடும் கேமாக இருந்தாலும் சரி, குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதை பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கேம் விளையாடுவதால் உயிரிழப்பு ஏற்படுவது என்பது இது முதல் முறை அல்ல என்றும் இனியாவது பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

0

வரும் பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய கட்சிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கபில் மிஸ்ரா என்பவர் திடீரென பாஜகவில் சேர்ந்து தற்போது பாஜக வேட்பாளராக டெல்லி மாடல் டவுன் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவுசெய்தார்.

ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி வீதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டை தேர்தலுடன் ஒப்பிட்டு இருந்த அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்தை உடனடியாக டெலிட் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.

மேலும் கபில் மிஸ்ரா 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தர்வு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே இன்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரம் கபில் மிஸ்ரா தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேன் சுவையா…! தெய்வீக சுவையா..! கடலுக்கு நடுவே பஜனை பாடும் நித்தி குரூப்; தொடரும் தேடுதல் வேட்டை..!!

0

தேன் சுவையா…! தெய்வீக சுவையா..! கடலுக்கு நடுவே பஜனை பாடும் நித்தி குரூப்; தொடரும் தேடுதல் வேட்டை..!!

ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வழக்கு சம்பந்தமாக நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த பிரபல சாமியார் நித்தியானந்தா இருக்கும் இடம் தற்போது ரகசிய தகவலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. வெளிநாடு தப்பி ஓடிய நித்தியை கைது செய்வதற்காக குஜராத் காவல் துறையினர் சர்வதேச போலீசாரை நாடினர்.

இதனையடுத்து, நித்தி எந்த நாட்டில் பதுங்கியுள்ளார் என்பதை கண்டுபிடிக்க சர்வதேச காவல்துறையினர் தற்போது புளூ கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன் மூலமாக நித்தி தலைமறைவாக இருக்கும் இடம் கசிந்துள்ளது? நித்தியானந்தா புதிய கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு கரீபியன் தீவுகளில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை காவல்துறை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், பசிபிக் நாட்டின் வனுவாட்டு என்னும் தீவில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாகவும், அங்கு இருக்கும் வங்கியில் புதிய கணக்கை துவங்கி மொத்த பணமும் வைத்திருப்பதாகவும் ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மீக பூஜைக்காக கட்டணம் செலுத்தும் விவரங்களை இணையத்தில் ஒருவர் தேடியபோது, நித்தியின் நம்பிக்கையாளர் ஒருவர் அனுப்பிய இமெய்ல்-ல் சிறப்பு பூஜைக்காக பணத்தை செலுத்த வனுவாட்டு நேஷ்னல் வங்கியின் போர்ட் விலா பிராஞ்ச்சில், கைலாசா லிமிடெட் என்கிற பெயரில் ஒரு பேங்க் அக்கவுண்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வனுவாட்டு பேங்க்கின் வங்கி கணக்கை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வங்கியில் முதலீடு செய்தால் சொத்துவரி, வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்ற எந்த வரியும் செதுத்த வேண்டிய அவசியமில்லை. வங்கி அக்கவுண்ட் தொடங்கும் நபர்களை பற்றி வெளியே தகவல் தெரிவிக்காமல், ரகசியமாக வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல்களை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நித்தியானந்தா விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

0

குழந்தைகளை சந்தித்த மோடி:பிரகாசமான முகம் எப்படி?குட்டிக்கதை சொல்லி ஊக்குவிப்பு !

சாதனை செய்து விருது பெற்ற மாணவர்களை இன்று தனது இல்லத்தில் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்திப்பை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் சந்திக்க தயார் என்ற மனநிலையில் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வருகிறார். தன் வெளிநாட்டுப் பயனங்களுக்கு இடையில் இந்தியாவில் இருக்கும் நேரத்தில் தனது சந்திப்புகளை பிரதமர் இல்லத்தில் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாணவர்களுக்கு ’பிரதான்மந்திரி பால் புரஸ்கார்’  என்ற விருது பெற்ற மாணவ மாணவிகளை தன்னுடைய இல்லத்தில் சந்தித்தார்.அப்போது அவர்களோடு மோடி தேநீர் அருந்தினார். அதன் பின்னர் மாணவர்களுடனான உரையாடலில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடம் பேசிய மோடி, ’இங்கு வந்திருக்கும் மாணவர்களின் உழைப்பு எனக்கு ஆச்சர்யத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது’ எனக் கூறினார்

அப்போது மோடி தன்னுடைய முகம் எப்படி இந்த வயதிலும் பளபளப்பாக இருக்கிறது என்பதன் ரகசியத்தை மாணவர்களிடம் சொன்னார். அதை ஒரு குட்டிக்கதையாக சொன்ன மோடி ’என்னிடம் நண்பர் ஒருவர் ‘உங்கள் முகம் எப்படி இவ்வளவு பிரகாசமாக இருக்கிறது எனக் கேட்டார்?. நான் அவரிடம்  ‘கடுமையாக உழைப்பால் எனது முகத்தில் அதிகமாக வியர்வை உருவாகும். நான் அந்த வியர்வையோடே எனது முகத்தை மசாஜ் செய்வேன். அதனால் எனது முகம் பளிச்சென்று உள்ளது.’ எனக் கூறினேன். அது போல குழந்தைகளாகிய நீங்களும்  ஒருநாளைக்கு வியர்க்கும் அளவுக்கான வேலைகளை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மோடியின் இந்த குட்டிக்கதை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான்… பேச்சுக்குழு அல்ல! மத்திய அரசின் துரோகத்தை சுட்டி காட்டும் மருத்துவர் ராமதாஸ்

0

தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான்… பேச்சுக்குழு அல்ல! மத்திய அரசின் துரோகத்தை சுட்டி காட்டும் மருத்துவர் ராமதாஸ்

தென்பெண்ணையாற்றுச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கர்நாடகத்திற்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவது தொடர்பான சிக்கலை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு மாறாக பேச்சுக் குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

கர்நாடகத்தின் பங்கரபேட்டை ஒன்றியம் யார்கோல் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் துணை ஆறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை நிறுத்த ஆணையிட வேண்டும்; அதேபோல் பெண்ணையாற்றின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இன்றி எந்த பாசனத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு ஆணையிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து விட்டது. இந்த கோரிக்கைகள் குறித்து தீர்மானிக்க நடுவர் மன்றம் அமைக்கும்படி மத்திய அரசை அணுகும்படியும் ஆணையிட்டது. அதன்படி நடுவர் மன்றம் அமைக்கும்படி நீர்வள அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

நடுவர் மன்றம் அமைக்கக்கோரி கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதியே தமிழக அரசு விண்ணப்பம் செய்து விட்ட நிலையில், இன்று வரை நடுவர் மன்றம் அமைக்கப்படவில்லை. மாறாக, தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை அமைக்கும் விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்துவதற்காக குழு ஒன்றை மத்திய நீர்வள அமைச்சகம் அமைத்துள்ளது. கடந்த 20-ஆம் தேதியே அக்குழு அமைக்கப்பட்டுவிட்ட போதிலும், அதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் விவரம், அதன் அதிகார வரம்பு உள்ளிட்ட விவரங்கள் எதையும் மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிடவில்லை.

தென்பெண்ணையாற்றுச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கர்நாடகத்திற்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நதிநிர் பிரச்சினைகளைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதன் நோக்கமே, அந்த அமைப்புக்கு குடிமையியல் நீதிமன்றத்திற்கான அதிகாரம் உண்டு என்பதால் தான். மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் உயரத்திற்கு அணை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 70% பணிகள் நிறைவடைந்து விட்டன. இத்தகைய சூழலில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், இரு தரப்பு கருத்துகளையும் விசாரித்து, இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை அணையின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்கால ஆணை பிறப்பிக்க அந்த அமைப்புக்கு அதிகாரம் உண்டு. அவ்வாறு பிறப்பிக்கப்படும் ஆணையை கர்நாடகம் மீற முடியாது. அது தான் தமிழகத்திற்கு நீதி வழங்குவதாக அமையும்.

மாறாக, பேச்சுவார்த்தைக் குழுவுக்கு அத்தகைய அதிகாரம் எதுவும் கிடையாது. அதைப் பயன்படுத்திக் கொண்டு ஒருபுறம் தமிழகத்துடன் பேச்சு நடத்திக் கொண்டே, மறுபுறம் கர்நாடகம் அணையை கட்டி முடித்து விடும் வாய்ப்பு உள்ளது. அதன்பின்னர் இச்சிக்கல் குறித்து பேச்சு நடத்துவதாலோ, நடுவர் மன்றம் அமைப்பதாலோ எந்த பயனும் ஏற்படாது. கடந்த காலங்களில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பிரச்சினைகள் தொடர்பாக கர்நாடகத்துடன் தமிழக அரசு நடத்திய பேச்சுக்களால் எந்த பயனும் ஏற்பட்டதில்லை. இப்போது மத்திய அரசு அமைக்கும் பேச்சுவார்த்தைக் குழுவாலும் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

1892ஆம் ஆண்டில் சென்னை – மைசூர் மாகாணங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆறும் வருகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி முதல்மடை பாசனப் பகுதிகளில் எதை செய்வதானாலும், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டும். ஆனால், தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் கர்நாடகம் அணை கட்டி வரும் சூழலில் அதற்கு தீர்வு காண்பதற்கு சரியான அமைப்பு நடுவர் மன்றம் தானே தவிர, இருதரப்பு பேச்சுவார்த்தைக் குழு அல்ல.

தென்பெண்ணையாறு கர்நாடகத்தில் தோன்றினாலும் அம்மாநிலத்தில் மிகக் குறைந்த தொலைவுக்கு மட்டுமே ஓடுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஓடி கடலூர் மாவட்டத்தில் வங்கக்கடலில் கலக்கிறது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழப்பர். இதை உணர்ந்து தென்பெண்ணையாறு சிக்கலைத் தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் அதில் கூறியுள்ளார்.

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!!

0

ஜனவரி 25 : தமிழ் மொழிக்காக தன் உயிரையே தியாகம் செய்த தமிழர்கள்! மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று..!!

தமிழின வரலாற்றில் மிக முக்கியன போராட்டம் மொழிப்போர் போராட்டமாகும். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு செய்த காரணத்தால் தமிழர்கள் வெகுண்டெழுந்து வெற்றிபெற்ற போராட்டமே இந்தி எதிர்ப்பு போராட்டம்.

1937 – ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண முதல்வர் ராஜாஜி இந்தி கட்டாய பாடம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு தமிழக தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது மொழித் திணிப்பு மட்டுமல்ல, தமிழினத்திற்கான அடக்குமுறை என்று பல்வேறு கருத்துகள் வெளியானது. இந்தியை திணிப்பதால் தமிழ் மொழி சிதைவு, பண்பாடு, இலக்கியம், தமிழரின் தொன்மையான கலை அழிய நேரிடும் என்று எதிர்ப்பு கிளம்பியது.

இந்தி திணிப்பு தமிழ்மொழியை அழிக்கும் முயற்சி என்று கூறி மறைமலை அடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்திரபாண்டியன், சோமசுந்தர பாரதியார், உமா மகேசுவரனார், பட்டுக்கோட்டை அழகிரி, அண்ணா, கருணாநிதி, சண்முகானந்த அடிகள் போன்ற பல்வேறு அறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டு திசம்பர் 26 ஆம் தேசி கி.ஆ.பெ.விசுவநாதம் திருச்சியில் இந்தி திணிப்பிற்கு எதிரான முதல் மாநாட்டை நடத்தினார்.

முதல் சம்பவம்: 1938 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை பெரியார் முன்வைத்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், நடராஜன் மற்றும் தாளமுத்து என்னும் தமிழ் பற்றாளர்கள் பலியாயினர். 1948 ஆம் ஆண்டு ஓமந்தூர் ரெட்டியார் தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் என்று அறிவித்தார். கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு இந்தி திணிப்பு கைவிடப்பட்டது.

இரண்டாவது சம்பவம்: மேலும் இந்தியை கட்டாயமாக திணிக்கும் முயற்சி 1952 ல் இருந்து 1964 வரை தீவிரமாக உருவானது. இதற்கு எதிரான போராட்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தது. 1964 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்புக்கான போராட்டம் தீவிரமடைந்து, தமிழ்நாடு முழுக்க பல்வேறு தலைவர்களால் இந்தி எதிர்ப்பு போரட்டக் களமாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்போதைய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

கைது சம்பவத்திற்கு பிறகு, மாணவர்கள் போராட்ட களத்தில் குதிக்க ஆரம்பித்தனர். ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அப்போதைய அரசால் தாக்குதல் நடத்தப்பட்டதால் போராட்டம் மேலும் தமிழகம் முழுக்க வெடித்தது. தாக்குதல் நடந்தாலும் போராட்டத்தில் இருந்து மாணவர்கள் பின்வாங்கவில்லை.

உயிர்நீத்த தியாகிகள் : 1964 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தமிழ் மொழியின் மீது பற்று கொண்ட கீழப்பழுவூர் சின்னசாமி என்பவர் திருச்சி ரயில்வே சந்திப்புக்கு அருகே “தமிழ் வாழ்க” இந்து ஒழிக என்று முழக்கமிட்டு தீக்குளித்து இறந்து போனார். இவரை அடுத்து கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தமிழ் மொழிக்காக உயிரை விட்டனர்.

இந்தி திணிப்புக்கு எதிராக உயிர்விட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்தி திணிப்பு முழுவதுமாக கைவிடப்பட்டது. மொழிப் போரில் உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக வருடந்தோறும் ஜனவரி 25 ஆம் தேதி “மொழிப்போர்” தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இறந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர ஊதியம், வேலைவாய்ப்பை அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழிதான் ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், நீதிமொழியாகவும் வரவேண்டும், இதுவே மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று தியாகிகளின் குடும்பத்தினர் கூறுகின்றனர். தமிழ் மொழிதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகவும் உள்ளது.

எதிரிகளுக்கு நன்றி கூறி வரலட்சுமி வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கை!

0

கடந்த 2012ஆம் ஆண்டு ‘போடா போடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி இந்த 8 ஆண்டுகளில் நடிகை வரலட்சுமி 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளிவரவுள்ள ‘வெல்வெட் நகரம்; திரைப்படம் தான் அவரது 25வது திரைப்படம். இதனையடுத்து வரலட்சுமி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு ஆதரவு தந்தவர்கள் மட்டுமின்றி தனது ஊக்கத்தை தடுத்த எதிரிகளுக்கும் நன்றி என கூறியுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரங்கள் இதோ:

இது ஒரு நீளமான, கடினமானப்‌ பயணமாக இருந்துள்ளது. நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபமல்ல என்பார்கள்‌. அது என்‌ விஷயத்தில்‌ உண்மை. ஆனால்‌ கனவுகள்‌ கண்டிப்பாக ஒரு நாள்‌ நிஜமாகும்‌. எனது சிறந்த திறனில்‌ நான்‌ வேலை செய்திருக்கிறேன்‌. என்‌ வாழ்க்கையில்‌ இந்தக்‌ கட்டத்தை எட்ட நான்‌ பல சவால்களை சந்தித்துள்ளேன்‌. இப்போது நான்‌ 25 படங்களை முடித்திருக்கிறேன்‌ என்று நினைப்பது எனக்குப்‌ பெரிய அளவுகோலாகத்‌ தெரிகிறது

என்ன நடந்தாலும்‌ என்னுடன்‌ நின்ற, என்னை ஆதரித்த அனைவருக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. என்‌ பக்கம்‌ நின்று என்‌ ஊக்கத்தைத்‌ தடுத்தவர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. ஏனென்றால்‌ உங்கள்‌ எதிர்மறை எண்ணம்‌ தான்‌ என்னை வலிமையாக்கியது. உங்களைத்‌ தவறென்று நிரூபிக்க இன்னும்‌ பிடிவாதம்‌ பிடிக்க வைத்தது. என்னை ஆதரித்த. அன்பு காட்டிய. என்னுடன்‌ வளர்ந்த என்‌ அன்பார்ந்த ரசிகர்கள்‌ அனைவருக்கும்‌ நன்றி

என்‌ மீது கட்டுப்பாடில்லாத நம்பிக்கை வைத்த என்‌ அனைத்து இயக்குநர்களுக்கும்‌, தயாரிப்பாளர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. நிறைய அன்பு, மகிழ்ச்சி, வெற்றியென என்னை ஆசிர்வதித்த கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்‌. என்‌ நல்லது கெட்டதுக்கு நடுவில்‌ என்னுடனேயே இருந்த எனது ஒப்பனைக்‌ கலைஞர்‌ ரமேஷ்‌ அண்ணாவுக்கும்‌ என்‌ ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும்‌ நன்றி கூற விரும்புகிறேன்‌. 25 படங்களை முடித்ததை நான்‌ ஆசிர்வாதமாக உணர்கிறேன்‌. என்னுடன்‌ இருந்த அனைத்து பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு என்‌ நன்றி.

என்றும்‌ என்‌ பணியில்‌ சிறந்து விளங்க முயற்சிப்பேன்‌. எனது சிறந்த நடிப்பைத்‌ தந்து உங்களுக்கு சிறந்த பொழுதுபோக்குத்‌ தர என்னை அர்ப்பணிப்பேன்‌. தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள்‌. காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கும்‌. தொடர்ந்து கனவு காணுங்கள்‌. உங்களால்‌ முடிந்த அத்தனை அன்பையும்‌. மகிழ்ச்சியையும்‌ பரப்புங்கள்‌.

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/varusarath/status/1220934933230735360

24 ஆயிரம் கடிதங்களை டெலிவரி செய்யாமல் வீட்டிலேயே வைத்து கொண்ட தபால்காரர்: அதிர்ச்சி தகவல்

0

ஜப்பான் நாட்டில் தங்களுக்கு வரவேண்டிய கடிதங்கள் வரவில்லை என பலர் புகார் கொடுத்த நிலையில் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தபால்காரர் ஒருவரது வீட்டில் ஜப்பான் போலீசார் திடீரென சோதனையிட்டனர். இந்த சோதனையில் அவரது வீட்டில் சுமார் 24 ஆயிரம் கடிதங்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். இன்னும் பல கடிதங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ’வீடுகளைத் தேடி கண்டுபிடித்து கடிதங்களை டெலிவரி செய்ய சிரமமாக இருந்ததாகவும் அதனால் அப்படிப்பட்ட கடிதங்களை வீட்டிலேயே குவித்து வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார். கடிதங்களை டெலிவரி செய்ய முடியவில்லை என்று தபால் அலுவலகத்தில் திருப்பிக் கொடுத்தால் தன்னை பணிபுரிய தகுதியற்றவன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்பதால் அந்த கடிதங்களை வீட்டிலேயே வைத்துக் கொண்டதாக போலீசாரின் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. இதனை அடுத்து ஜப்பான் தபால் நிலையம் தபால்கள் கிடைக்காத வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வருகிறது.

ஆறே நாட்களில் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டும் சீனா!

0

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த வைரஸினால் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து சீனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சேர்க்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு ஆயிரம் படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையை அதிவேகமாக கட்டி வருகிறது. இந்த மருத்துவமனையை ஆறே நாட்களில் கட்டி முடிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துமனையின் பணி பிப்ரவரி 2ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி இந்த மருத்துவமனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மருத்துவமனையை கட்டும் பணி இரவு பகலாக நூற்றுக்கணக்கான இயந்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் உதவியால் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை திறக்கப்பட்ட உடன் கொரனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

0

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு முதன் முதலில் அந்த பெயரை வைத்தது யார் என இரு மலையாள இயக்குனர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய சினிமா ரசிகர்களுக்கும் நயன்தாரா பிரபலமான நாயகி. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லுமளவுக்கு அளவுக்கு இப்போது அவருக்கென தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது.

இன்று இத்தகைய நிலையில் இருக்கும் நயன்தாரா முதலில் அறிமுகமானது மனசிக்கனரே என்ற மலையாள படத்தில். அந்த படத்தை இயக்கியவர் சத்யன் அந்திக்காடு எனும் மலையாளத்தின் புகழ்பெற்ற இயக்குனர். அப்படத்தில் தான் அவரது இயற்பெயரான டயானா மரியம் குரியன் என்ற பெயர் நயன்தாரா என மாற்றப்பட்டு திரையில் தோன்றியது.

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

அதன் பின் அவர் நடித்த எல்லா படங்களிலும் நயன்தாரா என்றே இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பெயரை யார் வைத்தது என்பது தொடர்பாக இரு மலையாள இயக்குனர்கள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். சகபாடி 1975 என்ற படத்தை இயக்கிய ஜான் டிட்டோ என்பவர் ’தான் 2003 ஆம் ஆண்டு ஒரு கதை விவாதத்தில் இருந்தேன். அப்போது சத்யன் அந்திக்காடு படத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் என்னிடம் புதுமுக நாயகிக்கு பெயர் தேடுவதாக சொல்லி, என்னை ஒரு நல்லப் பெயர் சொல்ல சொன்னார். அப்போது நான் சொன்ன பெயர்தான் நயன்தாரா. ஆனால் இந்த விஷயம் நயன்தாராவுக்கே தெரியாது’ எனக் கூறியுள்ளார்.

ஆனால் இதை இயக்குனர் சத்யன் அந்திக்காடு மறுத்துள்ளார். தனக்கு ஜான் டிட்டோ யாரென்ற தெரியாது எனவும் தனது படத்தின் கதையாசிரியர் ரஞ்சன் பிரமோத்தான் அந்தப் பெயரை சொன்னதாக சொல்லியுள்ளார். இந்த இருவரின் சண்டை மலையாளத் திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எப்படி நயன்தாராவுக்கு யார் அந்த பெயரை வைத்தது என்றே தெரியாதோ அதே போல் இப்போது இருவரும் சண்டைப் போட்டுக் கொள்வதும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.