Home Blog Page 5791

சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை: திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவிப்பு

0

சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை: திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவிப்பு

2019-ல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சி.ஏ.ஏ அல்லது 370-வது பிரிவு நீக்கத்தால் சுற்றுலா பாதிக்கப்படவில்லை என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்.

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. பிரகலாத் சிங் பட்டேல், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை விவரத்தை வெளியிட்டார். 2019-ஆம் ஆண்டு கடைசி இரண்டு மாதங்களை, 2018ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, அதிக வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதை இது, எடுத்துக்காட்டுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பது குறித்து கூறிய திரு. பட்டேல், பிரதமர் திரு. நரேந்திர மோடி நமது விளம்பரத் தூதராக திகழ்வதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்றார். சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் உடனான பிரதமரின் சந்திப்பிற்குப் பின்னர், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து, ராமர் கோவில் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அண்மையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றால் பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், 2019ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது என்று திரு. பட்டேல் மேலும் கூறினார்.  9 நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்திய போதிலும், சுற்றுலாத் துறை முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சுற்றுலா அமைச்சகத்தின் தரவு கூறுகிறது.

அமைச்சர் பகிர்ந்து கொண்ட விவரங்களின்படி, 2018 நவம்பர் மாதம், 10,12,569 வெளிநாட்டுப் பயணிகள் வருகையுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7.8 சதவீதம் அதிகரித்து, 10,91,946 ஆக இருந்தது. இதேபோல, 2018 டிசம்பரில் 11,91,498 ஆக இருந்த வெளிநாட்டுப் பயணிகளின் வருகை, 2019 டிசம்பர் மாதம், 12,25,672-ஆக அதிகரித்தது.

2019-ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களை 2018-ஆம் ஆண்டின் அதே மாதங்களுடன் ஒப்பிடுகையில், அந்நியச் செலாவணி வருவாயும் அதிகரித்திருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2018-நவம்பர் மாதம் ரூ. 16,584 கோடியாக இருந்த வருவாய் 2019-ல் ரூ.19,831 கோடியாக உயர்ந்தது.  2018 டிசம்பரில் ரூ.19,474 கோடியாக இருந்த அந்நியச் செலாவணி வருவாய், 2019 டிசம்பரில் ரூ. 22,617 கோடியாக அதிகரித்தது.

2019 செப்டம்பர் மாதத்தில், அதாவது   370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர், 2018ஆம் ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 4.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல, இந்த காலகட்டத்தில் அந்நியச் செலாவணி வருவாயும், 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகத்தின் தரவு தெரிவிக்கிறது.

Source: PIB

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

0

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

டிவிட்டரில் ரசிகர்களுடன் கலனதுரையாடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் ’கான்’ நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் கானுக்கு சில வருடங்கள் இறங்குமுகமாக அமைந்துள்ளது. வரிசையாக அவர் நடித்த ரய்ஸ், பேன், ஜீரோ ஆகியப் படங்கள் தோல்வியடைந்து அவரை துவள வைத்துள்ளன. இதனால் இரு ஆண்டுகளாக அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இப்போது அவர் படம் நடிக்க தயாராகி விட்டதாகவும் அதற்காக தமிழ் இயக்குனர் அட்லியிடம் கதைகேட்டு கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் தனது ரசிகர்களிடம் உரையாடும் பொருட்டு டிவிட்டரில் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக அறிவித்தார். இதையடுத்துப் பலரும் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். இதில் திரை உலகத்தைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

அதில் 20 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்தார். அந்த 20 கேள்விகளில் ஒரு கேள்வி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஷாருக்கிடம் ‘நான் உங்கள் வீட்டின் அறை ஒன்றை வாடகை எடுக்க எவ்வளவு செலவாகும் ?’ எனக் கேட்டிருந்தார் ஒரு ரசிகர். இந்த வித்தியாசமானக் கேள்விக்கு தன் பாணியில் மிகவும் வித்தியாசமாக பதிலளித்துள்ளார் ஷாருக்.

ஷாருக் தனது பதிலில் ‘அதற்காக நீங்கள் 30 வருடம் கடுமையாக உழைக்கவேண்டும்.’ எனத் தனது திரையுலக உழைப்பைக் குறித்து சொல்லியுள்ளார். ஷாருக் கான் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

0

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைமை குறித்த பிரச்சனையை ஆய்வு செய்வதற்கு அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 6 மாதங்களுக்கு அதாவது 31.07.2020 வரை நீடிக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆணையத்தின் தற்போதுள்ள விசாரணை வரம்புகளில் கூடுதலாக கீழ்க்காணும் விசாரணை வரம்பை சேர்க்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“iv. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மத்திய பட்டியலில் உள்ள புதிய இணைப்புகளை ஆய்வு செய்வது மற்றும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில்  தவறுகள் இருந்தால் திருத்துவதற்குப் பரிந்துரைப்பது”.

பயன்:

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மத்தியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதுள்ள இடஒதுக்கீட்டின்படி மத்திய அரசுப் பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையிலும் பயன்பெற இயலாதவர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.

பின்னணி:

அரசியல் சட்டத்தின் 340-வது பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு இந்த ஆணையம் 2017 அக்டோபர் 2 அன்று அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி திருமதி. ஜி.ரோகிணி தலைமையிலான இந்த ஆணையம் 2017 அக்டோபர் 11 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் துணை வகைமைகளைக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையங்கள் ஆகியவற்றுடன் இது ஆலோசனை நடத்தியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தற்போதைய மத்திய பட்டியலில் காணப்படும் திரும்ப இடம் பெறுதல், தெளிவின்மை, குறைபாடுகள், எழுத்து அல்லது படியெடுத்தலில்  தவறுகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் தனது அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் தேவை என ஆணையம் கருதியது. எனவே தனது பதவிக்காலத்தை 6 மாதத்திற்கு நீடிக்கவும், தற்போதுள்ள விசாரணை வரம்பை கூடுதலாக்கவும் கோரியது.

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

0

இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள புதிய உடன்படிக்கை

இந்தியா – பிரேசில் இடையே, குற்றவியல் நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிக்கான உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு, இந்தியா – பிரேசில் இடையே கையெழுத்தாகவுள்ள உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

குற்றவியல் விஷயங்களில், புலன் விசாரணை மற்றும் விசாரணை மேற்கொள்ள, பரஸ்பர சட்டஉதவி வழங்கும் வகையில், ஒத்துழைப்பை இருநாடுகளும்  செயல்திறன் முறையில் அதிகரிப்பதை இந்த உடன்படிக்கை நோக்கமாக கொண்டிருக்கும். நாடுகளுக்கு இடையிலான குற்றங்கள், பயங்கரவாதத்துடன் அதற்கான தொடர்புகள் விஷயத்தில் இந்த உத்தேச உடன்படிக்கை விரிவான சட்ட வரைமுறைகளை வழங்கக்கூடியதாகும்.

தேடுதல், கட்டுப்படுத்துதல், போலிகளை களைதல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற விஷயங்களில் பிரேசிலுடன் குற்றங்கள் தொடர்பான புலன் விசாரணை மற்றும் விசாரணையில், இருதரப்பு ஒத்துழைப்பை வழங்குவதற்கு இது உதவும்.

காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!

0

காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் பரப்பிய காமக் கொடூரன்!

விழுப்புரம் மாவட்டதிலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ஆலம்பாடி கிராமத்திலுள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் தான் கலையரசன். இவர் கடலூர் நத்தவெளியில் வசித்து வரும் தன்னுடைய அக்கா வீட்டில் தங்கிக் கொண்டு அருகிலுள்ள மொபைல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவரைப்போலவே அந்த கடையில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவரும் அவருடன் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஒரே கடையில் வேலை செய்து வரும் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இதுவே அவர்களுக்கிடையே காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. அவர்கள் இருவரும் ஏறக்குறைய 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் தங்கியிருந்த அக்கா வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுவதாக ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று இருவரும் அவ்வப்போது தனிமையில் இருந்துள்ளார்கள்.

பின்னர் இருவரும் திருப்பூர் சென்று அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் உன் நிர்வாண படத்தை மொபைலில் எனக்கு அனுப்பு என்று கலையரசன் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அவரும் தன்னுடைய காதலன் தானே என நம்பி நிர்வான படத்தை கலையரசனுக்கு அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தொடர்ச்சியாக அது போன்று படங்களை கலையரசன் கேட்கவே சந்தேகமடைந்துள்ளர். இதனால் அவர்,கலையரசனுடன் பேசுவதை அதன்பிறகு தவிர்த்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த கலையரசன் அவருடைய காதலியை பழிவாங்க நினைத்து, இருவரும் காதலிக்கும் போது தனக்கு அனுப்பிய நிர்வாண படங்களை சமூக வலைத்தளமான பேஸ் புக்கில் பதிவு செய்திருக்கிறார். இதைப்பற்றி அறிந்த அந்த பெண் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைக்க, உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கலையரசனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தன்னுடைய நிர்வான படம் இணையத்தில் வெளியானதை பற்றி தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மற்ற பெண்கள் போன்று அழுது மூலையில் முடங்கமல், தற்கொலைக்கு முயற்சி செய்யமால், தைரியமாக இது தொடர்பாக கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தது மற்ற பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

இவ்வாறு மிகவும் துணிச்சலுடன் செயல்பட்ட அந்த பெண்ணை அனைவரும் பாராட்டுவும் செய்தனர். மேலும், ஒருவரை காதலிக்கும் முன்பு அவரை பற்றி முழு கவனம் தேவை என்றும் காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

0

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதே போல தாங்கள் கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜ.க-வினர் மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் பாஜகவினரும் அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் அம்மாவட்டத்தின் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதைப் பார்த்த மற்ற தொண்டர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்நிலையில் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டரை அறைந்த இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #PriyaVerma என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. துணை ஆட்சியர் பிரியா வர்மா மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் மாவட்டத்திலுள்ள மங்காலியா கிராமத்தைச் சேர்ந்தவர்.

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

சம்பவம் நடந்த பகுதியான ராஜ்கரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தடை உத்தரவையும் மீறி பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ராஜ்கரில் பேரணி ஒன்றை நடத்தினர். தடையை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணியை கலைக்க சென்ற காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட மோதலில் நிலைமையை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் துணை ஆட்சியரான பிரியா வர்மா பாஜக தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதைக்கண்டு கோபமடைந்த கூட்டத்தில் இருந்த பாஜக தொண்டர் ஒருவர் பெண் என்றோ,அரசு அதிகாரி என்றோ பார்க்காமல் பிரியா வர்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்க முயற்சித்துள்ளார். ஆனால் அருகிலிருந்த மற்ற காவலர்கள் அவர் பாதுகாப்பாக மீட்டனர். காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் ஏற்பட்ட இந்த மோதலால் சம்பவ இடமானது மேலும் பதற்றமானது. இதனையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவிற்கு ஆதரவாக போரடிய 150 பேர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

பாஜகவினரை கன்னத்தில் அறைந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி

இந்நிலையில் பாஜக தொண்டரை தாக்கிய துணை ஆட்சியர் பிரியா வர்மாவின் இந்த செயலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் எழுந்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சிவராஜ் சிங் சௌஹான் இந்த நிகழ்வை கண்டித்துள்ளார்.

இவருடைய செயலை கண்டிக்கும் விதமாக சிவராஜ் சிங் சௌஹான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”கலெக்டர் மேடம், நீங்கள் எந்த சட்டப்புத்தகத்தைப் படித்தீர்கள் என்று என்னிடம் சொல்லுங்கள். அமைதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை அடிக்க யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்றும், மேலும் இது மாதிரியான ஹிட்லர் நடவடிக்கைகளை ஒரு போதும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்” என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு காரணமான ஆளும் கட்சியையும் அவர் விமர்சித்துள்ளார். 

பாமகவின் கோரிக்கைக்கு தேசிய அளவில் பெருகும் ஆதரவு! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

0

பாமகவின் கோரிக்கைக்கு தேசிய அளவில் பெருகும் ஆதரவு! மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி பாமக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் “சமூகநீதியைக் காக்க 2021-ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! ” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்தியாவில் 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியால் எழுப்பப்பட்ட இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கடந்த ஜூலை மாதமே பா.ம.க. வலியுறுத்தியிருந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி மராட்டிய சட்டப்பேரவையிலும், 11-ஆம் தேதி ஒதிஷா அமைச்சரவைக் கூட்டத்திலும் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியானா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான கோரிக்கை எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் பா.ம.க.வின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அகிலேஷ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்றைய சூழலில் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வது தவிர்க்க முடியாதது ஆகும். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எழுப்பும் கோரிக்கைகள் ஒருபுறமிருக்க, இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள புதிய நிலைப்பாட்டின்படியே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியமாகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க நீதிபதி ரோகிணி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட சாதிகள் அடங்கிய ஒவ்வொரு தொகுப்புக்குமான இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென பா.ம.க. வலியுறுத்தியது. இதற்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 140 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டிய அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அது தொடர்பான மனுவை 2008-ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் நேரில் வழங்கினார். பின்னர் மக்களவையில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்ட போது லாலு பிரசாத், சரத்யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் எதற்கும் உதவாத சடங்கு ஒன்றை அப்போதைய மத்திய அரசு நடத்தி மக்களை ஏமாற்றியது. அப்போது இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று 2018&ஆம் ஆண்டில் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அத்தகைய கணக்கெடுப்புக்கும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இட ஒதுக்கீடு தான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாக பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவர தொகுப்பை உருவாக்குவது அவசியமாகும்.

எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். மராட்டியம், ஒதிஷா மாநிலங்களைப் பின்பற்றி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நடுவானில் விமானத்திற்குள் திடீர் புகை: 169 பயணிகள் கதி என்ன?

0

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை பரவியதால் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை ரோம் நகரில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 169 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தின் கேபினில் முதலில் புகை கிளம்பியது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த புகை பரவி பயணிகள் இருக்கும் இடத்திற்கும் வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தீப்பிடித்து அதன் காரணமாகவே புகை கிளம்பியதோ என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டது. இதனை அனைத்து அருகில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டனர். அனுமதி கிடைத்ததை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக அந்த விமானம் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், புகை கிளம்பியதற்கான காரணத்தை ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் 169 விமான பயணிகளுக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியை பார்த்து அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர்: பழம்பெரும் அரசியல்வாதி பேட்டி

0

ரஜினிகாந்த் எதைச் சொன்னாலும் அது மக்களிடம் போய் சேர்ந்து விடுமோ என்று இன்றைய அரசியல் தலைவர்கள் பயப்படுகின்றனர் என்று பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேட்டி அளித்தாலும் சரி, மேடையில் பேசினாலும் சரி அவர் கூறிய கருத்தை வேண்டுமென்றே திரித்து ஒரு சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

லெட்டர்பேடு கட்சியினர் கூட ரஜினியை வைத்து தங்கள் கட்சியை விளம்பரம் தேட முயற்சித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ரஜினி-பெரியார் சர்ச்சை குறித்து பழம்பெரும் அரசியல்வாதியும் நடிகருமான பழ கருப்பையா அவர்கள் கூறியதாவது:

ரஜினி எதைச் சொன்னாலும் உடனே பாய்வது என்பது அரசியல்வாதிகள் அவரை பார்த்து பயப்படுவதை காண்பிக்கிறது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கின்ற எந்த தலைவர்களுக்கும் மக்கள் செல்வாக்கு என்பது கிடையாது. ஆகவே ரஜினியின் கருத்து மக்களிடம் போய் சேர்ந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். அதனால் ரஜினி எதை சொன்னாலும் எதிர்ப்பது என்று அரசியல்வாதிகள் கிளம்புவதாக எனக்கு தோன்றுகிறது. ரஜினி சொல்வது தவறாக இருந்தால் மக்கள் அதை புறந்தள்ளி விட்டு போவார்கள். அதுமட்டுமின்றி தவறான கருத்தை சொல்லிய ரஜினியையும் தவறாக நினைப்பார்கள் என்று பழ கருப்பையா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை வழக்குகளை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

0

சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த மசோதாவை குறித்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 144 மனுக்கள் மீது இன்று தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கு நீதிபதிகள் மறுத்து விட்டனர். மத்திய அரசின் வாதத்தை கேட்காமல் ஒருதலைப்பட்சமாக தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தியாவில் உள்ள எந்தவொரு உயர் நீதிமன்றமும் இது தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே எந்த உயர் நீதிமன்றத்திலும் இது குற்ற வழக்கு இனிமேல் பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.