Home Blog Page 5787

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !

0

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் இலக்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

தங்கள் மண்ணில் களம் இறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். பூம்ராவைத் தவிர அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸர்க்கும் அனுப்பினர். அந்த அணியின் மன்ரோ, வில்லியம்ஸன் மற்றும் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால் நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் சேர்த்தது.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! நியுசிலாந்து பவுலிங்கை ஊதித் தள்ளிய இந்தியா !

இதையடுத்து 204 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார்.அதன் பிறகு வந்த கோலி மற்றும் ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.  அவர்கள் இருவரும் சேர்ந்து 99 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் 56 ரன்களில் அவுட் ஆக அடுத்ததாகக் களத்துக்கு வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இதற்கிடையில் கோலி 45 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்.

அதன் பின் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி நேரத்தில் அதிரடியில் இறங்க  ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மனிஷ் பாண்டேவும் ஸ்கோரை உயர்த்தும் அளவுக்கு விளையாடினார். இதனால் இந்திய அணி இலக்கை 19 ஓவர்களில் 204 ரன்கள் இலக்கை எட்டியது. கடைசி வரை அவ்ட் ஆகாமல் 58 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.

கர்ப்பிணிகளுக்கு இனி விசா கிடையாதா? டிரம்ப் அதிரடி முடிவால் பரபரப்பு!

0

வெளிநாட்டு கர்ப்பிணிகள் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும்போது அங்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு எளிதில் அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடுகிறது. இதனை அடுத்து வேண்டுமென்றே கர்ப்பிணி பெண்கள் குழந்தை பிறக்கும் சமயத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இனிமேல் கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அமெரிக்கா அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனிமேல் விசா விண்ணப்பிக்கும் போது பெண்கள் கர்ப்பிணியாக இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அவர்கள் எத்தனை மாத கர்ப்பிணியாக உள்ளனர்? அவர்கள் எத்தனை மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளனர்? அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும்போது கர்ப்பமாகும் ஐடியா இருக்கிறதா? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு அதன் பின்னரே விசா வழங்கப்படும் என்று குடியுரிமை அதிகாரிகள் என்று தெரிவித்தனர்.

இதனால் இனிமேல் அமெரிக்கா சென்று குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு மிக எளிதில் அமெரிக்க குடியுரிமை பெற்று விடலாம் என்ற எண்ணம் பலிக்காது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா மற்றும் சீனா நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பலர் அமெரிக்காவில் குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையை கட்டுப்படுத்தவே அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

0

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

பாரதி ராஜா நடிக்கும் மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர் இயக்கி நீண்ட வருடங்களாக ரிலீஸாகாமல் முடங்கி கிடந்த மீண்டும் ஒரு காதல் திரைப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

இந்த படத்தில் பாரதிராஜா, நட்சத்திரா. ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம்பெண் ஒருவருக்கும் வயது முதிர்ந்த ஒருவருக்கும் இடையிலான நட்பைப் பற்றிய கதையான இதை த்ரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் பாரதிராஜா. படம் ரிலிஸாகாவிட்டாலும் முக்கிய பிரமுகர்கள் பலர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர்.

முதலில் ஓம் எனப் பெயரிடப்பட்டு 2014 ஆம் ஆண்டே இந்த படத்தை தொடங்கினார் பாரதிராஜா. ஆனால் பல பிரச்சனைகளால் படம் தாமதமாகிக் கொண்டே போனது. இந்நிலையில் இதே போன்ற கதைக்களத்தில் பாரதிராஜாவின் முதல் மரியாதை வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்துக்கு மீண்டு ஒரு மரியாதை எனப் பெயரிடப்பட்டுள்ளதால் அந்த படத்தின் இரண்டாம் பாகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விபத்தில் சிக்கிய பிரபல தமிழ் இயக்குனர்: கை எலும்பு முறிந்ததால் பரபரப்பு

0

பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரன் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய கைகள் முறிவடைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல இயக்குனர் சுசீந்திரன் வழக்கம்போல் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது அவர் மீது ஒரு வாகனம் திடீரென மோதியுள்ளது. இந்த விபத்தினால் கை எலும்பு முறிந்தால் இயக்குனர் சுசீந்தரனை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவரது கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் மூன்று வார முழு ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது இயக்குனர் சுசீந்திரனுக்கு ஏற்பட்ட விபத்தால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

வெண்ணிலா கபடிக்குழு’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சுசீந்திரன் அதன்பின்னர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டியநாடு, பாயும் புலி, ஜீனியஸ், கென்னடி கிளப் உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான சாம்பியன்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

0

வானவேடிக்கை காட்டிய கிவி பேட்ஸ்மேன்கள் :3 பேர் அரைசதம் ! 204 ரன்கள் இலக்கைத் துரத்துமா இந்தியா ?

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்துள்ளனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் போட்டி இன்று ஆக்லாந்து மைதானத்தில் நடந்து கொண்டு இதில் டாஸில் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

தங்கள் மண்ணில் களம் இறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களைத் தாக்க ஆரம்பித்தனர். பூம்ராவைத் தவிர அனைவரின் பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸர்க்கும் அனுப்பினர்.இதனால் அந்த அணியின் ரன்ரேட் 10 க்கும் குறையாமல் சென்றது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும் அடுத்தடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் அதிரடிடியைத் தொடர்ந்தனர்.

அந்த அணியின் மன்ரோ, கேன் வில்லியம்ஸன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு இலக்காக 204 ரன்களை நியுசிலாந்து நிர்ணயித்துள்ளது.

இந்தியா சார்பில் பூம்ரா, தாகூர், சஹால், துபே, ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வலுவான பேட்டிங் கொண்ட இந்திய அணி 204 ரன்களை எப்படி சேஸ் செய்ய போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

ஹிட்லரை எதிர்த்த பிரபல கோடீஸ்வரர் மோடிக்கு கண்டனம்

0

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் சோரஸ் என்பவர் ஹிட்லர் ஆட்சியின்போது ஹங்கேரியில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறியவர் என்பது குறிப்பிடதக்கது.

இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது ’இந்தியாவில் இப்படி ஒரு நிலை உருவாகும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றும், அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தை மதிக்காமல் சர்வாதிகாரி போல் ஆட்சி செய்து வருவதாகவும் குறிப்பாக இஸ்லாமியருக்கு எதிரான சட்டங்களை இயற்றி வருவதாகவும் கடுமையாக கண்டனம் செய்தார்.

அதேபோல் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு முழுக்க முழுக்க அதிபர் டிரம்ப் தான் காரணம் என்றும் டிரம்ப் அரசியல் சாசனத்தை மதிக்காமல் தன்னைச் சுற்றித்தான் உலகமே சுற்றுகிறது என்று நினைப்பதால் தான் அமெரிக்கா தற்போது பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது என்றும், அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ் 8 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளதவர் என்பதும் அவர் இதுவரை நன்கொடையாக மட்டும் 32 மில்லியன் டாலர் கொடுத்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரை கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ் ரயிலில் திரைப்படம்: புதிய வசதியால் பயணிகள் மகிழ்ச்சி

0

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வாரம் ஆறு நாட்கள் தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது என்பது தெரிந்ததே. இந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போல் ஒவ்வொரு சீட்டின் பின்புறத்திலும் தொலைக்காட்சி இருந்ததால் பயணிகள் பொழுதுபோக்குக்கு உதவியாக இருந்தது. ஆனால் இந்த தொலைக்காட்சி சரியாக செயல்படவில்லை என்ற புகார் வந்ததையடுத்து தற்போது பயணிகள் பொழுதுபோக்கிற்கு என வைஃபை வசதியை தேஜஸ் ரயில் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதன்மூலம் பயணிகள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பில் வைபை வசதியுடன் கூடிய மேஜிக் என்ற ஆப் மூலம் திரைப்படங்களை பார்த்து மகிழலாம். இந்த செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் இலவசமாக வைபை வசதி கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏராளமான திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கார்ட்டூன் நிகழ்ச்சிகள் ஆகியவைகளை பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

பயணிகள் தங்களுடைய பயணத்தில் 500 மணி நேரம் தொடர்ச்சியாக வைபையை பயன்படுத்தி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி தங்கள் பயணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யலாம் என்றும் தேஜஸ் ரயில் அறிவித்துள்ளது இந்த புதிய அறிவிப்பு தேஜஸ் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெளடிபோல் வாளால் கேக் வெட்டிய நடிகர் மீது வழக்கு!

0

பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் வெட்டி கொண்டாடுவது கொண்டாடுவதுபோல் நடிகர் ஒருவர் வாளால் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கடந்த 19ஆம் தேதி தனது பிறந்தநாளை தனது வீட்டின் முன் ஒரு பெரிய பந்தல் அமைத்து அதில் பிரம்மாண்டமான கேக் ஒன்றை வாளால் வெட்டி கொண்டாடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்த போது அவர் மீது அந்த பகுதியில் உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

நடிகர் துனியா விஜய் தனது வீட்டின் முன்னால் அனுமதி இல்லாமல் பந்தல் போட்டு பிறந்தநாள் கொண்டாடியதாகவும், வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நடிகர் துனியா விஜய்யை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தனர். அப்போது நடிகர் துனியா விஜய் இது குறித்து விளக்கம் அளித்ததாக தெரிகிறது. ஆனால் இந்த விளக்கத்தில் திருப்தி அடையாத போலீசார் அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் வாளால் கேக் வெட்டி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாட வேண்டும் என விரும்பிய நடிகர் துனியா விஜய் தற்போது போலீஸ் வழக்கில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தோனியின் இந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி ! இன்றே நடக்குமா ?

0

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கேப்டனாக அடித்த ரன்களைக் கோலி தகர்க்க உள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டு வெறும் வீரராக விளையாடி வந்தார். கோலி பொறுப்பேற்ற பின்னர் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கோலியும் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் தனது பங்களிப்பை அதிகமாக அளித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாட உள்ளது கோலி அண்ட் கோ. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் நடக்கிறது. இந்த போட்டித் தொடரில் கோலி தோனியின் ஒரு சாதனையை முறியடிக்க உள்ளார்.

டி 20 போட்டிகளில் தோனி கேப்டனாக எடுத்த ரன்களைக் கடக்க அவருக்கு இன்னும் 83 ரன்களே தேவை. அதை இந்த போட்டியிலேயே அவர் கடப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் டூ பிளஸ்சி முதல் இடத்திலும் அடுத்த இடத்தில் கேன் வில்லியம்ஸனும் உள்ளனர்,

டி 20 போட்டியில் தனி வீரராக அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் கோலி 2689 ரன் எடுத்து முதல் இடத்திலும்,  ரோகித் சர்மா 2633 ரன்னுடன் 2-வது இடத்திலும், மார்டின் கப்தில் 2436 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

0

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரன் தன்னுடைய படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல ரூபங்களில் கலக்கியவர் ராஜ்கிரன். தற்போது அவர் நடிக்கும் குபேரன் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியதைப் பற்றி சுவையான சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தனது பதிலில் ‘ நான் என் ரசிகரின் ஒருவரின் திருமணத்துக்காக மதுரைக்கு சென்றிருந்தேன். திருமணம் முடிந்து ஹோட்டல் அறையில் தங்கி இருந்தேன். எனக்கு மறுநாள்தான் ரயில் என்பதால் பொழுது போக்குவதற்காக எனது ரசிகர் ஒருவர் நான் ஒருவரை அனுப்புகிறேன் என்றார். அப்படி வந்தவர் தான் வடிவேலு.

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

வந்ததில் இருந்து பேசிப்பேசி என்னை இரண்டு நாட்களாக சிரிக்க வைத்தார். அதன் பின் இரு வருடங்கள் கழித்து நான் ராசாவின் மனசிலே படத்தை எடுத்த போது ஒரு கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன். அப்போது எனக்கு அவரை அறிமுகப்படுத்திய நபரை அழைத்து உடனே வடிவேலுவை வர சொன்னேன்.

வந்த வடிவேலு கவுண்டமணியிடம் அடிவாங்கும் போது நாங்கள் சொல்லிக் கொடுத்த வசனத்தை மட்டும் பேசாமல் தானாகவும் சில வசனங்களை பேசினார். அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. இவர் சினிமாவில் சாதிப்பார் என்று. அதன் பின் நடந்தது எல்லாம் கடவுள் நடத்தியதுதான். அதனால் அவரை நான் அறிமுகப்படுத்தினேன் என சொல்ல முடியாது’ என மனம் திறந்து பேசியுள்ளார்.